முத்துபெருநன் கவிதைகள்!

எழுத்தாளர் வா.மு.கோமு வின் தந்தை முத்துபெருநன் அவர்கள் எழுதிய கவிதை!

சக்கிலிச்சி காதல் 
சந்தையிலே விக்குதா ?
சலிசு வெலைக்குச் 
சரஞ் சரமாத் தொங்குதா ?

கனு கனுப்பை பார்த்தா 
கை வைக்கத் தோணுதா ?
கீழ் சாதி மேல் சாதி 
காத்திலே பறக்குதா ?

கொஞ்சம் பெருசுதான் 
கண்ணை உறுத்துதா ?
கொழந்தைக்குத் தாட்டோனும் 
புருஷனுக்குக் காட்டோணும் 

நட்டறது நாங்க 
அறுக்கறது நாங்க 
கொண்டு போறோந் தவசம் 
பண்ணாடி வீட்டுக்கு 

கூலிக்கு மடி விரிச்சா 
குடிசைக்குள் இழுப்பதா ?
வெக்கங் கெட்ட ஆம்பளைக்கு 
வாழையிலை கேட்குதா ?

சக்கிலிச்சி காதல் 
சக்கரையா இனிக்குதா ?
சத்தியமாச் சொல்லறோம் 
சாட்டையினி  எங்க கையில் 


1 வாங்கிகட்டி கொண்டது:

King Viswa said...

இந்த போட்டோவில் நீல சட்டையில் சால்ட் & பேப்பர் அஜித்துக்கு மீசை வச்ச மாதிரி இருக்கும் அங்கிள் யாருங்க? அவரை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே?

!

Blog Widget by LinkWithin