குவியல்!..(29.12.09)

501 பாலோயர்ஸ், இன்று முதல் 500 பாலோயர்ஸை கடந்தவர்களில் நானும் ஒருவன் என சொல்லி கொள்ளலாம், அல்லது பரிசல் சொல்வது போல் உள்பனியனில் காலர் வைத்து தூக்கிவிட்டு கொள்ளலாம், ஆனாலும் இவையனைத்தும் உங்களாலே சாத்தியமானது, ஊர்கூடி தேர் இழுப்பது போல், சிறுதுளி பெருவெள்ளம் போல், நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு 500 பேர்கள் தான், உங்கள் அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

************

ஆணாதிக்க சிந்தனைகள் நிரம்பிய குறள் தவிர மற்றவைகளுக்கு நான் ரசிகன், முக்கியமாக மேலாண்மை தொடர்பான குறள்களுக்கு, அதில் ஒன்று தான்!


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல். ( குறள் எண் : 517 )


இந்த குறளுக்கேற்ப வாழும் சாட்சியாக நான் ஒருவரை சந்தித்தேன் என்றால் அது ஈரோடு கதிர் தான்! அவரை தவிர அந்நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக யாரும் செய்திருப்போமா என்பது சந்தேகமே! “பத்து பேர் வருவாங்களா வால்” என பேச தொடங்க ஆரம்பத்திலிருந்து எண்ணிக்கை கூடி கொண்டே வர சிறிதும் சளைக்காமல் காலத்திற்கேற்றவாறு தேவையான ஆயத்தங்களை செய்து கொண்டே இருந்தார்!
பத்து எங்கே இருக்கு நூறு எங்கே இருக்கு, வந்தவர்கள் அனைவரும் ஒன்றுகூட பெரிய அறை, இருக்ககைகள், கல்யாண வீட்டிலேயே சாப்பாடு இல்லாமல் திரும்பும் இந்த காலத்தில் அனைவருக்கும் சாப்பாடு என குறையில்லாமல் செய்து முடித்ததில் குழு நேர்த்தியில் அவருக்கு இருக்கும் ஆளுமையும், அனுபவமும் எங்களுக்கு தெரிந்தது!

இதுவரை உலகெங்கும் நடந்த முக்கிய பதிவர் சந்திப்புகளில் ஈரோட்டில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியும் இடம்பெறும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, இனிவரும் நிகழ்ச்சிகளும் இதே போல் திறம்பட கதிர் அவர்கள் நடத்தி காட்டுவார் என்பதில் வந்திருந்த யாருக்கும் சந்தேகம் இருந்திருக்காது!

என்னாலும், ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையாமலும் அதிருப்தியடைந்த நண்பர்கள் தங்கள் கருத்துகளை முதுகுக்கு பின் சொல்லாமல் வெளிபடுத்தியது மிக்க மகிழ்ச்சி, நிகழ்ச்சி சிறப்புற நடக்க நீங்களும் ஒரு காரணம்! கதிர் அவர்களின் நிழலாய் செயல்பட்ட ஆரூரான் மற்றும் நண்பர்களின் பணியும் அசாதாரணமானது!!

*********************

அவதார்!




இந்த படத்தின் கிராபிக்ஸை அனைவரும் வரிக்கு வரி பாராட்டுவது எனக்கு கொஞ்சம் நெருடல், படம் ஆரம்பித்து பத்து நிமிடத்துக்கு மேல்,  என்ன கிராபிக்ஸ், எங்கே கிராபிக்ஸ் என்று தேடி கொண்டிருந்தால் நாம் படத்தின் கதையில் ஒட்டவில்லை என்ற அர்த்தம்! அது போகட்டும் படத்தை பார்த்த பிறகு வேறு சில யோசனைகளும் தோன்றியது, பரிணாம வளர்ச்சியில் முதுகுதண்டு வளைந்து!? நிமிர்ந்து நிற்க தொடங்கிய விலங்குகளுக்கு வால் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது, இன்றும் நிமிர முயற்சித்து கொண்டிருக்கும் சில விலங்குகளின் வால் குட்டையாக இருப்பதை பார்க்கலாம்! ஆனால் ஆள் சைஸுக்கு அவதார் படத்தில் அனைவருக்கும் வால் இருக்கு! டார்வீனில் ஆரம்பித்து பலர் உயிர்களின் தோற்றத்தை ஆராய்ந்து விட்டார்கள், இனி என்ன நடக்கலாம் என ஹிண்ட்ஸ் எடுத்து கொண்டிருக்கிறேன், அதையும் தொடர் பதிவாக போட்டு தாக்கலாம்!

***********************

மேட்டூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே செல்ல ஆவலாய் இருந்தேன்! அதே போல் இந்த வருடமும் ஆவலாய் முடிந்ததே தவிர செல்லமுடியவில்லை!, மதுரை சென்று விட்டேன்.(இப்பெல்லாம் பொண்டாட்டி பேச்சு நிறைய கேக்குறனாக்கும்), அடுத்த வருடமாவது செல்ல வேண்டும்! சென்றிருந்த நண்பர்கள் புகைபடம் இருந்தால் வெளியிடவும்!

***********************
எனது டுவிட்டர் ஐடி!

mokkaiwriter
(சொல்றதை தான் செய்வோம், செய்யுறதை தான் சொல்லுவோம்)

***********************

புதிர்!

கிளாஸ், டம்ப்ளர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன!?

எனக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க!

நடந்து முடிந்த விசயங்களை என்ன செய்தாலும் மாற்றமுடியாது என்பதை நன்கு அறிவேன்! கற்பனை பிம்ப எதிர்பார்ப்பில் என்னை பார்த்தவர்களுக்கு அன்றைய நாள் நான் வில்லனாகி போனேன்! இருக்கட்டும் இன்றைய சூப்பர்ஸ்டாரே அன்றைய வில்லன் தானே!. நான் மற்றவர்களை கலாய்த்தது பற்றி எனக்கு எந்த வருத்தமுமில்லை, எனக்கு முன்னரே பழக்கமில்லாத யாரையும் நான் கலாய்க்க வில்லை என நம்புகிறேன்! புலவர் ராசு அய்யாவை தவிர! அதற்கு போன பதிவிலேயே வருத்தமும் தெரிவித்திருந்தேன்!

சீனா அய்யா, வசந்தகுமார், ஸ்ரீதர் அனைவரும் எனக்கு முன்னரே பழக்கமானவர்கள், நட்போட என்னிடம் இன்றும் பழகி வருபவர்கள், அவர்களுக்கு எனது குணம் தெரியும் என்பதால் அவர்களுக்கும் வருத்தம் இருக்காது என நம்புகிறேன்! ஆனால் எனக்கும் நடந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை, ”நான் ஏன் கவனிக்கனும்” என்ற தோணியில் நான் சொன்னதாக சஞ்சய் அங்கிள் எழுதியது தான் கொஞ்சம் உறுத்தல்! அந்த வார்த்தை என்ன சொல்லும் என்றால், நிகழ்ச்சியே வால்பையனுக்கு பிடிக்கல, அதனால வேணும்மின்னே பண்ணிய கலாட்டா என்ற எண்ணத்துக்கு கொண்டு செல்லும்!

அதை கவனிக்க அவுங்க இருக்காங்க தல, நமக்கு வேற வேலை இருக்குன்னு சொல்ல வந்தது, இப்படி மாறி போகும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை, ”சோசியகாரங்களை சும்மா வம்பிழுத்துகிட்டே இருக்குறதால எல்லா சோசியகாரங்களும் சேர்ந்து எனக்கு சூனியம் வச்சிடாங்கன்னு நண்பர் ராதாமணாளன் காலையிலிருந்து என்னை கிண்டல் பண்ணிகிட்டு இருக்கார்!”(தலைப்புக்கு காரணம்). மனம் புண்படும் படி பேசியிருந்தால் அது நிச்சயமாக உளமறிந்து செய்யவில்லை! அங்கிள் நம்புவாராக!

சென்னையில் இருந்து நண்பர்கள் வருவது உறுதியானவுடன், அறை எடுக்கும் பொறுப்பை நானே எடுத்து கொண்டேன், நான் சென்னை செல்லும் பொழுதெல்லாம் ஒரு இளைய சகோதரனை கவனிப்பது போலவே அன்பாக கவனிக்கும் அண்ணன்களுக்கு இதையாவது செய்யும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் மொத நாளே கொஞ்சம் ஓவராதான் போச்சு! நண்பர்கள் வருவதற்கு தாமதமானதால் நான் வீட்டிற்கு செல்லாமல் அந்த அறையிலேயே தங்கிவிட்டேன்! சனிக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வந்த நான் ஞாயிற்றுகிழமை இரவு தான் சென்றேன்!



நான் அந்த அளவுக்கு ஸ்டெடியாக இருப்பேன் என்ற டவுட்டு எனக்கே இருந்ததால்(போட்டோவை பார்க்க) எனது தம்பி பிலாலையும் உடன் வைத்திருந்தேன்! அவருக்கு குடிக்கும் பழக்கம் இல்லை,(அவனுக்கு என்ன கோவமோ, போன் அடிச்சா எடுக்க மாட்டிங்கிறான்). எனது செயலை நியாயபடுத்தும் நோக்கில் இந்த பதிவு எழுதவில்லை, எனது பொறுப்புணர்வு எந்த அளவுக்கு மட்டமானது என்பதை நானே ஒருமுறை அசைபோட்டு கொள்கிறேன்! நான் முதல்முறை அப்துல்லா அண்ணனை சந்தித்த நிகழ்ச்சியில், பரிசல்காரனை எவ்வளவு தொந்தரவு பண்ணினேன் என நினைவில் வைத்திருப்பார் என நம்புகிறேன்!(இதிலென்ன பெருமை வேண்டிகிடக்கு)

கதிர் அவருடய பதிவில் ஈரோடு பதிவர்களும் பொருளாதார ரீதியில் பங்கெடுத்து கொள்ளலாம் என எழுதியதும், ரம்யா தொடர்பு கொண்டு தானும் பங்கெடுப்பதாக சொல்லியிருந்தார். கதிர் மறுக்கவும் என்னை தொடர்பு கொண்டு என் பெயரில் பணம் கட்டிவிடுகிறேன் என்றார்! மறுநாள் அது ரம்யாவுடய பணம் தான் என்று கதிரிடம் சொல்லிவிட்டேன்! என் பெயரில் இருந்தாலும் அது ரம்யா அவர்களின் பங்கெடுப்பு தான்! என்னளவு பொருளாதார பங்கெடுப்பை செய்திருப்பேன் என நம்புகிறேன்!

என்னையும் ஒரு ஒருங்கினைப்பாளாரக தனது பதிவுகளில் மதிப்பளித்த கதிர் மற்றும் ஆரூரான் அவர்களுக்கு, எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை! அடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோல் நடக்காதிருக்க முயற்சிக்கிறேன்.(இனிமே கூப்டா தான).

****

மேடி திருமணத்தில் என்ன நடந்ததென அறியாதவர்கள், அந்த பதிவிலிருந்து ஒரு பிட்டை எடுத்து எனக்கு போடுகிறார்கள், ரொம்ப நன்றி. இப்படி இருந்தா தான் எனக்கும் பிடிக்கும்!

நன்றி வாழ்த்துனவுங்களுக்கும், திட்டுனவங்களுக்கும்!

என்னோட 250 வது பதிவா இதை எழுதுறதுல ரொம்ப சந்தோசம்! கதிர் தான் ஆரம்பத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார், எனக்கு பொறுப்பு விசயத்தில் சிரத்தை மிக குறைவு என்பதால் முன்னரே எனது பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை சொல்லிவிட்டேன், கதிரும், ஆருரானும் பொறுப்பை எடுத்து கொண்டு யாரும் எதிர்பாராத வகையில் மிக சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர்! எனது குறுக்கு கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த நண்பர்களுக்கு நன்றி!

புலவர் ராசுவை நான் கேள்வி கேட்டது தான் பலரின் கோவத்துக்கு காரணம் என்று காலையில் பாஸ் சொல்லி தான் தெரியும், புலவர் ராசு பதிவர் என்று நான் நினைத்திருந்தேன், அதனால் என்னை பற்றி முன்னரே அறிந்திருப்பார் என நினைத்தேன்! அதனால் அவரிடம் மட்டும் மன்னிப்பை கேட்டு கொள்கிறேன்! சஞ்சய் அங்கிளுக்கு வயசாகி போச்சு அதனால் என்னை மாதிரி சின்னப்பசங்க கேள்வி கேட்பதை ஏற்று கொள்ளமுடியவில்லை! ஒரு நிகழ்ச்சின்னா கலகலப்பா இருக்கனும்! சும்மா தூங்கி வழியக்கூடாது!

சென்னையில் இருந்து வந்திருந்த ரம்யா, கலையக்கா, சித்தர் சுரேஷ், அப்துல்லா, அகநாழிகை வாசுதேவன், தண்டோரா, கேபிள் சங்கர் மதுரையில் இருந்து வந்திருந்த சீனா ஐயா, கார்த்திகைபாண்டியன், ஸ்ரீதர் கோவையிலிருந்து வந்திருந்த லதானந்த், தமிழ்மணம் காசி, சஞ்சய் அங்கிள் திருப்பூரிலிருந்து வந்திருந்த வெயிலான், பரிசல்காரன்,ஈரவெங்காயம் ஆகியோருக்கும் நன்றி! உங்களால் தான் சந்திப்பே சிறப்படைந்தது!

சிறப்பு வருகையாக வந்திருந்த பழமை(ப்)பேசி, நாகா ஆகியோருக்கும் நன்றி!
உடலுழைப்பை தாராளமாக வழங்கிய ஜாபர், அகல்விளக்கு ஜெய்சிங், பாலாசி ஆகியோரையும் மறக்க முடியாது! நான் பதிவெழுத வந்த காலத்திலிருந்து இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து என்னை செம்மை(இது தான் உங்க செம்மையா) படுத்தி கொண்டிருக்கும் நந்து அண்ணாவுக்கும் எனது நன்றிகள்!


பல புதிய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது! திருப்பூரில் இருந்து வந்திருந்த பேரழகன்! குடும்பத்துடன் வந்திருந்த தொழிநுட்ப பதிவர் சுமஜ்லா ஆகியோருக்கும் நன்றி! அய்யா வானம்பாடிகள், இரா.வசந்தகுமார் ஆகீயோருக்கும் நன்றி!
பலரது பெயர் விட்டு போயிருக்கலாம், கிட்டதட்ட நூறு பேர் வந்திருந்ததாக கதிர் சொன்னார்! நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்து அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!

படங்களை காண இங்கே சொடுக்கவும்!

*************

நிகழ்ச்சியில் ஹேக்கிங் பற்றி பேச நேரம் கேட்டேன்! குறைவான நேரமே இருந்ததால் விரிவாக பேசமுடியவில்லை, தனிப்படிவாக எழுதும் படி கதிர் கேட்டு கொண்டார், அதனால் இங்கேயே!

ப்ளாக்கருக்கும் ஜிமெயிலுக்கும் ஒரே பயனர் கணக்கு தான், யாரும் உங்கள் ப்ளாக்கை ஹேக் பண்ணவருவதில்லை, அவர்களது குறி உங்கள் ஜிமெயில் தான்! ஜிமெயிலில் இருக்கும் நண்பர்களுக்கு உங்களை போலவே மெயில் அனுப்பி பணம் பறிக்க வாய்புண்டு! அவர்களுக்கு உங்கள் ப்ளாக்கை பற்றி எந்த கவலையும் இல்லாததால் அதை அழிக்க வாய்புண்டு!

orkut இந்த சுட்டியை நீங்கள் அழுத்தினால் அது ஆர்குட்டுக்கு செல்லாது, மாறாக யாஹூவிற்கு செல்லும், இதே போல் ஆர்குட் இணைப்பு கேட்டு உங்களுக்கு வரும் லிங்கை அழுத்தினால் அது நேரடியாக பயனர் சொல் உள்ளிட ஆர்குட் தளத்திற்க்கு செல்ல வேண்டும், மீண்டும் ஒருமுறை பயனர் சொல் கேட்ககூடாது! அப்படி கேட்டால் அது போலி ஆர்குட் தளம், அங்கே உங்களது ஜிமெயில் பயனர் சொல்லை இடும் போது, உங்களுடய கடவுச்சொல் திருடப்படும், செர்வர் பிஸியென்ற அடுத்த பக்கத்திற்கு செல்லும் பொழுது உண்மையிலேயே தொழில் நுட்ப பிரச்சனை போலன்னு நினைச்சு நீங்க அதை பற்றி மறந்து விடுவீர்கள்! தெரியாத லிங் வரும்பொழுது அதை அழுத்தாமல் இருப்பதே ஹேக்கிங்கை தடுக்கும் ஒரே வழி!

எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!...

பெருசா ஆச்சர்யபடுறதுக்கு ஒண்ணுமில்லை, அது மனிதனுக்கே உரிய குணம் தான், எங்க கூட்டம் இருந்தாலும் நம்ம மக்களால எட்டிபார்க்காம இருக்க முடியாது, உதாரணத்துக்கு சொல்லனும்னா குரளி வித்தை காட்டுறவன் கூடவே ஒரு நாலு பேரை வச்சிருப்பான், முதலில் அவனுங்க தான் சுத்தி நிப்பானுங்க, அரைமணி நேரத்தில் இருபது, முப்பது பேர் சேர்ந்திருவாங்க, ஆனா கடைசி வரைக்கும் அவன் கூடவே இருந்த அந்த நாலை பேரை நம்மால கண்டுபுடிக்கவே முடியாது, இப்பெவெல்லாம் அந்த மாதிரி வித்தை காட்டும் பொழுப்பு நடக்கிறதில்லை, ஆனாலும் மனுசன் புத்தி மட்டும் மாறாதே, அதனால தான் பெரும்பான்மைகிட்ட தன்னை ஒப்பு கொடுத்துகிட்டு சுத்துறான்!

நூத்துக்கு எண்பது பேருக்கு மேல இந்த மனநிலை உள்ளவர்கள் தான், சொந்த அண்ணன் தேர்தல்ல நிப்பாரு ஆனா ஓட்டு வேற ஆளுக்கு போடுவான், ஏன்னு கேட்டா, நான் ஓட்டு போட்டா அவரு ஜெயிக்க போறாருன்னு சொல்லுவான், தன்னை எப்போதும் ஜெயிக்கும் பக்கம் இருப்பது போலவே காட்டிகொள்வது பொதுபுத்தியுள்ள மனிதனின் குணம், ஜெயிக்கும் ஆட்களை பொறுத்து அவர்களது இடமும் மாறும், ஆனால் பொதுபுத்தி மட்டும் போகாது, தன்னம்பிக்கை குறைவான ஒருவித பாதுகாப்பற்ற தன்மையா உணர்பவர்கள் இந்த பொது புத்திகாரங்க!, இவுங்களை ஒண்ணும் பண்ணமுடியாது, ஏன்னா தப்பாவேயிருந்தாலும் அதிகம் பேர் சரிதான்னு சொன்னா அது சரியாத்தான் இருக்கும்னு நம்புறவங்க இவுங்க!

பொதுவாவே மனுசனுக்கு மிஸ்டிரிஸ் எனப்படும் ஆச்சர்யங்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம், பொதுவா ஒரு விசயத்தை உண்மைன்னு நம்புறதுக்கு அதிகபடியான சாத்தியகூறுகள் இருக்கான்னு பார்ப்பான், அவனாலே உள்ளேயே போகமுடியலைனா அதை அப்படியே நம்பும் மனநிலைக்கு தள்ளப்படுவான், அதற்கு அவன் சொல்ற காரணம் தான் தமாசா இருக்கும், அந்த கலைக்டர் நம்புறாரு, அந்த அரசியல் தலைவர் நம்புறாரு அதனால நானும் நம்புறேம்பாம், பொதுபுத்தி உள்ள மனிதர்களுக்கு மாற்று கோணம்னா என்னானே தெரியாது, ஒருத்தன் அவனுக்கு நண்பனாகவோ அல்லது எதிரியாகவோ தான் இருக்க முடியும், அவனால ஒருத்தரை தனிபட்ட ஒரு புரிதல் கொண்ட மனிதரா பார்க்கவேமுடியாது!

கைரேகை ஒருத்தருக்கு ஒருத்தர் வேறுபடுவது போல் நமது கருத்துகளிலும் வேறுபடுகிறோம், சிலருக்கு மட்டும் சில விசயங்களில் ஒத்த கருத்து இருக்கும், ஆனால் ஒருவருக்கு முழுமையான ஜெராக்ஸாக யாருமே இருக்கமுடியாது, இந்த பொதுபுத்தி மக்கள் மட்டும் கொஞ்சம் வித்தியாசம், தனக்கு ஒரு ரோல்மாடல் இல்லைனா வாழ்கையே முழுமையடயாதது போல் உணர்வாங்க, தன்னை மற்றொருவரின் வழி தோன்றலாக காட்டிக்க விரும்புவாங்க, தன்னை ஒருத்தருக்கு வாரிசாகவோ, சீடராகவோ, ரசிகராகவோ அவுங்களே சொல்லிக்குவாங்க!, தனித்தன்மைனா கிலோ என்னவிலைன்னு கேட்பாங்க!.

அஸ்வினி,ப்ரணி எல்லாம் நட்சத்திரம் இல்லை, அவையெல்லாம் 360 டிகிரிய 27 பிரிச்சி சும்மா வச்சிகிட்ட பேரு, அதெல்லாம் கற்பனை தான், இருந்தாலும் உங்களுக்கு அடிப்படை வான சாஸ்திரம் தெரிஞ்சிருக்கனும், அப்போ தான் உங்களுக்கு புரியும், கற்பனையை நான் ஏங்க தெரிஞ்சிகனும்னு கேள்வி கேட்டா நீங்க முட்டாளாவோ, லூசுப்பயலாவோ பார்க்கபடலாம், எனக்கு என்ன சந்தேகம்னா ஒருத்தரை சோசியம் சொல்லி ஏமாத்த அந்த கற்பனை குதிரைங்க எல்லாம் தேவையேயில்ல, நீ பொறந்த தேதி பதினெட்டா, ஒவ்வோரு பதினெட்டாம் நாளும் நீ புதுசா பொறக்குற மாதிரி, அதனால நீ வெளியூர் பயணத்தை, கொடுங்கல், வாங்கலை தவிர்ன்னு சொன்னா மண்டையாட்டி கேட்க நாப்பது பேர் இருக்கான், ஆனா எவனுமே ஒண்ணாந்தேதி பிறந்தவன் தினமும் இதை கடைபிடிக்கனுமான்னு எதிர் கேள்வி கேட்க மாட்டான்!
அப்படி கேட்டாத்தான் நாடு என்னைக்கோ உருப்பட்டிருக்குமே!

ஜாதகம்னா என்னான்னு சொல்லி கொடுக்க வர்றவங்களே சொல்ற முத வார்த்தை இதனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் செய்ய முடியாது! ஆனாலும் மனிதனுக்கு தன்னை பற்றிய எதிர்காலம் என்னான்னு தெரிஞ்சிகிற ஆர்வம் எதாவது செய்ய சொல்லிகிட்டே இருக்கு, மேலும் தன்னை பற்றிய மற்றவர்களது அபிப்பிராயங்களுக்கும் அதிகமுக்கியத்துவம் கொடுப்பான், அது ஒருவித சுய பரிசோதனை தான், ஆனால் சோதிடம் என்பது அதிர்ஷ்டத்துக்கு மறுபெயர், தன்னம்பிக்கையற்ற, பாதுகாப்பற்ற தன்மையா உணர்ற மக்களை ஜாதகம் என்ற பெயரில் எளிதில் ஏமாற்றமுடியும்! ரொம்ப சுலபமா அதை செய்யலாம், ஒரு பெண் கர்ப்பமா இருக்கான்னு வச்சுகோங்க, என்ன தெரியுமா சோசியகாரரு சொல்லுவாரு, நிச்சயமா ஆண்குழந்தை பிறக்கும், மிஸ்ஸாச்சுன்னா பெண் குழந்தை தான்! எப்பூடி!



ஜோதிடம் இந்துதுவாவின் நீட்சி தான்னு எல்லோருக்குமே தெரியும், எல்லா கோள்களுக்கும் ஒரு உருவத்தை கொடுத்து, சனி திசை நடந்தா திருநள்ளாறு போய் கும்பிடுன்னு பாப்பானை தவிர வேற எவன் சொல்லியிருக்க முடியும்! உலகத்துல 6 ல ஒருத்தன் இந்தியன் ஆனா எல்லோருமே ஜோசியம் பாக்குறதில்லை, அதனால நாசமாவா போயிட்டாங்க, நம்மளை சுத்தி ஆயிரம் முட்டாள்கள் வாழ்க கோஷம் போடும் போது ந்மக்கு ஒரு சந்தோசமாதான் இருக்கு இல்லையா!? இல்லைனா இத்தனை நடிகர்களும், அரசியல்வாதிகளும் பொழுப்பு நடந்த முடியுமா, அந்த கோஷ்டியில் இப்போ இன்னும் சிலர் சேர்றாங்க!


********************


டிஸ்கி:எனக்கும் சலிப்பா தான் இருக்கு, என்ன தான் சொன்னாலும் யோசிக்கவே மாட்டோம்னு சொல்றவங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லனுமான்னு, ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு!

சோதிடமும், சந்திரனும்!

//////வால்பையன் said...
எனது பதிவுகள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதுன்னு ஒரு டெம்ப்ளெட் வச்சிருந்திங்களே!
இடம் பத்தலைன்னு எடுத்துட்டிங்களா?/////

SP.VR. SUBBIAH said...
பகுக்கவும், வகுக்கவும், கழிக்கவும், கூட்டவும், பெருக்கவும், ஒதுக்கவும், அள்ளவும், கொட்டவும் எனக்கு
நேரமில்லை. ஆனால் பகுத்தறிவு பற்றி அந்த டெம்பிளேட்டில் எதுவும் சொல்லவில்லையே? இறைவனை
நம்புபவனுக்கும், நம்பாதவனுக்கும், அறிவு பொதுவானதுதான். அறிவை வைத்து பகுப்பதும் வகுப்பதும்
அவரவர்கள் இஷ்டம்.

*********************

மேலிருப்பது சுப்பையா வாத்தியாரின் இந்த பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டமும் அதற்கு அய்யாவின் பதிலும்!,

சென்ற ஆண்டு சூலை மாதம் நான் எழுதிய ”இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல்” என்ற பதிவும், அதற்கு எதிர்வினையாக நண்பர் கூடுதுறையும் அண்ணன் உண்மைதமிழனும் எழுதிய பதிவிற்கு நான் எழுதிய பதில் “கூடுதுறை மற்றும் உண்மைத்தமிழன் பதிவுகளுக்கு பதில்!”, இந்த இரண்டு பதிவுகளுக்கு பிறகு சுப்பையா வாத்தியார் பதிவின் முன்னால் கொட்டை எழுத்தில் “எனது பதிவு தன்னம்பிக்கையை குறைக்கலாம், பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது என்று வைத்திருந்தார்” இப்போ நேரமில்லையாம், ஆனால் எனக்கு நேரமிருக்கே, எதிர்வினையாற்ற!

********************

இந்த பதிவிலேயே சொல்லியிருந்தேன், சந்திரன் தோன்றியது எப்படியென்று, இங்கேயும் கொஞ்சம் முன்னோட்டம்,

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் மீது ஏற்பட்ட விண்கல்லின் மோதலில் தோன்றியது தான் நிலா என்ற துணைக்கோள், இந்த சூரிய குடும்பத்தில் பூமியை விட பெரிய துணைகோள்கள் சுற்றி வருகின்றன, ஆனால் பாருங்கள் தம்மாத்துண்டு புதன் கிரகம் நம் மீது செலுத்தும் கதிரியக்கத்தை அவைகள் நம் மீது செலுத்தாது!, ஆனால் உண்மையில் சூரியனை தவிர வேறு எந்த கோள்களும் கதிரியகத்தை ஏற்படுத்த முடியாது!. சந்திரன் பூமியை சுற்றி கொண்டு தம்மை தாமே சுற்றி வரும் ஒரு சிறு கிரகம், அதனால் பூமியில் low tide, high tide ஏற்படுவது உண்மை தான், ஆனால் அதற்கு மிக முக்கிய காரணம் பூமியை, நிலா சுற்றுவதோடு மட்டுமில்லாமல், பூமியின் வேகத்தில் அதனோடு இணையாக நிலா சூரியனையும் சுற்றி வருகிறது, அந்த வேகம் தான் பூமிக்கும் ஈர்ப்பு விசையை தருகிறது, மற்ற கோள்களுக்கும் ஈர்ப்பு விசை தருகிறது!



அதை தவிர பத்து பைசாவுக்கு பெருமானமுள்ள சிறு செயலைக்கூட சந்திரனால் ஏற்படுத்த முடியாது, அதனால் ஏற்படும் ஒரே நன்மை சுப்பையா வாத்தியாரின் பதிவில் இருப்பது போல் கதையளந்து காசு சம்பாரிக்கலாம்!, சரி சந்திரன் மட்டும் தான் எனக்கு எதிரியா என்றால், பதில் சந்திரன் மட்டுமல்ல, மொத்த சோதிடத்துக்கும் நான் எதிரி, ஏன் என்று விளக்க முயற்சிக்கிறேன்!

மனிதன் நாகரிக வளர்ச்சி பெற்றாலும் அவனுக்கு புரியாத புதிராக இருந்தது, இயற்கை சீற்றங்களும், மாறுதல்களும். ஒரு பகல்,ஒரு இரவு சேர்ந்து ஒருநாள் என கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாறுதல்களுக்கும் ஆகும் கால அளவை அவர்கள் குறித்து வைத்திருந்தனர்!,அவர்களுக்கு மனிதர்களின் வருங்காலத்தையோ, குணாநலன்களையோ தெரிந்து கொள்ளும் ஆர்வம் சிறிதும் இருந்ததில்லை, ஆனால் பின்னாள் வந்த சில பொறம்போக்குகள், அனைவருக்கும் பொருந்துவது போல் சில பலன்களை எழுதி காசு சம்பாரிப்பது மட்டும் அல்லாமல், அதை பயன்படுத்தி எப்போதும் மக்கள் சுயசிந்தனையில்லாமல் வாழ செய்து விட்டார்கள்!



நான் ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நோட்டின் பத்து பக்கத்தில் பத்து விதமன பலன்களை எழுதி, ஒவ்வொன்றிற்கும் நம்பர் கொடுத்து, பத்து துண்டு சீட்டில் நம்பர் எழுதி யாரைவாது எடுக்க சொல்வேன், அந்த நம்பருக்குண்டான பலன் அப்படியே பொருந்துகிறது என்பார்கள், அதை பல பேரிடம் நான் சோதித்திருக்கிறேன், கிட்டத்தட்ட கிளி சோதிடம் மாதிரி தான், யாராவது மறுமுறை சோதித்திருந்தால் அந்த பலனும் பொருந்தியிருக்கும், அவர்களும் எப்படியென்று கேள்வி கேட்டிருப்பார்கள், ஆனால் யாருக்கும் அப்படி கேள்வி கேட்க தோன்றுவதில்லையே என்பது தான் பெரும் வருத்தம்!
எனக்கிருக்கும் வாய்க்கு குடும்ப சோதிடம் என்ற புத்தகத்தை மட்டும் வைத்து கோண்டு மாதம் ஐம்பதாயிரம் சம்பாரிப்பேன், ஆனால் அந்த பொழப்புக்கு...................

பொதுவாக இரண்டு சாத்தியகூறுகள் தான் உலகில் உண்டு, நடக்கும், அல்லது நடக்காது, நான் மூணாவது ஒரு ஆப்ஷன் தருகிறேன், நல்லது நடக்கும். கெட்டது நடக்கும் அல்லது எதுவுமே நடக்காது!, ஆக இந்த மூன்றிம் எதாவது ஒன்று உங்களுக்கு நடந்தாக வேண்டும் இல்லையா, சோதிடம் என்றால் என்னவென்று தெரிந்த பகுத்தறிவுவாதி இதை துவைத்து காயப்போடுவான்!, உங்களுக்கு ராகுதிசை நடக்கும் அதனால் நல்லது நடக்கலாம், நடக்கலையா இன்னும் உள்ளே போங்கள் கேது புத்தி அதற்கு கெட்டது, அதற்கும் ஒன்னும் ஆகலையா என்ன ஹோரை என்று பாருங்கள், ஆக உங்களுக்கு இருக்கும் மூன்று ஆப்ஷனுக்கு எதாவது ஒன்றில் பலன் வருவது போல் திறைமையான ஒருவனால் அல்லது, வளரும் கேள்விகளுக்கேற்ப பலரால் மாற்றம் செய்யபட்டு உருவாக்கப்பட்டதே சோதிடம் என்னும் டுபாக்கூர்!
(சின்ன இடைச்சொருகல்:இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னாலேயே இப்படி ஒன்றை உருவாக்கி இருக்கும் போது, அதற்கு பின் வந்த மக்கள் ஏன் பைபிள், குரான் போன்ற புத்தகங்களை உருவாக்கியிருக்க முடியாது)

12 ராசியில் எந்த ராசி என்று தெரியாத ஒருவனுக்கு எதாவது ஒரு ராசியை எடுத்து காட்டுங்கள், சரியாக இருக்கிறது என்பான், இந்த உலகில் ஒரே குணநலனுடன் யாரும் பிறப்பதில்லை, கோபம், சந்தோசம், அழுகை, இரக்கம் போன்ற அனைத்தும் கலந்தது தான் மனிதன், அவைகளின் கலவை தான் சோதிடம், இதை மிக எளிதாக புரிந்து கொள்லலாமே, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாள், இரும்பு தொழில் செய், எண்னை தொழில் செய்யுன்னு எழுதிட்டு போயிட்டாங்க, அப்ப கம்பியூட்டர் இருந்துச்சா, காம்ப்ளான் இருந்துச்சா, ஏன்யா இன்னும் அதை கட்டிகிட்டு அழுறிங்க! ஒழுங்கா புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலைங்கள பாருங்க!

******************

டிஸ்கி:ரொம்ப நாளாக சர்ச்சைகுறிய பதிவு எழுதவில்லை என்று வருத்தப்பட்ட அ.மு.செய்யதுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

மேவிக்கு மட்டும் தான் ஞாபகம் வருமா!?

முதலில் மேவியின் பதிவை படித்து விடுதல் உத்தமம்!

என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே நான் அடித்த சரக்கு ஞாபகமாவே இருக்கு. சரக்கு என்றால் அது நான் அடித்த MC சரக்கு தான். மற்றவையில் எல்லாம் மட்டம், டூப்பிளிகேட் என்று அனுபவிக்காமல் MC, MC என்றே இருந்தேன். MC ல தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் தண்ணிர் ஊற்றி கொண்டு ..... முருக்கு , சிப்ஸ் கடிச்சி கிட்டு ....... சியர்ஸ் சொல்லி கொண்டு .....

வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........

எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் பார்ல ஓர் GET TOGETHER க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன பாட்டில்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் SCOTCH, டகிலா எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.

அப்ப ன்னு பார்த்து YOUTUBE ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்பே இல்லை......




வீடியோ தெரியலைனா இதை அழுத்துங்க

துணுக்ஸ்!

இன்று இரவு NDTV-HINDU!? டீவியில் byte it என்ற நிகழ்ச்சியில் நண்பரும், பதிவருமான அண்ணன் வடிவேலன் அவர்களின் பேட்டி வருகிறது, அண்ணாரின் கணிபொறி மென்பொருள்களின் கூடம் என்ற வலைப்பதிவு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு அவரின் உழைப்பே காரணம், அவரை மேலும் உயர வாழ்த்துவோம்


********

வரும் இருபதாம் தேதி(20.12.09) ஞாயிற்றுகிழமை, ஈரோட்டில் மீண்டும் ஒரு மாபெரும் சந்திப்பு நடந்த உள்ளோம், சென்ற முறை நடந்த சந்திப்பில் மேடியின் திருமணம் மிக முக்கிய காரணமாக இருந்தது, பல நண்பர்களுக்கு மேடியும்டன் நேரடி அறிமுகமில்லாமல் வர தயங்கியதாக தெரிகிறது, அதனால் இம்முறை பதிவர்களோடு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கும் சேர்த்து அழைப்பு விடப்படுகிறது!, பரஸ்பர அறிமுகம், ஒருவருகொருவர் உதவியாய்யிருத்தல், ப்ளாக்கர் பற்றிய சந்தேகங்கள், சமூக உதவி, எழுதும் முன் இருக்கும் தயக்கத்தை போக்குதல் போன்றவை முக்கிய விடயங்களாக பேசப்படும்!



இந்த முறை முழு பொறுப்பையும் அண்ணன் கதிர் ஏற்றுள்ளார், அதனால் தைரியமாக வரலாம்! வரும் முன் முன்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ ஒரு முறை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்!

வால்பையன்:9994500540
ஈரோடு கதிர்:9842786026

வெளீயூர் பதிவர்களுக்கு சிறப்பு சிகப்பு கம்பள வரவேற்பு உண்டு!

*********

போன பதிவை பற்றி பேச தோழர் கும்க்கிக்கு நேற்று மதியம் அழைத்திருந்தேன், அம்மாதிரியான தலைப்புகளில் அவருக்கு ஆர்வம் அதிகம், பேசி கொண்டிருந்தபோதே சாப்பாட்டு அயிட்டங்களும், முன் வந்து விட்டது, என்ன குழம்பு என கேட்க, ரசம் என்றார் தங்கமணி, கரண்டியை உள்ளே விட்டு கலக்கும் போது அடர் மஞ்சள் வண்ணத்தில் ஆனது, என்ன ரசம் என்றேன், கொள்ளுரசம் என்றார், சரி நேரில் பாராட்டினால் முகஸ்துதி என்ற நினைத்து கொள்வார் என்று போனிலேயே கும்கியிடம் என் மனைவி வைத்த ரசம் அப்படியே சாம்பார் மாதிரி இருக்குது என்றேன், அடத்து நொடி ரசக்கரண்டி என் மண்டையில் ”நச்” என்று இடித்தது, என்னாம்மா உன்னை புகழ்ந்து தானே பேசிகிட்டு இருக்கேன் என்றேன், உண்மையை சொல், என் ரசம், சாம்பார் மாதிரி நல்லாயிருக்குன்னு சொல்றியா இல்லை நான் வைக்கிற சாம்பார், ரசம் மாதிரி இருக்குதுன்னு கிண்டல் பண்றியா என்கிறார்.

ரங்கமணிகளுக்கு விடிவுகாலமே இல்லையா! இப்படியே போனா இதுக்கு என்ன தான் முடிவு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

*********

2012

புதுசா சொல்ல ஒண்ணுமில்லை, தங்கமணியின் வற்புறுத்தலினால் போய் அமர்ந்தேன், கிராபிக்ஸ் ,கிராபிக்ஸ் மீண்டும் அதே. இமயமலை பகுதியை சீனாவாக காட்டி அரசியல் செய்ததாக சிலர் சொல்லியிருந்தனர், இயமலையின் அந்த(பின்) பக்கம் யாருக்கு சொந்தம் என்று எனக்கு தெரியவில்லை, அதுவும் நமக்கு தான் சொந்தமா!?



கடைசி கப்பல் ஆபத்தில் சிக்க காரணமாக இருப்பது நாயகன் மற்று குரூப், ஆனால் அந்த சிக்கலை அவரே தீர்த்து வைக்க, என்னவோ அழிந்து கொண்டிருக்கும் மொத்த உலகத்தையும் காப்பாற்றியது போல் ஒருவருகொருவர் முத்தம் கொடுத்து, செண்டி”மெண்டல்” தனம் எல்லா பக்கமும் தான் இருக்கு!

**********

நான் எந்த டாஸ்மாக் பாருக்கு போனாலும் வாட்டர் பாக்கெட் வாங்க மாட்டேன், என்ன ஆனாலும் வாட்டர் பாட்டில் தான், போன வாரம் தண்ணீர் கிடைக்காமல் லோக்கல் தண்ணிர் ஊற்றி சரக்கு அடுத்து தொண்டையில் கரகரப்பு, மூக்கடைப்பு, ஒரே தும்மல்!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!

*********

கவிதை மாதிரி(அடிக்க கூடாது)

நீல வடிவ
வண்ணத்தில்
குழைத்த
சதுர வண்ண
மலர்கள் முன்
உயர்ந்ததொரு
ஆற்றினைப் போல்
படுத்து கிடந்த
அருவியின் பின்
கவிழ்ந்த கிடந்த
குவளைக்குள்
உருண்டிருந்த
பூகோளத்தின்
ஒற்றைகால்
சந்திரன்
நான்

********

டிஸ்கி:குவியல் தான், பெயர் மாற்றி!

முதலாளித்துவமும், கம்யூனிஷமும்!

அமெரிக்காவை கண்டுபிடித்தது அமெரிக்கோ வெஸ்புகியா அல்லது கொலம்பஸ்சா என்ற சந்தேகம் பலரை போலவே எனக்கும் இருக்கிறது, அமெரிக்கா என பெயர் வைத்து இருந்தாலும் அது அவரை பெருமை படுத்தும் வகையில் வைக்கப்பட்டது, உண்மையில் கண்டுபிடித்தது கொலம்பஸ் தான், அதனால் தான் முக்கிய நகரத்துக்கு கொலம்பியா என பெயரிடப்பட்டது என சிலர் கூறுகிறார்கள்! சரி பற்றிய ஆராய்ச்சியை பிறகு பார்ப்போம், நன்றாக வளர்ந்த அமெரிக்கா எப்படி நாசமா போச்சுனு இப்ப பார்ப்போம்!

பல அதிபர்களின் கடுமையான உழைப்பாலும், தொழில் புரட்சியாலும் அமெரிக்காவை வல்லரசாக மாற்றினார்கள், பின்னாளில் வந்தவர்கள் முதலாளிகளுக்கு சொம்பு தூக்கி அமெரிக்காவை அதலபாதாளத்துக்கு தள்ளினார்கள், சில உதாரணங்களோட ஆரம்ப்பிகிறேன்!

சில வருடங்களுக்கு முன் அரசின் கட்டுபாட்டில் இருந்த போக்குவரத்து துறையை ஒரு பிரபல மோட்டார் நிறுவனம் தன் வசமாக்க அரசை அணுகியது, பெட்டி நகர்ந்ததோ அல்லது மூளை மழுங்கிய அமைச்சர்களோ அதை தனியார்துறைக்கு தாரைவார்த்தார்கள்! கைக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம் ஒரு ரூட்டில் பத்து பேருந்து சென்றதென்றால் அதை ஐந்தாக குறைப்பது, பின் சுலப தவணையில் அவர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான காரை விற்பது, வீட்டுக்கு ஒரு கார் என்ற விளம்பரத்தின் மூலம் அவர்களது விற்பனை கனஜோராக நடந்தது, நடுத்தரவர்க்கமும் இமேஜ் கருதி கடன் வாங்கி கார் வாங்கினார்கள், சில வருடங்கள் குடும்பத்துக்கு ஒரு கார் என்ற விகிதத்தில் அமெரிக்காவில் கார் இருந்தது! பேருந்து பெயரளவே இயக்கப்பட்டது, நடுத்தரவர்க்கத்துக்கு கீழுள்ளவர்கள் மேலும் கீழ் சென்றார்கள், அவர்களை பற்றி இன்றளவும் எந்த முதலாளிகளுக்கும் அக்கறையில்லை!

மேலுள்ளது ஒரு சாம்பிள் தான், அதன் பின் தற்போது ஏற்பட்ட பெரும்சரிவுக்கு காரணம் வேறு, நுகர்வோரை மட்டுமே நம்பியிருக்கும் அமெரிக்க முதலாளிகள், அவர்களை கையில் வைத்து கொள்ள அள்ளி அள்ளி கடன் கொடுத்தார்கள், உலகிலேயே அதிக கிரிடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் அதிகம் என்ற கணக்கெடுப்பு சொன்னது, நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 90% பணம் கடனாக வங்கியே கொடுக்கும், மீதியையும் அவர்கள் வேறிடத்தில் கடனாக பெற்றனர், வெறும் கடனிலேயே வாழ்க்கையை ஓட்டிய அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிக வட்டியால் சரிந்தது, மிக அத்தியாவிசய பொருள் தவிர மற்ற பொருள்களின் விலை சரிந்தது!

மிக முக்கியமாக ரியல் எஸ்டேட், நீங்கள் ஒரு லட்சத்திற்கு வாங்கிய வீடு வெறும் ஐம்பதாயிரத்துக்கு தான் போகுமென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும், கடன் நிலுவையுள்ளவர்கள் தங்கள் வீடுகளை அப்படியே விட்டு விட்டு தங்களது நான்கு சக்கர வாகனங்களில் கிளம்பிவிட்டனர், இன்றும் பல குடும்பங்கள் வாகனங்களிலேயே திரிந்து கொண்டிருப்பதாக தகவல் உண்டு, விலை குறைந்த சொத்தை பறிமுதல் செய்தாலும் கொடுத்த பணத்திற்கு ஈடாகாது வங்கிக்கு, அதனுடன் கடனட்டை மூலம் வராக்கடன்கள் கோடிகணக்கில் ஏறியது, வங்கியில் ஆரம்பித்து ஒன்றுடன் ஒன்று தொடர்பாக அனைத்து தொழில்களும் முடங்கின!

பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர், வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்களிடம் வேலை பறிக்கப்பட்டது, நாடு திரும்ப முடியாத சிலர் தற்கொலை செய்து கொண்டனர்(வழக்கம் போல் வெளிவராது). அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த அனைத்து நாடுகளும் சற்றும் எதிர்பாராத சரிவை சமாளிக்க முடியாமல் பொருளாதார பின்னடவை கண்டது, தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடிந்த தகுதியான சில நாடுகள் மட்டும் காலூன்றி நின்றது, அமெரிக்க அரசும் பல கோடி நிதி அளித்து பல முதலாளிகளுக்கு உதவி செய்தது, ஆனாலும் நேற்று வரை அமெரிக்காவில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 124!. பலகோடிகள் பேப்பரை டாலராக மாற்றி அரசு பல நிறுவனங்களில் தம்மையும் பங்குதாரராக ஆக்கி கொணடது! (இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்ல)

****

இந்தியாவில், இந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயங்களில் தனியார் வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன! அதனாலேயே பலருடய எதிர்ப்பை அவர் சம்பாரித்தார், இன்றும் சில முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு இந்திராகாந்தியை பிடிக்காது, அதற்கு பல அரசியல் காரணங்கள் கூட சொல்வார்கள்!

தமிழகத்தில் நான் பிறப்பதற்கு டி.வி.எஸ் கையில் போக்குவரத்து இருந்ததாக சில பெருசுகள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன், இன்றும் இருந்திருந்தால் நம் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு டி.வி.எஸ் 50 யாவது கையில் இருந்திருக்கும் அதாவது வாங்க வைக்கப்பட்டிருப்போம்! இன்றும் கூட பெங்களூரில் தனியார் பேருந்துகளும் அரசுக்கு இணையாக இயங்குகின்றன!, ஒருவேளை அரசு பேருந்து இல்லையென்றால் தனியார் வைத்தது தான் சட்டம்! சில முதலாளித்துவவாதிகள் சொல்வார்கள் ஏன் ஒருவருக்கு மட்டும் கொடுக்கிறீர்கள் பலருக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று.

இந்தியாவில் இருக்கும் தனியார் கேபிள் ஆப்புரேட்டர்கள் கண்டிப்பாக தூர்தர்ஷன் சேனலை ஒளிபரப்ப வேண்டும், அவர்களும் ஒளிபரப்புவார்கள் ஆனால், சிக்னல் மிக குறைவாக உள்ள பேண்ட்வித்தில் வெளிச்ச புள்ளியாக, இரைச்சலாக இது தான் பொதிகை என்று நாமே கண்டு பிடித்து கொள்ள வேண்டியது தான்! அரசுக்கு இப்படியென்றால் தனியாருக்கு எப்படியிருக்கும் இருட்டடிப்பு!?, எத்தனை பேருக்கு கொடுத்தாலும் வலியவன் ஒருவன் அனைவரையும் கவுட்டுக்குள் அமுக்கி வைத்து மேலேறி உட்கார்ந்து கொள்வான், நுகர்வோர் தேவைகளை மறந்து தருவதை பெறும் நிலைக்கு தள்ளப்படுவோம்!



***

மேட்டர் என்னான்னா!. கம்யூனிஷம் என்பது தனி மனித கொள்கையாக இல்லாமல் ஒரு நாடு தன் கொள்கையாக வைத்திருந்தது, அது சக வல்லரசான ரஷ்யா , இன்று அதுவும் பல துறைகளை தனியாருக்கு வழங்கி கொண்டிருக்கிறது! ஒரு நாடு முழுக்க முழுக்க கம்யூனிஷ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், தனியாருக்கும் வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அரசின் கட்டுபாடு இருக்க வேண்டும், இல்லையென்றால் இங்கேயிருந்து எடுத்து நமக்கே இயற்கை எரிவாயுயை விற்க முயன்ற ரிலையன்ஸ் முதலைகள் போன்ற பல தோன்றி நம்மை மீண்டும் ஒரு காலணிய அடிமைதனத்திற்கு கொண்டு செல்லும்!

உண்மையிலேயே மாபெரும் சந்திப்பு தான்!

நண்பர் லவ்டேல் மேடியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது!, பல பணிகளுக்கு மத்தியிலும் நண்பர்கள் வெகு தூரத்தில் இருந்து வந்து விழாவை சிறப்பித்தனர், முதல் நாள் இரவிலிருந்தே நண்பர்கள் வரத்துவங்க நானும், பாஸ் கார்த்திக்கும் அவர்களை வரவேற்று அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம்.

முதலில் ஈரோடு வந்து சேர்ந்தது எழுத்தாளார் வாமு.கோமுவும், தோழர் பெரியசாமியும்(அவரே தான்), தோழர்கள் இருவரும் எங்களுக்காக பாரதி பதிப்பகத்தில் காத்து கொண்டிருந்தனர், லாதானந்த் சாரும் ரயிலில் வந்து கொண்டிருந்ததால் மொத்தமாக அழைத்து வர கார்த்திக், காரில் சென்று விட்டார், நான் நேராக அறைக்கு செல்ல அனைவரும் அங்கு வந்து விட்டனர்!, பின் ஒவ்வோருவராக வந்த வண்ணம் இரவு கழிந்தது!

சுவையான உரையாடலுடன் முதல் ஆட்டம் தொடங்கியது, திருப்பூர் நண்பர்கள் நேரடியாக மண்டபத்துக்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து அப்படியே செல்ல இருப்பதாகவும் போன் வந்தது, ஆட்டத்தை பாதியில் நிறுத்தி ஐந்து பேர் கொண்ட குழு முதலில் மண்டபம் கிளம்பியது, அந்த குழுவில் தான் லதானந்த் இருந்தார், சென்றவர்கள் வெகு நேரமாக திரும்பாததாலும், திருப்பூர் நண்பர்களிடமிருந்து போன் வந்து கொண்டேயிருந்ததாலும் இருந்த மூன்று இருசக்கர வாகனத்தில் மீதமிருந்த ஆறு பேர் கிளம்பினோன்!

நாங்கள் செல்லும் வழியிலேயே, ஐந்து பேர் கொண்ட குழு திரும்பி வந்து கொண்டிருப்பதாக போன் வந்துவிட்டது, வழியிலேயே சந்தித்தோம், சில,பல விசயங்கள் நடந்தது எங்களுக்கு அப்போது தெரியாது, லதானந்த் அவர்களின் பதிவை படித்தே நான் தெரிந்து கொண்டேன்!,

இவ்விடத்தில் இதை நான் சொல்லியே ஆகவேண்டும், பெரும்பாலான நண்பர்கள் ”பூஸ்ட்” குடிக்க உட்கார்ந்துட்டா வயசு வித்தியாசம் பார்க்காமல் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்னு நினைச்சிகிட்டு இருக்காங்க, அது தப்புன்னு நான் நினைக்கிறேன்!, நான் டோண்டு சார், தருமி சார் கூட அமர்ந்து கூட பூஸ்ட் சாப்பிட்டிருக்கேன், யாரும் இதுவரை முகம் சுழித்து சென்றதில்லை, நாம் ப்ளாக்கர் என்ற ஒரே விசயத்தில் மட்டும் ஒன்றுபடுகிறோமே தவிர ஒவ்வோருவருக்கும் ஒரு தொழில், வித்தியாசமான குணாதிசியங்கள் உண்டு! அதற்குறிய மரியாதையை தர வேண்டியது நம் கடமை, மீறும் பட்சத்தில் நீங்கள் நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்படலாம்.(சில பேர், என்னை ஒதுக்குவது போல)


இரவு விடிய விடிய நானும் மாநக்கல் சிபியும் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தோம், விடியற்காலை சித்தர் சுரேஷிடம் நடந்த வாழ்க்கையும், சீட்டு விளையாட்டு என்ற கட்டுரையும். ஆவியும், ஆசைகளும் என்ற கட்டுரையும் தனியே!, இரவு அறையில் தங்கியிருந்தவர்கள் அப்படியே மண்டபத்துக்கு செல்ல, பகலில் வரத்துவங்கியிருந்த நண்பர்கள் ஒவ்வொருவராக மண்டபம் வரத்தொடங்கியிருந்தனர், வர முடியாத நண்பர்கள் அலைபேசியில் அழைத்து மேடிக்கு வாழ்த்து சொல்லி கொண்டிருந்தனர், குசும்பன் மட்டும் என் போனுக்கு அழைத்து வாழ்த்து சொன்னார்!

இரண்டு மணி நேர அரட்டைக்கு பின் ஒவ்வொருவராக கிளம்பினோம்! மிக இனிதாக அமைந்த அந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த அடுத்த நண்பரின் திருமணத்திற்காக வெயிட்டிங்! கார்த்திகை பாண்டியன், ஸ்ரீதர் பெயர் அடிபடுகிறது, சிவகாசி அன்பு கூட வெகு தீவிரமாக கண்ணில் படும் பெண்களை லவ்வி கொண்டிருக்கிறாராம், குஜராத்தில் இருக்கும் டக்ளஸ் நமிதாவின் உறவுமுறை பெண் எதாவது கிடைக்குமா என்று தேடி கொண்டிருக்கிறார், எப்படியும் நமக்கு விரைவில் திருமண சாப்பாடு உண்டு!

வந்திருந்தவர்கள்!

லதானந்த்
வாமு.கோமு. - தோழர் பெரியசாமி
நாமக்கல் சிபி
கும்க்கி
தியாகு
இளையகவி
வழக்கறிஞர் ராஜசேகரன்
கதிர்-ஈரோடு
பாலாஜி
கோவை சுரேஷ்
சிவாஜி
பெர்ணாண்டஸ் - அவரது சகோதரர்
கார்த்திகைப்பாண்டியன்
ஸ்ரீதர்
அகல்விளக்கு ஜெய்சிங்
ரம்யா - கலை அக்கா - சித்தர் சுரேஷ் - மணி
எ(ஏ)ழுத்தோசை தமிழரசி
ரங்கா
செல்வேந்திரன்
ராஜன் ராதாமணாளன்
கனவுகளின் முகவரி ரீனா
ஊர்சுற்றி ஜோன்சன்
பட்டிகாட்டான் அவரது நண்பர் வசந்த்
திருப்பூர் நண்பர்கள்:
பரிசல்காரன்
வெயிலான்
ஈரவெங்காயம்

யார் பெயராவது விட்டு போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!

******

ஊர்சுற்றி அவர்கள் தொடுத்துள்ள புகைப்பட ஆல்பம்!

******

வேறு யாராவது இச்சந்திப்பை பற்றி பதிவெழுதியிருந்தால் பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கவும்!

குவியல்!..(24.11.09)

வரும் வெள்ளிக்கிழமை(27.11.09)நண்பரும் பதிவருமான லவ்டேல் மேடியின் திருமணம் ஈரோட்டில் நடக்க இருப்பது யாவரும் அறிந்ததே!, நண்பரும் தனக்கு தெரிந்த வரை அனைவருக்கும் இ-மெயிலிலும், அலைபேசியிலிலும் அழைப்பு விடுத்திருந்தார், அழைப்பு கிடைக்காத நண்பர்களும் கலந்து கொள்ளலாம், தயவுசெய்து நண்பர்களுக்குள் சங்கோஜம் இல்லாமல் கலந்து கொள்ளவும், மேடி, வரும் நண்பர்களை தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார், வரும் நண்பர்கள் உங்களது வருகையை உறுதி செய்தால் எவ்வித தடங்கலும் இல்லாமல் சிறப்பான கவனிப்பிற்கு வழிவகுக்கும்!

எனது மின்னஞ்சலுக்கோ, அலைபேசிக்கோ அழைத்து வருகையை உறுதி செய்து கொள்ளவும், ப்ளீஸ்!

****

கடைசியாக அல்லது ஒரு வழியாக நானும் ட்வீட்டரில் இணைத்து விட்டேன், ஆர்வ கோளாரில் அதை எனது அலைபேசிக்கு லிங்க் கொடுக்க இரவெல்லாம் ”டொய்ங்” ”டொய்ங்” என்று அடித்து இல்லாளின் கோபத்தை சமாளிக்க வேண்டியிருந்தது, எனது அலைபேசியில் GPRS அருமையாக வேலை செய்கிறது, எனது வலைப்பூவை அதன் மூலமே பார்க்க முடிகிறது, அதிலிருந்தே ஒரு பின்னூட்டம் கூட போட்டேன்! இனி அடுத்து மூன்றாம் தலைமுறை அலைவரிசையில் என்னவெல்லாம் நடக்கும் என ஆர்வம் பொங்க உங்களை போலவே காத்திருக்கிறேன்!

****

pulp fiction

இதனை தனி பதிவாக இடும் எண்ணத்தில் இருந்தேன்! பல்பு வாங்க வைத்த ”பல்ப் பிக்‌ஷன்” என்ற பெயரில் பதிவெழுதி ஒரு எண்ணிக்கையை கூட்டும் எண்ணம் ஹாலிவுட் பாலா போன்ற ஜாம்பாவான்களை பார்க்கும் போது என்னை விட்டு அகன்று விட்டது! இந்த படத்தின் இயக்குனர் திரைக்கதையில் பல புதுமைகளை புகுத்தியவர் என அனைவரும் அறிந்ததே! ஆனால் நான் பார்த்த இவரது முதல் படம் kill bill, ஆக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதையில் அவர் செய்த மேஜிக் வேலைகள் எனக்கு தெரியவில்லை, சண்டை காட்சிகளில் அதீத வன்முறைக்கு பதில் அனிமேஷன் காட்சிகளை புகுத்தியது பின்னாளில் ஆளவந்தானில் பயன்படுத்தப்பட்டது!

இந்த படத்தை பொறுத்தவரை இது ஒரு non liner படம் என்று பின்நவீன பார்ட்டிகள் சொல்கிறார்கள், பத்து பக்க கதையை கலைத்து போட்டு வரிசையாக இல்லாமல் இஷ்டத்துக்கு படிப்பது திரைக்கதையில் ஒரு புதுமை, ஆனாலும் சேப்டர்(அத்தியாயம்) வாரியாக கதை தொடர்போடு இருப்பதால் அதிகம் மண்டை காயவில்லை, புருஸ் வில்லிசின் சேப்டரில் ஜான் ட்ரோவோல்டா சாக, மீண்டும் அடுத்த சேப்டரில் வருவது, புதிதாக இம்மாதிரியான படம் பார்ப்பவர்களுக்கு குழப்பலாம்!, கடைசி சேப்டரில் சாமுவேல் ஜான்ஷனுக்கு ஃப்ரெண்டாக வருபவர் தான் இந்த படத்தின் இயக்குனர், பெரும்பாலும் இவரது படங்களில் ஒரு காட்சியிலாவது நடித்து விடுவது இவரது வழக்கம்.



படத்தின் ஆரம்பம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மெதுவாக தான் இருந்தது!, போக போக சீட்டின் நுனிக்கு வருவது உங்கள் சீட்டின் அளவைப் பொறுத்தது, சரி இது தான் கதை போல என்று நிமிர்ந்து அமர்ந்தால் அடுத்த சேப்டரில் புருஷ் வில்லீஸ், இவ்விடத்தில் சொல்ல வேண்டிய முக்கிய காட்சி, வில்லீஸின் கனவில் வரும் சிறுவயது காட்சி, ஒரே ஒரு காட்சிக்கு வந்தாலும் கிரிஸ்டோபர் வால்கின்னின் நீண்ட பேச்சு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பது ஹாலிவுட் நடிகர்களின் திறமைக்கு ஒரு அத்தாட்சி, இப்படத்தில் பல காட்சிகள் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டவை தான்!,

இந்த சேப்டரில் ட்ரவோல்டா இறந்தவுடன் அது முடிந்தவிடும் என்று நினைத்தால் அதன் பிறகு தான் விசயமே ஆரம்பம், புருஷும் அவரது முன்னாள் ஓனரும் இரண்டு சைக்கோக்களிடம் மாட்டும் போது, ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியின் உச்சிக்கே போவோம், எனக்கு பிடித்த சேப்டராக கடைசி சேப்படரை தான் சொல்வேன், இயக்குனருக்கு நடிகர்களை தேர்தெடுப்பதில் மிக சிறந்த சுவை, கடைசி சேப்டரில் சாமுவேல் ஜாக்‌ஷனின் வசனமும், அதை சொல்லும் அழகும், holy smoke புகழ் ”ஹார்வி கீத்தலின்” அசால்டான நடிப்பும் மிக அருமை, ஒருவேளை நான் தியேட்டரில் பார்த்திருந்தால், ட்ரவோல்டாவின் கடைசி காட்சிக்கு மட்டும் எழுந்து நின்று கை தட்டியிருப்பேன், அந்த ரெஸ்டாரண்டில் இருந்து வெளியே போகும் காட்சிக்காக மறுபடி ஒருமுறை பார்க்கலாம்!

****

புதிர்!

venom, poison இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன!?

கோள்களும் மோதல்களும்!

நாம் மில்கிவே என்னும் கேலக்ஸியில் ஓரத்தில் சிறு புள்ளியாக தெரியும் சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாம் கோளான பூமியில் வசிக்கிறோம், இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி கோடி ஆண்டுகள் ஆனாலும் பூமியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்த சம்பவம் நடந்து 450 திலிருந்து 500 கோடி வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு நடந்திருக்கலாம் என தமிழில் ஆராயலாம்!




கோள்களில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்களின் மோதல் மிக ஆபத்தானது என்றாலும் சில சமயங்களில் அதுவே நன்மையில் கூட முடியக்கூடும், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எரிமலைகள் நிரம்பி என்னேரமும் தங்கம் போல் முன்னி கொண்டே இருந்தது தான் இந்த பூமி, அதன் மீது ஒரு விண்கல் அல்லது வால்நட்சத்திரத்தின் மோதல் அதன் மீது பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது, முதலாவதாக சொல்ல வேண்டுமென்றால் பூமியின் பருவநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் 23.5% சாய்வு கோணம் அதனால் தான் ஏற்பட்டது.




பூமியின் மேல் ஏற்பட்ட மோதலில் நம்மில் இருந்து பிரிந்து சென்றது அல்லது நம் மீது மோதிய கல்லும் கூடவே பூமியில் இருந்து பிய்த்து செல்லப்பட்ட தனிமங்களும் சேர்ந்தது தான் நிலா!, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியில் நிலவை பொருத்தினால் அது சரியாக பொருந்தி கொள்ளும் அளவே உள்ளது!, நிலவு நம்மில் இருந்து வருடத்திற்கு ஒண்ணரை கிலோமீட்டர் விலகி செல்கிறது, நம் ஈர்ப்பு விசையின் எல்லையை அது கடக்கும் போது, தனி கோளாக மாறி பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றலாம், அல்லது செவ்வாயில் மோதி சுக்கல் சுக்கலாக உடையலாம்!




பூமியை சுற்றி கொண்டிருக்கும் நிலா தீடிரென்று பாதை மாறும் போது அதனால் சீரான பாதையை பெற முடியாது, ஒவ்வொரு பனிரெண்டாயிரமாவது சுற்றுக்கும் ஒருமுறை அது பூமியின் சுற்று பாதையை தொட்டு செல்லும், அப்போது அது பூமியின் மீதே மோதலாம், இதெல்லாம் நடக்கமூடிய சாத்தியங்கள் 40 லட்சம் வருடங்களுக்கு பின் இருப்பதால் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை!,



பூமிக்கு அடுத்த கோளாக இருக்கும் செவ்வாய் 700 கோடி வருடங்களுக்கு முன் இப்போதிருக்கும் அளவை விட இரண்டு மடங்கு இருந்தது, அதன் மீது மோதியது நிச்சயமாக ஒரு பெரிய விண்கல்லாக தான் இருக்கும் அல்லது வியாழன் கிரக்கத்தில் இருந்த துணை கோள் ஒன்று முன் கூறிய நிலவின் கதையைப்போல் அதன் சுற்று பாதையில் இருந்து பிரிந்து செவ்வாயின் மீது மோதியிருக்கலாம், அதன் பெரும் மோதல் அதனுடய சாய்வு கோணத்தையும் மாற்றிவிட்டது, பூமியை போலவே அதுவும் 24.5% சாய்வான கோணத்தில்  சுற்றி கொண்டிருக்கிறது, அதனுடன் மோதிய கோள் ஒன்று சேர முடியாமல் தன் உட்கருவை இழந்து சிறு சிறு கற்களாக ”அஸ்ட்ராய்டு பெல்ட்” என்ற பெயரில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுற்றி கொண்டிருக்கிறது.



அஸ்ட்ராய்டு பெல்டில் ஆயிரக்கணக்கான கற்கள் இருக்கின்றன, சிறுகற்கள் என்று சொன்னேனே தவிர சில கற்கள் நுறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டவை, செவ்வாய்க்கும், வியாழனுக்கும் உள்ள தூரம் மிக அதிகமென்பதால் அது வேறு கோள்களை அணுகி சுற்றாமல் தனியாக ஒரு வளையம் போல் சூறியனை சுற்றி வருகிறது, இதே போன்ற ஒரு வளையத்தை நாம் சனி கிரகத்தை சுற்றியும் பார்க்கலாம், அதுவும் மோதலில் ஒன்று சேர முடியாமல் தனி தனி கற்களாக சனிகிரகத்தை  சுற்றி வருகிறது, வியாழன் தான் சூரிய குடும்பத்தில் பெரிய கோள் என்பதால் அது பல சிறு கோள்களை இழுத்து சூரிய குடும்பத்தில் பல துணைகோள் கொண்ட பெரிய கிரகமாக சுற்றி வருகிறது.




1994 ஆம் வருடம் சூமேக்கர் என்பவரும் லெவி என்பரும் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தை வானில் கண்டனர், அதற்கு முன் அந்த வால் நட்சத்திரத்தை பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, அதனுடய சுற்று பாதை ஆச்சர்யபடும் வகையில் வியாழன் கிரகத்துக்கு அருகில் இருந்தது, அந்த வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு 21 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகம் நோக்கி ஒரு ரயில் வண்டி பெட்டியை போல் அசுர வேகத்தில் சென்றது, வியாழன் கிரகத்தின் காற்று மண்டலத்தை அடைந்த போது அவற்றில் தீ பற்றி வரிசையாக ஒரு தோரணம் போல் சென்றதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.




அதற்கு முன் எந்த கோளிலும் இவ்வளவு பெரிய மோதலை பூமியில் வசிக்கும் மக்கள் கண்டிராதபடியால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை, அந்த மோதலுக்கு பின் வியாழன் கிரகம் பெரிய தீப்பிழம்பாகி சூரிய குடும்பத்தில் இரண்டு சூரியன்கள் போல் காட்சியளிக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் ஆனால் ஆச்சர்யப்படதக்க வகையில் சூரிய குடும்பத்தின் பெரும் கோளான வியாழன் அதை ஒரு பெரிய பூகம்பம் போல் தன்னகத்தே ஏற்று கொண்டது, அதன் பின் அதிலிருந்து கிளம்பிய புகையில் நடுமையத்தில் இருந்த ஓட்டை மட்டும் பூமியை விட பெரிதாக இருந்ததாம், அப்போது ஏற்பட்ட புகை மண்டலம் மட்டும் ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலே உயர்ந்து இன்று வரை அப்பகுதியை மறைத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.




கோள்களின் மோதலில் மிக விசித்திரமான விளைவை பெற்றது யுரேனஸ் கோள் மட்டுமே, பூமியும், செவ்வாயும் தன் அச்சிலிருந்து 23.5% சாய்ந்திருப்பது போல் யுரேனஸ் கிரகம் 90% சாய்ந்திருக்கிறது, காட்சியமைப்பாக சொல்ல வேண்டுமென்றால் பூமியும், செவ்வாயும் சற்றே சாய்ந்த நிலையில் சுற்றும் பம்பரம் ஆனால் யுரேனஸ் கிட்டதட்ட உருளையின் அச்சில் சுற்றுகிறது தன்னை தானே!, அதற்கு காரணம் அதன் மீது மோதிய மாபெரும் விண்கல்லே!, விண்கற்களினால் சூரிய குடும்பத்தில் பெரும் மாற்றத்தை சந்தித்தது யுரேனஸ் மட்டுமே

*******

இந்த பிரபஞ்சம் பல ஆச்சர்யங்கள் நிரம்பியது தொடர்ந்து உரையாடுவோம்!

Five "Q"

உலகத்திலேயே ரொம்ப ஈஸி கேள்வி கேக்குறது தான்னு ஒரு படத்துல கமல் சொல்லுவாரு, அதை தான் நானும் இப்போ சொல்லப்போறேன்!, Five Q என்பது "ஐந்து கேள்விகள்" என்ற தத்துவத்தை சொல்லுது, மேலாண்மையில் இது அடுத்த கட்ட வளர்ச்சின்னு கூட சொல்லலாம்!, நொய்யு நொய்யுன்னு கேள்வி கேட்டா யார்யா பதில் சொல்லப்போறான்னு நினைக்காதிங்க, பல பெரிய பிரச்சனைகளின் ஆதாரம் ஒரு சிறு முடிச்சா தான் இருக்கும், அந்த முடிச்சை கண்டுபிடிச்சிட்டா அந்த பெரிய பிரச்சனை உடனே தீர்ந்து விடும்!

உதாரணமா ஒரு கம்பெனிக்கு நாம அனுப்ப வேண்டிய பொருள் போய் சேரலை, நீங்க ஒரு மேலதிகாரி, உங்களுக்கு கீழே இருக்குறவர்கிட்ட விசாரிக்கிறிங்க!

ஏன் பொருள் போகல!?

முக்கியமான ஒரு பொருள் இன்னும் தயாராகலை

ஏன் தயாராகலை?

அதற்கு உண்டான ரா மெட்டீரியல் வந்து சேரல

ஏன் வரல?

அதற்கான பணம் நாம இன்னும் கொடுக்கல

ஏன் பணம் கொடுக்கல?

நமக்கு வர வேண்டிய அவுட் ஸ்டேண்டிங் இன்னும் வந்து சேரல

அதை ஏன் பாலோ பண்ணல?

இதுல ஐந்தாவது கேள்வியோடு முதல் பிரச்சனை முடிந்தாலும், அவ்விடத்தில் இன்னொரு பிரச்சனை ஆரம்பிக்குது, அதன் பின் மீண்டும் ஐந்து கேள்விகள் தான், நமக்கு கீழ இருக்குறவங்க ஒழுங்கா வேலை செய்யுறாங்களான்னு பார்க்க வேண்டியது தானே ஒவ்வோரு மேலதிகாரின் கடமை, அதற்காக ஐந்து கேள்விகள் கூட கேட்க முடியலைனா எப்படி?

இன்னோரு விசயம், இந்த தத்துவம் பெரும் இயந்திர உற்பத்தியகங்களுக்கு மட்டும் பயன்தரும்னு இல்ல, சாதாரண பெட்டிகடைக்கும் பொருந்தும், வீட்டிற்கும் பொருந்தும், சும்மா ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்களேன்!

***************




வேலையை சுலபமாக்குதல் அல்லது இலகுவாக்குதல், ”வொர்க் சிம்பிலிஃபை”ன்னு நானே சொல்லிகுவேன்!, ஒரு வேலையை முத தடவை பத்து நாள்ல செஞ்சு முடிச்சோம்னா அடுத்த தடவை எட்டு நாள்ல வேலை முடிய என்ன செய்யனும்னு பார்க்கனும், சின்ன சின்ன வேலைகள் மூலமா இதை சாத்தியமாக்க முடியும்,

அடிப்படையில் இந்த தத்துவத்துக்கு ரொம்ப முக்கியம் முதல் தடவை செஞ்ச தப்பை மறுபடி செய்யக்கூடாது, அதனால நாம இல்லாட்டியும் அடுத்தவங்க அதை செய்யாம இருக்க அதை குறிச்சு வைக்கனும், வேலை செய்யாத சுவிட்சுகள் மேல ”டூ நாட் டச்சு”ன்னு கூட எழுதி வைக்கலாம், எந்தந்த பொருள்களில் என்னன்ன பிரச்சனைன்னு எல்லோருக்கும் தெரியிற மாதிரி குறிப்பு வைக்கிறது ரொம்ப முக்கியம்!

அடுத்து எடுத்த பொருளை எடுத்த இடத்தில் திரும்பவும் மறக்காம வைக்கிறது, இதுனால மணி கணக்குல கூட வேலை நிற்கலாம், அதனால ஒவ்வோரு பொருளுக்கும் இது தான் இடம்னு முன்கூட்டியே பிக்ஸ் பண்ணி வச்சிகனும்.

கடைசியா டைம் மேனேஜ்மெண்ட், மேலே உள்ளதெல்லாம் ஒழுங்கா இருந்தா தான் இது சரியா இருக்கும், அதே நேரம் ஒரு வேலை தடை பட்டுச்சுன்னா அதோட தொடர்புடய இன்னோரு வேலையை பார்ப்பது மூலம் இதை சரி செய்யலாம், அனைத்திற்கும் முன்னாள் நாம் செய்ய பத்துநாள் அனுபவம் கைக்கொடுக்கும்!


டிஸ்கி: நாங்க துறை சார்ந்த மொக்கைகளும் போடுவோம்ல!

குவியல்!..(11.11.09)

நாளையோட நான் பதிவெழுத வந்து இரண்டு வருடம் ஆகிறது!
இது எனது முதல் பதிவான அறிமுகப்பதிவு! அதன் பின் ஒரு வருடங்கள் தொடர்ச்சியான மரணமொக்கைகள் தான், இப்ப தான் கொஞ்சம் நானே திரும்ப படிக்கிற மாதிரி இருக்கு! எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், உங்களது உளியே என்னை செதுக்கியது!
நன்றி நன்றி நன்றி!

பதிவரும் நண்பரும் ஆகிய ரோமியோபாய் அவர்களுக்கு இன்று ஆண்குழந்தை பிறந்திருக்கிறது!, நண்பர் முதல் நாளே எங்களை சந்தித்து சென்று விட்டதால் ட்ரீட் வாங்க முடியவில்லை, சென்னைக்கு வந்ததும் என் பங்கு ட்ரீட்டையும் நண்பர்கள் கேட்டு வாங்கி கொள்ளவும்!

***

இந்த முறை பெய்த பருவமழை வரலாறு காணாத கன மழையெல்லாம் கிடையாது, ஆனால் ஊட்டியில் இருப்பவர்களுக்கு வரலாற்றிற்கும் மறக்க முடியாமல் செய்து விட்டது, கனத்த மணல் அரிப்பிற்கு காரணம் மலை பிரதேசங்களில் இருக்க வேண்டிய போதுமான மரங்கள் இல்லாததே, மரத்தின் வேர்கள் மண்ணை இறுகபற்றி மண்ணரிப்பு ஏற்ப்படாமல் செய்திருக்கும்!, நீங்கள் நாட்டுக்கு எதாவது செய்ய விரும்பினால், எல்லையில் சென்று போரிட்டோ, குடுவைகள் வரிசையாக வைத்து ஆராய்ச்சி செய்தோ தான் நன்மை செய்ய முடியும் என்று அவசியமில்லை, தயவுசெய்து ஒரு மரமாவது நடுங்கள்!


**

வரும் 27 ஆம் தேதி ஈரோடில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என ஒரு சின்ன நப்பாசை, நண்பரும் பதிவருமான லவ்டேல் மேடியின்(பின்”மண்டை”த்துவ வாதி) திருமணம் ஈரோட்டில் நடக்கிறது, நண்பர்களுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார், ஈரோட்டில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் பதிவர்கள் நண்பர்கள் முக்காட்டை விலக்கி கொஞ்சம் முகம் காட்டினால் தன்யனாவேன்!

**

"தோஸ்தானா" என்ற ஹிந்திப்படம்(ராஜ் தாக்குரே வந்து தாக்கிறப்போறார்) சமீபத்தில் பார்த்ததில் உலக மொழி படங்கள் அளவுக்கு அசர வைத்தது!, சாதாரண நடிகர்களே நடிக்கத் தயங்கும் வேடம் ஜான் ஆபிரகாமும், அபிஷேக் பச்சனும் ஏற்று நடித்திருக்கிறார்கள், ஹிந்தி தெரியாமலேயே சிரித்து கொண்டே பார்த்தேன் என்றால் பாருங்களேன், ஜானும், பச்சனும் தங்குவதற்கு வீடு கிடைக்காமல் வேறு வழியின்றி ஓரிடத்தில் தாங்கள் ஓரினசேர்க்கை பிரியர்கள் என பொய் சொல்லி வீட்டில் நுழையும் காட்சியிலிருந்து நமக்கு சிரிப்பு ஆரம்பிக்கிறது, பின் கடைசி காட்சி வரை சிரிப்பு தான்!



பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட அனைத்து தகுதிகளும் உடையவர், அப்படியொரு நடிப்பு, பிரியங்கா தனது முதலாளியான பாபி தியோலை காதலிக்க, பிரியங்காவை காதலிக்கும், ஜானும், பச்சனும் அதை கெடுக்க பாபி தியோலுக்கு கேனத்தனமான ஐடியா கொடுத்து பிரியங்கா முன் அசடு வழிய வைக்க, இறுதியில் ஜானும், பச்சனும், பாபி தியோலை காதலிக்கிறார்கள் என பிரியங்கா நினைக்க, நினைக்கும் போதே சிரிப்பு வருதுல்ல, படம் பாருங்க நான் ஸ்டாப் காமெடி கேரண்டி!

**
அகநாழிகையின் ஒரு கவிதைக்கு நான் இட்ட பின்னூட்டம், கொஞ்சம் மாற்றம் செய்து!

எடை நிறைந்த சொற்கள்
புரிதலை தரவில்லை!
ஒவ்வோரு வரிகளுகிடையிலும்
தொடர்பற்று போனவனாய்
இருக்கிறேன்
மழுங்கி போன மூளையோ,
ஏன் புரியனும் என்ற
மமதையோ காரணமாக
இருக்கலாம் ஆயினும்
எனக்கும் கவிதைக்குமான
உறவு இறுதியற்றது!

எப்படியெல்லாம் வைக்கிறாங்கய்யா டிஸ்கி!..

சாதாரணமாக பதிவுகளிலில் டிஸ்கி என்ற வார்த்தையை பார்த்திருப்போம், disclaimer என்ற வார்த்தையின் சுருக்கம் தான் டிஸ்கி, அதில் கூட என்னன்ன ஏடாகூடாங்கள் செய்யலாம் என யோசித்ததில் வந்தது, நண்பர்களுக்கு தெரிவதை பின்னூட்டத்தில் சொல்லலாம்!

***

டிஸ்கி:
மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே, ஆனால் யாருடய கற்பனைன்னு தான் தெரியாது!


டிஸ்கி:
மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை, ஆனா இன்னும் நடக்கவில்லை!


டிஸ்கி:
மேற்கண்ட விமர்சனத்தை சம்பந்தபட்டவர் படிக்க நேர்ந்தால் தயவுசெய்து இதை புனைவாக எடுத்துக்கொள்ளவும்


டிஸ்கி:
மேற்கண்ட கட்டுரை யாரையும் புண் படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, அப்படி யாரும் புண்பட்டிருந்தால் கம்பெனி மருந்து வாங்கிதராது!


டிஸ்கி:
தயவுசெய்து யாரும் கதையில் வரும் நாயகன்(நாயகி) கதாபாத்திரத்தோடு உங்களை உருவகப்படுத்தாதீர்கள், கதையில் வரும் நாயகி(நாயகன்) தற்கொலை செய்து கொள்ளக்கூடும்!


டிஸ்கி:
மேற்கண்ட கவிதை, கவிதை இல்லை எனும் பட்சத்தில், அதை எழுதியது நானில்லை என கொள்க!


டிஸ்கி:
இந்த அரசியல் விமர்சனகட்டுரை எழுதிய பதிவர் வெளிநாடு சுற்றிலாவில் இருப்பதால், சம்பந்தபட்டவர்கள் ஆட்டோ அனுப்பி ஏமாற வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்!


டிஸ்கி:
இது நகைச்சுவை பதிவு, படித்தும் சிரிப்பு வராத பட்சத்தில் சிரிப்பொலி சேனல் பார்த்துவிட்டு பின்னூட்டம் போடவும்!(விளைவுகளுக்கு கம்பெனி பொறுபல்ல)


டிஸ்கி:
இந்த ஆராய்ச்சி கட்டுரையை படிக்கும் போது யாரும் சோதனை குடுவைகள் அருகில் வைத்து கொள்ளவேண்டும் என்பது அவசியமல்ல!


டிஸ்கி:
இந்த கட்டுரை, படிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும், மற்றவர்கள் படிக்க வேண்டாம்!



டிஸ்கி:
இங்கிருக்கும் டிஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள டிஸ்கியென்று டிஸ்கி போட வேண்டும்!


டிஸ்கி:
கும்மி ஸ்டார்ட்!


பிடித்தவர், ரொம்ப பிடித்தவர்!..

தோழர் மாதவராஜ் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார், பழைய தொடர்கள் மாதிரியே இதுவும் சுற்றி கொண்டு தான் இருக்கிறது, சில சங்கடங்கள் கருதி 32 கேள்விகள், அ,ஆ,இ போன்ற தொடர்களை நான் நிராகரித்து விட்டேன், முக்கிய காரணமே பதிவுக்காக பொய் சொல்வது என்னை நானே ஏமாற்றி கொள்வது போல், அதற்கு எழுதாமலே இருக்கலாம் இல்லையா!

சரி இப்ப மட்டும் ஏன் எழுதுறேன்னு கேக்குறிங்களா!, வேகமாக ஓடி கொண்டிருக்கும் நதியை சற்றே திசை திருப்பிவிடும் நோக்கம் தான், அதனால் தலைப்பை மாற்றி விட்டேன், அடிப்படையில் எனக்கு பிடிக்காதவர்கள் என யாருமே கிடையாது, உங்களுக்கே தெரியும், யாருடனும் நாம் 100% முரண்பட்டிருக்க முடியாது, ஒன்றிரண்டில் உடன்படுவோம், பின் ஏன் பிடிக்கலைன்னு சொல்லிகிட்டு, மேலும் நமக்குள்ளயே பிடிக்கலைன்னு சொல்லி புதிய அரசியலுக்கு வழி வகுக்க காரணமும் ஆகிவிடக்கூடாது!

அதனால் இன்னும் எழுதாதவர்கள் இனி இந்த தலைப்பிலேயே எழுதலாம், உங்களுக்கு பழைய தலைப்பிலேயே எழுத ஆசையிருந்தாலும் எழுதலாம், உங்கள் விருப்பமே முக்கியம்!, மேட்டருக்கு போவோம்!

*****

அரசியல் தலைவர்

பிடித்தவர்:ஸ்டாலின்
பெரிதாக அலட்டல் இல்லாதவர் என்பது காரணம்!

ரொம்ப பிடித்தவர்:நல்லகண்ணு
இவரது எளிமையே இவரை தமிழகம் விரும்பக்காரணம்

*

எழுத்தாளர்

பிடித்தவர்:பிரபஞ்சன்
இவரது கதைகளில் சூழ்நிலை தான் வில்லன், மற்றபடி அனைவரும் நல்லவர்களே!

ரொம்ப பிடித்தவர்:சுஜாதா
நானெல்லாம் 425 பாலோயர் வச்சிருக்கேன்னா அதுக்கு இவர் தான் காரணம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் பலருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியவர் என்பதால்!

*

கவிஞர்

பிடித்தவர்:பா.விஜய்
இவரது தன்னம்பிக்கை தரும் பாடல்களுக்காக

ரொம்ப பிடித்தவர்:வாலி
வாலிபக்கவிஞர் என்பதால், எச்சூழலுக்கும் ஏற்றவாறு எழுதுவார்

*

இயக்குனர்

பிடித்தவர்:விசு
எனக்கே ஆச்சர்யமான விசயம் இது, இன்றும் விசு படம் பொருமையாக பார்க்கிறேன், இந்தனைக்கும் நான் ஒரு அன்செண்டிமெண்டல் ஆள்!

மிகவும் பிடித்தவர்:நகைச்சுவை இயக்குனர்கள்
குறிப்பாக பெயர் சொல்லமுடியவில்லை, எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும், கிரேஸிமோகன் வசனத்துக்காகவே படம் பார்ப்பேன்!

*

நடிகர்

பிடித்தவர்:விக்ரம்
இவரது தன்னம்பிக்கைகாக

மிகவும் பிடித்தவர்:பிரகாஷ்ராஜ்
தன்னம்ப்பிகையுடன் தொழிலில் இருக்கும் ஈடுபாட்டிற்காக!

*

நடிகை

பிடித்தவர்:ஆண்டி ஆகாத நடிகைகள் அனைவரும்
இந்த விசயத்தில் கஞ்சத்தனம் கூடாது!

மிகவும் பிடித்தவர்:ஆண்டி ஆன நடிகைகள் அனைவரும்
சரோஜாதேவியெல்லாம் பாட்டி வகையறா, அவர்களை லிஸ்டில் சேர்க்காதீர்கள்

*

இசையமைப்பாளர்

பிடித்தவர்:இளையராஜா
இவரது மெலோடி பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

ரொம்ப பிடித்தவர்:யுவன் ஷங்கர்ராஜா
புலிக்கு பிறந்தது பூனையாகுமா!?

*

பதிவர்

பிடித்தவர்:t.v.ராதாகிருஷ்ணன்
சிரிக்கலாம் வாங்கன்னு கூப்பிட்டு சிரிக்க வைப்பதற்காக

ரொம்ப பிடித்தவர்:குசும்பன்
எந்த விசயயமாக இருந்தாலும் அதில் நகைச்சுவை தேனை தடவி தருவதற்காக!

****

இப்ப நான் எனது நண்பர்களை இதில் சிக்க வைக்க வேண்டும், தலைப்பை மாற்றி விட்டதால் சிரமம் இல்லாமல் எழுதுவார்கள் என நம்புகிறேன்! நான் அழைக்கும் ஐந்து பதிவர்களில் 40% பெண்களுக்கு ஒதுக்குகிறேன்!

1.ரம்யா

2.தமிழரசி

3.நட்புடன் ஜமால்


4.கிருஷ்ணமூர்த்தி ஐயா(அவரே தான்)

5.டோண்டு

மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!

கொலை கொலையாம் முந்திரிக்கா!..

விடியற்காலையில் ஆடறுக்கும் போது அதை நேரில் சென்ற பார்க்க ஆசைபட்டு நேரமாக எழுந்து இறைச்சிகடைக்கு செல்லும் நந்தாவுக்கு ஒரு கொலை செய்து பார்க்கணும் என்று தோன்றியதில் ஆச்சர்யம் எதுவுமில்லை, ஆனால் ஒரே பிரச்சனை அவனது கொலையில் ஒரு நியாயம் இருக்க வேண்டும், தன்னளவில் குற்ற உணர்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது திட்டம், வெளிஆட்களை தேடி அவர்களது நடவடிக்கைகளை அறிந்து கொள்வதை விட தன் மனைவி பூர்ணிமாவை கொல்வதே சிறப்பாக பட்டது அவனுக்கு!

அவனுக்கு இதைவிட சரியான தண்டனை இல்லை என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள் பூர்ணிமா!, என்ன இருந்தாலும் நான் ஆசையாக வளர்த்த புறாவை அப்படியா செய்வான், அவனுக்கு என்ன நான் அடிமையா!? இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், பச்சமுத்து இன்னும் ஒரு மணிநேரத்தில் வந்துவிடுவான், கேட்டது மட்டும் கிடைத்து விட்டாள் நந்தா சாட்சியே இல்லாமல் பரலோகம் அனுப்பிவிடலாம், கைப்பையை ஒரு முறை அமுக்கி பார்த்து உள்ளே பணமிருப்பதை உறுதி செய்து கொண்டாள்

அவனிடத்தில் அதற்கு காரணமும் இருந்தது, தான் ஆசையாக வளர்த்த பூனையை தோசை சுடும் தவாவினால் தலையில் அடித்து கொன்றுவிட்டாள், அப்படி பெரிதாக ஒன்றும் தவறும் செய்யவில்லை அந்த பூனை, அவள் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டில் வாய் வைத்து விட்டதாம், அதற்காக தலையில் அடித்து கொல்லலாமா!?, அத்தோடு விட்டாளா, கொள்ளை புறம் எடுத்து போய் அதன் தோலை உரித்து கொடியில் காயப்போட்டிருக்கிறாள், தவறு செய்த என் பூனையின் கதியை பார்க்க வேண்டுமாம்!

கூண்டுக்குள் இருந்தது அந்த புறா, அவன் பூனை மாதிரி எல்லா இடத்திலும் அசிங்கம் செய்து கொண்டா இருந்தது, அதை போய் அப்படி கொன்றானே, அவனை விடக்கூடாது, அதே போல் அவனும் துடிதுடித்து சாக வேண்டும், என்ன கொடுரமாக கொன்றான் என் செல்லப்புறாவை, அவன் போன் பேசும் போது கத்தி கொண்டிருந்ததாம், அதற்காக பெரிய சட்டியில் சுடுதண்ணீர் வைத்து உயிரோடு அதற்குள் என் செல்லப்புறாவை போட்டு மூடியிருக்கிறான், அத்தோடு விட்டானா, அதன் தோலை உரித்து என்னிடமே காட்டுகிறான்!

அந்த புறாவை வறுத்து தின்றிருப்பேன், ஆனால் அவள் வளர்த்த புறா அவளை போலவே விசமாய் இருக்கும், அதான் தோலை மட்டும் உரித்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டேன்! அப்போது அதை பார்க்கணுமே! வெளீர் ரோஸ் நிறத்தில் அவ்வளவு அழகாக இருந்தது, அதை போய் இறகுகளோடு அசிங்கமாக வைத்திருந்தாள், அவளுக்கு நாளை தான் கடைசி நாள்! கேஸ் சிலிண்டரின் டியூப்பை வெட்டி விட்டாச்சு! வாசம் வராமல் இருக்க ரூம்ஸ்பிரே அடிச்சாச்சு, காலையில் அடுப்பு பற்ற வைத்தாள் போதும், கருகி கரிகட்டையாகி விடுவாள், கருகினாள் எப்படியிருப்பாள் என கற்பணையில் மூழ்கினான் நந்தா!



கதவுக்கு பின்னால் இருந்து பார்த்து கொண்டிருந்தால் பூர்ணிமா!, எழுந்து விட்டான், பல்விழக்கியதும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் அவனுக்கு அதன் பின் தான் காபி கூட, எப்படியும் ஃப்ரிட்ஜை திறப்பான் என கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள், அதே முகம் துடைத்து கொண்டு வருகிறான், திறந்துவிட்டான், கையை உள்நுழைக்கிறான்,

சட்டென்று கையை உதறி வெளியே எடுத்தான் நந்தா, சுருகென்று முள் தைத்தது போன்று இருந்த இடத்தை பார்த்தான், அது பல் படிந்த இடம், கடித்தது பாம்பு, சற்றே விலகி ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தான், உள்ளே ஒரு விரியன் பாம்பு இன்னமும் சீற்றம் குறையாமல் இருந்தது, படாரென்று மூடியவன், பூர்ணிமா என்று கத்தினான், பதட்டத்தில் போன் ரீசிவரை தலைகீழாக எடுத்து காதில் வைத்தான், அது எப்படி வைத்தாலும் செத்து போய் ரொம்ப நேரம் ஆச்சு என்றே சொல்லியது, தற்செயலாக பூர்ணிமா கதவின் இடக்கில் நின்று கொண்டிருப்பதை பார்த்தான்!

பூர்ணிமாவுக்கு புரிந்து விட்டது பார்த்து விட்டான் என்று, மெளனபுன்னகையுடன் வெளியே வந்தாள், தன்னை தாக்க வந்த நந்தாவின் நெஞ்சில் அநாயசமாக ஒரு உதை விட்டாள், தூரபோய் விழந்தவனுக்கு எழ முடியவில்லை, பாம்பு கடித்த இடத்தில் இப்பொழுது வீங்கியிருந்தது, தோள்பட்டை வரை ஊசிகுத்தியது போல் பரவியது, நெஞ்சில் எதோ அடைப்பது போல் இருந்தது, கண்கள் சொருகி கொண்டு வந்தது, மெல்ல மெல்ல பூர்ணிமா அவனது பார்வையிலிருந்து மறைந்தாள்!

அவளுக்கு பாம்பு கொடுத்த பச்சமுத்துவுக்கு பூர்ணிமா எப்படி செத்தாள் என்று இன்றுவரை தெரியாது, யாரும் சொல்லிவிடாதீர்கள்!

குற்றம் நடந்தது என்ன!? 1

மேலை நாடுகளில் மிக கடினப்பட்டு கண்டுபிடித்த குற்றங்களை தொகுக்கும் பொருட்டு இந்த பதிவு ஆரம்பமாகிறது, நான் ஏற்கனவே சொன்னது போல் எல்லோருக்குள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தூங்கி கொண்டிருக்கிறான், அவனை உசுப்பிவிடும் ஒரு முயற்சியாகவும் இதை எடுத்து கொள்ளலாம்!

**

கலிபோர்னியாவின் வடக்கு மாகானத்தில் ஒரு பெண், அவளது அம்மா, அந்த பெண்ணின் மூன்று குழந்தைகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள், ஊருக்கு ஒதுக்கு புறமான வீடு என்பதால் அவர்களை துப்பாக்கியால் கொலைகாரன் சுடும்போது யாருக்கு தெரிந்திருக்கவில்லை, ஆனாலும் தடவியல் நிபுணர்கள் அவர்கள் இறந்தது ஒரு ஞாயிற்றுகிழமை மத்தியான நேரம் என கண்டுப்பிடித்தார்கள், ஆனாலும் கொலைக்கான காரணம் கண்டுபிடிக்க வெகு சிரமமாய் இருந்தது, காரணம் அங்கு எந்த விலையுயர்ந்த பொருளும் காணாமல் போகவில்லை.

இருந்தாலும் கொலைக்கான காரணங்களை கண்டுபிடித்தால் மட்டுமே கொலைகாரனை கண்டுபிடிக்க முடியும், விசாரணையில் அந்த பெண்(பெயர் ஜோன் என்று வைத்து கொள்வோம்) மணமாகி விவாகரத்தானவள், அதுவும் விவாகரத்தாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பது தெரிந்தது. கணவன்(வின்செண்ட் என அழைப்போம்) ஒஹியோ மாகானத்தில் குழந்தைகளுக்கான பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக வேலைப்பார்ப்பவர், அவருக்கு ஒரு தம்பியும் உண்டு, மேலும் அவரது உறவினர்கள் அனைவருமே அந்த இடத்தை சேர்ந்தவர்கள் தான், அவரது தாய் மட்டும் அங்கிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறார்!

கணவனின் நடத்தையை சோதித்ததில் எந்த சந்தேகமும் இல்லை, குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருப்பவர் நிச்சயமாக பண்புள்ளவராக இருப்பார் என நம்பினர், மற்ற அனைத்து கோணங்களில் விசாரித்து பார்த்தும் எல்லா பக்கமும் அடைத்தே இருந்தது, ஒரு வார காலம் கழித்து மீண்டும் வின்செண்டிடம் இருந்து பழைய படி விசாரணையை ஆரம்பித்தனர், கொலை நடந்த சமயம் வின்செண்ட் எங்கிருந்தார் என நிறுபிக்க வேண்டியது அவரது கடமை, அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் கொலைநடந்த முதல் நாளிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வின்செண்ட் சொந்த ஊரில் இல்லை என்பது தெரிந்தது! ஆகையால் மற்ற கோண விசாரணைகளை தள்ளி வைத்து முழுமையாக வின்செண்டின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்!

விசாரணையில் தான் வெளியூருக்கு சென்றதாகவும், அங்கிருந்து தனது தாயை பார்க்க சென்றதாகவும் கூறினார்!, வெளியூருக்கு செல்ல அவரிடம் விமான பயணசீட்டும் இருந்தது, பின் அங்கிருந்து வாடகை கார் மூலம் தனது தாயாரை பார்க்க சென்றதாக கூறினார், மேலும் சாட்சிக்கு அவரிடம் அன்றைய தேதியில் வேறொரு இடத்தில் தனது கடனட்டை மூலம் பொருள்கள் வாங்கிருந்ததற்கு ரசீதுகள் வைத்திருந்தார், மற்ற காவல் துறையினர் நம்பிக்கை இழந்திருந்தாலும் முக்கியமான ஒரு புலனாய்வுதுறை அதிகாரிக்கு வின்செண்டின் மேல் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது!,



கடனட்டை மூலம் அவர் பொருள் வாங்கியிருந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு கேமராக்கள் எதாவது இருக்கிறதா என ஆராய்ந்தார், அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு இடத்தில் இருந்தது, அதை சோதித்ததில் பொருள் வாங்கியது வின்செண்ட் அல்ல, அவரது தம்பி என தெரிந்தது, மீண்டும் அவரது தம்பியை விசாரித்ததில் மற்றவர் கடனட்டையை அனுமதியில்லாமல் உபயோகித்ததால் அதை மறைத்ததாக கூறினார், ஆயினும் வின்செண்ட் சொன்னது பொய்யென்று ஆனதால் அவர்களது விசாரணை மேலும் இறுகியது, தன் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறினார் என்பதால் அங்கேயும் சென்று விசாரித்தனர், வின்செண்ட் அவரது தாய் வீட்டிற்கு ஞாயிறு நள்ளிரவு தான் சென்றிருக்கிறார்!

வின்செண்ட் அப்போதும் தான் வாடகை காரில் ஊர் சுற்றி கொண்டிருந்ததாகவே கூறினார்! மேலை நாடுகளை பொறுத்தவரை வெறும் யூகத்தின் பேரில் ஒருவருக்கு தண்டனை அளிக்கமுடியாது! இந்தியாவில் இருப்பது போன்றே ”ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது” என்பது உலகளாவிய சட்டமாகவே இருக்கிறது!, புலனாய்வு அதிகாரி, வின்செண்ட் வாடகைக்கு கார் எடுத்த இடத்திற்கு சென்று விசாரித்தார், அது புது வகையான,விலையுயர்ந்த கார் என்பதால் மிகக்குறைவாகவே வாடகைக்கு செல்லும் எனும் விசயம் அவர்களுக்கு சாதகமாக இருந்தது, அந்த காரில் எதாவது தடயம் கிடைக்குமா என ஆராய, அந்த காரை காவல்துறை தனது பொறுப்பில் எடுத்தது!

சம்பவம் நடந்து ஒருவார காலம் ஆகியதால் காரில் இருந்து பெரிதாக எந்த தடயமும் கிடைக்க வாய்ப்பில்லை!, ஆனாலும் ஒரு தடவியல் நிபுணரின் ஆலோசனையின் பேரில் காரில் இருந்த ரேடியேட்டரும், ஏர்பில்டரும் சோதனைக்கு உட்படுத்தபட்டது, பூச்சிகள் ஆராய்ச்சி செய்யும் குழுவிடம் ஒப்படைத்து ரேடியேட்டரில் மாட்டி செத்து கிடக்கும் துண்டு, துண்டு பூச்சிகளின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன! முழு பூச்சிகளை மட்டுமே வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஆராய்ச்சிகுழுவிற்கு அது பெரும் சவாலாக இருந்தது, ஆராய்ச்சியின் முடிவில் அந்த கார் கலிபோர்னியாவின் வடக்கு மாகானத்தில் பயணம் செய்தது நிறுபணமானது, ”ரெட் போர்ன்” எனும் பெயருடய சிகப்பு கால்களையுடய வெட்டுகிளிகள் வடக்கு மாகாணத்தில் மட்டுமே காணப்படும் பூச்சியினம், அதே போன்று மொத்தம் மூன்று பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது!

அந்த ஆதாரத்துடன் வின்செண்ட் கோர்டில் ஒப்படைக்கப்பட்டான், வின்செண்ட் சொல்வது அனைத்தும் பொய் என நிறுபிக்கப்பட்டாலும், நீதிபதிகள் வின்செண்ட் கொலைசெய்ய வலுவான காரணம் என்ன என கேட்டனர்!, விவாகரத்தான வின்செண்ட் தனது முன்னாள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சமாக பெரும்தொகை கொடுக்க வேண்டியிருக்கும் என பயந்தான், அந்த பயமே அவனை கொலை செய்ய தூண்யிருக்கும் என ஒரு உளவியல் நிபுணர் விளக்கினார், ஆனாலும் கடைசி அஸ்திரமாக விஞ்செண்ட் ஒரு குண்டை தூக்கி போட்டான், கொலை நடந்த அன்று தான் ஒரு விபத்தில் சிக்கி தான் ஒரு போலிஸ் நிலையத்தில் ஆஜரானதாக கூறியது உண்மையிலேயே அனைவரையும் குழப்பியது.

ஆனாலும் புலனாய்வு அதிகாரி மீண்டும் ஒஹோயோ மாகானம் சென்று காவல் நிலையத்தில் வின்செண்ட் பதிவு செய்த கைரேகையை சோதித்தார், அது ஒரு பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்திருந்தது, வின்செண்டின் தண்டனையை உறுதி செய்தது! ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக வின்செண்டிற்கு நீதுமன்றம் மரணதண்டனை விதித்தது, குற்றம் வாசிக்கப்படும் போது வின்செண்ட் கதறி கண்ணீர் விட்டு அழுதான்!

**

டிஸ்கி:இந்த வழக்கை பொறுத்தவரை வின்செண்ட் வடக்கு மாகானம் சென்றதற்கு ஒரே சாட்சி,வண்டியில் மாட்டி செத்த போன பூச்சியினங்கள் தான்!, ஒரு சிறு துரும்பையும் வைத்து புலனாய்ட்வுதுறையினரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்!

அகம் புகுதல்! 2

சென்ற பதிவில் ”அவலாஞ்ச்” சென்றதோடு தொடரும் போட்டாச்சு!, அவலாஞ்சில் நாங்கள் செல்லும் பொழுது நல்ல மழை, அதனால் பெரிதாக போட்டோ எடுக்க முடியவில்லை!, மேலும் மிக முக்கிய உயர் அதிகாரி வந்திருந்ததால் லதானந்த் சார் எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு கிளம்பிவிட்டார், மீண்டும் இரவில் தான் வந்தார்!

“அவலாஞ்ச்” என்பது ஒரு காரணப்பெயர், ”அவலாஞ்ச்” என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொள்வோம், ஆல்ப்ஸ் மலைத்தொடர், இமயமலைத் தொடரில் முழுவதுமாக பனி படர்ந்து ஐஸ் கட்டியால் மூடப்பட்டிருக்கும் அல்லவா, அது சிறு அதிர்வு ஏற்பட்டாலோ, வேறு எதாவது அசம்பாவத்தினாலோ அந்த ஐஸ் படர்வு அப்படியே கீழ்நோக்கி நகரும், ஒரு வெள்ளை போர்வை அப்படியே நகர்ந்து வருவது போல் இருக்கும்!, எதாவது ஆக்‌ஷன் ஆங்கில படத்தில் அதை பார்த்திருக்கலாம்!



அம்மாதிரியான ஒரு நிகழ்வு அந்த இடத்தில் வெள்ளைக்காரன் இருந்த காலத்தில் நடந்ததாம், அதனால் அந்த பெயர் வந்திருக்கலாம் என பேசப்படுகிறது! அது அங்கே சாத்தியமா என பார்த்தால் அங்கிருக்கும் ஏரி அது நடந்திருக்கலாம் என்கிறது! மிகுந்த குளிர் இருக்கும் நேரத்தில் அணையிலிருக்கும் நீர் மொத்தமும் உறைந்திருக்கலாம், மீண்டும் அது உருக ஆரம்பிக்கும் போது ஐஸ்கட்டிகள் தரை நோக்கி நகர்ந்திருக்கலாம், அல்லது அடர்த்தியான மேக கூட்டங்கள் நகர்ந்து செல்வது யாராவது ஒரு வெள்ளைகாரனுக்கு அவலாஞ்ச் போல் தெரிந்திருக்கலாம்!

“அவலாஞ்ச்” சுற்றுலாக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி, தகுந்த அனுமதியில்லாமல் செல்ல முடியாது, சாதாரண பாதையிலிருந்து விலகி ஒற்றையடி பாதை போலுள்ள வழியில் செல்ல வேண்டும், காட்டு விலங்குகளின் தொந்தரவுகள் வரலாம், யானை கூட்டங்கள் உங்களை வழிமறிக்கலாம், ஆகையால் காட்டிலாக்காவின் ஆலோசனையின் பேரில் தான் பயணம் செய்ய வேண்டும், அங்கே தங்குவதற்கு இடம் இருக்கிறது, அங்கேயே சமைப்பார்கள், முன் கூட்டியே சொல்லிவிட்டால் எல்லாம் கிடைக்கும், அருமையான சமையல்!

அங்கிருக்கும் சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும், சாரல் விழுண்டு கொண்டேயிருக்கிறது! அங்கு மழை பெய்யாத நாளே கிடையாது என்கிறார் எங்களை வழிநடத்தியவர், ஒருவேளை அது அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் சாரலாக இருக்கலாம்! தங்கியிருந்த இடத்தில் இருந்து அடுத்த பத்தாவது அடி கிடுகிடு பள்ளம் தான், இரவு நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!



அடுத்த பகுதி:மசினி என்ற யானை குட்டியுடன் வால்பையன்!

செல்ல விருப்பமுள்ளவர்கள் லாதனந்த அவர்களின் ப்ளாக்கில் தொடர்பு கொள்ளவும்!

குவியல்!..(20.10.09)

தமிழ் வலைப்பதிவுலகில் நகைச்சுவைகென்றே இருக்கும் முடிசூடா மன்னன் குசும்பனுக்கு வயசாகி போச்சு, இன்றிலிருந்து அவர் அங்கிள் ஆகிவிட்டார்! அவரை அங்கிள் ஆக்கிய எனது மாப்பிள்ளைக்கு நன்றி!, அதாங்க குசும்பன் அப்பாவாகி விட்டார்!, குசும்பனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்!

இது சுயசொறிதல், என்னை மாதிரி டம்மிபீஸிக்கும் 400 பாலோயர்ஸ் வந்து பெருமை படுத்திவிட்டார்கள். உங்களுக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை!, எனக்கு பாலோயராக இருப்பவர்களுக்கு வலைப்பூ இருப்பின் தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள், குறைந்த பட்ச பதில் மரியாதையாவது செய்ய எனக்கு வாய்ப்பளியுங்கள்!,
ஒரு லட்சம் ஹிட்ஸ் தாண்டியதை பற்றி நான் பெரிதாக அலட்டி கொள்வதற்கில்லை!, ஹிட்ஸ் வேண்டுமென்றால் தினம் ரெண்டு பதிவெழுதி பல லட்சங்களை பெறலாம்! ஆனால் அது உங்களுக்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் என்னாத்த கிறுக்கி என்ன பண்றது!

***

சாட்டில் லிங்க் கொடுக்கும் நண்பர்களுக்கு, நான் உங்களுக்கு பாலோயராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பதிவு எக்காரணம் கொண்டும் மிஸ்ஸாகாது, அதான் மிஸ்ஸாகுதுல நாங்க கொடுக்கும் போது படிக்க வேண்டியது தானேன்னு நீங்க கேட்பது தெரிகிறது!, நீங்கள் அனுப்பும் நேரம் நான் எதாவது வேலையாக இருந்து(ஆணிய புடுங்க வேணாம்) என்னாடா நாம எம்மாபெரிய பிரபலம் இவனையும் மனுசனா மதிச்சி லிங்க் கொடுத்தா படிக்காக இருக்குறானேன்னு நீங்க நினைச்சிறக்கூடாதுன்னு தான் எனக்கு வருத்தம்!

எனக்கு பாலோயர்களாக இருப்பவர்களுக்கும், தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தான் என் முதல் பார்வை, அதன் பின் தான் தமிழ்மணம், தமிழிஷ், மற்ற பதிவர் நண்பர்களெல்லாம்!, ஒருவேளை உங்கள் பதிவில் என்னை கலாய்த்து எழுதியிருப்பீர்களேயானால் தாராளமாக லிங்க் கொடுங்கள், முன்னரே பின்னூட்டம் போட்டு எனக்கு அதில் எந்த வருத்தமுமில்லைன்னு தெரியபடுத்தி விடுகிறேன், இல்லையென்றால் யாராவது வால் கோவிச்சிக்க போறார்ன்னு உங்களை குழப்பக்கூடும்!

***

வாமு.கோமுவின் இந்த கதை சென்ற மாத உயிர்மையில் வந்திருந்தது, அதற்கு இந்த மாதம் வந்திருந்த இரண்டு விமர்சனக்கள் சிறுபிள்ளைதனத்தையும் விட கேவலமாக இருந்தது!, கதையின் உட்கரு கூட தெரியாத இவர்களெல்லாம் எப்படி விமர்சனம் எழுதுகிறார்கள் என்று தெரியிவில்லை, அதையும் வாசகர் கடிதத்தில் வெளியிடுவது இன்னும் காமெடி, அந்த சிறுகதையை பொறுத்தவரை அவர் மையப்படுத்தி எழுதியிருப்பது ”குழந்தை பாலியல் வன்முறை”, அதற்காக அவர் எடுத்து கொண்ட கதைக்களம் ஒரு கிராமம், அங்கு வாழும் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கை முறை, மையத்தை அணுகாமல், இப்போதெல்லாம் எங்க இப்படி நடக்குதுன்னு இரண்டு விமர்சனக்கள், ஒருத்தருக்கு அது ரொம்ப கேவலமா இருக்காம்!

எதற்காக பதிவர்கள் சில மாதங்களுக்கு முன் டாக்டர் ஷாலினி மற்றும் ருத்ரனை அழைத்து ”குட் டச்” பேட் டச்” என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள், இரண்டு மாதத்திற்கு முன் கோவையில் இதே போல் நடத்தலாம் என பேசினார்கள், போன மாதம் மதுரையில் கூட தருமி ஐயா தலையில் அதே நிகழ்ச்சியை நடத்தலாம் என பேசினார்கள்!, நாம் ஆயிரம் தான் ஒன்றுமே நடக்காதது போல் இருந்தாலும் வாழ்க்கையின் எதார்த்தம் இது தான்!, குழந்தை பாலியல் என்பது சில நிமிட நேர பாலியல் வடிகால், ஆனால் அது அந்த குழந்தைக்கு வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும் விபத்து, அதனால் தான் நாம் இதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என முனைகிறோம்! மாறிவரும் சமூகசூழல் இக்கல்வியை கட்டாயமாக்குகிறது!

***

கிம் கி டுக்கின் the isle என்ற படம் தரவிரக்கி ரொம்ப நாளாக மடிக்கணிணியில் உறங்கி கொண்டிருந்தது, ஒரு வழியாக பார்த்து முடித்தேன்!, இவரது படத்தை பொறுத்தவரை சமூகத்துக்கு கருத்து சொல்லும் வேலையெல்லாம் கிடையாது! இருவரின் உணர்வு போராட்டங்கள் தான் கதைக்களம், நாயகி அவ்வபோது பாலியல் தொழிலும் செய்து வந்தாலும் நாயகனின் மீது அவளுக்கு அக்கறை இருந்தது, அவன் இவள் மீது கட்டும் அக்கறை பிடித்திருந்தது! அதற்காக இரண்டு கொலைகள் செய்கிறாள், இது கதையின் எதார்த்தம் மட்டுமே! அவ்விடத்தில் அவளுக்கு இருந்த அதிகப்படியான காதலை மட்டுமே நான் பார்க்க வேண்டும்!



உயிரோடிருக்கும் தவளையை தோலை உறிப்பது, உயிரோடு இருக்கும் மீனை வெட்டி பச்சையாக சாப்பிடுவது போன்றவை அதிகப்படியான வன்முறை அல்ல, அவர்களது உணவு பழக்கமுறையே அது தான்!, நாமும் ஆட்டையும், கோழியையும் கழுத்தை அறுத்து தானே கொலை செய்கிறோம்!

***

தமிழ்நாட்டில் இருப்பவர்களில் தமிழில் ஒளிப்பரப்பாகும் டிஸ்கவரி சேனலை தவற விடாதீர்கள், மிக அரிய தகவல்களை நான் அங்கிருந்து பெறுகிறேன்!, உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படலாம்! ஆரம்பத்தில் இந்தியாவில் மிளகாய் கிடையாது மிளகு தான் காரத்திற்கு, இன்று உலகம் முழுவதும் முக்கிய உணவாக இருக்கும் வாழைப்பழம் கிழக்காசிய நாட்டில் தோன்றியது, ”கோஸ்டோ ரி கா” என்ற நாட்டில் வாழைப்பழத்திற்கு பெரிய பெரிய விதைகள் உள்ளன!, ஆபத்தான விலங்குகளை அணுகுவது எப்படி, மனிதர்கள் எப்படி சுற்றுசூழலுக்கு எதிரியாக இருக்கின்றனர் என பல விசயங்கள்! நம்மை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பாகவும் எடுத்து கொள்ளலாம், மறக்காமல் பாருங்கள்.

***

கவிதை போரடிச்சி போச்சி அதனால ஒரு புதிர் போட்டி!

இரு வாகனங்கள் ஒரே இடத்திலிருந்து இரு நேர்எதிர் திசையில் கிளம்பின, ஆறு மைல்களுக்கு பிறகு இரண்டுமே அதன் இடப்பக்கத்தில் திரும்பின. அவ்வழியே எட்டு மைல் பயணம் செய்த பின் நின்றது. தற்பொழுது இரண்டு வாகனங்களுக்கும் உள்ள இடைவெளி தூரம் என்ன?

அ) 2 மைல்கள்
ஆ) 11 மைல்கள்
இ) 14 மைல்கள்
ஈ) 20 மைல்கள்
உ) 26 மைல்கள்

தனியார் புலனாய்வுத்துறை!

ஆணோ, பொண்ணோ நாம் அனைவருகுள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் இருக்கான்!, புலனாய்வு துறையில் இருந்தால் தான் அது முழுமை அடையும் என்பதில்லை!, ஒவ்வொரு செயலும் உளவியலும், தடவியலும் சம்பந்தபட்டது! ஏ.எக்ஸ்.என் டீவீயில் சி.எஸ்.ஐ மியாமின்னு ஒரு நிகழ்ச்சி வரும், அதுக்கு கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்னு அர்த்தம்!, இந்த மாதிரி பல பிரிவுகள் இருக்கு, இந்தியாவில் கூட அத்தனை பிரிவுகளும் இருக்கு ஆனாலும் ரொம்ப பேமஸா இருக்குறது தனியார் புலனாய்த்துறை அதற்கு பிரைவேட் டிடெக்டீவ்ன்னு ஆங்கிலத்தில் சொல்வாங்க.

சிறுவயதில் சிறுவர்மலர், அம்புலிமாமா, பாலமித்ரா படிக்கும் போதே நமக்குள் தூங்கி கொண்டிருக்கும் டிடெக்டீவ் விழிந்து கொள்வான்! பதின்மவயதில் ராஜேஸ்குமார் கிரைம் நாவல்கள் அதற்கு ஒரு உருவமே கொடுத்திருக்கும். இன்றும் யாராவது நான் ராஜேஸ்குமார் நாவல்கள் எதையுமே படித்ததில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாக பார்ப்பேன்!, தொடர்ச்சியாக அவரது நாவல்களை படிப்பவர்களுக்கு குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறன் ஓரளவுக்கு வந்திருக்கும், அதிகம் இல்லையென்றாலும் பத்துக்கு மூணு நானும் கண்டுபிடித்து விடுவேன்!, முதல் மூன்று அத்தியாயத்திலேயே அனைத்து கதாபாத்திரங்களும் வந்துவிடுவதால், குற்றம் நடந்த பின் குற்றவாளி யாராக இருக்கலாம் என்ற யூகம் நமக்குள் இருக்கும் டிடெக்டிவுக்கு வேலை கொடுத்து கொண்டே இருக்கும்!

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் அதிக டிடெக்டீவ் ஏஜென்சிகள் இருக்கின்றன!, இன்வெஸ்டிகேட் ஜர்னலிசமும் கிட்டதட்ட இதே முறைதான்! தற்போதெல்லாம் பெரும்பாலும் மணமகன் அல்லது மணமகள் குணம் மற்றும் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளவே இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள், குற்ற புலணாய்வு குறைந்து விட்டது, நான் சென்னையில் இருக்கும் சமயத்தில் பெரும்புள்ளிகளின் அந்தரங்கங்களை தெரிந்து கொண்டு ப்ளாக்மெயில் பண்ணுவதாக கேள்விபட்டேன், அதனால் சென்னையில் இருக்கும் டிடெக்டீவ் ஏஜென்சிகள் மீது எனக்கு பெரிய மரியாதை ஏற்படவில்லை!

புலனாய்வு பெரிய கம்பசூத்திரமெல்லாம் இல்லை, அடிப்படை உளவியல் கொஞ்சம் குற்றவியல் தெரிந்தால் போதுமானது, இதற்காக டில்லியில் பயிற்சி வகுப்புகள் உண்டு, பல புத்தகங்களும் உண்டு, இவையல்லாது அனுபவித்திலேயே இந்துறைக்கு வந்தவர்கள் பலர் எனக்கு தெரியும், பெரும்பான்மையான ஏஜென்சியில் உடனே வேலைக்கு சேர்த்துவிட மாட்டார்கள், தொடர்பு எண் மட்டும் வாங்கி கொள்வார்கள், நமக்கு எதாவது அசைண்மெண்ட் தருவார்கள் சரியாக செய்தால் தான் வேலை, அதுவும் நாம் அங்கு தான் வேலை செய்கிறோம் என்று யாரிடமும் சொல்லக்கூடாது, ஒரு நபரின் நடவடிக்கைகள் மற்றும் குணாதிசயங்களை உற்று கவனிக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்!



இத்துறையில் நிறைய காமெடிகளும் நடந்துள்ளது, ஒரு முறை ஒரு பெண்ணை பின்பற்றி சென்ற நண்பர் தர்ம அடி வாங்க தெரிந்தார்! நல்லவேளையாக அந்த வழியில் ஒரு நண்பரின் அலுவலகம் இருந்ததால் இங்கே தான் வந்தேன் என சமாளித்தார், பின்பொரு சமயம் அவசரத்துக்கு இரு சக்கர வாகனம் இல்லாமல் ஒரு ஆட்டோவில் ஏறி ஒருவரை பின் தொடர ஆட்டோகாரர் விவரம் தெரியாமல் அந்த நபரின் முன் போய் ஆட்டோவை நிறுத்திவிட்டார்! தெரிந்த நண்பர் போல் இருந்தது என்று சமாளித்து வந்தார் நண்பர், நல்லவேளையாக ஆட்டோகாரர் எதுவும் வாய் திறக்காமல் இருந்ததால் அங்கு விழுந்திருக்க வேண்டிய தர்ம அடியில் இருந்து தப்பித்தார் நண்பர்!

அனுமானங்களாக இருந்தாலும் அதிகப்படியான சாத்தியகூறுகள் இருக்கின்றன என லாஜிக்கோடு நிறுபிக்க வேண்டியது ஒரு நல்ல டிடெக்டீவின் கடமை!, இன்னும் நிறைய சொல்லலாம் ஆனால் பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை, டிடெக்டீவாக ஆக அனைத்து தொழில் நுட்பத்திலும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும், முக்கியமாக ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும்!
உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா!?

டிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

கமாக்கதைகள்!(இடம் மாறிய கால்) 2(69)

டிஸ்கி:பெண்கள் பின்னூட்டம் போட வேண்டாம், திட்டுவதென்றாலும் கூட!


இவனுங்களை மாதிரி நண்பர்கள் எவனுமே ஊருகுள்ள இல்லடான்னு சொல்ற மாதிரி நண்பர்கள் அவுங்க மூணு பேரும், டவுசர் போடாத காலத்திலிருந்து, சிலேட்டு பல்பத்துடன் பள்ளி போன காலத்திலும், இறுதியாக கல்லூரி படிப்பை முடிக்கும் போது கூட அவர்கள் தினம் சந்திக்காத நாளே கிடையாது! அதிர்ஷ்டவசமாக அவர்களது பெறோர்களுக்கு சொந்த தொழில் என்பதால் ஊர் மாற்றலாகி செல்லும் நெருக்கடி வரவில்லை, உள்ளூருகுள்ளே எங்கே வீடு மாறினாலும் கூட இவர்களுக்காகவே அருகிலேயே பார்த்து கொண்டனர் அவர்களது பெற்றோர்!

அவுங்க பேரை நீங்க தெரிஞ்சிக்கனுமே, ஸ்ரீதர், பாண்டியன், முஜிப் என்பதே அவர்களது பெயர்கள். அவுங்ககிட்ட போய் என்ன சாதி,மதம்னு கேட்டா தெரிஞ்சவங்களா இருந்தா தப்பிச்சிங்க இல்லைனா அடிவாங்காம வரமாட்டிங்க, அந்த அளவுக்கு மனிதத்துவம் போற்றும் மாமனிதர்கள், ஒரு ஆஃபை ஒரே டம்பளரில் மூன்று பேரும் மாற்றி மாற்றி குடிப்பார்கள், ஒரே ஒரு விசயத்தில் மட்டும் அவர்களுக்குள் கட்டுபாடு, எக்காரணம் கொண்டும் நமக்குள் பணம் மற்றும் பெண்ணால் பிரச்சனை வரக்கூடாது என்பதே அது!

அப்பேர்பட்ட நண்பர்களுக்குள் பேரடியாய் வந்தது முஜிப்பின் பிரிவு, மும்பையில் நல்ல சம்பளத்தில் வேலை, வீட்டில் போயே ஆகவேண்டும் என கட்டாயம், நண்பர்களுக்கோ தாளமுடியாத வேதனை, கடைசியில் முஜிப்பின் அப்பா தான் இருவரையும் சமாதனாபடுத்தினார், ஒரு வருடம் வேலை செய்தால் போதும் அந்த அனுபவத்தை வைத்து இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிவிடலாம்! உங்கள் நண்பனுக்காக ஒரு வருடம் பொறுத்து கொள்ளுங்கள் என்றார்!, கண்ணீர் மற்றும் மெளனத்தின் சாட்சியாக பிரியும் போது முஜிப்பின் அப்பாவுக்கே கண்களில் நீர் திரண்டு விட்டது!

ஒரு வருடம் தானே என நினைத்தது, முஜிபின் பதவி உயர்வு மேலும் சில வருடங்களை விழுங்கியது, நாட்கள் ஓடியது ஆரம்பத்தில் கடித தொடர்பில் இருந்தார்கள், பின் தொலைபேசியில் குசலங்களை பரிமாறி கொண்டனர், நாளைடைவில் அதுவும் படிப்படியாக குறைந்தது ஆயினும் ஸ்ரீதரும், பாண்டியனும் தினமும் சந்தித்து முஜிப்பை பற்றி பேசி கொண்டிருப்பார்கள், பண்டியனின் பக்கத்து வீட்டுகாரர் அதிக குடியால் இறந்ததால் பாண்டியன் குடியை அடியோடு நிறுத்தினான், ஆனாலும் ஸ்ரீதருக்கு கம்பெனி கொடுப்பது தவறாமல் நடந்தது, கொஞ்ச நாளில் ஸ்ரீதர் தனியாகவே குடிக்க பழகி கொண்டதால் பாண்டியன் வருவதில்லை!

தீடிரென்று ஒருநாள் முஜிபின் வருகை செய்தி இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, பழைய நினைவுகளை அசைப்போட்ட படி மூவரும் ஊரை சுற்றி வந்தனர்! என்ன தான் மும்பையில் வாழ்ந்திருந்தாலும் சொந்த ஊரின் சிறு மாற்றமும் முஜிபிற்கு ஆச்சர்யத்தை அளித்தது, மாலையில் வழக்கமான பாருக்கு அழைத்து சென்றான் ஸ்ரீதர், சில பெக்குகளுக்கு நடுவே ஸ்ரீதர் தான் முதலில் ஆரம்பித்தான், அங்க போயிருக்கிறியா மச்சி என்று!, அங்கே என்றால் எங்கே என்றான் முஜிப்!, அதாண்டா மும்பையின் சொர்க்கவாசல் என்றான் ஸ்ரீதர், முஜிபிற்கு புரிந்து விட்டது நண்பன் கேட்பது எதையென்று, இல்லடா நான் பாக்குறது ஆபிஸர் வேலை, அங்கெல்லாம் போனா மானம் போயிரும், அதனால அது எங்க இருக்குதுன்னு கூட தெரிஞ்சிக்கலடா என்றான்!

அதிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஸ்ரீதருக்கு கொஞ்சம் ஏமாற்றமே! ஆனாலும் நண்பன் பீச்சுக்கு போய் சுண்டல் திங்காம வந்திருக்கானேன்னு ஒரு வருத்தம், சரி இங்க இருக்கு போறியாடா மச்சி என்றான், முஜிபிற்கு தூக்கி வாரி போட்டது, நம்ம ஊர்லயா இடுஹ் எப்ப இருந்துடா என்றான், நீ தாண்டா இன்னும் நம்ம ஊரை கேவலமா நினைச்சிகிட்டு இருக்க, இப்பல்லாம் சிட்டியில வேலை செய்யுறவனே இங்க தான் வந்து வீடு கட்டுறான்! வர்றியா சொல்லு என்றான் ஸ்ரீதர்!, முஜிபிற்கும் ஆசை இருந்ததால் தயங்கியபடி ஒத்து கொண்டான்!,

மூவரும் சென்றனர், ரொம்ப நாள் கழித்து வந்திருக்கும் நண்பனுக்கு தான் முதலிடம் என்று முஜிபை முதலில் அனுப்பி வைத்தனர்! ஐந்து நிமிடம் கழித்து பாண்டியன், பாண்டியன் வெகு சீக்கிரத்திலேயே திரும்பி வந்துவிட்டான்! கடைசியாக ஸ்ரீதர் உள்ளே சென்றான், வெளியே முஜிப் யாரும் வருகிறார்களா என அக்கம்பக்கம் பார்த்து ஒரு சிகரெட் பத்த வைக்க அருகில் வந்து நின்றான் பாண்டியன், முழு சிகரெட்டும் தீர்ந்தும் வரவில்லை ஸ்ரீதர், என்னாடா மச்சான் ஆளையே காணோம் ஒருவேளை தூங்கிட்டானா என சிரித்தான் முஜிப், மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகியது பாண்டியனுக்கோ இருப்பு கொள்ளவில்லை, டே என்னாடா இது என்று பதறினான் மச்சான் நான் உண்மையை சொல்டுறேண்டா, நான் உல்ள போனேனே தவிர ஒண்ணுமே செய்யல, எனக்கு பயமா இருந்ததால வந்துட்டேன் என்றான், முஜிபிற்கு சிரிப்பை அடிக்கமுடியவில்லை, எதாவது அவளுக்கு அட்வைஸ் பண்ணிருப்ப அதான் அவுங்ககிட்ட சொல்லி அழுவுறா போல என்றான், இல்லையேடே நான் தான் எதுவுமே பேசக்கூட இல்லையே என்றான்! ஒருவழியாக அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தான் ஸ்ரீதர், ஏண்டா இவ்வளவு நேரம் என்று கோரஸாக கேட்டார்கள்

ஒண்ணுமில்ல மச்சான் ரொம்ப நாள் ஆச்சா! அதான் ஊற வச்சு தொவச்சேன் என்றான் ஸ்ரீதர்!



டிஸ்கி:காதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையே! அந்த பெயருள்ளவர்கள் அப்படி செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

!

Blog Widget by LinkWithin