அஞ்சலி!

நாம் பார்த்திராத காந்தி, நேரு, படேல் என பல தலைவர்களை ரோல் மாடல் என்கிறோம், ஆனால் உண்மையில் நமது ரோல் மாடல் நமது தந்தை தான். நாம் உலகம் கற்று கொள்வதும் அவர்களிடம் இருந்து தான். அப்பேர்பட்ட தந்தையின் மறைவு என்பது மாபெரும் இழப்பு தான்.

மோனியின் தந்தை இறந்த செய்தியை கேள்விபட்ட போது என்னாலயே அந்த இழப்பை தாங்க முடியவில்லை, மோனிக்கு எப்படி இருந்திருக்கும். அவரது தந்தை வக்கீலாக இருக்கிறார், அதற்கு முன் ஆசிரியர் பணியில் இருந்திருக்கிறார், அவரிடம் படித்த ஒரு மாணவர் தற்பொது வக்கீலாக இருப்பவர், உடல்நிலை சரியில்லாத அவரை பார்க்க வந்த பொழுது தாங்க முடியால் வாய் விட்டு அழுதியிருக்கிறார். எப்படி அவர் வாழ்ந்திருப்பார் என்பதற்கு இது உதாரணம் மட்டுமே.

வெறும் சமாதானங்கள் இந்த இழப்பிற்கு ஈடாகாது, அண்ணாரின் மறைவுக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்!

*********************

செந்தழல் ரவியின் தங்கை கணவர் இறந்தாக கேள்வி பட்டேன்! அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்!

வேலைக்கு ஆட்கள் தேவை!

We required MALE / FEMALE experienced Tally accountant for our Chennai Branch.
Capable to handle Tally accounts independently.
Salary Rs.6500.00 PF,ESIC,Bonus,Yearly increment as applicable.
Working hours 10.30 AM to 6.30 PM.
We are stationery distributor, having H.O. in Mumbai.
Interested candidates please mail your resume immediately to

sanghvichennai108@gmail.com

Contact info.
SANGHVI CORPORATION
Door No.2F, Second Floor, 6, Umpherson Street,
(Opp.Hotel Saravana Bhavan), N.S.C.Bose Road,
Chennai - 600 108.

Mr.K.Ramachandran
Manager
Mobile - 93835 12521.





சென்னை நண்பர்கள் உங்களது தளங்களில் பகிருமாறு கேட்டு கொள்கிறேன்!, ரீடரில் பகிருதலும் தேவைப்படுபவர்களுக்கு உதவலாம்!

மனிதன், மிருகம், கலாச்சாரம்!

சென்ற பதிவின் தொடர்ச்சியாகவும், வலைப்பதிவுகளில் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் கலாச்சாரத்தை உள்நோக்கும் பார்வையாகவும் இதை வைத்து கொள்ளலாம்!

சென்ற பதிவில் மனிதனுக்குள் மிருகம் என்று தலைப்பிட்டதற்கு சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள், அது மிருகத்தை கேவலப்படுத்துவது என்று, விலங்குகளை விட மனிதன் பல மடங்கு மேல் தான் ஆனால் ஒருசில மனிதர்களால் தான் நாம் மிருககுணத்தை இன்னும் விட வில்லை என்பது தெரிகிறது!, மிருகங்களின் வாழ்க்கையை உண்ணிப்பாக கவனித்திருக்கிறீர்களா? பரிணாமம் பற்றி ஆராய பல நாள், பல விலங்குகளின் வாழ்க்கையை கவனித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், மனிதன் விலங்குகளை விட மேல் தான்!

அனைத்து உயிரினத்திடமும் இருக்கும் இயற்கை உந்துதல் தன் சந்ததியினரை உருவாக்குதல், உயிர் வாழ்வதற்கு நடக்கும் போராட்டத்திற்கு இணையாக நடக்கும் அது என்பது டிஸ்கவரி போன்ற சேனல்களை பார்ப்பவர்களுக்கு தெரியும், இன்னும் அதிகமாக கவனித்தவர்களுக்கு தெரியும் விலங்குகளின் பெரும்பாலான புணர்ச்சி வன்முறையில் தான் நடக்கும் என்பது!. விலங்களுக்கும், மனிதர்களுக்கும் உள்ளது வித்தியாசம், விலங்குகள் அடங்கிப்போய் விடும், மனிதஇனப்பெண்கள் கடைசி வரை போராடுவார்கள்!

உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றுப்படி எல்லா குற்றங்களுக்கும் செக்ஸ் வறட்சி ஒரு காரணம் என்கிறார். கலாசாரம், பண்பாடு என பழமைப்பேசி(அவரில்லையப்பா) மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை தூண்டி விடும் பொறுப்பு சமூகத்தை சார்ந்த நம் அனைவரையும் சேரும்., குழந்தைகள் பாலியல் வன்முறையை பொறுத்தவரை பெரும்பாலும் சற்று வயது முதிர்ந்தவர்களே ஈடுபடுவார்கள், வயதானவுடன் கோவில், குளம் என சுற்றத்தொடங்கும் மனைவி, அருகில் சென்றாலே இந்த வயசில கிழவனுக்கு நினைப்பை பாரு எனும் பொழுது இமேஜ் கருதி விலகி விடுவார்கள், ஆனால் இயற்கை உந்துதல் அவர்களை விடாது, பெண்களுக்கு மோனாபாஸ் ஆனவுடன் கருமுட்டை உருவாகுவது நின்றுவிடும், ஆண்களால் சாகும் வரை இனப்பெருக்கம் செய்ய முடியும்!.



விவாதத்தில் மீதியை தொடரலாம்!
*********************

இன்று திருமணம் என்றாலே நீண்ட கால மகிழ்ச்சி தரும் என்ற விசயத்தை விட, பயங்கரமாக செலவு வைத்து நீண்ட காலம் கடனுக்காக உழைக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்றே பார்க்கப்படுகிறது, நிம்மதியில்லாத மணவாழ்க்கை, மற்ற விசயங்களிலும் கவனத்தை கெடுக்கும். இதற்காகவே மேலை நாடுகளில் லிவிங் டுகெதர் முறையை பின்பற்றுகிறார்கள்.

லிவிங் டுகெதர் என்றால் என்னவென்று சரியாக புரியாமல் அது கலாச்சார சீர்கேடு, மனிதஇன அழிவு என்ற ரேஞ்சுக்கு சிலர் பேசி கொண்டிருக்கிறார்கள்!, தம்மை தாமே நன்றாக கவனித்து கொள்ள முடிந்த சுந்திர சிந்தனையுடய பெண்களுக்கு சாதகமானதே லிவிங்டுகெதர் கலாச்சாரம்! ஆணாதிக்க சமூகம் அதை எதிர்ப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை தான்!, அந்த தம்பதிகள் மற்ற மணமான தம்பதிகளை போல் தான் வாழ்கிறார்கள், விருப்பப்பட்டால் குழந்தையும் கூட பெற்று கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் எதை செய்தாலும் அறிந்தே செய்கிறார்கள், அய்யய்யோ தப்பு பண்ணிட்டோமே என மற்ற தம்பதியினர் புலம்புவது போல் அவர்கள் புலம்புவதாக தெரியவில்லை!

5 வருடமாக எனக்கு ஒரு லிவிங் டு கெதர் தம்பதியினரை தெரியும்! அந்த ஆண் அதற்கு முன் மனைவியை அடிக்கும் பழக்கம் உள்ளவர், அந்த பெண்ணின் கணவரும் அதே போல் தான்!, அவர்களுடய பழைய பார்ட்னர் இறந்து சில நாட்கள் கழிந்து சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள், அவர்களுக்குள் சின்ன சண்டை வந்து கூட நான் பார்க்கவில்லை, இருவருக்கும் நன்றாக தெரிந்த ஒரே விசயம், நாம் ஒருவரை நம்பி ஒருவர் இல்லை, நீ இல்லாமலும் என்னால் வாழ முடியும், அதனால் உனது ஆதிக்கத்தை என் மேல் செலுத்த நினைக்காதே!



அதற்காகவே நான் லிவிங் டு கெதர் கலாச்சாரத்தை நான் ஆதரிக்கிறேன்!

மனிதனுக்குள் மிருகம்!

பொது சமூகப்பார்வையில் சில செயல்கள் குற்றங்களாக பார்க்கப்பட்டாலும், நான் எல்லாம் செயல்களுக்குக்கும் எதாவது ஒரு தூண்டுகாரணி இருக்கும் என நம்பி கொண்டிருந்தேன்! அப்படியும் ஆதியிலிருந்து என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயம் ”குழந்தை பாலியல் வன்முறை”, சென்னையில் நடந்த "good touch, bad touch" நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், நண்பர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை சொல்லி போக சொல்லியிருந்தேன், மதுரையில் நடந்த பொழுது கொஞ்சமேனும் அதன் பொருட்டு விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்த முடிந்ததே என்ற மகிழ்ச்சியும் இருந்தது!

ஆனால்!..........


நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள், அவையெல்லாம் போதாது என நமக்கு சொல்லி கொண்டே தான் இருக்கின்றன!, கோவை சம்பவம் பற்றி தான் பேச வருகிறேன் என்று நினைக்கலாம், இருங்கள் அதற்கு முன் இன்னொரு கொடுர சம்பவத்தை சொல்ல வேண்டியிருக்கிறது!, நண்பர் அனுப்பிய அந்த மெயிலை பார்த்த போது எனக்கு உடம்பெல்லாம் பதறிவிட்டது, மூன்று மாத குழந்தைக்கு தகப்பன் என்று மட்டும் இல்லாமல் ஒரு மனிதனாக கூட என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை, அந்த சம்பவம்!...



பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் மிகவும் அதிகரித்து விட்டது,கொடுமையிலும் கொடுமை. கோவையில் கடத்திக் கொல்லப்பட்ட இரு குழந்தைகளில் மாணவியின் உடல் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், அவளும் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததுள்ளார் என்பது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்திருக்கிறது.
உடல் நடுங்கிப் போகிற இன்னொரு விஷயம். இது நாளிதழ்களில் வராதது. எனக்குத் தெரிந்தவரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்கள். அவருக்கு அருகாமை பெட்டில் உள்ள அம்மா இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார். இவர் குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று கேட்க அவர் சொன்னது அதிர்ச்சியின் உச்சம்.
அவரின் பெண் குழந்தை, ஒன்றிரண்டு நாளாக வாந்தி, பேதி என்று அவதிப்பட்டிருக்கிறது. பயந்து போய் மருத்துவமனைக்கு கொண்டு வந்து, பரிசோதனைகள் செய்தபோது,குழந்தையின் உணவுக்குழாய்க்குள் ஆணின் விந்தணு இருந்திருக்கிறது. எவனோ ஒரு கிராதகன் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வாய்க்குள்.....
******************************************
அந்தக் குழந்தைக்கு மூணு மாசம்! மூணு வயசில்ல.. மூணு மாசம்தான்!
வாய்லயே எவனோ அவன் உறுப்பை திணிச்சு....
அவனும் மனுஷ ஜென்மம், நானும் மனுஷ ஜென்மன்னு நெனைக்கவே கூசுது..


 *****************************

எனக்கு மட்டும் அவன் யாரென்று தெரிந்தால் அடித்தே கொன்னு போட்ருவேன்!, கோவை என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக சில நண்பர்கள் பதிவிட்டிருப்பதாகவும், அது தவறு என சிலர் சொல்லியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்!, மனிதநேயம் காக்க அவர்கள் பேசியிருக்கலாம், ஆனால் அது தான் உண்மையில் மனித நேயமா!?

பொருள் சார்ந்த சமூகம் ஒருவனை தவறான வழியில் பொருள் சேர்க்க உந்தியிருக்கலாம், முடிவில் மாட்டிக்கொள்வோமோ என கொலையும் செய்திருக்கலாம், ஆனால் ஏன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தான், அவன் விசாரணையின் போது ஜாமினில் வந்து மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்!

மொத்த குழந்தைகளின் நலன் கருதி அவனை கொன்றதே என்னை பொறுத்தவரை சரியான மனித நேயம்!, அம்மாதிரியான மனிதர்களால் இச்சமூகத்திற்கு ஒரு நன்மையும் இல்லை. நானாக இருந்தாலும் அதை தான் செய்திருப்பேன்!, அவர்களாவது சுட்டு கொன்றார்கள், நானாக இருந்தால் அடித்தே கொன்றிருப்பேன்!

எங்கே போச்சு போக்குவரத்துத்துறை!

ஒரு வேலையா மதுரைக்கு போனேன், எல்லாத்தையும் முடிச்சிட்டு ஸ்ரீதரை பார்த்துட்டு 10 மணிக்கா பஸ் ஏறலாம்னு ஆரப்பாளையம் பஸ் ஸ்டேண்டு போனா செமக்கூட்டம், சரி நானும் ஈரோடு பஸ் வரும்னு நின்னுகிட்டே இருந்தேன், உள்ளே வரும் போதே ஒரு பஸ் பயங்கர கூட்டமா வந்தது, சரி அடுத்த பஸ்ஸில் போகலாம்னு பார்த்தா அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பஸ்ஸைக்காணோம், திரும்பவும் ஒரு பஸ் வந்தது, இப்போ அதைவிடக்கூட்டமா.

ஒருவேளை வெளியிலேயே ஏறிடுறாங்களோ, நாமளும் அங்கே போய் நிக்கலாம்னு பார்த்தா, கூட்டம் மெயின்ரோடு வரைக்கும் நிக்குது, டீரிஸ்ட் வேன்ளையும், பஸ்ஸுலயும், கோயம்புத்தூர், சேலம்னு கத்தி கத்தி ஆள் ஏத்திகிட்டு இருந்தாங்க, தலைக்கு 300 ரூபா டிக்கெட்டு. சென்னையில் ஆம்னி பஸ்ஸில் 1500 டிக்கெட்னு சொன்னப்ப நான் நம்பல, நேத்து தான் தெரிஞ்சது தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தானென்று!



நான் இன்று கோவையில் கண்டிப்பாக இருக்கனும், மிகமுக்கியமான வேலைகள் இருக்குது. ஆனாலும் அப்படியே நேரா கோவை போக முடியாத நிலை, சில முக்கியமான டாக்குமெண்டுகள் ஈரோட்டில் தான் இருக்கு, சரின்னு சேலம் போகும் ஒரு வேனில் ஏறி நாமக்கல்லில் இறங்கிக்குறேன்னு பார்கெயின் பண்ணு 250 ரூவாக்கு பேசியாச்சு!

மொத்தம் இருந்தது 21 சீட்டு தான், கடைசியா இருக்கும் சீட்டில் இரண்டு பூசணிக்காய்களுக்கு நடுவில் நசுங்கும் தக்காளி போல் ஒரு சீட்டு கிடைத்தது. அதையும் அனுசரித்து அமர்ந்தாச்சு, நல்ல டயர்டாக இருந்ததால் வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் கண்ணசர ஆரம்பித்தேன். ஒரு பத்து நிமிசம் தூங்கியிருப்பேன், உடல் வேர்த்து முழிப்பு வந்தது, பார்த்தா வண்டி ஓரமா நிக்குது, ட்ரைவர் அருகில் இருந்த ஒரு கோவிலில் வெகு தீவிரமாக மணி ஆட்டிகொண்டு இருந்தார், சரி முடிச்சிட்டு வரட்டும்னு இருந்தேன்!

ஒருவழியாக வந்து வண்டி நகர ஆரம்பித்தது, இந்த தடவை அரைமணி நேரம் தூங்கியிருப்பேன், திரும்பவும் வேர்த்து வழிந்து எழுந்தேன். சுத்தியுலும் பார்த்து ஒரு கோவிலும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியாச்சு, எங்கேயா போனாரு ட்ரைவருன்னு கேட்டா, ”இந்தா தூங்குறாரு பாருங்கன்னு” பானட் மேல தூங்கிட்டு இருந்த ஒருத்தரை காட்டுறாங்க, சீக்கிரம் போகனுமேன்னு காசு அதிகமா கொடுத்து வேன்ல ஏறினா அவரு தூங்கிகிட்டு இருக்காரு.

டென்ஷன் ஆகி பிரயோசனமில்லை, அவரை எழுப்பி சண்டை போடுறதால எழுந்து வண்டி ஓட்டுவார், ஆனா உசுருக்கு உத்திரவாதம் இல்லையே!, காத்தாட கீழே இறங்கி ஒரு சிகரெட்டை எடுத்து பத்த வைச்சிகிட்டேன், கொஞ்ச நேரத்தில் மொத்த வேனுக்குள்ளும் சலசலப்பு ஆரம்பித்தது, எல்லாரும் சேர்ந்து ட்ரைவரை எழுப்பிட்டாங்க, அவரும் வண்டி எடுக்க ரெடியாகிட்டாரு, முகம் கழுவச்சொன்னா, கழுவக்கூடாதுங்கக்கிறார், என்ன லாஜிக்கோ!.

எனக்கு ஒருபக்கம் தூக்கம் வந்தாலும், வண்டி ஒருதினுசா ஓடுறது மாதிரியே ஒரு ஃபீலிங், மாத்தி மாத்தி ட்ரைவர்கிட்ட பேச்சு கொடுத்துகிட்டே கரூர் வந்து சேர்ந்தோம், சரியா மணி 5 அப்போ.
இதுக்கு மேல ஆவாதுன்னு பைப்பாஸ்ல இருந்து ஒரு ஆட்டோ எடுத்து கரூர் பஸ் ஸ்டேண்டு போய் ஈரோடு பஸ் பிடிச்சு வந்தேன்!.

பயணிகள் வாகனம் தனியார் இயக்க தனி பர்மிசன் வேணும், சென்னையிலாவது ஓடும் ஆம்னி பஸ் அதிக கட்டணம் கேட்டது, அழகிரியார் நகரில் மீன்பாடி வண்டி கூட பயணிகள் வண்டியா ஓடுதே, போக்குவரத்துத்துறைன்னு ஒன்னு அங்கே இல்லையா!?, தீபாவளி சமயம் எல்லா ஊர்லயும் ஸ்பெஷல் சர்வீஸ் விடுவாங்க, மதுரை மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு. தம்மக்கள் சம்பாரிக்கட்டும்னு தலைவன் நினைக்கும் அதே பாணியை அழகிரியாரும் பின்பற்றுகிறாரோ!?

என்னவோ போங்க், வந்து சேர்றதுக்குள்ள எனக்கு தாவூ தீர்ந்துருச்சு!

தமிழ் படிக்கச் சொல்லும் ஆசிரியர்கள் கெட்டவர்களா?

இன்று விஜய் டீவி, நீயா நானாவில்(இப்போ ஓடிகிட்டு இருக்கு) தமிழ் ஆசிரியர்களால் தொல்லையா போன்ற ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது!, தமிழனை தவிர வேறு எவனும் இந்த அவமானத்திற்குள்ளாக மாட்டான்!, என்னாய்யா பாண்ணிட்டாங்க பார்த்தா, தமிழ் படிக்க சொன்னாங்களாம், தமிழில் பேசலாமே என்றார்களாம், தமிழ் நிகழ்ச்சி பார்க்க சொன்னார்களாம், என்ன குறை இதில் கண்டார்கள் என தெரியவில்லை!

எனது தமிழ் ஆசிரியர் பெயர் பன்னீர்செல்வம், இன்று வரை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன், ம.பொ.சி. யின் மீசை வைத்திருப்பார். யாரையும் அதிர்ந்து பேசியதில்லை. இதை விட உயர்வாக சொல்ல ஒன்றும் இருக்கிறது, நான் அவரிடம் படித்த வரை அவர் யாரையும் பரிட்சையில் தோல்வியடைய வைத்ததில்லை, அது எப்படி சாத்தியம் என கேள்வி வரலாம்!ஆம் அவரை பொருத்தவரை எல்லாரும் நல்லவர்களாகவே பிறந்தார்கள், பிரபஞ்சனுக்கு(எழுத்தாளர்-சித்தன் போக்கு) முன்னரே அனைவரையும் நல்லவர்களாகவே பார்க்கும் பார்வை கொடுத்தது எனக்கு பன்னீர்செல்லம் ஐயா தான்!

தமிழில் பேச சொல்வதால் என்ன தவறு கண்டார்கள் என தெரியவில்லை, அம்மாவை அம்மா என்று கூப்பிடச் சொல்வது தவறாய்யா! அதானே அவர்கள் சொல்வதின் அடிப்படை, உங்கள் வீடு புகுந்தா நீங்கள் எல்லாவற்றிலும் தமிழை பயன்படுத்துகிறார்களா என பார்க்கிறார்கள்!?.

இலக்கியம் என்பதற்கான அர்த்தம் தெரியுமா?, நம் முன்னோர்களின் பண்பாடு, கலாச்சாரம் அவர்களின் வாழ்க்கை முறைகளை எழுத்தாக வடித்தது தானே அது!, அவற்றை தெரிந்து கொண்டார்களா என ஒரு ஆசிரியர் ஆர்வம் காட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்!

என் வகுப்பில் பட்டதை போல் என் தமிழ் ஆசிரியர் வேறெங்கும் அனுபவப்பட்டிருக்கமாட்டார்!, நான் ஏன் திருக்குறள் படிக்கனும் என்ற ஒரே கேள்வியில் மட்டும் அவரிடம் இரண்டு வகுப்புகள் விவாதித்திருக்கிறேன்!, உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்லும் நிலையைப்போல் ஒரு நெகிழ்ச்சியான நிலையில் தனிமையில் என்னை பார்த்து நீ பெரியாளா வருவடா என்றார்!, நான் வர்றேனோ இல்லையோ! மற்ற வகுப்பு ஆசிரியர்கள் போல் அல்லாமல் ”போய் சொன்னதை செய்” என்று சொல்லாமல் விட்டதே எனக்கு அப்பொழுது பெரிய விசயம்!

தமிழ் பேராசியர்கள் கணிணிதுறையினர் மீது பொறாமையில் உள்ளார்கள் என்ற பேச்சு உள்ளது, நிச்சயமாக அப்படி இல்லை, கணிணிதுறையில் உள்ள உங்களுக்கு தான் தெரியும் அதிலுள்ள பொருள்கள் பற்றி, அதற்குறிய தமிழ் பெயர்கள் சூட்டுவது, துறை சார்ந்த கலைச்சொற்கள் தேடுவது என்று எல்லாவற்றிற்கும் ஏன் தமிழ் ஆசிரியர்களையே தேடுகிறீர்கள் என்ற ஆதங்கம் அவர்களுக்கு.

இயலும், இலக்கியமும் கற்று கொடுத்த தமிழ் ஆசிரியன் இன்று மாற்று மொழிப்பாடம் தவிர அனைத்தையும் தமிழிலேயே கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறான்! நாம் தானே அதை உணராமல் இருக்கிறோம்!, ஆங்கில உச்சரிப்புக்கு நாம் காட்டும் முனைப்பை தமிழ் உச்சரிப்பு காட்டியிருக்கிறோமா!?

என் உடையை அணிந்து நான் பெருமைப்படுவது எப்படி!? மாற்றான்(நண்பன் என்றே வைத்து கொள்ளலாம்) உடையை அணிந்து பெருமைக்கொள்வது எப்படி? அப்படியானால் நம் உடையை அணிவதில் நாம் சிறுமை கொள்கிறோமா? நமக்கு அதனால் தாழ்வுமனப்பான்மை ஏற்படுகிறது என்றால் தவறு யார் மேல்!

இங்கே தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை தமிழ்நாட்டில் இருக்குமானால் தமிழநாட்டில், தமிழுக்கு, தமிழர்களுக்கு என்ன மரியாதை!. உலகம் கற்றுக்கொடுத்த பெற்றோர்கள் மேல் இருக்க வேண்டிய மரியாதை. பண்பாடும், கலாச்சாரமும் கற்றுக்கொடுத்த தமிழ் மேலும் இருக்க வேண்டியது தானே முறை!

டிஸ்கி:கலாச்சாரம் மீதான விமர்சனத்தை அடுத்தொரு பதிவில் வைத்து கொள்ளலாம்!

!

Blog Widget by LinkWithin