ரவியண்ணே கொஞ்சம் ப்ரேக் விடுங்க!


நண்பர் ஜீவ்ஸ் விட்ட பஸ் இது.

முதலில் ரவியண்ணன் பற்றி சில தகவல்கள்.

அவுங்கப்பா ஒரு ரிட்டயர்டு புரபஸர், ரவியண்ணன் ஈரோட்டில் கேபிள் நடத்தி கொண்டிருந்த போது எனக்கு பழக்கம், ஆதியிலேயே டெக் வைத்து கேபிள் போட்ட காலத்திலிருந்து கேபிள் நடத்தியவர் பின் அதை விற்று விட்டு கிளம்பிவிட்டார், அவர் ஒரு இயற்கை விரும்பி, வனப்பிரியர். கோவையில் இருக்கும் மேல்முடி என்ற மலையை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.

நீள்வட்ட பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சூரியனில் இரண்டு முறை குளிர்காலமும், இரண்டுமுறை வெப்பகாலமும் வரவேண்டுமே என எனது நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தவர், இரண்டு அங்குல பி.வி.சி பைப் துண்டுகளை வைத்து டெலஸ்கோப் செய்து சிறுவயதில் எங்களை அசத்தியவர். இன்று அவர் நம்பும் ஒன்றை புரியவைக்க மிகவும் கடினப்படுகிறார்!

பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார் அவரது புரிதல்கள் பற்றி பதிவாய் எழுத, அவரது கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் அது எனக்கு புரிந்திருந்ததே அதற்கு காரணம்!
அவரது கருத்தை எனது புரிதலில் சொல்ல வேண்டுமானால் “ஒரு மரம் சாய அதிலிருந்த குருவி கூடு தான் காரணம் என்கிறார்” . கேயாஸ் தியரி மாதிரி என்றேனும் ஒருநாள் என்னுடய புரிதல் தவறு என்றோ, அல்லது அதற்கு வேறு விளக்கமோ அவர் சொல்லக்கூடும், மேலும் அவரது புரிதல்களை விளக்குவது பதினான்கு ரீல் படத்தில் இடையில் ஒரு ரீல் மட்டும் காட்டுவது, அதை புரிந்து கொள்வதற்கு என்னை போல் வேலை வெட்டி இல்லாமல் இருந்திருக்க வேண்டும்!

என்னுடய புரிதல்களை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்!
அதற்கு முன் சில முன்கதை சுருக்கங்கள்!


சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக இருக்கும் பூமியில் மட்டுமே நீர் ஆதாரம் மிகமிக அதிகபடியாக உள்ளது, அதற்கு காரணம் பூமியின் தட்பவெப்பநிலை, நமக்கு பின் இருக்கும் செவ்வாய் கிரகம் பூமியை விட அதிக வெப்பத்தை உள்வாங்கும் தன்மையுடயது என்பதை இவ்விடத்தில் நியாபகபடுத்துகிறேன்!


பலகோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பூமியை சுற்றி பரந்த தூசி படலம் சூழ்ந்தது, சூரியனின் வெப்பம் நேரடியாக தாக்க முடியாமல் பூமி குளிர்ந்தது, இறுக்குநிறை கொள்கையின் படி குளிர்ந்த பூமியின் எடை கூடியவுடன் அதன் ஈர்ப்பு விசையும் அதிகமானது, பூமியை சுற்றிய ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகள் ஒன்றினைது நீராக உருவெடுத்தது, தொடர்ச்சியான மழை பூமியை மேலும் குளிர்வித்தது.

அணுவின் உட்கருவாக நியூட்ரான், தன்னை தானே பெருக்கிக்கொள்ளும் நியூக்கிளியஸாக மாறிய தற்செயல் நிகழ்வு பிரபஞ்ச வரலாற்றில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது(அதை பற்றி யாரும் ஆராய்ச்சி பண்றாங்களா தெரியாது). ஊடுருவிய சூரியஒளியை பயன்படுத்தி பச்சையம் மூலம் ஒளிச்சேர்கை செய்து ஆக்சிஜனை வெளிவிடும் தாவரங்கள் முதலில் தோன்றின, ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்து தொடர்ச்சியான மழையை பூமியில் உருவாக்கின!



ஒருகாலத்தில் முற்றிலும் சூழப்பட்ட பூமியின் உள்ளிருக்கும் அவுட்டர்கோரில் ஏற்பட்ட அழுத்தவிசையின் காரணமாக எரிமலைகள் தோன்றி புது புது தீவுகளை உருவாக்கின, தற்போதிருக்கும் நிலப்பரப்பு தோன்றியது, தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஆவியாதல் வினை நிலப்பரப்பில் மழையாக பெய்தது, ஆறுகளாக அடித்து செல்லப்படும் நீரில் மண்ணில் இருக்கும் உப்புகள் பல கோடி ஆண்டுகளாக கடலில் போய் சேர்ந்தது(கவனிக்க - எந்த வேதத்திலும் கடல் உப்பு நீராகவே படைக்கட்டதற்கான ஆதாரங்கள் இல்லை, அப்படியே படைத்திருந்தாலும் அது ஏன் என்ற காரணமும் இல்லை).



இதிலிருந்து ரவியண்ணன் என்னிடம் சொன்னதின் என் புரிதல்

வெப்பம் குறைவாக இருக்கும் பகுதிகளில் நீர் உறைநிலையை அடைந்தது,  இது எல்லாருக்கும் தெரிந்த அறிவியல் விதி, ஐஸ்கட்டியின் மீதி உப்பை தூவினால் அதன் உருகுநிலை மாறுபடும், அதாவது உருகுவதற்கு அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும். வட தென் துருவங்களில் சேர்ந்திருக்கும் தொடர்ச்சியான பனிபடலங்கள் பூமியின் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுத்து கொண்டிருக்கிறது என்பது அவரது வாதம், நிலப்பரப்பில்லாத வடதுருவ ஆர்டிக் பிரதேசத்திலும் அதே நிலை அழுத்தம் கொடுக்கிறது என்கிறார்(இங்கே தான் நான் முதன்முதல் முரண்பட்டேன்).

அதிக உப்பின் காரணமாக பனிபடலங்கள் உருகாமல் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது, அதாவது குளோபல் வார்மிங் காரணமக பூமி வெப்பமடையவில்லை, குளிர்ந்து கொண்டு இருக்கிறது என்கிறார். பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்ந்த உப்பின் அளவே அனைத்திற்கும் காரணம் என்றும், அதை குறைத்தால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும் என்றும் சொல்கிறார்.

 உதாரணமாக அழுத்தம் காரணமாக அதாவது ஒரு கால்பந்தின் மீது காலை வைத்து அழுத்தினால் அதன் விரிவு விசை நடுப்பகுதில் செயல்படும் என்பது போல் பூமி தட்டுகள் நகர்ந்து பூகம்பத்தையும்(சுனாமி) எரிமலையையும் உருவாக்குகிறது என்கிறார்!

இது உண்மையாகவே இருந்தாலும் இதை எப்படி தடுக்கப்போகிறார் என்று என்னிடம் சொன்னதில்லை, இவர் முனிசிபால்டி வாட்ச்மேனிலிருந்து நாசா விஞ்ஞானி வரைக்கும் அனுப்பிய மடல்களுக்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை, ஆனால் பாவம் மனுசன் தனியா கத்திகிட்டே இருக்கார்.

அவர் சொன்னதிலிருந்து எனது புரிதல்களை எழுதியிருக்கேன், இதில் அவருக்கு மாற்று கருத்தும் இருக்கலாம், அதை அவரே வந்து விளக்கி சொன்னால் தான் ஆயிற்று!, இது தான் பிரச்சனை என்றால் இதற்கான தீர்வையும் அவர் தான் சொல்ல வேண்டும்!

***************

ரவியண்ணன் உலக விஞ்ஞானிகளுக்கு விடுத்துள்ள அறைக்கூவல்

அண்ணா, ரொம்ப நாள் சொல்லிகிட்டே இருந்திங்க, இன்னைக்கு எழுதிட்டேன் சந்தோசமா!

கேள்வியும் எனது புரிதல்களும்! - 1


கேள்விகளை இன்னும் கேட்டு கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றி!,
உங்கள் கேள்விக்கான எனது புரிதல்களை அளித்திருக்கிறேன், அவையே இறுதி பதில் அல்ல!


//கும்க்கி said...

தல.,

நீங்க நல்லவரா...இல்ல கெட்டவரா?
(சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி...மனசாட்சிப்படி பதில் சொல்லவும்)//

பொதுவான பார்வை என்ன?
நல்லது  செய்தால்  நல்லவர், கெட்டது செய்தால் கெட்டவர்.
டெபாசிட் செய்தவருக்கு வங்கி கொடுக்கும் வட்டி, கடன் வாங்கிய ஒருவர் வங்கிக்கு கொடுத்த வட்டி, செயல்கள் என்றும் ஒற்றைதன்மையில் முடிவதில்லை, ஒருவருக்கு நல்லது மற்றொருவருக்கு கெட்டதாக இருக்கலாம். நான் நல்லவனா, கெட்டவனா என ஆராய்வதை விட மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்!.

அகத்தில் நல்லவனாக நினைத்துக் கொண்டும், புறத்தில் கெட்டவனாக நடித்துக் கொண்டும் வாழ்வதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு தல!

*********************

பதிவுலகில் மொக்கை பதிவு போடுரவங்கள என்ன செய்யலாம்.?//


பதிவுலகம் எதற்காக உருவாக்கப்பட்டது என அறிவீர்களா!? உண்மையில் முழுக்க முழுக்க மொக்கைக்காக தான். பதிவுலகின் பரிணாம வளர்ச்சி தான் சமூகசிந்தனைகளை வெளிப்படுத்துதல், ஒரே மாதிரியான சுவை சில நேரங்களில் சலிப்பு தட்டுவது போல், மொக்கைகளும்.. ஏன் சில நேரங்களில் சீரியஸ் பதிவுகளுமே சலிப்பு தட்டிவிடும்!, இங்கே யாருக்கும் எதையும் வலிய திணிப்பதில்லை, அவரவர்க்கு தேவையானதை எடுத்து கொள்ளும் உரிமை அவரவர்க்கு உண்டு! மொக்கை போடுவதும் அவரவர் உரிமை, நடிக்காமல் அவருக்கு தெரிந்ததை செய்கிறார் என்ற முறையில் நானாக இருந்தால் பாராட்டுவேன், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்!

***************




இரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..
விவரம் அறிய கவிதை வீதி வாங்க..//

இது எனக்காக கேள்வியா அல்லது உங்கள் பதிவின் விளம்பரமா!?
என் காதலிகள் யார் வீட்டிலும் குட்டை சுவர் இல்லாததால் ஏறி குதிக்க வேண்டிய வேலை இல்லாமல் போயிற்று!. 

****************

/உங்களையும் இந்த வியாதி தொத்திக்கிச்சா?/

உடற்கூறில் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்ய உடல் செய்யும் போரே காய்ச்சல், ஆனால் நாம் காய்ச்சலுக்கு மருந்து சாப்பிடுகிறோம்!, எது வியாதி!?

//எங்களை பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலயா?//

பாவம், புண்ணியம் பார்த்தா தொழில் பண்ண முடியுங்களா!?


//உங்களால ராஜன் கெட்டாரா? இல்லை ராஜனால நீங்க கெட்டீங்களா?//

என்னால் ராஜனும், ராஜனால் நானும் நிறைய கற்றோம்!


(கறிய ரெண்டு நாள் வெளிய வச்சா கெட்டு போயிரும். 
பாலை ஒரு நாள் வச்சாலே கெட்டு போயிரும். 
எப்படி கெட்டமோ.......தெரிஞ்சும் தேடி வந்த நல்லவுக நீங்க. நல்லா இருங்க ஆத்தா !!
( கெட்டவங்க கூட்டத்தில நல்லவங்களா வந்து சேருவாய்ங்க ....?   ஒரு டவுட்டு ) )


//உங்களைப் பத்தி ஒரு கிசுகிசு கேள்விப்பட்டேனே? உண்மையா?//

உரக்க சொன்னால் மட்டும் உண்மையில்லை, சில உண்மைகள் கிசுகிசு பாணியிலும் பரவும்!

***********************




இன்னைய சந்தை நிலவரப்படி... ஒரு ஓட்டு என்ன விலை?//

நான் ஓட்டுக்கு காசு வாங்குவதில்லை, அதனால் சந்தை நிலவரம் தெரியவில்லை. எனக்கு தெரிந்து ஒரு ஓட்டின் விலை உரிமை, சுயமரியாதை!

//ஓட்டுக்கு காசு கொடுக்காத கட்சி ஆட்சி அமைக்குமா?//

வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்யும் மனிதர்கள் இருக்கும் வரை ஆட்சி அமையும் வாய்ப்பு உண்டு தானே!

//காசு வாங்கிக்கிட்டு ஓட்டு போட்டவனின் அடுத்த அய்தாண்டு நிலை என்னவா இருக்கும்?//

உரிமை மறுப்பு, சுயமரியாதை இழப்பு!

********************




டோண்டுவை காலி பண்ணி அவர் இடத்தைப் பிடிப்பதற்காகவே இந்த உத்தியைக் கையிலெடுத்திருக்கிறீர்களா?

யோசிச்சுப் பாருங்க, இந்த மாதிரில்லாம் கேள்விகள் வரும். உங்களுக்குத் தேவையா :)//

அதான் நீங்களே கேட்டுடிங்களே,
டோண்டு பதிவிலேயே அவருக்கு வரும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிகிட்டு இருப்பேன் பார்த்ததுண்டா!,
பதிலை தேட கேள்விகள் தூண்டுவதால் எனக்கு கேள்விகள் பிடிக்கும். இந்த பதிவில் எனது பதில்களின் மூலம் புரிந்து கொண்டு நண்பர்கள் உச்சபட்ச தேடலை எனக்களிக்கும் கேள்விகளை எனக்கு வழிக்கு ஒளிகாட்டியாக தருவார்கள் என நம்புகிறேன்!

//ரெண்டையும் ரெண்டையும் கூட்டினாலும் நாலுதான் வரும், பெருக்கினாலும் நாலுதான் வரும். ஆனா மூணையும் மூணையும் கூட்டினா ஆறு வரும், பெருக்கினா ஒம்பது வரும். இதுதான் சார் வாழ்க்கைன்னு யாராச்சும் உங்ககிட்ட தத்துவம் சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?//

நீங்க ரொம்ப புத்திசாலியாக இருக்கிங்க, உங்ககிட்ட கத்துக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு, அது இருக்கட்டும் உங்க ப்ராண்ட் ”ரம்” தானே என கேட்பேன்!




உங்களுக்குப் பிடிச்ச கதாநாயகி, கதாநாயகன், அரசியல் தலைவர் யார் யார்னு பட்டியல் போட முடியுமா?//

வந்த கேள்விகளிலேயே என்னை அவமானபடுத்தும்(நன்றி-சாரு) கேள்வியாக இதை நினைக்கிறேன், இருந்தாலும் என் பாணியில் பதில் சொல்வது தானே முறை!

கதாநாயகி- என் காதலி

கதாநாயகன் - நான் தான்

அரசியல் தலைவர் - அதுவும் நான் தான்!
சுயபுத்தியுள்ள ஒவ்வொரு மனிதனும் அவனவன் சார்ந்த, அவனை சூழ்ந்த அரசியலில் தலைவன் தான், எவனொருவன் தனக்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து கொள்கிறானோ அவன் தன்னை தலைவன் எனச்சொல்லும் தகுதியை இழக்கிறான்!




கொஞ்சம் ‘ஏ’டாகுடமான கேள்விகளையும் இங்கேயே கேட்கலாமா இல்லை தனிமடலில்தான் கேட்க வேண்டுமா?//

பதில் சொல்ல நான் தயாராக இருக்கும் பொழுது கேள்வி கேட்க உங்களுக்கு ஏன் தயக்கம் தல!




உங்க வாழ்க்கையில் நீங்க எதைப் பெரிய சாதனையாக நினைக்கறீங்க?//

வாழ்ந்து கொண்டிருப்பதை!

******************




என்னடா பதிவு எழுத வந்தோம் என எப்பொழுதாவது நினைத்ததுண்டா?//

குழந்தையாக இருக்கும்பொழுது நினைத்ததுண்டு!


இதான் குழந்தையா இருக்கச்ச எழுதிய அந்த பதிவு!




நீங்கள் ஏன் உங்களை இளமையாக காட்ட "டை" பயன்படுத்துவதில்லை..//

இளமையாக இருப்பவன் அதை ஏன் காட்ட வேண்டும்!?
(என் காதலிக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது)





உங்களுக்கு பிடித்த அமைச்சர் எ.வ.வாலுவா சாரி எ.வ.வேலுவா?//

யாரு வேலு!?




வால் பையன் - ஏன் இன்னும் வளரவே இல்லை.. (பெயரில்)

வருசத்துக்கு ஒருமுறை பெயர் மாத்திகிவிங்களா தல!?

*********************




நீங்க சரக்கடிக்க உட்கார்ந்தா எத்தனை ரவுண்ட் அடிப்பீங்க?
ஓசில சரக்கடிச்சது உண்டா?
சரக்கை சுட்டு(திருடி) குடித்த அனுபவம் உண்டா?//

ரவுண்ட், சதுரம், செவ்வகம்னு பல டிசைன்ல பல்டி அடிப்பேன், அதுக்கு முன்னாடி நான் ஏகப்பட்ட குஷியில் இருக்கனும்.

என் பாக்கெட்டில் இருக்குறதெல்லாம் என் காசுன்னு நினைச்சிங்களா, நான் எப்பவுமே உலகை சார்ந்து இயங்குபவன் தான். எல்லாமே எனக்கு ஓசியா தான் கிடைக்குது!

இவ்வுலகில் எதையும் யாரும் திருட வேண்டிய அவசியமில்லை, பொருள் சார்ந்த சமூக குணத்தில் வாழ்பவர்களுக்கு தான், இது என்னுடயது, அது உன்னுடயது, எனக்கு எல்லாவற்றையும் அனுபவிக்கும் உரிமை உண்டு! நான் ஏன் திருடி சாப்பிடனும்!?

***********************************
மீதி கேள்விகளுக்கான எனது புரிதல்களை நாளை இடுகிறேன்!




படம் உதவி


ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

தொடர்ச்சியான பணியின் காரணமாக முழுமையாக எந்த பதிவையும் உருவாக்கமுடியவில்லை, எல்லாம் பாதி பாதியாக நிற்கிறது, நான் கொஞ்சமாவது ப்ளாக் உலகில் பயணிக்க நீங்கள் தான் உதவ வேண்டும்!

அதுனால கொஞ்சநாளைக்கு நானும் கேள்வி பதில் தொடர் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்!

என்ன வேணும்னாலும் கேளுங்க, எனக்கு என்ன தெரிஞ்சிருக்குன்னு எனக்கு நானே சுயபரிசோதனை பண்ணிகிறேன்!


கோவையில் ஒரு வேலை வாய்ப்பு!

Urgently Wanted For A Leading Advertisement Company In Coimbatore

DTP - Designer, Well Experienced, Coreldraw & Photo Shop

Contact - 9843013363, 90432 73376 







உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்கேனும் வேலை தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்!

படித்ததில் பிடித்தது!

பெரியாரோட சிறப்பு அல்லது நுட்பம் என்பது, இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் கவனிச்சிக்கிட்டிருந்த ஒரு செய்தியை அதுவரையாரும் பார்க்காத கண்ணோட்டத்தில் பார்த்தது.

அதுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், குசேலன் கதையை சொல்லலாம். சமீபத்தில் வந்த குசேலன் கதையில்லை, ஒரிஜனல் குசேலன்.

ரஜினியின் குசேலன் படத்தை திரையிட்ட தியேட்டர் அதிபர்களில் இருந்து, திருட்டு வி.சி.டி போட்டவர்கள்வரை எல்லாரையும் குசேலனாக மாத்திடுச்சாம் இந்த குசேலன்.

ஆனால் அந்த குசேலன், 24 குழந்தைகளை பெற்றதால் வறுமையில் வாடுகிறான். அதனால் தன் நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி கேட்க போகிறான். கண்ணன் அவனுக்கு உதவி செய்கிறான் என்பது கதை.

24 குழந்தைகள் என்பது வறுமையை காட்டுவதற்காக புனையப்பட்ட திரைக்கதை.

பெரியார் கேட்டார், “வருடத்திற்கு ஒரு பிள்ளை என்ற வீதம், பெற்றிருந்தாலும் நான்கு பிள்ளைகள் 20 வயதுக்கு மேல் இருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான் என்றால் அவன் யோக்கியதை என்ன? அவனுக்கு பிச்சை கொடுக்கிறானே அவனுடைய யோக்கியதை என்ன? பார்ப்பனர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உழைத்து சாப்பிட மாட்டர்கள். என்பதற்கு இந்தக் கதையே சாட்சி”

இந்த சிந்தனை முறையை பெரியார்தான் துவக்கி வைக்கிறார். பல தமிழறிஞர்களுக்கும் ஒரு விஷயத்தை எப்படி பார்ப்பது? என்பதை பெரியார்தான் சொல்லித்தருகிறார்.

ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….

*********************




நான் பெரியாரிஸ்ட் இல்ல, இந்த சிந்தனை கோணம் பிடித்திருந்தது, அதனால் பகிர்ந்துகிறேன்.
சமூகத்தில் பெரியாரின் பங்களிப்பின் மேல் மரியாதை கூடுகிறது என்பது வேண்டுமானால் உண்மை!


http://mathimaran.wordpress.com/2011/02/03/article-362/

!

Blog Widget by LinkWithin