ஷீட்டிங் அனுபவங்கள்! - 1

முதல் நாளில் இருந்தே நான் தயாராகிக் கொண்டிருந்தேன், சொதப்பிற கூடாது என்பதற்காக பலவாறு என்னை தயார் படுத்தினேன், கண்ணாடி முன் நின்று எனக்கு நானே நடிச்சு பார்த்தேன். கஜினியில் சத்யம் சொதப்பியது போல் சொதப்பிடுற கூடாது என்பதற்காக, ஹாய் ஐயாம் சஞ்சய் ராமசாமி என நூறு முறையாக சொல்லியிருப்பேன்.

எங்க தூக்கம் வர்றது, விடியற்காலையிலேயே எழுத்து பல்விழக்கி, தலைக்கு ரெண்டு வாட்டி ஷாம்பு போட்டு, உடம்புக்கு மூணு வாட்டி சோப்பு போட்டு. தவுண்ட் பைவ் ஹன்ட்ரன்ட் பக்ஸ் பீட்டர் இங்கிலாந்து சட்டை போட்டுட்டு டைரக்டர் முன்னாடி போய் நின்னேன்.


என்ன தல, ஐடி கம்பெனியில் வேலை செய்யுறவன் மாதிரி வர்றிங்க, உங்களுக்கு விவசாயி வேடம். இந்தாங்க உங்க காஸ்ட்யூம் என ஒரு லுங்கியும், கை வைத்த உள் பனியனும் தந்தார், உடை மாற்றி வந்ததும் தோளில் போட்டுக்க ஒரு துண்டு வேற. செத்தான்டா சேகரு, அன்னைக்கு எழுதும்போதே யாரோ வேண்டபட்ட மகராசி உட்ட சாபம் போலன்னு நடிக்க தயாரானேன்.

சீன் மற்றும் ஷாட்டெல்லாம் ஐடியா பண்ணிய பிறகு முதலில் என்னை வைத்து லாங்ஷாட்டெல்லாம் எடுத்தார் டைரக்டர். என்ட்ரி, டிஸ் என்ட்ரி. சே அசிங்கமா அர்த்தம் வருதே. அதாவது நான் சொல்ல வந்தது என்னான்னா முன்னாடி வர்றது, பின்னாடி போறது. அடக்கருமமே திரும்பியும் அதே அர்த்தம் தான் வருது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். தோட்டத்துக்குள் வருவது, தோட்டத்தை விட்டு வெளிய போற காட்சி சாமியோ!


டைரக்டர் சீன் மற்றும் ஷாட்டுக்கள் ஐடியா பண்ணும் போதே நானும் என் உடன் நடிக்க போகும் நண்பரும் டையலாக் சொல்லி பார்த்துக்கொண்டோம், என் மழலை மொழியில் நான் என்ன சொல்றேன்னு அவருக்கு புரியனும்ல 
முதல் வசன காட்சியில் தோட்டிற்குள் நுழையும் அவரை பார்த்து நான், யாருங்க நீங்க புதுசா இருக்குன்னு கேட்கனும். அவர் உள்ளே வந்ததும் கேட்டேன். அவர், என்னா பாஸ் இப்ப தானே பேசிகிட்டு இருந்தோம், அதுக்குள்ள மறத்துட்டிக்க பார்த்திங்களா எனவும் என்னையும் அறியாமல் கெக்கபிக்கன்னு சிரிச்சிட்டேன்
தொடரும்.....

ஏன் மரச்செக்கு எண்ணெய் ?

ஏன் இயற்கை விவசாயம்?
மண்ணின் தன்மை கெடாது. உரங்கள் மண்ணை மலடாக்கும். இயற்கை விவசாயத்தில் அறுவடைக்குக் காலம் எடுத்துக்கொண்டாலும் ரசாயன உரங்கள் இல்லாததால் பயிரில் வித்தன்மை இருக்காது. ரசாயன உரங்களில் விளைவிக்கப்பட்ட பொருட்களை விட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள் விலை அதிகமாய் இருக்க காரணம் அதிலிருக்கும் உழைப்பு தான்.
ஏன் மரச்செக்கு எண்ணைய்?
சமையல் எண்ணெய் ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல் பயன்பாட்டுத் தன்மையை இழக்கிறது. இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன் வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. மேலும் ரீபைன்ட் என்ற பெயரில் காஸ்டிக் சோடா போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன் இல்லாத புதுப்புது நோயெல்லாம் தோன்றக் காரணம் நமது உணவுப் பொருட்களே.
மரச்செக்கு முறை பாரம்பரியமானது. எந்த கலப்படமும் இல்லாத சுத்தமான கருப்பட்டி கொண்டு தான் அரைத்து எடுக்கிறோம். 
பயன்படுத்திப் பார்த்தால் அதன் சுவையும் மணமும் உங்களால் உணர முடியும்.
ஒரு லிட்டர் எண்ணெயின் விலை :
நல்லெண்ணெய்               -    320
தேங்காய் எண்ணெய்    -    280
கடலெண்ணெய்    -    220
தற்பொழுது பெட் பாட்டலில் வரும் எண்ணெய் விரைவில் தீங்கிழைக்காத பிளாஸ்டிக் பவுச்சிலும் வரவிருக்கிறது.
உங்களது ஆர்டர்களை 9003063176   என்ற எண்ணில் அழைத்துக் கூறலாம்.
ஃபேஸ்புக்கில் வால்பையன் அக்கவுண்டில் உள்டப்பியில்(chat) கூறலாம்.

பிற நண்பர்களுக்கும் சென்றடைய ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

!

Blog Widget by LinkWithin