என்ன நடந்தால் நமக்கென்ன

ஒருவர் எதிர்மறையாக சிந்திப்பதை அவர் பாதுகாப்பாக கருதுவார் என்பதால் அது அவர் விரும்பம்னு விட்டலாம்., ஆனால் அந்த எதிர்மறை சிந்தனையை நம் மீது திணிக்கும் பொழுது எனக்கு அதிர்ச்சியும், பரிதாபமும் ஏற்படும். அவள் ஏன் அவன் கூப்டதும் போனா என்பது கூட தன்னை ஒழுக்கவாதி வட்டத்தில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் மனநிலை. போலயே சாதி வேண்டும் என்பவர்கள், மதம் வேண்டும் என்பவர்கள். கடவுள் நம்பிக்கையாளர்களை கூட விவாதத்தில் புரியவைக்க முடியும், குறைந்த பட்சம் 1%வது யோசிப்பார்கள்

ஆனால் இந்த எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் நம்மையும் சேர்த்து குழிக்குள் இழுப்பார்கள். பெரிய இவனாட்டும் எழுதுறியே நீ உலகை மாத்தியிருவா?  நீ எழுதினால்
சாதி ஒழிஞ்சிருமா?
மதம் அழிச்சிருமா?
கடவுள் இல்லைனு ஆயிருமா?
அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துருவா?
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திருவா?

உனக்கு என்ன தாண்டா பிரச்சனை? என் எழுத்து மொக்கைன்னு நினைக்கிறியா, ஆமா மொக்கை தான், எல்லாரும் 2 வரி எழுதி 200 லைக்ஸ் வாங்கினா நான் 200 வரிகள் எழுதி 2 லைக்ஸ் வாங்குவேன். 5000 ஃப்ரெண்ட்ஸ். 10000 பாலோயர்ஸ் இருக்காங்க, ஏன் அவங்கல்லாம் படிக்கலன்னு நான் கவலை படலையே, உங்கிட்டயும் வந்து ஏண்டா என் கட்டுரைய படிக்கல, ஏண்டா லைக் போடலன்னு நான் கேட்க போறதும் இல்லயே.



நான் எழுதுவது ஒரு முயற்சி, ஒரு முன்னெடுப்பு. என்னால் இமயமலையை நகர்த்த முடியாது, ஆனால் அதில் இருந்து ஒரு சின்ன கல்லை உடைக்க முடியும். கண்டிப்பாக முடியும். நான் தெரியாதுன்னு சொல்லுவேன், ஏன்னா அது எனக்கு உண்மையிலயே தெரியாது., ஆனா முடியாதுனு சொல்ல மாட்டேன், ஏன்னா என்னால் கத்துக்க முடியும், உலகில் யாரோ ஒருவரால் முடிகின்ற விசயம் நிச்சயம் என்னாலும் முடியும்

நான் எழுதி விட்டு, அதன் விளைச்சலை ரசித்து அறுவடை செய்ய அமர மாட்டேன், வேற என்ன எழுதலாம்னு யோசிக்க போயிருவேன். என் எழுத்து இந்த உலகில் 0.00000001% மாற்றத்தை ஏற்படுத்தினாலும் போதும், என் பேராசை ஒன்றே ஒன்று தான், நான் இந்த பூமியை விட்டு செல்லும்  பொழுது என் வருகையை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டாம், என் வருகை ஒரு சாதாரண மனிதனை போல் மறக்கப்பட கூடாது.

நீ முடியாது முடியாதுன்னு இப்படியே உட்காந்துகிட்டு இரு. நான் உருண்டாவது நகர முயற்சிப்பேன், நகர விரும்பும் நண்பர்கள் என்னுடன் பயணிப்பார்கள். என் எழுத்து சரியோ தவறோ, உண்மையோ பொய்யோ, ஆனால் எதையுமே செய்யாமல் இருப்பதற்கு அதையாவது செய்வது தான் என் பிறப்புக்கு நான் செய்யும் மரியாதை.

எங்கே செல்கிறது உலகம்?????

ஈகோவை தமிழ்படுத்தினால் நான் என்ற அகங்காரம் என்று புரிந்துக்கொள்ளப்படும். ஆனால் பல மருத்துவர்கள் அதன் உண்மையான அர்த்ததை புரிந்துகொள்ளவில்லை. உலகில் எல்லா மனிதர்களுகும் ஈகோ உண்டு. நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன் என்பதாக காட்ட அந்த உள்ளுணர்வு தூண்டிக்கொண்டே இருக்கும். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் எனக்கு அவனை தெரியும், இவனை தெரியும் என பேசுவதை கவனித்ததுண்டா. அதுகூட நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன் என காட்டுவது தான். நான் எந்த பழக்கமும் இல்லாத ஒழுக்கவாதியா காட்டிக்கொள்வதும் ஈகோ தான்.

மருத்துவர்கள் புரிந்துகொள்ளவில்லை என சொன்னது. ஈகோ என்றாலே கோவமாக புரிந்துக்கொள்வது தான். ஆனால் ஈகோ அப்படியில்லை. அதீத அன்பில், அதீத காதலும் கூட நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன்/ள் என காட்டிக்கொள்ள முடியும். பெரும்பாலும் ஆண்கள் உடலாலும், பணத்தாலும், போட்டியிலும் தன் ஈகோவை காட்டுவதையே விரும்பினார்கள். ஒரு சில ஆண்கள் மட்டுமே அன்பில் தங்கள் ஈகோவை காட்டினார்கள், ஆனால் பெண்கள் ஆரம்பத்தில் இருந்தே தங்களை அழகு படுத்தி கொள்வதிலும்,அன்பிலும், காதலிலும் மட்டுமே தங்கள் ஈகோவை காட்டினார்கள். வேற வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனலாம். ஆண் எங்கேயோ, யாரிம் ஈகோவின் முன் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தன் ஈகோவையை பெண்ணிடம் காட்டினாலும் அவள் மாறாக காதலையே காட்டுவாள்

நாகரிகம் வளர வளர பொருள்முதல்வாத சிந்தனையில் இருந்து மனிதன் கருத்துமுதல்வாத சிந்தனைக்கு மாறினான். மனிதர்களில் ஏற்றதாழ்வு இல்லை என்றான். வர்க்கபேதத்தை சாடினான். அன்பே பிரதானம் என வாழ நினைத்தவர்கள் கருத்தியல் சிந்தனையை ஏற்று கலை, இலக்கியம், அறிவியல் என தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நம்மால் சமூகத்துக்கு எதாவது செய்ய முடியுமா என யோசித்தார்கள். தங்கள் ஈகோவை விட மறுத்த கூட்டம், சாதி, மதம், வர்க்கம் என ஏற்றதாழ்வுகளில் வன்முறையை செலுத்தி தங்கள் ஈகோக்கு தீனி போட்டது

தனக்கு சமமாக அமர்வதா என்று இம்மானுசேகரன் என்பவர் கொல்லப்பட்ட கதை உங்களுக்கு தெரியுமா? சாதியம் என்னும் ஈகோ. உன் மதம் என்ன அவ்ளோ பெருசா என நாடு முழுவதுமே சண்டை நடந்துக்கொண்டு இருக்கிறது. அதே வக்கிர ஈகோ தான் பெண்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆப்ஃப்ட்ரால் ஒரு பொம்பள எனக்கு ஐடியா கொடுக்கிறியா என்பதில் ஆரம்பித்து தன் அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்துதல் வரைக்கும் தன் ஈகோவை காட்டும் முயற்சி தான்.

நான் எழுதும் பொழுது சகமனிதனை மனிதனாக மதியுங்கள் என்று எழுதுவேன். பெண்ணை மதின்னு எழுத மாட்டேன், அனைவர்களை மனிதர்களாக பார்க்க என்னால் முடிகிறது. இங்கே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமே நாம் குழந்தைகளில் இருந்தே துவங்குகிறது. அவர்களுக்கு ஏற்றதாழ்வுகளை ஊட்டி விடுகிறோம். வர்ஷாவுக்கு 7.30க்கு கிளாஸ் முடியும், பெண் குழந்தைகளை பெற்றோர் வந்து கூட்டி செல்லனும், எல்லா குழந்தைகளையும் பெற்றோர் வந்து கூட்டி செல்லனும் என்பதே சரி, இந்த குழந்தை பருவத்திலே ஆணை உயர்த்தி விட்டால் அவன் பெண்ணை வீக்கர் செக்ஸா தானே பார்ப்பான்

பெண் குழந்தைகள் வெளியும் செல்லும் பொழுது உடை நேர்த்தியை கவனிக்கும் என்பதை பெற்றோர்கள் அதே கருத்தியலை ஆண் குழந்தைகளுக்கும் காட்டுகிறீர்கள். என் குழந்தைகளின் பள்ளி சான்றிதழில் சாதி,மதம் என்ற இடத்தில் கோடுகள் தான் இருக்கும். இதனால் எதிர்காலத்தில் இடஒதுக்கிடு பெறுவதில் சிக்கல் வரும் என என் நண்பர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் சாதி,மத படிநிலைகளில் அவர்களை அமர வைக்க நான் விரும்பவில்லை. எனக்கு எல்லா சாதியிலும் நண்பர்கள் உண்டு என்பவன், எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் உண்டு என்பவன் உண்மையில் சமநிலையை உணரவில்லை, நண்பன் என்றால் நண்பன் மட்டுமே.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு அமைக்க தீர்மானிக்கிறீர்கள் என சிந்தித்ததுண்டா? நிம்மதியான வாழ்வா அல்லது வசதியான சொகுசான வாழ்வா? உண்மையில் சொகுசான வாழ்வுக்கு தான் அவர்களை பணம் சம்பாரிக்கும் இயந்திரமாக மாற்றிக்கொண்டியிருக்கிறீர்கள். அந்த போட்டியில் வர்க்கபேதத்தில் சிக்கி வசதி படைத்தவன் தன் ஈகோவை காட்ட வசதி இல்லாதவன் தன் ஈகோ தன்னை விட இயலாதவனிடம் போய் காட்டுவான். உண்மையில் இங்கே நடக்கும் எல்லா செயல்களும் பட்டாம்பூச்சியின் இறக்கை விளைவு தான். ”எல்லா தேவைகளுக்கு பின்னால் ஒரு காரணமும், எல்லா விளைவுக்கு பின்னால் ஒரு செயலும் இருக்கும்”

சாதிய படுகொலைகள், மதபடுகொலைகள், கூட்டுபாலியல் வன்முறைகள் அனைத்துக்கு பின்னும் பொருள்முதல்வாத கருத்தியல் சிந்தனையே உள்ளது. இது என் இடம், இது என் சொந்து, நீ என் அடிமை என்பதின் வெளிப்பாடே இத்தனை வன்முறைகளுக்கும் காரணம். நான் பிரச்சனைகளுக்கு தற்காலிய தீர்வை தேட மாட்டேன். பிரச்சனையின் அடி ஆழம் வரை யோசிப்பேன். இந்த மனிதன் வாழ ஒரே வழி பொதுயுடமை என்ற கருத்துமுதல்வாத சிந்தனை மட்டுமே

முதல் ரேங்க் எடுன்னு என படிக்க சொல்லாதீர்கள், இதில் எதுவோ இருக்கு அது என்னான்னு தெரிச்சுக்கோன்னு சொல்லுங்க.கற்பதை ஊக்கப்படுத்துங்கள் எந்த புத்தகமாக இருந்தாலும், ஒரு பூவை ரசிக்க கற்றுக்கொடுங்கள், ஓவியம் வரைய கற்றுக்கொடுங்கள், நடனம் ஆட கற்று கொடுங்கள், இயற்கையும் நாமும் வேறு வேறு அல்ல என கற்றுக்கொடுங்கள். இல்லாதவருகும், இயலாதவருக்கும் நாம் செய்வது உதவி அல்ல, அது மனிதத்தின் கடமை என கற்றுக்கொடுங்கள். நம் ஈகோவை நம்மால் ஒழிக்க முடியாது., ஆனால் நான் உன்னை விட அன்பானவன் என்பதில் கூட நம் ஈகோவை வெளிப்படுத்தலாம்

கிட்டதட்ட இரண்டரை லட்சம் வருடங்களாக இந்த பூமியை ஆட்சி செய்து கொண்டிருப்பது ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் என்ற மனிதர்களாகிய நாம். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் அடுத்த பத்தாயிரம் வருடத்தில் மொத்த மனித இனமே அழித்து விடும் என்பதாகவே என் உள்ளுணர்வு உள்ளது. மனிதர்களின் போட்டி அரசியலில், வர்க்க பேதத்தில் தன் ஆழ்மன தூண்டுதலால் இந்த பூமியையும் அழிக்க போகிறோம். நம் சந்ததிக்கு கரிதுகள் மட்டுமே மிஞ்சம்.

மாறுங்கள். காதலாலும், அன்பாலும் உங்கள் ஈகோவை காட்டுங்கள்
மனிதம் வளர்ப்போம்


ரஃபேல் - நடந்தது என்ன?

The Hindu N.Ram அவர்களின் பேட்டி #BBC நடத்திய நேர்காணல்
மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் காணாமல் போனதாக சொன்ன ரஃபேல் ஆவணங்களை வெளியிட்டவர் N.ராம் தான் .
#கேள்வி: இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது?
#பதில்: இந்த விவகாரம் தொடர்பாக தி ஹிந்துவில் இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இது தொடர்பாக சில ஆவணங்களை விளக்கியிருக்கிறோம். இதில் நாங்கள் கண்டுபிடித்தவற்றை சொல்கிறேன்.
முதலாவதாக ரஃபேல் விமானங்களின் விலை. இந்த விமானங்களை வாங்குவதற்கான ஆயத்தப் பணிகள் 2007லேயே துவங்கிவிட்டன.
2012ல் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. 2016ல் திடீரென எல்லாவற்றையும் மாற்றி, 126 விமானங்களுக்குப் பதிலாக 36 வாங்கலாம் என முடிவுசெய்தார்கள்.
தவிர, #உள்நாட்டு உற்பத்தியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் மேற்கொள்ளும் என்பதும் ரத்துசெய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஒரு விமானத்தின் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. அது ஏன் என்று பார்க்கலாம். அந்த விமானத்தில் இந்தியாவுக்குத் தேவையான 13 சிறப்பம்சங்களைச் செய்ய வேண்டும்.
இதற்காக அந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக 1.4 பில்லியன் யூரோ தேவை என்றார்கள். பிறகு அது 1.3 பில்லியனாக குறைக்கப்பட்டது.
ஆனால், இந்த 1.3 பில்லியன் யூரோ என்பது ஒரு நிலையான செலவு. ஒரு விமானம் வாங்கினாலும் சரி, 100 விமானம் வாங்கினாலும் சரி - 1.3 பில்லியன் யூரோவைக் கொடுத்தாக வேண்டும்.
ஆனால், 126 வாங்குவதற்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்கியதால், ஒரு விமானத்தின் விலை மிகவும் ஏறிவிட்டது.
2007ல் பேசப்பட்ட விலையைவிட இது 41 சதவீதம் அதிகம். 2011ல் பேசப்பட்ட விலையை விட 14 சதவீதம் அதிகம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலரும் கேள்வியெழுப்பியபோதும் #அரசு இது குறித்து #பேச_மறுத்துவிட்டது.
ராணுவத்திற்கு ஆயுதங்கள், பிற பொருட்களை வாங்குவதற்கென விரிவான விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு விற்பனை தொடர்பான பேரத்தைத் துவங்குவதற்கு முன்பாக, #நிபுணர் குழு அமைத்து நிறுவனங்களோடும் அரசுகளோடும் இவர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்படி தஸால் நிறுவனத்தோடு நடத்தும் போது அதற்கு இணையாக #அரசுத் தரப்பும் #பேச்சுவார்த்தை நடத்தியது என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கோப்புகளில் குறிக்கப்பட்டிருக்கிறது.
கீழ் மட்டத்திலிருந்து துவங்கி, பாதுகாப்பு செயலர் வரை இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி இணையான பேச்சுவார்த்தை நடத்தினால் ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனம் இதனைப் பயன்படுத்திக்கொள்ளும்; அது இந்திய தரப்பின் வலிமையை குறைத்து #இந்தியநலன்களுக்கு_எதிராகஇருக்குமென்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தக் கோப்பு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் #மனோகர் பாரிக்கருக்குச் செல்கிறது. வழக்கமாக இம்மாதிரி கோப்புகளை அவர் உடனடியாக பார்த்து அனுப்பிவிடுவார்.
ஆனால், இந்த விவகாரத்தில் பல வாரங்களாக அதை என்ன செய்வதெனத் தெரியாமல் வைத்திருந்தார் போலிருக்கிறது.
பிறகு ஒரு குறிப்பை அதில் எழுதுகிறார் பாரிக்கர்: '"இது ஓவர் ரியாக்ஷன், பிரதமரின் முதன்மைச் செயலருடன் பேசி இதைத் தீர்த்துக்கொள்ளவும்'."
இந்த விவகாரத்தில் அவருக்கு அப்போது ஏதும் நிலைப்பாடு இல்லை என்று அந்தக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது.
2016 செப்டம்பரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்கள் முன்பாக, மேலும் சில விஷயங்கள் நடக்கின்றன.
அந்தத் தருணத்தில், தளவாடங்கள் வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய எட்டு விதிகள் விட்டுக்கொடுக்கப்படுகின்றன.
அவற்றில்
1) #ஊழலுக்கு எதிரான விதியும் விட்டுக் கொடுக்கப்படுகிறது. Penalty for undue influence என்பது நீக்கப்படுகிறது.
2)#கமிஷன் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்தால், தண்டனை என்ற பிரிவு நீக்கப்படுகிறது.
3)#இந்த நிறுவனங்கள், நிதி ரீதியாக ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள அவற்றின் கணக்கு வழக்குகளை இந்தியாவுக்கு அளிக்க வேண்டும் என்ற விதியும் விட்டுக்கொடுக்கப்படுகிறது.
இவையெல்லாம் பிரமதர் அலுவலக தலையீட்டில் கடைசி நேரத்தில் நடக்கிறது.
ஊழலுக்கு எதிரான விதிகள், வழக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எல்லாம் இப்படி கைவிடப்பட்டது #மர்மமாகத்தான் படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த #நிதி_நிபுணரான_சுதான்ஷு_மொஹந்தி எழுதிய குறிப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.
அதாவது #பாதுகாப்பு_அமைச்சர் திடீரென விதிகளை மாற்றி மொஹந்தியின் கருத்தைக் கேட்கிறார். அதை முழுமையாக படித்துப் பார்க்கக்கூட நேரம் அளிக்கப்படவில்லை.
இதனால் மொஹந்தி வேகவேகமாகப் பார்த்துவிட்டு, மூன்று குறிப்புகளை எழுதியிருக்கிறார். அதில் முக்கியமானது என்னவென்றால், #தஸால் நிதி நிலைமை குறித்து சந்தேகம் இருப்பதால், escrow account ஒன்றை உருவாக்கலாம்.
அதாவது
1)ஃபிரான்ஸ் அரசு ஒரு வங்கிக் கணக்கைத் துவக்க வேண்டும். 2)இந்தியா தஸாலுக்குத் தர வேண்டிய பணத்தை அந்தக் கணக்கில் செலுத்தும்.
3)தஸால், விமானங்களை ஒழுங்காக சப்ளை செய்தால், பணம் படிப்படியாக இந்திய ஒப்புதலுடன் தஸாலுக்குச் செல்லும்.
ஆனால், #மொஹந்தியின் #கோரிக்கை ஏற்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்,
#விலை அதிகம்,
#ஒப்பந்தத்தின் ஷரத்துகள் முழுமையாக மாறிவிட்டது, #ராணுவத்திற்குத் தேவையான 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானம்தான் கிடைக்கிறது என பாதகமான அம்சங்களே இந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன.
ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக #ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான விதி இல்லாமல் செய்யப்பட்டிருப்பதுதான் கவலையளிக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு #பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர் ஃபிரான்சிற்குச் செல்கிறார். அரசுத் தரப்பில் நடத்திய பேச்சு வார்த்தைகளின் முடிவில் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கிறார்.
இந்தப் பேச்சு வார்த்தைகளில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றதாகத் தெரியவில்லை.
இந்த அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தஸால் நிறுவனத்தின் #சிஇஓ எரிக் ட்ராப்பியர் "உள்நாட்டில் தயாரிக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கும் #HAL நிறுவனத்துடன் #95_சதவீதபேச்சுவார்த்தைகள் முடிந்தது "என்றார்.(அதாவது #HAL தான் உள்நாட்டு உற்பத்தி செய்ய வேண்டும் என்று உறுதி ஆன பிறகு தீடிரென அனில் அம்பானி க்கு இந்த வாய்ப்பு போகிறது)
பிரதமரின் அறிவிப்பில் HAL கைவிடப்படுகிறது. Make in India முழக்கம் கைவிடப்பட்டது. இது நிச்சயமாக தேசிய நலன்களைப் #பாதிக்கும் ஒரு #ஒப்பந்தம்தான்.
இப்போது ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை தெரியவில்லை. ஆனால், #அனில் அம்பானி #நிதி_நெருக்கடியில் இருக்கிறார் என்பது தெளிவு.
#கேள்வி. பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எழுதிய குறிப்பை முதல் நாள் வெளியிட்ட நீங்கள், அதற்குக் கீழே அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய குறிப்பை வெளியிடாதது ஏன்?
#ப. அன்றைக்கு எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களில் அவ்வளவுதான் இருந்தது. அடுத்த நாள் அந்த ஆணவத்தை அவர்களே வெளியிட்டார்கள். நாங்கள் crop செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியேதும் நாங்கள் செய்யவில்லை. ஒரு விஷயத்தை புலனாய்வு செய்யும்போது முதலிலேயே எல்லா ஆவணங்களும் கிடைத்துவிடாது. படிப்படியாகத்தான் கிடைக்கும். படிப்படியாகத்தான் வெளியிடவும் முடியும்.
இந்த விவகாரத்தில் மனோகர் பரிக்கருக்குத் தெரியாமல் பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றாலும் பிறகு, விதிகள் மாற்றம் போன்றவை அவருக்குத் தெரிந்தேதான் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் எழுதிய கோப்பு அவருக்கு 2015 டிசம்பரில் அனுப்பப்படுகிறது.
வழக்கமாக விரைவில் முடிவெடுக்கும் அவர், மிகத் தாமதமாக 2016 ஜனவரி மாதம் பட்டுக்கொள்ளாமல் பதில் எழுதுகிறார். ஆனால், மாதங்கள் செல்லச்செல்ல ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர் நேரடியாக இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார்.
#மனோகர் பாரிக்கர் இதில் தனக்கு #நேரடியாக தொடர்பில்லையென சொல்லலாம். ஆனால், வி.பி. சிங் போன்றவர்கள் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பார்கள்
#Sovereign guarantee அளிக்கப்படவில்லை. ஆனால் #Letter of comfort என்ற ஓர் ஆவணத்தை #ஃபிரான்ஸ் அளித்திருக்கிறது.
அதற்கு சட்ட ரீதியான எந்த அங்கீகாரமும் இல்லை. தஸால் நிறுவனம் வாக்குறுதி தவறினால், இந்த ஆவணம் எதற்கும் உதவாது.
#கேள்வி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, அரசு மாறினால் ஒப்பந்தம் ரத்துசெய்யப்படுமா?
#பதில் ரஃபேல் நல்ல விமானம்தான். ஆனால், #யுரோ_ஃபைட் என்று ஒரு நிறுவனமும் இதில் போட்டியில் இருந்தது
யுரோ ஃபைட். அவர்கள் #20_சதவீதம் #தள்ளுபடி அளிக்க முன்வந்தார்கள். அந்த விமானத்தின் விலை, ரஃபேலைவிட குறைவு என நிதி நிபுணர்கள் குறிப்பெழுதியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த விமானத்தை வாங்கவில்லை. இனி இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய முடியாது. ஆனால், விசாரணை நடத்த முடியும்
#கேள்வி : போஃபோர்ஸ் ஊழல் நீங்கள் தான் வெளியிட்டீர்கள் அது குறித்து கூறுங்கள்?
#பதில்: போஃபோர்ஸ் ஊழலை நாங்கள் வெளியிட்ட போது மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது அந்த காலக்கட்டத்தில்.. இத்தனைக்கும் நானும் ராஜீவ் காந்தியும் நண்பர்கள்தான் .அவ்வப்போது தொலைபேசியில் உரையாடுவோம் இலங்கை பிரச்சினை பற்றி எல்லாம் என்னிடம் கேட்பார் .போஃபோர்ஸ் பற்றி எதுவும் கேட்க மாட்டார் ஆனால் ஒரு சமயம் நேரில் சந்திக்கும் போது "அதில் ஊழல் நடந்தது என்றால் யார் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் ?"என்று கேட்டார் .நான் "மேலிடத்தின் சம்பந்தம் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை "என்றேன்
என்னை புன்னகையுடன் பார்த்து "எனக்கோ என் குடும்பத்திற்கோ இதில் எந்த சம்பந்தமும் கிடையாது "என்றார்
ஆனால் ஒன்று ராஜிவ் மிகவும் கண்ணியமிக்கவர் .அதை மறுக்க முடியாது.
#கே. இந்த விவகாரத்தில் இன்னும் என்ன அம்பலப்படுத்தப் போகிறீர்கள்?
#ப. இப்போது அதை சொல்ல முடியாது. ஆனால், ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. பல ஆவணங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
Thillakkarasi Sambath


!

Blog Widget by LinkWithin