பெண்!

இந்த பதிவு யாருக்காக!


அந்த பெண் ஏன் 11 மணிக்கு போச்சு.
ஏன் அரைகுறை ஆடையுடன் போச்சு.
ஏன் ஆண் நண்பனுடன் போச்சு.

என மடத்தனமாக பேசித்திரியும் பிற்போக்குவாதிகளுக்கு!
***

அறிவியல்:-

ஒரு பெண், பெண்குழந்தை பெறும் போதே அவளுக்கு பிரச்சனை வந்துவிடுகிறது, இத்தனைக்கும் வலுவாக எதிர்ப்பது அந்த பெண்ணின் மாமியார் எனும் பெண் தான், ஆண் குழந்தை பிறக்காத பொழுது அந்த மனைவியை ஒதுக்கிவைத்து விட்டு ஆணுக்கு வேறு திருமணம் செய்துவைக்கும் வழக்கமெல்லாம் இங்கே உண்டு, அவர்களை பொறுத்தவரை வாரிசு என்றால் ஆண்குழந்தை தான். பெண்குழந்தையை அவர்கள் சுமையாகவே நினைக்கிறார்கள்- ஆனால் உண்மை என்ன?

ஆண் குழந்தை என்றால் எக்ஸ்+ஒய் குரோம்சோம்கள், பெண் குழந்தை என்றால் எக்ஸ்+எக்ஸ் குரோம்சோம்கள் - நாம் கருவாகும் பொழுது முதல் ஏழுவாரங்களுக்கு எந்த பாலினம் என தீர்மானம் ஆகாமல் பெண் உடலில் தான் இருக்கிறோம், அதன்பின் தான் ஒய் குரோம்சோம்கள் வலுபெற்று ஆண் உறுப்பு உருவாகிறது, அதற்கான சாட்சி ஆண் பால் கொடுப்பதில்லை என்றாலும் ஆண் உடம்பில் இருக்கும் முலைகாம்புகள்.

பெண் உடலில் எக்ஸ் குரோம்சோம்கள் மட்டுமே இருக்கின்றன, என்ன குழந்தை பிறக்க வேண்டும் என தீர்மானிப்பது ஆணே, அவனிடமிருந்து செல்லும் குரோம்சோம் என்ன என்பதை அடிப்படையாக வைத்தே குழந்தை உருவாகிறது, ஆணிடம் ஏன் இரண்டு குரோம்சோம்களும் இருக்கின்றன? காரணம் முதல் பத்தியில் சொன்னது தான், ஆண் உருவாகும்பொழுதே பெண்ணாக தான் உருவாகின்றான். ஆணின் பழக்கவழக்கம்(நிகோடின் - ஆல்ஹகால்), உணவு முறை, உடலுறவு கொள்ளும் நேரத்தில் இருக்கும் உடல்நிலை அதைவிட முக்கியம் விந்தணுவில் எந்த குரோம்சோமை தூக்கி செல்லும் அணு அனைத்தையும் முந்திக்கொண்டு வெற்றி பெறுதல் - என்ன குழந்தை பிறந்தது என்பதற்கு முழுக்காரணம் ஆணே தவிர 1% கூட பெண் இல்லை!

உளவியல் :-

ஆதியிலிருந்தே பெண் குழந்தைகள் ஒதுக்கப்பட்டதற்கு முட்டாள்த்தனமான வரதட்சணை முறை தான் காரணம், சில ஆண்டுகளுக்கு முன்வரை தென்தமிழகத்தில் பெண் குழந்தைகள் கள்ளிப்பாலிட்டும், நெல்மணியிட்டும் கொல்லப்பட்டதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. தற்பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி காரணமாக அவை குறைந்துள்ளது, ஆம் குறைந்துள்ளது. வெளியே தெரியாமல் பல பிற்போக்கு மடசாம்பிராணிகள் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.



சிறுவயதிலிருந்தே ஆண் சகல உரிமைகளோடும், பெண் தன் வீட்டிலேயே அடிமையாகவும் தான் வளர்க்கப்படுகிறாள். முன்பெல்லாம் ஒரு பெண் பூப்படைந்து விட்டால் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, மாதவிடாய் காலங்களில் சமயலறை செல்லக்கூடாது, தனியாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் போன்ற மடத்தனங்களால் தன்னளவிலேயே தன்னை தகுதி இல்லாத உயிராக எண்ணத்தொடங்குகிறாள் பெண். இது மாபெரும் உளவியல் தாக்குதல்.

இன்று கல்வி கொடுக்கப்பட்டு, நல்ல வேலை கிடைத்து தானும் சக மனிதர்கள் தான் என இருக்கும் பெண் சமூகத்தை காலங்காலமாக அடக்கியே வாழ்ந்த ஆண் சமூகம் ஏற்க மறுக்கிறது, அதற்கு காரணமும் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட உளவியல் திணிப்பு தான், அது மதரீதியாக வேறுபடுமே தவிர மனித ரீதியாக பெண் அடிமையாக இருக்க வேண்டும் எனத்தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறாள்.



சமூகம்:-

கமல், பதினாறு வயதினிலே படத்தில் கோமணத்தோடும், ஆளவந்தான் படத்தில் பின்புறத்தை காட்டி கொண்டு அம்மணமாக வந்தால் அட, உலகநாயகன், உலகநாயகன் தாண்டா, இதுகெல்லாம் ஒரு தைரியம் வேணும் என்பார்கள், அதே சினிமாவில் ஒரு பெண் ஜட்டி, பிராவுடன் வந்துவிட்டால் போச்சு, போச்சு மொத்த கலாச்சாரமும் சீரழிச்சு போச்சுன்னு கதறுவார்கள் கலச்சார டவுசர்கள்!

முதல்ல கலாச்சாரம்னா என்னான்னு இவுங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியிருக்கு.
15 நூற்றாண்டு கலாச்சாரம், இருபதாம் நூற்றாண்டு கலாச்சாரம்னு காலத்திற்கேற்ப நாகரிக வளர்ச்சியில் மாறுவது தான் கலாச்சாரம். உதாரணத்திற்கு வெகு காலத்திற்கு முன் கேழ்வரகு கஞ்சி, களி, புட்டு என சாப்பிட்டோம். பின் அரிசி சோறு, இட்லி, தோசை. இன்று பீட்ஸா, பர்கர், சாட்ன்விட். என் கேள்வி என்னான்னான்னு எவனாவது உன்கிட்ட வந்து நீ இதை தான் தின்னாகும்னு உன் வாயில் திணித்தானா? அவனுக்கு பிடித்ததை அவன் செய்கிறான், அடுத்தவன் என்ன செய்யனும், எப்படி இருக்கனும்னு ஆர்டர் போட நீ யாருடா தக்காளி, உன்னால ஏத்துக்க முடியல, மாற முடியலன்னா அதுக்கு பேரு மரபுவழி, அது உன் தப்பே தவிர சமூகத்தின் குற்றம் அல்ல!

மரபுன்னு சொன்னதும் நியாபகம் வருது, இந்து யானமரபு இந்தியாவின் சொத்து, அதை தான் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தண்ணி கூட குடிக்காமல் எழுதி கொண்டிருக்கும் ஜெயமோகனை தயவுசெய்து பெண் உரிமை பற்றி எழுதச்சொல்லாதீர்கள்.
மலத்திற்கு நடுவில் மைசூர்பாக்கு வச்ச மாதிரி இருக்கு!

பிறர்மனை நோக்காதேன்னு சம்நிலையா எழுதிட்டு அதே வள்ளுவர் பொண்டாட்டி பேச்சை கேக்காதேன்னு எழுதி வச்சிருக்கார். பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும், பத்தினி சொன்னா மழை பெய்யும்னு பெண்ணுக்கு தான் ஒழுக்கம் சொல்லி தர்றானுங்களே தவிர ஆண்களாலே உருவாக்கப்பட்டது தான் இந்த சட்டத்திட்டங்களலெல்லாம் என ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். ரொம்ப நாளா எனக்கொரு ஆசை, இந்த கற்பு மேல் நம்பிக்கையுள்ளவர்களிடம் ஒரு கேள்வி கேட்கனும்னு, என்னைக்காவது உங்க மனைவியையோ, அம்மாமையோ மழை பேயச்சொல்லி பார்த்திருக்கிறீர்களா? இல்லைல அதுனால முன்னாடியும், பின்னாடியும் மூடிகிட்டு இனிமே கலாச்சாரம், பண்பாடு பேச வராதிங்க!
**

இஸ்லாம் பெண்ணியத்தில் புகழ்பெற்ற ஒரு வாசகம் உண்டு.

DON'T TEACH US WHAT TO WEAR
TEACH UR SON NOT TO RAPE.

ஆண் சமூகத்தில் நோயை வச்சிகிட்டு பெண்னை குறை சொல்லும் வரை இம்மாதிரியான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவே குறையாது. குற்றம் செய்பவர்களுக்கு மரணதண்டனையெல்லாம் கொடுக்க வேண்டாம், ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் அவர்களுக்கு ஆண் தன்மையை மட்டும் எடுத்து விடுங்கள் போதும், தான் ஆண் என்ற வெற்று அகம்பாவத்தில் திரியும் எவனும் இனி இன்னொரு பெண்னை வன்புணரும் நோக்கில் பார்க்க மாட்டான்!

********

பெண்களுக்கு:-
இரண்டு பெண்குழந்தைகளுக்கு தகப்பன் என்ற முறையிலும் என்னை சுற்றியே சில புரிதல் இல்லாதவர்கள் இருந்ததாலும் இதை எழுதிவிட்டேன். உண்மையில் உங்களுக்கோ, உங்களை போன்ற பெண்களுக்கோ எதாவது பிரச்சனை நேர்ந்தால் நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும், நமக்காக பேச எதாவது ஒரு ஆண் வருவான் என எதிர்பார்ப்பீர்களேயானால் நீங்களே இன்னும் உங்கள் அடிமைதளையை வெட்டிக்கொள்ள தயாராக இல்லை என்று அர்த்தம். உங்கள் உரிமையை கேட்டு கேட்டு அலுத்து விட்டீர்கள், இனி எடுத்து கொள்ளுங்கள் அப்போது தான் சமூகம் உங்களை பார்த்து பயப்படும்!





கமாக்கதைகள்(இடம் மாறியகால்) 5 (69)

என்னைக்கும் இல்லாம இன்னைக்கு புதுசா சரக்கு வாங்கிட்டு வர சொல்ற!

ஆமா வாங்கிட்டு வா, இந்தா ஐநூறு!
உனக்கு ஒயின் தானே!

 ஆமா!

 .........


மறுநாள் காலை!
போடா நாயே

எதுக்குடி திட்ற

என்னடா சொன்ன நீ!

என்ன சொன்னேன்.

தண்ணி போட்டா ஒருமண்ணேரம் நின்னு விளையாடுவேன்னு சொன்ன!

அப்படியா சொன்னேன்

நீ தாண்டா சொன்னெ!

ஸாரி. அது கொஞ்சமா அடிச்சா, ஆஃப் அடிச்சா மட்டையாயிருவேன்னு சொல்ல மறந்துட்டேன்!


(கதை சொன்ன சுந்தர் மன்னிப்பாராக)

இட்லிவடையும் குள்ளநரித்தனமும்!

CBSC பாடத்திடத்தில் மாமிச உணவு உண்பவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தட்டையான பார்வை கொண்ட சிலர் அது இருந்தால் நமகென்ன, நாம் அதை ஸ்கிப் பண்ணிட்டு போலாமே என்கிறார்கள்.. பார்பனீய தந்திரமோ இந்துமதத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கு என நம்மை மூளைச்சலவை செய்யப்பார்க்கிறது. இட்லிவடையின் இந்த பதிவில் வீரமணியின் கருத்தை இடைசொருக்கலாக போட்டு நடுநிலையில் நிறபதாக காட்டிகொள்ள நினைத்த இட்லிவடை. அவர்களது மஞ்சள் கமெண்டில் பார்பனீய தந்திரத்தை காட்டியிருக்கிறார்கள். மாற்று ஊடகமான இட்லிவடையின் நிறுவனர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அதன் தலைமை எடிட்டர்கள் பா.ரா. பத்ரி சேஷாத்ரி, என்றென்றும் வம்புடம் ஸாரி அன்புடம் பாலா போன்றவர்கள் தான். இதுமட்டுமல்ல அவர்கள் பதிவில் எப்போதுமே இந்துத்துவா நாற்றம் அல்லது வாடை அடித்து கொண்டே தான் இருக்கும்.

விசயத்திற்கு வருவோம்!

இன்று உலகபிரசித்த பெற்ற முகநூலில் முக்குலத்தோர், வன்னியர்கள், நாடார்கள் தம்மை ஆண்ட பரம்பரை என சொல்லிகொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஏத்திவிட்டு அழகு பார்ப்பது சந்தேகமில்லாமல் பார்பனர்கள் தாம். பிரித்தாளும் சூழ்ச்சியில் பெயர்பெற்று ஆதிமுதல் வீரம் என்றால் என்னவென்றே தெரியாமல் அரசனை முட்டாளாக வைத்திருந்து அவனுக்கு கூஜாவும் தூக்கி அண்டிபிழைத்த பார்பனர்கள் இன்று வேறு மாதிரியான பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்திருக்கிறார்கள். 

அவர்கள் உருவாக்கிய வர்ணாசிரம படிகட்டும், தொழில்ரீதியாக வைக்கிறோம் என்று சாதி என்னும் பெரும்பேயை ஏவிவிட்டும் இன்று அவர்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். சிந்திக்க வேண்டும் நண்பர்களே தீண்டாமை எனும் பெரும்பாவச்செயல் இந்தியாவில் உருவாக காரணமே அந்த பார்பனர்கள் தானே, இந்திய அளவில் அம்பேத்காரிலிருந்து தென்னிந்திய அளவில் பெரியார் வரை எதிர்த்து போராடிய தீண்டாமையை கடைபிடித்தது யார். நாமா அல்லது பார்பனீயர்களா? ஆனால் இன்று அவர்கள் விதைத்த நச்சு சிலரை உயர்சாதியாகவும் மற்றவர்களை தாழ்ந்த சாதியாகவும் எண்ண செய்த்து, நீ என் தெருவிற்குள் வரக்கூடாது, என் முன் செருப்பு போடக்கூடாது, தோளில் துண்டுபோடக்கூடாது என சகோதர்களிடையே பகையை மூட்டி விட்டிருக்கிறது.

நான்கு ஆடுகள் ஒன்றாக இருந்த மந்தையை வேட்டையாட முடியாத குள்ளநரி, அவைகளிடம் தனித்தனியாக வேட்டையாடினால் நிறைய புல் கிடைக்குமே என அவர்கள் ஒற்றுமையை கலைத்தது. முடிவு உங்களுக்கே தெரிந்திருக்கும். நாம் சாதியரீதியாக பிரிந்து கிடப்பது நம் சமூகத்தை உயர்த்துவதற்காக என்னும் நஞ்சை விதைத்து நாமே அடித்து சாகும்படி செய்து வைத்திருக்கிறது இந்த பார்பனீய தந்திரம். சாதி என்ன பொருளாதாரமா அது வளர்ச்சியடையவோ? தாழ்த்தியடையவோ? .
அதுனால் நமக்கு பயன் கிடைத்திருக்கிறது, சற்றும் சிந்திக்காமல் ஆட்டைபோல் வாழ நினைப்பது பார்பன குள்ளநரிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகுமே!

மாமிசம் உண்பதால் மனிதன் மிருகமாவான் என்ற பார்பனீய தந்திரத்தின் மூலம் மீண்டுமொருமுறை உலகின் 90% மக்களை குற்றபரம்பரை ஆக்கும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது பார்பனீயம்.

பிள்ளைகறி கேட்ட சிவன் என்ன மதம், இரணியனின் குடலை உருவிய நரசிம்மன் என்ன மதம், அர்ஜுனனிடம் கொலை செய்வது உன் கடமை என சொன்ன கிருஷ்னன் என்ன மதம், முனிவரின் வடிவில் போய் அவரது மனைவியை கெடுத்த இந்திரன் என்ன மதம். இவையெல்லாம் கற்பனையாக அவர்களே(பார்பனர்களே) கட்டிவிட்ட கதையாகினும் அதற்கு ஒரு நியாய விளக்கம் சொல்லி சப்பை கட்டு கட்டுவார்கள், அதே நேரம் உண்மையில் வாழ்ந்த அசோகனிடம் ஒரு புத்தபிச்சு அரசனின் கடமை மக்களை வாழவைப்பதே, போர் என்ற பெயரில் கொன்று குவிப்பது அல்ல என்றுரைத்த போதனையினால் மனிதனாக மாறி மக்களுக்காக வாழவில்லையா? , அவர் அன்று சாலை ஓரத்தில் நடத்தொடங்கிய மரம் இன்று வரை தொடரவில்லையா?




எந்த விலங்கும் தனது உணவை வளர்ந்து அதற்கு பாதுகாப்பளித்து, உணவிட்டு அதன் முதிர்சி காலத்தில் உண்பதில்லை, அவ்வளவு ஏன் எந்த பார்பனனுமே தனக்கான உணவை தாமே உருவாக்குவதில்லை(ஒரு சிலர் இருக்கலாம், அவர்கள் பார்பனியத்தை துறந்திருப்பார்கள்). மனிதன் மட்டுமே அவைகளை வளர்த்து பின்  உண்கிறான். அவைகளின் எண்ணிக்கை குறையாமல் பூமியில் பாதுகாத்தும் கொண்டிருக்கிறான். தாவரங்களுக்கும் உயிருண்டு அதிலும் தாவரங்களில் மாமிசம் உண்ணும் தாவரமும் உண்டு என நிரூபிக்கபட்ட பின்னும் நம்மை ஏமாற்றிபிழைக்க நினைக்கும் பார்பனீய தந்திரத்தை என்னவென்று சொல்வது!

பரிணாமத்தில் கோரைபற்களை இழந்த மனிதன் அப்பட்டமான மாமிசபட்சினியே, தாவர உணவிற்கும் மாறியதால் அவனுக்கு பச்சை மாமிசத்தை சொறிக்கும் தன்மை குறைந்து விட்டதே தவிர நாம் பார்பனர்கள் சொல்வது போல் தாவரபட்சிணிகள் அல்ல. டிஸ்கவரி சேனலில் மேன் vs வைல்டு நிகழ்சியில் பியேர் கிரில் பச்சையாக மாமிசம் சாப்பிடுவதை அவர்களும் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள், சாப்பிட்டதால் அவர் செத்தா போய்விட்டார் அல்லது தெருக்களில் செல்லும் பெண்களை கையை பிடித்து இழுத்தாரா? எங்கேயும் திருடினாரா? அல்லது பார்பனர்களை போல் எவன் பொழப்பிலும் மண் அள்ளி போட்டாரா?




அன்று இதே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களை தான் குற்றபரம்பரை என அறிவித்து வெள்ளையன் அரசு அவர்கள் தினம் காவல்நிலையம் வந்து செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டது, எங்கு குற்றம் நடந்தாலும் அவர்களை எந்தவித ஆதாரமுமின்றி கைது செய்தது. அதற்காக அன்று போராடினோம் இன்று ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றபரம்பரை ஆக்கும் பார்பனீயதந்திரம் தொடங்கியிருக்கிறது, பார்பனசூழ்ச்சியை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் தனது சாதி, மத பேதங்களை மறந்து பார்பனர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். அன்று பிரித்து சூழ்ச்சி செய்த அதே பார்பனன் இன்று புத்தி மழுங்கி நம்மை ஒற்றுமையடைய செய்யும் வழியை அவனுக்கு தெரியாமலே உருவாக்கிவிட்டான். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்.

என்ன செய்ய போகிறீர்கள்

குற்றபரம்பரை என்ற பெயரில் தினம் காவல்நிலையம் செல்லப்போகிறீர்களா?

அல்லது

நமது சந்ததியினருக்கு சமதர்ம நீதியையும், மனிதநேயத்தையும் கற்றுதரபோகிறீர்களா?


ட்வீட்டர் கைதுகள்! தூண்டும் விவாதங்கள்!

இன்று மாலை 5 மணியளவில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற இருக்கும் கருத்தரங்கத்தில் சென்னை நண்பர்கள் தவறாது கலந்து கொண்டு உங்களது கருத்துகளையும் பதிவுசெய்ய வேண்டுகிறேன்!


என் கருத்து என் உரிமை!




*






ஒண்ணுமே புரியலே உலகத்திலே .....

சின்மயி பற்றி எல்லோரும் எழுதி .. நாம அதை வாசிச்சி .. ஒண்ணும் பண்ணாம எல்லோரும் தூங்கியாச்சி. தூக்கத்திலிருந்து எழுப்புறது மாதிரி அடுத்த ஒரு ‘குண்டு’ விழுந்திருக்கு பதிவர்கள் மேல்.

http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece 

பாவம் ... சீனிவாசன் அப்டின்னு ஒரு சின்ன பதிவர் .. ட்விட்டரில் வெறும் 16 followers மட்டுமே வச்சிருக்கிற இவரு மகாத்மா கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி ஒரு டிவிட் போட்டிருக்கார். கார்த்தி இதைப் பத்தி e-mail-ல் ஒரு பிராது கொடுத்திருக்கிறார். நம்ம சுறுசுறுப்பான CBCID காலங்காத்தால அஞ்சு மணிக்கு இந்த சீனிவாசனைக் கைது செஞ்சிட்டாங்க. சீனிவாசன் பத்திரமாக காவல் துறையின் ‘பாதுகாப்பில்’ இருக்கிறார்.

சீனிவாசன் வேறும் ஒன்றும் செய்யவில்லை... ஒரே ஒரு ட்விட் கொடுத்திருக்கிறார்: ”கார்த்திக் சிதம்பரம் ராபர்ட் வாத்ராவை விட நிறைய சொத்து சேர்த்துட்டார் என்று செய்திகள் வருகின்றன”.

சீனிவாசன் கெஜ்ரிவாலின் ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பில் ஆர்வமுள்ளவர். ’பத்திரிகைகளில் வந்த செய்தியை நான் டிவிட்டினேன். இதில் அவமதிப்பு எங்கே என்று தெரியவில்லை’ என்று சொல்லியுள்ளார்.

இச்செய்தியைப் பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

IT Act Section 66-A என்ற இந்தச் சட்டம் பேச்சு சுதந்திரத்திற்குக் கடுமையான தடைகளைத் தருகிறது. 

 நாம் எங்கே போகிறோம்?

பதிவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்??

பதிவுகளில் என்ன எழுதினாலும்  சிறைத் தண்டனை என்பது சின்மயி விஷயத்திலும், கார்த்திக் விஷயத்திலும் மேடையேறி விட்டன.

விழிப்போமா?

பிறந்தநாள் வாழ்த்துகள்!

 எங்கள் வீட்டில் நான் தான் முத்தவன்,எனக்கு பிறகு இரண்டு தம்பிகள். அதில் இரண்டாவது தம்பிக்காக தான் இந்த பதிவு.


வீட்டில் கடைசி என்று முடிவு செய்து விட்டதால்,செல்வ செழிப்போடு இருக்கட்டும் என்று செல்வம் என்று பெயர் வைத்தார்கள். எங்கள் குடும்ப பெயர் ராஜ், அதனால் அதுவும் கூடவே. ரொம்பவே செல்லம். அதனால் ஒன்பதாவது பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு குடுத்தார்கள். ஆனால் என்ன சாபமோ தெரியவில்லை.யாருமே எங்கள் வீட்டில் ஒன்பதாவது தாண்டவில்லை.

கவனித்தலை விட புரிதலே பெரிது என்று எங்கள் குடும்பத்தில் அனைவரும் புரிந்து வைத்திருந்தனர். அதனால் படிப்பு இல்லை என்பது எங்களுக்கு ஒரு குறைவாகவே தெரியவில்லை. வாழ்வதற்க்கு எதாவது செய்ய வேண்டும்.அதிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.





வருணாவுடன் செல்வம். மொபைலில் எடுத்தது!

அதை நிரூபிக்கும் வகையில் படித்தவர்களுக்கே சவால் விடும் வகையில் சிறந்த வெல்டராக இருக்கிறார் ஈரோட்டில். புத்தகங்களில் அவரது ஆர்வம் எனக்கே ஆச்சரியம் தரும். ஒஷோவின் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறார். தத்துவங்களை பற்றிய தர்க்கம் எனக்கும் அவருக்கும் விடிய விடிய நடக்கும்.

இதெல்லாம் இப்போ ஏழு வருடத்திற்க்கு முன் எழுதிய டைரியில் என் பெயரை போட்டு அவன் ஒரு கிறுக்கன் என்று எழுதியிருந்தார். சிறு வயதாக இருந்தாலும் எப்படி தான் இப்படி சரியாக புரிந்து கொள்ள முடிகிறதோ.

சகோதர்களாக இருந்தாலும் நாங்கள் பழகுவது நண்பர்கள் போல தான். கரும்பிலிருந்து காமம் வரை விவாதிக்காத விசயங்கள் இல்லை.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல்லுகேற்ப நான் எவ்வளவு பிரச்சனையில் இருந்தாலும் நம்பிக்கையும் அவ்வபோது உதவியும் செய்து வருபவர்.

அந்த தம்பிக்கு தான் இன்று(7-11-2012) பிறந்த நாள்.

இது நடிகர் கமலுக்காக எழுதியது என்று வந்தவர்களுக்கு ஸாரி.

பெட்ரோல் பங்க் - எச்சரிக்கை!

கச்சா எண்ணைய் பீப்பாய் விலை வீழ்ந்தாலும், டாலுருக்கு நிகரான ருபாயின் மதிப்பு உயர்ந்தாலும் குறையாமல் நம் வயித்தெரிச்சலை கொட்டி கொண்டிருப்பது பெட்ரோல் விலை.  சிலபேர்லாம் இருக்காங்க, பெட்ரோல் விலை ஏறுனா என்னாங்க நான் எப்பவும் நூறு ருபாய்க்கு தான் போடுவேன்னு. சிலர் விலையேற்றத்தினால் கடுப்பானாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அது காலத்தின் கட்டாயம் என்பார்கள், அது யாருன்னு சொல்லவே வேண்டியதில்லை, ஆளுங்கட்சியினர் தான் அவர்கள்!

பெட்ரோல் விலையை பற்றி பேசிட்டு பெட்ரோல் பங்க் எச்சரிக்கைனு தலைப்பு வச்சிருக்கேனேன்னு பாக்குறீங்களா? விலையேற்றம் நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது இந்த முதலாளித்துவ திருநாட்டில், ஆனால் பெட்ரோல் பங்கில் ஏமாறுவதையாவது தடுக்கலாமே எனத்தான் இந்த பதிவு!

நான் படித்து முடித்தவுடன்(ஆமா, அப்படியே மாஸ்டர் டிகிரி முடிச்சிட்டாரு) சென்ற வேலை பெட்ரோல் பங்க் தான், மூணு மாதம் பெட்ரோல் அடித்து கொண்டிருந்தேன், பிறகு பம்ப் கேஷியர், பிஸியான பங்குகளில் ரெண்டு, மூணு பம்ப் இருக்கும், ஒவ்வொன்றிற்கும் பேருந்து நடத்துனர் மாதிரி பை மாட்டி கொண்டு ஒரு கேஷியர் இருப்பார், அந்த பம்பில் ஆகும் வரவு செலவுக்கு அவர் தான் பொறுப்பு. உள்ளே சின்னதாக ஒரு மீட்டர் இருக்கும், ஒரு கேஷியரிடமிருந்து இன்னொருவர் மாறும் பொழுது அதை ரீடிங் எடுத்து அதை வரை ஓடிய ரீடிங்குக்கு அந்த கேஷியர் பணம் கட்ட வேண்டும்.

10-15 வருடங்களுக்கு முன்னர் அனலாக் மீட்டர் டைப் பம்புகள் தான் இருந்தன, அங்கே பெட்ரோலில் ஏமாற்றுவது கடினம், இரண்டு சக்கரவாகனங்களுக்கு  ஆயில் போடுவதில் ஐந்து, ஐந்து மில்லிகளாக தேத்தி அன்றைய செலவுக்கு பார்த்துக்கொள்வார்கள். எப்போதாவது சில அப்பாடக்கர்கள் காரில் இருந்த வாரே சாவி கொடுத்து, இவ்ளோ அடி, அவ்ளோ அடி என்பார்கள். ஏற்கனவே எதாவது பைக்குக்கு அடிச்சிகிட்டு இருந்தா அப்படியே பம்ப் ஆஃப் செய்யாமல் அப்படியே காருக்கு கண்டினியூ ஆகும். ரெண்டு லிட்டராவது கோவிந்தா. கார் வைத்திருக்கும் நண்பர்கள் அப்பாடக்காராக இல்லையென்றால் ஒழுங்காக இறங்கிப்போய் பெட்ரோல் போடுவது நல்லது. ஆனால் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டரில் இன்னும் கவனம் தேவை!

ரேட்டை பிக்ஸ் செய்து அடிக்க சுலபமான ஒன்றாகத்தான் அது வந்தது, ஆனால் அதில் கூட இப்படி ஏமாற்ற முடியும் என கண்டுபிடிக்க தமிழனால் மட்டுமே முடியும் போல, டிஜிட்டல் பம்பில் இரண்டு மீட்டர் இருக்கும், ஒன்று ரேட்டை ஃபிக்ஸ் செய்வதற்கு அது மேலே இருக்கும், மற்றொன்று எவ்வளவு  அடித்திருக்கிறார்கள் என நாம் அறிவதற்கு, நல்லாத்தானே இருக்கு அதிலென்ன சிக்கல் என்று கேக்குறிங்களா?



பெட்ரோல் அடித்து கொண்டிருக்கும் பொழுதே உங்களிடம் ஒருவர் பேச்சு கொடுப்பார், அடுத்த விநாடி பெட்ரோல் அடித்து முடித்து நாஸில் வெளியே எடுக்கப்படும், மீட்டரை பார்த்தால் நீங்கள் எவ்வளவு கேட்டீர்களோ அவ்வளவு காட்டும், ஆரம்பித்தில் நான் கூட சரியாகத்தான் அடித்திருப்பார்கள் என நினைத்து கொண்டிருந்தேன், இன்னொரு பங்கில் கவனிக்கும் பொழுது தான் எவ்வளவு அடித்திருக்கிறார்கள் என கீழே உள்ள மீட்டரிலும் தெரிய வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.

நம்மிடம் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் பொழுதே, மற்றொரு நபர் பம்பை ஆஃப் செய்து விடுவார், மீண்டும் ஆன் செய்தால் அதாவது அந்த நாசிலை வைத்து எடுத்தால் பம்ப் ஆன்  - ஆஃப் ஆகிவிடும், அந்த இடத்தில் கையை அழுத்தி வைத்து எடுத்தால் பம்ப் ஆஃப்-ஆன் ஆகிவிடும், அப்பொழுது நமக்கு அடித்தது போய், எவ்வளவு நாம் அடிக்கச்சொல்லி அவர்கள் செட் செய்தார்களோ அது தெரியும். ”டே சோனமுத்தா, போச்சான்னு” மனசுக்குள் நினைச்சிகிட்டு வரவேண்டியது தான்!

சரி, ஏமாறாமல் இருக்க என்ன செய்யலாம்.

1. பெண்கள் இருக்கும் பங்குகளை தேர்தெடுங்கள், அங்கே ஏமாற்றுவதில்லை.

2.பெட்ரோலோடு ஆயில் அடிக்கும் பம்ப் இருக்கும் பங்குகளில் கொஞ்சம் நேர்மையாக இருக்கிறார்கள், ஆயில் தனியாக ஊற்றினால், ”கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா” கதை தான், நீங்கள் ஒரே இடத்தில் இரண்டு முறை ஏமாற்றப்படுவீர்கள்.

3. யார் என்ன பேச்சு கொடுத்தாலும் மீட்டரை விட்டு கண்ணை எடுக்காதீர்கள், மறைத்தால் தள்ளுங்க என உரிமையோடு சொல்லுங்க.

4.விலையை முன்னரே தீர்மானிக்க பொத்தானை அழுத்தினால் வேண்டாம்னு சொல்லுங்க, அப்படியே அடிங்க, அதிகமாகிட்டா நான் காசு தர்றேன்னு சொல்லிடுங்க, இதில் எந்த கொம்பனாலும் ஏமாற்ற முடியாது.

5.எல்லா பங்குகளிலும் சேல்ஸ் ஆபிஸர் நம்பர் இருக்கும், நீங்கள் ஏமாற்றப்பட்டது போல் அறிந்தால் அந்த நம்பரை பார்த்து மொபைலில் டயல் செய்யுங்கள், அலறி அடிச்சிகிட்டு வருவானுங்க.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் டிப்ஸ்

எதுக்கு அவ்ளோ கஷ்டம், பைக்கை வித்துட்டு சைக்கிள் வாங்கிகோங்க, எவன் வந்து நம்மை ஏமாத்துறான்னு பார்த்துடுவோம்!

புதிய சபாநாயகர்!

வாமு.கோமுவிடம் நண்பராகி பேசிக் கொண்டிருந்த பொழுது ஒருநாள் சொன்னார், இப்பகுதியில் அருந்ததியர் சமூகம் அதிகம் என்று, அப்படின்னா என்னான்னே எனக்கு தெரியாதுங்க என்றேன். பார்பனீயத்தின்(கவனிக்க-பார்பனீயம், பார்ப்பான் அல்ல) அடையாளம் தவிர்த்த மற்றவர்கள் பெரும்பாலும் சக மனிதராக தான் தெரிகிறார்கள், அதில் ஏன் பெரும்பாலும்னு பின்னாடி சொல்றேன்!

 பழைய சபாநாயகர் எதன் காரணமாகவோ!? ராஜினாமா செய்து புது சபாநாயகர் பொறுப்பேற்று இருக்கிறார், அவரும் அருந்ததியினர் சமூகமாம், சட்டசபையில் அவுங்க பேசியபொழுது தான் எனக்கே தெரிந்தது. பேசியவர்களில் புதிய தமிழகம் கட்சியையும், மனிதநேய மக்கள் கட்சியையும்(இது இஸ்லாம் கட்சி) விட்டுருவோம், இரண்டிலும் பெரும்பாலும் தாழ்த்தபட்டவர்களும் அல்லது முழுமையாகவே தாழ்த்தப்பட்டவர்களும் தான் உள்ளனர்.

 தி.மு.க என்ற கட்சி என்றைக்காவது ஒரு தொகுதியில் ஆதிக்க சாதியில்லாத சமூகத்தில் இருந்த ஒருவரை வேட்பாளாராக நிறுத்தியுள்ளதா?. சரி அது பழம் தின்னு கொட்டை போட்ட கட்சி. வெற்றிபெறும் வேட்பாளரை தான் நிறுத்தனும்னு நினைக்கும். தே.மு.தி.க வேட்பாளரை தேடிய கதை நமக்கு தெரியாதா?. இதை விட கொடுமை தமிழகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது.

 கொஞ்சநாளைக்கு முன்னர் தான் நாட்டைகாலி பண்ணும் (காடுவெட்டி) குரு, மாற்று சாதியில் கல்யாணம் பண்ணா வெட்டுங்க என்று மேடை போட்டு கத்தினான், இப்போ கவுண்டர்கள் பின்புறம் அழுக்காகாமல் பாதுகாக்கும் இன்னொரு பரதேசி கலப்பு மணத்தை எதிர்ப்போம்னு நாமக்கல்லில் கூட்டம் போடுறானாம், இதற்கு கெளரவகொலை என்ற பெயர் வேறு, கொலைக்கு கொலை தண்டனையாகாதுன்னு நாம பேசிகிட்டு இருக்கோம், கெளரவகொலை செய்யும் இந்த மனநோயாளிகளை நாட்டில் வைத்து கொண்டு இங்கே சமதர்ம ஆட்சி எங்கிருந்து நடத்துவது!

 பார்வேர்ட் ப்ளாக், கவுண்டர்கள் கட்சி, சரத்குமார் நடத்தும் நாடார்கள் கட்சி, தாழ்த்தபட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் சபாநாயகரை வரவேற்குதாம், அட பரதேசி நாய்களா உங்க வீட்டு பெண்ணையோ, பையனையோ ஒரு தாழ்த்தபட்ட சமூகத்தினருக்கு மணம் முடித்து வைப்பீர்களா? காதலித்தாலும் கூட. நாடார் சமூகமெல்லாம் ஒருகாலத்தில் ரவிக்கை அணியாமல் செல்ல வேண்டும் என்ற சட்டம் உயர்சாதியினரால் போடப் பட்டிருந்ததாம், ஆனா இன்னைக்கே அவனே கொஞ்சம் உயர்ந்து விட்டதால் போடும் ஆட்டம் என்ன? திருநெல்வேலி தாழ்த்தபட்ட மக்களிடம் கேட்டுபாருங்கள் தெரியும். நண்டு கொழுத்தா வலை தங்காது என்ற பழமொழி இந்த மாதிரி தீடிர்னு ஒருபடி ஏறுனுவங்களுக்குத்தான் போல, ஒருகாலத்தில் நம்தோழில் அமர்ந்து நம் காதில் தாண்டா ஏறுஓட்டி கொண்டிருந்தார்கள் என்பது மறந்து தொலைக்கும் மானங்கெட்ட ஜென்மங்கள்!


இந்த பணிதல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

இந்த பார்வேர்ட்ப்ளாக். பார்பணீயத்தின் தற்கால வாரிசுன்னே சொல்லலாம், பரமக்குடி துப்பாக்கிக்சூடு நடந்த போது நாய்கள் செத்ததற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு என ஃபேஸ்புக்கில் சிரித்த தமிழ்நாட்டு ஹிட்லர்கள், ராஜபக்ஸேக்கள். அந்த கட்சியில் ஒருஆள் எந்திரிச்சு ஆத்துறான் பாரு, யம்ம்மம்மாம்மா முடியல. இவனுங்க மூணு பேருமே ஏன் எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்தானுங்கன்னு சத்தியமா எனக்கு தெரியல. அ.தி.மு.க காரன் போடும் ஜால்ராவை விட சத்தம் அதிகமாக இருந்தது. 


இறுதியாக சபாநாயகர் பேசினாரய்யா, அங்க தான் பெரிய காமெடியே. மத்த கட்சியினரை அழைக்கும் பொழுது பெயர் சொல்லி அழைத்தவர் இங்கே மாண்புமிகு அம்மா பேசுவார் என்றார்,( சபாநாயகருக்கு அம்மாவா, இல்ல நாலு குழந்தைங்க பெத்தவரா) இனி எங்கிருந்து சட்டசபை நடுநிலை பெறும், அதுமட்டுமா. தமிழகத்தின் விடிவெள்ளி, புரட்சித்தலைவரின் ஒரே வாரிசு(வாரிசுன்னா மக தானே, உறவே மாறுதேய்யா) அடுத்த பிரதமர் அதுவும் இந்திய தாழ்த்தபட்ட மக்கள் இவருக்கு லெட்டர் போட்டு எப்படியாவது அவரை பிரதமர் ஆக்கிருங்கன்னு கேட்டா மாதிரியே பேசினார்.

 தாழ்த்தபட்ட சமூகத்தினர் ஒருவர் நல்ல பதவியில் வருவது மிகவும் வரவேற்கதக்கது, ஆனால் உயர்சாதியாக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் இருந்த மாதிரியே இன்னொரு அடிமை சபாநாயகராக வருவது எந்த அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும், என் உயிர் அம்மா போட்ட பிச்சை, அவுங்க வந்து தான் நான் பார்த்துக்கிறேன்னு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொன்னாங்க என்று வெளிப்படையாக சொன்ன சபாநாயகர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்தவர் பெயரை ஏன் சொல்லவில்லை!?. பணம் யாரு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஏன் அந்த புரட்சிதலைவியே அறுவை சிகிச்சை செய்திருக்கலாமே!, அல்லது இவர் தான் நீங்களே பண்ணிருங்க, நீங்க தான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிங்களேன்னு சொல்லியிருக்களாமே!?

 ஒருமனதாக தேர்ந்தெடுத்ததின் காரணம் தனபால் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பது தான் என்று தெரிந்தும், அம்மா போட்ட பிச்சை என்றே கடைசி வரை சொன்னவர் எங்கிருந்து மக்களின் நலனுக்காக எதிர்கட்சிகள் பேசுவதை ஏற்கவோ, ஆதரிக்கவோ அல்லது பேச நேரம் ஒதுக்கவோ போகிறார்?. மக்களின் நலன் காக்கும் அம்மாவின் பொற்கால ஆட்சி என்ற புகழாரம் வேற. எது பொற்கால ஆட்சி? பேருந்து கட்டணத்தை உயர்த்தியதும், மின்சார கட்டணத்தை உயர்த்தியதுமா? அப்படினா சந்திரகுப்தமெளரியர் நடத்தியது கற்கால ஆட்சியா?

 வரலாறு இனி நாசமாய் போகட்டும்!

கடல் மனிதர்கள் வதந்தியா உண்மையா!?

19 தாம் நூற்றாண்டு 50 ஆம் வருடங்களில் ஓரளவுக்கு விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற உலகளாவிய கடல் ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை கண்டுபிடித்தது. அப்போதெல்லாம் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் மொழியை அறிந்து கொள்வதே முக்கிய வேலையாக இருந்தது. ஆனால் அதன் பின் தான் தான் கண்டுபிடிக்கப்பட்டது இதன் இரண்டை தவிர்த்து மற்றொரு ஓசை கடலில் இருந்து வருகிறது என்று!

வித்தியாசம் ஒரு பக்கம், என்னவாக இருக்குமென்ற ஆர்வம் ஒரு பக்கம். அக்காலக்கட்டத்தில் கடல்கன்னியர்கள் ரொம்ப பிரபலம் ஏனென்றால் எப்போது தான் புதிய இடம் கண்டுபிடிப்பு வெகுஜோராக நடந்து கொண்டிருந்தது, விபத்தாகும் கப்பல்கள் கடல்கன்னியரின் வலையில் சிக்கியவர்கள் என்ற நம்பிக்கை அப்போது வெகு பிரபலம்! சரி விஞ்ஞானத்திற்கு வருவோம். கடலில் மனிதனால் வாழ முடியாது. ஏன். மீன்கள் போல் தண்ணீரில் சுவாசிக்க செதிள்கள் இல்லை. திமிங்கலம் மற்றும் டால்பின்கள் பாலூட்டிகள் என்பது மட்டுமன்று அவைகள் நீருக்கு வெளியே வந்து காற்றை வாங்கித்தான் சுவாசிக்கின்றன என்பது தனிக்கதை.


பரிணாமத்தின் பாதையில் அம்மாதிரி கடல் நீரில் இருந்து கிடைக்கும் உணவை நம்பியே வாழும் பல உயிரினங்கள் பாலூட்டிகளாக இருந்தாலும், பறவைகளாக இருந்தாலும் பிற்காலத்தில் கடலுகுள்ளேயே வாழ்கையை கழிக்க நேரிடலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்! தவளை தண்ணீரில் வாழப்பிறந்து பின் வெளியே காற்றை சுவாசிக்க வளர்ந்து இருப்பது வாழும் பரிணாமத்தில் ஒரு அடையாளம். லங்க் பிஷ் எனப்படும் மீன் ஈரபதத்துடன் இருந்தால் போதும் மணிக்கணக்கில் உயிருடன் இருக்கும், அவையும் பரிணாமத்தின் அடையாளமே! அது ஒரு புறம் இருக்கட்டும். மீன் பிடிப்பவர்களின் பல வித்தியாச அனுபவங்களும் உண்டு, உதாரணம் அது ஏற்கனவே வேட்டை ஆடப்பட்ட மீன் ஆனால் அதில் உள்ள முட்கள் நாங்கள் யாரும் பயன்படுத்துவதில்லை என்று. இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் திமிங்கலங்கலும், டால்பீனும் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் வந்து இறப்பது. ஆம் அவைகள் நமக்கு எந்த காரணமும் வைக்காமல் அப்படித்தான் இறந்தன.

 ஆச்சர்யம், வியப்பு, பயம் மட்டுமே மனிதனுக்கு மிஞ்சியது அப்போது தான் NOAA என்ற அமைப்பு `அந்த வித்தியாசமான மொழியைப்பற்றி வெளியிட்டது. வித்தியாசமான சப்தத்தை கண்ட மனிதர்கள், இன்னொரு வித்தியாசத்தையும் கண்டார்கள். அவை ஒரு சுறாவை பிடித்த போது அது சாப்பிட்டதின் எச்சம். 2005 ஆம் வருடம் சுறாவால் கடிக்கப்பட்ட ஒரு உடல் கிடைத்தது. வலையில் சிக்கிய சுறாவில் தூண்டில் போல் ஒரு காயத்துடன். சக மனிதர்கள் பயன்படுத்தாத எழும்பினால் ஆன ஈட்டி போன்ற ஆயுதம். அதன் வயிற்றில் இருந்த உடலை ஆராய்ச்சி செய்ததில் அது பாலூட்டி தான், ஆனால் சீலுக்கோ, டால்பீனுக்கோ ஒத்துவரவில்லை, அதற்கு இடுப்பெழும்புகள் இருக்கின்றன, ஆம் மனிதனுக்கு இருப்பது போலவே, அதன் நெஞ்சலும்புகள் கூட மனிதனுக்கு ஒத்து போகிறதே தவிற மற்ற உயிரினத்திற்கு இல்லை! http://animal.discovery.com/tv/monster-week/mermaids/gallery.html படங்கள் நிறைய உள்ளன, வரிசையாக பார்க்க!


எகிப்தில் உள்ள ஒரு குகையில் கடல் மனிதர்கள் வேட்டையாடுவது போன்ற ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது, படைப்புவாத கொள்கை உடைய எந்த மதத்திலும் அப்படி ஒன்று குறிப்பிடபடவில்லை என்பதால் மறைக்கப்பட்டது, இப்படி பல உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கலாம், மனிதன் மதத்தை காட்க உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறானே! கடல்மனிதர்கள், கடலிலே பரிணமித்தவர்களா அல்லது கடல்பசு போன்ற விலங்கை தான் மக்கள் கடல் மனிதர்களாக பார்க்கிறார்களா என்ற கேள்வியும் அவ்வபோது வரும், சொல்லப்போனால் நேற்று அனிமல்ப்ளானட் பார்க்கும் வரை எனக்கே கடல் மனிதர்கள் மேல் நம்பிக்கை இல்லை, அவர்களின் கூற்று என்னவென்றால், ஒருவேளை மனிதன் நியாண்டர்தால் யுகத்தில் எரிமலைக்கு பயந்து கடல் அருகில் வாழ்ந்து கடைசில் அவன் கடல் மனிதனாகவே ஆகிவிட்டானோ என்ற சந்தேகமும் உண்டு. அதற்கான வாய்ப்புகளும் அதிகம், இன்று ஒரு குழந்தை நீருக்கடியில் இருப்பதை விட சராசரி மனிதன் மூச்சை கட்டும் நேரம் குறைவு என்பது தெரிந்தது.

முதலை, நீர்யானை போன்ற தரையில் வாழும் விலங்குகள் கூட நீரில் அதிக நேரம் சுவாசிக்காமல் வாழ முடிகிறது!, நீரில் இருந்து தொடங்கிய உயிரினம் நீருக்குள்ளயே பரிணமித்து கடல்மனிதர்கள் ஆனார்களோ என்ற சந்தேகமும் உண்டு!, அதற்கு சாத்தியம் குறைவு என்பதால் நாம் எப்படி அதிகபட்ச சாத்தியகூறுகளையே உண்மையாக நம்புகிறோமோ அதன் படி நியாண்டர்தால் மனிதர்கள் கடல்மனிதர்களாக வாய்ப்பிருப்பதாக நம்ப வேண்டியிருக்கிறது! கடலில் இருந்து தரைக்கு வந்த உயிரினம் மீண்டும் கடலுக்கு போய் வாழ்வது பெரிய கஷ்டமில்லை தான் ஆனால் நீர்வாழ் உயிரினங்களுக்கு செதில்களும், தரைவாழ் உயிரினங்களுக்கு நுரையீரலும் தான் பிரதானம், பரிணாமத்தின் அடையாளமாக டால்பீன்கள் அட அதைக்கூட விடுங்க, தலைப்பிரட்டையாக மீன் போல நீரில் வாழ்ந்து பின் தவளையாக தரையில் வாழும் தவளை மிகப்பெரிய அடையாளம் இல்லையா!

 மிக மிக நீண்ட காலம் கழித்து பதிவை எழுதுகிறேன், ரொம்ப முக்கிய காரணமே 2005 இல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆதாரங்கள் மதக்குழுவினரால் மறைக்கப்பட்டது என்பது தான், தொடர்சியோ, முதிர்ச்சியோ இல்லாமல் இருக்கலாம். படைப்புவாத கொள்கையினர் ஒரு கண்டுபிடிப்பை மறைக்க எடுக்கும் முயற்சி மனிதவள மேன்பாட்டில் இல்லையே என்ற வருத்தம். அதற்குண்டான லிங்கை தர்றேன். அல்லது பின்னூட்டத்தில் பதில்கள் தர்றேன். சத்தியமா புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு எழுதுறவன் மனநிலையில் இருக்கேன்! வருத்தமும், மன்னிப்புடன்!

 http://animal.discovery.com/tv-shows/other/videos/mermaids.htm

 http://en.wikipedia.org/wiki/Mermaids:_The_Body_Found

 மேலுள்ள லிங்கில் அனைத்து விபரங்களும் உள்ளன. கண்டுபிடித்த அமைப்பின் பெயர்

http://www.noaa.gov

 மேலும் விபரமறிய

https://www.google.co.in/search?q=mermaid+body+found&aq=f&sugexp=chrome,mod=5&sourceid=chrome&ie=UTF-8


very urgent

my father in law had heart attack since today morning. i need doctor bruno number try urgently. my mobile is switched off, please send me the number as mail.

my mail id is arunero@gmail.com

very urgent, please pass it to your friends.

அடுத்து மார்கெட் எங்கே?

படத்தை பெரிதாக பார்க்க அதை கிளிக்கவும்!




இதில் நிஃப்டி எங்கேயும் சப்போர்ட்டை ப்ரேக் பண்ணாமல் மேலேயே சென்று சொண்டிருப்பது தெரியும்.
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் யாராவது நிஃப்டி வாங்கி வைத்திருந்தால் குறைந்த பட்ச லாபம் 50*1000=50000

ஆம் ஆயிரம் பாயிண்டுகள் ஏறிய பிறகு இப்பொழுது



இந்த டேலைன் சார்டை வைத்து பார்க்கும் பொழுது 5322 என்பது நல்லதொரு தாங்குநிலை, ஒருவேளை அதை உடைத்தால் நிஃப்டி 5130/5050 வரை வரக்கூடும் அப்பொழுது மீண்டும் முதலீடு செய்வது நல்லது.

மாறாக,

ரைட் மார்க் இருக்கும் 5443 க்கு மேல் குளோஸானால் மார்கெட் அடுத்த ரெஸிஸ்ட் லெவலான 5618 க்கு வரும், அதையும் உடைத்தால் இவ்வருடத்தில் நிஃப்டி 8000 தொடும் என்பது மார்கெட் சொல்லும் செய்தி!

உங்கள் சந்தேகங்களை 9994500540 என்ற எண்ணில் என்னை அழைத்து தெளிவு படுத்திக்கொள்ளலாம்.
மார்கெட் முடிந்த பிறகு 3.30 திலிருந்து நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

நீங்கள் ஏற்கனவே ட்ரேடராக இருந்தால் உங்கள் போர்ட்ஃபோலியோவை எனக்கு அனுப்பி வையுங்கள்.
எதை வைத்திருக்கலாம், எதை கொடுத்து விடலாம் என்ற ஆலோசனை முதன்முறை இலவசமாக!

arunero@gmail.com

நானும், சாருவும் மிக நெருங்கிய விரோதிகள்!

நம்ம ப்ளீச்சிங் பவுடர் ரொம்ப நாள் கழிச்சு ஒரு போஸ்ட் போட்டுட்டார் அதுக்கு எனக்கு ஏகப்பட்ட மெயில்கள். இன்னும் நான் தான் ப்ளீச்சிங் பவுடர் என நினைத்து கொண்டிருக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்தே கலாய்க்கும் நண்பர்கள் பல!

அந்த போஸ்ட்

சாருவைப்பற்றி மாமல்லனும் சில நாட்களாகவே விமர்சனங்கள் வைத்து கொண்டிருக்கிறார்!

இது பற்றி பேச, அட பொழுது போகலயேன்னு நம்ம ஜ்யோவ்ராமை கூப்பிட்டு விசயத்தை சொன்னால் மனிதர் கொதிக்கும் எண்ணையில் போட்ட கடுகாக கொதிக்கிறார்!

விமர்சனங்கள் இரண்டு வகை.

ஒன்று படைப்பு

மன்றொன்று படைப்பாளி.

படைப்பை விமர்சிக்க எவர்க்கும் உரிமை உண்டு

படைப்பாளியை விமர்சிக்கும் பொழுது நாம் எதிரணிக்கு ஆதரவாளனாக பார்க்கப்படுவோம்.

இங்கேயும் அதே தான் நடக்கிறது!

சாரு என்ற நபர் முதலில் நான் காபிக்காக முக்கால் மணிநேரம் காத்து கொண்டிருந்தேன் என்று எழுதி பின் நான் இப்பொழுது நான் காபி குடிப்பதை நிறுத்தி மூன்று வருடமாகுது, இப்ப ஒன்லி மாட்டு மூத்திரம் தான் என்கிறார்!



ப்ளீச்சிங் பவுடர் பற்றி உண்மையில் எனக்கு உண்மையில் எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை!, ஆனால் நான் தான் ப்ளீச்சிங் பவுடர் என நம்பும் நண்பர்கள் பல, காரணம் இருவர் பெயரும் அருண்!

நான் ஜெயமோகனை பார்த்திருக்கிறேன், கோவை புத்தக கண்காட்சியில் நான் கேண்டின் எடுத்திருந்த பொழுது ஜெ.மோ பேசியதை கேட்டு சிரித்திருக்கிறேன்.

ஆம் ஜெ.மோ. அந்த அளவுக்குக்கு தான் வொர்த்.

ஒன்று ஜே.மோ தன்னை பற்றி பெரிதாக பீற்றி கொள்வதில்லை.
அவரது படைப்புகள் சிலவற்றை தவிர மற்றவைகள் இந்துத்துவா பற்றியே பேசுவதால் அதை நான் கண்டு கொள்வதில்லை!, அவைகள் விமர்சிக்கவே தகுதியில்லாதவை என்பதை போல, கிட்டதட்ட நீலப்படங்கள் போல, யாராவது ப்ளூபடம் பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறார்களா என்ன?

ஆனால் சாரு தானே பாலியல் பற்றி அதிகம் எழுதுவது என்ற கேள்வி உங்களுக்குள் இன்னேரம் வந்திருக்கும்!,சாரு, தம் படைப்பை விட தம்மை விகு சிறந்த மனிதராக காட்டிக்கொள்ள சொல்லும் பொய்க்கள் நம்மை விமர்சனம் பண்ண தூண்டுகிறது!

ஜெ.மோ. அதில் தான் தப்பித்து கொண்டிருக்கிறார், ஆனால் நான் விடுவதாக இல்லை, நிச்சயம் இந்துத்துவாவின் முகத்திரையை கிழிப்பேன்!, ஜெ.மோ அடுத்து எழுதும் இந்துத்துவா கட்டுரைக்கு நேரில் சென்று கிழிக்க ஆசை!



ஆனால் நம்ம சாரு தான் 59 வயசாகியும் 25 வயசு இளைஞர், அதனால் முதலில் அந்த சின்னப்ப்பையன் என்னிடம் மோதி வெற்றி வெறுகிறாரா என பார்கிறேன்!, எங்கே நாள் குறித்தாலும் சரி, சாருவுக்கு பதிலாக நான் மோதுவேன் என யாராவது பாக்ஸிங் கிங் அறிக்கை விடுத்தாலும் சரி முன்னாடியே சொல்லிடுங்க!

எக்ஸைல் நாவல் பற்றிய வாமு.கோமு எழுதிய விமர்சன கட்டுரை நாளை அல்லது நாளை மறுநாள் பதிவாகும், ஆங்காங்கே வாலின் குறுக்கீடும் இருக்கும்!

சாருவின் ரசிகர்கள் அவரது படைப்பை மட்டும் ரசித்தால் நான் மட்டுமல்ல வேறு எவர் விமர்சித்தாலும் தவறு தான்.. ஆனால் நித்தியானந்தாவை பாலோ பண்ணுன்னு அன்னைக்கு சொல்லிட்டு இன்னைக்கு மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன்னு சொல்றார். இதை கேட்டு கேட்டு எத்தனை பேர் மாட்டு பின்பிறத்தில் வாயை வைத்து காத்து கொண்டிருக்க போகிறார்கள் என தெரியவில்லை!

திரும்பவும் சொல்றேன் இது சாருவின் படைப்பை படித்து அதில் இன்புறும் வாசகர்களுக்கு அல்ல, சாருவை குப்பி அடிக்க காத்திருக்கும் இம்மாதிரியான நபர்களுக்கு தான் இந்த பதிவு

நித்தியானந்தா பதிவுகள் காணாது போனது போல் சாருவின் பல பதிவுகள் காணாமல் போகலாம், நிச்சயம் அது நடக்கும்.

நான் நிச்சயம் சொல்வேன், நான் சாருவின் படைப்பை விமர்சிக்க வரவில்லை, சாருவை கிழிக்கவே எழுதுகிறேன், நேரில் பார்த்தால் சாரு என்னிடம் அடி வாங்குவது உறுதி என ரமேஷ்வைத்யாவிடம் சொன்னது எனது பழைய பதிவில் இருக்கும் அதை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

இப்பொழுது நான் சென்னையில் தான் இருக்கிறேன், மே மாதம் வரை சென்னையில் இருந்தே ஆகவேண்டிய காட்டாய வேலைப்பணி, அதற்குள் சாரு அடி வாங்கினால் நண்பர்களுக்கு ட்ரீட் நம்ம செலவில், பத்து வட்டிக்கு கடன் வாங்கியாவது!

நான், ரமேஷ்வைத்யா, கோணங்கி!

நேற்று ரமேஷ் வைத்யா போன் பண்ணியிருந்தார்.
பேச்சு வாக்கில் சாருவை பற்றி விவாதம் போனது, அது பின் வரும்.
நான் கோணங்கிக்கு கான்ஃபெரன்ஸ் போட்டேன், அவரும் ரமேஷ் வைத்யாவும் முன்பே ஒருவரை ஒருவர் அறிந்தந்தவர்கள் என்பதால் பேச்சு சுவாரஸ்யமாயிற்று!




கோணங்கி கோவை வந்திருந்த பொழுது நான் அவருக்கு சூட்டர் போட்டு கொடுத்தேன், சூட்டர் போடும் முறை என்னவென்றால்.(எக்ஸைல் மாதிரி படம் போட்டு விளக்குவான் போலயே)

சிறிய எவர்சில்வர் டம்ளர் எடுத்துக்கொள்ளுங்கள்(டம்ளருக்கும், கிளாசுக்கும் வித்தியாசம் தெரியும் தானே)


85% அதில் மாஸா அல்லது வேறு எதாவது ஜூஸ் ஊற்றி கொள்ளுங்கள், மீதி 15% சரக்கை மெதுவாக ஸ்பூனில் ஊற்றி அதை நிரப்புங்கள், என்ன பிராண்ட் என்பது பிரச்சனை இல்லை.

பின் அந்த ஸ்பூனில் கடைசியாக கொஞ்சம் சரக்கை ஊற்றி அதை பற்ற வையுங்கள், அந்த நெருப்பை அப்படியே டம்ளருக்கு இறக்குங்கள், சிறிது நேரம் கழித்து நெருப்பை அணைத்து நம்ம மோனி அடிப்பது போல் அண்ணாக்க ஒரு கல்ப்பா சரக்கை குடியுங்கள், ராவான சரக்கு முதலில் தொண்டை எரியும், பின் வரும் பழச்சாறு இனிப்பால் அது இதமாகும்!, சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு இருக்கும்!


இதில் ரமேஷ்வைத்யா யாருன்னு கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு குவாட்டர் பரிசு! :)

அதை ரமேஷ்வைத்யாவுடன் கோணங்கி பகிர்ந்து கொண்டார்(விசயத்தை மட்டும்) ரமேஷ்வைத்யா உடனே, நம்ம வால்பையன் பதினேழாம் வாய்பாடு மாதிரி புரியாத புதிர் அண்ணே(கோணங்கியை அண்ணன் என்று அழைத்ததும், கோணங்கி திரும்ப ரமேஷ்வைத்யாவை தம்பி என்று அழைத்ததும் மிக மகிழ்ச்சியாக ரமேஷ்வைத்யா கொண்டாடினார்), எம்.ஜி.சுரேஸை ஒரு நாள் ரோட்டில் சந்தித்து உங்க புத்தகம் எல்லாம் படிச்சிருக்கேன் அதில் அலைக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், சிலந்தி, யூரேக்கா என்றொரு நகரம் எனக்கு மிகவும் பிடித்தது என சொல்ல சுரேஸுக்கு தலைகால் புரியவில்லை,(இன்னைக்கு நைட்டு அவரு தூங்க மாட்டார் என ரமேஷ்வைத்யா என்னிடம் சொன்னார்!)ஆனா வாலுக்கு சாருவை பிடிக்கவில்லை என்றார்!

நான் சாருவின் படைப்புகளை என்றும் விமர்சித்ததில்லை, அவரது நடத்தையே சரியில்லாத பொழுது படைப்புக்கு எங்கே போவது, மதுரை பொண்ணுடன் நடந்த பேஸ்புக் சாட் நான் செய்யவேயில்லை என தனது தளத்தில் எழுதிய சாரு

நான் சட்டையை கழட்டினேன்

அவள் சுடிதாரை அவிழ்த்தால்

நான் பனியனை கழட்டினேன்

அவள் பிராவை கழட்டினாள்

நான் ஜட்டியை கழட்டினேன்

அவளும் கழட்டினாள்

கடைசியில் நான் அவளை கற்பழித்துவிட்டேன் என்கிறாள் என தனது மனசாட்சி கொக்கரக்கோ சொல்வது போல் நியாயப்படுத்தி இருக்கிறார்.

நான் எக்ஸைல் விமர்சன கூட்டத்துக்கு போல வாலு அவ்ளோ வொர்த் இல்ல அந்த புத்தகம் என்றார் ரமேஷ்வைத்யா.

நான் போயிருந்தா செவுனிய காட்டி நாலு அப்பு விட்டிருப்ப்பேன் என்றேன் நான்!

மதுரைபொண்ணு அந்த சாட்டில் எங்கேயும் சாருவின் பேச்சை ஆதரித்தோ மேலும் வளர்க்க சொல்லியோ பேசவேயில்லை, கடைசி வரை இப்படி பேசாதீர்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்!

இந்த புத்தகத்தின் மூலம் கனிமொழிக்கு பிறகு நான் கிஸ் அடிக்க விரும்பும்(விரும்பும் மட்டும் தானா, இல்ல ஏற்கனவே கிஸ் அடிச்சிட்டாரான்னு தெரியலையே) உதடுகள் உன்னுடயது தான் என்ற சாட் வசனமும் உண்மையாகிறது, கனிமொழி பெயிலில் வருவார் என ஆருடம் சொன்ன சாரு, கனிமொழிக்கு எக்ஸைலையும், அந்த சாட் ஹிஸ்டரியும்  அனுப்பினால் நன்றாக இருக்கும்!

அச்சமயம் நான் எழுதிய பதிவு



கடைசியில் நேசமித்ரனின் வலசை பக்கம் பேச்சு நகர்ந்தது.

கவிதைகள் மொழிப்பெயர்ப்பாகவும்

கட்டுரை மற்றும் கதைகள் மொழிபெயர்ப்பாகவும் வந்திருப்பதாக சொன்னார்.

இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் நகைக்க! மற்றவர்கள் முழிக்க! :)

கோடீஸ்வரர் ஆக ரெடியா!?

ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்று!
அது பற்றியான விளக்கம் தான் இன்று!

ஏற்கனவே போட்ட பதிவின் லிங்க்

ஆகையால் உங்கள் முதலீடு 10000 இருந்தாலே பத்து வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்!
ஏற்கனவே சொன்ன லிங்க் போக ஒரு சின்ன கணக்கு!

10000 இரடிப்பாகனும்னா மாசம் இவ்ளோ வரனும்?

833.33 பைசா

834 ன்னு வச்சுச்குவோமே!

மாசம் 834 ன்னுன்னா வாரம் எவ்ளோ வரனும்?

208.50 இது வார டார்கெட்!

வாரத்தில் ஐந்து நாள் ட்ரேடிங் நடக்கும், அப்படினா தினம் என்ன தேவை?

41.7, அதாவது 42 ரூபாய் லாபம் வந்தால் உங்கள் பணம் 10 வருடத்தில் ஒரு கோடி!

இதை உங்களால் பண்ண முடியாதா?

அதுக்கு தான் நான் இருக்கேனே!

அழையுங்கள் 9994500540

அல்லது

arunero@!gmail.com




சும்மா சும்மா நான் சொல்லிகிட்டு இருக்க மாட்டேன்!
சேமிப்பையும், லாபத்தையும் இன்றே ஆரம்பியுங்கள்!

சீரியஸான கேள்விகளும் எனது புரிதல்களும்!

கேள்வி, பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது எனது தேடலை அதிகபடுத்தவேயன்றி நான் எல்லாம் அறிந்தவன் என பறைச்சாற்றி கொள்ள அல்ல என்பது அனைத்து நண்பர்களுக்கும் தெரியும். நான் எதிர்பார்த்த, எனது பழைய சிந்தனைகளை தூண்டிவிடக்கூடிய கேள்விகள் தம்மை வெளிபடுத்திக்கொள்ளா விரும்பாத ஒரு நண்பரிடம் இருந்து வந்திருக்கிறது, கேள்விகள் குறைவு தான் என்றாலும் அதன் தாக்கம் மிகப்பெரிது. எனது புரிதலை நான் எங்கே பதிவாக இடுகிறேன், உங்கள் புரிதல்களை பின்னூட்டமாகவே தேவைப்பட்டால் பதிவாகவோ இட உங்களுக்கு முழு உரிமையும் உண்டு.
விவாதம் தெளிவுறவேயன்றி வெற்றி தோல்வியை தீர்மானிக்க அல்ல!

**********

கேள்வி 1)
படைப்புவாத கொள்கை - அடிப்படையில் அனைவரும் சமமே என்று கம்யூனிசம் பேசுகிறது
பரிணாமக் கொள்கை - "survival of the fittest" என்று படிநிலையை ஆதரிக்கிறது.
ஆனால் -- நிஜத்தில் மதவாதிகள் படிநிலையை ஆதரிப்பவர்களாகவும், பரிணாமவாதிகள் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்களாகவும் இருக்கும் முரணின் மர்மம் என்ன ?? - இது விவாதத்துக்கு


அருமையான கேள்வி!, என்னை பலமுறை தூண்டிய கேள்வியும் கூட!
உயிரினங்கள் அனைத்தும் ஒரே கடவுளால் படைக்கபட்டதென்றால் அங்கே ஏற்ற தாழ்வே இல்லை.
பரிணாமத்தின் படி உள்ளது சிறத்தல் என்றால், நான் உன்னை விட சிறந்தவன் என காட்ட பரிணாமம் பயன்படுகிறது என்பது பொது புத்தியில் விழைந்த விதியாகவே எனக்குப்படுகிறது!


பரிணாம கோட்பாட்டின் படி மனிதனும் ஒரு விலங்கே, டார்வீனிஷ கோட்பாடு தம்மை உயிர்புடன் காத்துக்கொள்ளவும் மேலும் தம் சந்ததியினரை காப்பாற்ற அது செய்யும் வேலைகளையும் வைத்து சிறந்தது(நீண்ட காலம்) வாழும் என வகுத்தார்.


அவர் அதைசொல்லும் பொழுது உலகில் நிலபிரபுத்துவ ஏகாதிபத்தியம் நிலவிகொண்டிருந்தது. நாடு பிடித்தல் அல்லது புதிய தளங்களை கண்டுபிடித்தல் என எல்லா நாட்டினரும் முயற்சித்து கொண்டிருந்தனர். ஆம் நாம் சிறந்தவர்கள் என காட்டாவே அந்த சிரத்தை. நாகரீக உலகில் நாகரிக மற்ற மக்களை பழங்குடியினர் என பட்டம் கட்டி அவர்களை அடிமைகளாக வைத்திருந்தது நிலபிரபுத்துவத்தின் பார்பனீய கோட்பாடே தவிர பரிணாமத்தின் தவறல்ல.




அன்று கறுப்பினத்தவன் மற்றும் போரில் தோற்றவர்கள் அடிமைகளாக கருதப்பட்டார்கள். ஒன்று நிலபிரபுத்துவம் மன்றொன்று அதிகாரமையம், இரண்டும் பார்பனீயத்தின் கிளைகள் தான். அனைவரும் சமம் என்ற வார்த்தை அவர்களை அடிமைகளோடு சேர்ந்து அமரச்சொன்னது போல இருந்தது, உண்மையில் அடிமைகளாக யாரையும் நடத்தாதே எனத்தான் உண்மையான கம்யூனிசம் சொன்னது.


ஆபிரஹாம மதஅடிப்படையில் மனிதர்கள் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாள் மூலம் பிறந்தவர்கள் என்றே வைத்து கொள்வோம், இன்று ஏன் பிரிவினை. நெற்றியில் இருந்து பிறந்தவன் பிராமணம், சூத்திரன் காலில் இருந்து வந்தவன் என்றால் எங்கே அனைவரும் சமம் என்ற கோட்பாடு.


அதுவல்ல நான் சொன்னது, அடிப்படை இந்துஞானமரபு பற்றி நீங்கள் பேசூவீர்களேயானால் அது பற்றி படுத்த பதிவில் விவாதிப்போம்!

*****

கேள்வி 2)
கடவுள் இல்லை என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்பும், இன்னும் அறிய விரும்புகிறேன், விவாதிக்கலாம் என்று ஒவ்வொரு பதிவின் முடிவிலும் போடும் டிஸ்கி யின் அர்த்தம் என்ன? இல்லாத கடவுளுக்கு நீட்சி ஏதும் உண்டா என இன்னும் தேடுகிறீர்களா ?

தேடல் முடியுறா இன்பம், அதன் பொருட்டே அறிய விரும்புகிறேன் என விவாதத்திற்கு அழைப்பது, என்று நீ கற்பதை என்று நிறுத்துகிறாயோ அன்று பிணத்திற்கு சமமாவாய் என என் தந்தை(அய்யம்பேட்டை அறிவுடை நம்பி இல்லங்க) அடிக்கடி சொல்லுவார், சாவிற்கு முதன் நாள் சாக்ரடீஸ் அவரது நண்பர்களுடன் புதிதாய் ஒரு விசயத்தை எடுத்து விவாதித்தாராம்.




கடவுள் என்ற பதம் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. உருவம் உண்டு, உருவம் இல்லை, இயற்கையே கடவுள், உலகம் உருவாக கடவுள் என்ற பதம் தேவையில்லை, அப்படியே கடவுள் இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத பொம்மை என்று ஒரு கூட்டம் என பல பிரிவுகள்.


கடவுள் இல்லை என்று முடிப்பதை விட ஏன் கடவுள் என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன், நான் நலமாக, வசதியாக வாழ கடவுள் எனக்கு தேவையா?


ஒழுக்கமாக வாழ கடவுள் இல்லையென்றால் நம்மால் முடியாதா? தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளை முன் வைக்கிறேன்!


நீங்கள் கேட்ட கடவுளின் நீட்சி எதை வைத்து என எனக்கு புரிகிறது, அன்பே சிவம் படத்தில் கமலால், மாதவன் கடவுள் என்று அழைக்கப்படுவார் அதுப்போலத்தானே :), சக மனிதனுக்கு உதவுவதற்கு பெயர் தர்மம் அல்ல கடமை!


**********

கேள்வி 3)
பரிணாம தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட ஹிட்லருக்கு, யூதர்களை கொன்றது மிகவும் நியாயமாக பட்டதாம். --- ஏனென்றால் பரிணாமக் கொள்கையின்படி ஹிட்லர் தன்னையும் தன் கும்பலையும் மேலானவர்கள் என்று நினைத்துக் கொண்டதால். அது உண்மையெனில்........பரிணாம தத்துவம் மனிதர்களின் எண்ணங்களில் .....மனிதத்தை வளர்க்குமா ???? ---இதுவும் விவாதத்துக்கு.


ஹிட்லர் பற்றிய வரலாற்று குறிப்புகள் அறிந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள், ஹிட்லர் சிறுவயதில் தன் தந்தையால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டவர், இவரது தந்தை ஒரு யூதர் என்ற செய்தியும் உண்டு, ஹிட்லர் ஜெர்மனியை சேர்ந்தவர் அல்ல, ஆஸ்டிரியாவில் பிறந்தவர், சிறு வயதில் Protestantism வகையை சேர்ந்த கிறிஸ்தவர்களின் போதனைகளால் யூதர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என உருமாற்றப்பட்டவர். முக்கியமாக புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.(பின்னாளில் அவரே கிறிஸ்துவத்தையும் எதிர்த்தார்)


ப்ழைய ஏற்பாடு என்னும் கிறிஸ்துவ புத்தகம் இன்று கிறிஸ்தவர்கள் கையில் இருந்தாலும் அதிலிருப்பவற்றை பின்பற்றிவதில் அவர்களுக்கு பல குழப்பங்கள் உண்டு, விருத்தசேதனம் என்னும் ஆண்குறி முன்தோல் நீக்குதல் அதில் தான் உண்டு,(குரானில் இல்லை) பின்னாளில் இயேசிவின் மறைவுக்கு பின் தொகுக்கபட்ட புதிய ஏற்பாடு கிறிஸ்துவம் என்ற புதிய மதத்தை தோற்றுவித்தது, இயேசு யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டதால் யூதர்கள் அன்று கிறிஸ்தவர்களுக்கும் பின்னாளில் இஸ்லாமியர்களுக்கும் எதிரிகள் ஆனார்கள்.


ஹிட்லர் முதலாம் உலகப்போரில் தாமாகவே முன் வந்து பணியாற்றினார், அப்போது கிடைத்த புகழினால் at wolf என ஜெர்மனியில் குறிக்கும் அடால்ஃப் என்று தம்மை அறிவித்து கொண்டார் அதாவது தம்மை ஒரு ஓநாய் என்று, இதில் ஒரு காமெடி என்னவென்றால் ஹிட்லர் என்றால் மேய்ப்பாளர் அல்லது காப்பாளர் என்றூ பொருள், ஒரே பெயரில் முரண்பட்ட இரு கருத்துகளை கொண்டவர் தான் ஹிட்லர்!




தாம் மேலானவர்கள் என்ற ஆரிய தத்துவம் அவரை ஈர்த்தது, ஹிட்லர் ஒரே சமயத்தில் முதலாளித்துவத்தையும், மார்க்சியத்தையும் எதிர்த்தார், யூதத்தலைவர்களால் சோசலிசம் பாதிக்கபடுவாதக கூறிய ஹிட்லர் யூதர்கள் வாழ தகுதியற்றவர்கள் அதாவது உடல் ஊனமுற்றவர்கள் போல் கடவுளின் சாபக்கேடுகள் என வர்ணித்தார், டார்வினசத்தை அவர் அறிந்திருக்கவில்லை ஆனால் உள்ளது சிறக்கும் என்ற தத்துவத்தை அறிந்திருந்தார் என வேண்டுமானால் சொல்லலாம்!, யூதர்களின் மேல் அவருக்கு திணிக்கபட்ட வெறுப்பால் தான் அவர் யூதர்களை கொடுமைபடுத்தினார், அங்கே டார்வீனிசம் வரவில்லை, மதமே காரணமாக இருந்தது.


பரிணாமம் கடவுள் என்ற கோட்பாட்டை மட்டும் எதிர்ப்பதில்லை, கடவுள் பெயரால் ஏற்படும் கலவரங்கள் மற்றும் சொர்க்கம், நரகம் போன்ற மூட நம்பிக்கைகளையும் எதிர்கிறது, எனது பரிணாம பதிவில் நான் ஏற்கனவே கூறியிருப்பதைப்போல் நிலநடுகோட்டுக்கு அருகில் வாழ்ந்த மக்கள் கறுப்பினத்தவர்களாகவும், மேற்கத்திய மக்கள் வெள்ளையர்களாகவும் மாற இயற்கை அமைப்பே காரணம், ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாற ஏற்படும் நிகழ்தகவை பரிணாமம் அழகாக விளக்குகிறது, அவை எங்கேயும் ஒன்றை விட ஒன்று சிறந்தது என சொல்லவில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவம் உண்டு என்றே சொல்கிறது, பரிணாமம் நிச்சயம் மனிதத்தை வளர்க்கும்!

********

கேள்வி 4)
மனிதர்கள் ரகசியமாகவேனும் மனதுக்குள் தன்னை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்வதன் - மனோவியல் சார்ந்த _ காரணம் என்ன ??

தீர ஆராய்ந்தால் இச்சிந்தனை நமக்கு திணிக்கப்பட்டவை என்பது விளங்கும், சிறு வயதிலிருந்து நம்மை சுற்றியுள்ளோர் நம்மை உயர்ந்தவனாகவும், புகழ் உச்சாணியை அடைய வேண்டும் என்று திணித்தே நம்மை வளர்க்கிறார்கள், அசம்பாவிதமாக ஒரு சிலர், குழந்தைகளை சிறுமைபடுத்தி தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி தம்மை என்றும் மற்றவர்களை விட குறைவான திறன் உள்ளவர்கள் என்று நினைக்க வைக்கிறார்கள்!




நான் எப்போதும் சொல்வேன், நான் முடியாது என்று சொல்வது கிடையாது, தெரியாது என்று வேண்டுமானால் சொல்வேன், இவ்வுலகில் எதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவனால் செய்ய முடிந்த காரியத்தை எனக்கு செய்யத்தெரியாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக செய்ய முடியாமல் இருக்காது. முயற்சியின்றி முடியாது என்போர் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் அவர்கள் தம் நம்பிக்கையையை வளர்த்து கொள்ள இனி முடியாது என வார்த்தையை பயன்படுத்தாமல் தெரியாது, ஆனால் சொல்லிக்கொடுத்தால் செய்வேன் என்றால்.............


உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் ஒரு மனிதனுக்குள்ளும் இருக்காது!

********

உங்களது கேள்விக்கான எனது புரிதல்களை பதில்களாக அளித்துள்ளேன், ஹிட்லர் பற்றிய தகவல்களில் சில வரலாற்று பிழை இருக்கலாம், தெரிந்தவர்கள் சொன்னால் திருத்தி விடுகிறேன். மேலும் இம்மாதிரியான கேள்விகள் எனக்கு புதிய அனுபவங்களை கொடுப்பதால் உங்களிடமிருந்து இம்மாதிரியான மற்றும் தர்க்கம் சார்த்த எந்த கேள்வியாகினும் என்னை செம்மைபடுத்தும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்கிறேன்!

கேள்வி பதில் (29.01.2012)

பெரிய கேள்விகளெல்லாம் ஒன்றுமில்லை, நீ என்ன பிரஷ் யூஸ் பண்ற, என்ன பேஸ்ட் யூஸ் பண்ற போன்ற மதவாதிகளின் கேள்விக்கு ஞாயிறு இலவசமாக அதாங்க ஃப்ரியா இருக்கும் போதே பதில் சொல்லிடலாம்னு தான்! கேள்விகள் கேட்கப்பட்ட குவியல் லிங்க்

**


கடவுள் என்ற பெயரில் ஒருவர் ஒரு கூகள் கணக்கை ஆரம்பித்து சில கேள்விகளை கேட்டுள்ளார் அதற்காகவே இப்பதிவு, இதன் பிறகு பர்சனல் கேள்விகளுக்கு பதிலில்லை நண்பர்களே!

//kaduvul said...
பாவம் உன்னை நம்பி காசை போட்ட உன் பார்டனரை சொல்லனும்//

சொல்லுங்க, கேட்க அவர்களும் ரெடியாத்தான் இருக்காங்க!


//உனக்கு இன்று இருக்கும் மன நிலையில் எந்த வித தொழில் செய்தாலும் ஓடாது. நீ ஒரு அழிக்கும் சக்தி, சும்மா சீன் போடனும்ன்னு ஏதாச்சும் விட்டேத்தியே பேசிகிட்டு இருக்கும் ஒரு லூசு//

என் மனநிலையை படிக்கும் அளவிற்கு நீங்க மனோத்துவ நிபுணர் என்றால் இப்படி அடையாளம் மறைக்கப்பட்டு வர வேண்டிய அவசியம் இருக்காதே. நான் எந்த தொழில் செய்தாலும் ஓடாதா?, நான் என்ன மாட்டு வண்டியா ஓட்டப்போனேன்?. நான் அழிக்கும் சக்தி தான், மதவாதிகளை அழிக்கும் சக்தி. உங்களை போன்ற முதுகில் குத்தும் துரோகிகளை அழிக்கும் சக்தி. நான் விட்டேந்தியா பேசுறேன்னு படிக்கிறவங்க சொல்லட்டும் பாஸ், இன்னொரு விசயம் நான் புத்திசாலின்னு என்னைக்கும் சொல்லிகிட்டது கிடையாதே, எனக்கு புதுசா லூசு பட்டம் கொடுக்குறிங்க!



//உன்னோட நான் நெருக்கி பழகி இருக்கிறேன். எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்.//

நெருங்கி பழகுவதை போல் நடித்திருக்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம், நெருங்கி பழகும் ஆசாமி இப்படி அடையாளம் இல்லாமல் விமர்சனம் செய்ய மாட்டான். என்னை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்ததில் மகிழ்ச்சி, என் ஜட்டி சைஸ் என்னான்னு சொல்லுங்க பார்க்கலாம்!?


//பிழைக்கிற வழிய பாரு அடுத்தவனை குத்தம் சொல்றதை நிறுத்து//

உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல. இந்த பின்னூட்டத்தில் நீங்க சொல்லியிருக்குறதுக்கு பெயர் என்ன?. நீ ஒருவனை குற்றவாளி என காட்டும்பொழுது மீதி மூன்று விரல்கள் உன்னை காட்டுகிறதுன்னு யாரோ சொன்னாங்களாம், பேர் தெரியல கேட்டு சொல்றேன்!

//தன் வாழ்க்கையை ஒழுங்காக வைத்து கொள்ளாத நீ எல்லாம் எப்படி அடுத்தவனுக்கு நியாயம் சொல்லாம்??//

என் வாழ்க்கை கெட்டு போச்சுன்னு யாரு அழுதது இப்போ, நான் என்ன குவியலில் பிச்சையா எடுத்துகொண்டிருந்தேன். நான் யாருக்கைய்யா நியாயம் சொன்னேன், சரி அதை விடு. இப்போ நீ பண்றதுக்கு பெயர் என்ன?( வயசு அதிகம் என்றாலும் இப்படி பண்ணா வேற எப்படி யார் சொல்றது, அவுங்களுக்கா அறிவு வேணும். அது என்ன குரள் சார், இன்னாரை ஒறுத்தல்.........)

//உன் தன்னம்பிக்கை எல்லாதைய்ம் குப்பையில் போடு ஒரு வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாத நீ எல்லாம் எப்படிடா அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய வரே?? உனக்கு மேல் மாடி காலியா?//

மேல்மாடி காலியாயிருந்தா நான் எப்படியப்பா சென்னையில் வேலை செய்ய முடியும், எட்டு வருடம் கமாடிடி மார்க்கெட்டில் இருந்தேன், ஒரு வருசம் ஹோட்டல், அதில் சில இழப்புகள் திரும்பவும் பழைய இடத்திற்கே வந்து விட்டேன். இதில் என் தன்னம்பிக்கையில் என்ன குறை கண்டாய் மகனே அல்லது மச்சானே, அல்லது பேரனே(அர்த்தம் தெரிந்தவர்கள் சிரித்து கொள்க, வெளியே சொல்ல வேண்டாம்).

//kaduvul said...
இதுல அடுத்தவனுக்கு கேள்விக்கு பதில் எல்லாம் நீ சொல்ல போறியாமே. காமேடி. உனக்கே உன் வாழ்க்கைக்கு பதில் தெரியாமே குப்பை எல்லாம் நோண்டிக்கிட்டு இருக்கே இதுல அடுத்துவனுக்கு பதில் வேற


தூ//

சார் அடையாறுக்கு எப்படி போகனும் என்பதும் கேள்வி தான், அதுக்கு பதில் சொல்ல எனக்கு தகுதியில்லைன்னு ப்ளாக் உலகில் கோழையாக அடையாளத்தை மறைத்து, சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்கும் ஒரு பிரபல பதிவர் சொல்லியிருக்கார், அதுனால உங்க கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது, வேற யார்கிட்டயாவது கேட்டுக்கோங்கன்னு சொல்லிரட்டுமா?
என் வாழ்க்கை குப்பை நோண்டுவதில் போனால் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்பதே உண்மை. குப்பையில் தானய்யா ஏகப்பட்ட பொக்கிஷங்கள் கிடக்கு, அது ஒரு கிடங்கு!


நேர பார்த்து துப்பன்பும் தெரிந்த்சதா? அண்ணாந்து பார்த்து துப்பி இப்ப உன் மூஞ்சியே நாறி போச்சு பாரு! :)


இது வரை பதில் சொன்னது ஒரு கழிசடைக்கு இனி உருப்படியா பதில் சொல்வோம்!

*********************


திரு அர்த்தநாரி

//நீங்கள் பணம் நஷ்டம் என்று சொன்னீர்கள். அப்புறம் எதற்காக, பணம் பண்ணலாம் ஷேர் மார்க்கெட்-ல் என்று கூவி கூவி அழைத்தீர்கள்.? உங்களை நம்பி யாரும் வர மாட்டார்கள் என்பது வேறு. இப்பொழுது, பணம் நஷ்டம் வந்த வுடன், கடையை சாத்திவிட்டு, அடுத்த நபரிடம் வேலைக்கு சேர்ந்து விடீர்கள். உங்களை நம்பி பணம் போட்டிருந்தால், என்ன வாகி இருக்கும் என நினைத்து பார்த்தீர்களா?
நீங்கள் இப்பொழுது வேலை பார்க்கும் வேளையில், கடவுள் போட்டோ இருகிறதா? இருந்தால், வேலையை விட்டு விட்டு போய் விடவும்.
சில வருடங்களில், நீங்கள், உங்கள் பாஸ் ஆபீஸ்-ல் வேலை, அப்புறம், ஹோட்டல் பிசினஸ்(அதன் முடிவு என்ன ஆச்சு என்று கூறவும்.. அந்த முதலாளி என்ன ஆனார்), அப்புறம் ஷேர் மார்க்கெட்(அதன் நிலவரம் என்ன).., என பல வேளைகளில் , என் நிரந்தரம் இல்லாமல்,வேலை செய்கிறீகள்..!!!!!!//


நான் எட்டு வருடம் பங்குவணிக துறையில் இருந்தேன், ஹோட்டல் இழப்பில் என் பங்கு மட்டுமல்ல எனது பார்ட்னர்களுக்கும் பங்கு உண்டு என்பதால் தான் நான் இப்போது வேலையில் இருக்கிறேன், நான் ஏமாற்றி இருந்தால் கம்பி தானே எண்ணி கொண்ட்இருப்பேன்.


கடவுள் போட்டோ!? :)


நான் கோவிலில் அர்ச்சனை டிக்கெட் கொடுக்கும் வேலை பார்த்தாலும் கடவுள் மறுப்பாளன் தான்,
நாத்திகன் என்ற வார்த்தையே சமஸ்கிருதம் தான், சமஸ்கிருதம் பேசுபவர்களிடமும் கடவுள் மறுப்பாளர்கள் இருந்ததால் தான் அந்த பெயரே வந்தது. நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல, நான் என்னவாக இருக்கிறேன் என்பதே எனக்கு முக்கியம்.


நேர்முகத்தேர்வில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை கூறினேன், ஏன் என்று கேட்டார்கள்.
நான் என்னை நம்புகிறேன் எனக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றேன்.


என் பார்ட்னர் என்ன பண்றாங்க, என் பழைய பாஸ் கார்த்திக் என்ன பண்றார்னு தெரியனும்னா 9994500540 க்கு போன் பண்ணுங்க, பொதுவில் சொல்ல அவுங்க என்ன பொதுச்சொத்தா?

****

//உங்கள் பெண்ணிற்கு ஸ்கூல்-ல் certificate தர மாட்டேன் என்கிறீர்கள். நல்லது. உங்களிடம் ரேஷன் கார்டு , பாஸ்போர்ட், ஸ்கூல் TC , மற்றும் எதாவது இருக்குமாயின், தயவு செய்து கிழித்து போட்டு விட்டு, அதை போட்டோ எடுத்து ப்ளாக்-ல் போடவும். உங்கள் பெண்ணிற்கே, நீங்க ஜாதி certificate தராதவர், நீங்கள் மேற் சொன்னவற்றை அப்பளை செய்யும் போது கண்டிப்பா கொடுத்து இருப்பீர். அதெல்லாம் உங்களுக்கு தேவை கிடையாது.
உங்கள் பெண்களின் பெயர் பற்றி கூறும் போது, நான் தமிழ் தமிழ் என்று எப்போ சொன்னேன் என்று தத்துவமாக பேசினீர்கள். வர்ஷா, வருணா என்பது சத்தியமாக கடவுள் பெயர். லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது. வேண்டுமானால், ஸ்கேன் செய்து அனுப்புகிறேன், உங்களால், அந்த பெயரை, இப்போ gazette மாற்ற முடியுமா.. தூய தமில் பேர் , அங்கவை, சங்கவை.//


எனக்கு சாதி அடையாளம் தரும் எந்த ஒரு அடையாள அட்டையும் என்னிடம் இல்லை, என்னிடம் ரேஷன் கார்டு இருக்கு, அதில் எங்கே சாதி இருக்கு? லைசன்ஸ் இருக்கு அதில் சாதி இருக்கா?, இதையெல்லாம் அப்ளை பண்ண சாதி சான்றீதழ் வேணும்னு உங்களுக்கு சொன்ன கூமுட்டை யாருங்கோ!?


அருண் என்பது என் பெயர் அதற்கு அர்த்தம் சூரியன், ஆரூன் என்றால் அதிகாலை சூரிய உதயம் என்று அர்த்தம், வர்ஷா, வருணா இரண்டுமே மழையை குறிக்கும் சொல். இவர்கள் இருவர் பிறக்கும் பொழுதும் நல்ல மழை என்பதால் அதன் அடையாளமாக அந்த பெயர் வைத்தேன். சமஸ்கிருதம் தேவமொழி இல்லை என்பதே என் வாதம், அதை ஒரு மொழியாக ஏற்று கொள்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.


என் குழந்தைகள் அவர்கள் பெயரை மாற்ற நினைத்தால் அவர்கள் கெஜட்டில் மாற்றி கொள்ளட்டும், அது அவர்கள் இஷ்டம்!


**+**


//உங்கள் கல்யாணம் வீட்டில் பார்த்து பண்ணியதா? உங்கள் கல்யாண் அழைபிதழ் இருகிறதா? அதில் ஜாதி உள்ளதா? அப்பொழுது பொங்கி எழுந்தீர்களா? ஜாதி இல்லை எனில், மிகவும் நன்று. முடிந்தால், உங்கள் அழைபிட்ஹழ் , ப்ளாக்-ல் போடவும்.
நீங்கள் கல்யாணம் பண்ணும்போது தாலி கட்டி , இந்து முறை படி நடந்துதா? அப்பொழுது உங்கள் moolai வேலை செய்யவில்ல என்றால், இப்பொழுது வேலை செய்யுமா? //


எனது நெருங்கிய நண்பர்களுக்கு எனது மணவாழ்க்கை பற்றி தெரியும்.
தாலி கட்டினேன், இது உனக்கு கல்யாணம் ஆயிற்று என்பதற்கான அடையாளமே தவிர நான் உன் கணவன் என்பதற்கான அடையாளம் அல்ல, நாம் இருவரும் மனமொத்த நிலையில் இருக்கையில் இந்த அடையாளம் தேவையில்லை என்றால் நீ கழட்டி விடலாம் என எப்போதே சொல்லிவிட்டேன்.


எனது அழைப்பிதழில் சாதி இருக்காது, ஏனென்றால் என் அப்பா வேற சாதி, என் அம்மா வேறு சாதி!
:) எனக்கு ரொம்ப வசதியா போச்சு சாதியை முற்றிலும் ஒழிக்க!

****



//பண்ணும் வேலை எல்லாம் நஷ்டத்தில் முடிகிறது.. வருத்தமா இருக்கு. எங்கள் ஊரில் , இதற்கு பெயர் விளங்காதவன். (leg Dhaadha ) . அந்த பெயர் உங்களுக்கு வராது இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், //

பல கோடி நட்டம் ஆகி உங்ககிட்ட பிச்சை எடுக்க வந்த மாதிரி ஃபீல் பண்றிங்களே, எங்கள் ஊரில் உங்களை போல் ஆட்களை பிச்சைகாரர்கள் என்போம், ஆம் இங்கே பார்பன பிச்சைகாரர்கள் அதிகம், அதுனால எந்த பாப்பான பார்த்தாலும் பிச்சைகாரன் மாதிரி தான் தெரியும். :) எல்லாம் வல்ல இறைவன் முதலில் அவன் குண்டியை கழுவி கொள்ளட்டும், பிறகு இங்கே வந்து கழவச்சொல்லுங்கள்!


***


//நான் ungal மனம் நோக இதெல்லாம் செய்யவில்லை. நீங்கள் மற்றவரை வம்புக்கு இழுக்கும் போது, " இந்த கேள்வி -கு இன்னும் பதில் வரலை" என்று இறுமாப்புடன் சொல்லுவீர்கள். நான் கேட்கிறேன், இதற்கு பதில் உண்டா? இதற்க்கு அந்த ஆயி மூஞ்சி ராஜன் கூட சேர்த்துகிட்டு , என்ன பதில் வருகிறதென்று ஆவலுடன் எதிர் பார்கிறேன்.//

மனம் என்ன செஞ்சு வச்ச பொம்மையா,,..... நோக!?
எனது பதிவில் எதற்காக ராஜன் பெயரை இழுக்குறிங்க, உங்களுக்கு அறிச்சா நீங்களே சொரிஞ்சுகோங்க, ராஜனை கூப்பிட்டா ரத்தகளரி தான் ஆகும்.


திருப்பதில், திருசெஞ்தூரில், பழனியில் மக்களின் மயிரை புடுங்கியதை(அல்லது மழித்து எடுத்து கொண்டதை) விட வேறொன்றும் இந்த கடவுள் என்ற கல் செய்யவில்லை என்று எங்கும் சொல்வேன் எங்கேயும் சொல்வேன்!


கடைசியில் இவரும் நாறிட்டாரே, பெயரிலேயே அர்த்தநாரி என்று இருப்பதாலோ?
மனிதம் ஒன்றே வாழ்க்கை, மனிதம் காக்க எதற்கும் தயார்!

குவியல் (28.01.2012)

மிக மிக நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் குவியல். ஆயிரம் பாலோயர்கள் தொட்டபிறகு ஒவ்வொரு நூறுக்கும் சொல்லும் நன்றி கூட சொல்ல முடியவில்லை. இணையம் பக்கம் நெருங்க முடியாமலும், தன்னிச்சையான சிந்தனைகளுக்கு முட்டுகட்டை போடுமளவுக்கு வேலை பளுவும் இருந்தது, இப்போதும் அப்படி தான், ஆனால் அவை எனது சிந்தனை ஓட்டத்திற்கு மிகவும் தடையாகவும், தன்னம்பிக்கை குறைவாகவும் சிந்திக்க வைப்பதால் மாற்றம் வேண்டி மறுபடி பழைய வால்பையன் திரும்ப வந்துவிட்டான். பலமுறை அலைபேசியிலும், மெயிலிலும் அங்கே அந்த பழைய வால்பையன் என கேட்டு உசுப்பி விட்ட நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் இந்த குவியல் அர்பணம்!

****

இதை எழுதி கொண்டிருக்கும் பொழுது 1249 பாலோயர்ஸ் யார் அந்த 1250 ஆவது பாலோயர்னு தெரியல, என் பழைய குவியலை படித்தவர்களுக்கு தெரியும், என்னை பாலோ செய்யும் அனைவரையும் ப்ளாக் இருந்தால் கண்டிப்பாக நான் பாலோ செய்வேன், ஒருவேளை அப்படி செய்யவில்லை என்றால் தெரியப்படுத்தவும்!

****

நான் இப்போது சென்னையில் இருப்பது பல நண்பர்களுக்கு தெரியாது, முன் செய்த தொழிலில் ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரிப்பார்கள், மேலும் என்மீது அக்கறை கொண்ட பலர் அது தனக்கு நேர்ந்த இழப்பாய் நினைப்பார்கள் என்பதே மிக முக்கிய காரணம். இன்று அறிந்தவர்கள் மன்னிக்கவும் விரைவில் உங்களை சந்திக்கிறேன்!, நான் இழந்தது கொஞ்சம் பணத்தையும், நிறைய நேரத்தையும் தான், நம்பிக்கையை அல்ல.

****

10 வருடங்களுக்கு முன் நான் வாழ்ந்த சென்னை சத்தியமாக இது இல்லை. இன்று எல்லாமே தலைகீழ். sky walk, express avenue என வாழ்க்கை எங்கேயோ போய் கொண்டிருக்கிறது. ஒரு சினிமாவுக்கு போகனும்னாலும் 500 வேணூம், எப்படி மக்கள் சமாளிக்கிறாங்கன்னு தெரியல, அதே நேரம் 15 ருபாய்க்கு சாம்பார் சாதமும் கிடைக்கிறது, 40 ரூபாய்க்கு கறிகுழம்பு, மீன்குழம்பு, முட்டை, கறியோடு சாப்பாடும் கிடைக்கிறது!, எங்கேயும் எப்போதும் படத்துல சொல்ற மாதிரி இது சென்னை இல்ல, மொத்த தமிழ்நாட்டின் அடையாளம்னு சொல்லலாம்!


****

”மெளனகுரு” ன்னு ஒரு படம் பார்த்தேன். நீண்ட நாள் கழித்து நல்லதொரு திரைக்கதையை பார்த்த மகிழ்ச்சி, அதே நேரம் ஆனந்தவிகடனில் அவர் அளித்த பேட்டியில் கமர்சியலுக்காக நான் நகைச்சுவையையோ, சண்டை காட்சிகளையோ, பாடலையோ புகுத்த மாட்டேன் என பேட்டி அளித்திருந்தார், நியாயமா பார்க்கனும்னா மெளனகுரு படத்தில் ஆர்த்தி என்ற கேரக்டருக்கு வேலையே இல்லை, அது வலுகட்டாயமாக திணிக்கப்பட்டது தானே, ஒருமுறை ஜெயித்ததும் தலையில் கணம் கூடிகொண்டது போல, அவரது ஆசிரியர் தருமி ஐயா கொஞ்சம் சொல்லி தட்டி வைக்கவும்!(இதுல ஐயா கடைசியில் நாயகனும், நாயகியும் சைக்கிளில் போவது போல் எதிர்பார்த்தாராம், அது தானே எல்லா படத்திலும் நடக்குது, இங்கேயும் எதற்கு)




மற்றபடி நான் மிகவும் ரசித்த the game என்ற திரைபடத்திற்கு நிகரான திரைக்கதை.
நாயகன் தவிர்த்து வில்லன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் எதார்த்தம். நாயகன் மட்டும் காலைகடன் கழிக்க தவறியவர் போல் முகத்தை வைத்து கொண்டு திரிகிறார், அவர் சிரிக்கவே கூடாதுன்னு இயக்குனர் கட்டளை போல!. நாயகன் வசனங்கள் அனைத்தும் கூர்மை ஆனால் முகத்தில் எந்த பாவமும் இல்லை(இது அந்த பாவம் இல்லை, நான் சொல்றது முகபாவம்), அதுவும் இருந்திருந்தா அருள்நிதி இன்னொரு சூர்யாவாக, விக்ரமாக வாய்ப்பிருக்கிறது. நான் முழுநீள விமர்சனங்கள்(முழுநீள படம் தானே எடுப்பார்கள்) எழுதுவதில்லை அதுக்கு நம்ம அண்ணன் ஊனா தானா இருக்கிறார், அங்கே படித்து கொள்ளலாம்! :)

சாந்தகுமாருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, சினிமாவை எடுத்தால் அதை தமிழ்சினிமாவின் இலக்கணங்களுள் எடுத்தால் காலம் புறந்தள்ளி விடும்!

******

தனது தளத்தில் சாதி மறுப்பு திருமணத்திற்கு இலவச விளம்பரம் அளிப்பதாக அறிவித்திருந்தேன். கோவையில் எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கல்யாணத்திற்கு தயாராக ஒரு மாப்பிள்ளை இருக்கிறார். சாதி, வசதி பிரச்சனையில்லை. மேற்படிப்புக்கு விருப்பப்பட்டாலும் அதை செய்து தர அவர் குடும்பம் தயாராக இருக்கிறது. தாய், தந்தை இல்லை. மாதம் 12,000 சம்பாதிக்கிறார்.
பெற்றோர் அற்ற ஆதரவற்ற பெண்ணுக்கு முன்னுரிமை. பெண்ணுக்கு 30 வயதுக்கு மேல் இருந்தால் இவருக்கு சூட்டாகாது, உங்களுக்கு தெரிந்து அப்படி எதாவது பெண் இருந்தால் எனது அலைபேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ தெரியப்படுத்தவும்!

9994500540

arunero@gmail.com

மேலதிக தகவல்கள் தனிப்பட்ட முறையில் தரப்படும்!

****

ரொம்ப நாளா எழுதாததால் கிரியேட்டிவிட்டி கொஞ்சம் குறைஞ்சிருக்கு, அதுனால பழைய கேள்வி பதில் பகுதியை(டோண்டு மூடிட்டார் போல) திறக்கலாம் என்றிருக்கிறேன். உங்கள் கேள்வி எதுவானாலும் எனது புரிதலில் நிச்சயம் பதிலளிக்கிறேன்.

கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் பெரியாள் இல்லை தான், இருப்பினும் பதில் தேடும் பொழுது ஏற்படும் அனுபவங்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கை தான்!

****

கவிதை மாதிரி..

குடியும், குடித்தனமும்.

கூடிக்கழித்து
குடித்து கும்மாளமிட்டதை தவிர
வேறொன்றும் மிச்சமில்லை
நலமா, சாப்பிட்டியா
என்பதை விட
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்
என்பதே இன்று
நட்புகளில் உரையாடல்கள்!
நீண்ட தூரம் சென்று
திரும்பிய பின் தான் தெரிகிறது
குடித்தனத்தை மறந்து விட்டோம் என்று!
முதல் தேதிக்கு இன்னும்
நான்கு நாட்கள் இருக்கிறது
அது வரை மாதசம்பளக்காரனின்
தத்துவம் தொடரும்!..

****

குடிவெறி எதிர்ப்பாளர்கள் அதிஷாவிற்கும், லக்கிக்கும் இது அர்ப்பணம்! :)

இயேசுவும், முகமதுவும் தூதர்களா!?

அப்புறம் இந்த கேள்வி கேட்கமாக ரெண்டு பேரும் ஆம்பளைங்களான்னு கேட்டா பெரிய பிரச்சனை ஆகிடாது!, மேட்டர் என்னான்னா கிறிஸ்துவம் பெருசா, இஸ்லாம் பெருசான்னு விவாதம் நடக்கப்போவுதாம், வரும் அதாங்க நாளைக்கு 21 சனிக்கிழமை மற்றும் 22 ஞாயிற்றுகிழமை. ஆபிஸ் போகும் போது நுங்கம்பாக்கம் ரயில்வேஸ்டேஷனாண்ட இந்த போஸ்டரை பார்த்தேன், சும்மா இருப்பமா அப்பவே ஒரு போட்டோ எடுத்துட்டேன் நம்ம போன்ல அதான் கீழே இருக்கிறது!


அப்புறம் ரூமுக்கு வந்து பார்த்தா பேஸ்புக்குல கூட அந்த விளம்பரம் போட்டிருந்தாங்க, அந்த போட்டோவையும் டவுன்லோடு பண்ணிட்டேன்



சரி இப்போ விசயத்திற்கு வருவோம்.

ஈசா நபி என்ற பெயரில் இயேசு அனைவராலும் ஒரு தூதராக ஒப்புக்கொள்ளப்பட்டவர், இஸ்லாமை பொறுத்தவரை கடைசி தூதர் முகமது என்பதை தவிர ஆபிரகாம மதங்கள் சொல்லிய அனைத்து தூதர்களையும் அவர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள்.

ஈசா நபி என்ற இயேசுவை அவர்கள் ஏற்று கொண்டாலும் இயேசுவின் 13 வயதிலிருந்து 30 வயது வரை எங்கே இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பதற்கான பதில் எந்த ஒரு கிறிஸ்தவனிடமும் கூட கிடையாது, அதுவே இஸ்லாமியர்களுக்கு ஒரு பொறி, மேலும் பழைய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு முன்பிருந்தே இருப்பது. உயிர்பலி போன்ற பத்து கட்டளைகள் உள்ளடங்கியது அது!

புதிய ஏற்பாடு இயேசுவின் சீடர்களால் தொகுக்கப்பட்டது, அவர்கள் இயேசுவுடன் வாழ்ந்த பொழுது ஏற்பட்ட இயேசுவின் போதனைகளை அவர்கள் புதிய ஏற்பாட்டில் கொடுத்திருக்கிறார்கள்.

சரி குரான் என்பது என்ன?

முழுக்க முழுக்க முகமதுவினால் எழுதபட்டதா?

அதுவும் முகமதுவின் நண்பர்கள் அவர் சொன்னவற்றை தொகுத்து அதுவும் அவர் இறந்த பிறகு(அதில் எத்தனை நண்பர்கள் தொகுக்கபட்ட போது உயிருடன் இருந்தார்கள் என தகவல் தெரியவில்லை) தொகுக்கப்பட்டது. குரான் முகமதிவிற்கு வஹி(வலிப்புன்னு சொன்னா முஸ்லீம்கள் நமக்கு போன் பண்ணி அசிங்க அசிங்கமா திட்டுவாங்க)வந்து கடவுளின் தூதனால்(அப்ப முகமது, ஈசாவல்லாம் யாரு) சொல்லப்பட்டது!

ஆக பைபிளின் புதிய ஏற்பாடும், குரானும் கிட்டத்தட்ட ஒன்று தான்.

இல்லை புதிய ஏற்பாடு தப்புன்னு வச்ச்சிகுவோமோ, இயேசுவையும் அதற்கு முன் பல தூதர்களையும் தேர்தெடுத்த கடவுள் என்ன லூசா?

புதிய ஏற்பாடு மனிதன் கைப்பட்டு புனிதம் கெடும் என்றால் ஏன் இயேசுவை தேர்தெடுக்கனும், ரொம்ப இல்ல ஜெண்டில்மேன் 400 வருசம் வெயிட் பண்ணா முகமது தான் ஒட்டகம் மேய்க்க வந்துர்றாரே!.

இதுல காமெடி என்னான்னா ஈசா என்ற இயேசு அப்பனே இல்லாமல் டெஸ்ட் டியூப் பேபி மாதிரி மரியைக்கு கருவாகி பிறந்தவர், ஆனா முகமது அப்படியல்ல 35 வயது வரை யாரென்றே அறியப்பாடாதவர். அப்பக்கூட அவருக்கு தூதர் தகுதி வரல, முதல் மனைவியை கட்டி வசதியா வாழும் பொழுது ஆபிரகாம மதங்கள் பற்றியும், ஆபிரஹாம வேதங்கள் பற்றியும் அப்படியே குழுமியிருக்கும் முட்டாள் மக்கள் பற்றியும் அறியும் போது தான் அவருக்கு வஹி வருகிறது.

என்னே ஒரு கடவுள், படைப்பானாம் அவனே தூதனையும் அனுப்புவானாம் அப்படியும் மக்கள் மாறவில்லையென்றால் திரும்ப திரும்ப அனுப்புவானாம், அதில் கடைசி தூதன் என்று ஒரு ஜம்பம் வேறு, இப்படி தான் நடக்கும் என தெரியாதவன் கடவுளாக ஏன் தூதனாக அட அவ்வளவு ஏன்யா ஒரு நாயாககூட இருக்க லாயிக்கால்லாதவன் தானே! நாயிக்கு கூட தெரியும், ஓட்டல் எச்சில் இலையில் தமக்கான உணவுண்டென்று!

எனக்கு என்ன சிரிப்புன்னா எனக்கு ஒரு கிறிஸ்தவ நண்பன் இருக்கிறான், பைபிளில் எல்லாம் உண்டு அதில் இல்லாததது எதுவும் இல்லை என அவன் அடிக்கம் லூட்டி தாங்க முடியாது, நாளைக்கு அதே லூட்டியை இஸ்லாமியர்கள் அடிக்கப்போகிறார்கள்!

கேள்விக்கு பதில் சொல்லும் இஸ்லாமியர்களே முதலில் கடவுள் ஏன் மனிதனை படைத்தான், ஏன் இத்தனை தூதரை அனுப்பினான் என்பதற்கு ஒழுங்க முதல்ல பதில் சொல்லுங்க ப்ளீஸ்!

!

Blog Widget by LinkWithin