கேள்வி - பதில் (12.08.17)

//உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்... உங்களுடைய ஒரு நல்ல பழக்கத்தைப்பற்றி விரிவாக சொல்லுங்களேன். எப்படி ஆரம்பித்தது, அதை ஏன் இன்னும் தொடர்கிறீங்கள் என்பன பற்றிய விவரனைகளுடன். நன்றி வால்...
//
ஒரு செயலின் விளைவுகளே அது நல்லதா, கெட்டதா என்று தீர்மானிக்கிறது.
கொலை தவறு, ஆனால் ஒரு மனிதவெடிகுண்டை கொல்வது சரியானது
ஆக இது சரியா தவறா என்று யோசிக்க ஆரம்பித்தால் எதையுமே செய்ய முடியாது. என்னை பொறுத்தவரை குற்ற உணர்வை ஏற்படுத்தாத எல்லாமே சரி தான்.
எப்போதாவது தடுமாறினாலும் நான் கடைபிடிக்கும் பழக்கங்கள்:
தவறை நியாயபடுத்திக்கொண்டே இருந்தால் நம்மை திருத்திக்கொள்ள முடியாது
பிறரை குறை கூறுவதே நம்மை நியாயபடுத்தும் செயல் தான்
எதையும் விழிப்புடன் செய்வது
அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்வது
எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் மாணவனாக இருப்பது
முடிந்தவரை இயற்கையாக வாழ்வது

*****

//வாழ்நாள் முழுக்க நடந்தாலும் பாதம் ஏன் தேய்வதில்லை//
உடல் உறுப்புகள் உயிருள்ள பொருள். நம் உடலில் இருக்கும் உயிரணுக்கள் நம் உடலை ரிப்பேர் செய்துக்கொண்டே இருக்கும்.
முடி வெட்டினால், நகம் வெட்டினால் வலிக்காது, ஏனென்றால் அவை இறந்த செல்கள்

*********

//நீங்க ஏன் இப்படி ப்ளே பாயாவே இருக்கீங்க உண்மையான பதில் வேண்டும்//
பிறருக்கு தொந்தரவு இல்லாமல் நமக்கு சந்தோசம் தரும் எதையும் செய்யலாம். எனக்கு கால் பாயா இருக்கக்கூடத்தான் ஆசை, அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும் போல

***

//ராஜன் ஒங்க ஜிகிரி தோஸ்தா//
என் தம்பி

**

//ரொம்ப சர்சைக்குரிய விசயங்கள் ஆனா வெளிப்படயா நேர்மையா தோணுறத போட்டோவோட எழுதிறீங்க, போலிஸ், அரசியல்வாதிங்க தொல்லை இல்லியா//
ஒரு உயிரின் மிகப்பெரிய பயம் மரணம்
அதை கடந்துவிட்டால் வேறு எதை பற்றியும் பயம் வராது.
போலிஸ் இதுவரை கேட்டதில்லை
அரசியல்வாதிகள், மதவாதிகள் கொலைமிரட்டலும், போன் பண்ணி திட்ற வேலையும் செய்வாங்க.
என் கேள்வி உன் நம்பிக்கையை காயபடுத்தினால் உன் நம்பிக்கையில் தான் பிசுகு. என் கேள்வி சரியானதே என்பேன்

***

//பெரியார் பற்றியும், திராவிடம் பற்றியும் உங்கள் கருத்தை அறிய ஆவல்//
திராவிடம் என்பது ஆரியர்களுக்கு எதிரான அவர்களது கொள்கைகளுக்கு எதிரான நிலபரப்பு ரீதியாக நம் தொன்மங்களின் படி கட்டமைக்கபட்ட சித்தாந்தம். இஸம் என்றும் சொல்லலாம்
ஆரியர்களின் வருணாசிரம கொள்கை, குலகல்வி முறையை எதிர்த்து வெற்றி பெற்றத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது
கர்நாடகா, கேரளா நம்மை போட்டு மிதிக்கிறானே என்பது நமக்கும் பக்கத்து வீட்டு காரனுக்கும் இருக்கும் தகராறு போற்றது. அதுக்கும் திராவிட சித்தாந்தம் எந்த சம்பந்தமும் இல்லை. அவ்வாறாக சித்தரிப்பது தமிழ் தேசியவாதிகளின் மொன்னைவாதம்
நம் வீட்டுக்கு வேலி அமைத்து கொள்ளவும், நம் உரிமைகளை சண்டை போட்டு பெற்றுக்கொள்ளவும் நமக்கு உரிமை உண்டு. அவ்வகையில் தமிழ் தேசிய சித்தாந்தத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் திராவிடத்தால் தான் வீழ்ந்தோம் என்பது அயோக்கியதனம்
முக்கிய குறிப்பு, தற்சமயம் இருக்கும் திராவிட பெயர் தாங்கி கட்சிகளுக்கும், திராவிட சித்தாந்த்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் முறையை எதிர்த்த பெரியார் படத்தை போட்டு ஓட்டு பொறுக்கும்......... இவர்கள்

*****
//ஓரினச்சேர்க்கை அனுபவம் உண்டா?!//
உண்டு.
இது சம்பந்தமா இன்னொரு கேள்வியும் வந்துள்ளது. அதற்கு விரிவாக பதிலளிக்கிறேன்
சின்ன ட்ரைலர்
உலகில் 60% க்கும் மேற்பட்ட ஆண்கள் பைசெக்ஸுவல்

****


 

பிறருக்கு என் மீது இருக்கும் மதீப்பிடுகள் பற்றியெல்லாம் அக்கறையில்லை
நான் ஏற்கனவே கேள்வி - பதில் பகுதி எழுதிகிட்டு இருக்கேன். சிலருக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்து கொள்ள கூச்சத்தாலே முடியாமல் இருக்கலாம். அவர்களுக்காக தான் இந்த அப்ளிகேசனை எடுத்தேன்.



***

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin