அறிவியல் மட்டுமே விழிப்பை கொடுக்கும்

ஜோசியர்கள் வெகுநாளாக புருடா விட்டுக்கொண்டிருக்கும் காமா கதிர்கள் எவ்வாறு உருவாகிறது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

என்னாது சமீபத்திலா?

ஆம் சமீபத்தில் தான்..

காமா கதிர்கள் அருகில் இருக்கும் கோள்களில் சூரிய கதிர்வீச்சினால் உருவாகும் கதிர்கள் என்ற கருதுகோளை வைத்தே இவ்ளோ நாள் ஜோசியர்கள் குழப்பத்தில் இருப்பவர்களை கூட ஏமாற்றி வந்தார்கள்

சென்ற ஆகஸ்ட் மாதம் அஸ்ட்ரோபிசிக்ஸ் குழு. அந்த குழுவுக்கு இந்தியாவில் பூனேயில் கூட ஒரு ஆராய்ச்சி மையம் இருக்கிறது. இரு நியூட்டான் வீண்மீன் ஒன்றை ஒன்று மோதி பெரும் ஒளிகற்றையை உருவாக்குவதை கண்டுபிடித்தது.

கண்டுபிடித்தது என்பது சரியான வார்த்தையா என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அந்த நிகழ்வு நடந்து 13 கோடி வருடங்கள் ஆகிறது. அந்த ஓளி நம்மை வந்தடைந்தது இப்போது எனலாம். கூடவே காமா கதிர்களையும் அவர்கள் கண்டார்கள்.

நியூட்ரான் விண்மீன் என்பது வயதான சூரியன். எரிபொருள் தீர்ந்து, வீங்கி பின் நியூட்ரான் வீண்மீனாக மாறும். அப்போது ஒரு பூமிபந்தை கால்பந்துக்குள் அடைத்து வைக்கும் நிறை இருக்கும். அப்படி இரண்டு நியூட்ரான் வீண்மீன்கள் மோதிக்கொண்டன.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் பிற கோள்கள் உருவாக காரணமே இப்படியான நியூட்ரான் வீண்மீன்கள் வெடிப்பு தான். ஹைட்ரஜனும், ஹீலியமும் ஆக இரு தனிமங்கள் மட்டுமே இருக்கும் சூரியன்கள் மோதி வெடிக்கும் பொழுது தான் மேலும் பல தனிமங்கள் உருவாகிறது.

பெருவெடிப்பு என்ற விபத்து பிரபஞ்சத்தை உருவாக்கியது. நியூட்ரான் வீண்மீன் மோதல் என்ற விபத்து மேலும் தனிமங்களை உருவாக்கியது. அப்படியே தான் நியூட்ரான் என்ற உட்கரு நியூக்கியஸ் என்ற தன்னை தானே பிரித்துக்கொள்ளும் செல்லாக விபத்தில் உருவானது தான் உயிர். கடவுள்னு யாரையாவது கும்பிட்டே ஆகனும்னா தற்செயலையும், விபத்தையும் கும்பிடுங்க

https://www.youtube.com/watch?v=qPyGvq0AVUQ

1 வாங்கிகட்டி கொண்டது:

DHARUMAN said...

வால்பையனுக்கு வாழ்த்துகள்.
அறிவியலின் உள்ளார்ந்த
விழிப்புணர்வு வால்பையனால் தெரிய
வந்தது.


அன்புடன்

எல்.தருமன்
18. பட்டி

!

Blog Widget by LinkWithin