கேள்வி-பதில் (01.06.17)

கேள்விகள் Para Meswaran

1. காய்ச்சல் குணமான பின் அதிக சுறுசுறுப்பை உணர்கிறோமே அதன் காரணம் என்ன?

பதில்: குளிரூட்டபட்ட அறையில் இருந்து வெளியே வரும் பொழுது இரவாக இருந்தாலும் நம் உடல் வெப்பத்தை உணரும். களைப்பு என்பது உங்களை ஓய்வு எடுக்க உங்கள் மூளை தூண்டும் செயல். போதுமான ஓய்வு கிடைத்தவுடன் களைப்பு நீங்கி உற்சாகம் அடைவீர்கள்

2. உலகத்தையே ஆண்ட பிரிட்டிஷாரால் தம்மாத்துண்டு பாண்டிச்சேரியை அடிச்சு பிடுங்காமல் இருந்ததன் காரணம் என்ன?

பதில்: ப்ரெஞ்சு, போர்ச்சிகிஸ் எல்லாம் ஐரோப்பிய யூனியம் பிரதேசம் தான். வியாபாரத்திற்காக வந்த பொழுதே அவர்களுக்குள் இருந்த ஒப்பந்தம் அது. அவர்கள் வெள்ளையர்கள் என்ற பொதுவிசயத்தில் ஒன்றுபட்டு இருந்தால் இந்தியா சாதி/மதம் என்ற விசயத்தில் பிளவு பட்டு இருந்தது

2. அரபுநாடுகள் & சீனதேசம் போன்றவை ஐரோப்பிய காலணி ஆதிக்கத்தில் இருந்தவையா? இல்லையென்றால் என்ன காரணம்?


பதில்:வணிகரீதியாக ஆக்கிரமிப்பு எல்லா பக்கமும் காலணி ஆதிக்கம் செய்தது. 1950களில் ஆப்கானை பார்த்தால் நம்பவே மாட்டீர்கள். மற்ற அரபு நாடுகள் பாலைவன பகுதியாக இருந்ததால் மற்ற வளங்களை எதிர்பார்த்து காலணி ஆதிக்கம் செய்யவில்லை. சீனாவில் இன்றும் ஹாங்காங் பகுதி காலணி ஆதிக்கத்தில் தான் உள்ளது. ஆனால் சீனா காலணி ஆதிக்கத்தில் இருந்ததை விட குட்டி தீவான ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்தது தான் கொடுமை



3. தென்கொரியாவின் திடீர் அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம்?

பதில்:வடகொரியா மேல் இருந்த வெறுப்பின் காரணமாக மற்ற நாடுகள் தென் கொரியாவிற்கு உதவியது முக்கியமாக அமெரிக்கா, வட கொரியா தன்னை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றகொள்ள முயற்சித்த சமயத்தில் தென் கொரியா எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதிகள் சந்தையின் முக்கிய இடத்தை பிடித்தது. நாம் பயன்படுத்திய கொரிய போன்கள் தென் கொரியாவில் இருந்து வந்தது தான். உலகின் பெரும் முதலாளித்துவ நாடுகள் வட கொரியாவின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது


4. சேட்டிலைட் இல்லாத காலத்தில் கண்டம்விட்டு கண்டம் தொலைபேசியில் எப்படி பேசினார்கள்? கடலுக்கடியில் கேபிள்?

பதில்: தந்தியில்லாத இணைப்பை கண்டுபிடிக்கும் வரை நாம் கண்டம் விட்டு கண்டம் பேசிக்கொள்ளவில்லை. சாட்டிலைட் வருவதற்கு முன்னால் காற்றலைகள் மூலம் கிடைக்கும் சிக்னலை ரீசிவர் மூலம் பெற்று வந்தார்கள். அது அதிகமாக ராணுவத்தில் மோர்ஸ் கோட் போன்றவற்றை மொழிபெயர்க்க பயன்பட்டது

5. ஆதிகாலத்தில் இரும்பை எப்படி கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பித்தார்கள்? தாது கண்டறியும் வசதி, சுரங்கம் இதெல்லாம் எப்படி?

பதில்:்உலோகங்களை மனிதன் முதலில் அறிந்தது எரிமலை குழம்பின் மூலம், குளிர்ந்த எரிமலை குழம்பில் இருந்த உலோகம் கல்லை விட கடினமாக இருந்ததால் அதை ஆயுதமாக பயன்படுத்தினான். இரும்புக்கு முன்னரே மனிதன் பயன்படுத்தியது பித்தளை. கடின உலோகம், மென் உலோகம் என்று தான் வகைபடுத்தினான் தன் பயன்பாட்டிற்காக. தங்கத்தின் மேல் உள்ள மோகம் கடைசி 6000 வருடங்களில் தான் இருக்க வேண்டும். அதற்கு முன் தான் வேட்டையாடிய விலங்குகளின் பாகத்தையே அணிகலனாக அணிந்தான்

6. பாடிபில்டர்கள் அனைவரும் அசைவ உணவை உட்கொள்பவர்களா?

பதில்: நம் உடலுக்கு தேவையான மிக முக்கியான சக்தி புரதத்தின் மூலமே கிடைக்கிறது. அந்த புரதம் மாமிசத்தின் மூலமே கிடைக்கிறது. நாம் தற்சமயம் எடுத்துக்கொள்ளும் அரிசி, கோதுமை வகைகள் நம் உணவு அல்ல. அவைகள் மாவு சத்துகள் எனப்படும் கார்போஹைட்ரேட். அவை உடலுக்குள் சென்று குளுகோஸாக மாறி சக்தியாக மாற்றப்பட நம் கணையம் படாதபாடு படுகிறது. உலகில் தற்சமயம் பரவலாக காணப்படும் நீரழிவு பிரச்சனைக்கு காரணம் அது தான். கணையம் தான் இன்சிலின் சுரக்கிறது


7. நீலப்படத்தை முதன்முதலில் எடுத்த & திரையிட்ட இடம்பற்றிய விவரங்கள் இருக்கா?

பதில்:நீலப்படமாக எப்ப எடுத்தார்கள் என தெரியவில்லை. ஆனால் கலிகுலா போன்ற கிறுக்கு மன்னர்கள் காலத்தில் உடல் உறவு காட்சிகளை அமர்ந்து ரசிக்கும் பழக்கம் இருந்ததாக வரலாற்று செய்திகள் உள்ளன. அந்தகாலத்துக்கு அந்தபுரத்தை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்



8. ஒளி பரவ ஊடகம் தேவையென்றால், வெற்றிடத்தில் எப்படி ஒளி ஊடுறுவ முடிகிறது?

பதில்:ஒலி அதாவது சவுண்ட் தான் வெற்றிடத்தில் பரவாது. ஒளி(வெளிச்சம்) பரவும். ஆனால் அந்த ஒளியை காண அது எதாவது பொருளின் மீது பட்டு எதிரொளிக்க வேண்டும்.

9. "வெட்றி" என்று உச்சரிப்பதை ஏன் வெ-ற்-றி என்று எழுதுகிறோம்?

பதில்:தமிழில் மிக சிக்கலான சிறப்புகளின் இதுவும் ஒன்று. ஒலி வடிவம் உங்களுக்கு அப்படி தெரியுது. தமிழர்கள் அல்லாதவர்களுக்கு ந,ன,ண உச்சரிப்பு ஒரே மாதிரி தான் தெரியும். பல்லி, பள்ளி ரெண்டையும் சொல்லிப்பாருங்க. ப எழுத்தில் தான் அழுத்தம் மாறும்படி தோணும்

10. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது உடனே எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாது, மொபைலில் வீடியோ எடுக்கும் சமகால மனிதர்களின் சைக்காலஜி பற்றி எவ்வளவு யோசித்தாலும் புரிய மாட்டேங்குது கொஞ்சம் விளக்கவும்?

பதில்: முதல் விசயம் சம்பவத்தின் பாதிப்பை அவர் உடல்/ரீதியாக உணர வில்லை. ஏன்னா அவர் அடிபட்டிருந்தால் அப்படி செய்ய மாட்டார். பொருள் முதல் வாத சமூகம் பக்கத்துக்கு வீட்டுகாரன் பேரே தெரியாம இருக்கு. அவனுக்கு ஒன்னுன்னா எப்படி உதவிக்கு ஓடும். உளவியல் ரீதியாக இன்றைக்கு 40% இளைய தலைமுறையினர் மன அழுத்தத்தில் உள்ளனர். நிரத்தர வேலையில்லாதது ஒரு காரணம். நான் வேலைக்கு போனா தான் சோறு, எனக்கு தேவைனா நான் தான் பார்த்துக்கனும் என்று தன் சார்ந்தே சிந்தனைகள் மாறி போனது இதனால். சம்பவ இடத்தில் விடீயோ எடுப்பவர்களை விட அதை மாறி மாறி ஃபார்வேர்ட் செய்யும் சைக்கோக்களை நினைத்தால் தான் எனக்கு பயமா இருக்கு. கொடூரமாக கொல்வது. அடிபட்டு உடல் பாகங்கள் சிதறிகிடப்பது போன்றவற்றை என்னால் பார்க்கவே முடியாது. அதை ரசித்து பின் பிறருக்கு அனுப்பவர்கள் மனநிலை என்ன மாதிரி இருக்கும்?


#கேள்விபதில்
#வால்பையன்

1 வாங்கிகட்டி கொண்டது:

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

!

Blog Widget by LinkWithin