மூட நம்பிக்கை!

                        அறியாமை, மூடநம்பிக்கை இரண்டுமே நம்பிக்கையின் இரண்டு கிளைகள். ஆனால் இரண்டுக்கும் ஒரு சமுத்திரத்தின் அளவு இடைவெளி உள்ளது

காட்சி படுத்தப்படும் நம்பிக்கைகளை அறியாமை லிஸ்டில் வைக்கலாம். உதாரணமாக ஃபேர் அண்ட் லவ்லி போட்டால் வெள்ளையாகிருவோம். எர்வா மார்டின் போட்டால் முடி வளரும் போன்றவை.

இவைகள் உங்கள் அறியாமையை பயன்படுத்தி உங்கள் நம்பிக்கையை பெறுபவை. தலைக்கு ப்ளீச் பண்ணுவாங்க. தல முடி ப்ரெளன் கலரில் மாறும். அதே மாதிரி உங்கள் முகத்தில் இருக்கும் சிறு சிறு கருப்பு முடிகளை தோலின் நிறத்திற்கு மாற்றுவது தான் அவர்கள் வேலை. உங்கள் தோலில் இருக்கும் மெலினின் தான் உங்கள் பாதுகாப்பு. அதை நீக்குகிறோம்னு ஒரு கம்பெனி வாக்கு கொடுப்பதும்., உங்களுக்கு தோல் புற்றுநோய் வாங்கி தருகிறோம் என்பதும் ஒன்று



மூட நம்பிக்கைகள் அனைத்துமே மதம் அல்லது கடவுள் என்ற புள்ளியில் இருந்து விரிவும் கிளைகள். சிறு வயதில் இருந்து மதநம்பிக்கை திணிக்கப்படுவதால் அதும் அவர்கள் பெற்றோர்களாலே திணிக்கப்படுவதால் அதுவே உண்மை என்று மனதில் பதிந்து விடுகிறது. இந்த நம்பிக்கையின் இன்னொரு சிக்கல் அது ஒழுங்கம் சார்ந்த முக்கிய விதியா போதிக்கப்படுவது. சீரியஸாவே கடவுள் மறுப்பாளர்கள் ரொம்ப கெட்டவர்கள் போல அவர்களுக்கு போதிக்கப்படும். இந்து மதத்தில் ஒழுங்கம் கெட்டவர்கள். மற்ற இரு மதத்தில் சாத்தான்.

அந்த வேரின் கிளைகளான மூட நம்பிக்கைகளை கேள்வி கேட்பதும் அவர்களுக்கு கோவம் ஊட்டகூடியவை தான். உங்க நம்பிக்கை தவறு என்று நாம் சொல்றது. போடா ஒழுங்கம் கெட்டவனேன்னு அவர்கள் காதில் விழுது. மூடநம்பிக்கையின் அனைத்து கிளைகளையும் பின்பற்ற வேண்டியதும் ஒழுக்கத்தின் கட்டாய கோட்பாடாகி விடுகிறது.



காயத்திரி மந்திரம் சொன்னால் மூளை வளரும், கோமிசம் குடித்தால் உடலுக்கு நல்லது. வண்டி முன் எலுமிச்சை மாட்டினால் தூக்கம் வராது போன்ற எல்லா மூடநம்பிக்கைகளும் திரிக்கபட்டவை. உங்களுக்கு தெரியாது என்ற ஒரே அறியாமையை பயன்படுத்தி உங்களை முட்டாளகவே வைத்திருக்கும் மதத்தின் தந்திரம் இது.




மாடு ஒரு விலங்கு, அது குட்டி போடும். பாலூட்டிகள் அனைத்திற்கும் குட்டி போட்டா பால் சுரக்கும். எலியும் பாலூட்டி தான். யானை மட்டுமல்ல. பூமியில் பெரிய விலங்காகிய நீலதிமிலங்கமும் பாலூட்டி தான். மாடு உங்களுக்கு வசதியா இருந்தது. புடிச்சி வச்சி கரந்துகிட்டு இருக்கிங்க. நியாயமா சொல்லனும்னா கன்னுகுட்டியின் பாலை திருடிகிறீர்கள். மாடு தேவைக்கு அதிகமாக பால் சுரக்க அதற்கு ஸ்ட்ராய்டு உணவுகளும், ஊசியும் போட்டு அதை வதைக்கிறிங்க,

இவ்வளாவும் பண்ணிட்டு அதை தொட்டு கும்பிட்டு, அதன் மூத்திரத்தை குடித்து அதை புனிதம் எங்கிறீர்கள். உங்களை போன்ற சக மனிதனை தீண்டதகாதவன் எங்கிறீர்கள். மதம் என்னும் மடதனத்திற்கு இதை விட வேறென்ன பெரிய சான்று தேவைப்படும்.

செக்கு மாடுகள் உழுவுக்கு ஆகாதுன்னு ஒரு பழமொழி இருக்கு. ஏன்னா அதற்கு அறிவு அதையே சுத்தி சுத்தி வருவது தான். அதற்கு அறிவு வரும் பட்சத்தில் அது மனிதனாகும். மதத்தை தூக்கி போடும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin