பிரிட்டன் தேர்தல்!

பிரிட்டனில் மீண்டும் அடிப்படைவாத கட்சியை சேர்ந்த தெரசாமே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து எல்லாம் சேர்ந்து மொத்தம் 650 சீட்டுகள். அதில் 326 சீட்டுகள் பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும். ஆனால் கன்சர்வேடிவ் கட்சி பெற்றுள்ளது 318 இடங்கள் மட்டுமே., அவர்களுக்கு டெமாடிரிக் கட்சி 10 சீட்டுடன் ஆதரவு அளிப்பதால் 328 சீட்டுகள் என்று பெரும்பான்மை காட்டி ஆட்சி அமைக்க இருக்கிறது.
இதெல்லாம் பேப்பர்லயே வரும். நீ என்னடா சொல்ல வர்றன்னு தானே கேக்குறிங்க. இந்த (கன்சர்வேடிங்) பழமைவாதகட்சி தான் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்தது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தான் அந்த கட்சியின் பெயரே


சூரியன் மறையா நாடு என பெயர் பெற்றது பிரிட்டன். அந்த அளவு உலகம் முழுவதும் நாடுகளை அடிமை படுத்தி வைத்திருந்தது, நம்ம ஊரில் சோத்துக்கு ......பவனே தன்னை ஆண்ட பரம்பரைன்னு பெருமை பீத்தும் போது அவனுக்கு எவ்ளோ இருக்கும். அதும் அந்த கட்சியின் கொள்கையே பழமை வாதம் தான். சுருக்கமா சொல்லனுமா அவனும் முன்னோர்கள் முட்டாள் இல்லன்னு சொல்லிட்டு திரியிறான்
இதற்கு முன் டேவிட் கேமரூன் என்ற நபர் இருந்தார். அப்பொழுது பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளிவர வேண்டுமா வேண்டாமா என்று மக்களிடம் பொது வாக்கெடுப்பது நடந்தது. அதன் முடிவு வெளியே வரலாம் என்று மக்கள் வாக்களிக்கவும். டேவிட் கேமரூன் பதிவு விலகினார். தெரசாமே பதிவேற்றார். அவர் பதிவு ஏற்று ஒரு வருடம் தான் ஆகிறது என்பது தான் சிறப்பு.


இந்த தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றிருப்பது தொழிலார் கட்சி. நல்லவேளை இரண்டாம் இடம் பெற்றது. பிரிட்டனும் முழுமையான முதலாளித்துவ நாடு தான். ஆனால் ஐரோப்பிய யூனியனில் இருந்த பொழுது கொஞ்ச்ம் விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள் போல. அதான் தொழிலாளர்கள் கட்சி இரண்டாம் இடம் வந்துருக்கு.
இந்த ஸ்திரதன்மை இல்லாத தேர்தல் முடிவு அதாவது 326 சீட்டுகள் பெறாமல் கூட்டு அமைத்து ஆட்சி ஏறும் சூழலால் பிரிட்டன் பொருளாதாரம் அன்னிய செலாவணியில் கொஞ்சம் இறக்கம் கண்டுள்ளது. அதனால் அமெரிக்காவில் முதலீடு அதிகமாகி டாலர் மதிப்பு உயர்ந்து தங்கம், வெள்ளி விலை இன்று குறைந்தது.
நடந்த முடிந்த ஒரு வருடத்தில் தெரசாமேவின் செயல் திட்டம் எதுவும் முழுமை பெற்றிருக்காது. இனி தான் பார்க்க வேண்டும். ஆனால் மொத்த உலகத்தின் பயம் என்னவென்றால் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மூன்றிலும் சொல்லி வச்சா மாதிரி பழமைவாதிகள் ஆட்சி செய்வது தான். மீண்டும் கிழங்கிந்திய கம்பெனி இந்தியா வரலாம்.
நாம் எப்போதும் அடிமைகளாகவே இருக்கிறோம். ஆள்பவர்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறார்கள்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin