பவர் பாண்டியும்., பெண்கள் காதலும்!

நல்ல கதையை சொதப்பலா எடுத்துருக்காங்கன்னு பவர் பாண்டி படத்தை பத்தி கண்ணம்மா வருத்தப்பட்டிருந்தா. ஒரு ட்ராமாவை இதுக்கு மேல என்ன பண்ண முடியும்னு தெரியல

பொதுவா பெண்ணியவாதிகளிடம் ஒரு பேச்சு உண்டு. ஆண்கள் பழைய காதலை தேடிபோகும் படமா எடுக்குறாங்க. பெண்கள் போற மாதிரி ஏன் எடுப்பதில்லைன்னு

ஒரு முத்தச்சி கதான்னு மலையாளபடம் ஒன்னு. ஆங்கிலத்தில் வந்த த பக்கெட் லிஸ்ட் சாயலில் இருக்கும். வயசான நேரத்தில் ஆசைபட்டதெல்லாம் செய்யும் போது காதலனையும் சந்திப்பதும் ஒரு விருப்பமா இருக்கும்.



ஒப்பிட்டளவில் பார்த்தால் மலையாள சினிமா, தமிழ் மசாலாக்களை தாண்டி காத தூரம் போயிருச்சு. கிட்டதட்ட சார்லி படமும் இப்படி தான். ஆனால் வயசான இல்ல.

ஆனால் என்னை பொறுத்தவரை பெண்கள் பழைய காதலனை பார்க்கும் அளவுக்கு மன ரீதியாக தூண்டப்பட மாட்டார்கள். இயற்கையிலயே பாதுகாப்பு உணர்வு அதிகம் என்பதால் மகிழ்வை அனுபவிப்பதை விட தான் செய்வது சரியா, தவறான்னு குழப்ப ம்னநிலையில்யே இருப்பார்கள். அதும் முதல் காதல்னா சொல்லவே வேண்டாம்

ஒரு இழப்பை தாங்கிக்கொள்ள சட்டென்று எதிராளின் மேல் எல்லா பழியையும் தூக்கி போட்டு குற்ற உணர்வின்றி அனுபவத்தை தூக்கி போடுவது பெண்களுக்கு எளிதான ஒன்று. அது வரமும் கூட. அதனால் தான் பெண்கள் காதல் தோல்வில் தாடி வளர்த்து தண்ணி அடிப்பதில்லை.



பெண்கள், சமூக அமைப்பு, குடும்ப கட்டுமானத்தில் வளர்க்கப்பட்டவர்கள். தன் உரிமைகளை விட சமூகம் என்ற நான்கு பேருக்கு பயப்படுவார்கள். தன் குழந்தைகளும் அதே போல் வளர்த்து அவர்கள் உரிமைகளையும் பறிப்பார்கள்.

அடுத்த தலைமுறையாவது ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் வளர்ந்து வாழட்டும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin