கேள்வி-பதில் (கடலில் ஏன் உப்பு)

கேள்வி:
ஆறு நீர் ஏன் உப்பு கரிப்பதில்லை? கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது?

பதில்:
கடல், ஏரி, குளம் என எல்லா நீர் ஆதாரங்களில் இருந்தும் வெப்பத்தால் நீர் ஆவியாகும், வேதியல் முறைப்படி வெப்பத்தால் நீர் மூலக்கூறுகள் விரிந்து கனமிழந்து மேல் நோக்கி எழுவது நாம் நீராவி என்கிறோம். அவ்வாறு ஆவியான நீர் மேகமாக வானில் சேர்கிறது.

நீராவியான மேகத்தின் மீது குளிர்ந்த காற்று படும் பொழுது அதன் வெப்பம் தளர்ந்து அந்த மூலக்கூறுகள் மீண்டும் இணைந்து நீராகி மழையாக பூமியை நோக்கி பொழுகிறது. அந்த குளிர்ந்த காற்றுக்காக தான் மழை பெற மரம் அவசியம் என்கிறோம். தாவரங்கள் தான் குளிர்ந்த காற்றை உற்பத்தி செய்கிறது

மழையாக பூமியை வந்தடைந்த நீர், பள்ளத்தை நோக்கி ஓடுகிறது. அவ்வாறு ஓடும்பொழுது மண்ணில் இருக்கும் கரைக்ககூடிய தாதுக்களை தன்னுடன் கரைத்து அடித்து இழுத்துச்செல்கிறது. அந்த தாதுக்களில் சோடியம் குளோரடு என அழைக்கப்படும் உப்பும் ஒன்று, அது போல் எல்லா தாதுக்களையும் தான் அடித்துச்செல்லும்.

சோடியம் குளோரைடு என்ற உப்பை தவிர மற்ற தாதுக்கள் உயிரினங்களுக்கு சத்தாக எடுத்துக்கொள்ளபடுவதால் அவை ஒரே இடத்தில் தேங்குவதில்லை. கடலுக்கு சென்ற உப்பு, நீர் ஆவியாகும் பொழுது கடலிலேயே தங்கி விடுகிறது. சுமார் 450 கோடி வருடங்களாக இது மீண்டும் மீண்டும் நடைபெறுவதால் கடலில் உப்பு சுவை அதிகமாகி விட்டது.



ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தியை கணக்கிட்டு தான் தோராயமாக பூமியின் வயசு 450 கோடி வயசு இருக்கலாம் என கணக்கிட்டார்கள். கடலை போலயே பல வருடங்களாக தேங்கி நிற்கும் ஏரி குளங்களில் உப்பு சேரும், ஆனால் குறைந்த அளவே இருப்பதால் நம்மால் உப்பு சுவையை அறிய முடிவதில்லை.



உதாரணத்திற்கு இஸ்ரேல் அருகில் இருக்கும் டெட் சீ(dead sea) கடலில் இருந்து பிரிந்த ஏரி பகுதி தான் ஆனால் அதில் உப்பின் அடர்த்தி அதிகம், மனிதனை மூழ்காமல் மிதக்க வைக்கும் அளவுக்கு.

#அறிவியல்
#கேள்விபதில்
#வாலு_பதில்கள்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin