திவால் ஆகுமா இந்தியா - பாகம்3

இந்த தொடரில் இது மூணாவது கட்டுரை. இந்த கட்டுரை வரிசையில் முந்தைய கட்டுரையின் சந்தேகங்கள், விளக்கங்கள் தந்து விட்டு அடுத்த கட்டத்துக்கு போவது தான் சரியாக இருக்கும், போன கட்டுரையிலும் இதை செய்திருந்தேன்.

தொழிலாளர்கள் நல வைப்புநிதி பிடிப்பது நல்லது தான். அதை இன்னும் விரிவு படுத்தி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கொண்டு வர வேண்டும், அவர்களின் சேமிப்புக்கு அதிக வட்டி கொடுத்து ஓய்வு பெறும் வயதில் அவர்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க உதவ வேண்டும் என்பது தான் என் விருப்பமும், அதிர்ஷ்டவசமாக மேலை நாடுகளில் இம்முறை உள்ளது. நம் நாட்டில் இருந்தாலும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. போக வேலை வாய்ப்பை உருவாக்கினோம் என்பது மோசடி தானே.

சரி அப்படி பிடிப்பதாகவே வைத்துக்கொள்வோம், தமிழக அரசு நம் அரசு பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொழிலாளர் நல வைப்பு நிதியை உரிய நிறுவனத்தில் சேர்க்காமல் பிரச்சனை ஆனது தெரியுமா? போக்குவரத்து தொழிலாளர் பலருக்கு ஓய்வு பெறும் பொழுது கொடுக்க வேண்டிய தொகையை இன்னும் கொடுக்காமல் இருப்பது தெரியுமா? நிதி பற்றாகுறையில் ஏகப்பட்ட காலி பணியிடங்கள் நிரப்ப படாமல் இருக்கிறது, 8000க்கும் அதிகமான அங்கன்வாடிகள் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது, அங்கன்வாடிகள் இந்தியாவிற்கு மிக மிக தேவையான ஒன்று.

சென்ற கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்த இரண்டு விசயங்களும் சவுக்கு கட்டுரையில் வந்துள்ளது, போக அது வடநாட்டு பொருளாதார நிபுணரால் எழுதபட்டு தமிழில் மொழிபெயர்க்க பட்டது, எங்கே இருந்து பார்த்தாலும் உண்மை என்பது உண்மை தானே. சிறு தொகையை கடனாக கொடுத்து விட்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளோம்னு சொல்வதனால் இந்தியாவின் பொருளாதார நிலை மாறி விடுமா என்ன?

நமது இந்திய ஜனாதிபதிகளில் ஜெயில்சிங் தவிர மற்ற அனைவரும் ரப்பர் ஸ்டாம்ப் போல் தான் செயல்பட்டார்கள், வெங்கட்ராமன் கொஞ்சம் பரவாயில்லை. பாஜக அரசு உயர்பதிவுகளில் யாரை நியமித்தாலும் அவர் அப்துல்கலாம் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். அவர்கள் ஆசையில் மண் அள்ளி போட்டார் ரகுராம்ராஜன், இவர் அமெரிக்காவின் முக்கிய வங்கியில் நிதி துறையை நிர்வகித்தவர், இவரையும் ரப்பர் ஸ்டாம்பா இருக்க சொன்னா எப்படி?

இந்தியாவில் சி.பி.ஐ, தேர்தல் ஆணையம், நீதிதுறை மற்றும் ரிசர்வ் வங்கி அரசு தலையீடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக நம்பப்படுகிறது!? முந்தைய ஆட்சி வரை ரிசர்வ் வங்கி அப்படி தான் இருந்தது. ஆனால் இந்த அரசு பொருளாதார கொள்கையில் ரகுராம்ராஜன் பேச்சை செவிமடுக்க தவறியது. பல முறை நேரடியாகவே எச்சரித்தும் மோடி தான் செய்வது சரி என்றே நம்பினார்

உலகில் பல நாடுகளில் ஒரே தேசம், ஒரே வரி என்ற ஜி.எஸ்.டி முறை உள்ளது. அவைகள் பெரும்பாலும் ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடிக்கபடுபவை அல்லது முறைபடுத்தப்பட்டு போதிய பயிற்சி கொடுக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டவை. ஒரு நாட்டின் ரிசர்வ் அல்லது செண்ட்ரல் அல்லது ஃபெடரல் வங்கியின் முக்கிய பணி அந்த நாட்டின் பண வீக்கத்தை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் வட்டி விகிதத்தை சமன் செய்து பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பது

முன்னர் உற்பத்தி வரி, மொத்த வியாபார வரி, சில்லறை வர்த்தக வரி என்று தனி தனியாக இருந்த பொழுது நமது நாட்டின் உண்மையான ஜி.டி.பி கணக்கிட வசதியாக இருந்தது. தற்சமயம் ஜி.எஸ்.டிக்கு பிறகு வரி வருவாய் அதிகரித்திருப்பது போல் தெரிந்தாலும் உண்மையில் பண வீக்கமும் அதிகரித்துள்ளது. மோடி செய்ததில் பணமதிப்பிழப்பை விட பெரிய முட்டாள் தனம் 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தியது.

நோட்டு அடிப்பது, வட்டி விகிதத்தை தீர்மானிப்பது மட்டுமே ரிசர்வ் வங்கியின் வேலையில்லை, வங்கி துறையை பொறுத்த வரை ரிசர்வ் வங்கி ஒரு வாட்ச்டவர். நம் நாட்டில் உள்ள வங்கிகள் ஒரு குறிபிட்ட தொகை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்துள்ளது. அந்த வங்கி திவால் ஆனால் மக்களுக்கு குறைந்தபட்ட பணமாவது போய் சேர வேண்டும் என்பதற்கான ஏற்பாடு, போக அந்த வங்கி உபரியாக இருக்கும் பணத்தை ரிசர்வ் வங்கியில் வைப்பு கணக்கில் வைத்து வட்டி பெறும், பணம் இல்லாத பொழுது ரிசர்வ் வங்கியிடம் பணம் பெற்று வட்டி கட்டும், இது ரிசர்வ் வங்கியின் முக்கிய வருமானம்

இம்மாதிரி வங்கிகள் டெபாசிட் தொகை ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர்கள் வசம் மட்டுமே உள்ளது. ஆனால் பாஜக அரசு ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் டெபாசிட் தொகையில் பாதியை அரசிடம் தருமாறு கேட்கிறது, (வட்டியும் கொடுத்த தயார்னு சொன்னதா தகவல்) மக்களின் நல திட்டங்களுக்கு!?(சிலை வைப்பது தான் நல திட்டம் போல) தேவைபடுகிறது என்பது அவர்கள் வாதம்.



ஒரு நாட்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணபுழக்கம் இருக்கக்கூடாது, அப்படி இருந்தால் ஜிம்பாப்வே நாட்டை போல் நூறு கோடிக்கெல்லாம் நோட்டு அடிக்கும் நிலை வரும், ஜிம்பாப்வேயில் ஒரு காப்பி  50000 டாலர் அந்த நாட்டு பண மதிப்பிற்கு, அதாவது அங்கே பணத்திற்கு மதிப்பே இல்லாமல் போனது, காரணம் அங்கேயும் மோடி மாதிரி ஒருத்தர் ஆட்சி செய்ததால். இதை உணர்ந்த ரகுராம்ராஜன் எச்சரிக்கையுடன் தனது பணியை ராஜினாமா செய்தார்

வழக்கம் போல் பக்தாஸ் தங்களது கற்பனை திறனால் கட்டுகதை அவிழ்த்துவிட்டார்கள், ரகுராம்ராஜனுக்கு கிரீன்கார்ட் காலம் முடிய போகிறது, அவர் உடனே அமெரிக்கா போகவில்லை என்றால் இனி அமெரிக்காவில் தங்க முடியாத நிலை ஏற்படும் என்று, என்னிடம் விவாதம் செய்த சங்கிகள் சிலர் கூட இது தான் உண்மையான காரணம் என நம்புகிறின்றனர். ஆனால் உர்ஜித்படேல் ஏன் ராஜினாமா செய்தார்? அவர் எந்த நாட்டு கிரீன்கார்ட் பெற போகிறார்.

தேர்தல் நெருங்க நெருங்க மத்திய அரசின் பதட்டம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது மொத்த வராகடன் 54 லட்சம் கோடி என்ற தகவல் வெளிவந்துள்ளது. பாஜக அரசு அதை முந்தைய அரசின் ஊழல் என காரணம் காட்டினாலும் அந்த வரா கடனை திரும்ப வசூலிக்க என்ன முயற்சி எடுத்தது என்ற கேள்விக்கு மோடியிடம் இருந்து வணக்கம் என்ற பதிலோ, எச்.ராஜாவிடமிருந்து யூ ஆர் ஆண்ட்டி இண்டியன் என்ற பதிலோ வரலாம்.

அடுத்த கட்டுரையில் இருந்து முதலீட்டு ஆலோசனைகள் தொடங்கும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin