முட்டாள்தனத்தின் இரண்டாம் ஆண்டு விழா....

டிகிரி படித்த இளைஞர்கள், மெடிக்கல் ரெப் போன்ற ஒயிட் காலர் வேலையில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் பற்றி பத்து பைசாவுக்கு கூட தெரியவில்லை. பாஜகவின் முட்டாள்தனமான, அரைவேக்காட்டு தனமான பொருளாதார முடிவுகளால் நாட்டின் நிலை பற்றி சொன்னாலும் அவர்கள் காதில் எதுவுமே விழுவதில்லை, பாஜக பற்றி பேசினாலே அது இந்து மதத்துக்கு எதிரான வாதமாகவே பார்க்கிறார்கள்

நாடாளுமன்ற கூட்டுகுழுவே பண மதிப்பிழப்பு தோல்வி என வெள்ளை அறிக்கை கொடுத்தபின்பும் அருண் ஜெட்லி அதை வெற்றி என அறிக்கை விடுகிறார், பக்தாஸ் வழக்கம் போல் முட்டு கொடுத்துகிட்டு இருக்காங்க, அவர்கள் சொல்வது



கருப்பு பணம் ஒழிந்தது..

இதுவரை 99.4% அளவு பழைய நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டன, அதிகமாக டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு சொல்கிறது, ஆனால் அவற்றை உடைக்க என்னால் கூட முடியும்,

அறிவிப்பு வரும் நாளன்று ஆந்திராவில் பாஜக பிரமுகர் ஒருவர் வீட்டில் 580 கோடி செலவில் ஒரு திருமணம் நடந்தது, சேகர் ரெட்டி மற்றும் முட்டை ஒப்பந்த நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணமும், தங்க கட்டிகளும் எடுக்கப்பட்டது, பக்தாஸ் விசாரணை நடக்கிறது என முட்டு கொடுப்பார்கள், ஆனால் உண்மையில் அந்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டது, அதிமுகவின் கொட்டை பாஜகவிற்கு தேவைபட்டதால் அந்த கருப்பு பணம் பெயிண்ட் அடித்து வெள்ளையாக்கப்பட்டது

கள்ள நோட்டு ஒழிந்தது

பழைய கள்ள நோட்டு ஒழிந்ததால் பிரிண்ட் அடிந்தவனுக்கு யாதொரு நட்டமும் இல்லை, சென்ற மாதம் கோவையிலும், சென்ற வாரம் மதுரையிலும் கள்ளநோட்டு அடிக்கும் கும்பல் பிடிப்பட்டது, தமிழ்நாட்டில் இரண்டு இடங்கள் என்றால் இந்தியா முழுவதும் எவ்வளவு கள்ள நோட்டுகள் தற்பொழுது புழக்கத்தில் இருக்கும் என்பதை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்

வரி வருவாய் உயர்ந்தது..

வரி வருவாய் உயர்வுக்கு காரணம் ஜி.எஸ்.டி
தயாரிப்புக்கு உண்டான கச்சா பொருட்களில் இருந்து நுகர்வோர் கைக்கு வரும் வரை பல கட்டங்களில் வரி வசூலிக்கப்படுவதால் வருவாய் அதிகரித்துள்ளது, அவை அனைத்தும் நுகர்வோர் தலையில் விடிந்தது தான் உண்மை, விலை அதிகரிக்கவில்லை என்பது பக்தாஸ் வாதம், 20 கிராம் பற்பசை 15 கிராம் டியூப்பாக குறைந்தது அவர்களின் ஞானக்கண்ணுக்கு தெரியாது

வேலை வாய்ப்பு உருவானது..

உண்மையில் பணபுழக்கம் இல்லாமல் கோவை மற்றும் திருப்பூரில் மட்டும் பல குறுந்தொழில்கள் முடங்கின, அதனால் ஆயிரக்கணக்கில் வேலை இழந்தனர்,

அரசு தரும் வேலை வாய்ப்பு புள்ளி விபரம் ஒரு மோசம், எம்பாளிஸ் ப்ராஃபிடண்ட் ஃபண்ட்(EPF) என்பது ஒரு நிறுவனத்தில் 20 நபர்கள் வேலை பார்த்தால் அவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசு வைப்பு நிதியில் சேர்க்க வேண்டும், மோடி அரசு 10 நபர்கள் வேலை செய்தாலே அவர்களுக்கு EPF பிடித்தம் செய்ய வேண்டும் என அறிக்கை விட்டது, அதனால் சிறு நிறுவனங்கள் வேலையாட்களை கணக்கில் கொண்டு வர வேண்டி இருந்தது, புதிதாக கணக்கில் வந்த அந்த பழைய ஆட்களை அரசு உருவாக்கிய வேலை வாய்ப்பாக மோசடி கணக்கு காட்டியது பாஜக அரசு



எவ்வகையிலும் பலனில்லாத இந்த முட்டாள்தனமான முடிவை முட்டு கொடுப்பதால் மட்டும் நியாயப்படுத்தி விட முடியாது, அறியாமையில் இருக்கும் மக்களை இம்மாதிரி உண்மையை எடுத்து கொள்பவர்களை இந்து மத விரோதி என்ற போர்வையில் மடை மாற்றி கொண்டிருக்கிறது அரசு. உயர்ந்த விலைவாசி, பெட்ரோல் விலை போன்றவற்றை நாட்டு நலனுக்காக என நம்பிக் கொண்டிருக்கிறது பக்தாஸ் கூட்டம்

3000 கோடி பட்டேல் சிலையில் என்ன நாட்டு நலன் கண்டீர்கள் பக்தாஸ்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin