மெளனமும் ஒரு மொழி தான்!!

சிறகில்லாமல் பறந்தோம்!
உலகு மொத்தமும் துறந்தோம்!

நாம் காதலின் இலக்கணம் என்றோம்!
நம் காதலில் தலைக்கணம் கொண்டோம்!

நீ இல்லாமல் செத்து போவேன் என்றோம்!
தடைகள் கடந்து திருமணம் செய்தோம்!

இன்று
என்னை உன்னால் சமாளிக்கமுடியவில்லை!
உன்னை என்னால் சமாளிக்கமுடியவில்லை!

இப்பொது தோன்றுகிறது,
முதன்முறை பார்த்த போது

பேசாமலே இருந்திருக்கலாமென்று!



இது சும்மா லுலுலாயி

சும்மா ஒருநாள் சண்டை வந்தா இப்படி தான் கிறுக்குவேன்

110 வாங்கிகட்டி கொண்டது:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

யாராவது காப்பாத்துங்களேன்.. கொடுமை தாங்கலையே :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால், இன்னைக்குக் கோட்டா ஜாஸ்தி ஆகும்போல இருக்கே :(

அருண் said...

அனுபவம் பேசுதா வாலு?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாலு!
குறிச் சொற்களில் கூட நகைச்சுவை உணர்வைக் காட்டி விட்டீர்களே!

வால்பையன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
யாராவது காப்பாத்துங்களேன்.. கொடுமை தாங்கலையே //

என்னங்க பண்றது என்னாலயே இந்த கொடுமையை தாங்க முடியல

அருண் said...

//சும்மா ஒருநாள் சண்டை வந்தா இப்படி தான் கிறுக்குவேன்//

வீட்ல ஒரே Fighting ஆ?

வால்பையன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வால், இன்னைக்குக் கோட்டா ஜாஸ்தி ஆகும்போல இருக்கே :(//

போனா வாட்டி அதிகமாயிட்டதால தான் இந்த சண்டையே!!

:(

வால்பையன் said...

//அருண் said...
அனுபவம் பேசுதா வாலு?//

நீங்கல்லேல்லாம் மாட்டாமயா போயிருவிங்க!
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் சாமி!!

Poornima Saravana kumar said...

வீட்டுக்கு போங்க நல்ல கவனிப்பாங்க..
சின்ன சின்ன சண்டைகள் தான் அதிக சந்தோசத்தைத் தரும்..

வால்பையன் said...

//ஜோதிபாரதி said...
வாலு!
குறிச் சொற்களில் கூட நகைச்சுவை உணர்வைக் காட்டி விட்டீர்களே!//

நகைச்சுவையா!!

எங்கே? எங்கே?

லிங்காபுரம் சிவா said...

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வால், இன்னைக்குக் கோட்டா ஜாஸ்தி ஆகும்போல இருக்கே :(//

கரெக்ட்டா சொன்னிங்க சுந்தர்.

வாலு!
கவிதை செம கலக்கல் போங்க

வால்பையன் said...

//வீட்ல ஒரே Fighting ஆ?//

அது இல்லாமல் வாழ்க்கையா?

அருண் said...

//வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் சாமி!!//

நாங்க எல்லாம் போட்ல தான் ஏறுவோம்.

வால்பையன் said...

//PoornimaSaran said...
வீட்டுக்கு போங்க நல்ல கவனிப்பாங்க..
சின்ன சின்ன சண்டைகள் தான் அதிக சந்தோசத்தைத் தரும்..//

உண்மைதான்!
இன்னைக்கு கேக்காமயே ஆம்லெட் ரெடியா இருக்கும்

narsim said...

செம்புல நீர் ஆ சொம்புல "ரம்"புல நீரா தல‌???

அருண் said...

//
இன்று
என்னை உன்னால் சமாளிக்கமுடியவில்லை!
உன்னை என்னால் சமாளிக்கமுடியவில்லை!//

ஓவர் சரக்கா?

வால்பையன் said...

//பழைய பேட்டை சிவா said...
வாலு!
கவிதை செம கலக்கல் போங்க//

சிவா!
என்னைய வச்சு காமெடி, கீமெடி பண்னலையே

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நீங்கல்லேல்லாம் மாட்டாமயா போயிருவிங்க!
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் சாமி!! //


தங்களைப் போல் உண்மையை சொல்பவர்கள் வெகுசிலரே!
வீட்டுல எலி வெளியில புலி?
வீட்டுல புலி வெளியில எலி?
ஜனகராஜ் மற்றும் எஸ்.வி.சேகர் நடித்த படம் பார்த்திருக்கிறீர்களா?

வால்பையன் said...

//narsim said...
செம்புல நீர் ஆ சொம்புல "ரம்"புல நீரா தல‌???//

வார்த்தையிலேயே விளையாடுரிங்களே

வால்பையன் said...

//அருண் said...
//
இன்று
என்னை உன்னால் சமாளிக்கமுடியவில்லை!
உன்னை என்னால் சமாளிக்கமுடியவில்லை!//

ஓவர் சரக்கா?//

அமைதிக்கு பின் புயல்
சண்டைக்கு பின் தான் சரக்கு

வால்பையன் said...

//அருண் said...
//வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் சாமி!!//

நாங்க எல்லாம் போட்ல தான் ஏறுவோம்.//

பரிசல்காரர கூப்பிடுவோமா

அருண் said...

//பரிசல்காரர கூப்பிடுவோமா//

பரிசலுக்கு போட் ஓட்டத் தெரியுமா?

வால்பையன் said...

//ஜோதிபாரதி said...
தங்களைப் போல் உண்மையை சொல்பவர்கள் வெகுசிலரே!
வீட்டுல எலி வெளியில புலி?
வீட்டுல புலி வெளியில எலி?
ஜனகராஜ் மற்றும் எஸ்.வி.சேகர் நடித்த படம் பார்த்திருக்கிறீர்களா?//

எலி இருக்க வேண்டிய இடத்துல எலியா இருக்குறவன் தான் உண்மையான புலி

(இன்னைக்கு என்ன தத்துவமா வருது)

ராஜ நடராஜன் said...

ஓ! இதுக்குப் பேர்தான் கவிஜையா?நானும் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சுகிட்டிருந்தேன் இவ்வளவு நாட்களாக:)

திடீர்ன்னு டைமுக்கு ரைம்மா வருது பாருங்க இங்கே...

வார்த்தைக்கு எதிர்வார்த்தைப் பேசாட்டி
நீயென்ன பொம்பளையோ
முன்னெமெல்லாம் குழாயடிச் சண்டைகளே சுவராசியம்.
இங்கே குழாய்கள் இல்லாததால்
எல்லா லோலாயியும் என்கிட்டத்தான்.

ஹி.ஹி.ஹி:)

லிங்காபுரம் சிவா said...

//பழைய பேட்டை சிவா said...
வாலு!
கவிதை செம கலக்கல் போங்க//

வால்பையன் said...
சிவா!
என்னைய வச்சு காமெடி, கீமெடி பண்னலையே//


நீங்க கவிதை ல சொன்னது உண்ம னா...

நான் கம்மென்ட் குடுத்ததும் உண்மயே!!!

rapp said...

:):):)

rapp said...

//யாராவது காப்பாத்துங்களேன்.. கொடுமை தாங்கலையே :)//

:):):)

rapp said...

சரி நீங்க சண்ட வந்தா இப்டி பழிதீத்துக்கறீங்க. நான் இந்தப் பதிவால டென்ஷனாகி கவுஜ எழுதினா என்னாகும்:):):)

வால்பையன் said...

சிவா
உங்க கமெண்டு லெஃப்டுல இருந்தாலும் நீங்க சொல்றதும் ரைட்டு தான்.

நான் ரைட்ல டைப் பண்ணாலும் நான் சொல்றதும் ரைட்டு தான்.

:)

வால்பையன் said...

ஸ்மைலிக்கு
நன்றி ராப்

anujanya said...

கலக்கல் கவுஜ வால்பையன். ரசித்தேன்.

அனுஜன்யா

வால்பையன் said...

//rapp said...
சரி நீங்க சண்ட வந்தா இப்டி பழிதீத்துக்கறீங்க. நான் இந்தப் பதிவால டென்ஷனாகி கவுஜ எழுதினா என்னாகும்:):):)//

போட்டு தாக்குங்க ராப்!

வால்பையன் said...

//அனுஜன்யா said...
கலக்கல் கவுஜ வால்பையன். ரசித்தேன். //

ஏன் எல்லாரும் இப்படி என்னை வாருரிங்க

கார்க்கிபவா said...

நல்ல தெரிஞ்சவங்களே இப்படின்னா தெரியாதவங்கள கட்டிக்கிட்டா??????

//narsim said...
செம்புல நீர் ஆ சொம்புல "ரம்"புல நீரா தல‌???//

ஸ்ப்பா... தல முடியல.. எப்படி இபப்டியெல்லாம்? இருந்தாலும் நம்ம வாலு கவுஜ அளவுக்கு இல்ல...

Anonymous said...

அடடா படிக்கவே எவ்ளோ சுகமா இருக்கு கொஞ்ச நாளைக்கு இப்பிடி எழுதுங்க தலைவா

வால்பையன் said...

வாங்க கார்க்கி
நீங்களுமா, தலைகிட்டயெல்லாம் வாலு மோதமுடியுமா!!

வாங்க சதீஷ்குமார்,
அடிக்கடி எழுதனுமா,
வேண்டாங்க என் உடம்பு தாங்காது,
வீட்ல இதோட ஆறு பூரிக்கட்டை ஆகிருச்சு

லிங்காபுரம் சிவா said...

//வால்பையன் said...
சிவா
உங்க கமெண்டு லெஃப்டுல இருந்தாலும் நீங்க சொல்றதும் ரைட்டு தான்.

நான் ரைட்ல டைப் பண்ணாலும் நான் சொல்றதும் ரைட்டு தான்.

:)
//

பொழுது சாயல அதுக்குள்ள சரக்க உள்ள தள்ளியாசசா??!!!

வால்பையன் said...

என்னக்க சிவா,
இதுக்கிலாமா நேரம், காலம் பாப்பாங்க

லிங்காபுரம் சிவா said...

என்னமோ போங்க நல்லா இருந்த சரிதான்....

வால்பையன் said...

நன்றி சிவா!
நான் சும்மா தான் சொன்னேன்!
சனி,ஞாயிறு மட்டும் தான் சரக்கு அனுமதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//வால்பையன் said...

நன்றி சிவா!
நான் சும்மா தான் சொன்னேன்!
சனி,ஞாயிறு மட்டும் தான் சரக்கு அனுமதி.
//

எந்தத் துறைமுகத்தில வாலு?
அப்ப நட்டத்துல இல்ல போவும்!

வால்பையன் said...

ஜோதிபாரதி said...
//வால்பையன் said...

நன்றி சிவா!
நான் சும்மா தான் சொன்னேன்!
சனி,ஞாயிறு மட்டும் தான் சரக்கு அனுமதி.
//

எந்தத் துறைமுகத்தில வாலு?
அப்ப நட்டத்துல இல்ல போவும்!
//

அதுசரி தினம் டாஸ்மாக் துறைமுகம் போனா எம்பொழப்பு நட்டத்தில் ஓடுமே!

கபீஷ் said...

//என்னை உன்னால் சமாளிக்கமுடியவில்லை!
உன்னை என்னால் சமாளிக்கமுடியவில்லை//

இது எல்லார் வீட்டுக்கும் பொருந்தும் universal Truth :-(

Poornima Saravana kumar said...

All the best for மிதிவாங்கறத்துக்கு..
Mrs.வால் பையன் நான் உங்கள் கட்சி..

கபீஷ் said...

வாலு! நீங்க குடிக்கறத நிறுத்தீட்டிங்கன்னு எங்கேயோ படிச்சேன், அது உண்மை இல்லயா?

கபீஷ் said...

எனக்கு கவுஜ எழுதற சந்தர்ப்பம் தினமும் வருது, ஆனா இந்த கவுஜ தான் வருவேனான்னு அடம் பிடிக்குது.

கபீஷ் said...

அடிக்கடி அடி வாங்குங்க அப்பதான் சீரியஸா எதுவும் எழுத மாட்டீங்க

கபீஷ் said...

48

கபீஷ் said...

49

கபீஷ் said...

50

தமிழ் அமுதன் said...

''இது சும்மா லுலுலாயி''

என்னா பயம்?

சனி,ஞாயிறு மட்டும் தான் சரக்கு அனுமதி.

அப்போ?

அனுமதி வாங்காம அடிக்கிறது?

திருட்டு தனமா அடிச்சா!

செம மப்பு!

கொய்யா இலைய வாயில போட்டு
மென்னா வாடையே அடிக்காது!

வால்பையன் said...

//PoornimaSaran said...
All the best for மிதிவாங்கறத்துக்கு..
Mrs.வால் பையன் நான் உங்கள் கட்சி..
//

அட துணைக்கும் ஒரு ஆளு இருக்குறாங்களே

வால்பையன் said...

// கபீஷ் said...
வாலு! நீங்க குடிக்கறத நிறுத்தீட்டிங்கன்னு எங்கேயோ படிச்சேன், அது உண்மை இல்லயா?
//

குறைத்துவிட்டேன்.
இப்போது
நிறுத்தி கொண்டிருக்கிறேன்

வால்பையன் said...

// கபீஷ் said...
அடிக்கடி அடி வாங்குங்க அப்பதான் சீரியஸா எதுவும் எழுத மாட்டீங்க
//

அடடா நான் அடி வாங்குறதுல
எத்தனை பேருக்கு ஆனந்தம் பாருங்க!
நீங்களும் அடுத்த பிறவியில பாவப்பட்ட ஆணா பிறந்து அடி வாங்கனும்னு சபிக்கிறேன்

வால்பையன் said...

வாங்க ஜீவன்
இந்த ஐடியாவெல்லாம் இங்கே வேலைக்காவாது.
கேட்ட திறக்கும் போதே கண்டுபிடிச்சிருவாங்க
உள்ளே வரும்போது பூரிகட்டை வந்துரும்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//வால்பையன் said...

// கபீஷ் said...
வாலு! நீங்க குடிக்கறத நிறுத்தீட்டிங்கன்னு எங்கேயோ படிச்சேன், அது உண்மை இல்லயா?
//

குறைத்துவிட்டேன்.
இப்போது
நிறுத்தி கொண்டிருக்கிறேன்//

இது நாள் வரை தமிழகத்தில் தண்ணி பஞ்சம் தலை விரித்து ஆடியதற்கு இதுதான் காரணமா?
இனி தண்ணி பஞ்சம் இருக்காதுன்னு சொல்லுங்க.


"குறைத்துவிட்டேன்.
இப்போது
நிறுத்தி கொண்டிருக்கிறேன்"

நிறுத்திக் கொண்டே இருக்கிறீர்களா?

புரியல கொஞ்சம் விளக்குங்க!

MADURAI NETBIRD said...

அய்யா நீங்க சொல்ல கூடாத.
யாராவது சொல்லுங்க
நானே சொல்றேன் ..
வலிக்குது வேண்டா. ............................

வால்பையன் said...

ஆமாங்க ஜோதிபாரதி
ரொம்ப தண்ணி பஞ்சம் வந்ததால நான் குடிக்கிறத குறைச்சிட்டேன்.
இப்போ கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திகிட்டு இருக்கேன்

வால்பையன் said...

//அய்யா நீங்க சொல்ல கூடாத.
யாராவது சொல்லுங்க
நானே சொல்றேன் ..
வலிக்குது வேண்டா.//

வாங்க மதுரை நண்பன்
இது தாங்க ஊருகாரங்க பாசங்கரது
எனக்கு அடிவிழுந்த உங்களுக்கு வலிக்குதா?

MADURAI NETBIRD said...

//கேட்ட திறக்கும் போதே கண்டுபிடிச்சிருவாங்க
உள்ளே வரும்போது பூரிகட்டை வந்துரும்........//



ஒரு செட் பூரி பார்சல் ...............

ரமேஷ் வைத்யா said...

வால்,
சரக்கைக் குறைத்துவிட்டதாகவே மெயின்டெய்ன் செய்யவும். நமக்கெல்லாம் இமேஜ் முக்கியம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//வாங்க மதுரை நண்பன்
இது தாங்க ஊருகாரங்க பாசங்கரது
எனக்கு அடிவிழுந்த உங்களுக்கு வலிக்குதா? //


இறைவனின் திருவிளையாடலில் அவருக்கு விழுந்த அடி எல்லோருக்கும் விழுந்தது இல்லையா? அதுவும் இந்த மதுரையில் தானே?

வால்பையன் said...

//கிழஞ்செழியன் said...
வால்,
சரக்கைக் குறைத்துவிட்டதாகவே மெயின்டெய்ன் செய்யவும். நமக்கெல்லாம் இமேஜ் முக்கியம்.
//

என்ன தல,இன்னும் கடைக்கு போகலையா,நம்மள நம்பி தானே தமிழக அரசே பட்ஜெட் போடுராங்க,
இப்படி ஆபிஸ்லேயே உட்காந்திருந்தா எப்படி?

வால்பையன் said...

//ஜோதிபாரதி said...
//வாங்க மதுரை நண்பன்
இது தாங்க ஊருகாரங்க பாசங்கரது
எனக்கு அடிவிழுந்த உங்களுக்கு வலிக்குதா? //


இறைவனின் திருவிளையாடலில் அவருக்கு விழுந்த அடி எல்லோருக்கும் விழுந்தது இல்லையா? அதுவும் இந்த மதுரையில் தானே?//

ஒருவேளை மதுரையில மீனாட்சி ஆட்சிக்கிறதால இருக்குமோ,
சிதம்பரத்துல எப்படின்னு அந்த ஊருகாரங்க சொன்ன நல்லா இருக்கும்

நந்து f/o நிலா said...

http://tamil498a.blogspot.com/2008/11/blog-post_19.html

இங்க போங்க நமக்கு உதவ ரெடியா இருக்காங்க

நந்து f/o நிலா said...

திருமணமான ஆண்கள் உரிமைக்காக

http://tamil498a.blogspot.com/2008/11/blog-post_19.html

வால்பையன் said...

//நந்து f/o நிலா said...
திருமணமான ஆண்கள் உரிமைக்காக//

அண்ணா! என்ன இது
செமத்தியா சிக்க உட்ருவிங்க போலருக்கே!
இத மட்டும் அவ பாத்தா
வீட்ல இன்னொரு பூரிக்கட்டை புதுசா வாங்கணும்

Poornima Saravana kumar said...

//வாங்க ஜீவன்
இந்த ஐடியாவெல்லாம் இங்கே வேலைக்காவாது.
கேட்ட திறக்கும் போதே கண்டுபிடிச்சிருவாங்க
உள்ளே வரும்போது பூரிகட்டை வந்துரும்//

Wow!இது நல்ல ஐடியா வா இருக்கே!

விஜய் ஆனந்த் said...

தலைவா....உடம்பு சரியில்லையா??

நல்லாத்தானே இருந்தீங்க???

கார்க்கிகிட்ட பேசினீங்களா??? எப்படி இருந்த வால இப்படி ஆக்கிட்டாரு...

:-(((...

Karthik said...

அட அட அட.. வாலு கவிதையால சட்ட கல்லூரி மாணவர்கள விட செம தாக்கு தாகுராறு

புதியவன் said...

//PoornimaSaran said...
//வாங்க ஜீவன்
இந்த ஐடியாவெல்லாம் இங்கே வேலைக்காவாது.
கேட்ட திறக்கும் போதே கண்டுபிடிச்சிருவாங்க
உள்ளே வரும்போது பூரிகட்டை வந்துரும்//

Wow!இது நல்ல ஐடியா வா இருக்கே!//

நல்ல நல்ல ஐடியாவெல்லாம் கிடைக்கும்னு இங்க போர்டு போட்டிருக்கு...!

நசரேயன் said...

எனக்கு அந்த கொடுப்பினை இல்லை, நிச்சயிக்க பட்ட திருமணம் தான்

வால்பையன் said...

//விஜய் ஆனந்த் said...
தலைவா....உடம்பு சரியில்லையா??
நல்லாத்தானே இருந்தீங்க???
கார்க்கிகிட்ட பேசினீங்களா??? எப்படி இருந்த வால இப்படி ஆக்கிட்டாரு...
:-(((...//

ஆமாங்க விஜய்ஆனந்த்
அங்கங்க வீங்கி போயிருக்கு.
இதுக்கு எதுக்கு கார்க்கிகிட்ட கேக்கனும்,
ஊருக்கு வந்து இருப்பிங்கல்ல, அப்போ உங்களுக்கே பொத்துகிட்டு வரும் பாருங்க

வால்பையன் said...

//Karthik said...
அட அட அட.. வாலு கவிதையால சட்ட கல்லூரி மாணவர்கள விட செம தாக்கு தாகுராறு
//

அப்படியா!
எங்க சண்டையையும் பக்கத்துல நின்னு வேடிக்கை தான் பாக்குரானுங்க!
அதனால இருக்குமோ

வால்பையன் said...

//நசரேயன் said...
எனக்கு அந்த கொடுப்பினை இல்லை, நிச்சயிக்க பட்ட திருமணம் தான்//

முன்னாடி எழுதிட அனுபவன் இல்லாம இருக்கலாம், ஆனா பூரிக்கட்டை அனுபவம் இருக்கனுமே!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

// சிறகில்லாமல் பறந்தோம்!
உலகு மொத்தமும் துறந்தோம்! //


அட அப்பிடியா ,!?!?1 உன்ன love பண்ணும்போதா....!?!?!?! ஆச்சரியமா இருக்கு வாலு..........


//நாம் காதலின் இலக்கணம் என்றோம்!
நம் காதலில் தலைக்கணம் கொண்டோம்! //

உங்களோட இலக்கணம் உங்க வீட்டுல கேட்டா தெரியும்.........


// நீ இல்லாமல் செத்து போவேன் என்றோம்!
தடைகள் கடந்து திருமணம் செய்தோம்! //

ஹா..ஹா . ஹா......! யோவ் வாலு, செம காமடி dialog 'க்கு யா......

// இன்று
என்னை உன்னால் சமாளிக்கமுடியவில்லை!
உன்னை என்னால் சமாளிக்கமுடியவில்லை! //

யோவ் ! தெனமும் தண்ணிய போட்டா , உன்னைய எப்படிய்யா சமாளிக்கமுடியும் ....
ரெண்ண்டாவது வரி செம டுமீலு...... நம்பர மாதிரி இல்ல......


//இப்பொது தோன்றுகிறது,
முதன்முறை பார்த்த போது

பேசாமலே இருந்திருக்கலாமென்று! //

யோவ் வெண்ண , இத அவங்க யோசிக்கனும்யா.....


// இது சும்மா லுலுலாயி

சும்மா ஒருநாள் சண்டை வந்தா இப்படி தான் கிறுக்குவேன் //


நீயே ஒருநாள் கிறுக்கறேன்னு சொல்லுற .... உன்ன கட்டிக்கிட்டு அவங்கதான்யா தெனமும் கிறுக்கனும்......


வெளங்கற மாதிரி போஸ்ட் போடுய்யா .... சப்பையா ஒரு கவிதைய போடவேண்டியது ... அப்புறம் லுலுலாயி போடவேண்டியது ........

லிங்காபுரம் சிவா said...

@ madyy

All your Comments ரசிக்கும் படி இருந்தது... :))

கிரி said...

அருண் நல்லா இருக்குங்க...

எளிமையா ரசிக்கும் படி உள்ளது

ஹேமா, said...

வால்பையன்,பாவம் நீங்க.சமாளிங்க.

வால்பையன் said...

மீண்டும் ஒரு முறை நன்றி மாதேஷ்.

பொது புத்தியில் சும்மா நல்லாருக்கு, அருமையாக இருக்கு, சூப்பர், என்று கட்டய கொடுக்காமல்
படைப்பாளனின் ஆணவத்தை சுட்டெரிக்கும் விதமாக இருக்கிறது உங்களது விமர்சனங்கள்.
ரசிக்கிறேன். தொடர்ந்து உங்களின் விமர்சனம் தேவை.

வால்பையன் said...

நன்றி கிரி

நன்றி ஹேமா!
என்ன செய்யிறது சமாளிச்சு தான் ஆவனும்

வால்பையன் said...

சதமடிக்க இன்னும் 16 பாக்கி இருக்குது,
யாருக்கு அந்த கோப்பைன்னு கோதாவுல இறங்கி முடிவு பண்ணிக்கிக்கோங்க

தமிழ் தோழி said...

உங்கள் கவிதை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. அதை விட
ஃபினிஷிங் டெச் தான் சூப்பர்(இது சும்மா லுலுலாயி

சும்மா ஒருநாள் சண்டை வந்தா இப்படி தான் கிறுக்குவேன்)பயமா?
:D

தருமி said...

ப்ரசென்ட் சார்!

Poornima Saravana kumar said...

88

Poornima Saravana kumar said...

89

Poornima Saravana kumar said...

90

Poornima Saravana kumar said...

91

Poornima Saravana kumar said...

92

Poornima Saravana kumar said...

93

Poornima Saravana kumar said...

94

Poornima Saravana kumar said...

97

Poornima Saravana kumar said...

98

Poornima Saravana kumar said...

99 (நெருங்கிட்டேன்_)

Poornima Saravana kumar said...

100...........
Heyyyyyyyyyyyyyyyyyy

Haiyaaaaaaaaaaaaaaaaa

எப்புடி :)))))

வெண்பூ said...

//
சும்மா ஒருநாள் சண்டை வந்தா இப்படி தான் கிறுக்குவேன்
//

சண்டைக்கெல்லாம் கவித எழுத ஆரம்பிச்சா அப்புறம் தினமும் கவித எழுத வேண்டியிருக்கும்.. இது தெரியாதா வால்.. :)))

thenkasi said...

டோண்டு சார் வால்பையன் அண்ணாவின் திடீர் சந்திப்பு


அதிகாலை 04.30 .வங்கக் கடலில் உள்ள டிப்ரசன் கருணைப் பார்வையால் சென்னையில் விட்டு விட்டு மழை.தெருவெங்கும் சிறு சிறு நீரோடைகள்.மேனியை தழுவிச் செல்லும் குளிர் காற்று.

சென்னை நங்க நல்லூர் புகழ் தமிழ்மண பிரபலபதிவரும் ,உலகின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளருள் ஒருவரான பண்பாளர் டோண்டு அவர்களின் வீட்டு முன்னே ஒரு அசாதாரணா பரபரப்பு.

தமிழகத்தில் உள்ள அத்துணை தின/வார/மாத பத்திரிக்கை/சஞ்சிகைகளின் நிருபர்களும்/புகைப்பட காரர்களும்
வழி மேல் விழி வைத்தி காத்திருக்கின்றனர்.
சன்/ஜெயா/ராஜ்/கலைஞர்/மக்கள்/ஜீதமிழ்/விஜய் மற்றும் ஒரு சில லோக்கல் தொலைகாட்சியினரும் ஒளிபரப்பு வேனோடு குழுமியுள்ளனர்.

பொதுமக்களும் அங்காங்கே கூட்டம் கூட்டமாய் தங்களுக்குள் பரபரப்பாய் பேசிக் கொண்டு உள்ளனர்.

விசாரித்து பார்த்ததில் டோண்டு சார்-வால்பையன் சந்திப்பு-அதுவும் அரசியல் பரபரப்பு சூழ்நிலையில் நடைபெற உள்ளதால்தான் இப்படி .

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒரு முக்கிய அரசியல் விமர்சக
பத்திரிக்கையாளரும் வரலாம் எனவும் சொல்லப்படுவாதாய் மக்கள் பேசிக்கொள்கிறார்களாம்.

அவர்கள் விவாதிக்க இருப்பதாய் சொல்லப்படும் விஷயங்களில் சில:

இலங்கை தமிழ்ர் பிரச்சனை,அடுத்த தேர்தல் கூட்டனி,மத நல்லிணக்கம்,சாதி சச்சரவுகளை ஒழித்து பரஸ்பர நல்லுணர்வினை வளர்த்தல்,உலக பொருளாதார மந்த நிலை, அமெரிக்காவில் அரசியல் மாற்றம்,ஆசியாநாடுகளின் பொருளாதார தேக்க நிலை,நதிநீர் பங்கீடு ,மாநில எல்லைத் தகராறு ,உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாடு,பனவீக்கவிகிதம், இந்தியாவில் மென்பொருள் வல்லுனர்களின் நிலை,கட்டுமானத் துறையில் உள்ள பணப்புழக்கக் குறைவு,பெட்ரோலுக்கு மாற்று எரி பொருள் பயன் படுத்துதல்,கச்சா எண்ணெய் சந்தை நிலலவரம்,பங்குச் சந்தயின் ஊசலாட்டம்,டாலர்-ரூபாய் மதிப்பு வீழ்ச்சி,வங்கிகளுக்கான கட்டுப்படுகளை தளர்த்தல்,பிரபல கம்பெனிகளின் பணியாளர்கள் குறைப்பு,லேஆப்,விமானப் போக்குவரத்து கட்டணங்களை சீர்படுத்துதல்
V
V
V
V
V
V
V
V
V
V
v
v
v
v
v
ஒரு கற்பனைதான்.

.)))))))))))))))))))))))))))

அது சரி இன்று சந்திப்பு உண்டா?
கச்சேரி உண்டா?

புகழன் said...

\\ வெண்பூ said...

சண்டைக்கெல்லாம் கவித எழுத ஆரம்பிச்சா அப்புறம் தினமும் கவித எழுத வேண்டியிருக்கும்.. இது தெரியாதா வால்.. :)))

\\

வெண்பூ சார்
இன்னைக்கு சண்டை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு போல அதான் கவிதை.

வால்பையன் said...

கலக்கிடிங்க
பூர்ணிமாசரண்

நீங்க சொல்றதுலையும் உண்மை இருக்கு வெண்பூ

தென்காசி விரைவில் அது பற்றிய பதிவு வரும்

வால்பையன் said...

வாங்க புகழன்
எங்க ஆளையே காணோம்.
பயங்கர பிஸியா?

புகழன் said...

படிக்கவே நேரமில்லை இதுல கமெண்டவோ எழுதவோ கஷ்டமா இருக்கு

புகழன் said...

ஆபீஸ் நெட்டிலும் சில பல பிரச்சினைகள்.

புகழன் said...

NHM ரைட்டர் என் சிஸ்டத்தில திடீர்னு காணாமல் போச்சு
இங்லீசுல எழுதுறதெல்லாம் எனக்கு புடிக்காது.
(நான் தமிழன் நம்புங்க)
அதனாலதான் இவ்வளவுநாள் வரலை.

Tech Shankar said...

என்னை உன்னால் சமாளிக்கமுடியவில்லை!
உன்னை என்னால் சமாளிக்கமுடியவில்லை!


நிதர்சனம்.

cheena (சீனா) said...

தலைக்கணம் - தலைக்கனம்

அதுதான் சரி - ஒருவரை ஒருவர் சமாளிக்க முடியாதது - ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல

லுலுலாயி - ம்ம்ம்ம் இட்ஸ் ஓக்கே வாலு

தங்க்ஸ் கிட்டே நான் பேசறேன் - உன் கிட்டே பேசினதுக்கு அப்புறம்

g said...

இவ்ளோ விஷயத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள். எனக்கு தெரிந்தால் உடனே பதிவுதான்.

tamizh said...

யாரோ கவிதையெல்லாம் பிடிக்காதுனு சொன்னதா ஞாபகம்! கஷ்டம் வந்தா கவிதையும் வரும்ல :)

நல்லா எழுதிர்கீங்க... இந்த தொடக்கம் (கவிதைகள்) தொடர வாத்துக்கள்!

வால்பையன் said...

//tamizh said...
யாரோ கவிதையெல்லாம் பிடிக்காதுனு சொன்னதா ஞாபகம்! கஷ்டம் வந்தா கவிதையும் வரும்ல :)//

அது தாங்க கொடுமையே!
இதையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்ன, என் கஷ்டத்த விட உங்க கஷ்டம் எவ்ளோ பெருசுன்னு புரியுது.

!

Blog Widget by LinkWithin