பிரபஞ்ச தோற்றம் - பகுதி 2

பிரபஞ்ச தோற்றம் பற்றி பெருவெடிப்பு மற்றும் அதன் பின்னான விளைவுகள் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன், ஆனாலும் படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடைய மதவாதிகளின் அடுத்த கேள்வி இந்த சூரியகுடும்பத்தில் பூமியில் மட்டும் எப்படி உயிர் வாழும் தகவமைப்பு ஏற்பட்டது, அதிலிருந்தே இது கடவுளின் படைப்பு என தெரியவில்லையா எங்கிறார்கள். அதற்கும் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை.

விரிந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் அணு கூட்டமைப்புகள் உரசும் பொழுது இடத்தை சுருக்கி அதாவது அணுக்களை நெருக்கமாக்கி ஒன்றுடன் ஒன்றை இணைக்கிறது, அவ்வாறு பல கோடி மடங்கில் இணைந்த அணுக்கள் சூரியன். ஏற்கனவே எழுதியிருந்தேன், இந்த பிரபஞ்சத்தில் கோள்கள் இல்லாம சூரிய குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று சூரியன்கள் இரு குழந்தைகளை கைகளை பிடித்துக்கொண்டு சுற்றி வருவது போல் நேர் எதிர் திசையில் சுற்றிகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் அவைகளும் மோதிக்கொள்ளும். அவ்வாறு மோதும் பொழுது வெடித்து சிதறும் அணுகள் இருந்து உருவாவது தான் கோள்கள்.



அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை, நம் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட அரிய தாதுகள் சூரியனில் இருந்து வந்தவை தான் என்பது. வாயு கிரகங்கள் தவிர மற்ற கிரகங்களில் தங்கம் கிடைக்கவும் வாய்ப்புண்டு, சூரியனில் இருந்து தெரித்த அணுக்கள் ஒன்றினைந்து கோள்கள் ஆகும் பொழுது அது வட்ட வடிவம் பெற்று விடும், சூரியனை சுற்றுவதால் ஏற்படும் விசை அது. கோள்கள் உருவாக்கம் என்பதற்கு இன்னொரு உதாரணம் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையில் உள்ள கைபர் பெல்ட் என அழைக்கப்படும் கற்கள் கூட்டம், செவ்வாயை போல் ஒரு கோளாக உருப்பெற வேண்டிய அணுக்கூட்டம் ஒரு பக்கம் சூரியனின் ஈர்ப்பாலும், எதிர்பக்கம் சூரிய குடும்பத்தின் பெரிய கோளான வியாழனின் ஈர்ப்பாலும் அலைகழிக்கப்பட்டு கோளாக உருவாகாமல் கற்களாக சூரியனை சுற்றி வருகிறது.



பூமியில் உயிர் உருவாக நமக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் மட்டுமே காரணமா என்றால் இல்லை, தூரம் மட்டுமே காரணம் என்றால் இந்நேரம் சந்திரனில் உயிர்கள் இருக்க வேண்டும், பூமி உருவாக காரணம் என்ன? இந்த பிரபஞ்சம் உருவாக எப்படி ஒரு விபத்து காரணமாக இருந்ததோ அப்படியே இந்த பூமி உயிர் பெறவும் காரணம் ஒரு விபத்து தான். சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் கோள்கள் சேர்க்கை நடைபெற்று முடிவுறும் தருவாயில் அப்போதைய பூமியை ஒரு பெரிய விண்கல் தாக்கியது, அந்த தாக்குதலில் பிய்த்து எரியபட்ட பூமியின் குழந்தை தான் சந்திரன், இப்போதைய சந்திரனை அப்படியே பசிபிக் கடலின் நடுபகுதி ஆழத்தில் பொருத்திக்கொள்ளலாம்.



அவ்வாறு தாக்கப்பட்ட பூமியில் இருந்து பல ஆயிரம் மைல்கள் அளவுக்கு தூசி மண்டலம் பரவியது. மேலும் அம்மாதிரியான வேக தாக்குதல்களில் அணுகளில் மிண்ணுனு மாற்றம் உருவாகி புதிய புதிய தனிமங்கள் உருவானது. அது வரை பயங்கர வெப்பமாக இருந்த பூமி தன்னை சுற்றியிருந்த தூசி படலத்தால் குளிர தொடங்கியது, நேரடி சூரிய வெப்பம் அதன் மேல் படாதததும் ஒரு காரணம். தூசி படத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிசன் மூலகூறுகள் இணைந்து வெப்பத்தால் மேகமாக காத்திருந்தது. பூமி குளிர்ந்தது, மேகம் நீராக மாறி மழையாக பூமியை மேலும் குளிர்வித்தது. பல நூறு/ஆயிரம் வருடங்கள் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்றது. அதாவது சூரியனின் நேரடி பார்வையில் நீர் ஆவியாகி மேகமாதலும், மறுபக்கம் குளிர்த்து மழையாதலுமாக



இந்த பூமி உயிர் கிரகமாக மாற அந்த விபத்தே காரணம். யாரேனும் நீ எதாவது ஒரு கடவுளை நம்பியே ஆகவேண்டும் என்றால் நான் விபத்து தான் என் கடவுள் என்பேன். இந்த பிரபஞ்சம் உருவாக பெருவெடிப்பு ஏற்பட காரணம் ஒரு விபத்து, இந்த பூமி மற்ற கோள்கள் போல் அல்லாமல் உயிர் கிரகமாக மாற உதவியது ஒரு விபத்து, அணுக்கள் இருக்கும் உட்கருவான நியூட்ரான், தன்னை தானே பிரித்துக்கொள்ளும் நியூக்ளியஸ் அணுவாக மாற காரணம் ஒரு விபத்து. இதை ஏன் சம்பவம் என குறிப்பிடாமல் விபத்து என குறிப்பிடுகிறேன், சம்பவம் மறக்கப்படலாம், விபத்தை மறக்கக்கூடாது என்பதற்காக.....

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin