தமிழ் தேசியம்

தமிழ் தேசியம் என்றால்

மாநில உரிமை காப்பது
வளங்களை பாதுகாப்பது
மாநிலத்தை மேம்படுத்துவது
தன்னிறைவு அடைவது
தனிநபர் மேம்பாடு

இதெல்லாம் தான் அடிப்படை

சீமானின் முக்கிய குற்றசாட்டு என்னவென்றால் தமிழர் அல்லாதோர் நம் வளங்களை சுரண்டி நமக்கு சேர வேண்டியதை அவர்கள் சொந்தம் கொண்டாடினர் என்று

விந்திய மலையின் தெற்கே அனைத்தும் திராவிட நிலபகுதி என அழைக்கப்பட்டதால் கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் நான்கும்(இப்ப தான் தெலுங்கானா) திராவிடம் என அழைக்கப்பட்டது. தேசிய கீதத்தில் இருக்கும் திராவிடம் என்ற வார்த்தை இதை தான் குறிக்கிறது

தமிழ் தேசியம் பேசப்படுவது இன்று நேற்றல்ல, அதன் கருத்தியல் படி சீமான் பச்சகுழந்தை. ஆனால் இதற்கு முன் தமிழ் தேசியம் முன்னெடுத்தவர்களை சீமான் பெரியாத முன் வைக்கவில்லை. மாறாக பிரபாகரன் பெயரை வசூலுக்கு பயன்படுத்திகொள்கிறார்

ஆரம்ப காலத்தில் பொது கூட்டங்களில் பெரியார் படம் இருந்தது. எனக்கு பகுத்தறிவு சொல்லிக்கொடுத்த தந்தை என்றார். எம்.ஜி,ஆர் படம் இருந்தது. ஆனால் இன்று அனைவரும் வந்தேறி ஆகிவிட்டனர்

சிறுகுழந்தைகள் பெற்றோரின் கவனத்தை பெற காரணமே இல்லாமல் அழும், அதனை அட்டென்சன் சீக்கிங் பர்சனாலிடி என்பார்கள். அதே போல் தான் சீமான் தமிழ் தேசியம் பேசாமல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற எதிர்ப்பு அரசியலில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிறர் கவனத்தையும் பெறுகிறார்

முப்பாட்டன் முருகன் என்ற பொழுதே அவரது உளரல் ஆரம்பித்துவிட்டது. அதுக்கு திருவிளையாடல் திரைபடத்தை உதாரணம் காட்டிய பொழுது பகுத்தறிவாளர்கள் சிரித்தனர். ஆனாலும் அவரது உளரல் நின்றபாடில்லை. நாம் சுரண்டபடுகிறோம் என்ற ஒன்றை அஜெண்டாவில் அவருகென்று ஒரு கூட்டத்தை கட்டிபோட்டு வைத்துள்ளார்



சாதாரமாண உளவியல் இது.
சோதிடம் சொல்பவனை கவனித்ததுண்டா
நீங்கள் ரொம்ப நல்லவர், உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள், நீங்கள் நல்லது செய்ததை மறந்து உங்கள் குறைகளை மட்டும் சுட்டி காட்டுகிறார்கள் என பொதுவாக எல்லாருக்குள்ளும் இருக்கும் ஆற்றாமையை கிளரி அவன் பணம் வாங்கிட்டு போயிருவான்

சீமான் சோசியகாரன் அளவுக்கு கூட வொர்த் இல்ல என்பதெ என் கருத்து. சீமான் வெளிச்சத்தில் நிற்க ஆசைப்படுகிறார். தன்னை சுற்றி ஒரு கூட்டம் சேர்க்க ஆசைப்படுகிறார். அவர்கள் பகுத்தறிவை வலு இழக்கசெய்து கண் மறைக்கப்பட்ட குதிரை போல் தன்னை பின் தொடர சொல்கிறார்

நாம் சுரண்டபடுகிறோம் என நம்பும் பெரும்பான்மை தமிழ் தேசிய தம்பிகள் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டுயிருக்கிறார்கள்., அப்படியானால் நீங்கள் அந்த நாட்டை சுரண்டி கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்?

அடிக்கும் போது ஒருத்தன் சொன்னான், எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே ரொம்ப நல்லவன்னு
அந்த நல்லவன் நீங்க தான்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin