புத்தாண்டு வாழ்த்துகள்....

வருட பிறப்பு அல்லது புத்தாண்டு என்பது கால அளவீடுகள் தேவை என நாம் வகுத்து கொண்டது தான்.

காலம் எங்கே ஆரம்பித்தது என்பதே ந்மக்கு தெரியாது, பின்னாளில் நாட்களின் மணி நேரங்கள் குறையும் நேரத்தில் வருட நாட்களின் அளவுகளும் வேறுபாடுலாம்(வாய்ப்புண்டு)

சொல்லபோனால் கால அளவீடுகள் குறிப்புகளுக்கு தேவை என காலண்டர் முறையை கொண்டு வந்ததே கிமு 45 ஆம் ஆண்டு ஜூலியஸ் சீசர் என்ற அரசரால் தான்.

பின் பிப்ரவரி 24 - 1582 ஆம் ஆண்டு கிரிகோரியன் என்ற பாதரியாரால் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டது, அதாவது அதற்கு முன்பு வருடத்திற்கு பத்து மாசங்கள் தான், அதன் பின் தான் 12 மாதங்கள்

பருவநிலைகள் கொண்டு நம்மால் ஓரளவு பூமியின் சுற்று தன்மையை உணர்ந்த பிறகு 1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பத்து நாட்கள் கழிக்கப்பட்டு அந்த வருட காலண்டர் உருவானது.

ஆங்கிலேய ஆளுமைக்கு பின் தான் இந்தியாவில் கிரிகோரியன் காலண்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் முன் ஒவ்வொரு இனம் அல்லது சமூகத்திற்கும் தனியான நாட்காட்டிகள் இருந்தன.

கிரிகோரியன் காலண்டரை கடைசியாக ஏற்றுகொண்ட நாடு கிரீஸ் என்ற பண்டைய கிரேக்கம். ஏற்றுகொண்ட ஆண்டு 1923. தற்சமயம் உலகம் பரவலாக பயன்படுத்தப்படும் நாட்காட்டி கிரிகோரியன் காலண்டர் தான்.

பருவநிலை மாற்றம் குறித்து தமிழில் உருவாக்கப்பட்ட காலண்டர் படி வருட பிறப்பு சித்திரையா அல்லது தை மாதமா எனும் சர்ச்சை இருந்தாலும் இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதுவல்ல

வாழ்த்து என்பது ஒருவர் நம் மேல் கொண்டிருக்கும் அன்பு, அக்கறை அதன் வெளிபாடு. விழாக்களும், பண்டிக்கைகளும் நம்மை ஒற்றினைத்து புத்துணர்ச்சி பெற்ற செய்யவே உருவாக்கபட்டது. உன்னது பெருசா என்னது பெருசா என சண்டை போட அல்ல

இந்த நொடியில் இருந்து உங்கள் எல்லா வருத்தக்களும் மறைந்து வாழ்வில் இனி மகிழ்ச்சி ஒன்றை மட்டுமே பெற வாழ்த்துகள். தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin