சென்னை நண்பர்கள் கவனத்திற்கு!

நம் நுரையீரலில் பாதி மரத்திடம் இருக்கு, நாம் வெளியிடுவதை அது உள்வாங்கி கொள்கிறது. அது வெளியிடுவதை நாம் வெளிவாங்கிக்கொள்கிறோம் என்ற லாஜிக்கெல்லாம் சரி தான். ஆனா அதெல்லாம் பகலில் மட்டும் தான்.

சூரிய ஒளியின் துணைக் கொண்டு இலையில் இருக்கும் குளோரோபில்ஸ் என்ற பச்சையத்தின் மூலம் தாவரம் தனக்கு தேவையான உணவை தானே தயாரித்துக்கொள்கிறது. அந்த நேரத்தில் நம்மால் வெளியிடபடும் கார்பன் - டை - ஆக்சைடில் இருந்து கார்பன் என்ற கரியை உணவாக எடுத்துக்கொண்டு மீண்டும் ஆக்ஸிசனை வெளிவிடுகிறது தாவரம்.

பகல் நேரத்தில் ஒவ்வொரு தாவரமும் பிஸியான ஆலை போல் செயல்படும். இரவு நேரத்தில் சோம்பேறி மாதிரி தூங்கும். அதனால் தான் வெளியிட்ட ஆக்ஸிசனை தானே எடுத்துக்கொள்ளாமல் மற்ற உயிரனங்களும் வாழும் அளவில் ஆக்ஸிசன் உருவாக்கப்படுகிறது. உங்களுகெல்லாம் உண்மையிலயே தெரியாதா? இரவில் தாவரம் சுவாசிப்பதும் ஆக்ஸிசனை தான்.

அடர்த்தியான மரங்களுக்கு அடியில் இரவில் நின்றால் உங்களுக்கு மூச்சு முட்டும். புளியமரம் போன்ற அடர்த்தியான மரங்கள் ஆளை மயக்கமடைய செய்யும். நம்மாட்கள் முனி அடிச்சிருச்சுன்னு கதையை மாத்தி மரத்திற்கு ஆணி அடித்து வைப்பார்கள். பகம் நேரத்தில் அடர்த்தியான மரத்தின் அடியில் ஏசி போட்டா மாதிரி ஜில்லுன்னு இருக்கும். ஆக்ஸிசன் குளிர்ந்த வாயு. கார்பன் டை ஆக்ஸைடு எரிந்த கரி. கரி சுடத்தான் செய்யும்.

ஆவியாகி மேகமாக நிற்றும் அதே நீரின் மேல் குளிர்த்த காற்று பட்டால் தான் அது மழையாக மாறி நமக்கு நீர் ஆதாரங்களை தரும். குளிர்ந்த காற்றுக்கு ஒரே இயற்கை வழி மரம் வளர்த்தல் மட்டுமே. மரம் இல்லையென்றால் இயற்கை சமநிலை மாறும். பூமி வெப்பமயமாகுதல் உயரும். நிலபகுதிகளில் மழை இருக்காது. பாலைவனமாகும் நிலப்பகுதி

சென்னையில் விழந்த மரங்களை போல் எஞ்சி நின்ற பிற மரங்கள் தங்கள் பச்சையத்தை இழுந்து கரிகட்டையாக நிற்கின்றது. வரும் கோடையை நிச்சயமாக சென்னை மக்களால் சமாளிக்க முடியாது. வாடகை வீட்டில் இருந்தாலும் அடர்த்தியான பச்சையம் உள்ள பெரிய இலைகள் கொண்ட தாவரம் வளர்க்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். தாவரத்தை தவிர வேறு எவற்றாலும் உங்களை காப்பாற்ற மிடியாது!

#வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin