குவியல் (15.09.16)

தம்பி மனைவி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் டெலி மார்கெட்டிங் பிரிவில் வேலை பாக்குறாங்க. ரெண்டு நாள் முன்னாடி ஆபிஸில் சென்னை கூட்டிட்டு போவதா சொன்னாங்க. சென்னைக்கு மிக அருகில்னு திருச்சியில் ப்ளாட் காட்டுவாங்கன்னு தானே கேள்வி பட்டோம். இதென்ன ஈரோட்டுக்கு மிக அருகில்னு சென்னை போறாங்கன்னு நினைச்சேன். வந்த பிறகு தான் தெரிஞ்சது அவுங்களை கூட்டிட்டு போனது அதிமுக ஆள்பிடிப்பு மாநாட்டுக்கு. போக, வர வண்டி இருக்கும், ஒரு நாள் சென்னையை சுத்தி பார்க்கலாம், சாப்பாடு உண்டு, செலவுக்கு 500 ரூபாய். தேர்ந்த அரசியல் தொண்டன் எல்லா  கட்சியிலும் உறுப்பினர் அட்டை வச்சிருப்பான் போல, எனக்கு தான் எழவு ஆதார் அட்டை கூட இல்லை.

அதிமுகவுக்கு போய்ட்டாளே நாகரிகம் மறந்துரும் போல, நேற்று (14.09.16) நடந்த ஒரு நேரலை விவாதத்தில் தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து அதிமுக கிளைக்கு தாவிய ஞானசேகரன் ஒரு குண்டை போட்டார். ஒரு திருமண விழாவின் பொழுது வைகோ அவர்கள், ஜி.கே.வாசனிடம் உங்களுக்கு எவ்ளோ குறைவா சீட்டு கொடுத்தாலும் சரி அதிமுகவிலே கூட்டணி சேருங்கள் என்று சொன்னார் என்று. என்னை பொறுத்தவரை அவ்வாறு சொல்வது அரசியல் நாகரிகம் அல்ல, ஆனாலும் மக்கள் நல கூட்டணி. அதிமுகவின் B டீம் என்று உறுதியானது ஒரு அதிமுக உறுப்பினர் வாயாலே

வாய்மையே வெல்லும் என அஹிம்சை போதித்த காந்தி இருந்தால் கன்னடர்களிடம் அடி வாங்கியும் சிரித்துக்கொண்டிருந்த பெரியவரை அள்ளி அணைத்திருப்பார். ஆனால் ஒன்றை யோசியுங்கள் அந்த பெரியவரின் குடும்பம் இனி அக்கம் பக்கத்தை எப்படி எதிர்கொள்ளும். ஆக தமிழக ஊடகங்கள் அனைத்தும் சேர்ந்து அந்த பெரியவருக்கும், ஆடை கலைக்கப்பட்ட ஓட்டனருக்கும் தலா ஒரு கோடி நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். அந்த பெரியவருக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி கொடுக்க வேண்டும், அடி வாங்கியதற்கு அல்ல, அடி வாங்கிய பொழுதும் சிரித்துகொண்டே வாழும் இயெசு என தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததற்கு.

பெருமை படும் அளவுக்கு தமிழக பொதுபணி துறையோ, நீர் மேலாண்மையோ எதுவும் செய்யாமல் காவிரி நீரை மட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிடிக்காமல் தான் நான் அதை பற்றி எதுவும் எழுதவில்லை. காவிரி நீர் பல வருட பிரச்சனை. அதை விடுங்கள் சென்ற வருடம் சென்னை, கடலூரை பாதித்த வெள்ளத்தை கூடவா மறந்துவிட்டீர்கள். அதன் பிறகு அவசர கால நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? தமிழகத்தில் 30% ஏரி, குளங்கள் கூட இன்னும் தூர்வாரப்படவில்லையாம். மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அழகாக பயன்படுத்தி இன்னேரம் அனைத்து ஏரி, குளங்களை தூர் வாரியிருக்கலாம்.

இனியும் ஒருமுறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சுடுகாடாய் தான் மாறும்!

#குவியல்

ப்ளாக்கில் இது எனக்கு 499 வது பதிவு, எனது 500வது பதிவாக நண்பர்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். உள்டப்பியிலோ, வாட்ஸ் அப்பிலோ (9003063176) மெயிலுக்கோ ( arunero@gmail.com ) அனுப்பி வைக்கலாம்

2 வாங்கிகட்டி கொண்டது:

இறை அடிமை said...

நான் உங்களை கவனித்துவருகிறேன்.நீங்கள் தொடர்ந்து இஸ்லாம் பற்றியும் புனித திருக்குர்ஆன் பற்றியும் நாங்கள் உயிராய் மதிக்கும் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் பற்றியும் தரக்குறைவாக விமர்சிப்பதை காண்கிறேன்.மேற்கத்திய இஸ்லாம் வெறுப்பு பிரச்சாரத்தின் கைத்தடியாக நீங்கள் செயல்படுகிறீர்கள்.இஸ்லாம் பற்றியோ திருக்குர்ஆன் பற்றியோ எதுவும் தெரியாமல் சும்மா மேம்போக்காக கேள்விப்பட்ட விஷம பிரச்சாரத்தையே வேறு வார்த்தைகளில் பிரதிபலிக்கிறீர்கள்.இது நல்லதல்ல.இஸ்லாம் அமைதியை நிலைநாட்ட வந்த மார்க்கம்.உங்களுக்கு இஸ்லாம் பற்றியோ திருக்குர்ஆன் பற்றியோ முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்வு பற்றியோ என்ன சந்தேகம் இருந்தாலும் 1800-2000-787 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து சந்தேகங்களை விஷமகருத்துக்களை போக்கிக்கொள்ளுங்கள். இவ்வுலகை அமைதிப்பூங்காவாக மாற்றுவோம்..இன்ஷா அல்லாஹ்

வால்பையன் said...

// சும்மா மேம்போக்காக கேள்விப்பட்ட விஷம பிரச்சாரத்தையே//

நான் எங்கே கேள்வி கேட்டனோ அங்கயோ பதில் சொல்லவும்
பதில் தெரியலைனா பெரியவங்க யார்கிட்டயாவது கேட்டு வந்து சொல்லவும்.
யார் எதுக்கு யாருக்கும் போன் பண்ணி கேட்கனும்?

நான் அமைதியா தான் இருக்கேன்.
மதவாதிகள் எவனும் அமைதியா இருக்குற மாதிரி தெரியல

!

Blog Widget by LinkWithin