ஏன் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்?

தீர்ப்பு குறித்து பல மூத்த வழக்கறிஞர்கள் கூட மேல்முறையீடு செய்தால் விடுதலையை நிறுத்தி வைக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதற்கு முன் அம்மாதிரியான சம்பவம் நடந்ததில்லையாம்.

முன்பெல்லாம் போதுமான சாட்சிகள் இல்லைன்னு விடுதலை செய்வார்கள். மேல்முறையீட்டில் சாட்சிகள் சரியாக விசாரிக்கப்பட வில்லை என்பார்கள். அதற்கு விடுதலையை ரத்து செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் இந்த தீர்ப்பில் குளறுபடி நீதிபதி செய்தது தானே.
கணக்கில் குளறுபடி ஒரு பக்கம் இருக்கட்டும். அரசு பதவியில் இருக்கும் போது பெறப்பட்ட பரிசு பொருட்கள் வருமான கணக்கில் சேரும் என்றால் நீங்கள் லஞ்சம் வாங்கிக்கொள்ளலாம் அதற்கான வருமான வரி மட்டும் கட்டினால் போதும் என்றாகிவிடுமே.


இந்த தீர்ப்பே 10% வரை வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்க்கலாம் என்ற முன்பு அளித்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டது. இனி ஏற்படும் இதே போன்ற சொத்து குவிப்பு வழக்கில் அவையெல்லாம் பரிசாக வந்தது என. குற்றவாளி சொன்னால் நீதிபதி என்ன செய்வார்?

ஒரு மோசமான முன் உதாரணமாக இந்த தீர்ப்பு இருக்கின்றது. இது படிக்காத என்னை போன்ற பாமரனுக்கு கூட தெரிகிறது. சட்டம் படித்த வழக்கறிஞர்கள் தீர்ப்பை விமர்சித்தால் வழக்கு போடுவோம் என்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குவது உங்களது உரிமையாக இருக்கலாம். அதுக்காக நீங்கள் வைத்தது தான் சட்டம் என சொல்ல இது என்ன சர்வாதிகார ஆட்சியா? உங்களுக்கு வரும் ஆதாயம் குறித்து நீங்கள் தவறான தீர்ப்பை ஏற்றுக்கொள்ளலாம். இதையே எதிர்கட்சி வழக்குகளுக்கு நடக்கும் போது ஏற்றுக்கொள்வீர்களா?

உங்களுக்கு தான் சூடு,சொரணை, மானம், ரோசம், வெட்கம் எதுவுமில்லை. எங்களையும் ஏன் மனசாட்சி இல்லாமல் வாழ சொல்றிங்க?

மோடியை எதிர்ப்பவர்கள் வெளிநாடு போன்னு சொன்னா மாதிரி ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் வெளிமாநிலம் போயிடுன்னு வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே!

2 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

ponga .. yar venamnu sonna!

அத்திரி said...

super well said

!

Blog Widget by LinkWithin