சில தகவல்கள்!

உளவியலின் தந்தை சிக்மண்ட் ப்ராய்டு தற்கொலை செய்து கொண்டார்(வேண்டுகோளுங்க்னிங்க மருந்தவர்களே)

--

பில்கேட்ஸின் வருமானம் ஒரு நொடிக்கு 290 டாலர்

--

குழந்தையின் 80% புத்திசாலித் தனம் அவர்களின் தாயிடமிருந்து வருகிறது!!

--

1582 ல் இருந்து தான் ஜனவரி முதல் தேதி வருடத்தின் முதல் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது

**

பூமியில் நிலத்தில் இருப்பதை விட அதிகமான உயிரினங்கள் கடலில் இருக்கிறன!

--

எந்த தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் ஹீலியம்

--

உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16%
உலக நன்னீர் இருப்பில் இந்தியாவில் இருப்பு 4%

--

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசிய, மொரீஷியஸ், ரீயுனியன் ஆகிய ஆறு நாடுகளில் அலுவலக மொழியாக தமிழ் பயன்படுத்தபடுகிறது

--

மங்கோலியர்களின் கப்பல் படையில் ஏழு வீரர்களும் ஒரு படகும் மட்டுமே இருந்தது.

--

இரத்தம் தண்ணீரை விட 6 மடங்கி அடர்த்தியானது

--

பல பூச்சி இனங்களின் நரம்பு மண்டலங்களை ஆராய்ததில் அவற்றால் வலியை உணர முடியவில்லை என கண்டுபிடித்திருக்கிறார்கள்.

--

பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

--

தொடரும்.....

4 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

பல தகவல்கள் நான் அறியாதவை. அது சரி, அது என்ன
"உளவியலின் தந்தை சிக்மண்ட் ப்ராய்டு தற்கொலை செய்து கொண்டார்(வேண்டுகோளுங்க்னிங்க மருந்தவர்களே)" ???
"மருத்துவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியா" ? தெளிவு படுத்த வேண்டுகிறேன்

வால்பையன் said...

அதிகமாக புகைபிடித்ததின் காரணமாக அவருக்கு கேன்சர். வாழப்பிடிக்காம அவரே மருத்துவர்களின் விசம் கேட்டு வாங்கிகிட்டார். அது ஊசியா போட்டாங்களா இல்ல குடிச்சாரான்னு தெரியல

kumar said...

குழந்தையின் 80% புத்திசாலித் தனம் அவர்களின் தாயிடமிருந்து வருகிறது!!

இதற்க்கு ஆதாரம் உள்ளதா?
ஆம் எனில் ப்ளீஸ் ?

வால்பையன் said...

சிம்பிள் லாஜிக், பெரும்பாலான குழந்தைகள், தாயின் அரவணைப்பிலேயே வளர்க்கப்படுகின்றன.

இதை படிச்சு ரொம்ப நாள் ஆச்சு, லிங்க் தேடி எடுத்து தர்றேன்

!

Blog Widget by LinkWithin