வெற்றியா - வெறுமையா???

ஒகே ஒகே படத்தில் சரண்யா ஒரு சப்ஜெக்டில் ஃபெயில்னு அவ புருசன் பல வருசம் பேசாம இருக்குறது.
சன் ஆஃப் சத்தியமூர்த்தி(தெலுங்கு) படத்தில் சமந்தா அம்மா நகை வாங்கிட்டான்னு அவ புருசன் வருச கணக்கா பேசாம இருக்குறதை பார்க்கும் போது உங்க மனதில் என்ன தோணுச்சி.

என்னடா இது பைத்தியகாரதனம்னு தானே, அதுவே நீங்க பண்ணும் போது உங்களுக்கு நீங்களே நீதிபதி ஆகிடுவிங்க.

ஊடல் இல்லாத காதலோ, இல்லறமோ இயத்திரதனம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். உங்களை யார் கோவபடவேண்டாம்னு சொன்னா, கோவபடுங்க. திட்டுங்க. ரொம்ப கோவமா இருந்தா கன்னத்தில் பளார் பளார்னு ரெண்டு விடுங்க.

ஒரு மணி நேரமோ ரெண்டுமணி நேரமோ பேசாம இருங்க. பிறகு மறுபடி இப்படி பண்ணுவியான்னு கேளுங்க. ஆமா அப்படி தான் பண்ணுவேன்னு சொன்னா சோத்துல விசத்தை வச்சு கொல்லுங்க

ஒரு மனிதன் தவறே செய்யலைனா அவன் எந்த முயற்சியும் எடுக்கலன்னு சொல்லுது அறிவியல். தவறில் இருந்து தான் சரி எது என்பதை கற்ற கொள்ள முடியும் என்கிறது வாழ்வியல்.

உங்க ஈகோவை வச்சு ஒரு முட்டைய அவிச்சுகாட்டுங்க பார்க்கலாம். அதுனால் நீங்க பெற்றது வெற்றியா இல்ல வெறுமையா? ஈகோவை வச்சுகிட்டு நாசமா தான் போகமுடியும்


டாட்...

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin