காரணம்!

இன்று என்னை வாழ்த்தி பதிவிட்ட ஒருவர். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு. காரணம் இல்லாமல் எந்த செயலும் இல்லை என பதிவிட்டிருந்தார்.
நேற்று நான் விடிய விடிய யோசித்ததும் அதை தான்.
நான் கோவபட்டதின் காரணம் எனக்கு முக்கியத்துவம் தருவதில்லை, சரியாக பேசுவதில்லை என்று. அதே போல் எனக்கு முக்கியத்துவம் தராமல் இருக்க எதேனும் காரணம் இருந்திருக்கலாம். அதை நேரடியாக சொல்ல அவரால் முடியாமல் இருந்திருக்கலாம்.
அவருக்கு சினிமா பிடிக்கும்
அதனால் சினிமா விரும்பிக்களை பிடிக்கலாம்.
அவருக்கு கதை பிடிக்கும்
அதனால் கதை சொல்லிகளை பிடிக்கலாம்
அவருக்கு கவிதை பிடிக்கும்
அதனால் கவிஞர்களை பிடிக்கலாம்
அவருக்கு இசை பிடிக்கும்
அதனால் இசை விரும்பிகளை பிடிக்கலாம்
நான் கடைசியா பார்த்த பொழுது அவரது நெருங்கிய நட்பு வட்டத்தில் அவர்கள் தான் இருந்தார்கள்.
எனக்கு அரசியல் பிடிக்கும்
அரசியல் விரும்பிகளை தான் எனக்கு பிடித்திருக்கவேண்டும்
எனக்கு அறிவியல் பிடிக்கும்
அறிவியல் விரும்பிகளை தான் எனக்கு பிடித்திருக்கவேண்டும்
எனக்கு மனிதம் பிடிக்கும்.
மனிதம் விரும்பிகளை தான் எனக்கு பிடித்திருக்கவேண்டும்
யோசிக்கையில் என் மகிழ்வுக்காகவே சண்டை போட்டுள்ளேன். என்னுடனும் பேசு என்றாலும் என்னிடம் பேச என்ன இருக்கு என அவருக்கு தோன்றியிருக்கலாம்.
மூன்று நாள் ஒருவரை பற்றிய நினைவே உங்களுக்கு வரவில்லையென்றால் அவர் உங்கள் மனதில் இல்லை என்று உளவியல் கூறுகிறது.
இவ்ளோ நாள் எந்த தொடர்பற்று இருந்தும், எனக்கு வேலையே இல்லாத ஒரு இடத்தில் நான் இல்லையேன்னு என்று வருத்திக்கொண்டிருக்கிறேன்.
என்னை விட வேறுயார் மகிழ்வாய் வைத்துக்கொள்ள முடியும் என முட்டாள்தனமாக யோசித்து வந்திருக்கேன்.
ஒரு நண்பரை மிஸ் பண்றோம் என்றால் அவர் நம் மனதில் வந்து விட்டார் என்று அர்த்தம். அவரை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக எதையும் செய்ய துணித்தால் மனதில் ஆழ அமர்ந்து விட்டார் என்று அர்த்தம்.
அந்த ஆழத்துக்கு விடுந்து வெளியே எடுக்கத்தான் பல நாள் போராட்டமாக இருக்கின்றது. நான்கு வருடம் குழந்தைதனமாக புரிந்துவைத்துள்ளேன் என்னும் போது சிரிப்பு வருகிறது. நானே எனக்கு அமைத்துக்கொண்ட மாய உலகை உடைக்க சுத்தியல் செய்துக்கொண்டிருக்கிறேன்!....

1 வாங்கிகட்டி கொண்டது:

கிருஷ்ண மூர்த்தி S said...

இந்த ஞானம் வந்தால் பின்னர் வேறென்ன வேண்டும்?
சந்தோஷமாக, இயல்பாக, இருங்கள். விலகிப்போனது தானே வரும்

!

Blog Widget by LinkWithin