ஒரு முக்கிய அறிவிப்பு!

ஈரோட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நான் பிறந்த ஊர் மதுரை தான்! அங்கே ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது நான் கலந்துக்கலைனா எப்படி!,
அதனால ஈரோட்டில் இருக்குற வேலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஞாயிற்றுகிழமை மதுரை போறேன்! யார் யார் கூட வர்றிங்க, எல்லாரும் கைய தூக்குங்க!

நண்பர்களின் தொடர்புடய சுட்டிகள்!

கார்த்திகை பாண்டியன்

ஸ்ரீ


சீனா ஐயா

டக்ளஸ் ராஜு

சோலை அழகு புரம்

நர்சிம்


அன்பின் சக பதிவர்களே !

மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.

வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.

இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.

எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

அனுமதி இலவசம் !

நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation

தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :

தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993

நல்வாழ்த்துகள்.
நட்புடன் வால்பையன்.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .

45 வாங்கிகட்டி கொண்டது:

எட்வின் said...

வெற்றியடைய வாழ்த்துக்கள்

கண்ணகி said...

வாழ்த்துக்கள். கலந்துகொள்ளமுடியாதவர்களுக்கு போய்வந்து நிகழ்வுகளைப் பதியுங்கள்.

உண்மைத்தமிழன் said...

அங்கேயாவது போய் ஒழுக்கமா, அடக்கமா இருக்கப் பாரு..

அப்புறம் உனக்கும் ஒரு கவுன்சிலிங் பண்ற மாதிரி வைச்சுக்காத..

பாவம்யா மதுரைக்காரப் பயலுக..! நீ வர்றன்னு தெரிஞ்சும் தைரியமா இருக்காங்க பாரு..!

வால்பையன் said...

//பாவம்யா மதுரைக்காரப் பயலுக..! நீ வர்றன்னு தெரிஞ்சும் தைரியமா இருக்காங்க பாரு..!//

அதான் பாருங்களேன்!

பதிவுலயே எல்லார் நம்பரும் இருக்கு, கூப்ட்டு மிரட்டி வுடுங்கண்ணே!

மதுரை சரவணன் said...

hello friend v meet there. this should be make good social reforms/

Paleo God said...

வாழ்த்துக்கள் அருண்..:))
------
உ.த.அண்ணே நீங்க வலை உலக ரஜினி வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வந்துடரீங்க..:)

ஜெய்லானி said...

விழா நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்..

அரவிந்தன் said...

//அங்கேயாவது போய் ஒழுக்கமா, அடக்கமா இருக்கப் பாரு.//

குடிக்காதவனெல்லாம் அடக்கமா ஒழுக்கமா இருப்பதாய் ஏனிந்த பொதுப்புத்தி (சின்ன புத்தி)

jothi said...

வால்த்துக்கள்

அப்பாவி முரு said...

அய்யா. விடுங்கைய்யா..அந்த மேட்டரை.

இடுகையில் சொல்லியிருப்பது ஒரு தலைப்பு, பின்னூட்டத்தில் பேசுவது வேற தலைப்பு...

மனிசன் தப்பு செய்யவே மாட்டானா? இல்லை அவனே திருந்த மாட்டானா? இல்லை புத்தி சொல்ற எல்லாரும் எல்லா இடத்துலையும் ஒழுக்கமத்தான் நடந்துக்கிறாங்களா? அப்புறம் ஏன்?

அப்பாவி முரு said...

நிகழ்ச்சி சிறக்க சிறப்பு வாழ்த்துகள்,


இருந்தாலும் நிகழ்ச்சி ஒரு வாரம் லேட்.

ஆ.ஞானசேகரன் said...

விழா சிறக்க வாழ்த்துகள் தல

தாராபுரத்தான் said...

நடை பெறப் போகும் நிகழ்வில் நீங்க கலந்துகொளவது இப்பவே நினைவில் தெரியுதுங்க..

sathishsangkavi.blogspot.com said...

வெற்றியடைய வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் தல

இராஜ ப்ரியன் said...

வாழ்த்துகள் தல, இதுபோன்ற செயல்களை செய்ய முன்வந்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றி...............

Anonymous said...

நானும் வரேன் அருண்....

மேவி... said...

முன்னாள் குழந்தையான காதலியை தொட்டால் ....அது என்ன மாதிரியான TOUCH ????

மேவி... said...

வாழ்த்துக்கள் ......

Ashok D said...

அடுத்த ரவுண்டா.. சும்மா கலக்கட்டனும் வால்

துபாய் ராஜா said...

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்.

வெள்ளிநிலா said...

wishes

அகல்விளக்கு said...

//டம்பி மேவீ said...
முன்னாள் குழந்தையான காதலியை தொட்டால் ....அது என்ன மாதிரியான TOUCH ????//

அதானே.......

தல மீட்டிங்ல நீங்க இந்த கேள்வியத்தான் என் சார்பா கேக்கணும்....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எல்லாம் நல்லபடியா நடக்கும்,

மதுரயில தண்ணி பிரச்சனை இருக்குறதால...!

வேற ஒன்னும் இல்ல பெரியாறுதான்!

கேரளாக்காரம் அணையை உடைச்சு தண்ணியத் தொரக்காம இருந்தா நல்லது!

வாழ்த்துகள்!

Kumky said...
This comment has been removed by the author.
Kumky said...

அங்கிள் வர்ராரா...?

வால்பையன் said...

//’கும்க்கி said...

அங்கிள் வர்ராரா...?//

இது குழந்தைகளுக்கான நிகழ்ச்சி!

அங்கிளுக்கு நிகழ்ச்சி நடத்தும் போது கூப்பிடுவாங்க தல!

பித்தனின் வாக்கு said...

சே நான் கூட ஒரு முக்கிய அறிவிப்பு என்றதும் வால்பையன் இனி சரக்கு சாப்பிட மாட்டார் என நினைத்தேன்.கூட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Balakumar Vijayaraman said...

வாங்க, நிகழ்வை சிறப்பா செய்வோம்.

விக்னேஷ்வரி said...

வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!!

puduvaisiva said...

வெற்றியடைய வாழ்த்துக்கள்

தருமி said...

என் பதிவு வரலையே ...!

Unknown said...

hi. all the best. madurai-la sarakku adichi, rakala panna, raaviduvaainga.
so, adakkam vaal..

Kannan said...

நிகழ்ச்சி பிரமாதமாகவும், உபயோகமாகவும் இருந்ததாக நண்பர் ஸ்ரீதர் சொன்னார். வாழ்த்துக்கள்.

தமிழ் பொண்ணு said...

நான் இப்போது தான் வளரும் ஒரு பிளாக்கர்.இன்று நானும் மதுரை என்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.உலகில் இப்படியும் ஒரு பிரச்சினை உண்டா என் நினைத்து கொண்டேன்.

நானும் இதில் ஒரு பெண்ணாய் கலந்து கொண்டதற்கு பெருமையாக இருந்தது.

அதற்கு வால் பையன் எனது நன்றி.
இதுவரை நான் வால் பையனை நேரில் பார்த்தது இல்லை.

ஆனால் பழகிய நண்பரை போல நன்றாக பார்த்து கொண்டார்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் என்னுடைய பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும்.

வால் பையனுக்கும் மற்றும் இதை பங்கு எடுத்து கொண்ட அனைவருக்கும் எண்டது நன்றி....

இது போன்று அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக நடக்க என்னுடைய வாழ்த்துக்கள்......

பை ஸ்வேதா..

தருமி said...

//பாவம்யா மதுரைக்காரப் பயலுக..! நீ வர்றன்னு தெரிஞ்சும் தைரியமா இருக்காங்க பாரு..!//

மதுரைக்காரப் பயலுக யாரு ...?
செமத்தியா நடத்தியாச்சில்ல !

Prapa said...

வெற்றி பெற வாழ்த்துக்கள், அப்பிடியே நம்ம பற்றியும் கொஞ்சம் எடுத்து விடுங்கோவன்..... விழியும் செவியும் ஏங்குது...

Sanjai Gandhi said...

நிகழ்ச்சி சிறப்பாய் நடைபெற வாழ்த்துகள் மதுரைவாசிகளே..

Anonymous said...

வாழ்த்துகள் நண்பா! சிறப்பாக நடைபெற்றிருக்கும் என்று நம்புகிறேன்!

Thekkikattan|தெகா said...

சில கேள்விகள், ஐயப்பாடுகள் மதுரை கருத்தரங்கு தொடர்பாக, வாசிப்பிற்கு...

மதுரை "குழந்தைகள் மன நலப் பேணல்" நிகழ்ச்சி சார்ந்து...

வால்பையன் said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

அண்ணாதுரை said...

சமூக சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

அண்ணாதுரை said...

சமூக சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

The pie was a uniquely Chicago institution, like a perennially losing major-league baseball team, that other cities showed no interest in adopting.
Pizza was a dream come true.

!

Blog Widget by LinkWithin