மதியம் புதன், ஜனவரி 15, 2014

ஜன்னலோர இருக்கையின் வன்மங்கள்!...

என்னை வெறுத்து
உலகம் பின்னோக்கி சென்றது
காற்று என் முகத்தில்
வேகமாக அறைந்தது.
எதிரில் அமர்ந்திருந்த குழந்தை 
என்னைப் பார்த்து அழுதது.

புத்தகத்தின் அட்டையை பார்த்தேன்
என்ன புரிந்து கொண்டாளோ அப்பெண்
தன் மாராப்பை இழுத்து மூடினாள்.
காசு போடாததால் பிச்சைக்காரர்
பூச்சியை போல் என்னை பார்த்தார்.

சூனியமாகிவிட்ட உலகில்
தனித்து விடப்பட்டவன் ஆனேன்.
மறுமுறை ரயிலில் ஏறியவுடன்
தூங்கிவிட வேண்டும்!



!

Blog Widget by LinkWithin