பக்கம் இண்ட்டு பக்கம்!

பக்கம் இண்ட்டு பக்கம்
சதுரத்தின் பரப்பளவு,
வெட்கம் இண்ட்டு வெட்கம்
என் தேவதையின் முகத்தழகு



உன் விரலசைவில்
என் உலகனைத்தும் உறையும்,
உன் கண்ணசைவில்
என் கனவனைத்தும் தொடங்கும்
உன் உதட்டசைவில்
என் உயிர் முழுதும் உருகும்



பெருவெளி ஒளியில்
அநாதையாய் நான்,
கண்ணெட்டும் தூரம் வரை ஒளி
அதன் பின்னும்,
கடைசி சொட்டு ரத்தம் வரை
கண்ணீராக்கும் மனசு,
கடைசி துளி எண்ணம் வரை
உன் பெயர் சொல்லும் கனவு,
குறையாய் விட்ட சிலையாய் நான்,

ஆக்சன் ரீப்ளே!

கிரிக்கெட் ஸ்டெம்பை அவன் கையில் எடுக்கும் போது தெரிந்து விட்டது, நிச்சயம் இது சமாதானத்தில் முடியப்போவதில்லை என்று, பின்னாலே மீதி இருந்த இரண்டு ஸ்டிக்கையும் இரு தடியர்கள் உருவினார்கள், என்னை நோக்கி முன்னேற தொடங்கினார்கள், நான் சாவகாசமாக அப்போது தான் செய்யது பீடியை வழித்து கொண்டிருந்தேன், எனது அப்போதைய கடுப்பெல்லாம் கொஞ்சநாளா செய்யது பீடி உள்ளே தூள் இல்லாமல் வெறும் இலை மட்டும் சுற்றி வருவது தான், எவ்ளோ இழுத்தாலும் புகையே வரமாட்டிங்குது!, அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேன் தைரியங்கீறது என்ன தெரியுமா, பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது!.

பசுமலை ஸ்கூல் கிரவுண்டில் ஞாயிற்றுகிழமை பசங்கெல்லாம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம், அன்றைய நாள் ஜீவாநகர் பசங்க கூட பெட்மேட்ச் வேற, எல்லாரும் ரொமப் சின்சியரா ஆஜர் ஆகியிருந்தோம், நான் கூட ஒரே ஒரு குவாட்டர் மட்டும் தான் குடித்திருந்தேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள், கொஞ்சம் சீரியஸ் மேட்ச் என்பதால் பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த பசங்ககிட்ட பேசி வேறு பக்கம் விளையாட சொல்லியிருந்தோம், அப்படியும் ஒரு லோக்கல் குரூப் விளையாடியது, நாங்க டோர்னமெண்ட் விளையாடுறோம், கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாதிங்க, நாங்க ஒரு மேட்ச் முடிஞ்சதும் போயிருவோம் என்றும் சொல்லியிருந்தோம், ஆனாலும் அவர்கள் அடித்த பந்து ஒன்று நம்ம சைடு பையன் முகத்தில் பட்டு விட்டது!



தற்காப்போ, தாக்குதலோ நமது உடல் வலிமை நமது வெற்றியை நிர்ணயிப்பதில்லை, நமது மனவலிமை தான் அதை தீர்மானிக்கும். நெருங்கி வரும் அவன் நிச்சயம் ஸ்டெப்பால் என்னை தாக்குவான் என்று தெரியும், நான்கு அடி இடைவெளியில் நெருங்கும் பொழுது தான் கடைசி இழுப்பு முடித்து பீடியை எரிந்தேன், அவன் என்னிடம் எதுவும் பேச விரும்பவில்லை, வந்ததும் ஸ்டிக்கை என்னை நோக்கி வீசினான், ஸ்டிக் அவன் முதுகு போய் திரும்புவதற்குல் எனது வ்லது கால் அவனது நெஞ்சில் உதைத்தது, பின்னிருந்த இருவர் மீதும் மோதி கீழே விழந்தான், அவன் பின்னால் ஆயுதம் இல்லாத நால்வர் என்னை நெருங்கி கொண்டிருந்தனர்.


அது கார்க் பால், பந்து பட்ட வேகத்தில் அவனது கன்னம் கன்னிபோய் சிவந்து விட்டது, நான் பர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தேன், பாயிண்டில் நின்று கொண்டிருந்த அவன் அப்படியே சுருண்டு விழுந்தான், எனக்கு சரியான கோவம், நேரா போய் பேட்டிங்க் பிடித்தவனை கீழே தள்ளி அவன் பேட்டை புடிங்கி வீசினேன், ஸ்டிக்கை எல்லாம் புடுங்கி வீசிவிட்டு ஒருத்தனும் இங்கே விளையாடக்கூடாது என துரத்தினேன், அவர்கள் லோக்கல் பசங்க என்பதால் அப்பவே துள்ள ஆரம்பித்தார்கள், முன் நின்றவனின் செவளில் விட்ட அறையில் அனைவரும் கொஞ்சம் பின்னாடி போனார்கள், இருங்கடா வர்றோம் என்ற சென்றவர்கள்..............



கோவம் வந்தால் என்ன செய்கிறோம் என்று தெரியாது, நான் இந்த கணத்தில் கொஞ்சம் நிதானம் இழந்துவிட்டேன் என்று தான் சொல்லனும், நான் வீசிய கையை ஒருவன் குனிந்து லாவகமாக தப்பித்த போது தான் தெரிந்தது அது. ஒரு மைக்ரோ செகண்ட் யோசனைக்கு பின் முதலில் தடுத்தாட தீர்மானித்தேன், தற்காப்பு கலை பற்றி தெரியாத அவர்கள் எனது முகத்தில் தாக்கி என்னை நிலைகொள்ள செய்யவே முயற்சித்துகொண்டு இருந்தார்கள், அப்பர் ப்ளாக் லாவகமாக வரும் என்பதால் தடுப்பதற்கு வெகு சுலபமாக இருந்தது, மேலும் கொஞ்சம் இலகுவாக கிடைக்கும் கையை அப்படியே மடக்கி கக்கத்தில் சிக்க வைத்து அவனது அல்லையில் சராமாரியான பஞ்சுகள் விட வசதியாக இருந்தது, அல்லைன்னா தெரியுமுல்ல இடுப்புக்கு சற்றே மேல் இருக்கும் பகுதி, அங்கிருக்கும் முடிவு நெஞ்செலுப்பு பலம் குறைந்தது, ஊமையடியாக இருக்கும், வலி உயிர் போகும், நாலு மாசத்துக்கு வலி குறையாது.

பாலனை பத்தி சொல்லலையே, குண்டா அழகா இருப்பான், பிரச்சனைன்னு தெரிஞ்சதும் டாய் டூய்ன்னு சவுண்ட் விட்டுகிட்டு இருந்தான், இருங்கடா வர்றோம்னு சொல்லிட்டு போனவனுங்க போய் கொஞ்சம் பெரிய பசங்களை கூட்டிகிட்டு வரவும் அப்படியே பின்னாடி போக ஆரம்பிச்சிட்டான், எனக்கு பின்னாடி நின்னது ஜெயபாண்டியும், தெளலத்தும். மத்ததெல்லாம் ரொம்ப சின்ன பசங்க. தூரமாக நின்று அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தனர், அதில் ஒருவன் என்னை கைகாட்டி எதோ சொல்லி கொண்டிருப்பது தெரிந்தது, அதன் பின் அவர்கள் ஸ்டெம்பை கையில் எடுக்கும் போது தெரிந்தது இது சமாதானத்தில் முடியப்போவதில்லை என்று!

மைக்ரி கிக்கை போல் காலை உயர்த்தி அப்படியே இடது பாதத்தை திருப்பி சைடு கிக்காக உதைப்பது எனக்கு சுலபமாக வரும். மைக்ரி கிக்கைவிட சைடுகிக்கில் பலம் அதிகமாக இருங்கும் என்பது என் நம்பிக்கை, இரண்டு கைகளும் தடுப்பதற்கு இருக்கும் பொழுது கிடைக்கும் கணப்பொழுதில் காலை பயன்படுத்தி தாக்குவதில் குறியாக இருந்தேன், இன்னர் அப்பர் ப்ளாக் முடித்து அதே கையில் உராகன் அட்டாக் கொடுக்கலாம், ஆனால் அது ரொம்ப டேஞ்சரான அட்டாக், நெற்றி பொட்டில் கைமுஷ்டியை மடக்கி தாக்குவது, மடக்கி என்றால் சாதரணமாக இல்லை.




உங்க கை முஷ்டியை மடக்கி பாருங்கள், எவ்வளவு வலிமையா இருக்கு, ரைட்டு இப்ப நான் சொல்ற மாதிரி மடக்குங்க, முதலில் உள்ளங்கை தெரியும் அளவுக்கு கையை விரியுங்க, உள்ளங்கையிலிருந்து விரல் தொடங்கும் இடத்தில் ரேகை மாதிரி இருக்கு தெரியுதா, ரைட்டு அதே தான், முஷ்டியை மடக்கும் பொழுது உங்கள் விரல் அந்த ரேகைக்குள் முடிந்து விடனும், எந்த விரலும் உள்ளங்கையை தொடாமல் பார்த்துங்கோங்க, இப்ப எப்படி இருக்கு பவர், அதே தான் அந்த முஷ்டியை கொண்டு தாக்கினால் அடி எப்படி விழும் தெரியுமுல்ல!

பிறப்புறுப்பில் தாக்குவது தற்காப்பிற்காக பெண்கள் செய்வது, என் வாழ்நாளில் ஒரே ஒரு முறை அப்படியே சண்டையில் தாக்க நினைத்தேன், கடைசி நொடியில் உணர்ந்து கால் முட்டியை அடிவயிற்றில் இறக்கினேன், அதற்கே ஹம்மா என்ற சத்தத்துடன் சுருண்டான், தாக்குவதை விட தடுப்பதில் இருக்கும் தேர்ச்சியே நம்மை நீண்ட நேரம் அசராமல் களத்தில் வைத்திருக்கும், சண்டை போடுறது தேவையில்லாதது தான், தற்காப்பு அவசியம் இல்லையா!

பெருசா போச்சு, அதுனால தொடரலாம்!

இன்று குடியரசு தினம்!

சென்ற வருடம் குடியரசு தினத்தன்று நான் எழுதிய பதிவு இது!



வெள்ளைக்காரனிடம் விடுதலை வாங்கி கொள்ளைக்காரங்க கையில் நாட்டை கொடுத்துட்டோம்னு பெரியவங்க அடிக்கடி சொல்வாங்க, கொள்ளைக்காரன் இப்ப கொலைகாரனே ஆகிட்டான். காலணி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் வாங்கினாலும் இது ஜனநாயக நாடு என அறிவிக்கும் பட்சத்திலே குடியரசு அறிவிக்கபட்டு மக்களால் தேர்த்தெடுக்கப்படும் தலைவர்கள் மக்கள் பிரதிநிதியாக மக்களுக்காக உழைப்பார்கள் என அறிவிக்கபட்டது, அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதியை போலவே அதுவும் காற்றில் விடப்பட்டது போல!

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குடியரசு தலைவர் இரண்டு முறைக்கு மேல் அந்தே பதவிக்கு வரமுடியாது தெரியுமா? இங்கே அப்படியா நடக்குது, நேரு குடும்பம் மட்டுமே இந்த சுதந்திர இந்தியாவை அதன் பாதி வாழ்நாளை அபகரித்து கொண்டது, இன்று வரை அது தொடர்ந்து கொண்டும் இருக்கிறது, மக்களுக்கு சேவை செய்யன்னு நேரு குடும்பத்தை நேர்ந்து விட்டாங்களா என்ன, இருங்க ”முட்டாமில் விட்டாகர் கலைஞ்சர் மூக்கறுணாநிதி” பத்தி பின்னாடி வரும்!.

மன்னராட்சியே பரவாயில்லை போலன்னு நினைக்கும் அளவுக்கு ஜனநாயகம் நீர்த்து போனது இந்தியாவில், அப்பவே அரிஸ்டாட்டிலும் அவரது பிரதான சீடர் ப்ளேட்டேவும் சொன்னாங்க, முட்டாள்கள் ஓட்டு போட்டு ஒரு புத்திசாலியை தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லைன்னு, ஆனா அது பாதி தப்புன்னு இப்ப தெரிஞ்சிருக்கு, மக்களை முட்டாள்னு சொன்னது சரி தான், ஆனா அரசியல்வாதிகள் முட்டாள்கள் இல்லை. எத்தனை சைபருன்னு கேட்டு காமெடியாக எஸ்.எம்.எஸ் அனுப்பும் அளவுக்கு கடைந்தெடுத்த புத்திசாலிகள்!, மக்களிடம் ஒரே ஆறுதல் எவ்ளோ அடிச்சாலும் தாங்கி கொள்வது தான்!

தனது உறவினருக்காக பரிந்து சிபாரிசு செய்தார் என அமைச்சர் பூங்கோதை ராஜினமா செய்ய நிர்பந்திக்கபட்டார், அடுத்த மூன்றே மாதத்தில் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி, நாம் அவமானபடுத்தப்படுவது நம்மால் உணர முடியவில்லை என்றால் நாம் முட்டாள் மட்டுமல்ல, ஆறு அறிவு மடைத்த மனிதர்கள் என்று சொல்லி கொள்ளவே அருகதை அற்றவர்கள். இன்னும் சில மாதங்களே இருக்கின்றன அடுத்த தேர்தலுக்கு, என்ன செய்ய போகிறோம்!

பணபலம் எளியவனை குரல் கொடுக்க விட மறுக்கிறது, துணிச்சல் இருப்பவர்கள் நல்ல உறுதுணை இல்லாமல் மனதளவில் பொறுமி கொண்டு இருக்கிறார்கள், வைகோ சத்தமா பேசுறார்ப்பான்னு பார்த்தா கொடநாட்டில் தரிசனத்துக்கு கைகட்டி, வாய் பொத்தி நிக்கிறாராம், விஜயகாந்த் கடைசி வரை திட்டம் இருக்கு ஆனா வெளியே சொல்ல மாட்டேன்னு சஸ்பென்ஸ் படம் காட்டுறார், திடிரென்று முளைத்த காளான் சாக்கடையில் ஐய்க்கியமாக போகிறேன் என்று அறிக்கை விட்டு விட்டது. முட்டாமில் அறிஞரோ கட்டுமரமாவேன்னு உதார் விட்டுகினே இருக்கார், கட்டையில போற உயிர்களை பற்றி எந்த கவலையும் படாமல் வாரிசுக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்பதிலேயே நேரம் சரியா இருக்கு!

சரி புலம்பியது போதும், விழித்து கொள்ல வேண்டிய நேரமிது, என்ன பண்ணலாம் சொல்லுங்க!

நகக்கீறல் பட்ட சாருவின் தேகம் 2!

ஒரு எழுத்தாளன் என்ன எழுதவேண்டும், என்ன எழுதக்கூடாது என சொல்ல வாசகனுக்கு உரிமையில்லை, ஆனால் அதை நிராகரிக்கவும், விமர்சிக்கவும் அவனுக்கு உரிமை உண்டு!, இலக்கியம் என்பது கலாச்சாரத்தின் நிழல் என ஆகிவிட்ட பின்னர், எழுதுபவர் கலாச்சாரத்தை பதிவு செய்யும் பிரதிநிதியாக ஆகிவிடுகிறார், சங்ககால இலக்கியத்தையே கூறுபோட்டு விமர்சிக்கும் தகுதியுடைய வாசகன் சமகால எழுத்தையும், அதன் படைப்பாளியுன் கோணம் மற்றும் விடுபட்டவைகளையும் விமர்சிக்கும் தகுதிகளையும் அடைகிறான்!

சுப்ரமணியபுரம் என்ற படம் கொண்டாடப்பட்ட போது, மனிதன் துரோகமும், பழிவாங்கும் குணமும் மட்டுமே உடையவன் என்றும், அவன் வாழ்நாளில் ஒரு கொலையாவது செய்தே ஆக வேண்டும் எனபது போல் சித்தரிக்கபட்டுள்ளது என என் கருத்தை தெரிவித்திருந்தேன்!. எழுதுறதுக்கு இலவச ப்ளாக் இருக்கு, நேரமும் இருக்குன்னா என்ன வேணும்னாலும் எழுதுவியா என்ற கருத்துகள் வந்து குவிந்து கொண்டு தான் இருக்கின்றன, நமது மத, சாதி, கடவுள் எதிர்ப்பு பதிவுகளுக்கும்.

ஒரு ரோஜாவை பார்த்து ஆகா என்ன அழகு என்று வியந்து போவதற்கும், அதன் பின் இருந்த உழைப்பையும், அது வீணாய் போவதின் வருத்தமே மாற்று கோண எழுத்து, அதற்காக எதையும் முற்றிலும் நிராகரியுங்கள் என்று நாம் எங்கேயும் சொல்வதில்லை. கூரிய பார்வையும், நுண்ணறிவும் பகுத்தறிவு படைத்த மனிதனின் குணம், அதை மழுங்கடிக்காதீர்கள் என்பது நமது கருத்தாக உள்ளது. இவ்விடத்தில் சாருவை விட சாருவின் தொண்டரடிபொடிகளையே விமர்சிக்க வேண்டியுள்ளது!, தனிமனித துதியை எதிர்ப்பவன் என்ற முறையிலும் அதை செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

ழார் பத்தாய்க்கு இணையான எழுத்து என சொல்லி கொள்ள சாருவுக்கு உரிமையுண்டு, ஒருமுறை சுஜாதாவுக்கு அடுத்து எழுத்துலகில் கொண்டாடப்படும் எழுத்தாளர் நான் தான் என சாருவே ஒப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார். நான் தான் அடுத்த முதல்வர் என பலர் கூவி கொண்டிருப்பதை நாம் எப்படி சிறு புன்னகையுடன் கடந்து செல்கிறோமோ அதே போல் தான் இதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது, ஆனால் அதை பிடித்து தொங்குபவர்களை தான் கொஞ்சும் உசுப்பிவிட வேண்டியுள்ளது. நான் வெளிப்படையானவன் என்பது தாஹூரின் அடையாளம் தாடி என்பது போல் என்னை அவமானப்படுத்துவது என்பது சாருவின் வாதம், ஆனால் சாருவின் வியாபார பொருளே நான் வெளிப்படையானவன், நிர்வாண மனநிலை உள்ளவன் என மறைமுகமாக சொல்வது என்பதை சாருவின் தொடர்ச்சியான வாசகர் கடிதத்தை படித்தால் புரிந்து கொள்வீர்கள்!

பாலியல் சார்ந்த விசயங்கள் தவிர்க்கப்பட வேண்டிய விசயமே அல்ல! ஆனால் சொல்ல வருவதில் இருக்கு அதன் திணிப்பு தன்மை, நல்ல ஒரு சினிமாவை பார்த்து கொண்டிருக்கையில் அதை வரும் கற்பழிப்பு காட்சியை எந்த மனநிலையில் மனிதன் அனுகுவான், கண்டிப்பாக இது வாழ்கையில் தவிர்க்க முடியாதது, அதனால் இது இடம்பெற்றே ஆக வேண்டும் என்றா!?. சினிமாவில் கற்பழிப்பு காட்சியை எந்த மாதிரியான வக்கிரத்தோடு ஒரு மனிதன் அணுகுவானோ அதே மனநிலை தான் சாருவின் எழுத்தை படிப்பவர்களுக்கும் உள்ளது!. சாருவின் தேகத்தை சரோஜாதேவியோட மிஸ்கின் ஒப்பிட்டதின் காரணத்தை தற்பொழுது புரிந்து கொள்ளலாம்!

ஒரு படைப்பாளிக்கென எந்த கடமையோ, சமூக அக்கறையோ தேவையில்லை. அதே எல்லா நேரமும் வெளிப்பட்டு கொண்டிருந்தால், நான் கருணாநிதியை விமர்சிக்கிறேன், கமலை விமர்சிக்கிறேன் என சொல்லிக்கொள்வது ஏன், அவர்கள் இருவரை தவிர சமூகத்தை கெடுப்பவர்கள் வேறு யாரும் இல்லையா! இருக்கிறார்கள் ஆனால் அவர்களை விமர்சித்தால் நீங்கள் கொண்டுக்கொள்ளப் போவதில்லை, இதை “அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி” என்பார்கள்!.

தம்மை வெளிப்படுத்தி கொள்வதில்லை சாருவின் மனநிலையை அப்பட்டமாக அறிய முடிகிறது. ஆனாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு சாருவை ஏற்று கொள்ளும் சிலரின் மனநிலை என்ன!?

கற்பழிப்பு காட்சி இல்லைனா என்ன, எங்களுக்கு தான் சாருவின் எழுத்து இருக்கிறதே என்பது தான்!


யார் சாரு என தெரியாமல் இருப்பவர்களுகாக!, அண்ணன் கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பவர் தான் சாரு நிவேதிதா!


உரையாடலாம் வாங்க!

குவியல்!...(18.01.11)

இது என்னுடய 351 ஆவது பதிவு, போன பதிவையே குவியலாக எழுதத்தான் நினைத்தேன், பாலோயர்ஸ் 1000 பூர்த்தியானதும் குவியல் எழுதிக்கொள்ளலாம் என சின்ன ப்ரேக் விட்டாச்சு!, 700 பாலோயர்ஸ் வந்ததிலிருந்தே பழைய ஆபிஸில் ட்ரீட் கொடுக்க முடியவில்லை, 1000க்கு மெகா ட்ரீட் கேட்டிருந்தார்கள். தயாராக இருக்கவும், விரைவில் ட்ரீட் கொடுக்கிறேன். கோவை நண்பர்கள் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டால் உள்ளூரில் சந்திக்க வசதியாக இருக்கும், இப்ப தான் நான் கோவைவாசியாகி விட்டேனே!(இந்த பதிவு எழுதும் பொழுது 999 பாலோயர்ஸ்)

மூன்று மாத காலம் இணையத்தில் தொடர்ச்சியாக இருக்க முடியாததால் என்னை பின்தொடரும் பல நண்பர்களை நானும் பின் தொடர முடியவில்லை, நண்பர்கள் உங்களது தள முகவரியை தெரியப்படுத்தவும், கண்டிப்பாக அதில் பாலோயர்ஸ் ஆப்சன் வையுங்கள், நான் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 800 க்கு மேல் போய்விட்டது, 300 க்கு மேல் டைரக்டாக பாலோயர் ஆகமுடியாது, உங்களிடம் பாலோயர் ஆப்சன் இருந்தால் தான் முடியும்!, நான் உங்களுக்கு பாலோயர் என்றால் எனக்கு பதிவை மின்னஞ்சலாக அனுப்புவதை தவிர்க்கவும்.



*******************

எக்ஸ் அல்லது பழைய ப்ளாக்கர் ஒருவருடன் ஒரு குழுமத்தில் கருத்து மோதல், குழுமத்தில் சேர்க்க நான் ஒருவரை சிபாரிசி செய்ய, அந்த நபரை தனிப்பட்ட முறையில் பிடிக்காது என்ற காரணத்திற்காக விடாப்பிடியாக சேர்க்கக்கூடாது என நின்றார், கருத்து மோதல் என்று வந்துவிட்டால் நான் வயது வித்தியாசம் எல்லாம் பார்ப்பதில்லை, அங்கேயும் அதையே செய்தேன், கருத்தோடு மனிதனையும் சேர்ந்து பார்த்து கருத்தோடு மனிதனையும் சேர்த்து வெறுக்கும் பழக்கம் போல அவருக்கு.

பின்பு ஒருமுறை நான் ஒரு ”நிறுவனத்தின்”(இயக்கம்னும் சொல்லலாம்) உளவாளி என புரளியை கிளப்பிவிட்டார், வேறு யாரோ அவருக்கு அம்மாதிரி சொல்லியிருப்பாங்க போலன்னு நினைச்சு எந்த நாய் சொன்னாலும் நம்பிவிடுவதா என கேட்க, நான் அவரை சொன்னதாக நினைத்து கொண்டார் போலும்!.

இன்று நண்பர் ஒருவர் அவரிடம் பேசி கொண்டிருக்கையில் அவரிடம் அலைபேசியை வாங்கி, வாங்க நம்ம உணவகத்திற்கு என்றேன், ”இடம் பார்த்தது தெரியும், திறக்கப்போறது தெரியும், திறந்தது தெரியும், ஆனா கண்டிப்பா வரமாட்டேன்” என்றார்!

சொம்பு நசுங்கியே இருந்தா பார்க்க நல்லாவா இருக்கும், பக்கத்துல ஒரு டிங்கரிங் பட்டறை கூடவா இல்லை என கேட்க தோன்றியது!, நண்பரின் அலைபேசி எனக்கு புதிது, நான் அணைக்க தெரியாமல் விட, அவர் கேட்டு கொண்டே இருந்திருக்கிறார்!. ஐ லைக் தட் மேனர்ஸ்!

****************

சினிமா பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது(இணையத்தில் கூட), புத்தகம் படித்து சில மாதங்கள் ஆகிவிட்டது, கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் தான், விமர்சனம் பகுதியை நிரப்ப முடியும்!

***************

நம்ம நண்பர்கள்கிட்ட பிடிச்ச விசயம் என்னான்னா ரொம்ப வெளிப்படையா இருக்குறது, சும்மா பேருக்கு நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போகாம, ஒவ்வொன்றையும் அதன் தனிதனியாக பாராட்டியும், விமர்சித்தும் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள், கோவை பதிவர் சந்திப்பு, டுவிட்டர் நண்பர்கள் சந்திப்பு என நடக்கும் பட்சத்தில் நிச்சயமாக கலந்து கொள்ள நினைக்கிறேன், அப்படி எதாவது ஏற்பாடு பண்ணுங்கப்பா!

************
தத்துவம்(நானா ஜிந்தித்தது)

நான் எங்கேயும் தோற்பதில்லை, ஏனென்றால் உங்களை வெற்றியடைய அனுமதிப்பதே நான் தான்!

************
கவிதை(மாதிரி)


முடிவுறாத இரவொன்றை
உனக்குப் பரிசளித்து
உன் மிக நீண்ட கனவாய்
நான் மாற வேண்டும்

நகக்கீறல் பட்ட சாருவின் தேகம் 1!

இந்திரா காந்தியிடம் சென்றிருந்தால் இந்நேரம் ப. சிதம்பரத்தின் இடத்தில் இருந்திருப்பேன்!

இது தான் சாருவின் ஒரிஜினல் ஸ்டேட்மெண்ட், இதுக்கே இப்படினா இன்னும் சாரு என்ன பண்ணியிருந்தா என்ன ஆகியிருப்பார்ன்னு நம்ம டுவிட்டர் நண்பர்கள் யோசிச்சு கொடுத்த பாயிண்டுகள் இங்கே தொகுக்கப்படுகிறது!

***
3 வயதில் நடிக்க தெரியாமல் மேடை ஏறியவன் தொடருந்து இருந்தால் விஜய் ஆகி இருப்பேன்.
Vaanmugil

**

3வது படிக்கும்போது ப்ளேன பாத்தேன், அப்பயே அதுல ஏறிருந்தா, இப்ப அமெரிக்க ஜனாதிபதி ஆயிருப்பேன்.

@gpradeesh

**

அப்பவே நண்பன் திருட்டு ரயில் ஏறக் கூப்பிட்டான். போயிருந்தா பெருந்தலையா ஆகியிருப்பேன்

அப்போவே ஜேம்ஸ் கேமரூன் என்னைய கூப்பிட்டாரு. போயிருந்தா கேட் வின்ஸ்லெட்டை தள்ளிட்டு போயிருப்பேன்

2 வயதில் நான் தத்தக்கா பித்தக்கா என்று உளறிக் கொண்டிருந்தேன். அப்படியே கண்டினியூ செய்திருந்தால் இன்றைக்கு கருணாநிதி ஆகியிருப்பேன்.

மாயவரத்தான்

**

நான் 3 வயதில் உளறிக் கொண்டிருந்தேன், அப்படியே தொடந்திருந்தால் இந்நேரம் கமல் ஆகியிருப்பேன்

@karthi_1

**

அப்பவே நான் நல்லா கவிதை எழுதுவேன் கருணாநிதிட்ட காமிச்சு இருந்தா நான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆகி இருப்பேன்

@4SN

**

3 வயசில் சுவரெல்லாம் கரிக்கட்டியால் கிறுக்கியிருக்கேன், அதை தொடர்ந்திருந்தால் பிகாசோ ஆகியிருப்பேன்

@kanapraba

*****************



நன்றி டுவிட்டர்ஸ் மற்றும் தொகுத்த கரையான்!

இன்னும் என்னவெல்லாம் சாரு ஆக வாய்ப்பிருக்குன்னு பின்னூட்டத்தில் சொல்லலாம்!

தயவுசெய்து யாரும், சாரு குப்பி கொடுத்ததால் குனிஞ்சி குதிரை ஆகிட்டாருன்னு சொல்லாதிங்க, குதிரை கோவிச்சிக்கும்!

சிறப்பு விருந்தினர்கள்!




நமது உணவகம் ஆரம்பித்து 20 நாட்கள் ஆகிவிட்டது, டிசம்பர் மாத இறுதியில்தான் இணைய இணைப்பு கிடைத்ததால் பல நண்பர்களுக்கு தகவல் கூற முடியவில்லை, டிசம்பர் 28 ஆம் தேதி எழுதிய “அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்” என்ற பதிவிற்கு பிறகுதான் பல நண்பர்களுக்கு நமது உணவகம் திறக்கப்பட்டுள்ளதே தெரிந்தது.






கோவை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் பதிவர் லதானந்த், அவர் மூலமாக அதில் விளம்பரத்திற்கு பேசலாம் என நினைத்திருந்தேன், நான் இங்கே நினைக்க, அவருக்கு விக்குச்சோ, பொறை ஏறுச்சோ தெரியல, கரைக்டா போன் பண்ணிட்டார், ”சார் இதான் விசயம்” என்று சொன்னதும், முதலில் நான் உங்கள் உணவகம் வருகிறேன் என்றார். தற்பொழுது தான் அவர் தீவிர சிகிச்சை முடித்திருப்பது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன், ஆயினும் சொன்னது போலவே குடும்ப சகிதம் நமது உணவகத்திற்கு வருகை தந்து நமது உணவகத்தை சிறப்பித்தார்.


அனைத்து உணவுகளையும் மிகவும் ரசித்து உண்டது அவர் முகத்தில் தெரிந்தது, விரைவில் பதிவாக இடுகிறேன் என்று கூறினார்.




லதானந்த் சார் மதிய உணவை முடிக்கும் அதே வேலையில், ஈரோட்டில் இருந்து எனது பாஸ் கார்த்திக் வந்தார், அவருடன் வலையுலக இளம்புயல் சஞ்சயும். அவர்களது மதிய உணவும் நமது உணவகத்திலேயே நடந்தது.




உங்கள் வருகையால் பெருமையடைந்தேன், நன்றி நண்பர்களே!


*****************

உணவகத்தின் முகவரி

பூர்வாஸ் ஃபைன் டைன்,
#2, வெங்கிடசாமி சாலை கிழக்கு,
ஆர். எஸ். புரம்,
(சிந்தாமணி பெட்ரோல் பங்க் அருகில்)
கோயம்புத்தூர் - 641 002.

தொலைபேசி : 0422 - 4376437

உங்களாலே சாத்தியமானது!

இன்று மதியம் ஒரு பிஸியான நேரத்தில் நண்பர் ஜாஃபர் போன் செய்தார், அவர் போன் செய்தாலே நிச்சயம் அது முக்கியமான விசயமாக தான் இருக்கும். தமிழ்மணம் பார்த்திங்களா தல என்றார், இல்லைங்க காலையிலிருந்து இன்னும் இணையம் பக்கம் போகல என்றேன், பாருங்க, தமிழ்மணம் டாப்10 பதிவர்களில் உங்களை தேர்வு செய்திருக்காங்க என்றார், உடன் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நண்பர்களையும் கேட்டறிந்தேன், அனைவரும் மிகவும் தகுதியான பதிவர்கள் தான், அவர்களுக்கு நடுவில் நானும் என்பது உங்கள் அன்பினாலே சாத்தியமானது என உணர முடிந்தது, என்னுடன் டாப்10 ஐ பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி, இத்தருணத்தில் சென்ற வருட பதிவுகளை கொஞ்சம் மீள் பார்வை செய்கிறேன்!



சென்ற வருடம் ஜனவரி மாதம் மதுரையில் தருமி ஐயா தலைமையில் டாக்டர் ஷாலினி பங்கேற்ற “குழந்தைகள் பாலியல் வன்கொடுமை” தடுப்பு பற்றிய நிகழ்ச்சி நடந்தது, கலந்து கொண்ட அனைவருக்கும் பயனுள்ள வகையில் நிகழ்ச்சி நடந்தது, சமூக பிரச்சனையை முன்வைத்து பதிவர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பிரமாண்டத்தை இதுவரை வேறு யாரும் செய்யாத காரணத்தால் அந்த பெருமையை இன்னும் மதுரையே வைத்துள்ளது!

ஒரு முக்கிய அறிவிப்பு!


2009 ஆம் வருடமே பரிணாமம் பற்றி சில பதிவுகளில் தொட்டு சென்றிருந்தாலும் 2010 பிப்ரவரி மாதம் தான் பரிணாமம் தொடரை முன்னுரையுடன் ஆரம்பித்தேன். தொடர்ச்சியான விவாதங்களும், ஆதரவும் தொடர்ந்து எழுத ஊக்கத்தை தந்தது!
பரிணாமம் - முன்னுரை
இதே மாதம் தான் நான் ஏன் நாத்திகனானேன் என்ற தொடரையும் ஆரம்பித்தேன், எனது தேடலின் அர்த்தத்தையும், அதன் தொடர்ச்சியான தூண்டுதல்களையும் எழுதினேன், இப்பதிவிற்கும் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து எழுத உற்சாகம் அளித்தது!
நான் ஏன் நாத்திகனானேன்!



பரபரப்பு மார்ச் எனலாம், அந்தளவுக்கு மொத்த பதிவுலகத்துக்கும் தீனி போட்டது.
நித்தியானந்தன் என்ற காவி உடுத்திய கம்முனாட்டி, அறைக்குள் நடத்திய விளையாட்டுகள் அம்பலமாகியது, பெரிய காமெடி என்னவென்றால் பெரிதாக யாரும் நித்தியை கண்டிக்கவில்லை, நித்திக்கு சொம்பு தூக்கி கொண்டிருந்த சாருவின் டவசரை மொத்தமாக அனைவரும் சேர்ந்து கழட்டினர்!
நித்யா டவுசர் கிழிஞ்சு போச்சு! டும்
டும் டும்!

அடிவருடி, சொம்புதூக்கி, அல்லக்கை (charu)

இந்த மாதம் பெண்கள் தினத்திற்கு தோழி ரம்யாவிடமிருந்து பதிவு வாங்கி பதிவிட்டேன், தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் அர்த்தமான ரம்யாவின் பதிவு பெருத்த வரவேற்பை பெற்றது!
பெண்கள் தினம்!


ஏப்ரல் மாதம் பதிவர் லதானந்த் ஒரு கோக்குமாக்கு தொடர் ஒன்றை ஆரம்பித்தார், எனது தொடர்ச்சியான பணி காரணமாக எனக்கு பதிலாக தோழி மதுரைபொண்ணிடம் எழுதி வாங்கி பதிவிட்டேன், அவருக்கு பின் பல பதிவர்கள் அந்த தொடரை தொடர்ந்தனர்!
லதானந்த் VS மதுரை பொண்ணு!

2009 ல் ஒரு முறை இப்பதிவை எழுதியிருந்தாலும் சற்றே மாற்றம் செய்து மீண்டும் மீள்பதிவாக வெளியிட்டேன், வார்த்தை பிரயோகத்தில் எனக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது இந்த பதிவு
உண்மை என்றால் என்ன!?



மே மாதம், பல பதிவுலக நண்பர்களுக்கு பிறந்த நாளாக அமைந்திருந்தது, தொலைவில் இருந்தாலும் அனைவரையும் இணையம் வாயிலாக தினமும் மிஸ் பண்ணாமல் இருப்பது நட்பிற்கான அழகு!
இம்மாதம் பின்நவீனம் பற்றி எனது புரிந்தல்களை பகிர்ந்திருந்தேன்!
பின்நவீனம்!


ஜூன் மாதம் எனது 300 பதிவுகளை நிறைவு செய்தேன், பங்காளி ராஜன் என்னை பேட்டி எடுப்பது போல் ஒரு பதிவு தயாரித்து அனுப்பியிருந்தார், பதிவுலக அரசியல்கள் கலந்து நகைச்சுவையாக அமைந்திருந்தது அந்த பதிவு!
வால் பையனின் ”ஓப்பன் வேட்டி சாரி பேட்டி”

ஜூலை மாதம் ஈரோட்டில் புத்தக திருவிழா நடந்தது, ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலம் பேச புத்தகத்திருவிழா களை கட்டியது, எழுத்தாளர் ஞாநியை திருவிழாவின் போது சந்தித்தேன்!
அறிவை வளர்க்க ஒரு திருவிழா!
இன்னொரு விசயமாகவும் 2010 ஜூலை எனக்கு வாழ்கையில் மறக்கமுடியாத மாதம்!


2010 ஆகஸ்டும் ஒரு முக்கியமான மாதம் தான், எனது இரண்டாவது குழந்தை வருணா இம்மாதம் தான் பிறந்தாள், பூமியின் அனைத்து பகுதிகளின் வசிக்கும் நண்பர்கள் அனைவரும் அழைத்து வாழ்த்தினர்.
அடுத்த வாரிசு!


செப்டம்பர் மாதம் பதிவுலகில் வேற ஒரு பிரச்சனை போய்கொண்டிருந்தது, பதிவர்கள் தங்களுக்குள் பேசிகொண்ட இணைய உரையாடல்களை மாறி மாறி வெளியிட்டு முடிந்தவரை தம்மை தாமே கேவலப்படுத்தி கொண்டனர், சுயசொறிதல் என்ற வார்த்தையில் இப்பிரச்சனை ஆரம்பித்தது என கேள்விபட்டு, அப்பெயரிலேயே ஒரு பதிவு எழுதினேன்!
சுயசொறிதல்!.....


அக்டோபர் மாதம் பங்காளி ராஜனுக்கு திருமணம், இணையம் மூலம் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்ட பதிவர்கள் சிலரில் பங்காளியும் இணைந்தார், திருமணம் சென்னையில் சிறப்பாக நடந்தது, இணையத்தில் பங்காளியால் டவுசர் கிழிபட்டவர்கள் அவரது திருமணத்தை சர்ச்சைக்குள்ளாக்கினர். பங்காளி இன்னும் அடிச்சி ஆடிகிட்டு தான் இருக்காரு!
கல்யாண ஆல்பம்!


நவம்பர் மாதம் உணவகம் திறக்க முழுவேகத்துடன் வேலை செய்து கொண்டிருந்தேன், அவ்வபோதே இனையத்தில் அமர முடிந்தது. சர்ர்ச்சைகுறிய குழந்தை பாலியல் வன்முறை குறித்தும், அப்போது பதிவுலகில் கனன்று கொண்டிருந்த லிவிங்டுகெதர் குறித்தும் பதிவிட்டேன், பதிவை விட பின்னூட்டங்கள் நிறைய கருத்து சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள்
மனிதன், மிருகம், கலாச்சாரம்!

2009 போலவே 2010 டிசம்பரிலும் ஈரோட்டில் சங்கமம் நடத்தினோம், சென்ற வருடம் ப்[ஓலவே இந்த வருடமும் சிறப்பாக நடந்தது, இம்முறையும் வெளியூரிலிருந்து பதிவர்நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தி கொடுத்தனர்!
எனது உணவகத்தையும் இந்த மாதம் தான் திறந்தேன்
அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்!


டாப் 10 இருக்கும் மற்ற பதிவுகளுடன் ஒப்பிடும் பொழுது, அவர்கள் எழுதியதில் பாதி கூட நான் எழுதவில்லை. மொத்தமே 2010ல் 95 பதிவு தான் எழுதியிருந்தேன். இருந்தும் நான் ஆறாம் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு உங்கள் ஊக்கமும் அதரவும் தான் காரணம்.

நன்றி நண்பர்களே!

!

Blog Widget by LinkWithin