உதவுங்கள் நீங்களும் கடவுளாவீர்கள்



படத்தில் காணப்படும் சிறுவன் பெயர் மோனிஸ் ! வயது 2 , சிறுவயதில் விளையாடிக்கொண்டிருக்கும் போது அவன் தலையில் எண்ணெய் சட்டி கவிழ்ந்தது அதில் அவனது முன்னந்தலையில் பாதி சிதைந்துவிட்டது. மேற்க்கொண்டு சிகிச்சை செய்ய வசதி இல்லாத குடும்பம் அவர்களது குடும்பம். அவனது தாயார் பல வீடுகளில் துணிதுவைத்தும் பாத்திரம் தேய்த்தும் தான் அவர்களது குடும்பம் நடைபெறுகிறது, இன்நிலையில் அவனது மேற்க்கட்ட சிகிச்சைக்காகத்தான் இந்த பதிவு. தங்களால் இயன்ற உதவியை செய்யவேண்டுமாய் தங்களை சிரந்தாழ்த்தி வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.உதவி செய்ய முன் வருபவர்கள் தயவு செய்து shaggy_krish@yahoo.co.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். தங்களின் அன்றாட சில்லறை செலவுகள் கூட இவனுக்கு மறுவாழ்வவை ஏற்ப்படுத்தும்.


இதுவரை உதவியவர்கள் பெயர்கள் இங்கே இருக்கிறது

அடல்ஸ் ஒன்லி +18 குறுந்தகவல் நகைசுவைகள்

செக்ஸ் வைத்து கொள்ளும் போது

கேர்ள் பிரெண்ட்: வா அன்பே சந்தோசமாக இருக்கலாம்!!

செக்ஸ் தொழிலாளி: சீக்கிரம் முடிச்சுட்டு போப்பா!!

மனைவி:விட்டத்துல பெயிண்ட் அடிக்கணும் இந்த தடவை பெயிண்ட் அடிக்கும் போது!!
*******************************************

ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம், மறு புறத்திற்கு செல்லுவோர் பெயர் முகவரி வாங்கபடுகிறது.குனிந்து கொண்டே அதிகாரி கேள்வி கேட்கிறார்

அதிகாரி:பெயர் என்ன?

பின் லாடன்

செக்ஸ்?

வாரத்திற்கு ஐந்து தடவை

நான் கேட்டது ஆணா பெண்ணா ?

இரண்டுமே,! கிடைக்காத பொழுது ஒட்டகம்!!

"நேக்கு நாக்கு தள்ளிதே" - சினிமா விமர்சனம்

தமிழ் திரை வரலாற்றில் முதன் முறையாக என்று பல விசங்களில் சொல்ல கூடிய விதமாக எந்த படம் எடுக்கப்பட்டது.
நாயகன் - வாண்டு ரீக(வ)ன்
நாயகி - ஜெனிபார் லோபஸ்

கதை வசனம் இயக்கம் - வால்பையன்

கதை ஒரு கிராமத்தில் நடக்கிறது, அதிகம் மக்கள் தொகை இல்லாத இந்த கிராமத்தில், அதிகம் படித்தது நமது நாயகன் மட்டுமே.
வேறு யாரும் மூன்றாம் கிளாஸ் வரை படித்ததில்லை!?

நாயகனுக்கு வேலை மற்றவர்களுக்கு வரும் கடிதத்தை (அது எந்த மொழியில் இருந்தாலும்)படித்து காட்டுவது, இது வரை யாரும் தப்பு கண்டு பிடித்ததில்லை.(தெரிந்தால் தானே கண்டுபிடிப்பதற்கு)

இங்கே தான் வில்லன் வருகை, கிராமத்தில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாண்டு ரீக(வ)ன் எடுப்பதை விரும்பாத வில்லன் வெளியூர் (வெளிநாடு இல்லப்பா) சென்று பல கெட்ட வார்த்தைகளை கற்று கொண்டு வருகிறான்.

முதலில் கதாநாயகனுடன் பழக கூடாது என்று அனைவருக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்புகிறான். அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆத்திரம் அடைந்த வில்லன், அனைவருக்கும் வாண்டு ரீக(வ)ன் பெயரிலே ஆபாச கடிதம் எழுதுகிறான்,

அதிர்ச்சி அடைந்த நாயகன் ஓட்டு கேட்பது போல் எல்லார் வீட்டிற்கும் சென்று "நான் அவனில்லை" "நான் அவனில்லை' என்று புரிய வைக்கிறார்.

இதில் சஸ்பென்ஸ் என்னவென்றால் அந்த வில்லன் யாரென்றும் யாருக்கும் தெரியவில்லை. எல்லாரிடம் விசாரித்து பார்த்தாலும் அவர்கள் பதிலும் நான் அவனில்லை என்பது தான்,

நாளடைவில் பேரிங் போன fan சத்தம் பழகி போவது போல் யாரும் இந்த விசயத்தை சட்டை செய்யவில்லை,

சரி அப்பொழுதாவது வில்லனை காட்டுவார்கள் என்று பார்த்தால், கடைசியில் ஒரு மனநல மருத்துவமனையின் போர்டை மட்டும் காட்டி விட்டு படத்தை முடிக்கிறார்கள்,

இருந்தாலும் வில்லனை காட்டவில்லை என்பதால் எங்கே என்னொரு பாகம் தொடருமோ என்ற பயத்தோடு மக்கள் வெளியே வருவது அவர்கள் முகத்தில் தெரிகிறது.

நாயகி எங்கே என்று கேட்கிறீர்களா! ஒரே ஒரு காட்சியில் ஒரு புத்தகத்தின் அட்டை படத்தில் ஜெனிபார் லோபசை காட்டுகிறார்கள் அவ்வளவு தான்


தலைப்பின் அர்த்தம் புரியுமென்று நினைக்கிறேன், அது வேறு யாருக்குமல்ல எனக்கு தான்.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!


எனக்கு தொழில் முறையில் ஒரு வலைபூவும் உண்டு.


தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களும் அதை எப்போது வாங்கலாம்.
விற்கலாம் என்பதை அவர்கள் கைபேசிக்கு குறுந்தகவல் மூலம் அனுப்புவதை நான்கு வருடமாக செய்து வருகிறேன்.

சென்ற வருடம் வரை எந்த குறையுமில்லை!
குறைந்த லாபமே என்றாலும் நஷ்டம் இல்லாமல் எனது வாடிக்கையாளர்களை வைத்திருந்தேன்.

சென்ற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் ஏற்ப்பட்ட அசாத்திய விலையேற்றம்.
கடுமையாக பாதித்தது. சிலர் பெருத்த நஷ்டம் அடைந்தனர்.
போன வாரம் அதைவிட கொடுமை ஒரே வாரத்தில் தங்கம் கிராமுக்கு 120 ரூபாய் குறைந்தது. அதாவது ஒரு கிலோவுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம்.
எத்தனை தங்க வியாபாரிகள் காணாமல் போனார்களோ தெரியவில்லை.

அதில் அதிர்ஷ்ட வசமாக ஒரே ஒரு வியாபாரி மட்டும் லாபம் அடைந்தார்.
அந்த மகிழ்ச்சியில் எனக்கு ஒரு கைபேசி பரிசளிப்பதாக கூறினார்.
அவர் ஆசை பட்டு கொடுக்கிறார், சரி என்று சொல்லி விட்டேன்.

french express கூரியரில் நேற்று அனுப்பியிருக்கிறார்.
இன்று காலை வந்தடைந்தது. என்ன மாடலாக இருக்கும் என்று ஆவலோடு பார்சலை பிரித்தால், வெறும் charger மட்டும் உள்ளே இருக்கிறது.

பார்சல் பக்காவாக இருக்கிறது. பிரித்தது போலே தெரியவில்லை.
அவ்வளவு தொழில் நேர்த்தி.

போனது பொய் விட்டது . எதற்கும் விசாரித்து வைப்போம் என்று தெரிந்த நண்பனிடம் கேட்டால், இதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறதாம். வரும் பார்சலில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடித்து பார்சல் கலையாமல் திருடுவது இவர்களின் வேலை, டேலிவிரி பாய் இவர்களுடன் கூட்டு.

நீதி: விலை உயந்த பொருள்களை கூரியரில் அனுப்பாதிர்கள்

திட்டுதல், ஏசுதல், வைதல்,பேசுதல் இன்னும் பிற வட்டார வார்த்தைகள்.

திட்டுதல்:
இது தமிழில் அனைவராலும் அறியப்பட்ட பொதுவான வார்த்தை.
ஒருவன் என்னை திட்டினான் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியில் வாழ்பவர்களாலும் புரிந்து கொள்ளமுடியும்.

ஏசுதல்:
இது நெல்லை சுத்துவட்டார வார்த்தை,
என்ன ஏசிபுட்டான் என்று அன்போடு(!?)சொல்லுவார்கள். இதை கூட மற்ற பகுதியில் வாழ்பவர்களால் புரிந்து கொள்ளமுடியும்.
"மெதுவாய் கொடுங்க" என்பதற்கு "பைய தாங்க" என்று சொல்லுவதன் மூலம் பல சினிமா மற்றும் பத்திரிக்கை நகைசுவைகளுக்கு வித்திட்டவர்கள்.

வைதல்:
இது அக்மார்க் மதுரை வார்த்தை.
"வஞ்சிட்டான்" என்று தான் வட்டார மொழியில் சொல்வார்கள்.
"வஞ்சித்துவிட்டான்" என்ற சொல்லிருந்து வந்திருக்கலாம். தமிழ் வளத்த மதுரை அல்லவா.
"லந்த கொடுத்தல்","சத்தாய்த்தல்" போன்ற சொல்லிற்கு மதுரையில் பிறந்திருந்தாலும் இன்றும் எனக்கு அர்த்தம் தெரியாது,
முழு மரியாதை இல்லாவிட்டாலும் "அண்ணே" என்று அன்போடு அழைக்கும் ஊரிது.

பேசுதல்:
கொங்கு வட்டார பகுதிகளில் மேலே இருக்கும் மூன்று தலைப்பிற்கும் இது தான் பெயர் இங்கே. முழு மரியாதைக்கு பெயர் பெற்ற ஊர் என்பதால், திட்டுவதை கூட இங்கே இப்படி தான் சொல்லுவார்கள். சிறு குழந்தை கூட "வாங்க","போங்க" என்று அழைப்பது இனிமையாக இருக்கும், வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரும் அனைவரையும் கையெடுத்து கும்பிடும் பழக்கம் இவர்களிது,
ஒரு கையால் ஹாய் சொல்லி திரியும் இந்த நாகரிகத்தில், இன்றும் கும்பிடும் பழக்கத்தை வைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி

சென்னை தமிழ்:
"இன்ன நைனா" இன்று அனைவரையும் அன்போடு(!?) தான் இங்கே அழைப்பார்கள்.
வாய் பேச தெரிந்த சிறு குழந்தை கூட "ங்கோத்தா" என்ற வார்த்தையை அழகாக சொல்லும்.
"பாடு","லவடிகபால்" போன்ற வார்த்தைகளுக்கும் இதை பேசும் நிறைய பேருக்கு அர்த்தம் தெரியாது, சென்னை தமிழும் சங்கம் வளர்த்து ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த வேண்டிய மொழி போல் எனக்கு தோன்றுகிறது.

உங்கள் கருத்துகளையும், இது போன்ற இன்ன பிற வட்டார வார்த்தைகளையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்

தலைப்பு வைக்க தெரியாத தற்"குறி"களுக்கு!!!

தலைப்பு வைச்சவர் அடக்கடி தமிழ்மணம் பக்கம் வருவார் போலிருக்கு,
வச்சுட்டார் தலைப்பு நட்சுன்னு

சினிமா அவ்வளவாக நான் விரும்பி பார்ப்பதில்லை.
நண்பர்கள் இந்தபடத்துக்கு அழைக்கும் போதோ, நல்லாயில்லை என்றால் பாதியிலேயே போய் விடுவேன் என்று, சொல்லி தான் சென்றேன்.

ஆனால் படத்தின் எடிடிங் என்னை உட்காரவைத்து விட்டது.
இந்த படத்தை போல பல கேரக்டர்களின் கண்ணோட்டத்தில் படம் பார்ப்பது.
பல வருடங்களுக்கு முன்னரே தமிழில் அந்தநாள் என்ற பெயரில் வந்தது.



dennis quiad ஒரு அசால்ட்டான நடிகர், அவர் கூட ஒரு ஒரு கேரக்டர் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனா where ன்னு யோசிக்கும் போது ஞாபகம் வந்தது, ஸ்டார் மூவிஸ்ல லாஸ்ட்-ன்னு ஒரு சீரியல் வந்ததில்ல அதுல ஜாக்-ன்னு ஒரு டாக்டர் வேசத்துல வருவார்.

படத்திற்கு என் கடமை என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
காரணம் படத்தின் கடைசி காட்சியை பார்க்கவும்

sigourine weaver-க்கு அநியாத்துக்கு வயசாயி விட்டது.
எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
மொக்கையிலாமல் நன்றாக இருக்கிறது.
அதனால் படம் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன்.

என்று தனியும் இந்த பிராந்தி தாகம் மற்றும் தமிழக அரசின் ஆணாதிக்கத்தை பற்றி!!


வியாழன் இரவு பெங்களூர் செல்லலாம் என்று நானும் என்னுடைய முதலாளி கார்த்திக்கும் கிளம்பினோம். அதன் முன்னர் ஒரு குவாட்டர் போடாலாம் என்று எனக்கு தோன்றியது, எனது ஆபிஸ் அருகில் இருக்கும் டாஸ்மார்க் கடையில் M.C கேட்டால் இல்லை. ஆனால் கார்டினால் இருக்கிறது என்று பதில், வெகு நாளாக இதை பற்றி சண்டை போட வேண்டும் என்று நினைத்த நான் அன்று பிடித்து கொண்டேன்.

எந்த பிராந்தி யார் கேட்டாலும் இல்லை என்றால் அவர்கள் பதில் அதற்கு மாற்றாக கார்டினால் இருக்கிறது என்பது தான். ஈரோடு பிராந்தியத்தின் டாஸ்மார்க் மேலாளராக இருப்பவர் ஏற்கனவே கார்டினால் கம்பெனியில் வேலை செய்திருக்கிறார். அவரை வேலைக்கு அமர்த்தவும் அவர் கார்டினல் மற்றும் அந்த கம்பெனி தொடர்புடைய சரக்குகள் விற்கவும் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறார், அவருக்கு இதற்காக அந்த கம்பெனி குடுக்கும் கூலி 47 கோடி ரூபாயில் ஒரு வீடு கோவையில்.
*************************************************
தமிழக அரசின் பட்ஜெட்டில் ஏழை பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 20,000 ரூபாய் தருவதாக அறிவிப்பு.
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து செலவு செய்யும் ஒரு நிகழ்ச்சி.
அதில் பெண்களுக்கு மட்டும் உதவி தொகை, வரதட்சினை ஊக்கபடுத்தும் ஒரு செயலாகவே எனக்கு தோன்றுகிறது.
ஆணும் பெண்ணும் சமம் என்ற பொழுது பெண்ணுக்கு மட்டும் ஏன் உதவி தொகை.
ஏழை ஆண்கள் இல்லையா, இல்லை இது ஓட்டுக்காக மட்டும் செயல் படுத்தும் ஒரு அறிவிப்பா?.
பெண் குழந்தை பெற்றவர்கள் தெரியாதனம்மா பெற்றிடோம் என்று நினைக்கும் அளவுக்கு இவர்களின் பெண் உரிமை இருக்கிறது.

எவ்வளவோ விசயங்களுக்கு உதவி தேவைப்படும் இந்த தமிழகத்தில், திருமணம் என்பது ஒரு டுபாக்கூர் என்று சொல்லிய பெரியாரின் சீடர்கள் செய்யும் இந்த ஆணாதிக்கத்தை கண்மூடி தனமாக எத்தனை பகுத்தறிவு(!?) சீடர்கள் ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை

கனவுகள் நிறைந்த தூக்கமும் மற்றும் மேட்ரிக்ஸ் படத்தை பற்றி!!

என்னிலிருந்து பிரிக்க முடியாத விசயங்கள் நிறைய இருக்கின்றன.
என் குரல், என் திமிர், என் கோபம் போன்று.
ஆனால் என் கனவுகளை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை.
அது என்னை போன்று இன்னொரு நானாகவே எனக்கு தெரிகிறது.

என் கனவில் நான் தான் ஹீரோ, ஒவ்வொரு கனவிலும் எதாவது ஒரு வில்லனால் நான் துரத்தபடுவேன்.கனவில் நான் பலகீனமானவனாக தான் இருக்கிறேன், எந்த கனவிலும் நான் வில்லனை ஜெயித்ததில்லை.என் உடல் கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு நான் கொல்ல பட்டாலும், மறு நாள் என் கனவில் நான் தான் ஹீரோ.

கனவுகளில் என்னால் புரிந்து கொள்ள முடியாதது.
பலகீனம் மற்றும் இயலாமை.

எதிரிகள் துரத்தும் போது நான் எவ்வளவு வேகம் தான் ஓடினாலும் நான் இருந்த இடத்தை விட்டு நகர்ந்ததில்லை, பின்னால் வரும் எதிரிகள் கையில் அகப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில் சைக்கிள் பின்னால் எல்லாம் ஒளிந்திருக்கிறேன்.
அங்கே ஒளிந்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அவர்கள் என்னை தாண்டி செல்வது ஆச்சர்யமாய் இருக்கும்.

என் கனவுலகம் என்பது வேறா. அங்கே வேறொரு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா.
சில நேரங்களில் வரும் கனவுகள் என் வாழ்வில் நடந்தது போல் இருக்கும், ஆனால் நடந்திருக்காது. சில நேரங்களில் சில அதிசிய விலங்குகள் வரும் ஆனால் அப்படியொன்று எங்கேயும் இருக்காது.

ஆனாலும் என் கனவுகள் எனக்கு ஒரு குறியீடாக தான் தெரிகின்றது.
என்னிலிருந்து நான் நிறைய கற்று கொள்வது போல் என் கனவிலிருந்தும் நிறைய கற்று கொண்டு தான் இருக்கிறேன்.

*********************************************

அப்பொழுது நான் சென்னையில் இருந்தேன். எந்த தியேட்டர் என்று ஞாபகம் இல்லை.
ஆனால் என் பக்கத்திலிருந்தவன் கேட்ட கேள்வி என்னால் மறக்க முடியாது.
"மேட்ரிக்ஸ் என்றால் என்ன?"
வடிவேலு ஒரு படத்தில சொல்லுவான் "என்னையும் மதிச்சி ஐந்நூறு ரூபா கேட்டியே" ன்னு!!!
அப்படி தான் என் நிலைமை அப்போ.


படத்திற்கு வருவோம்
நாம் அனைவரும் தூக்கத்தில் இருக்கிறோம், நம் ஒவ்வொருவருக்கும் தனி தனியாக ஒரு மென்பொருள் உள்ளது, இயந்திரங்களின் உதவியுடன் அவைகள் மூலம் நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். அதையே உண்மையான வாழ்க்கை என்று நம்பி கொண்டிருக்கிறோம்.

ஹீரோ ஒருவனால் மட்டுமே! இயந்திரத்தை ஜெயிக்க முடியும்.
ஆனால் அவன் கனவு வாழ்க்கையையே உண்மையென்று நம்பி கொண்டிருக்கிறான்,
அவனை அது உண்மையில்லை என்று நம்ப வைக்கவேண்டும். உன்னால் இயந்திரத்தை ஜெயிக்க முடியும் என்று நம்பவைக்க வேண்டும்,
இதெல்லாம் நம்ப வைக்க முடியும் என்று கூட இருப்பவர்கள் நம்புவார்கள்.

ஒருவழியாக ஹீரோவை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுவார்கள்.
அவனுக்கு கராத்தே மற்றும் பல சித்து வேலைகள் பின் மண்டையில் ஒரு ராடு சொருகி மென்பொருள் மூலம் ஏற்றப்படும்.

இருப்பினும் கனவில் கூட என்னால் முடியும் என்று நம்பும் போது தான் ஹீரோவால் கூட பல விசயங்கள் சாத்தியமாகிறது, பறக்கிறான், பல மீட்டர் மேலிருந்து குதிக்கிறான்.
ஒரே நேரத்தில் பல நூறுபேருடன் சண்டை போடுகிறான்.
கடைசி பாகத்தில் கனவில் அல்ல நினைவிலும் முடியும் என்று நம்பி இயந்திரத்தை கட்டுபடுத்துகிறான்.

நீதி:கனவில் மட்டுமல்ல நினைவிலும் முடியும் என்று நம்பினால் வெற்றி நமக்கே!!
(கடைசியில் ஏன் ஹீரோ செத்தான் என்று கேட்க கூடாது)

எனக்கு ஏன் கவிதை பிடிப்பதில்லை!!!

கவிதைகளை அல்ல, கொலை செய்யப்பட்ட கவிதைகளும் அதை கொலை செய்பவர்களையும் தான் எனக்கு பிடிப்பதில்லை.

எங்கள் ஊரில் எல்லாம் ஒருவன் கவிதை எழுதினால் அவன் காதலிக்கிறான் என்கிறார்கள்.
சோக கவிதையா காதாலில் தோல்வியாம்.

"நேற்று நகரத்துக்கு சென்று ஒரு விளக்கு வாங்கினேன்."

நேற்று
நகரத்துக்கு
சென்று
ஒரு
விளக்கு
வாங்கினேன்

மேலே இருப்பது வாக்கியம்
அதன் கிழே இருப்பது கவிதை

இதில் சிக்கி தான் இன்று தமிழ் கவிதைகள் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு என்னிடம் புலம்புகிறது.

கவிதைகள் சிலவரிகளில் பெரும் வாழ்வை சுட்டி காட்ட வேண்டும்.
வலிகளை உணர்த்த வேண்டும்
குறைந்த பட்சம் நமக்கு கவிதை படிக்கிறோம் என்ற உணர்வையாவது தரவேண்டும்.

"தன் பின்னலைத் தளர்த்திய
ஒரு கிழவியின்
சாபத்தின் சொற்கள்
ஊரை நிறைத்தது"

அய்யனார் கவிஞர் அகிலனை பற்றிய பதிவு போட்டிருக்கிறார்.
அது கவிதை அந்த வரிகள் நமக்கு எவ்வளவு செய்திகளை சொல்கிறது.

இது போல் கவிதை எழுத தெரிந்தால் எழுதுங்கள் இல்லையென்றால்
கவிதையை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று வழக்கு போடுவேன்

அன்பில்லாத அனானிக்கு!!!!!

சென்றமுறை என்னை திட்டபோது எனக்கு பயங்கர கோபம் வந்தது.
மீண்டும் உனது (என்ன உனது உன் போதுமே) பின்னூட்டத்தை பார்த்த பொழுது
உன் மீது பாவமாக இருக்கிறது, நீ சிறுவனோ அல்லது மனம் பேதலிதவனோ என்று சந்தேகம் வருகிறது.

சென்றமுறையே நீ ஒரு ஆணாக இருந்தால் நேருக்கு நேர் சண்டைக்கு வா என்று அழைத்தேன். ஆனால் நீ வரவில்லை. நீ பெண்ணாய் இருப்பாயோ என்று இப்பொழுது எனக்கு சந்தேகம் வருகிறது. எனக்கு பெண்களுடன் சண்டை போட்டு பழக்கமில்லை அதனால் உன்னை சண்டைக்கு அழைத்ததற்கு வருந்துகிறேன்.

மேலும் நீ வலைக்கு புதிதா இல்லை தெரியாது போல் நடிகிறாயா என்றும் தெரியவில்லை தெரியவில்லை.
எனது வலைப்பூவில் IP checker இருக்கிறது, நீ பின்னூட்டம் போட்டால் அது முதலில் என் மெயிலுக்கு தான் வரும். அதில் நீ அனுப்பிய நேரமும் எனக்கு தெரியும். அந்த நேரத்தில் என் வலையில் யார் இருந்தார்கள் என்று என்னால் கண்டுபிடிக்கமுடியும்.

தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பார்.
நான் வலைக்கு சண்டை பட வரவில்லை.இத்துடன் உன் சித்து விளையாட்டுகளை முடித்து கொள்வது நல்லது. இல்லை என்றால் நான் cyber crime -ல் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டியிருக்கும்.

பின்நவீனத்தை கண்டு பயம் ஏன்? தொடர்ச்சி!!!

இதன் முந்தய பாகம்
படித்து விட்டு வந்தால் கொஞ்சம் புரியும்!

தமிழில் சிவாஜி நடித்த அந்தநாள் பின்நவீனத்தை சேர்ந்த படம்!
இதில் சிவாஜியை கொன்ற கொலைகாரன் யாரென்று கடைசிடில் தான் தெரியும். அதைவரை நாமே இவராயிருக்குமோ, அவரையிருக்குமோ என்றோ குழம்பி கொண்டிருப்போம்.

விருமாண்டி இந்த வகையில் எடுக்கபட்டாலும் இதில் பசுபதி விளிம்பு நிலை மனிதராகவே காட்சி தருகிறார், ஆகவே கமல் மையவாதியாகிறார்.

சரி இது என்ன விளிம்பு, மைய நிலை

சட்டம் இயற்றுபவர்கள் மையவாதிகள்,
உரிமைக்காக போராடுபவர்கள் விளிம்புநிலை மனிதர்கள்.

பின்நவீனதுக்கு முன் உருவான மதங்கள், நம்மை சுதந்திரத்துக்கு அழைத்து செல்லுவது போல் தத்துவங்களை கொண்டது, அதாவது நாமெல்லாம் எதோ சிறையில் இருப்பது போலவும், இந்த மதத்தை பின்பற்றினால் நம்மை சொர்க்கத்து அழைத்து செல்வது போலவும்

சிறையில் இருப்பதாக நம்புவோர் அதாவது விளிம்பு நிலை மனிதர்கள். யாரையாவது நம்பி தான் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள்.மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அங்கே அவர்களை அழைத்து செல்ல எதாவது அதிசியம் நடக்கும் என்று நம்புகிறார்கள்.

சுததிரமாக தான் இருக்கிறோம் என்று நினைப்பவர்கள். மைய வாதிகள்.
உண்மையான பின்நவீனத்துவவாதிகள் விளிம்பு நிலை மனிதர்களை மனிதர்களாக தான் பார்க்கிறார்கள்(மனிதநேயத்துடன்) அவர்களை அடக்கி ஆள அவர்கள் நினைப்பதில்லை.

பின்நவீனம் என்பது ஒரு எளிமையான கோட்பாடு
நடிகரின் சினிமாவை பார்
நடிகரின் ரசிகனாய் இருக்காதே!

கட்சிக்கு ஓட்டு போடு.
கட்சியின் தொண்டனாய் இருக்காதே!

அதாவது நீ யாருக்காவது அடிமையாக தான் இருக்கவேண்டும் என்பது தேவையில்லாதது என்கிறது பின்நவீனம்.

விளிம்புநிலை மனிதர்கள் தங்கள் நம்பிக்கையை உண்மை என்று நம்புகிறார்கள்.
புதுமைகள் தங்கள் நம்பிக்கையை பொய்யாக்குவதை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

அப்படியே புதுமைகளை உபயோகபடுத்தினாலும், அவைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்கிறார்கள். சரி அப்படியென்றால் அடுத்தது என்ன என்று தீர்மானிக்கபட்டிருக்கும் அல்லவா அதை சொல்லவேண்டியது தானே!!!!

!

Blog Widget by LinkWithin