தமிழ் சமூகத்தின் விச ஜந்து ஜெயமோகன்!

எத்தனை பேர் படித்தீர்கள் தேர்வு செய்யப்பட்ட சிலர் என்ற http://www.jeyamohan.in/?p=13982 இந்த கட்டுரையை.

ஜெயமோகனின் சொம்புகளுக்கு அந்த கட்டுரை வேதவாக்காக இருக்கலாம், ஆனால் உங்களுக்கும் அவ்வாறே தோன்றினால் ஜெயமோகன் சொல்லியிருப்பது உங்களைத்தான், நீங்கள் பிறப்பாலே முட்டாள்கள் உங்களால் தம்படி பிரயோஜனம் கிடையாது. ஆம் என்று ஒத்துக்கொள்வீர்களா?

ஜெயமோகன் தம்மை எழுத்தாளாரக மட்டுமல்ல, உலகை உய்விக்க வந்த ஞானப்பிறவி என நினைத்துக்கொள்ளும் மனபிறழ்வு நோய்க்கு ஆளானவர். அவர் கண்ணில் படபவர்கள் அனைவரும் முட்டாள்கள் தான், அதிலும் மாற்று கருத்து கொண்டவர்கள் வாழவே தகுதியில்லாதவர்கள் என்று கூசாமல் சொல்லக்கூடியவர்.

தமது பேச்சை நிராகரித்து சென்ற ஈரோட்டு மக்களை காக்கைகள் கூட்டம் என்ற விமர்சித்து யானைப்பால் குடித்த மரமண்டை. இன்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் வருணாசிரம கொள்கையை தமது வாசகர்களுக்கு திணித்து கொண்டிருக்கிறது.

தொழில் அடிப்படையில் சாதி உருவானது ஆனால் இன்று சாதி அடிப்படையில் தொழில் இருக்கிறது, அதை மாற்றவே பெரியார் போன்ற சமூக ஆர்வலர்கள் போராடி அனைத்து மக்களும் சமம் என்ற கோட்பாட்டை நிறுவினர்.

பார்பனிய சமூகத்தில் பிறந்த சுஜாதா கூட வெகுஜன மக்களால் சிறந்த எழுத்தாளர் என ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், என் எழுத்தை படிக்காதவர்கள் எல்லாம் முட்டாள்கள், அவனுங்க இதுக்கு தான் லாயக்கு என என்றும் பேசியதில்லை.

பார்பனியம் என்ற கொள்கையை எந்த மூதேவி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தம்மை எழுத்தாளர் என கூறிக்கொள்ளும் விசஜந்து ஜெயமோகன்.

சரி, அப்படி என்ன அந்த கட்டுரையில் இருக்குன்னு கேக்குறிங்களா? நீங்க ஜெயமோகனுக்கு குண்டி கழுவிவிட வரிசையில் நிற்கலாம்.

//ஆகவேதான் ‘எனக்கு புத்தகம் வாசிக்கவேண்டும் என்றே தோன்றவில்லை, ஏன் நான் வாசிக்கவேண்டும்?’ என்று ஒருவர் கேட்டபோது ‘என்ன வேலைசெய்கிறீர்கள்?’ என்றார் நித்யா. ‘மர ஏற்றுமதி’  என்றார் அவர். ‘அதைச்செய்யுங்கள். உங்கள் அம்மா அதற்காகத்தான் உங்களைப்பெற்றார்’ என்றார். குரூரமான பதில் என்று எனக்கு இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அது உண்மை.//

உங்க அம்மா உங்களை மரம் விற்கத்தான் பெற்றார் என்பதற்கும்,
உங்க அம்மா உங்களை கக்கூஸ் கழுவத்தான் பெற்றார் என்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும், அதுவும் பிறப்பின் அடிப்படையில். உங்க அம்மா அதுக்கு தான் பெற்றாராம். என்ன மாதிரியான விச வார்த்தைகள்.

அது நித்யா சொன்னது தானே என அப்பாவித்தனமாய் கேட்பவர் சற்றே ஓரம் நில்லுங்கள், உங்களுக்கு தடவி கொடுக்க ஜெயமோகன் வந்து கொண்டிருக்கிறார்.

ஈரோட்டு மக்களை காக்கைகள் கூட்டம் என்று சொன்ன போதே நேரில் பார்த்தால் கேட்கனும்னு தான் இருந்தேன். ஆனா இனி நேரில் பார்த்தால் வேற எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஜெயமோகன் முதலுதவி பெட்டியுடன் உலவுவது நலம்!

!

Blog Widget by LinkWithin