கிறுக்கல்கள்

எல்லோருக்கும்
எதோ ஒரு காரணம்
கிடைத்து விடுகிறது
என்னை வெறுக்க
எனக்கு மட்டும்
எதோ மிச்சமிருக்கிறது
அது நீயாகத்தான்
இருக்கக்கூடும்


**


தொலைந்து போனேன்
என்பதற்கெல்லாம்
அர்த்தம் தேடாதீர்கள்
என்னை நான்
மறந்து போனேன்
என்பதையும்
அவ்வாறே சொல்லலாம்
அன்றொருநாள்
அவள் தொப்புள் குழியில்
தொலைந்த போது
யோசித்தது
 
**
 
தொலைந்து போவதற்கு
முந்தைய நொடி வரை
அனைத்தும் இருந்தது
அனைத்தையும் தொலைத்ததால்
தொலைந்து போனவன் ஆனேன்
 
**
 
இழப்பதற்கு
உயிர் மட்டுமே
மிச்சமிருக்கிறது
யாருக்கு
நிரூப்பிப்பது
என்பதில் தான்
குழப்பம்.
 

**

என் தோளிலிருந்து
மார்பு வரை
உன்னை குடியமர்த்த
எத்தனித்து விட்டேன்
வாடகையாய்
நொடிக்கொரு
முத்தம் கொடு
போதும்


**

அள்ளித்தெளிப்பதெல்லாம்
கோலம் ஆகா
கவிதையும் அவ்வாறே
அதற்கென்று ஒரு அமர்வும்
பேரிழப்பும் தேவைப்படுகிறது


**

சொல்லித்தான்
தெரியவேண்டுமா
என் வானுக்கு
நீ ஒருவளே
நிலவென்று


**

ஆணின் காதலைவிட
பெண்ணின் காதல்
நூறுமடங்கு அதிகம்
புரிந்து கொள்ள
கொஞ்சம் பிரிந்திருக்க
வேண்டும்.


**

புதிதாய் பேனா கொடுத்து
எழுதிப்பாரு கண்ணம்மா என்றால்
ஐ லவ் யூடா மாமா
என எழுதிக்கொடுக்கிறாள்
இப்பொழுது முத்தம்
நான் யாருக்கு தரவேண்டும்
பேனாவுக்கா
அவளுக்கா


**

காதல்
சாவிலிருந்தும்
மீட்கும்
போராடும் சக்தியை
கொடுக்கும்
நம்மை
தோண்டி எடுக்கும்
புதிதாய்
பிறக்க வைக்கும்


**

பட்டாம்பூச்சியின்
சிறகைப்போல்
என் மேனியெங்கும்
வண்ணம் பூசியிருக்கிறாள்
முத்தத்தடத்தில்
என் மொத்ததடமும்
மாறிவிட்டது!


**

நண்பனை போல்
தாங்கும் தோள்களையும்
தாயைப்போல்
பாச தலைகோதலையும்
மகளைப்போல்
அன்பு அதட்டல்களையும்
காதலியால் மட்டுமே
கொடுக்க முடிகிறது
யாதுமாகி என் வாழ்வில்
நிறைந்திருக்கிறாள்!


**     

   

நானாக நானில்லை ...............

வேலை இல்ல
சோறு இல்ல
மனிதம் இல்ல
எந்த புத்திசாலி முயலையும்
வெற்றி கொள்ளும்
இயலாமைகள் இவை....

*********************

பெரும்பாலும்
இழப்பும்
புறக்கணிப்புமே
செயற்கை மரணத்திற்கு
காரணமாய் இருக்கிறது
ஆகினும்
ஒவ்வொருவருக்கும்
ஒரு நியாயம் இருக்கிறது
குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட
தொலைந்து போதல் நலம்........

******************

எங்கேயோ
யாரோ, யாரையோ
அழைப்பதற்கெல்லாம்
தலை திருப்புகிறேன்
என் வாழ்வை
நான் எப்போது
வாழ்வது?

**************************

நீக்கமற நிறைந்திருக்கும்
ஒலியைப்போல்
என் வெளியை
உய்விக்க ஒளியை
தேடுகிறேன்.
எந்த இரவில்
ஒளிந்துள்ளதென
தெரியவில்லை.

*************************

விழாத தூசிக்காய்
அழும் மறுக்கண்ணை போல்
எனக்காய் அழ யாருண்டு
நேர்காணலின்றி
தேர்வு செய்யப்படுவீர்

************************

இருப்பேதேழு ரூபாய்
என்பது
இரண்டு பத்து ருபாய்களும்
ஒரு ஏழு ருபாயும்
ஏழு ரூபாய்
எப்படி இருக்குமென
யாருமெனக்கு
காட்டவில்லை.

**********************

என் சுதந்திரம்
என்னிடமே இருக்கிறது
என் பயணம்
எனது விடுதலை
நோக்கி தான்..

********************

புதிதென்பதை
பார்த்ததால்
புதிதாய் படைக்க முடியாது
புதிதென்பது
நமக்கு தான் புதிது
அது அதுவாகவே
இருக்கிறது.

********************

பாதி தான்
கடந்திருக்கிறேன்
மீதி போவதற்குள்
பாதை பழகிவிடும்
என்ற நம்பிக்கையில்!

******************

புதிதாய் படைக்க
ஒன்றுமில்லை
இருப்பதையே
ரசிக்க எவருமில்லை.

*****************

செவிக்குணவிற்கு
பஞ்சமில்லை
ஆலோசனைகளாய்
வயிற்க்கு பாட
புது வள்ளுவன் தேவை.

*****************

நான் இரும்பாய்
இருக்கிறேன்
என்னை ஆயுதமாய்
மாற்றிக்கொண்டு
இருக்கிறது சமூகம்

****************

இரண்டாம் மாடியும்
நண்பர்களும்
எப்போதும் சுகம் தரும்
இதையாவது கடந்தாயே
என்ற இரண்டு மாடிகளின்
சாட்சிகளுடன்

*****************

பார்வையின்
பசிக்கு
இமைகள்
இரையாகா!

****************

மீண்டு வருவதற்கு
தூண்டில்கள்
பயன்படாது,
வாழ்க்கை தராசில்
உயர்ந்திருப்பவனை விட
தாழ்ந்திருப்பவனே
கொண்டாடப்படுகிறான்.


****************



!

Blog Widget by LinkWithin