சாதீ!

நான் ஐந்தாவது வரை மதுரையில் தான் படித்தேன். குறிப்பா ஐந்தாவது படித்தது கருப்பாயூரணி பக்கத்தில் இருக்கும் மதுரை கிழக்கு ஊராட்சி ஆரம்ப நடுநிலைபள்ளி. ஒரு பெரிய ஹால். நாலு பக்க சுவற்றிலும் கரும்பலகை இருக்கும். அதிலேயே பிரித்து ஒன்னுயிலிருந்து ஐந்து வரை வகுப்பு நடத்துவார்கள். என்னுடம் படிச்சது 3 பெண்கள், 5 ஆண்கள்.

அதில் சோஃபியா வீட்டில் மளிகை கடை வைத்திருந்தார்கள். மற்ற அனைவரும் தலித்துகள் என்று நினைக்கிறேன். நினைக்கிறேன் அம்புட்டு தான் மத்தபடி இன்று வரை எனக்கு யாரிடமும் சாதி கேட்கும் பழக்கம் இல்லை. நான் பேசிக்கா சோம்பேறி மதியம் சத்துணவு சாப்பிட தட்டு எடுத்துட்டு போக மாட்டேன். நானும் என் வகுப்பு தோழனும் ஒரே தட்டி சாப்பிடுவேன். அது வீட்டில் தெரிந்து அவன் கூட சாப்பிடக்கூடாதுன்னு சொன்னாங்க. ஆனால் நான் கடைசி வரைக்கும் அவன் கூட தான் சாப்பிட்டேன்.

நேற்று மாவீரன் கிட்டு படம் பார்த்தபொழுது எனக்கு அது ஞாபகம் வந்தது. இயற்கையாக நமக்கு தோற்றும் உணர்வுகள் தவிர மற்ற அனைத்துமே திணிக்கப்பட்டதே. அதில் சாதி/மதமும் அடங்கும். எனக்கு சாதி/கடவுள் மறுப்பு யாரும் சொல்லிதரவில்லை. எந்த புத்தகத்திலும் படிக்கவில்லை. ஏன் என்ற கேள்வி மட்டுமே சாத்தியமில்லாத அனைத்தையும் மறுக்க வைத்தது.

படம் எம்.ஜி.ஆர் காலத்து கதை போல் எடுத்திருந்தாலும் படத்தில் காட்டப்பட்டது போல் சென்ற வருசம் தலித் பிணத்தை பொது வழியில் எடுத்துச்செல்லகூடாது என்று தர்மபுரி பக்கம் ஒரு சர்ச்சை கிளம்பியது. கோர்ட் தலையிட்டும் அனுமதி மறுத்தி காவலரே பிணத்தை எடுத்து சென்றனர். சென்ற மாதம் பெற்ற மகளையே ஆணவ கொலை செய்த பெற்றோருக்கு மரண தண்டனை விதித்தது நெல்லை நீதி மன்றம்.

இவ்வளவு கல்வி அறிவும், அறிவியலும் உலக மயமாக்கலும் மனிதர்களுக்கு மனிதத்தை சொல்லிக்கொடுக்க வில்லை. சாதி அரசியலும் மதவாதமும் மேலும் மேலும் வெறுப்பை மட்டுமே மனிதர்களுக்குள் விதைக்கிறது. எந்த அடிப்படை ஆதாரதாமும் இல்லாத சாதி எந்த வகையிலும் உங்களுக்கு பயன் தரபோவதில்லை.

உங்கள் குழந்தைகளுக்கு மனிதம் சொல்லிக்கொடுங்கள்
மதமும் சாதியும் வேண்டாம்

#வால்பையன்

ஃபார்வேர்ட் பைத்தியங்கள்

உதவும் குரங்குகள்:
1994 ல் செங்கல்பட்டில் நடந்த ஒரு ஸ்கூல் பஸ் விபத்தை இன்னும் அனுப்புறானுங்க. ரத்தம் கேட்டு வர்றது எல்லாமே ஃபார்வேர்ட் மெசேஜ் தான்.
அவனுங்க அனுப்புற நம்புறக்கு போன் பண்ணா ஒன்னு நாட் இன் யூஸ்னு வரும் அல்லது அய்யோ அப்படி நான் சொல்லவேயில்லையேன்னு சொல்லுவாங்க.
இவனுங்களுக்கு உதவி செய்யுறதா நினைப்பு. எனக்கு ஓ பாஸிடிவ் தான். என் தம்பி வால்தம்பிக்கு ஏபி நெகடிவ் மூணு மாசத்துக்கு ஒருக்கா ரத்தம் தர்றான். இவனுங்க அனுப்புற மெசேஜ் பார்த்து கடுப்பாகி எல்லாமே வசந்தி புருசன்னு முடிவு பண்ணி நான் விட்டுட்டு போய்ட்டா ஒரு உயிர் காப்பாத படாம போயிரலாம்.

நானும் மூணு தடவை ரத்தம் வேணும்னு போஸ்ட் போட்ருக்கேன். என் சொந்தகாரங்க. வெளிநண்பர்கள், இணைய நண்பர்கள் என்னை நேரடியா தொடர்புகொண்ட பொழுது. ரத்தம் கிடைத்ததும் நன்றி ரத்தம் கிடைத்துவிட்டதுன்னு எடிட் பண்ணி போட்ருவேன்.

நீங்க அனுப்புற பத்து மெசேஜில் போன் பண்ணி பல்பு வாங்கி உண்மையில் சேர வேண்டியவர்களுக்கு ரத்தம் கிடைக்க பெறமால் செய்கிறீர்கள் உதவும் குரங்குகளே

சமூக ஆர்வகோளாறுகள்:
படத்தில் இருக்கும் சிறுமிக்கு இதய ஆப்ரேசன் நடக்கப்போகின்றது, பத்து லட்சம் செலவு ஆகுமாம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஃபார்வேடுக்கும் பத்து பைசா தருவதாக வோடாஃபோன் ஒத்துக்கொண்டுள்ளது.

இதை பார்த்தவுடன் இவுனுங்க உண்மையில ஸ்கூல் காலேஜ் போய் படிச்சவங்க தானானு தோணும்.

நான் மட்டும் கொஞ்சம் கோக்கு மாக்கு ஆளா இருந்தால்
இந்த நம்பரை எல்லாம் கலைக்ட் பண்ணி, சார் எங்கிட்ட ரைஸ் புல்லிங், நாகமாணிக்ககல், தங்க புஷ்பம்
(எதோ ஒன்னு) இருக்குன்னு சொல்லி. அது யார்கிட்ட இருக்கோ அவர்கள் நாட்டை ஆளுவார்கள். சசிகலாட்ட இருந்ததை நான் சுட்டுட்டு வந்துட்டேன். எனக்கு அதிகாரமெல்லாம் வேணாம். கொஞ்சம் பணம் இருந்தால் போதும் அதிர்ஷ்டகாரருக்கு போகட்டும்னு கண்ணை மூடி நம்பரை அழுத்தினேன் உங்களுக்கு வந்துருச்சுன்னு சொல்லி ஏமாத்தலாம்

ஏன்னா இதுக எவ்ளோ சொன்னாலும் புரியாத‌
சுட்டு போட்டாலும் திருந்தாத ஞானசூனியங்கள்
இருக்குற குரூப்பில் எல்லாம் இவனுங்க கிட்ட‌
கத்தி கதறி, நொந்து, நூடுல்ஸ் ஆகி தான் வாட்ஸ் அப்பை அன் இன்ஸ்டால் பண்ணேன்

பக்தி புளிங்கொட்டைகள்:
மோகத்தில் தெரியும் இந்த சாய்பாபா படத்தை பகிர்ந்தால் ஏழு நாளில் உங்களுக்கு நல்லது நடக்கும் இல்லையென்றால் கெடுதல் நடக்கும்னும் மெசேஜ். ஏங்க நீங்க படிச்சவர் தானே இதை போய் ஃபார்வேர்ட் பண்றிங்கன்னு கேட்டா என்னாப்பா பண்றது, போனா மசுறு வந்தா மலைன்னு சொல்றாங்க. காமெடி என்னான்னா இவங்க எல்லாருமே நல்லா படிச்ச பயபுள்ளைங்க‌

1990களில் பிரஸ்காரன் பண்ண ப்ளான் இது.
இந்த நோட்டீஸை பார்த்ததை 500 காப்பி அடித்து அனைவருக்கும் கொடுக்கவும்.
அப்படி கொடுத்த வெங்கடேஸ்க்கு லாட்டரியில் ஒரு லட்சம் விழுந்தது. மகேஸ்க்கு வெளிநாட்டு வேலை கிடைத்தது,
அலட்சியம் செய்ய வாசுவுக்கு வாய் கோணி போனது. ஜெகதீஸ்க்கு வால் முளைத்ததுன்னு இருக்கும் நோட்டீஸை நூத்துல ஒருத்தன் அடித்து இப்பவும் கொடுத்துட்டு தான் இருக்கான்

மேலே சொன்ன ஆர்வ கோளாறுகளுக்கும். இந்த புளியங்கொட்டைகளுக்கும் பெருசா வித்தியாசமில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்

***
ஊருக்கு உருப்படியா எதும் செய்யாத, உதவாக்கரை அதிமுக எப்படி மறுபடி ஆட்சிக்கு வந்ததுன்னு யோசிச்சேன்
அப்புறம் தான் புரிந்தது
இந்த மாதிரி அதிமேதாவிகள் இருக்கும் நாட்டில் அதிமுக மட்டுமல்ல, பாஜக கூட ஆட்சி அமைக்கும்னு

இதை ஃபேஸ்புக்கில்/வாட்ஸப்பில் பகிர்ந்தாலும் பகிரா விட்டாலும் நீங்கள் தமிழர்களே
படிச்சிட்டு சிரிச்சாலும் வெட்கபட்டாலும் நீங்க தமிழர்களே

என்னமோ பண்ணிட்டு போங்க. என் கடமைக்கு பொங்கிட்டு போறேன்

#வால்பையன்

உணவும், அரசியலும்

டிஸ்கவரியில் MAN VS WILD
NAKED AND AFRAID மாதிரியான புரோகிராம் பார்ப்பிங்களா? நான் நேத்து ஒன்னு பார்த்தேன். லூதியானா சதுப்பு நில காடுகளில் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாணமா 21 நாள் இருந்தாங்க. வந்த முதல் நாளே 2 பாம்பு உணவா கிடைந்த்தது. அட பரவாயில்லையே பார்த்தா அங்க சுத்தியும் பாம்பா தான் இருக்கு. எல்லாமே விச பாம்புகள்

பத்தாதுக்கு நாலாம் நாள் அடிச்ச மழையில் தங்க இடமில்லை. நெருப்பில்லை, அதனால் உணவும் இல்லை. அப்படியே எட்டு நாட்கள் இருப்பாங்க. அப்புறம் அங்கிருந்து போய் இன்னொரு இடத்தை கண்டுபிடிச்சு தங்க ஏற்பாடு பண்ணுவாங்க. அங்கேயும் உணவு இல்லை. கடைசி ரெண்டு நாள் முன்னாடி ஒரு பன்றி கிடைக்கும். இதை அடிச்சி சாப்பிடுட்டு சவாலை முடிப்பாங்க.

மனசுகுள் ஆசையா இருக்கும். இந்த மாதிரி சாகசத்தில் நாமளும் கலந்துகனும்னு ஆனா நிச்சயமா இந்திய ஆண்களால் இந்த நிர்வாண நிகழ்ச்சியில் கலந்துக்க முடியாது. பாலியல் வறட்சி மிக்க நாடு, மறை பொருள்கள் அனைத்துமே கவர்ச்சி பொருளாக விளம்பர படுத்தும் நாடு. முதல் தடவை ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது ஆணின் மானம் தான் போகும்.

இன்னும் விசயத்திற்குள்ளயே போல அதுகுள்ள மூணு பாரா ஆகிருச்சு. அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் அவர்களால் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடிவதை கவனிச்சிங்களா. அப்படியே சாப்பிட்டாலும் சின்ன புழு, மீன், பாம்புன்னு கிடைப்பதை புரதம்னு சாப்பிடுவாங்க. நம்மால் ரெண்டு நாள் சாப்பிடலைனா மயக்கம் வந்துரும். ஏன் தெரியுமா. அவர்களுக்கு உடலுக்கு எவ்வளவு புரதம் தேவைன்னு சாப்பிடுவாங்க. நாம வயிற்றை ரொம்பனும்னு சட்டிசோறு சாப்பிடுவோம். உடலுக்கு தேவையான அனைத்தும் இருக்கா என்ற கேள்விகெல்லாம் இடமில்லை. வயிற்றுபானை நிரம்பியதா என்பதே நமக்கு கவலை.

அவன் தொப்பைய பார்த்தியா, நிறைய குடிப்பான் போலன்னு சொல்லும் சிலரை பார்த்திருக்கேன். திரவம் எப்படியா தொப்பை போட வயிற்றில் கொழப்பு சேர்க்கும். கொஞ்சமாச்சும் லாஜிக் வேணாமா. தொப்பை போட காரணம் அதன் பிறகு வயிற்றுகுள் போடும் குப்பைகள் தான். நம் உடல் தேவை புரதமே. நாம வேட்டையாட சோம்பேறிதனபட்டு விவசாயம் பண்ணிட்டு இன்னைக்கு அதன் அரசியல் புரியாம சைவம் என்றால் பெருமையா கருதுறோம்

வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல தான் கறி சாப்பிடுபவன் வக்கிர குணத்தோட இருப்பான்னு கிளப்பி விட்டது. யார்னு தனியா சொல்ல தேவையில்ல.10000 வருசத்துக்கு முன் விவசாயம் வந்த பிறகு தான் அறிவு வளர்ச்சி அடைந்தது என்ற வாதத்தை என்னால் உடைக்க முடியும். அறிவு வளார்ச்சி கூட்டமாக வாழ்ந்து மொழியை உருவாக்கி தகவல் தொடர்பை வளர்த்து கொண்டதால் தான். இப்ப கூட நம்மை வெற்று கிரக வாசிகள் தொடர்ப்பு கொண்டு அவுங்க டெக்னாலஜியை கற்று கொடுத்தால் இன்னும் மேம்படுமே. அப்படி தான்.

சைவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்பது எவ்ளோ பெரிய பொய் என்பதற்கு ஒரு உதாரணம் ஹிட்லர். சைவர்கள் பெரும்பாலும் உயர்வு மனப்பான்மையில் சிலரை அடிமை படுத்த நினைத்தார்கள் என்பதற்கு உதாரணமும் ஹிட்லர் தான். ஆனால் இப்பவும் சில சைவர்கள் தாங்கள் அறிவிலும் சாதியிலும் பெரியவங்க மாதிரி பேசிகிட்டு இருக்காங்க. ஆனா எங்கிட்ட பேச கூப்பிட்டா மட்டும் ப்ளாக் பண்ணிட்டு போயிர்றாங்க. என்ன டிசைனோ

இது பேலியோ ஆதரவு பதிவும் அல்ல நான் பேலியோ கடைபிடிப்பாளனும் அல்ல. எது உண்மையோ அதை எழுத வேண்டியது என் கடமை

#வால்பையன்

நான் யார்?

பெரியார், சேகுவேரா, மார்க்ஸ், லெனின், ரஜினி, கமல் அவ்ளோ ஏன் என்னையையே நீ குடிகாரன், பொம்பளபொறுக்கின்னு சொல்லுங்க. ஹாஹாஹான்னு சிரிச்சிட்டு உங்களுக்கும் தெரிஞ்சிருச்சான்னு போவேன்.
எனக்கு எந்த தனிநபர் மீதும் எந்த பிம்பமும் இல்லை. எனக்கென்று ஒரு பிம்ப வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளும் ஆர்வமும் இல்லை. நான் எப்படி என்று ஆராயும் சுய பரிசோதனை தான் எப்போதும்
நம் மனிதர்களிடம் இந்த சிக்கல் உண்டு. தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளவோ. கருத்துகள் மீது அகம் சார்ந்த கூர் நோக்கோ இல்லை. அவர்கள் நம்பிக்கை சார்ந்த பிம்பங்களை கட்டுடப்பததை அவர்களையே நிர்வாணம் ஆக்குவது போல் உணர்கிறார்கள். கேள்வி கேட்பவன் முட்டாள் என்றும் பதில் சொல்பவன் புத்திசாலி என்று பொதுபுத்தியுடன் அணுகுகிறார்கள். கேள்வி கேட்பதை அவமானமாக கருதுகிறார்கள். பதில் தெரியாத கேள்விகளை முட்டாள்தனம் என்றும். மேம்போக்கானவை கேள்விகள் கேட்டவன் நுனிபுல் மேய்கிறவன் என்று புறம்தள்ளுகிறார்கள்.
ஒரு நபர் அல்லது ஒரு கருத்தின் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சார்ந்த புனிதபிம்பம் நீங்களாக வளர்த்துக்கொண்டதல்ல. அது உங்களிடன் திணிக்கப்பட்டது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.
தவறான நம்பிக்கை கொண்டதற்கு நீங்க தான் வெட்கபடனும் சென்ட்ராயன்னு காமெடியா சொன்னா உங்களுடம் நட்பு கொண்டதற்கு வெட்க படுறேன்னு ஒருத்தர் சொல்றார். கிறிஸ்தவனா இருந்துட்டு இதை கூட எழுதலைனா எப்படின்னு இன்னொருத்தர் சொல்றார். பச்சையை கேள்வி கேட்டா அவன் காவி, காவியை கேள்வி கேட்டா அவன் வெள்ளை. இந்த முக்கோனத்தை தவிர மனிதனை மனிதனாக பார்க்க யாருக்கும் இயலவில்லை. திணிக்கபட்ட கருத்துருக்கள் மாயக்கண்ணாடி போல் உண்மையை மறைத்து நின்கின்றது.
ராமகிருஷ்ணனும், விவேக்கும் கஞ்சா அடிச்சாங்கன்னு எழுதினேன். அது தப்புன்னு எழுதினேனா? தியானம் கைவசபடாத விவேக்கின் நடுநெற்றியில் அறிவாளால் கீறி அதை மையபடுத்தி தியானம் செய்னு ராமகிருஷ்ணர் சொன்னது எனக்கு எப்படி தெரியும். உங்கள் புனிதபிம்பம் கேள்விக்குள்ளாக்க படுவதை சகிக்கமுடியாத உங்களில் எத்தனை பேர் விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு படித்துள்ளீர்கள், ராமகிருஷ்ணர் அவரது மனைவி சாரதா அம்மையார், விவேக்கின் முதல் குரு ராஜாராம் மோகன் ராய் பத்தி படுத்துள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள் நுனிபுல் மேய்வது யார்.
இப்போதும் நாலு பக்கம் எழுத நாப்பது பக்கம் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அதில் இருக்கும் சாத்தியகூறுகளை ஆராய்கிறேன். பதில் தெரியா கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி படிக்கிறேன். தவறு இருப்பின் அதை ஒத்துக்கொள்ளவோ, புதியாக ஒன்றை தெரிந்துக்கொண்டோம் என்பதில் பெருமிதம் கொள்ளவோ எனக்கு வெட்கமோ அவமானமோ இல்லை. என்றும் மாணவன் தான். வித்தியாச"மாணவனாக" தெரிவது என் தவறல்ல.
பெரும்பான்மையும், பொதுபுத்தியும் கட்டமைத்து வைத்திருக்கும் எதையும் நான் கேள்வி கேட்கிறேன். நான் விமர்சிக்காத ஏரியாவே இல்லை என்பது போல் தேடி தேடி படிக்கிறேன்.
திருகுறளில் கடவுள் பத்தி சொல்லவேயில்லை. முதல் குறளில் வரும் ஆதி, பகவன் கூட வள்ளுவர் அப்பா, அம்மா என்றவரிடம்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு.
இதில் உள்ள பற்றற்றான் யாருன்னு கேட்டேன். அவர் ஒரு பெரியாரிஷ்டும் கூட.
எந்த முன் முடிவுகளும் இல்லாமல் எதையும் அணுகுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாளர ஓர இருக்கை கிடைத்த குழந்தையை போல் உலகை ரசிக்கமுடிகிறது. நான் சுதந்திரமானவனாக இருக்க விருப்புகிறேன். காற்றை போல் மலரையும், மலத்தையும் எந்ததொரு சுழிப்புமின்றி அதை இருப்பை கடந்து செல்ல நினைகிறேன். எதிர்பார்ப்புகளின்றி இருத்தலில் இருக்கிறேன்
நாளையே ஒரு கஸ்டமர் உங்களால் சம்பாரிச்சேன், இந்தாங்க பத்து லட்சம் என கொடுக்கலாம். அல்லது 5 வருடங்களுக்கு முன் கொடுத்த காசோலையை வைத்து செக் மோசடி வழக்கில் என்னை உள்ளே தள்ளலாம்.
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நாம் இன்பத்தையும், துக்கத்தையும் மாறி மாறி கொடுப்பதகாகவே சமூக சூழல் அமைகிறது. நான் எதையும் எதிர்கொள்ள தயாராய் இருக்கின்றேன். மரணத்தையும் பயமின்றி பார்க்கின்றேன்
ஒஷோ சொல்லுவார். பயம் இல்லையென்றால் ஒரு குழந்தையை போல் நீங்கள் உலகம் ரசிக்கலாம் என்று. ஒஷோ தத்துவயில் படித்தவர். சூஃபி, ஜென் தத்துவ கதைகள் அவருக்கு கூட்டம் சேர்த்து தந்தது. ஆன்மீகத்தை கார்ப்ரேட்மயமாக்கினார். ஆனால் ஓஷோவை விட ஜே.கே என அழைக்கப்பட்ட ஜிட்டு கிருஷ்ணமீர்த்தி தான் உண்மையை போட்டு உடைத்தவர் என்றார் ஒஷோ ஆதரவாளர்களுக்கு கோவம் வரும். வழக்கம் போல் அவர்களும் என்னை நுனிபுல் மேய்பவன் என்பார்கள்.
நான் அப்படி தான். கையில் சிக்காத காற்று. உலகின் மூலை முடுக்கெல்லாம் போவேன்

விவேகானந்தர்!

விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று கல்கத்தாவில் பிறந்தார். இயற்பெயர் நரேந்தரநாத் தத்தா (லாரா தத்தா சொந்தகாரரா இருப்பாரோ).

ஐரோப்பிய சார்பு கல்லூரியில் படிந்த பொழுது தான் அவருக்கு சமய வேறுபாடு புரிந்தது. இவர் பிறப்பால் இந்து. நாட்டில் நிலவுவதோ கிறிஸ்துவம். அதையும் தெரிந்துகொண்ட பொழுது அவருக்கு குழப்பம் ஏற்பட்டது. கடவுளுக்கு உருவம் இருக்கா இல்லையா என்று.

அக்காலத்தில் புகழ் பெற்று இருந்த பிரம்ம சமாஜத்தில் தன்னை இணைத்துகொண்டார். பிரம்ம சமாஜத்தை உருவாக்கியது ராஜாராம் மோகன்ராய்(ஐஸ்வர்யாராய்!). பெரும்பாலான குறிப்புகளில் விவேக் இவரிடன் சீடராக இருந்தது குறிப்பிடபடவில்லை. ராஜாராம் அத்வைத கொள்கை உடையவர். கடவுளுக்கு உருவம் இல்லை அதே நேரம் நாமும் கடவுளும் வேறு வேறு இல்லை என்று. இவர் தான் அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த கொடிய பழக்கமான உடன்கட்டை ஏறுதல் முறையை ஒழித்தார்.

விவேக்கிற்கு குழப்பம். குழப்பத்திற்கு காரணம் விவேக் கடவுள் இருக்கா இல்லையா என ஆராயவில்லை. கடவுளுக்கு உருவம் இருக்கா இல்லையா என்பதே அவரது சந்தேகமாக இருந்தது. ஆச்சர்யபடஒன்றுமில்லை. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியின் பின்னரும் கடவுள் இல்லாம எப்படி உலகம் என மதவாதிகள் கேட்பது போல் அப்பொழுதும் கேட்டிருப்பார்கள் தானே.

அந்த சமயத்தில் தான் ராமகிருஷ்ண(பரமஹம்சரை) பற்றி கேள்வி பட்டார். ராமகிருஷ்ணர் தாம் காளியை பார்த்ததாக அக்காலத்தில் உளரிக்கொண்டிருந்தார். அதை ராமகிருஷ்ணபரமஹம்சர் வரலாற்றிலும் அவரது மனைவி சாரதா அம்மையார் வரலாற்றிலும் காணலாம்(அதெல்லாமாடா படிச்சன்னு கேட்குற உங்க மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன்) ராமகிருஷ்ணர் பணத்தை தொடமாட்டார். தொட்டால் கை கோணிக்கும் என்ற கதையெல்லாம் அக்காலத்தில் உண்டு.

கடவுளை பார்த்த ஒருவரால் தான் நமக்கு கடவுளை காட்ட முடியும் என நம்பிய விவேக். ராமகிருஷ்ணரை பார்த்தார். ஆனாலும் ராமகிருஷ்ணரின் விளக்கங்கள் விவேக்கிற்கு திருப்தி அளிக்கவில்லை. சும்மா தியானம் பண்ணு காளி வருவான்னு சொன்னா எப்படி வருவா?
அந்த சமயத்தில் விவேக்கிற்கு ஹுட்கா(கஞ்சா) பழக்கத்தை கற்று தந்தார் ராமகிருஷ்ணர். பின் நெற்றியில் அறிவாளால் ஒரு கீறலிட்டு அதை மையபடுத்தி தியானம் செய்ய சொன்னார். அப்பொழுது விவேக் காளியை பார்த்ததாக வரலாறு சொல்கிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த காளியும் அக்காலத்தில் போட்டோவில் இருக்கும் காளி மாதிரி தான் இருந்தா.(படம் வரைபவன் ஏற்கனவே காளியை பார்த்திருப்பானோ)

விவேக்கின் முட்டாள்தனமாக பொன்மொழிக்கு ஒரு சாம்பிள்


அந்த காலகட்டத்தில் இந்தியா ஆங்கிலேயர்களிடன் அடிமை பட்டு கிடந்தது. விவேக் இந்திய விடுதலைக்காக ஒரு இலையை கூட கிள்ளிபோடவில்லை.(விவேக் அண்ணன் விடுதலை போராட்டவீரர்) அது தனது வேலையில்லை என்றும். சமயம் பரப்புதலே தனது பணி என வாழ்ந்தார். கன்னியாகுமரியில் மூன்றுநாட்கள் தியானம் செய்த விவேக் இந்தியாவின் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக கூறினார்.

விவேக்கை போலயே இந்தியவிடுதலையில் அக்கறை காட்டாத இந்த்துவா வாதிகள் விவேக்கை சிகாகோவில் நடந்த உலக மதங்களில் மாநாட்டில் பேச அழைத்தனர். அக்காலத்தில் ஆங்கிலத்தில் பேச இந்து மதத்தில் வேறு யாரும் இல்லை என்பது வேறு கதை.(படிச்சா தானே)

பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று பேச்சை ஆரம்பித்தது.
உங்களை போல் எனக்கு குழந்தை வேண்டும் என கேட்ட பெண்ணிடம் ஏன் என்னை போல், என்னையே குழந்தையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என சொன்னது போன்றவை இவரது புகழ் பெற்ற பஞ்ச் டயலாக்குகள்.

ஜூலை 4 1902 தனது 39 வது வயதில் காலமானார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்து இருந்தது. சுயமைதுனம் செய்து கொள்ளாததால் விரைப்பை கேன்சர் இருந்தது என கூட பரவலாக கருந்து உண்டு. அதையெல்லாம் விவேக்கை விவேக்காக பார்த்தால் மட்டுமே ஆராய முடியும். முன்னாடி சுவாமி போட்டு அழைப்பதும் கண்ணை கட்டிகிட்டு மணலில் ஊசி தேடுபதும் ஒன்னு தான்.


ஜல்லிகட்டு!

குரங்கினத்தின் ஒரு பிரிவாக நியாண்டர்தால் வளர்ந்தது. அதிலிருந்து ஹோமோ எரக்டஸ் உருவானது. வேட்டையாடப்படும் உயிரினமாக இருந்த நாம் வேட்டையாடும் உயிரினமாக மாறியது அப்பொழுது தான். நெருப்பை உருவாக்க கற்றக்கொண்டதும் இவர்கள் தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. கல், குச்சி ஆகியவற்றை ஆயுதாக பயன்படுத்தினர். பின் வந்த ஹோமோ சேபியன்ஸ் மேம்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினர். தூரத்தில் இருந்தே தாக்கக்கூடிய வில் போன்ற ஆயுதங்கள் கொண்டு ஹோமோ எரக்டஸ் இனத்தை முற்றிலுமாக அழித்தனர். அதிலிருந்து மேம்பட்ட உயிரினமாக மாறிய ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் தான் நாம் அதாவது மனிதர்கள்.
மனித நாகரிகத்தின் தொடக்கம், ஒரே இடத்தில் தங்கி தனக்கான உணவை தானே உற்பத்தி செய்ய தொடங்கியது. அதை தான் நாம் விவசாயம் எங்கிறோம். குகையில் தங்கிய மனிதன் ஆற்றுபடுகைகள் குடியிருக்க வீடுகள் கட்ட தொடங்கினான். தகவல் தொடர்பு மொழியை வளர்த்தது. மொழி அறிவை வளர்த்தது. அறிவு அத்தனையும் கண்டுபிடித்தது. ஆக விவசாயமே அனைத்திற்கும் தொடக்கம். அதை மனிதன் தொடங்கவில்லையென்றால் இன்றும் நாம் வேட்டையாடி உண்டுகொண்டு இருப்போம். ஆதி பழகுடியினர் சிலர் தவிர நாம் அனைவருமே விவசாய பரம்பரைகள் தான்.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை விவசாய மண், எனக்கு நைட்ரஜன் வேணும், பாஸ்பரஸ் வேணும், யூரியா வேணும் அதையெல்லாம் உரமாக போடு என கேட்கவில்லை. இன்றும் மழைகாடுகளிலிருந்து மனித தொல்லை இல்லாத வனபகுதிகள் எந்த செயற்கை உரமும் இல்லாமல் தங்களை பாதுகாத்துக்கொள்கின்றன. அவைகளின் உதிர்ந்த இலைகள், விலங்குகளின் சாணங்கள் மண்ணில் மக்கி நைட்ரஜனாகவும், பாஸ்பரஸாகவும் மண்ணை பாதுகாத்தது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடோ, மாடோ குட்டி ஈன்றால் அது பெண்ணாக இருந்தால் பாலுக்கும்/இனபெருக்கத்திற்கும், ஆணாக இருந்தால் உழுவுக்கும், பட்டி என இடத்தில் வைத்து சாண உரத்திற்கும் பாதுகாக்கப்பட்டது. ட்ராக்டர் என்ற சாதனம் காளைகளின் தேவையை பாதி ஒழித்தது. செயற்கை கருவூட்டல் மீதி ஒழித்தது. இன்று காளைகள் உணவுக்காக மாட்டுகறியாக ஏற்றுமதி செய்யவே வளர்க்கப்படுகிறது.


தனக்கு சோறு போட்ட விவசாயத்திற்கு மனிதன் செலுத்தும் மரியாதையே பொங்கல். அதை தமிழர் திருநாள் என்பதை விட உழவர் திருநாள்(பலர் அப்படி தான் சொல்வாங்க) என்பதே சரி. உணவு விவசாயத்தின் மூலமே கிடைக்கின்றன. அதை உண்ணும் அனைவரும் உழவர் திருநாளை கொண்டாடவேண்டும். அதன் ஒரு பகுதியான ஜல்லிகட்டை நடத்த வேண்டும்
நிலபிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்க சாதிகள் விவசாயம் செய்தும். சிறுபான்மையினர் விவசாய கூலிகளாகவும் இருந்தது உண்மை தான். ஆதிக்கசாதியினர் வளர்த்த மாடுகளை சிறுபான்மையினர் பிடிப்பதை விரும்பாமல் இருந்தது உண்மை தான். இன்றைய சமூகம் மாற்றம் அடைந்து வருகிறது. பெரும்பாலோர் பெயருக்கு பின்னால் அடைமொழியை சேர்த்துக்கொள்வதில். மூளை வளர்ச்சி அடையாத சில ஜந்துகள் மட்டும் பெயருக்கு பின்னால் சாதி சேர்த்துக்கொண்டு அழைகிறார்கள். நீங்க என்ன ஆளுக என்று கேட்கும் பழக்கமும் மறைந்து வருகிறது.
காளைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இயற்கையின் சமநிலை பாதுகாக்கப்படவேண்டும். உணவு சுழற்சி பாதுகாக்கபடவேண்டும். காளைகளை போற்றும் ஜல்லிகட்டு நடத்தப்படவேண்டும்.

!

Blog Widget by LinkWithin