கொள்கை...

இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம்.
நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் மாற்ற முடியாது. அதை அனுபவமா எடுத்துக்கமே தவிர அதை நினைத்து புலம்புறது வேஸ்ட்.(இது ஏன் முதல்ல வருதுன்னா அதை கடைபிடிக்கத்தான் படாதபாடு படுறேன்)
என்னை நியாயபடுத்திக்க யாரையும் குற்றம் சாட்டக்கூடாது
பிச்சை, உதவி என்ற வார்த்தையே இல்ல, இல்லாதவங்களுக்கு செய்யுறது நம் கடமை
குற்ற உணர்ச்சி இல்லாம வாழ ஓப்பனா இருக்கனும் அதுக்கான முடிந்தவரை உண்மை பேசனும்.
வாழ்க்கை ஒரு முறை தான். அதை நம்பனும். நான் வாழ்ந்த தடத்தை பதிக்கனும். அட்லீஸ்ட் வாழ்ந்தேன்னு காட்டனும்
என் சந்தோசத்துக்கு யாருக்கும் செலவு வைக்கக்கூடாது. அதை கடனா நினைத்து அடுத்த முறை கொடுத்தரனும்
ஆலோசனைகும் அட்வைஸ்க்கும் வித்தியாசம் தெரியாவங்க நிறைய பேரு இருக்காங்க, அதுனால உரிமை எடுத்துக்கக்கூடாது
எனக்கு இழப்பே ஏற்பட்டாலும் தனி மனித உரிமைக்காக மட்டுமே பேசனும். யாரையும் குற்றம் சாட்டக்கூடாது
எதிர்காலம் குறித்த திட்டமிடல் வேஸ்ட். அது அந்த நொடியில் என்ன தேவையோ அதை எடுத்துக்குது, இப்பவே திட்ட்மிட்டு ஒன்னு ஆகபோறதில்ல
சக மனிதர்களின் அடையாளம் பார்க்கக்கூடாது.
பிடிக்கலைன்னு சொன்னா பொண்டாட்டியா இருந்தாலும் தொடக்கூடாது
அழுகை வந்தா அழனும், சிரிப்பு வந்தா சிரிக்கனும்
என் குழுந்தைங்க பூமிக்கு வர நான் ஒரு கருவி தாம், நான் அவங்களுக்கு ஓனர் இல்ல
இறப்பு என்பது மனிதத்தின் விடுதலை. விட்டு போறோம் அவ்ளோ தான். நாம இருக்கனும்னா இங்கேயே எதாவது பண்ணிட்டு போகனும். மறுபிறவின்னு ஒன்னு இல்ல

பரிணாமம் நின்று விட்டதா?

கேள்வி கேட்டவர் Mr GK

//Hello Mr. Raj Arun. We saw your posts involving answer to some scientifical questions. We have a below query, please clarify if possible.

As per Darvin theory, most of the researchers accept that humans came from Apes. Doubt is, why now that evolution has been stoped? Why nowadays human not evolved from monkey ? And both human & monkey two species exist parallelly. Why? Please explain in tamil or english.//

மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தான் என நேரடியாக புரிந்துக்கொள்ளக்கூடாது. குரங்களிலும் பல வகை உண்டு. பிக்மி மார்மோசெட் என்ற உலகின் மிகசிறிய வகை குரங்கும் உண்டு( மரத்தை பிடித்தது போல் நம் விரலை பிடித்துக்கொள்ளும்
 Pygmy marmoset இந்த பெயரை கூகுள் செய்யவும்) கொரில்லா வகை குரங்குகளும் உண்டு.



குரங்கு வகை என்பதை ஒரு மரமாக கொண்டால் குரங்கு வகைகள் அனைத்தும் அதில் இருக்கும் கிளைகள். அந்த கிளையில் உச்சாணி கொம்பில் உயர்ந்து நிற்பது மனிதன் என்ற உயிரினம் எனலாம். அதற்கு அடுத்து போனோபோ என்ற சிம்பன்சியின் அடுத்த படிநிலை குரங்கும், அடுத்து சிம்பன்சியின் உள்ளது. இவைகள் ஆயுதத்தை பயன்படுத்துவதில் மனிதனுக்கு நெருக்கமாக உள்ளன.

பரிணாமம் நின்று விட்டது என புரிந்து கொள்வது, பூமி சுற்றவேயில்லை. சுற்றினால் நமக்கு என் தெரிவதில்லை என்ற கேள்விக்கு சமமாக பார்க்கிறேன். முன்னது மிக மெதுவாக நடைபெறக்கூடியது, பின்னது மிக வேகமாக நடைபெறக்கூடியது. பரிணாமத்தை மனிதம் நமக்கு கிடைத்த சுவடுகள் வைத்து புரிந்துக்கொண்டான். கண் முன் கிடைத்த ஆதாரங்களின் அதிக பட்ச சாத்தியகூறுகள் அறிந்து ஏற்றுக்கொண்டான்.



பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதில் மனிதனுக்கு இருக்கும் பெரும் தடை அது படைப்புவாத கொள்கையை மறுக்கிறது. படைப்புவாத கொள்கை பொய் என்றால் அங்கே கடவுளுக்கு வேலை இல்லாமல் போகிறது. இது நாள் வரை தான் நம்பி வந்த கடவுள் பொய் என்பதை மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வாடிகனே பரிணாமத்தை ஏற்றுக்கொண்டாலும் இன்றும் பூமி தட்டை தான், கோள வடிவம் இல்லை என்றும், சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்றும் நம்பும் அதற்கு மாறாக பேசுபவர்கள் சாத்தானின் வாரிசுகள் என உண்மைய ஏற்றுக்கொள்ள மறுக்கும் மதவாதிகள் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பரிணாமம் குறித்து எனது வலைபூவில் தொடர் கட்டுரை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது படித்து கேள்விகள் கேட்கவும்

சேது சமுத்திர திட்டம்...

//சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது : மத்திய அரசு உறுதி.//

வட அமெரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் இடையில் பனாமா என்ற நாடு இருக்கிறது. இரு அமெரிக்காவிற்கு இடையில் நீர் இல்லை. நிலபகுதி தான்.

கடல் வழி பயணத்திற்கு அந்த நிலபகுதி மட்டுமே தடையாக இருப்பதை அறிந்து 40 ஆண்டுகள் வேலை செய்து கிட்டதட்ட விபத்தில் 40000 மக்கள் இறந்து, நிலபகுதி ஏற்றம் இறக்கமாக இருப்பதால் செயற்கையாக ஒரு ஏரியை உருவாக்கி

அதும் அந்த ஏரியை கடப்பதை யூடியூப்பில் தேடிப்பாருங்கள். வாயில் ஈ போயிரும், மூன்று கட்டமாக நீரை உயர்த்தி அடுத்த உயரத்திற்கு தள்ளி கடைசியில் கடலுக்குள் தள்ளப்படும்.

இன்றைய நிலைக்கு பனமா கால்வாயால் பனாமா நாட்டுக்கு பல மில்லியன் மில்லியன் டாலர் லாபம். கடக்கும் ஒவ்வொரு கப்பலும் பணம் கொடுக்க வேண்டும், கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் சில மில்லியன் டாலர் லாபம். ஏன்னா சுற்றி போக வேண்டிய அவசியம் இல்லை என்பதால் எரிபொருளும் நேரமும் மிச்சம்



சேது சமுத்திரம் வந்தால் கொழுப்பு துறைமுகத்திற்கு மாபெரும் நட்டம். இது அனைத்து அரசியல் வாதிகளூக்கும் தெரியும், இலங்கையை சுற்றிச்செல்ல தேவையில்லை என்பதால் சேது சமுத்திரத்தில் அமைக்கப்படும் டோல்கேட்டில் பணம் கட்டி செல்ல அனைத்து நாட்டு கப்பல்களூம் ஒப்புக்கொள்ளும்

மேலும் எரிபொருளுக்கும், உணவுபொருள்களுக்கும் அருகில் இருக்கும் தூத்துகுடி துறைமுகத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதால் அங்கே அதிக வேலை வாய்ப்பும், புதிய தொழிலும் பெருகும், தூத்துகுடியை நிர்மூலமாக்கும் ஸ்டெர்லைட்டை தூக்கிவிடலாம்.

உண்மையில் சேது சமுத்திர திட்டம் ராமர் பாலம் என்ற காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்படவில்லை. இலங்கை நாட்டுடன் செய்த ஒப்பத்தத்தால் எதாவது ஒரு காரணம் சொல்லப்படுகிறது. நன்றாக கவனித்துப்பாருங்கள் இலங்கையுடன் முரண்படும் அரசியல் தலைவர்கள் மட்டுமே சேது சமுத்திர திட்டத்தை தீவிரமாக ஆதரிப்பார்கள்

நியூட்ரினோ ஆய்வு!

ஒரு பக்கம் ஹாக்கிங்கை படி்கிறிங்க. இன்னொரு பக்கம் நியூட்ரினொ திட்டத்தை எதிர்க்கிறீர்கள் என்பவர்களுக்கு பதில்

1 ஹாக்கிங் கடவுள் துகள் என்ற ஹிக்ஸ்போஸான் முயற்சியை தேவையற்றதுன்னு சொன்னதா தான் எனக்கு ஞாபகம்.

2 கடலில் கொட்டிய எண்ணெயை அகற்ற வாளி பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம்முடயது. அதற்கு முறையான கருவிகள் வாங்க நிதி ஒதுக்கலாம்

3 புயல் எச்சரிக்கை புயல் வருவதற்கு முன்னர் அளிக்கப்பட வேண்டாம். ஆனால் மீனவர்கள் கடலுக்கு சென்ற பின்னர் புயல் வந்த பின்னர் புயல் எச்சரிக்கை அளிக்கப்பட்ட பெருமைமிகு தொழில்நுட்பம் நம்முடையது. அதை மேம்படுத்த நிதி ஒதுக்கலாம்

4 குரங்கிணி பகுதியில் காட்டுதீ ஏற்பட்டு 12 உயிர்கள் பலியாகியுள்ளது. வன துறையின் தாமதமே அதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அதனை மேம்படுத்த நிதி ஒதுக்கலாம்

5 வளர்ந்த நாடுகளை விட அறிவியலில் இந்தியா 20 வருடங்கள் பின் தங்கி உள்ளது. நியூட்ரினோ ஆராய்ச்சி என்பது இதுவரை யாரும் செய்யாமல் நாம் புதிதாக செய்வதல்ல. எப்படி விமானம், அணூ உலை வெளிநாடுகளில் வாங்கினமோ அதே தான் இப்போதும் உபகரணம் வாங்க வேண்டும். அது தேவையில்லாத நிதி விரயம்



6 போக மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. வளர்ந்த நாடுகளில் கரும்பு, ஆமணக்கில் இருந்து எடுக்கப்படும் எத்தனால், மெத்தனால் கொண்டு பயோ டீசல் பயன்படுத்தபடுகிறது. ஒரு பக்கம் விவசாயமும் பாதுகாக்கப்படுகிறது, மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது.

7 முன்னாடியே சொல்லியிருக்கனும்
தெர்மாகோல் போட்டு நீர் ஆவியாகமல் தடுப்பது தண்ணீர் தொட்டிக்கு தான். ஏரிக்கு அல்ல. நீரில் இருந்து மின்சாரம் எடுப்பதால் நீரின் சுவை குறைகிறதுன்னு ஒரு மத்திய அமைச்சர் சொன்னார், சோலார் மின்சாரம் பயன்படுத்துவதால் பூமியில் வெப்பம் குறையும்னு ஒரு அமைச்சர் சொல்றார். இப்படி விஞ்ஞானிகளை வச்சிகிட்டு நியூட்ரினோ ஆராய்ச்சி தேவையா?

முதல்ல கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பா இருக்கான்னே தெரியல

!

Blog Widget by LinkWithin