இரண்டாம் உலகம்!

இரண்டாம் உலகம் பார்த்த பொழுது இந்த மாதிரி கதையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு மண்டைக்குள் உறுத்திகிட்டே இருந்தது. கதையின் மையகளம் பேரலல் யூனிவர்ஸ்(http://en.wikipedia.org/wiki/Parallel_universe_(fiction) ) ஜெட்லி நடிச்ச தி ஒன் என்ற படம் இதுக்கு ஒரு முன்னோடியா இருந்துச்சுன்னு சொல்லலாம், அதன் பின் வந்த ஃபேண்டசி படங்களை விட oz the great and powerful னு ஒரு படம் எனக்கு இரண்டாம் உலகத்தோடு நிறைய ஒத்து போற மாதிரி தெரிஞ்சது.

ஒரு படைப்பு என்பது எதோ ஒரு தாக்கத்தின் விளைவாகவே உருவாகிறது அது சினிமாவாக இருந்தாலும் அல்லது நாவலாக இருந்தாலும், சென்னை 600028 வந்த போது அந்த படமும் ஒரு தாக்கத்தால் உருவானது தான் என எழுதியிருந்தேன், http://valpaiyan.blogspot.in/2008/06/blog-post_24.html அதில் ஃபுட்பால், இங்கே கிரிக்கெட். ஒரு சில மாற்றங்கள் அல்லது நம் சூழலுக்கு தேவையான மசாலா சேர்த்து கலப்பதால் அதன் மூலம் அறியப்படாமல் போய் விடுமா என்ன?

மங்காத்தா, கேயாஸ் என்ற ஆங்கில படத்தின் தளுவல். ஆரம்பம், டைஹார்ட் 4 மற்றும் ஸ்வார்ட் ஃபிஷ் படத்தின் தாக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இரண்டாம் உலகம் படத்தில் என்ன தாக்கம் இருந்திருக்கும் என யோசிக்கையில் தோன்றியதை பகிர்கிறேன்.

oz the great and powerful

சர்க்கஸில் மேஜிக்மேனாக இருப்பவன் அங்கே நடக்கும் ஒரு சண்டையில் காற்று பலூனில் ஏறி தப்பிக்கிறான், அது ஒரு சூறாவளி காற்றில் சிக்குகிறது, அப்பொழுது அவன் வேண்டிக்கொள்கிறேன் தன்னை காப்பாற்றும்படி, சூறாவளி மறைகிறது ஆனால் அவன் இறங்குவதோ பூமி அல்ல.(இரண்டாம் உலகம்) அங்கு ஏற்கனவே இருந்த ராஜா சொன்னது போல் தம் உலகை காக்க வந்த ரட்சகனாக பார்க்கப்படுகிறான்.

சின்ன சின்ன விசயங்களில் லாஜிக்காக அவனது தேவை அங்கே உணர்த்தப்படுகிறது, குரங்கை சிங்கத்திடமிருந்து காப்பாற்ற வண்ணகுண்டை வீசி அதனை பயமுறுத்துதல், உயிருள்ள பீங்கான் பொம்மையின் உடைந்த காலை பசை கொண்டு ஒட்டி நம்பிக்கை பெறுதல் போன்றவை மிக முக்கியமான/லாஜிக்கான காட்சிகள். அந்த உலகில் இல்லாதவற்றை, இவனுக்கு தெரிந்தவற்றை கொண்டு அங்கே முக்கியத்துவம் பெறுகிறான். இறுதியில் வென்று நாட்டு மக்களுக்கு விடுதலை அளிக்கிறான்!

இரண்டாம் உலகில் பூமி ஆர்யா விரல் சூப்பும் பாப்பா மாதிரி முதலில் வருகிறார் பின் கோவா சென்று புரபசரை சைட் அடிக்கிறார், மற்ற பெண்களுடன் நெருக்கமாக பழகி அனுஷ்காவின் பொஸிசிவ்நெஸ்ஸை கிளரிவிடுகிறார், பின் அனுஷாகாவுடன் ரொமான்ஸ் பண்ணுகிறார், பின் அனுஷ்கா செத்து போனதும் தாடி வளர்கிறார்.

வேறு உலக ஆர்யா, கத்தி சுத்தத்தெரியாமல் தளபதி/தந்தையிடம் திட்டு வாங்குகிறார். அனுஷ்காவிடம் செமத்தியா உதை வாங்குகிறார் ஆனால் அனுஷ்காவுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் பயங்கர மிருகத்தை வேட்டையாடுகிறார். ட்ரங்கன் மங்கி சண்டை போடுகிறார். எதிரி நாட்டிற்குள்ளே அனைவரையும் வெட்டி சாய்க்கிறார், சுச்சு போட்டா வீரம் வர்ற மாதிரி எதாவது செல்வராகவன் கண்டுபிடிச்சிருப்பார் போல.

காதலை கற்றுத்தர பூமி ஆர்யா அங்கே போக வேண்டியதின் கட்டாயம் எங்கேயும் இல்லை. ஆர்யா அனுஷ்காவை பார்த்ததும் பூ பூக்கிறது அதாவது காதல் அங்கே வந்து விட்டதாம். அதே பார்வையை அங்கிருக்கும் ஆர்யா பலமுறை வீசியும் பூக்களுக்கு காது கேக்கவில்லை போலும். காதல் என்பது ஒரு உணர்வு அதன் குறீயிட்டை சரியாக பயன்படுத்த தெரியாமல் 
தடுமாறியிருக்கிறார் செல்வராகவன்.



கடவுளுக்கு எதை எப்போ செய்யனும்னு தெரியும் என்பது போல் ஒரு பாத்திர படைப்பு. ஆர்யாவுக்கு சாவே இல்ல போல. ஓவ்வொரு உலகமா அனுப்பிவைக்கப்படுகிறான். சரி இரண்டாம் உலகில் காதல் வந்துருச்சு பின் அதன் தாக்கம் என்ன? அங்கே காதல் வர வேண்டிய அவசியமென்ன? அங்கே ஏற்கனவே எல்லாரும் புணர்ந்து பிள்ளை பெத்துகிட்டு தானே இருக்காங்க? இந்த காதலால் அங்கே நிகழ்ந்த மாற்றம் என்னான்னு சொல்ல வேணாமா? ஒரு வேளை இரண்டாம் பாகம் வருமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குப்பை ராஜான்னு சொல்வது சுதந்திரத்தின் அறிகுறியா? நானெல்லாம் தூக்கு மேடையில் நின்னா ங்கோத்தா, ங்கொம்மான்னு திட்டுவேன். இந்தியாவில் கூட காங்கிரஸ், பிஜேபியை கொள்ளைகூட்டம்னு சொல்லுது, பிஜேபி காங்கிரஸை ரத்தகறை படிந்த கரங்கள்னு சொல்லுது. இதுல என்ன குறியீடு வந்து வாழுதுன்னு தெரியல. செல்வா நல்ல டைரக்டர் தான் அதுக்காக அவர் சொதப்பினதையும் தூக்கி வச்சு கொண்டாடினா பின் நல்ல சினிமாவுக்கு என்ன அர்த்தம்?

நல்ல ஒரு அருமையான கான்செப்டை மொக்க ஸ்கீர்ன்ப்ளேவால் சொதப்பியிருக்கார் செல்வா. ஒரு விமர்சனத்தில் தமிழ்சினிமா 25 வருடம் கழித்து பார்க்க வேண்டிய படத்தை இப்போதே எடுத்திருகிறார்னு படிச்சேன். இவுங்க 25 வருசமா படமே பாக்குறதில்ல போலன்னு நினைச்சிகிட்டேன் :) உலகமே ஒரே கூரையில் கீழ் வந்த பிறகு அந்த டெக்னாலஜி இல்ல. டெக்னீஷியன்ஸ் இல்லன்னு சொல்ற கதையை நம்ப முடியாது. சிஜி ஒர்க் பண்ண ஆளுங்க இருக்காங்க, உட்கார்ந்து வேலை வாங்குறதுக்கு என்ன முடைன்னு தெரியல.

ஆகமொத்தம் அவசரத்தில் பிரசவித்த குழந்தை - இரண்டாம் உலகம்

வாழ்வென்ற வஸ்து!

பிறப்பிற்கும் சாவிற்கும்
ஆன இடையில்
வாழ்வென்று ஒன்றிருக்கிறது
அது முதலில் என்னை மகன் என்றது
பின்னர் சகோதரன் என்றது
பின் கணவன் என்றது
பின் அப்பா என்றது
முடிந்தவரை 
கடமைகளை செய்தேன்
ஒன்றிற்கும் உதவாதவன் என்றது
செத்தபின் அழுதது
பின் பிணம் என்று
தூக்கி போட்டது


********

முற்றிலுமாக தொலைத்த
ஒருவன் தன்னை
தொலைந்துபோனவனாக தானே
கருத முடியும்
யாரிடம் கேட்பது
தொலைத்த வாழ்வை
அறிந்தவர்களுக்கு தானே தெரியும்
இவன் கற்றுக்கொள்ளவே
வாழ்வை தொலைத்தான் என்று

********
வீதி என்பது
நேராக செல்வது
நாம் இடவலம் பாப்பதில்லை
ஆங்கோர் சாவு என்றால்
என்ன சாதி என
முதலில் கேட்ப்போம்
எவன் செத்தால்
நமக்கென்ன
நம் சாவுக்கு வருபவன்
வாங்கிவரும் ஜவ்வாது மழை
நமக்கு மணக்கவா போகிறது

********

பேசிக்கொள்ள
விசயம் தோணும் போது
நான் பயன் படுவேன்
ஆம் நான் அயோக்கியன்
உங்கள் பணத்தை 
கொள்ளையடித்தவன்
நீங்கள் விருப்பியவளை
கவர்ந்து சென்றவன்
உங்கள் குழந்தைகள் உணவை
பிடிங்கி தின்றவன்
நாத்திகனாய் வாழ்தற்கு
ஒரு அடையாளமாக
இருக்க வேண்டாமா!
துகில்கையில்
குற்ற உணர்வு வரலாம்
இருக்கவே இருக்கு
சரக்கு!


*******

செத்த பிறகு
சங்கூதறவன் வந்து
காசு கேப்பான்
டிப்ஸ் கொடுங்க
நாம் தான் வள்ளலாச்சே


********

கண்ணாடியில் தெரியும்
பிம்பத்தை தவிர
வேறதும் நான்
உருவாக்கியதில்லை
நீங்களே
கற்பனை கொண்ட பிம்பத்திடம் கேட்போம்
நான் உங்களை
காயப்படுத்தினேனா
ஆம் நான் மத மறுப்பாளன்
நான் உங்களை காயப்படுத்தினேனா
ஆம் நான் சாதி மறுப்பாளன்
நல்ல வேளை எந்த மனிதனையும்
காயப்படுத்தவில்லை
சாவு சந்தோசமாக இருக்கும்


*********

தொலைந்து போன
பொருளை தேடிக்கொண்டிருக்கும்
குருடனை பார்த்து
எங்கு தொலைத்தாய்
என கேட்பவனே
இங்கு
அவர்கள் சமூகத்திற்கு
தேவையளவு செய்து விட்டதாய்
நம்புகிறார்கள்


********

இரு கைகள் பொத்தி
அழுவதென்பது
கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது
எனக்காக தானே அழுகிறேன்
பின் ஏன் என்று,
ஏன் இந்த பிம்பத்தை
வளர்த்தேன்று தெரியவில்லை
பிம்பத்திற்கும் எனக்குமான சண்டையில்
யாரோ ஒருவர் இறப்பார்
யாரோ ஒருவர் இருப்பார்.


********

என் அழுகை சத்தம் கேட்க வில்லையே
அது உங்களை தொந்தரவு படுத்தலாம்
நாம் தான் என்றுமே
எவன் செத்தாலும் கவலை பட்டதில்லையே
நமக்கு வழிப்பாதை என்பது
தெளிவான நீரோடையாய் வேண்டும்
சிறுதுளி ஒருவேளை
நாளை ஸ்டேட்டஸ் போட உதவலாம்
எதையும் பெறுவதற்கோ
எதையும் இழப்பதற்கோ
நாம் ஆயுத்தமாய் இல்லை
நாம் நாமாய் இருக்கிறோம்
எழுதினாயா ஒரு லைக்
செத்தாயா ஒரு மாழை
அவனவன் வாழ்வு அவனுக்கு



********

சோதனைகள் மேருகேற்றுவதற்கு
என்பதெல்லாம் தங்கத்திற்கு தான்.
காகிதத்தை கொழித்தி பாருங்கள்
சோதனையின் வேதனை தெரியும்
உங்கள் அறிவுரைகளை
அடக்கி கொள்ளல் நலம்
நான் வேற மாதிரி
உங்களையும் கொழித்தி விடுவேன்,
சாவை பார்த்தவனுக்கு தான்
வாழ்வு தெரியும்.

!

Blog Widget by LinkWithin