சர்வாதிகாரம்!

மிடில்கிளாஸ் வர்க்கத்தின் வருமானத்தில் பெரும்பகுதியை பிடிங்கிகொள்வது கல்வி கட்டணம் தான். அந்த ஆதங்கதில் தான் யாராவது அனைவருக்குமான கல்வியை இலவசமா தர மாட்டாங்களான்னு எதிர்பார்க்க வேண்டியிருக்கு.

பாஜக போன்ற வலதுசாரி ஆதரவாளர்கள் முதலாளித்துவ சிந்தனையில் ஊறி போனவர்கள். அவர்கள் தொழ அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பெரும்முதலாளி வேண்டும். யாரும் இல்லையென்றால் அவர்களே யாரையாவது உருவாக்குவார்கள். 5 வருசம் முன்னால் அதானி யாருனே எனக்கு தெரியாது.இன்னைக்கு அதானியை தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிரலாம்.

வலசு சாரிகள் வர்க்க சிந்தனையில் ஊறிபோனவர்கள். ஏழ்மைக்கு விதியே காரணம் என்பார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பார்கள். அவர்களின் தற்போதைய ஆயுதம் தேச பக்தி. அதை உங்கள் கழுத்தி வைத்து மிரட்டுகிறார்கள். மதவாதத்திற்கும், அதிகாரமையத்திற்கு எதிராக பேசுபவர்களையும் தேச துரோகிகள் என்று குற்றம் சாட்டுவது அவர்களின் வர்க்க சிந்தனையை மறைமுகமாக பயன்படுத்துவது தான்.

நானும் இந்தியாவில் வரி கட்டும் இந்தியன் தான் என்ற பத்திரிக்கையளரை நீ எவ்ளோ வரி கட்ற, அந்த பணத்தை நான் தர்றேன்னு ஒரு தேசிய தலைவர் சொல்கிறார் என்றால் இங்கே கேள்வி கேட்கவே மறுக்கப்படுகிறது என்று அர்த்தம்.



தனிமனித உரிமைக்காக போராடுவதை ஒடுக்குவதும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதும், கேள்வி கேட்கவே மறுக்கப்படுவதற்கும் இன்னொரு பெயர் உள்ளது. அதனை சர்வாதிரிகாரம் என்பார்கள். ஆனால் வரலாறு நமக்கு சொல்லிகொடுத்த பாடம் சர்வாதிரிகாரிகள் கடைசி காலத்தில் உயிர்பிச்சை கேட்டு அழைவார்கள்.

வாலிஸம்!

இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம்.

நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் மாற்ற முடியாது. அதை அனுபவமா எடுத்துக்கமே தவிர அதை நினைத்து புலம்புறது வேஸ்ட்.(இது ஏன் முதல்ல வருதுன்னா அதை கடைபிடிக்கத்தான் படாதபாடு படுறேன்)

என்னை நியாயபடுத்திக்க யாரையும் குற்றம் சாட்டக்கூடாது

பிச்சை, உதவி என்ற வார்த்தையே இல்ல, இல்லாதவங்களுக்கு செய்யுறது நம் கடமை

குற்ற உணர்ச்சி இல்லாம வாழ ஓப்பனா இருக்கனும் அதுக்கான முடிந்தவரை உண்மை பேசனும்.

வாழ்க்கை ஒரு முறை தான். அதை நம்பனும். நான் வாழ்ந்த தடத்தை பதிக்கனும். அட்லீஸ்ட் வாழ்ந்தேன்னு காட்டனும்

என் சந்தோசத்துக்கு யாருக்கும் செலவு வைக்கக்கூடாது. அதை கடனா நினைத்து அடுத்த முறை கொடுத்தரனும்

ஆலோசனைகும் அட்வைஸ்க்கும் வித்தியாசம் தெரியாவங்க நிறைய பேரு இருக்காங்க, அதுனால உரிமை எடுத்துக்கக்கூடாது

எனக்கு இழப்பே ஏற்பட்டாலும் தனி மனித உரிமைக்காக மட்டுமே பேசனும். யாரையும் குற்றம் சாட்டக்கூடாது

எதிர்காலம் குறித்த திட்டமிடல் வேஸ்ட். அது அந்த நொடியில் என்ன தேவையோ அதை எடுத்துக்குது, இப்பவே திட்ட்மிட்டு ஒன்னு ஆகபோறதில்ல

சக மனிதர்களின் அடையாளம் பார்க்கக்கூடாது.

பிடிக்கலைன்னு சொன்னா பொண்டாட்டியா இருந்தாலும் தொடக்கூடாது

அழுகை வந்தா அழனும், சிரிப்பு வந்தா சிரிக்கனும்

என் குழுந்தைங்க பூமிக்கு வர நான் ஒரு கருவி தாம், நான் அவங்களுக்கு ஓனர் இல்ல

இறப்பு என்பது மனிதத்தின் விடுதலை. விட்டு போறோம் அவ்ளோ தான். நாம இருக்கனும்னா இங்கேயே எதாவது பண்ணிட்டு போகனும். மறுபிறவின்னு ஒன்னு இல்ல

#வாலிஸம்

வாங்க பேசலாம்!

நான் ஏன் நாத்திகனானேன்!
******************************************

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை முட்டாள்கள் என்றோ, வாழ தகுதியற்றவர்கள் என்றோ நான் எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை, நான் ஏற்கனவே பொதுபுத்தி பதிவில் சொன்னது போல் “உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது” என சொல்ல எனக்கு எப்படி உரிமை இல்லையோ, அதே போல் கடவுள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என சொல்லவும் உரிமை இல்லை!

ஒரு செயலின் விளைவை பொறுத்தே அது சமூகத்திற்கு நன்மை அளிப்பதா அல்லது தீமை அளிப்பதா என தீர்மானிக்கப்படுகிறது, அந்தளவில் கடவுளை மறுப்பதோ அல்லது ஏற்றுக்கொள்ளுதலோ குற்றம் அல்ல, பொருள் சார்ந்த சமூகத்திலிருந்து அறிவு சார்ந்த சமூகத்திற்கு மாறிய நாகரீக காலம் முதல்.. நம்பிக்கை, அதன் செயல் மற்றும் விளைவு அனைத்தும் விவாதத்துக்குள்ளாக்கப்படுகிறது, அவையனைத்தும் எண்களின் முடிவைப்போல முடிவிலியாக தான் இழுத்து கொண்டிருக்கிறது என்பது உண்மை!

சிறிய உதாரணத்துடம் சொல்ல முயல்கிறேன் -

ஒரு அறை, முழுவதும் இருள் சூழ்ந்து இருக்கிறது, நம்பிக்கையாளன் அதன் உள்ளே உயரிய எதோ ஒன்று இருக்கிறது என்கிறான், அதனை கடவுளாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம், மறுப்பாளான்(இல்லை என்ற நம்பிக்கை, நம்பிக்கையே இல்லை என்று பொருள் தராது, ஆகையால் அவநம்பிக்கையாளன் என்ற சொல்லாடலை தவிர்க்கிறேன்), அவை வெறும் இருள் மட்டுமே அல்லது நீ நினைப்பது போல் அது ஒன்றும் உயரிய பொருள் அல்ல அதை தெளிவுறாமல் குருட்டு(இருட்டு) நம்பிக்கை கொள்ளாதே என்கிறான்! இவையே கடவுள் நம்பிக்கையாளனுக்கும், கடவுள் மறுப்பாளனுக்கும் உள்ள ஆரம்ப விவாதப்புள்ளி.

நம்பிக்கையாளர்களின் மிக சொற்பமே அதை ஆராய்ந்து தெளிவுற விரும்புகிறார்கள், அவ்வாறு ஆராய்ந்தவர்களும் கடவுளும் இல்லை, கண்றாவியும் இல்லை என புதியதோர் ஆன்மீகபாதையை காட்டி சென்று விடுகிறார்கள், பின்னால் வருபவர்கள் அதை வைத்து கல்லா கட்டுவது வேறு விசயம்! கடவுள் இல்லை என்று நம்பிக்கையாளனே தெளிவுற்றாலும் அவனால் தீர்க்கமாக வெளியே சொல்ல முடிவதில்லை, சமூகம் என்னும் விளக்கமாறு அதன் பயன்பாட்டை பூர்த்தியடைய செய்ய மேல் முனையில் குஞ்சத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். குழுமமாக செயல்படுத்தல், தனிமனித ஒழுக்கம், பிறப்பின் பயனை மெய்பித்துவிட்டு செல்லுதல் போன்ற சமூக காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்க கடவுள்/மதம் என்ற குஞ்சம் தேவைப்படுகிறது அல்லது பட்டது!

ஆனால் இங்கே நடப்பது என்ன? விளக்கமாறு முழுவதும் குஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது, கடவுளின்/மதத்தை தேவை மறந்து என் கடவுள் பெருசு, என் மதம் சிறந்தது என்ற ஈகோ ஆரம்பித்து விட்டது, எல்லா முனைகளிம் குஞ்சம் கட்டபட்ட விளக்கமாறு இன்று தடித்த ஆயுதமாக காட்சியளிக்கிறது, என் மதம் அமைதியே உருவானது, அது அன்பை மட்டுமே போதிக்கிறது என்பவனை, இவன் அந்த மதத்தின் சிறப்பான பகுதிகளை மட்டும் பார்த்து பேசுகிறான் என நேர்மறையாக சிந்தித்தாலும் அவன் சொன்ன மதத்தின் செயல்பாடுகள் ஒருவேளை முதுகுபுறம் ஆயுதம் வைத்திருப்பானோ என எதிர்மறையாக சிந்திக்க் வைக்கிறது.



மதம், சடங்குகள் அதன் பயன்கள் இப்படியான இத்யாதிகளை ஒதுக்கி வைத்து ஏன் கடவுள், எப்படி கடவுள் என சிந்திக்க தொடங்கினாலே போதுமானது, நான் ஏற்கனவே சொன்னது போல் இருட்டறைக்குள் ஆராய்ந்து தெளிவுற நம்பிக்கையாளர்களுக்கு தைரியமோ அல்லது ஆர்வமோ இல்லை. முதலில் தோல்வி பயம் இரண்டாவது இத்தனை பேர் சொல்றாங்க, அது எப்படி இல்லாம இருக்கும் என்ற பொதுபுத்தி!

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இருட்டறைக்குள் எதோ உள்ளது என்ற நம்பிக்கையை, அதன் மறுப்பாளன் விஞ்ஞானம், தத்துவ ஆராய்ச்சி, உளவியல் பகுப்பு என பல வழிகளில் வெளிச்சத்தை உருவாக்கி அறையில் இருளை போக்கி கொண்டிருக்கிறான், இதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே முடியும் என சொல்லப்பட்ட பல செயல்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு விட்டது, கடந்த 500 வருடங்கள் அறிவு சார்ந்த சமூகம் அதன் வீச்சை முழுவதுமாக செயல்படுத்த தொடங்கிவிட்டது, ஆனாலும் பிற்போக்கு பழமைவாதிகளால் உண்மையை ஏற்று கொள்ள முடியவில்லை.

இந்த விவாதம் சண்டைக்காக அல்ல, நீங்கள் எனது எதிரியோ விரோதியோ அல்ல. கடவுளை நீங்களும் பார்த்ததில்லை, நானும் பார்த்ததில்லை. ஆனால் உங்களை விட ஆர்வமாக இருட்டறைக்குள் வெளிச்சம் கொடுக்கும் வேலையை கடவுள் மறுப்பாளனே செய்து கொண்டிருக்கிறான் என்பதை நீங்களே அறிவீர்கள், நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான், வாருங்கள் இருவரும் தேடுவோம், விவாததின் தெளிவில் அறிவு சுடர் ஏற்றி இருளை போக்குவோம்!
அங்கே நீங்கள் சொன்னது போல் உயரிய பொருள் இருந்தால் அப்போதிலிருந்து நானும் கடவுள் நம்பிக்கையாளன், அது வரை நான் கடவுள் மறுப்பாளனாகவே இருக்க விரும்புகிறேன்!

இருட்டுக்கு டார்ச் அடிக்கும் முயற்சியில்!............

#வால்பையன்

குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல!?

பரிணாமம் குறித்தான புரிதல் இல்லாதவர்கள் கேட்கும் பொதுவான கேள்வி “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” குரங்கிலிருந்து மனுசன் வந்த மாதிரி ஒரு படத்தை காட்டி, மேலும் படிக்கும் போது எங்களுக்கு அப்படி தான் சொல்லி கொடுத்தாங்கன்னு சொல்லி. இப்ப இருக்குற குரங்கு ஏன் இன்னும் மனுசனாகல, அல்லது எப்ப மனுசன் ஆகும்னு கேக்குறாங்க.



அறிவியல் வகுப்பில் சொல்லி கொடுக்கும் ஏன் பரிணாமம் குறித்தான புரிதல் பரவலா போய் சேரலன்னு யோசிச்சேன். பள்ளி முடிந்ததும் யாரும் யாரிடமும் பரிணாமம் குறித்தோ, அறிவியல் குறித்தோ பேசுறதில்ல. அதில் பெரும்பாலோனோர்க்கு ஆர்வமும் இல்ல. தினம் அவர்கள் சந்திக்கும் வார்த்தைகள். சாமி கும்பிட்டியா?, இன்னைக்கு புரட்டாசி விரதம், இன்னைக்கு சஷ்டின்னு எல்லாமே ஆன்மீகம் சம்பந்தமா தான். அம்மணகட்டையா சுத்துற ஊருல நாம மட்டும் எப்படி துணி உடுத்தி சுத்துறதுன்னு அறிவியல் படிச்ச பயபுள்ளைங்கலும் பெரும்பான்மை பொதுபுத்தியில் பக்தி பழமா சுத்திகிட்டு இருக்காங்க. இது தான் மத வெறியா மாறுது.

பரிணாமம் என்பது நம் கண்களால் பார்த்து உணர கூடிய மாற்றமல்ல, அதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்துக்கொள்ளும். அவைகள் விட்டுசென்ற சுவடுகள் தான் பரிணாமத்திற்கான ஆதாரம். அவைகளை கூட அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். விவாதித்து அதில் இருக்கும் அதிக பட்ச சாத்தியகூறுகளை ஆராய்ந்தால் போதும். பரிணாமம் எந்த அளவு உண்மை என்பது உங்களுக்கு புரியும்.

குரங்கிலிருந்து மனிதன் என்பதில் உள்ள குரங்கு ஒரு பொது பெயர். குரங்கிற்கும் நமக்கும் மூதாதையர் ஒன்றே என்பதன் சுருக்கம் அது. அந்த இனத்திலிருந்து வேவ்வேறு பாதையில் பிரிந்த உயிர்கள் தங்கள் வாழும் சூழலுக்கேற்ப தம்மை தகவமைத்து கொண்டன. அதனால் குரங்கில் கூட இத்தனை வகையில் உள்ளன. அத்தனை வகை குரங்குகளும் பரிணாமம் குறித்து நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடும். மாற்றம் என்பது என் தேவையை பொறுத்து என்பதே.

காங்கோ ஏரியாக இருந்து நதியாக மாறியபொழுது இரு பக்கமும் பிரிந்த சிம்பன்சி வகையில் ஒன்று இன்று போனோபோ வகை சின்பன்சியாக மாற்றம் அடைந்துள்ளது. கற்றலில் சின்பன்சியை விட வேகமாக உள்ளது. குரங்குகள் குரல்,,முக பாவனை,, உடல்மொழி மூலம் தகவல் தொடர்பு கொள்கிறன்றது. மனிதனின் இவ்வளவு வேக வளர்ச்சிக்கு காரணம் நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு புரியவைக்க மொழியை கண்டுபிடித்ததே. மொழி இல்லையென்றால் நாம் இன்னும் கற்கால மனிதர்களாக தான் இருந்திருப்போம்.

மனிதர்களில் சீனா பகுதிகளில் குளிர் அதிகம் என்பதால் வேர்வையில் இருந்து கண்ணை பாதுகாக்க வேண்டிய புருவ அடர்த்தி தேவையில்லாமல் போயிற்று, ஆப்பிரிக்க பகுதிகள் அதிக வெயில் காரணமான தோலில் மெலனின் அதிகமானது. நான் குத்தும் பச்சை என்னோடு அழிந்து போனால் முடிந்து போனது. அது என் சந்ததினர்கும் தொடர்ந்தால் அது தான் ஜெனடிக்கல் மியூட்டேசன். பலர் ஜெனடிக்கல் மியூட்டேசனை ஏற்றுக்கொள்வதில்லை. அது செயற்கையாக நடப்பதாக அவர்கள் வாதம். அணு கதிர் வீச்சும், ஜி.டிநாயுடுவின் ஊசி போட்டு பழசுவையும் மாற்றும் கடந்த நூறு ஆண்டுகளில் நடந்தது. ஆனால் ஜெனிடிக்கல் மியூட்டேசன் காலம் காலமாக உள்ளது. அது பரிணாமத்தின் ஒரு அங்கம்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆரஞ்சு, சாத்துகுடி, எலுமிச்சை சுவையிலும் உருவத்திலும் மாற காரணம் ஜெனிடிக்கல் மியூட்டேசன்.  ஒரு உறுப்பின் பயன்பாடும் பரிணாமத்தில் முக்கியமானது. குரங்குகள் முன்னங்காலை, காலாகவும் பயன்படுத்துகிறது, கையாகவும் பயன்படுத்துகிறது. மனிதனுக்கு அடுத்து குரங்கு, குரங்குக்கு அடுத்து முன்னங்காலை கையாகவும் பயன்படுத்தும் விலங்கு கரடி. இந்த பயன்பாடு அவற்றின் தோற்றத்தையும், வாழ்க்கை முறையையும் மாற்றும். அதுவே பரிணாம மாற்றம்.

உருவம் சிறுத்தல் அல்லது பெருத்தல், உறுப்பு இழத்தல் அல்லது பெறுதல் என்று நிகழும் மாற்றங்கள் நம்மால் உணர முடியாது.  அந்த மாற்றங்களுக்கு அவை பல நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்/. அதே நேரம் அந்த மாற்றம் கண்டாயமல்ல என்பதையும் உணருங்கள். இந்த மாற்றங்கள் உடல் மற்றும் உயிர் வாழ தேவையை பொறுத்து அமைகிறது. எந்த மெனக்கெடுலும் இல்லாமல் இந்த அமைப்பிலேயே எல்லாம் கிடைக்கும் போது மாற்றத்திற்கான அவசியம் இல்லாமல் போயிகிறது. பல லட்சம் வருடங்களாக ஜெல்லி மீன் அப்படியே தான் இருக்கு. சுறா மீன் அளவில் மட்டும் சுருங்கியுள்ளது.

கூர்ந்து கவனித்தால் நம் கண் முன் காணப்படும் பரிணாம சுவடுகளை பலவற்றை காணலாம். முட்டையிட்டு பால் கொடுக்கும் ப்ளாட்டிபஸ் ஒரு பரிணாம எச்சம். பார்வை இழந்த வெளவால். கால்களை இழந்த சாலமெண்டர்கள் எல்லாமே பரிணாமத்தின் எச்சம் தான்.

மனிதனிம் அடுத்த பரிணாம மாற்றம் என்ன என்பதும் பலரின் கேள்வியாக இருக்கு. முன்னரே சொன்னேன். பரிணாம மாற்றம் என்பது கட்டாயமல்ல. அது தேவையை பொறுத்து அமையும். அறிவியலை புரிந்துகொள்ள அறிவியலை பேசுங்கள், படியுங்கள், விவாதியுங்கள் முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அறிவியலை பயன்பாட்டிற்கு மட்டும் வைத்துக்கொள்வேன் என்பது அந்த கண்டுபிடிப்பாளருக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

அறிவியல் ஒன்றே மனிதம் வளர்க்கும். அறிவியல் ஒன்றே பிரிவினை போக்கும், அறிவியல் ஒன்றே மனிதத்தை மேம்படுத்தும்.

திமுக-காங்கிரஸ்

ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு அமைதிபடை என்ற பெயரில் அராஜக படையை அனுப்பியதே இது இரு நாட்டு பிரச்சனையாக மாற இருந்த ஆதார புள்ளி.

ஆனால் அதற்கு பிறகும் திமுக காங்கிரஸும் கூட்டு வைத்தது. அமைதிபடையை அனுப்பியது இலங்கை ராணுவத்துக்கே பிடிக்கல, ஒரு இலங்கை ராணுவ வீரன் ரைபிளை தூக்கி ராஜிவ் நடுமண்டையில் போட தெரிந்தான்., மயிரிழையில் தப்பியது ராஜிவ் உயிர். ஒருவேளை அப்ப போயிருந்தா விடுதலை புலிகள் பற்றி இன்னைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக நிலைபாடு என்னவா இருக்கும் என்று ஐயப்பாடு எனக்கு பல ஆண்டுகளா இருக்கு

ராஜிவ் கொலையில் கூட்டு சதி செய்ததாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஏழுபேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றிய பொழுது அதை எதிர்த்து மனு செய்தது திமுக தலைமையிலான மாநில அரசு. தமிழர் உணர்வை விட காங்கிரஸ் தயவு மட்டுமே போதும் என திமுக எடுத்த நிலைப்பாடு அது.

இறுதி யுத்தத்தின் பொழுது கருணாநிதியின் ஒரு மணி நேர உண்ணாவிரத நாடகம் எல்லாருக்கும் தெரியும். ஆனா அந்த சமயம் கூட காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளிவரவில்லை. ஆ.ராசா, கனிமொழி மீதான 2ஜி வழக்கு அழுத்தம் கொடுத்த காரணம் தான் திமுக கூட்டணியில் இருந்து வெளி வந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களம் கண்டது.



அந்த சமயத்தில் எந்த உளந்தம் பருப்புகளும் விடுதலைபுலிகள் பற்றியோ, பிரபாகரன் பற்றி எந்த விமர்சனமும் வைக்க வில்லை. அதிமுக அரசு பிரபாகரன் படம் பயன்படுத்தக்கூடாது என்று சொன்னபொழுது கூட திமுக அதை ஆதரித்து அறிக்கை விட வில்லை. ஆனால் 2016 காங்கிரஸ் கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்த பொழுது பிரபாகரன் தான் மொத்த போருக்கும் காரணம் என்று சராமாரியாக புகார் எழுப்பினர். காங்கிரஸிடம் இருந்து என்ன ஆதாயம் கிடைத்ததோ.

சமீபமா உளுந்தம் பருப்புகள் காமராஜரையும், கக்கனையும் விமர்சித்து வருகின்றனர். ஓட்டு வாங்க ஆளும் கட்சியான அதிமுகவை விமர்ச்சிக்கனுமா இல்ல கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விமர்ச்சிக்கனுமா?

இப்ப என் கேள்வி என்னான்னா?
அதிமுகவின் பி டீம் மதிமுகவா இல்ல திமுகவா?

#வால்பையன்

parenting without pressure

நம் எல்லோர் வாழ்க்கையுமே ப்ராக்டீஷ் தான். ஒன்னு வாழ பழகுறோம், இல்லைனா வளர்க்க பழகுறோம்.

மூணு வருச இடைவெளி இருந்தும் என்னை என் பொண்ணுக்கு இன்னும் நண்பனா தான் வச்சிருக்கு. அவள் எனக்கு இன்னும் சிறு குழந்தையா தான் தெரியிறா. எதையும் அனுபவத்தில் கற்றுகொள்வதே சிறந்ததுன்னு கொள்கை இருந்தாலும் அவள் சொல்லும் சில விசயங்களில் இந்த அனுபவத்திற்கு நாம் கொடுக்கும் விலையை நினைத்தால் வயிற்றில் புளியை கரைப்பதை தடுக்க முடியல.

”ஹவ் டு பேரண்டிங் வித் அவுட் பிரஸ்ஸர்” என்ற தலைப்பில் நண்பர்களுடன் உரையாடுவேன். பல பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வை என்னால் அப்ப சொல்ல முடிந்தது ஏன்னா அப்ப நான் பிரச்சனை என்னும் வட்டத்திற்கு வெளியில் இருந்து வட்டத்தை முழுதாக பார்க்கிறேன். வாதி, பிரதிவாதி இரு தரப்பு நியாயங்களும் புரியும்.



ஆனா எனக்கே ஒரு பிரச்சனைன்னு வந்தா நான் வட்டத்திற்கு உள்ளே நிற்கிறேன். என்னால் வட்டத்தின் பாதியை தான் பார்க்க முடிகிறது. என்னை நியாயபடுத்திக்கொள்ளவும், தீர்வு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றே ஈகோ செயல்படுது. சில சயமங்களில் இயலாமை தரும் கோவம் ந்ம் இன்னொரு முகத்தை காட்டுகிறது.

அந்த இயலாமை தான் குழந்தையை அடிப்பதில் தொடங்கி., காதலியை கொலை செய்வது வரை செல்கிறது. நம் உள்ளார்ந்த சுய மதிப்பீடுகள் தாண்டி பிறர் தரப்பு நியாயங்களும் கருத்தில் கொள்ளாமல் மனிதம் பிழைக்காது!

திருந்தாத திமுக!

உத்திர பிரதேசத்தில் பாஜக பெற்றது 35% வாக்குகள் தான். 65% மக்கள் பாஜகவிற்கு எதிராக உள்ளனர். இது ஜனநாயகத்தின் தோல்வி என்று நீங்களோ நானோ சொன்னா பரவாயில்ல. திமுகவின் மனுஷ்யபுத்திரன் சொல்றார். திமுக 50 வருசமா இருக்கு. இதுவரை எத்தனை எம்.எல்,ஏ. மற்றும் எம்.பிக்கள் மொத்த வாக்கில் 51% பெற்று வெற்றி அடைந்துள்ளனர். அல்லது குறைவாய் வாங்கிட்டோம்னு எத்தனை பேர் ராஜினாமா பண்ணி ஜனநாயகத்தை நட்டு காப்பாத்தினர். கேட்க ஆள் இல்லைனா எது வேணும்னாலும் பேசிட்டு போலாம்னு போறதே இந்த உளந்தம் பருப்புகளுக்கு வேலையா போச்சு.

திராவிட கட்சிகளை அழிக்க முடியாது ஒகே, கருணாஸை கூட உங்களால் ஜெயிக்க முடியலன்னு சவுடால் வேற. அதிமுக கட்சி பேரில் திராவிடம் இருப்பதால் கூட்டு சேர்த்துகிட்டாங்க போல. அதிமுக திராவிட கட்சியே அல்ல எனபதற்கு சொல காரணங்கள் சொல்றேன்.

பொதுவா திராவிட நாட்டில் பார்பனர்களை தவிர எல்லாருக்கும் குல தெய்வம் இருக்கும்.(பார்பனர்களும் இருக்குன்னு ஒருத்தர் சொல்றார்) அந்த நாட்டார் தெய்வ வழிபாட்டு முறை தான் திராவிடர்களையது. அங்கே பார்பன பூசாரி இருக்க மாட்டார். வேண்டிதலில் அலகு குத்துதல், தீ மிதித்தல் இருக்கும். அதில் எனக்கு முரண்பாடு இருந்தாலும் அந்த பழக்கம் வட மாநிலங்களில் இல்லைன்னு சொல்வதற்காக சொல்றேன்.

இன்னொரு பொதுவான வேண்டுதல் மொட்டை அடித்தல். திருப்பதில் இருப்பது வைணவ கடவுள் பெருமாள் இல்ல. அது முருகன்னு சர்ச்சை எழுந்த பொழுதே அதை பத்தி ஆராய்ச்சி பண்ணேன். நாமளே கடவுள் மறுப்பாளன். நமக்கு எதுக்கு அதுன்னு விட்டுட்டேன். திருப்பதி தவிர வேறு பெருமாள் கோவிலில் மொட்டை அடிச்சு பார்த்ததுண்டா? சைவ கடவுள் சிவன் கோவிலில் மொட்டை அடிச்சு பார்த்ததுண்டா. அதே மாதிரி அந்த ஆரிய கடவுள்கள் கோவில்களில் ஆடு, கோழி வெட்டி பார்த்ததுண்டா?

ஜெயலலிதா கோவில்களில் பழி கொடுக்கக்கூடாதுன்னு சட்டம் கொண்டு வந்ததற்கு காரணம் ஜீவ காருண்யம்னு நினைச்சிங்களா? அது முழுக்க முழுக்க ஆரிய திணிப்பு. ஜீவகாருண்யம் பேசுற எல்லாம் நல்லவங்கன்னு பார்ப்பான் சொல்லிட்டு திரிவான். ஹிட்லர் சுத்த சைவம். அந்தாள் பண்ண வேலைகள் எல்லாமே நமக்கு தெரியுமே

மக்கள் எதிர்ப்பின் பேரில் அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டாலும் அந்த அறிக்கையின் மூலம் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளை அழிக்க அதிமுக நினைத்தது அம்பலமானது. இது திமுகற்கு தெரியாதா? இல்ல தெரிந்தும் நடிக்கிறாங்களா?

ஜெயலலிதா முழுக்க மன்னார்குடி கைக்கு போன பின்னாடி தான் பரமகுடி துப்பாக்கி சூடு நடந்தது. அந்த தலித் விரோத போக்கு திராவிட கட்சிகளிடம் இருக்குமா? இருந்தா அது திராவிட கட்சியா? அதிமுக ஜெயலலிதா காலத்திலும் திராவிட கட்சியில்ல, சசிகலா காலத்தில் அது கட்சியே இல்ல

மகளிர் தின வாழ்த்துகள்!



நான் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களில் நம்பிக்கைக்கு அர்த்தம் இதுதான் என வாழ்ந்து காட்டியது தோழர் ரம்யா தான். அவுங்களுக்கு ஏற்பட்ட சூழல் பிறருக்கு ஏற்பட்டால் அவர்களால் அதை தாண்டி வந்துருக்க முடியுமான்னு யோசிக்க கூட முடியல. இந்த மகளிர் தினத்தில் மகளிர் முன்னேற்றத்தை விரும்பும் ரம்யாவிடம் ஒரு பேட்டி.

வாழ்க்கைக்கு நம்பிக்கை வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்பிக்கையான ஆட்கள் நம்மை சுற்றி இருக்கனும் என்பது அதைவிட மிகவும் முக்கியம். 
 
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!! 

மகளிர்தின வாழ்த்து 

1857ஆம் ஆண்டு அமெரிக்காவில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் உரிமைப்போராட்டமே, பின்னர் கிளர்ச்சிக்கு வித்திட்டது. 1909 ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்காவின் சோசலிசக் கட்சியால், உழைக்கும் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட தினம் தொடர்ச்சியாக  மாற்றமடைந்து, 1975ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாடப்பட்டதோடு, அந்த வருடத்தில் இருந்து மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச பெண்கள் தினமாக மாறியிருந்தது. இவ்வாறாக ஏறத்தாழ நூறு வருடங்களை கடந்த வரலாற்றைக் கொண்டது நமது இனிய மகளிர் தினமாகும், என்ற விளக்கத்தோடு இந்த பதிவில் அனைத்து மகளிருக்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்!!


1. உங்களுக்கு நேர்ந்த விபத்தை பகிர்ந்த கொள்ள விருப்பம் இருந்தால் பகிரலாம். அல்லது உங்களை நகர்த்திய அந்த நம்பிக்கை தந்த சம்பவம் மற்றும் நம்பிக்கையான ஆட்கள் பற்றிய உங்கள் பகிர்வு?

அறிமுகம்
 
கண்டிப்பாக பகிரலாம் நண்பரே... இணையத்தில் நிறைய பகிர்ந்திருக்கின்றேன். ஓரளவிற்கு என்னை நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. ஆனாலும் மறுபடியும் சிறிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கின்றேன். முதன் முதலில் தேவதை என்ற பத்திரிகை எனது பேட்டியை வெளியிட்டது.. அதற்குப் பிறகு பல பத்திரிகைகள் என்னை பேட்டி எடுத்து வெளியிட்டனர். 

அதன் பலனாக பல இடத்தில் இருந்தும் என்னை தொடர்பு கொண்டு, ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவர்களின் குறைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களின் குறைகளைய நான் கூறிய அறிவுரைகளை ஏற்றுக்கொண்டும், அதன்படி நடந்து கொண்டும், இன்று அருமையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டும், தங்களை நோக்கி வரும் அனைத்து சோதனைகளையும் எதிர் கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதில் எனக்கு சிறு மகிழ்ச்சியும் உண்டு.. 

கடந்துவந்த பாதை திரும்பிப் பார்க்கிறேன்  

அரைகுறை விவரம் தெரிந்த வயதில் கடுமையான தீ விபத்தில் சிக்கி, அதில் நாற்பத்தி எட்டு நாட்கள் நினைவை இழந்து, முடிந்துவிட்டது என்று முடித்த நேரத்தில் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கின்றேன் என்றால் அது மிகையாகாது. 

இரண்டு வருடங்கள் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை மேற்கொண்டேன். அதற்கு மேல் வீட்டில் இருந்து கொண்டு அவ்வப்போது சிகிச்சைக்கு வரலாம் என்று மருத்துவமனையில்  அறிவுறுத்தினார்கள். ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.,  

அடுத்து மனதில் எழுந்த கேள்வி எங்கு செல்வது? யாரிடம் செல்வது? நம்மை யார் பாசமாக ஏற்றுக் கொள்வார்கள்.? பாசம் அது எனக்கு கிட்டியது என்னை வளர்த்த பாட்டியிடம் மட்டும்தான்.. அவர்களும் எனக்கு நேர்ந்த விபத்தை கேட்ட அடுத்த இரண்டு நாட்களில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். பாட்டியை தொடர்ந்து தந்தையும்...அனைத்து நிகழ்வுகளும் மிகவும் தாமதமாகவே எனக்கு அறிவிக்கப்பட்டது. 

தாமதமாக அறிவிக்கப்பட்ட உண்மைகளை என்னால் ஜீரணிக்க முடியாமல் இதயம் வெடித்து உள்ளேயே தத்தளித்து நொறுங்கிப்போனேன்.. எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிந்திக்க தொடங்கினேன்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று நான்தானே முடிவெடுக்க வேண்டும்? வயது சிறிதானாலும் சிந்தனை என்னவோ தெளிவாக மிக தெளிவாக இருக்க வேண்டும் என்று கடுமையாக யோசித்தேன். 

யாருடைய உதவியும் இல்லாமல் என்ன செய்வது ?. சவாலான வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது ? அமைதியான வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது ? இப்படி டன் கணக்கிலான கேள்விகள்  மனதை துளைத்தெடுத்தன.

சுற்றங்களால் எடுக்கப்பட்ட முடிவு

இதற்கிடையே என் சுற்றங்களோ!!  வெளியே சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர்களே உறுதி செய்து கொண்டு, அவர்களுக்குள்ளேயே குழப்பிக்கொண்டு, முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு அடுத்து என்ன செய்வது என்று கூடி யோசித்திருக்கிறார்கள், அந்த யோசனையின் முடிவு,  நான் யாரிடம் இருக்க வேண்டும், யாரிடம் இருந்தால் சரியாக வரும் என்பவைகள்தான். இறுதியாக எனது இளைய சகோதரன் அழைத்துச் செல்ல தயாராக இருந்தார். 

அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்
 
மகளாக என்னை பாவித்து எனக்கு சிகிச்சை அளித்த அந்த தெய்வத்துடன் கலந்து ஆலோசித்தேன். எனது வயதை மனதில் வைத்து அவரும் எனக்கு சில அறிவுரைகளை கூறினார், அவர் கூறிய பல அறிவுரைகளில் உறவினர்களுடன் செல்வதும் ஒன்று. உறவினர்களிடம் செல்வது என்பது என் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. சகோதர, சகோதரிகள் இருந்த போதிலும் அவர்களின் சுதந்திரத்தில் பங்கு கொள்ள விருப்பம் இல்லை. அந்த நாள் கடுமையான - மிகவும் சவாலான நாள் என்றே என் மனதிற்கு தோன்றியது. 

நகர்த்திய அந்த நம்பிக்கை தந்த சம்பவம்  -  

மனதில் தோன்றிய சிறிய ஆராய்ச்சி, அப்படியே சென்றாலும், பத்து நாட்கள் மருந்து என் கைகளில் கிடைக்கும், ஒரு மாதத்தில் நான் அறிவுறுத்தினால்தான் மருந்துகள் எனக்கு கிடைக்கும். அதற்குப்பிறகு நான் காணாமல் போயிடுவேன், என் துயரம் தாழ்வு மனப்பான்மையாக மாறி என்னை கீழே போட்டு அழுத்தி அது சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடும். இந்த எண்ணம் மனதில் தோன்றியவுடன்.  அனைவரையும் ஒதுக்கிவிட்டு,  எத்துணை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொள்ளவது என்ற திடமான மனதுடன் ஒரு முடிவிற்கு வந்தேன் 

முதலில் உறவினர்களிடம்தான் கூறினேன். அவர்கள் எனது இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை போலும்..  பிறகென்ன சொந்தங்களால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.  கடும் சொற்களாலும், சுடு சொற்களாலும் தாக்கப்பட்டேன். அங்கேயே எனக்கு முதல் சோதனை ஆரம்பமாகிவிட்டது எனலாம்  

தனித்து வாழ்ந்து எல்லாவற்றையும் எதிர்கொள்ள துணிந்து விட்டதை மருத்தவரிடம் கூறினேன். என்னை மிகவும் ஆச்சர்யமாக பார்த்தார்,  அருமையான யோசனைதான் என்றதோடு மட்டுமில்லாமல், என்  கைகளை பிடித்து "மகளே உன்னை வணங்க வேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாக என் மனதில் எழுகின்றது.. உனக்கு இன்னமும் முழு அறுவைச் சிகிச்சையும் முடியவில்லை இந்த கோலத்தில் எங்கு  செல்வாய்? என்ன செய்வாய்? வாழ்வே சவாலாக அமையுமே! " என்று கேட்ட கேள்விகளில் அன்று கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். ஆனாலும் தைரியத்துடன் என்னால் முடியும் என்று கிளம்பி விட்டேன். 

எனது தந்தைக்கு நிகரான அந்த மருத்துவர் என்னை வாழ்த்தி அனுப்பிய வரிகள் இதோ.. "புறப்படு உன் புது வாழ்க்கையை நோக்கி! என் குடும்பம் அது இனி உன் குடும்பமானது. நாங்கள் அனைவரும் உனக்கு துணை நிற்போம்" என்று சந்தோஷம் கலந்த கண்ணீரை துணையாக்கி என்னை அனுப்பி வைத்தார்கள் மருத்துவரும் அவரின் குடும்பத்தினரும்.

நம்பிக்கையான ஆட்கள் பற்றிய உங்கள் பகிர்வு

முதன் முதலில் என்னைக் கவனித்துக்கொண்ட ஸ்டாப் நர்ஸ் பிரிஸ்க்கா அக்கா அன்றும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ஆரம்பகால கட்டத்தில் அவர்கள் அரவணைப்போடு மட்டுமல்லாது பண உதவிகளும் செய்திருக்கிறார்கள்.. என் உயிர் மூச்சு இருக்கும் வரை இந்த நன்றி மறவேன். மருத்துவமும் பார்த்துக் கொண்டு மேலே மேலே படித்தேன். வேலை தேடும் நேரமும் வந்தது.. எதையும் யோசிக்காமல் முயற்சித்தேன். பெரிய கம்பெனியில் கணினித்துறையில் வேலையில் அமர்ந்தேன். முதல் வேலை, அருமையான மனிதர்கள். எனக்கு அந்த அலுவலகம் தேவதைகள் வாழும் இல்லமாக காட்சி  அளித்தது என்றால் அது மிகையாகாது. இப்படியாக நாட்கள் நகர்ந்தன..

அறுவை சிகிச்சை பல மேற்கொண்டதால் மெலிந்த தேகம்தான், ஆனால் கண்களில் எப்போதும் குறும்பு இதுதான் என் அப்போதைய சொத்து.. அதில் கிடைத்த நட்புகள்தான் இப்போது எனது மிகப் பெரிய சொத்துக்கள்.

பெண்கள் விடுதியில் கிடைத்த என் தாய்க்கு நிகரான கலைச்செல்வி அவர்களின் நட்பு.. அதை நட்பு என்று சொல்ல முடியாது. அவர்களை எனது அம்மா என்றுதான் அன்றும், இன்றும், என்றும் கூறுவேன். அவர்கள் அரசுத்துரையில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார்கள். எனக்கு ஒவ்வொரு முறை உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் அவர்கள் உடலால் மட்டுமின்றி, பணத்தாலும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்களின்பால் எனக்கு உள்ள நன்றி கடன் தீர்க்கமுடியாத ஒன்று.. அதே போல் அலுவலகத்தில் அறிமுகமான நண்பர்களும் பல உதவிகள் செய்திருக்கின்றார்கள். எதையும் என்றும் என்னால் மறக்க இயலாது. 

இதுவரை நான் கண்டது நாற்பத்தியெட்டு அறுவை சிகிச்சைகள். இன்னமும் ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்தால் போதும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஆனால் என் அறிவோ உன்னோட மருத்துவத்திற்கு முடிவே இல்லை என்றுது.. ஏற்றுக் கொண்டேன் துன்பங்களை புன்முறுவலுடன்.  

மட்டமாக நினைத்தவர்கள் முன்னே உயர்ந்தேன் உயர்ந்து கொண்டுதான் உள்ளேன் எனபதில் கொஞ்சம் மகிழ்ச்சியே.. இன்று எனது உயர்வை அனைவரும் பிரிமிப்பாகப் பார்ப்பதில் இருக்கின்றது எனது வெற்றி...
*********

2. பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வி அவசியம் என்பது என் கருத்து. அது சமகாலத்தில் அனைவருக்கும் கிடைக்கின்றதா? பெண்கள் முன்னேற்றத்திற்கு வேறு அடிப்படை தேவைகள் உள்ளனவா?

பெண்கள் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் அவசியமானதே.. அதில் எனக்கு மாற்றுக கருத்தே இருந்தது இல்லை. 

நகரம் மட்டுமின்றி, கிராமத்திலும் படித்த மற்றும் படிக்காத பெற்றோர்கள் கஷ்டப்பட்டாவது அவர்களின் பெண்களை படிக்க வைத்து விடுகிறார்கள். இது நடுத்தர மக்களின் செயல்பாடு. மேல் படிப்பு  படித்தால்தான் அவளின் வாழ்க்கை நல்ல முறையில் அமையும் என்பது அவர்களின் கனவு அது உண்மையும் கூட, ஆனால் அதே கிராமத்திலும், நகரத்திலும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் பெற்றோர்கள் தங்களது பெண்களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள். திருமணம் முடிந்து செல்பவளுக்கு படிப்பு தேவை  இல்லை என்கிறார்கள். அதற்கும் பல விழிப்புணர்வு முகாம் அமைத்து பெண் குழந்தைகளுக்கு ஏன் கல்வி தேவை என்பதை பல முறை உணர்த்தியும், ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்களின்  பெண்கள் தப்பித்து விடுகிறார்கள்.. ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெற்றோர்கள் நம்மிடையே தோற்றுப் போகிறார்கள். இதில் தோல்வி அவர்களுக்கா இல்லை நமக்கா என்ற பெரும் கேள்வி நம் முன்னே எழுகின்றது. கல்வியறிவு இல்லாத பெண்கள் எந்த விதத்தில் வாழ்க்கையில் முன்னேற முடியும்.? ஒரு வட்டம் போட்டு அதற்குள் அடங்கிவிடுவதா வாழ்க்கை. இதை உடைத்து அனைத்து நிலை பெண்களுக்கும் கல்வி தேவை என்பதை கட்டாயமாக்க வேண்டும் இது இயலுமா??


கல்வி பெற்ற, ஆளுமைபெற்ற, சுதந்திர உணர்வுடைய, அச்சமற்ற, ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டு வெற்றி உலாவரும் புதுமைப் பெண்களை போற்றி பாதுகாக்க இந்த சமுதாயம்  என்றும் தவறியதில்லை.. பெண்கள் முன்னேற்றத்திற்கு திறமையும், மன உறுதியும் கண்டிப்பாக வேண்டும். இறுதியாக, கல்வியும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும்.  


3. 2000 த்திற்கு பிறகு உலகை இணைய புரட்சி உலகம் என்றே அழைக்கலாம். நாம் அறிமுகமான 2008/2009 காலங்களில் பரவலாக பெண்கள் இணையத்தில் இல்லை. நீங்கள் வந்த காலத்தில் இருந்து 

ஆமாம் 2000 மேல் புரட்சி உலகம்தான் ஒத்துக்கொள்கின்றேன். நான் 2008 மே மாதத்தில்தான் என் வலையை தொடங்கினேன்.. அப்போது இணையத்தில் ஓரளவிற்கு பெண்கள் இருந்தார்கள். 

அதே போல் முகநூலில்கூட இப்போது இருக்கும் அளவிற்கு அப்போது பெண்களின் எண்ணிக்கை சற்றே குறைவுதான். இப்போதுதான் உள்ளங்கையில் உலகைப் பார்க்கின்றோம்.. 

அறிவியல் சார்ந்த வளர்ச்சியே. இந்த வளர்ச்சி தேவையானதாக இருந்தாலும் சற்றே ஆபத்தான வளர்ச்சியாகவும் உணர்கின்றேன்.

இணையத்தில் பெண்களின் பாதுகாப்பு

பெண்களின் பாதுகாப்பு என்பது பெண்களிடம்தான் உள்ளது. எந்த ஒரு செயலும் அளவிற்கு மேல் போகக்கூடாது. இணையத்தில் மட்டும் அல்ல எங்கும் பெண்கள் தனது ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். தன்னை பாதுகாத்துக் கொள்ள தவறினால் அந்த பெண்ணின் வாழ்வே ஒரு கேள்விக்குறியாக மாறிவிடும்  அபாயமும் இருக்கின்றது.. கவனம் என்ற ஒரு ஆயுதத்தில் எல்லாமே அடங்கிவிடும், பட்டியலிட தேவை இல்லை என்று எண்ணுகின்றேன். எங்கும் எப்போதும் கண்ணியம், கவுரவம் குறையாத தன்மை நம்மிடம் இருந்தால் மதிப்பும் மரியாதையும் நம்மைத் தேடி தானாக வரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 

ஆணோ பெண்ணோ அவர்தம் கண்ணியத்தை காத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் வரை அவர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித தீங்கும் ஏற்படப் போவதில்லை. தன் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் பெண்கள், தன் கவுரத்தை காப்பாற்றிக் கொள்ளும் காரணிகளையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இணையம் மட்டும் அல்ல எல்லா துறையில் இருக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும். 
******************

4. நீங்க அரசியல் பேசி, எழுதி நான் பார்த்ததில்ல, ஆனா சல்லிகட்டி போராட்டத்திற்கு பிறகு அரசியல் விமர்சனம், ஆதங்கம் உங்களிடம் வெளிபட்டது. ஓட்டு போடுவது மட்டுமே சாமான்ய பெண்ணின் கடமையா இருக்கு. அதை தாண்டி அரசியலில் ஒரு பெண்ணின் பங்களிப்பு எந்த அளவு இருக்கனும்னு நினைக்கிறிங்க?

ஆமாம் நான் அரசியல் பேசியதுமில்லை, அரசியல் செய்ததும் இல்லை..

ஆனால் அந்த அரசியல் மீது எப்போதுமே தீராத காதல் உண்டு. ஆமாம் வேலைக்கு ஏற்ற பட்டங்கள் பெற்றதோடு நிற்காமல், அரசியலிலும் முதுகலை பட்டம் பெற்றேன். படித்த அரசியலைவிட நான் கண்ட கனவு அரசியல் மிகவும் யதார்த்தமானது. ஒரே ஒரு வார்த்தை மக்களுக்காக மக்களின் நலன் மட்டுமே சிந்தையில் வைத்து பாடு படவேண்டும் என்பது எனது கருத்து. விடியலில் கழனிக்குச்   செல்லும் கணவன் மாலையில் நிதானத்தில் வீட்டுக்கு வந்தால் அன்றுதான் அந்த இல்லத்தில் தீபாவளி.. தினமும் அதே நிலைமை நீடித்தால்...  இந்த இடத்தில் இருந்து ஆட்ச்சி பயணிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு 
 
" ஏர் இருந்தால் ஜனனம் இல்லையேல் மரணம்..."   இதுதான் நமது பாரம்பர்யம், ஜல்லிக்கட்டில் நாங்கள் முழக்கிய வீர முழக்கத்தில் இந்த வரிகள்தான் என்னை மிகவும் கவர்ந்தவை.. 

ஆயிரம் கோவில்களுக்குச் சென்றாலும் நம் குலதெய்வ வழிபாட்டை மிகச் சிறப்பாக செய்வதில்லையா? அதே போல்தான் ஆயிரம் விளையாட்டுக்கள் இருந்த போதிலும் ஜல்லிக்கட்டில் இருக்கின்றது தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளம்.   அந்த விளையாட்டை நிறுத்தியதில் ஏற்பட்ட நம் மக்களின் எழுச்சிதான் தை புரட்சியாக வெடித்தது, என் மனதில் இருந்த அரசியல் உத்வேகம் அப்போது விழித்திட சில அரசியல் பதிவுகளும் என்னிடம் இருந்து வெளிப்பட்டன. 

ஓட்டு போடுவது மட்டும் நமது கடமை இல்லைங்க. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு அவர்களின் கடமைகளை சரியாகச் செய்யாவிடில் தட்டிக் கேட்கவேண்டும் என்பது எனது கருத்து, அவ்வாறு செய்ய தவறியதால் வந்த விபரீதம்தான் இன்று நம்மக்கள் படும் வேதனைகளும், கஷ்டங்களும், துயரங்களும், துன்பங்களும் எண்ணிலடங்காதது  என்பதை யாரால் மறுக்க இயலும்?    . . 

தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தண்ணீர் பஞ்சம், குடிக்க மட்டும் இல்லீங்க எதுக்குமே தண்ணீர் இல்லை, அண்டை மாநிலத்திலும் தண்ணீர் பிச்சை எடுக்கும் நிலை இன்று நமக்கு எழுந்துள்ளது. ஆனால் அவர்களோ சிறுபிள்ளைத்தனமாக தண்ணீர் தர மறுக்கிறார்கள்..உச்சநீதிமன்றம் எத்தனை தீர்ப்பு வழங்கினாலும் ஏமாந்து நிற்பவர்கள் நம் மக்களே!! 

மக்கள் தொகையை மனதில் வைத்து வீணாகிப் போகும் மழை நீரை அதிகமாக தேக்கி வைக்க முயற்சி, நதி நீர் இணைப்பு இவைகள் மேற்கொள்ளப் படவில்லை. என்பது எனது கருத்து. ஆட்சியாளர்கள் இதை எப்படி மறந்தார்கள்? மக்களுக்கு மிக அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற தவறியதை எப்படி நம்மால் மட்டும் ஏற்றுக்     கொள்ளமுடியும் ?? அடுத்து நமது நலனில் பங்கேற்கப் போவது யார் மக்களே?? 

நம் மக்கள் என்று தம் மனம்விட்டு சிரித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்? 

விடியலை காணமுடியுமா அல்லது ஒவ்வொரு விடியலிலும் புரட்சி, புரட்சி இது மட்டும்தான் அன்றாட வாழ்க்கையாகிப் போகுமா? இது போல் தினம் தினம் ஓராயிரம் முறை எனக்கு நானே யோசித்து  எனக்குள்ளேயே பல முறை கோபப்பட்டுக் கொள்வேன். ஒரு சாமானியவளாக இதைத்தான் செய்ய முடியும் என்பது எனது ஆழ் மனதின் ஆதங்கமே !!  
இதுபோல் பலவித எண்ணக் கலவைகள் மனதை தாக்கியதால் ஏற்பட்ட விளைவு வருத்தம்தான் மிஞ்சியது. அதன் தாக்கம்தான், என்னோட மனதில் கணன்று கொண்டிருந்த அரசியல் ஈர்ப்பு, ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் போராட்டம்தான் என்னை அரசியல் பேச பிள்ளையார் சுழி போட்டது எனலாம். 

வன்மம் இல்லாத, நன்மை பயக்கும் திட்டங்களை மட்டுமே செல்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களின் தவறுகள் நிரூபிக்கப் பட்டால் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும். தன்னலம்  இல்லாத, அரசியல் ஞானியாக நல்ல மனம் படைத்த ஒருவரே ஆட்சியாளர்களுக்கு அறிவுரை செய்ய வேண்டும். அந்த அறிவுரையை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது அவசியம் ஆகாது. அதையும் பல மட்டத்திலும் விவாத்தித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாக, நன்மை பயப்பதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளலாம். ஆட்சியாளர்களுக்கு தன்னலம் அறவே இருக்கக் கூடாது. இன்னமும் ஒரு கோடி ஆசைகள் மனதில் இருக்கின்றது...

இது போல ஆட்சி அமைந்தால் கனவில் கண்ட நன்மைகள் அனைத்தும்   நம்மக்களுக்கு போய் சேரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இது என்னோட கருத்து, இதே போல ஒத்தக்கருத்துள்ள எத்தனை பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும்.   

வாய்ப்பு கிடைத்தால் பெண்களாலும் நல்ல முறையில் அரசியலில் பரிமளிக்க முடியும் என்று என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்
******************

5. பெண்ணிடம் எடுக்கும் பேட்டியில் பெண்ணியம் பற்றி கேட்கலைனா இணைய சமூகம் நம்மை தள்ளி வச்சிரும். சமகாலத்தில் பெண்ணியம் என்பது பெண் சுதந்திரம் என்பதை தாண்டி இவ்ளோ நாள் நாங்க உங்களுக்கு அடிமையா இருந்தோம்ல, இனி நீங்க இருங்கன்னு சிலரால் பெண்ணியம் பரப்பப்படுது. இதற்கு உங்கள் கருத்தும், பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வையும்.

பெண்ணியம்: என்பதை தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற சொற்களின் வரிசையில் சேர்ந்து விட்டதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. அதிக அச்சத்தை ஏற்படுத்தும் சொற்களாகவும் சமீபத்திய வாதங்கள் நிரூபிக்கின்றன. பெண்ணியம் தொடர்பான கேள்விக்கு தேவையான விளக்கமின்மைதான் இந்த அச்சத்திற்கு காரணம் என்பது எனது தாழ்மையான கருத்து.  

பெண்ணியமென்றால் என்ன?  சமூக, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் ஆண்களுக்குச் சமமான உரிமைகளைப் பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோட்பாடு'  என்பதைக் கூறலாம். அதாவது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டுமென்பதே, அதன் அர்த்தமாகும். பெண்ணியம் என்ற சொல்லில், அச்சப்படவோ அல்லது வெறுக்கவோ வைக்கும் எந்த அர்த்தமும் கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை இருக்க வேண்டும் அவ்வளவுதாங்க...ஆனாலும் எங்கே 50 / 50 ஆக உள்ளது? விடை இல்லா கேள்விக்குறியே அனைத்து மட்டத்திலும். 

பெண் என்பவள் திருமணத்திற்கு முன் பெற்றோர்களை சார்ந்திருக்கின்றாள், திருமணம் ஆனவுடன் கணவனை சார்த்திருக்கின்றாள். தனிமையில் வாழும் பெண்களை இன்னமும் இந்த சமுதாயம் சரியான கோணத்தில் பார்ப்பதில்லை. இதுதான் உண்மை. இதனால் சார்ந்திருக்க வேண்டியது என்பது கட்டாயமாகிப் போனது.  அதனால் 
சொந்தங்களிடம் தஞ்சம் தொடர் அவமானங்கள் எல்லாம் சாத்தியமே!  

அந்த காலத்தில் ஒரு பெண் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தாள். அவளுக்கு கணவனின் அரவணைப்பும், உறவுகளின் அரவணைப்பும், சேர்ந்தே கிடைத்தது. விட்டுக் கொடுத்து வாழ்ந்து, கணவனுக்கு எல்லாமாக இருந்து கணவனின் முன்னேற்றத்திற்கும் அவளின் பங்களிப்பு இருக்கும். "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாள்" என்று கூறுவார்கள். இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனைவி இருக்கிறாள். அதில் எந்தவித மாற்றுக கருத்தும் இல்லை.. 

இன்னமும் சில நாட்டில் ஒரே விதமான வேலையாக இருந்தாலும் அதில் ஆணிற்கும் / பெண்ணிற்குமான சம்பளம் மாறுபட்டிருக்கும்.. இதற்கும் வரலாறு இருக்கின்றது. பெண்கள். சில இடங்களில் மட்டம் தட்டித்தான் வைக்கப் படுகிறார்கள்.. இதை யாராலும் மறுக்கவோ / மறக்கவோ முடியாது.

பல குடும்பங்களில் நான் நேரில் பார்த்திருக்கின்றேன், ஏதாவது காரணங்கள் கூறி அவளின் எண்ணங்களும், விருப்பங்களும் ஒடுக்கப்படுகின்றன. இதை நான் விளம்பரத்திற்காக எழுதவில்லை. சாட்சியாகி,  வருந்திய நிகழ்வே. அப்பட்டமாக தெரிகிறது அந்த பெண் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று, ஆனாலும் அந்த பெண்ணாலும் சரி நம்மாலும் சரி எதுவும் செய்ய இயலவில்லை. என்பதுதான் நிதர்சனம்  இது போல் ஏற்படும் அசாதாரண நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனம் தடுமாறுகிறது. நிதர்சனத்தில் சற்றே விலகினால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறாள். அதன் விளைவு...     

1. ஆண்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டு பெண்ணீயவாதியாக மாறி விடுகிறார்கள்.

2. சில பெண்கள் ஆணாதிக்கத்தில் இருந்து சற்றே விலகி தன்னிச்சையாக அதாவது மனம் போன வழியில் வாழ்வதைத்தான் பெண்ணீயம் என்கிறார்கள்.

சிலர் ஆண்களின் மேல் உள்ள வெறுப்பின் காரணத்திற்க்காக பெண்ணியம் பேசினால் அது தவறான கருத்தாகும். அதற்காக பெண்ணீய இயக்கத்தை முற்றிலும் தவறு என்றும் கூறிவிட முடியாது.
அவர்கள் எதிர்பார்க்கும் நியாமான கோரிக்கைகளை ( 50 / 50 ) நிறைவேற்றினால் இந்த இயக்கம் தன்னிறைவை பெற்றிடும். 

******
6. ப்ளாக் காலத்தில் ஒரு விசயத்தை ஆழ்ந்த புரிதலோடு எழுதும் பழக்கம் இருந்தது. முகநூலில் லைக் மோகம் எதையாவது எழுதினா போதும்னு ஆகிருச்சு. எந்த மாற்றத்தால் நீங்க ரொம்ப மிஸ் பண்ணும் பதிவர்கள் யார் யார்?

கண்டிப்பாக அருண், 

மற்ற நண்பர்களின் பதிவை அடிக்கடி படிக்க முடிவதில்லை என்றாலும் நேரம் கிட்டிய போதெல்லாம் பதிவை படிக்கும் பாக்கியம் இருக்கின்றது

பழமைபேசி அண்ணா -->அவரின் எழுத்து பழமையாக இருந்தாலும் ரசிக்கும்படியாக  இருக்கும். இப்போது பொட்டி தட்டி சித்தராக வலம் வருகிறார்.  

நான் மிஸ் பண்ணும் எனது ப்ளாக் நண்பர்கள் 
 
ஜீவன் (தமிழ் அமுதன்), ஈரோடு கதிர், ச்சின்னபையன் அண்ணா, கார்க்கி, கேபிள் ஷங்கர், நசரேயன், குடுகுடுப்பை, உருப்புடாத அணிமா, ஸ்ரீனிவாசன் ராகவன் அண்ணா, அமு.செய்யது, 

அமிர்தவர்ஷினி அம்மா, கபீஷ், சந்தனமுல்லை, விதூஷ், விக்னேஸ்வரிகண்ணா, வித்யா, தமிழரசி, ரசனைக்காரி ராஜேஸ்வரி, இயற்கை ராஜி 


7. இணையத்தில் பெண்கள் தங்களையும், தங்கள் அடையாளங்களையும் முழுமையாக வெளிபடுத்திக்கொள்ளும் சுதந்திரம் அடைந்துவிட்டோமா? அதை பற்றிய உங்கள் கருத்து?


கண்டிப்பாக இல்லை!!!

இணையத்தில் பெண்கள் தங்களின் அடையாளத்தைக் காட்டிக் கொளவதில் தற்போதைய நிலைப்பாட்டை பார்க்கும் போது ஆபத்து கண்டிப்பாக இருக்கின்றது. அதனால் நட்புகளை தெரிவு செய்யும் போது கவனம் தேவை. நம்மை நன்றாக தெரிந்தவர்களிடம் நம் அடையாளம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எல்லாவற்றிக்கும் மேலாக தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரம் இருக்கின்றது என்றால் அதில் ஆபத்தும் கூடவே வருகின்றது. அதனால் பெண்கள் தனது அறிவு சார்ந்து,  கொள்கைகள் பல கொண்டு, தனிமனிதக் கட்டுப்பாட்டுடன் தம்மை வெளிப்படுத்துவதில் முழு சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் தேடிக் கொள்ளமுடியும் என்பது எனது ஆணித்தரமான கருத்து..
    
 
இறுதியாக வால்பயன் என்ற அருணுக்கு 
=====================================

நெடுவாசலும், அரசியலும்!

ஜல்லிகட்டுக்கான தடை நீதிமன்ற தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பை மீறி தன்னிச்சையாக செயல்படுதல் சட்டவிரோதம். காளையை காட்சிபடுத்தக்கூடாது என்பது நாடாளுமன்ற சட்ட வரைவு. அப்படி காட்சி படுத்தினால் அதற்கு அபராதமும், சிறை தண்டனையும் கிடைக்கும். மக்கள் போராட்டத்தின் போது தமிழக பாஜக மத்தியில் அழுத்தம் கொடுத்தது. தமிழகத்தில் காலூன்ற இது ஒரு சந்தர்ப்பம் என்று. அன்றைய பிஜேபி ஆதரவு முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று ஒரே நாளில் சட்ட திருத்தம் கொண்டு வந்து அதை ஜனாபதி ஒப்புதல் பெற்று ஜல்லிகட்டு நடைபெற்றது. ஆனால் இன்னும் நீதிமன்ற தீர்ப்பு அப்படியே தான் இருக்கு. நாடாளுமன்றம் நிறைவேற்றிய காளையை காட்சி படுத்தக்கூடாது என்ற சட்டவரைவும் அப்படியே தான் இருக்கு. ஆனாலும் ஜல்லிகட்டு நடுத்தவன் மூலம் மக்கள் அரசு என காட்டிக்கொள்ள நினைத்த மத்திய, மாநிலம். இறுதி நாளில் மொத்தமாக மைனஸ் மார்க் வாங்கி புறக்கணிக்கப்பட்டது.

சட்டவரைவை மாற்றும் போது, நீதிமன்ற தீர்ப்பை புறம் தள்ளும் போது. சாதாரன ஒப்பத்தம் நெடுவாசல் பிரச்சனை. அதை ரத்து செய்ய அரசுக்கு எவ்வளவு நேரம் ஆகும். அங்கே தான் ஒளிந்துள்ளது இந்த டீலிங் அரசியல். அதற்கு பின்னால் நடராஜனா அல்லது சசிகலாவான்னு எனக்கு தெரியாது. ஆனா டீலிங் இருக்கு.  நெடுவாசல் திட்டம் இனி நிறைவேற்றப்படமாட்டாது. ஜல்லிகட்டு போலயே நெடுவாசலும் சர்வதேச பிரச்சனையா மாறிருச்சு. நாளை ஃப்ரான்சில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழர்கள் அடையாள போராட்டம் நடத்துறாங்க. ஆனால் அரசு மக்களை போராட்டத்தை கைவிடுங்கள் சொல்வது ஜல்லிகட்டு போலயே இதுவும் மக்கள் வெற்றியா போயிறக்கூடாது. அந்த கிரிடிட் அரசுக்கு வரனும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னான தொய்வை மீட்டெடுத்து இது மக்கள் அரசு என முத்திரை பெற வேண்டூம் என விரும்புகிறது.  ஒரு பேப்பரை கிழிச்சு போட்டு எல்லாம் முடிச்சு போச்சு போய் வேலை பாருங்கன்னு சொல்லாமல் இழுக்க வேற காரணம் எதாவது உங்களிடம் இருக்கா?



சுமந்த் சி ராமன் பேசுவது மறைமுகமா பாஜகவிற்கு ஆதரவா இருக்கு என்ற கருத்தையும் பரவலா பார்க்கிறேன். உண்மையில் பாஜகவிற்கு தலைவலியே சுமந்த் தான். சுமந்த் வாதம் இங்கே இதை தான் எடுக்கப்போறோம்னு பொது பெயர் இட்டு சொல்லாமல் தனியாக உறுதி அளிக்கமுடியுமா? அப்படி செய்வதன் மூலம் நெடுவாசல் மக்களை அனுமதி அளிக்க கோருவதாக பரவலாக நினைக்கின்றனர். ஆனால் சுமந்த் கேட்பது போல் அரசு கெஜட்டில் அப்படி வெளியீடு வந்தால் அது இந்தியா முழுவதும் பொருந்தும். வேறு எங்கேயும் கூட இதை எடுக்குறேன்னு சொல்லி அதை எடுக்கமுடியாது.

அடுத்த பாயின்ட். நெடுவாசல் மட்டும் மக்களா? நாகபட்டிணத்தில் இதே திட்டம் நடக்குதே அதை பற்றி அரசின் நிலைப்பாடு என்ன? அரசு சொல்வது மாசு கட்டுபாட்டு வாரியம் சுற்று சூழலில் எந்த பாதிப்பும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்துள்ளது. மாசுகட்டுபாட்டு வாரிய சான்றிதழ் பத்தாது. இந்தியா முழுக்க இம்மாதிரி திட்டம் நிறைவேறும் இடத்தில் நிலத்தடி நீர் நிலை. உயிர்களில்(மனிதன் மட்டுமல்ல) உள்ள மாற்றம், நோய் கூறு என அனைத்தையும் ஆராய வேண்டும் என்பது. இதனால் பாதிப்பென்றால் அனைத்து திட்டங்களையும் கைவிட்டு வேறு வழியின்றி அரசு மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு வர வேண்டும். பாதிப்பு இல்லையென்றால் மக்கள் அச்சம் போக்கி நிம்மதியாக வாழவைக்க முடியும். ஆனால் அரசு அதற்கு பயப்படுகிறது.

புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி, நரிமன் பகுதியில் புற்றுநோய் பரவுகிறது என்ற குற்றசாட்டை வதந்தி பரப்புவதாக சொல்றார். அது வதந்தி தான் என்பதை நிரூபிப்பதும் அரசு கடமை தானே. அங்கே சுகாதார ரீதியாக எந்த அளவு பாதிப்பு என்று இதுவரை இந்தியாவில் எந்த இடத்திலும் பரிசோதனை நடத்தப்படவில்லை..

மக்களை அழித்துவிட்டு என்ன வளர்ச்சி?
எந்த அரசும் கார்ப்ரேட்கள் தான்டி மக்கள் நலன் சிந்திக்க மறுக்குதே

சமத்துவம் ஏற்பட சாதி ஒழியனும்!

பொதுவா ஒரு கருத்தில் உள்ள நல்ல விசயங்களை முதலில் பார்க்கக்கூடிய நேர்மறையான ஆள் நான். அவ்ளோ ஏன் கடவுள் விசயத்தில்(மதம் இல்லை) கூட சில நல்ல விசயங்களை என்னால் காட்ட முடியும். ஆனால் இந்த சாதியில் மட்டும் எவ்ளோ தேடினாலும் நல்ல விசயம் என்பது துளிக்கூட இல்லை.

என் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என்றால் அது அவரது உழைப்பு, அவரது பங்களிப்பு. அதை ஒரு அடையாளமா நான் பயன்படுத்துவதே அவரை கேவலபடுத்துவது என்பேன். இந்த சாதியவாதிகளும் அப்படி தான் பண்றாங்க. என்னடா பண்ணுச்சு உனக்கு சாதி என்றால் நாடார் காமராஜரை காட்றான். பிள்ளை வ.உசியை காட்றான். தேவன் முத்துராமலிங்கத்தை காட்றான். அவை எல்லாமே அவர்கள் நாட்டிற்கு செய்த சேவையை கேவலபடுத்தும் செயல் தான்.

நேற்றைய விவாதத்தில் ஒருவர் //இங்கே சமூகம்இயங்குவது
சாதியால் மட்டுமே...சாதிதவிர்த்தோ மறுத்தோ இங்கு நாம் வாழ்கிறோம் எனில் அது உண்மையில்லை//  
என்ற கருத்தை முன்வைக்கிறார். இவர் சமூகம் என்று எதை குறிப்பிடுறார் என எனக்கு புரியவில்லை. சமூகம் என்பது மக்கள். இந்த மக்கள் அனைவரும் இந்திய அரசியல் சட்டத்திற்கு கட்டுபட்டவர்கள். அந்த சட்டம் ஒரு குற்றத்திற்கு இன்ன சாதிக்கு ஒரு தண்டனை. அந்த சாதிக்கு ஒரு தண்டனை என்று பிரித்து கொடுப்பதில்லை.

ஆக சட்டம் சாதி பார்ப்பதில்லை. அனைவரையும் சமமாக மதிக்கின்றது. ஆனால் மனுதர்மம் என்ற பார்பன ஆகமவிதி சாதியை ஆதரிக்கிறது. குற்றங்களில் பாப்பானுக்கு குறைந்த தண்டனையும், பிறருக்கு அதிக தண்டனையும் வழங்குகின்றது. அதை விட மோசம் பாப்பானை தவிர பிற சாதியினரை தேவிடியாபசங்க எங்கிறது. நீங்கள் சாதியை ஏற்றுக்கொள்வீர்கலேயானல், சாதியை தோற்றுவித்த மனுதர்மத்தை ஏற்றுகொள்கிறீர்கள் என்று அர்த்தம். மனுதர்மத்தை ஏற்றுக்கொண்டால் ஆமா நான் தேவிடியாபையன்னு ஒத்துகிட்டதா அர்த்தம். உங்க சாதி அபிமானம் கடைசியில் உங்கம்மாவை இழுத்து தெருவில் விடுது.



//சாதிமத எதிர்ப்பில் உங்க நம்பிக்கை..நேர்மை ஏற்கிறேன்..99%உங்க நம்பிக்கைக்கு எதிராகத்தான் உலகம் இருக்கு என்பது ஏற்பீர? என்ற. கருத்தையும் முன்வைக்கிறார். இவர் உலகம் என்பது எவ்ளோ பெரிதாக இருக்கும் என்பதை என்னால் இப்பொழுது உணர முடிகிறது. பார்பன மனுதர்மத்தை விட சாதியை தூக்கிபிடிக்கும் எந்த ஆதாரத்தையும் உங்களால் காட்ட முடியாது. தமிழ் சங்க இலக்கியத்தில் கூட சாதிய வேற்றுமை சட்டம் இருக்காது. ஆக இவரது உலகம் என்பது சாதிய சங்கங்களும் அதன் ஆதரவாளர்களும் என்பது தெளிவாக தெரிகிறது

அதற்கு //இனக்குழு அ தனித்தகுடும்பஅடையாளபெயர் மத்தியகிழக்கு நாடுகளில்
உண்டு..
குவைத் வாழ் தமிழர்களில் 

சங்கள்கூட சாதிரீதியாக செயல்படுது..நான் குண்டுசட்டியில் இருந்தாலும்
சாதியை நான் திமிராக பாக்கல..குலமரபாக ஏற்கிறேன்//  
ஆக குண்டுசட்டியில் தான் இருக்கேன்னு ஒத்துகிறார்.  மேலை நாடுகளில் குடும்பபெயர்கள் சாதியமாக பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டுமே மேனன், ராய், சர்மா போன்ற சாக்கடை ஓடுது. குவைத் வாழ் தமிழர்களின் சாதி சங்கங்களில் பெருமை பட என்ன இருக்குன்னு தெரியல. இன்னும் கங்கூஸ்ல பேளாம மரத்துக்கு பின்னால் ஒளிந்து போக பழகின தமிழன் குவைத் போயும் அதையே தான் செய்யுறான். அதுக்கு நியாயமா நாம வெட்கப்படனும். மனிதர்களில் வேற்றுமை பார்க்கப்பார்வது மாபெரும் கேவலம்.



இது பேசியவரை நான் அவர் பர்சனல் பத்தி எதுவும் கேட்கல. அவரா கடைசியா #ராஜாபடையாச்சின்னு போட்டார். அப்ப ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் வந்தது. அதற்காக தான் இந்த பதிவே.

சில வருடங்களுக்கு முன்னால் தம்பி ஒருவன் காதல் விசயத்திற்காக அவன் சார்பா பேச போயிருந்தேன். அப்ப நடந்த விவாதம் ஒன்னு
நாங்க யார் தெரியுமா? படையாச்சி. படையை ஆண்டவங்க. எங்களுக்கு கீழ தான் நாட்டில் இருக்குற மத்த ஆட்கள் எல்லாம். அவுங்க என்ன தொழில் பண்ணி எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் எங்களுக்கு சமமா ஆகமுடியாது.

அப்ப உங்களுக்கு கீழ தான் மத்த சாதின்னு சொல்றிங்க. அவுங்களை சமமா ஏத்துக்க முடியாது. அவுங்க மேல தான் நீங்க. அப்படி தானே.

ஆமா.

சரி, நீங்க படை வீரர்கள். உங்களுக்கு மேல தளபதின்னு ஒருத்தர் உங்க வலது காதில் செஞ்சுகிட்டு இருக்கார். மந்திரின்னு ஒருத்தர்  இடதுகாதில் செஞ்சுகிட்டு இருக்கார். பத்தாதுக்கு அரசர்ன்னு ஒருத்தர் வாயில் சரி வேணாம் விடுங்க.
உங்களுக்கு கீழ நாலு பேர் இருப்பதா பெருமை படுற நீங்க உங்க தோள்ல ஏறி ரெண்டு காதுல செய்றதை வலிக்கலையே மாதிரியே ஆக்ட் கொடுத்துகிட்டு இருக்கிங்க. படை வீரரா இருந்ததும் ஒரு தொழில் தான். அந்த வேலைக்கு சம்பளம் வாங்குனிங்க. அந்த வகையில் ஒரு துப்புரவு தொழிலாளியும் நீங்களும் ஒன்னு தான். பெருமை புன்னகைக்கு ஒன்னும் வேலையில்லன்னு சொன்னேன்.

அதன் பிறகு அவர் படையாச்சி, பருப்பாச்சின்னு எதும் பேசல. தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு பையன் ஒரு பொண்ணு. ஸ்ரீபெரும்புதூரில் சூப்பரா வாழுறான்.



முன்னாடியே சமமா நீதி கிடைக்காம பெரும்பதவிகள் பாப்பானுங்களெ போச்சு. அது மாறி அனைருக்கும் சம பிரதிநிதிதுவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எனது இடஒதுக்கீடு ஆதரவு. அது எப்போதும் சாதிய ஆதரவாகாது. உங்களுக்கு பிரதிநிதிதுவம் கிடைக்க உங்கள் சாதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதை வைத்து பெருமை பீத்தியோ, அரசியல் செய்யவோ வந்திங்கன்னா நான் இப்படி தான் டார்டாரா கிழிப்பேன்

!

Blog Widget by LinkWithin