தேர்தல் பயத்தில் மோடி....

சர்வதேச அரசியல் களத்தில் இம்ரான்கானின் இந்த முன்னெடுப்பு பாகிஸ்தான் பற்றிய முன் முடிவுகளை மறுபரிசிலனை செய்ய வைத்துள்ளது. நான் பல முறை சொல்லி வந்துள்ளேன், உலக அரங்கில் தீவிரவாதத்தால் பாதிக்கப்படுவது இந்தியா மட்டுமல்ல, அதற்கு நிகராக பாகிஸ்தானும் தான் என்று

இந்தியாவில் ராணுவ தளபதி ஆட்சியை பிடிக்க வழியில்லை, பாகிஸ்தானில் நடந்தது. பாகிஸ்தானின் ஒரே பெண் பிரதமர் பெனாசீர் பூட்டோ(இஸ்லாமிய நாடுகளில் பெண் அரசியல் களத்தில் இருப்பதே பெரிய விசயம்) படுகொலை செய்யப்பட்டார்



ஷீயா பிரிவு இஸ்லாமியர்கள், சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களில் வெடிகுண்டு வீசுவார்கள், மதம் என்பதே மடதனம் என்பது என் நிலைப்பாடு, மதம் பிடித்து விட்டால் குழந்தை, பெண் என்று கூட பார்க்காமல் கொலை வெறியோடு நோக்கும் சைக்கோதனம் வந்துவிடும்

இஸ்லாம் மட்டுமல்ல, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின் நடந்த வன்முறையில் ஒரு கர்ப்பவதி பெண்ணில் கருவை உருவிய கொடுரம் இந்துதுவா தீவிரவாதிகளால் செய்யப்பட்டது. இந்த கொடூரங்களின் மூளையாக செயல்பட்டது அப்போதைய குஜராத் முதல்வர் மோடியும், இன்ன பிற ஆர்,எஸ்,எஸ் தலைவர்களும் தான், ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கை உடைத்துவிட்டார்கள்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 44 மத்திய பாதுகாப்பு ப்டை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது துயரமான சம்பவம். கவனிக்க, இதே போன்ற வன்முறையில் தன் பாட்டியை, தந்தையை இழந்த ராகுல் அதை வைத்து அரசியல் செய்யவில்லை, ஆனால் மோடியோ இறந்த வீரர்களின் புகைபடங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்



நான் ஏழைதாயின் மகன், டீகடையில் டீ ஆத்திய டக்ளஸ் நான் தான் போன்ற உருட்டுகள் எடுபடாமல் போனதால் இப்படி கீழ்தரமான அரசியல் செய்வதோடு மட்டுமல்லாமல் இன்றைய பிரச்சாரத்தில் பாகிஸ்தானை நம்பாதீர்கள், இந்திய ராணுவத்தை நம்புங்கள் நாம் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என பேசியுள்ளார்

நான் ஹிட்லர் காலத்தில் பிறக்கவில்லை, ஆனால் ஹிட்லரின் பிரச்சாரம் எப்படி இருந்திருக்கும் என்பதை மோடியின் பிரச்சாரத்தின் மூலம் என்னால் உணர முடிகிறது. மக்களிடம் அன்பை விதைக்காமல், சமத்துவத்தை விதைக்காமல், பிரிவினையை தூண்டி வன்முறை சம்பவத்தை ஏற்படுத்துவதே மோடியின் நோக்கமாக தெரிகிறது

,

தேர்தலில் வெற்றி பெற அமைதிபடை அம்மாவாசைக்கு நிகராக எல்லா வேலையும் மோடி செய்வார் என்பதில் எனக்கு துளியளவும் சந்தேகம் இல்லை, நான் மக்களை நம்புகிறேன், நிச்சயம் யோசிப்பார்கள், என் பக்கத்து வீட்டில் இருக்கும் இஸ்லாமிய சகோதரன் நிச்சயம் என்னை விரோத பார்வையில் பார்க்கவில்லை, அவனுக்கு ஆபத்தென்றால் அவனுக்கு பாதுகாப்பாக நான் நிற்பேன்

புழுகுமூட்டை பாஜக...

அமெரிக்க அரசு இந்தியா உட்பட ஆறு நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணைய் வாங்க தடை விதித்தது. கச்சா எண்ணைய் ஈரானில் மட்டும் இல்லையே, அங்கே வாங்க தடை இருந்தாலும் நம்மால் வேறு நாடுகளில் வாங்கலாமே என தோன்றும், இதில் பிரச்சனை என்னான்னா ஈரானில் மட்டும் நாம் நம் நாட்டு ரூபாயை கொடுத்து எண்ணைய் வாங்கலாம், மற்ற நாடுகளில் நாம் டாலர் கொடுத்து தான் வாங்கனும்,அதற்கு முதலில் நாம் டாலர் வாங்கனும், டாலர் அதிகம் வாங்கும் பொழுது அதற்கு டிமாண்ட் ஏற்படும், அப்படிதான் ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்திய பண மதிப்பு 74 ரூபாய் வரை சரிந்தது

அதனால் பெட்ரோல் விலை உட்பட பல விலை பொருட்களின் அடிப்படை விலை உயரும் என்பது நாம் அறிந்தது, பெட்ரோல் விலை நூறை தொடும் என அனைவரும் எதிர் நோக்கிக்கொண்டிருக்க, ராஜ”தரித்திரன்” மோடி அமெரிக்கா சென்றார். தெய்வமே உன் கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுகிறேன் தெய்வமே. தேர்தல் முடியுற வரைக்கும் கருணை காட்டு தெய்வமே கெஞ்சி கூத்தாடி ஆறு மாதம் ஈரான் தடையில் இருந்து விலக்கு வாங்கிட்டு வந்தார்.

அந்த கெடு வரும் தேர்தலோடு முடிந்து விடும், அதன் பிறகு மோடி மீண்டும் பிரதமராக வந்தாலும் தடைக்கு தடை வாங்க முடியாது, வெனிசுலா என்ற நாட்டை அழிக்க தன் ரெண்டு கண்ணையும் குத்திக்க தயாராய் இருக்கும் கூமுட்டை நாடு அமெரிக்கா. சுருக்கமா சொல்லனும்னா இந்தியாவுக்கு ஒரு மோடி மாதிரி அமெரிக்காவுக்கு ஒரு ட்ரம்பு



வேலை வாய்ப்பு எவ்ளோ உருவாக்குனிங்க, அந்த தகவலை கொடுங்கன்னு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது, அந்த துறையிடன் இருந்து அரசுக்கு தகவல் கேட்டு கடிதம் போனது. இது நடந்தது 2016 கடைசியில் 2018 கடைசியில் பதில் கடிதம் வந்தது, அந்த தகவல் அடங்கிய கோப்பை காணோம், தேடிகிட்டு இருக்கோம்னு ஆனாலும் மூத்திரகுடிக்கிகள் மோடி வேலை வாய்ப்பை உருவாக்கிட்டார்னு அடுத்தவன் பிள்ளைக்கு இனிசியல் போட பார்த்தாங்க, அதை கிழிச்சி தொங்க விட்டது ஞாபகம் இருக்கலாம்

சரியா தேர்தலுக்கு ரெண்டு மாசம் இருக்குறப்ப.
விவசாயிகளுக்கு நேரடி மானியம் வருசம் 6000னு ஒரு அறிக்கை, அரசு நிதிநிலை அறிக்கைபடி ஜிடிபி உயர்ந்துள்ளாதாக காட்டப்பட்டுள்ளதும் பிராடு தனம் தான், உள்நாட்டு மொத்த உற்பத்தியை நேரடியா போய் கண்காணிக்க முடியாது, வரி வருவாய் கொண்டே கணிக்கிடப்படும், மத்திய, மாநில ரெண்டு வரிகளை ஒன்றாக இணைத்து விட்டு வரிவருவாய் அதிகரித்துள்ளதுன்னு எப்படி வெட்கம் இல்லாமல் இந்த மூத்திரகுடிக்கிகள் சொல்றாங்கன்னு எனக்கு புரியவேயில்ல

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உலகின் பல பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோகளை இது தான் தற்போதைய குஜராத், இதே குஜராத் மாடல் இந்தியா முழுக்க உருவாக மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னானுங்க, இதில் ஒரு மாபெரும் காமெடி, கம்பியூட்டர் மதர் போர்டை குளோஸா போட்டு எடுத்து வானுர்ந்த கட்டிடம்னு சொன்னாங்க, அதையும் நம்பி ஓட்டு போட்டது மூத்திரகுடிக்கிகள். இப்ப தமிழகத்துக்கு மோடி உருவி விட்டார், அதனால் தமிழகம் வளந்துருச்சுன்னு போட்டோஷாப் தூக்கிட்டு திரியிறானுங்க

மோடி வாஷ் அவுட் ஆகிட்டா விதவிதா பொண்ணுங்க போட்டோகளை கக்கத்தில் வச்சுகிட்டு பஸ் ஸ்டேண்ட் பஸ் ஸ்டேண்டா திரிவானுங்க போல பாவம். இவனுங்களுக்கு எவ்ளோ எடுத்து சொன்னாலும் அறிவும் வர மாட்டிங்குது, இந்தியாவின் மானத்தை காப்பாற்ற மூத்திரகுடிக்கிகளை மொத்தமா மும்பை அழைச்சிட்டு போய் அறுத்து விட்ரனும், அப்ப தான் அடுத்த தலைமுறையாவது சிந்தித்து செயல்படும் அறிவுசார் சமூகமா இருக்கும்

ஐ லவ் ஜாக்கிசான்......

நண்பர் பாலகணேசன் எழுதிய ஜாக்கிசான் பதிவு எனக்கு மலரும் நினைவுகளை தூண்டி விட்ருச்சு

நான் பிறக்கும் போது பார்ன் வித் சில்வர் ஸ்பூன் டைப் தான், எங்கப்பாவுக்கு தற்காப்பு கலைகள் மேல் ஆர்வம் அதிகம். ப்ரூஸ்லீ படம் எப்ப வந்தாலும் அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து ஒரு ஆட்டோகாரரிடம் பணம் கொடுத்து என்னை வீட்டில் இருந்து கூட்டிட்டு வந்து அவருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து இண்டவெல்லில் முதல் ஒரு ஐஸ்கிரிம் திரும்ப படம் போட பெல் அடிச்சதும் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து படம் முடிந்ததும் வீட்டில் கொண்டு போய் விடனும்.



அப்ப ப்ரூஸ்லீ, ஜாக்கிசான் படங்களுக்கு மதுரை தங்கரீகல் தியேட்டர் ஃபேமஸ். சில வருடங்கள் கழித்து மாப்பிள்ளை விநாயகர் ஆங்கில பட இடத்தை பிடித்தது. ஜெட்லியோட த ரெபள் என்ற படம் அஙக் தான் பார்த்தேன், அதோட ஒரிஜினல் டைட்டில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் சைனா



தங்கரீகல் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் நிற்கும் போது செம காமெடியா இருக்கும், வண்ணதிரை, சினிகூத்தி பத்திரிக்கை தோத்துபோகும் அளவு சினிமா கிசு கிசு பேசிக்கொள்வார்கள். ப்ரூஸ்லீயோட அண்ணன் பையன் தான் ஜெட் லீ, ஜாக்கிசானோட வளர்ச்சி பிடிக்காம இறங்கி விட்ருக்காங்க, ப்ரூஸ்லீக்கு விசம் கொடுத்து கொன்னதே அவர் பொண்டாட்டி தான்னு



ஜாக்கிசான் காலத்தில் ஸ்டண்ட் அஸிஸ்டண்டுகளாக வந்தவர்களில் முக்கியமானவர்கள் samohung மற்றும் yuanbio இருவரும் ஜாக்கிசான் கூட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள் சிறந்த நண்பர்களும் கூட, இதில் சமோஹங் இயற்கையாவே பெருத்த உருவம், அந்த உருவம் வச்சிகிட்டு பல்லி அடிச்சு ஃபைட் பண்றது ஆச்சர்யம், இப்மேன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 58. ஃபைட் செமையா இருக்கும்



மார்சல் ஆர்ட்ஸ் சண்டை படங்களில் ஜாக்கி, சமோஹங், யிவான்ப்யோ மூன்று பேர் தவிர மற்ற அனைவருமே ரொம்ப சீரியஸா சண்டை போடுவாங்க, சண்டை காட்சிகளில் காமெடி புகுத்தியது முதலில் ஜாக்கி சான் தான், அவரு கூட ஆரம்பகால படங்கில் சீரியஸா தான் சண்டை போட்டுகிட்டு இருந்தார். த ட்ரங்கின் மங்கி படத்தில் எதேச்சையா சண்டையில் காமெடி அமைந்து அது ஹிட் ஆகி, அதே ஃபார்முலாவை கடை புடிக்க ஆரம்பித்தார்



ப்ராஜெட் ஏ படம் வரை ஆரம்பகால சீன கதைகள் இருக்கும், அதன் பிறகு சமகாலத்துக்கு சீன சண்டை படங்கள் வந்தது, அதில் அவர் நண்பர்களை இணைத்துக்கொண்டார். இந்த மூவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள், இந்த மூவருமே படங்களை இயக்கியும் உள்ளார்கள். முக்கியமா இந்த மூவர் படங்களில் முதலில் வில்லனிடம் அடி வாங்கிட்டு கடுமையான பயிற்சிக்கு பின் வில்லனை ஜெயிப்பது போல் இருக்கும்

ஆனால் ஜெட்லீயின் வருகைக்கு பின் கள எதார்த்தமே மாறிப்போனது. மார்சல் ஆர்ஸ் சண்டை படங்கள் என்றாலே மேஜிக் ஷோ மாதிரி ஆகிருச்சு, முக்கியமா த ஒன் என்ற ஜெட்லி படம் பார்த்திங்கன்னா தெரியும், ஹார்லி டேவின்சன் ரெண்டு பைக்கை தூக்கி ஒருத்தனை அடித்தான், நிஜத்தில் ரெண்டு சைக்கிளை தூக்கி அடிப்பதே கஷ்டம்.



ஆயிரம் குங்க்ஃபூ நடிகர்கள் வந்தாலும் ஆதிகால ஜாக்கிசான் படம் போட்டாலும் சரி, கடைசியா வந்த ப்ளீடிங்ஸ்டீல் படம் போட்டாலும் சரி, வேற சேனலே மாத்தாமல் பார்த்துட்டு இருப்பேன், ஆம்பளைகளையில் யாரையாவது லவ் பண்றியான்னு கேட்டா நான் ஜாக்கிசானை தான் சொல்வேன்

காதலர்தின ஸ்பெஷல் - 700வது பதிவு

உயிரற்ற ஒரு பொம்மையுடன் பேசிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும், கட்டிபிடித்து உறங்கும் பால்யத்தில் ஆரம்பித்தது நம் நிபந்தனையற்ற காதல்.
எது காதல்? அதன் எல்லை என்ன? அதன் வரையறை என்ன? போன்ற எந்த அளவுகோளுக்குளும் சிக்காமல் சாதி, மதம், மொழி, இனம் யாவும் கடந்து மனிதம் ஒன்றை மட்டும் பேசுவதே காதல். அது உணர்வுபூர்வமானதா அல்லது மூளையின் ரசாயன மாற்றமா? எதுவாக இருந்தால் என்ன? அந்த அனுபவம் கிடைக்குமா ஏங்கும் கோடி கணக்கான உயிர்களில் நானும் ஒருவன் தான்.

நாம் இல்லையென்று சொன்னாலும் உலகில் 99.99% காதல் தோற்றத்தின் ஈர்ப்பில் தான் ஆரம்பிக்கிறது. அந்த ஈர்ப்பு 4 மாதங்களுக்கு மேலும் தொடர்ந்து இருந்தால் அதை காதல் எனலாம். ஈர்ப்பில் தோன்றிய காதலாக இருந்தாலும் தக்கவைத்துக்கொள்ள நிச்சயம் ஆளுமை வேண்டும். அப்படி இல்லாத காதலில் ஒருபக்க ஆளுமை அதிகமாக இருக்கும். ஒருவர் ஆல்ஃபாவகவும். ஒருவர் ஃபீட்டாவகவும் இருப்பார்/. உலகில் முக்கால்வாசி தம்பதியர்கள் இப்படி தான். ஆனாலும் அவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.

காதலின் பாலபாடமே நிபந்தனையற்ற காதல் தான். ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும். தவறுகளோ, நிராகரிப்புகளோ பெரிதாக தோன்றாது. சிறிது நாட்கள் ஆனப்பின் ஆண்களுக்கு நீ எனக்கு மட்டுமே சொந்தம் என்ற பொஸிசிவ்நெஸ்ஸும், பெண்களுக்கு குறை கண்டுபிடிக்கும் குணமும் வந்து விடும். காதலிக்கும் பொழுது வரும் சண்டை ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள நமக்கு கிடைக்கும் வாய்ப்பு. மூணு முறைக்கு மேல் சண்டையின் போது உனக்கும் எனக்கும் ஒத்து வராது என சொல்வீர்களேயானல் நீங்கள் பிரிந்து விடுதலே நலம். இருவருக்கும் இருக்கும் காதலை விட உங்கள் ஈகோ தான் உங்களை ஆள்கிறது.

ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராபதி போன்ற சங்க காதலில் இருந்து சமீபத்தில் பார்த்த டைட்டானிக் காதலுக்கு வந்தாலும் ஒரு தனி மனிதன் தன் காதலே சிறந்தது என்பான். அந்த காதல் கல்யாணம் என்ற கமீட்மெண்டில் நுழையும் போது சாதல் ஆகிறது. அவனது சிறந்த காதல் தியாகமாக மாறிவிடும். விவாதத்தின் பொழுது நாம் காதலித்த பொழுதில் என்ற வார்த்தை வரும். அப்படியானால் அவர்கள் இப்பொழுது காதலிக்கவில்லை.

திருமண உறவுகள் உடைய காரணமே இதுதான். கல்யாணத்திற்கு பிறகு எங்க போயிடுவா கழுதை என்ற அலட்சியபோக்கு. நான் என்ன வேணும்னாலும் தெள்ளவாரிதனம் பண்ணுவேன். நீ அடங்கிதான் இருக்கனும் என்ற ஆணவ போக்கு பெண்களை வெளியே கொண்டு வருகிறது. காதலிக்கும் பொழுது நேரம் காலம் இல்லாமல் மணிக்கணக்காக பேசும் காதலன். கணவன் போஸ்டிங் வந்ததும் ஏன் சும்மா சும்மா போன் பண்ணி தொல்லை பண்ற எங்கிறான்.



உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் படிக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தார் அவரது தீஸிசை சப்மிட் பண்ணுவதற்கு முன்னரே அவருக்கு வாதம் வந்து கழுத்துக்கு கீழ் செயல் இழந்து போயிற்று. ஆயினும் அந்த பெண் அவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் முதல் குழந்தையின் ஆசியருடன் அவரது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மூன்றாவது குழந்தை அந்த ஆசிரியருக்கு பிறந்ததாகவே சந்தேகப்பட்டனர். ஆனாலும் ஸ்டீபன் எதுவும் கேட்கவில்லை. அவரை கவனிக்க வந்த பெண் இவர் ஆளுமையில் காதல் கொள்ளவும் தன் மனைவியை அழைத்து இனி உன்னுடன் பயணிக்க முடியாது என விவாகரத்து வழங்கிவிடுவார். ஒரு வருடம் கழித்து அவர் அந்த ஆசிரியரை திருமணம் செய்து கொள்வார்.

ஒரு காதல் பயணிக்க தோற்றமும், ஆளுமையும் மட்டுமே போதாது. புரிதலும், அர்பணிப்பும், தேவைகளும் பூர்த்தியும் தேவைபடும் என்பதை உணர்த்தியது அவரது வாழ்க்கை. அவர் சமாதானம் செய்திருக்கலாம். அல்லது அந்த ஆசிரியருடன் தொடர்பை துண்டிக்க செய்திருக்கலாம். ஆனால் ஸ்டீபன் அவர் மனைவி மேல் வைத்திருந்த காதலே அவருக்கு விவாகரத்து கொடுக்க வைத்தது. துணைக்கு தெரியாமல் செய்வது கள்ளகாதல் என்றால் உங்கள் பெற்றோருக்கு தெரியாமல் செய்வதும் கள்ளகாதல் தான். சமூகம் ஒழுக்கசீலர்கள் வேசம் போடும். ஆனால் அவர்களுக்கும் தெரியும். இது இயற்கையான உணர்வு. நமக்கும் ஏற்பட்டுள்ளது என்று.

தனி மனித உணர்வுகள் சார்ந்த புரிதல்களை ஏற்படுத்த உங்களுக்கு சில தோல்விகள் தேவையென்றால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுகொள்ளப்படாத தோல்வி உங்களுக்கு இயலாமையை ஏற்படுத்தும். காதலே போலிதனம் என்பீர்கள். உலகில் இருக்கும் பெண்களெல்லாம் சாபம் என்பீர்கள். நம்மை சுயபரிசோதனை செய்தும், மறுசீரமைக்க வாய்ப்பு கிடைத்தும். தம்மை நியாயபடுத்தி பிறர் மேல் எப்போதும் குறை சொல்லிகொண்டிருக்கும் மனிதம் அடுத்த படிக்கு நகரவே நகராது. மாற்றம் நம்மில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். என்னுடம் பயணித்த பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தேன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.

பெண்ணுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க வேண்டியதில்லை. அது அவர்களிடமே உள்ளது. அதை நீங்கள் பறிக்காமல் இருந்தாலே போதும். ஆனாலும் பெண்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்பதிலேயே வாழ்வை செலவிடுகின்றனர். நீங்கள் ஆண் என்பதை உங்கள் தோற்றம் மட்டுமே தீர்மானிக்கமுடியாது. ஒரு பெண் உங்களிடம் பாதுகாப்பை உணராமல் உங்கள் ஆண்மை முழுமையடையாது. பெண்ணின் சுதந்திரபோக்கு சில வலிகளை தருவது போல் இருக்கலாம். ஆனால் எனக்கு நேர்ந்த ப்ரேக் அப் என் திமிரையும் ஆணவத்தையும் சுக்கல் சுக்கலாக உடைத்து எரிந்தது.

காதல் அழகான உணர்வு. அங்கிகாரம், நம்பிக்கை. நீ பேசினாலே போதும் எதையும் செய்வேன் என்று யானை பலம் தரும். நிபந்தனையற்ற காதலை செலுத்துங்கள். நீங்கள் என்ன பெற்றாலும் அன்பொன்றை மட்டுமே பதிலாக திருப்பி கொடுங்கள். கற்காலம், இரும்பு யுகம் தாண்டி நாம் காதல் காலத்தில் வாழ்துக்கொண்டிருக்கிறோம். அன்பு ஒன்றே வன்முறைக்கு மாற்று. இந்த உலகம் அன்பினால் இயங்கப்படவேண்டும். ஆதலினால் காதல் செய்வீர்

இனிய அவளும் நானும் தினவாழ்த்துகள்

ஒரு கதை சொல்லட்டா சார்.......

மெமரீஸில் ஷேர் பண்ணப்பட்ட ஒரு போட்டோவுக்கு இயேசுவின் மேல் அன்பு கொண்டு, ட்ராபிக்ல மாட்டுகிட்டார் இல்லைனா இந்நேரம் வந்துருப்பார் என வாஞ்சையுடன் போஸ்டர் ஒட்டும் நல்லுள்ளங்கள். அதெப்படி படைப்பாளி இல்லாமல் படைப்பு உருவாகும் என்ற கேள்வியை வைக்கும் அறிவாளிகள், உலகை படைத்தது கடவுள்னா கடவுளை படைத்தது என்ற கேள்விக்கு அப்பாலே போ சாத்தானே என கொஞ்சும் பாசக்காரர்கள் முட்டு கொடுக்குறாங்க சாலையோரம் இருக்கும் குப்பை தொட்டியை கிளரினால் எப்படி விதவிதமான குப்பைகள் வருமோ அத்தனை பிரிவுகள் இருக்கும் மதத்தில் கிறிஸ்தவமும் ஒன்று, அத்தனை பிரிவுகளில் ஒன்றில் கூட பழைய ஏற்பாட்டை புறக்கணிக்கிறோம் என்று ஒருவரும் சொன்னதில்லை. வாகனத்தில்/ சர்ச் சுவற்றில் கூட பெரும்பாலும் பழைய ஏற்பாடு வசனங்களே எழுதப்பட்டுள்ளன. ((நான் கூட இருந்து செய்யும் காரியம் பயங்கரமானதாக இருக்கும்)- (அதுக்கு தான் இப்ப உன்னை வச்சு செய்றேன்)) ஆனா இவர்கள் பழைய ஏற்பாட்டை 90% மக்கள் புறக்கணிப்பதா சொல்றாங்க இயேசு பிறப்பால் ஒரு யூதர், அவரது காலத்தில் சிலை வழிபாடும், கடவுளுக்கு பலி கொடுக்கும் பழக்கமும் இருந்தது. நிச்சயமாக கடவுள் அதை விரும்ப மாட்டார் என்றார். இயேசு தனிமையில் தியானத்தில் இருந்த பொழுது தான் சாத்தனை பார்த்ததாக கூறீயுள்ளார், மனசிதைவு நோயாளிகள் பலரும் அப்படி சொல்லியுள்ளார்கள். கண்ணு கொடுத்தது, உயிர் கொடுத்தது அவரது சீடர்களின் செய்திகள், நித்தியானந்தா சீடர்களுக்கு/ ஜக்கி சீடர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை விட அதை விட அறிவியலில் பின் தங்கியவர்கள் என்பதை மறுக்க முடியாது, இயேசு உயிர்தொழுந்ததாக சொல்லப்படுவது கூட பொதுமக்கள் யாரும் பார்த்ததா குறிப்புகள் இல்லை.

ஆக இயேசு காலத்தில் பின் தங்கி இருந்த சமூகம் இயேசுவின் சீர்திருத்தற்க்கு பின் எவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் அந்த முட்டாபதர்கள் செய்தது என்ன? பூமியை சூரியன் சுற்றவில்லை. பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்றால் வீட்டு சிறை, பூமி தட்டை அல்ல, உருண்டை என்றால் உயிரோடு எரிப்பு. இதுல காமெடி என்னான்னு இன்னும் கூட அறிவியலை ஏற்றுக்கொள்ளாத மடமதவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்ப நான் ஒரு கதை சொல்றேன், உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும், ஒரு ஊரில் ஒரு சர்ச் ஒன்று இருந்தது, அந்த சர்ச்சில் எதிரில் அரசு அனுமதியுடன் ஒருவர் பார் ஓப்பன் பண்றார், உடனே சர்ச் பாதிரியார் என்ன பண்றார், ஊர்ல இருக்கும் எல்லா மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறார், எல்லாரும் வாங்க, நாம கூட்டு பிரார்த்தனை பண்ணி, அந்த பாரை அங்கியிருந்து அகற்றுவோம்னு, பிரார்த்தனை முடிந்து அன்று இரவு ஒரு மீன்னல் தாங்கி பார் சேதமடைந்தது. பார் ஓனர் கோர்ட்டில் வழக்கு போடுறார், சர்ச் பாதிரியாரி கூட்டு பிரார்த்தனையால் என் பார் சேதமடைந்தது, எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வழக்கு விசாரணையில் பாதிரியார் சொன்னார், பிரார்த்தனையினால் கேட்டது நடக்கும்னா நாட்ல எவ்ளோ மாற்றங்கள் வந்துருக்கும், பிரார்த்தனையினால் அம்மாதிரி நடந்ததா குறிப்புகள் இல்லை, இது தற்செயலாக நடந்தது, எங்க பிரார்த்தனைக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு. சுருக்கமா சொல்லனும்னா. கன்னிமேரியை நம்புவானுங்க, கலவி கொள்ளாமல் கர்ப்பம் ஆனேன்னு அவங்க பொண்ணு சொன்னா நம்ப மாட்டாங்க, டிசைன்ல இருக்காம்

!

Blog Widget by LinkWithin