நமது மதிப்பிற்குறிய நண்பர் பட்டாபட்டி
நேற்று(12.05.2013) சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார்.
வாழும் வரை அடுக்குமுறைக்கு எதிராகவும்
தீவிர பார்பனீய எதிர்பாளராகவும்
மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார்
அவரது மறைவினால் இன்னும் அதிர்ச்சியில் இருந்துஇணைய நண்பர்கள் மீளவில்லை.
அவரது உடல் நாளை மதியம் கோவை வருகிறது.
அவரது இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்திற்கு இயற்கை அளிக்கட்டும்!
டுவிட்டர் தொகுப்புகள்!
டுவிட்டரும், ஃபேஸ்புக்கும் பெஞ்சு இல்லாத டீக்கடை. இங்கே எல்லாம் பேசப்படுகிறது!
54 ல் 18 மூன்று தரம் போகும். 18 ல் 54 ஒருக்கா கூட போகாது # டைம்பாஸ்
இந்திய அரசியலில் ரயிலுக்கு பஞ்சர் பார்ப்பதும், பிரச்சாரபீரங்கியை ரிப்பேர் பார்ப்பதும் இயல்பான ஒன்று.
உண்மையை சொல்லும் ஒரே பத்திரிக்கை கருமாதி பத்திரிக்கை தான். # சேகர் செத்துட்டான்.
பல்பம் புடிச்சு ஆனா போடுறவன் மாணவன். அல்பம் புடிச்சு என்னேரமும் கிஸ் கேக்குறவன் காதலன்.
இன்ப அதிர்ச்சியை எதுவேண்டுமானாலும் கொடுக்கும். துன்ப அதிர்ச்சி மரணம் மட்டுமே கொடுக்கும்.
கலாச்சாரம் என்பது எப்படி இருந்தாங்கன்னு சொல்ற இலக்கணம். அதுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்?
தன் தவறை மறைப்பவன் தான் அடுத்தவன் தவறில் முதல் ஆளாக டார்ச் அடிக்கிறான்.
முகமூடியை நல்ல படங்கள் லிஸ்டுல வச்சிருக்கார் விரைட்டர் சிஎஸ்கே. இவரையெல்லாம் படம் பார்க்க சொல்லி யார் தூண்டுறது?
பசுமாடு, காளைமாடு மாதிரி எருமையும் மாடு தானே!
ரெண்டு கால் எருமைகள் விதிவிலக்கு! :)
ஓ! உங்களுக்கு எல்லாம் தெரியுமா? .. எனக்கு இப்போ அரிக்குது, எங்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்!
விளையாடும் பொம்மையையும் ஒரு உயிரென பாவிக்கும் மனம் குழந்தைகளுக்கு மட்டுமே உரியது.
இவனுங்க கரண்டு கொடுக்குறதை பார்த்தா கமலுக்கு முன்னாடி நாம ஓடிருவோம் போலயே வேற மாநிலத்துக்கு!
தமிழக மக்களுக்கு சென்னை, தமிழ்நாட்டில் இருக்குன்னு சொல்லி ரொம்ப பேர் ஏமாத்திகிட்டு இருக்காங்க!
வெங்கடகிருஷ்னனா இவன். சரியான சங்கடகிருஷ்னன்
இது என்ன வியட்நாம் காலணியா செவுட்நாம் காலணியா
நான் சொன்ன வீர ராகவன் இவனில்லை, இது வேறராகவன்!
பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் இந்தியா 284/6
இவுங்களுக்கே ஆம்பள வேஷம்போட்டு ஆண்கள் டீமுக்கு அனுப்பிறலாம் போலயே!
வயித்துபசி ருசியறியாது
காமபசி அழகறியாது
பல கண்டுபுடிப்புகளில் குடத்தை கவுத்திபோட்டு உட்காரலாம் என்பதும் ஒரு கண்டுபிடிப்பு தான்.
பேஸ்புக், ட்விட்டரில் நுழைகிறது பாமக!!
பேஸ்புக்குல காதலிக்கிற பசங்களெல்லாம் ஓடிருங்க பூச்சாண்டி வருது!
ரம்ஜான் நோம்பை விடு. யாரையாவது ஒரு மணிநேரம் மூச்சு விடாமல் விரதம் இருக்கச்சொல்லு அவுங்க மதத்துக்கு நான் மாறிடுறேன்.
பல கண்டுபிடிப்புகளுக்கு தேவையே காரணமாக இருந்தது.
அட்டென்சன் சீக்கிங் பர்சனாலடி குழந்தைகளுக்கு இயற்கையானது. பெரியவர்களுக்கு மனநோய். குழந்தையை கவனிங்க!
https://twitter.com/mokkaiwriter
பகுதிவாரியாக:
100%மொக்கை,
twitter,
சுயசொறிதல்,
நகைச்சுவை
பெண்!
இந்த பதிவு யாருக்காக!
அந்த பெண் ஏன் 11 மணிக்கு போச்சு.
ஏன் அரைகுறை ஆடையுடன் போச்சு.
ஏன் ஆண் நண்பனுடன் போச்சு.
என மடத்தனமாக பேசித்திரியும் பிற்போக்குவாதிகளுக்கு!
***
அறிவியல்:-
ஒரு பெண், பெண்குழந்தை பெறும் போதே அவளுக்கு பிரச்சனை வந்துவிடுகிறது, இத்தனைக்கும் வலுவாக எதிர்ப்பது அந்த பெண்ணின் மாமியார் எனும் பெண் தான், ஆண் குழந்தை பிறக்காத பொழுது அந்த மனைவியை ஒதுக்கிவைத்து விட்டு ஆணுக்கு வேறு திருமணம் செய்துவைக்கும் வழக்கமெல்லாம் இங்கே உண்டு, அவர்களை பொறுத்தவரை வாரிசு என்றால் ஆண்குழந்தை தான். பெண்குழந்தையை அவர்கள் சுமையாகவே நினைக்கிறார்கள்- ஆனால் உண்மை என்ன?
ஆண் குழந்தை என்றால் எக்ஸ்+ஒய் குரோம்சோம்கள், பெண் குழந்தை என்றால் எக்ஸ்+எக்ஸ் குரோம்சோம்கள் - நாம் கருவாகும் பொழுது முதல் ஏழுவாரங்களுக்கு எந்த பாலினம் என தீர்மானம் ஆகாமல் பெண் உடலில் தான் இருக்கிறோம், அதன்பின் தான் ஒய் குரோம்சோம்கள் வலுபெற்று ஆண் உறுப்பு உருவாகிறது, அதற்கான சாட்சி ஆண் பால் கொடுப்பதில்லை என்றாலும் ஆண் உடம்பில் இருக்கும் முலைகாம்புகள்.
பெண் உடலில் எக்ஸ் குரோம்சோம்கள் மட்டுமே இருக்கின்றன, என்ன குழந்தை பிறக்க வேண்டும் என தீர்மானிப்பது ஆணே, அவனிடமிருந்து செல்லும் குரோம்சோம் என்ன என்பதை அடிப்படையாக வைத்தே குழந்தை உருவாகிறது, ஆணிடம் ஏன் இரண்டு குரோம்சோம்களும் இருக்கின்றன? காரணம் முதல் பத்தியில் சொன்னது தான், ஆண் உருவாகும்பொழுதே பெண்ணாக தான் உருவாகின்றான். ஆணின் பழக்கவழக்கம்(நிகோடின் - ஆல்ஹகால்), உணவு முறை, உடலுறவு கொள்ளும் நேரத்தில் இருக்கும் உடல்நிலை அதைவிட முக்கியம் விந்தணுவில் எந்த குரோம்சோமை தூக்கி செல்லும் அணு அனைத்தையும் முந்திக்கொண்டு வெற்றி பெறுதல் - என்ன குழந்தை பிறந்தது என்பதற்கு முழுக்காரணம் ஆணே தவிர 1% கூட பெண் இல்லை!
உளவியல் :-
ஆதியிலிருந்தே பெண் குழந்தைகள் ஒதுக்கப்பட்டதற்கு முட்டாள்த்தனமான வரதட்சணை முறை தான் காரணம், சில ஆண்டுகளுக்கு முன்வரை தென்தமிழகத்தில் பெண் குழந்தைகள் கள்ளிப்பாலிட்டும், நெல்மணியிட்டும் கொல்லப்பட்டதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. தற்பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி காரணமாக அவை குறைந்துள்ளது, ஆம் குறைந்துள்ளது. வெளியே தெரியாமல் பல பிற்போக்கு மடசாம்பிராணிகள் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சிறுவயதிலிருந்தே ஆண் சகல உரிமைகளோடும், பெண் தன் வீட்டிலேயே அடிமையாகவும் தான் வளர்க்கப்படுகிறாள். முன்பெல்லாம் ஒரு பெண் பூப்படைந்து விட்டால் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, மாதவிடாய் காலங்களில் சமயலறை செல்லக்கூடாது, தனியாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் போன்ற மடத்தனங்களால் தன்னளவிலேயே தன்னை தகுதி இல்லாத உயிராக எண்ணத்தொடங்குகிறாள் பெண். இது மாபெரும் உளவியல் தாக்குதல்.
இன்று கல்வி கொடுக்கப்பட்டு, நல்ல வேலை கிடைத்து தானும் சக மனிதர்கள் தான் என இருக்கும் பெண் சமூகத்தை காலங்காலமாக அடக்கியே வாழ்ந்த ஆண் சமூகம் ஏற்க மறுக்கிறது, அதற்கு காரணமும் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட உளவியல் திணிப்பு தான், அது மதரீதியாக வேறுபடுமே தவிர மனித ரீதியாக பெண் அடிமையாக இருக்க வேண்டும் எனத்தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறாள்.
சமூகம்:-
கமல், பதினாறு வயதினிலே படத்தில் கோமணத்தோடும், ஆளவந்தான் படத்தில் பின்புறத்தை காட்டி கொண்டு அம்மணமாக வந்தால் அட, உலகநாயகன், உலகநாயகன் தாண்டா, இதுகெல்லாம் ஒரு தைரியம் வேணும் என்பார்கள், அதே சினிமாவில் ஒரு பெண் ஜட்டி, பிராவுடன் வந்துவிட்டால் போச்சு, போச்சு மொத்த கலாச்சாரமும் சீரழிச்சு போச்சுன்னு கதறுவார்கள் கலச்சார டவுசர்கள்!
முதல்ல கலாச்சாரம்னா என்னான்னு இவுங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியிருக்கு.
15 நூற்றாண்டு கலாச்சாரம், இருபதாம் நூற்றாண்டு கலாச்சாரம்னு காலத்திற்கேற்ப நாகரிக வளர்ச்சியில் மாறுவது தான் கலாச்சாரம். உதாரணத்திற்கு வெகு காலத்திற்கு முன் கேழ்வரகு கஞ்சி, களி, புட்டு என சாப்பிட்டோம். பின் அரிசி சோறு, இட்லி, தோசை. இன்று பீட்ஸா, பர்கர், சாட்ன்விட். என் கேள்வி என்னான்னான்னு எவனாவது உன்கிட்ட வந்து நீ இதை தான் தின்னாகும்னு உன் வாயில் திணித்தானா? அவனுக்கு பிடித்ததை அவன் செய்கிறான், அடுத்தவன் என்ன செய்யனும், எப்படி இருக்கனும்னு ஆர்டர் போட நீ யாருடா தக்காளி, உன்னால ஏத்துக்க முடியல, மாற முடியலன்னா அதுக்கு பேரு மரபுவழி, அது உன் தப்பே தவிர சமூகத்தின் குற்றம் அல்ல!
மரபுன்னு சொன்னதும் நியாபகம் வருது, இந்து யானமரபு இந்தியாவின் சொத்து, அதை தான் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தண்ணி கூட குடிக்காமல் எழுதி கொண்டிருக்கும் ஜெயமோகனை தயவுசெய்து பெண் உரிமை பற்றி எழுதச்சொல்லாதீர்கள்.
மலத்திற்கு நடுவில் மைசூர்பாக்கு வச்ச மாதிரி இருக்கு!
பிறர்மனை நோக்காதேன்னு சம்நிலையா எழுதிட்டு அதே வள்ளுவர் பொண்டாட்டி பேச்சை கேக்காதேன்னு எழுதி வச்சிருக்கார். பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும், பத்தினி சொன்னா மழை பெய்யும்னு பெண்ணுக்கு தான் ஒழுக்கம் சொல்லி தர்றானுங்களே தவிர ஆண்களாலே உருவாக்கப்பட்டது தான் இந்த சட்டத்திட்டங்களலெல்லாம் என ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். ரொம்ப நாளா எனக்கொரு ஆசை, இந்த கற்பு மேல் நம்பிக்கையுள்ளவர்களிடம் ஒரு கேள்வி கேட்கனும்னு, என்னைக்காவது உங்க மனைவியையோ, அம்மாமையோ மழை பேயச்சொல்லி பார்த்திருக்கிறீர்களா? இல்லைல அதுனால முன்னாடியும், பின்னாடியும் மூடிகிட்டு இனிமே கலாச்சாரம், பண்பாடு பேச வராதிங்க!
**
இஸ்லாம் பெண்ணியத்தில் புகழ்பெற்ற ஒரு வாசகம் உண்டு.
DON'T TEACH US WHAT TO WEAR
TEACH UR SON NOT TO RAPE.
ஆண் சமூகத்தில் நோயை வச்சிகிட்டு பெண்னை குறை சொல்லும் வரை இம்மாதிரியான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவே குறையாது. குற்றம் செய்பவர்களுக்கு மரணதண்டனையெல்லாம் கொடுக்க வேண்டாம், ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் அவர்களுக்கு ஆண் தன்மையை மட்டும் எடுத்து விடுங்கள் போதும், தான் ஆண் என்ற வெற்று அகம்பாவத்தில் திரியும் எவனும் இனி இன்னொரு பெண்னை வன்புணரும் நோக்கில் பார்க்க மாட்டான்!
********
பெண்களுக்கு:-
இரண்டு பெண்குழந்தைகளுக்கு தகப்பன் என்ற முறையிலும் என்னை சுற்றியே சில புரிதல் இல்லாதவர்கள் இருந்ததாலும் இதை எழுதிவிட்டேன். உண்மையில் உங்களுக்கோ, உங்களை போன்ற பெண்களுக்கோ எதாவது பிரச்சனை நேர்ந்தால் நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும், நமக்காக பேச எதாவது ஒரு ஆண் வருவான் என எதிர்பார்ப்பீர்களேயானால் நீங்களே இன்னும் உங்கள் அடிமைதளையை வெட்டிக்கொள்ள தயாராக இல்லை என்று அர்த்தம். உங்கள் உரிமையை கேட்டு கேட்டு அலுத்து விட்டீர்கள், இனி எடுத்து கொள்ளுங்கள் அப்போது தான் சமூகம் உங்களை பார்த்து பயப்படும்!
அந்த பெண் ஏன் 11 மணிக்கு போச்சு.
ஏன் அரைகுறை ஆடையுடன் போச்சு.
ஏன் ஆண் நண்பனுடன் போச்சு.
என மடத்தனமாக பேசித்திரியும் பிற்போக்குவாதிகளுக்கு!
***
அறிவியல்:-
ஒரு பெண், பெண்குழந்தை பெறும் போதே அவளுக்கு பிரச்சனை வந்துவிடுகிறது, இத்தனைக்கும் வலுவாக எதிர்ப்பது அந்த பெண்ணின் மாமியார் எனும் பெண் தான், ஆண் குழந்தை பிறக்காத பொழுது அந்த மனைவியை ஒதுக்கிவைத்து விட்டு ஆணுக்கு வேறு திருமணம் செய்துவைக்கும் வழக்கமெல்லாம் இங்கே உண்டு, அவர்களை பொறுத்தவரை வாரிசு என்றால் ஆண்குழந்தை தான். பெண்குழந்தையை அவர்கள் சுமையாகவே நினைக்கிறார்கள்- ஆனால் உண்மை என்ன?
ஆண் குழந்தை என்றால் எக்ஸ்+ஒய் குரோம்சோம்கள், பெண் குழந்தை என்றால் எக்ஸ்+எக்ஸ் குரோம்சோம்கள் - நாம் கருவாகும் பொழுது முதல் ஏழுவாரங்களுக்கு எந்த பாலினம் என தீர்மானம் ஆகாமல் பெண் உடலில் தான் இருக்கிறோம், அதன்பின் தான் ஒய் குரோம்சோம்கள் வலுபெற்று ஆண் உறுப்பு உருவாகிறது, அதற்கான சாட்சி ஆண் பால் கொடுப்பதில்லை என்றாலும் ஆண் உடம்பில் இருக்கும் முலைகாம்புகள்.
பெண் உடலில் எக்ஸ் குரோம்சோம்கள் மட்டுமே இருக்கின்றன, என்ன குழந்தை பிறக்க வேண்டும் என தீர்மானிப்பது ஆணே, அவனிடமிருந்து செல்லும் குரோம்சோம் என்ன என்பதை அடிப்படையாக வைத்தே குழந்தை உருவாகிறது, ஆணிடம் ஏன் இரண்டு குரோம்சோம்களும் இருக்கின்றன? காரணம் முதல் பத்தியில் சொன்னது தான், ஆண் உருவாகும்பொழுதே பெண்ணாக தான் உருவாகின்றான். ஆணின் பழக்கவழக்கம்(நிகோடின் - ஆல்ஹகால்), உணவு முறை, உடலுறவு கொள்ளும் நேரத்தில் இருக்கும் உடல்நிலை அதைவிட முக்கியம் விந்தணுவில் எந்த குரோம்சோமை தூக்கி செல்லும் அணு அனைத்தையும் முந்திக்கொண்டு வெற்றி பெறுதல் - என்ன குழந்தை பிறந்தது என்பதற்கு முழுக்காரணம் ஆணே தவிர 1% கூட பெண் இல்லை!
உளவியல் :-
ஆதியிலிருந்தே பெண் குழந்தைகள் ஒதுக்கப்பட்டதற்கு முட்டாள்த்தனமான வரதட்சணை முறை தான் காரணம், சில ஆண்டுகளுக்கு முன்வரை தென்தமிழகத்தில் பெண் குழந்தைகள் கள்ளிப்பாலிட்டும், நெல்மணியிட்டும் கொல்லப்பட்டதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. தற்பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி காரணமாக அவை குறைந்துள்ளது, ஆம் குறைந்துள்ளது. வெளியே தெரியாமல் பல பிற்போக்கு மடசாம்பிராணிகள் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சிறுவயதிலிருந்தே ஆண் சகல உரிமைகளோடும், பெண் தன் வீட்டிலேயே அடிமையாகவும் தான் வளர்க்கப்படுகிறாள். முன்பெல்லாம் ஒரு பெண் பூப்படைந்து விட்டால் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, மாதவிடாய் காலங்களில் சமயலறை செல்லக்கூடாது, தனியாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் போன்ற மடத்தனங்களால் தன்னளவிலேயே தன்னை தகுதி இல்லாத உயிராக எண்ணத்தொடங்குகிறாள் பெண். இது மாபெரும் உளவியல் தாக்குதல்.
இன்று கல்வி கொடுக்கப்பட்டு, நல்ல வேலை கிடைத்து தானும் சக மனிதர்கள் தான் என இருக்கும் பெண் சமூகத்தை காலங்காலமாக அடக்கியே வாழ்ந்த ஆண் சமூகம் ஏற்க மறுக்கிறது, அதற்கு காரணமும் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட உளவியல் திணிப்பு தான், அது மதரீதியாக வேறுபடுமே தவிர மனித ரீதியாக பெண் அடிமையாக இருக்க வேண்டும் எனத்தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறாள்.
சமூகம்:-
கமல், பதினாறு வயதினிலே படத்தில் கோமணத்தோடும், ஆளவந்தான் படத்தில் பின்புறத்தை காட்டி கொண்டு அம்மணமாக வந்தால் அட, உலகநாயகன், உலகநாயகன் தாண்டா, இதுகெல்லாம் ஒரு தைரியம் வேணும் என்பார்கள், அதே சினிமாவில் ஒரு பெண் ஜட்டி, பிராவுடன் வந்துவிட்டால் போச்சு, போச்சு மொத்த கலாச்சாரமும் சீரழிச்சு போச்சுன்னு கதறுவார்கள் கலச்சார டவுசர்கள்!
முதல்ல கலாச்சாரம்னா என்னான்னு இவுங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியிருக்கு.
15 நூற்றாண்டு கலாச்சாரம், இருபதாம் நூற்றாண்டு கலாச்சாரம்னு காலத்திற்கேற்ப நாகரிக வளர்ச்சியில் மாறுவது தான் கலாச்சாரம். உதாரணத்திற்கு வெகு காலத்திற்கு முன் கேழ்வரகு கஞ்சி, களி, புட்டு என சாப்பிட்டோம். பின் அரிசி சோறு, இட்லி, தோசை. இன்று பீட்ஸா, பர்கர், சாட்ன்விட். என் கேள்வி என்னான்னான்னு எவனாவது உன்கிட்ட வந்து நீ இதை தான் தின்னாகும்னு உன் வாயில் திணித்தானா? அவனுக்கு பிடித்ததை அவன் செய்கிறான், அடுத்தவன் என்ன செய்யனும், எப்படி இருக்கனும்னு ஆர்டர் போட நீ யாருடா தக்காளி, உன்னால ஏத்துக்க முடியல, மாற முடியலன்னா அதுக்கு பேரு மரபுவழி, அது உன் தப்பே தவிர சமூகத்தின் குற்றம் அல்ல!
மரபுன்னு சொன்னதும் நியாபகம் வருது, இந்து யானமரபு இந்தியாவின் சொத்து, அதை தான் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தண்ணி கூட குடிக்காமல் எழுதி கொண்டிருக்கும் ஜெயமோகனை தயவுசெய்து பெண் உரிமை பற்றி எழுதச்சொல்லாதீர்கள்.
மலத்திற்கு நடுவில் மைசூர்பாக்கு வச்ச மாதிரி இருக்கு!
பிறர்மனை நோக்காதேன்னு சம்நிலையா எழுதிட்டு அதே வள்ளுவர் பொண்டாட்டி பேச்சை கேக்காதேன்னு எழுதி வச்சிருக்கார். பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும், பத்தினி சொன்னா மழை பெய்யும்னு பெண்ணுக்கு தான் ஒழுக்கம் சொல்லி தர்றானுங்களே தவிர ஆண்களாலே உருவாக்கப்பட்டது தான் இந்த சட்டத்திட்டங்களலெல்லாம் என ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். ரொம்ப நாளா எனக்கொரு ஆசை, இந்த கற்பு மேல் நம்பிக்கையுள்ளவர்களிடம் ஒரு கேள்வி கேட்கனும்னு, என்னைக்காவது உங்க மனைவியையோ, அம்மாமையோ மழை பேயச்சொல்லி பார்த்திருக்கிறீர்களா? இல்லைல அதுனால முன்னாடியும், பின்னாடியும் மூடிகிட்டு இனிமே கலாச்சாரம், பண்பாடு பேச வராதிங்க!
**
இஸ்லாம் பெண்ணியத்தில் புகழ்பெற்ற ஒரு வாசகம் உண்டு.
DON'T TEACH US WHAT TO WEAR
TEACH UR SON NOT TO RAPE.
ஆண் சமூகத்தில் நோயை வச்சிகிட்டு பெண்னை குறை சொல்லும் வரை இம்மாதிரியான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவே குறையாது. குற்றம் செய்பவர்களுக்கு மரணதண்டனையெல்லாம் கொடுக்க வேண்டாம், ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் அவர்களுக்கு ஆண் தன்மையை மட்டும் எடுத்து விடுங்கள் போதும், தான் ஆண் என்ற வெற்று அகம்பாவத்தில் திரியும் எவனும் இனி இன்னொரு பெண்னை வன்புணரும் நோக்கில் பார்க்க மாட்டான்!
********
பெண்களுக்கு:-
இரண்டு பெண்குழந்தைகளுக்கு தகப்பன் என்ற முறையிலும் என்னை சுற்றியே சில புரிதல் இல்லாதவர்கள் இருந்ததாலும் இதை எழுதிவிட்டேன். உண்மையில் உங்களுக்கோ, உங்களை போன்ற பெண்களுக்கோ எதாவது பிரச்சனை நேர்ந்தால் நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும், நமக்காக பேச எதாவது ஒரு ஆண் வருவான் என எதிர்பார்ப்பீர்களேயானால் நீங்களே இன்னும் உங்கள் அடிமைதளையை வெட்டிக்கொள்ள தயாராக இல்லை என்று அர்த்தம். உங்கள் உரிமையை கேட்டு கேட்டு அலுத்து விட்டீர்கள், இனி எடுத்து கொள்ளுங்கள் அப்போது தான் சமூகம் உங்களை பார்த்து பயப்படும்!
பகுதிவாரியாக:
அறிவியல்,
சமூகம்,
வேண்டுகோள்
கமாக்கதைகள்(இடம் மாறியகால்) 5 (69)
என்னைக்கும் இல்லாம இன்னைக்கு புதுசா சரக்கு வாங்கிட்டு வர சொல்ற!
ஆமா வாங்கிட்டு வா, இந்தா ஐநூறு!
உனக்கு ஒயின் தானே!
ஆமா!
.........
மறுநாள் காலை!
போடா நாயே
எதுக்குடி திட்ற
என்னடா சொன்ன நீ!
என்ன சொன்னேன்.
தண்ணி போட்டா ஒருமண்ணேரம் நின்னு விளையாடுவேன்னு சொன்ன!
அப்படியா சொன்னேன்
நீ தாண்டா சொன்னெ!
ஸாரி. அது கொஞ்சமா அடிச்சா, ஆஃப் அடிச்சா மட்டையாயிருவேன்னு சொல்ல மறந்துட்டேன்!
(கதை சொன்ன சுந்தர் மன்னிப்பாராக)
ஆமா வாங்கிட்டு வா, இந்தா ஐநூறு!
உனக்கு ஒயின் தானே!
ஆமா!
.........
மறுநாள் காலை!
போடா நாயே
எதுக்குடி திட்ற
என்னடா சொன்ன நீ!
என்ன சொன்னேன்.
தண்ணி போட்டா ஒருமண்ணேரம் நின்னு விளையாடுவேன்னு சொன்ன!
அப்படியா சொன்னேன்
நீ தாண்டா சொன்னெ!
ஸாரி. அது கொஞ்சமா அடிச்சா, ஆஃப் அடிச்சா மட்டையாயிருவேன்னு சொல்ல மறந்துட்டேன்!
(கதை சொன்ன சுந்தர் மன்னிப்பாராக)
பகுதிவாரியாக:
அடல்ஸ் ஒன்லி,
இது என்ன?,
நகைச்சுவை
Subscribe to:
Posts (Atom)


.jpg)
