வா மு கோமுவின் நாவல்கள் வெளியீட்டு விழா

வா மு கோமுவின் இரண்டு நாவல்களை உயிர்மை வெளியிடுகிறது. அதற்கான விழா வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி மாலை நடக்கிறது. விவரங்கள் கீழே :

உயிர்மையின் 10 நூல்கள் வெளியீட்டு விழா

நாள் : 1-1-2012, ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், LLA பில்டிங், 735 அண்ணா சாலை, சென்னை - 2.

நூல்கள் :

ஒன்றுக்கும் உதவாதவன் (அ முத்துலிங்கத்தின் கட்டுரைத் தொகுப்பு)
சகுனம் (எஸ் வி ராமகிருஷ்ணனின் கட்டுரைத் தொகுப்பு)
இசையின் ஒளியில் (ஷாஜியின் கட்டுரைத் தொகுப்பு)
கால்கள் (ஆர் அபிலாஷின் நாவல்)
மங்கலத்து தேவதைகள் & எட்றா வண்டியை (வா மு கோமுவின் நாவல்கள்)
நீர்த்துளி (சுப்ரபாரதி மணியனின் நாவல்)
வேட்டை (சுப்ரபாரதி மணியனின் சிறுகதைகள்)
வானில் பறக்கும் புள்ளெல்லாம் (சு. தியோடர் பாஸ்கரனின் கட்டுரைகள்)
கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும் (சு.கி. ஜெயகரனின் கட்டுரைகள்)

பங்கேற்போர் :

எஸ் ராமகிருஷ்ணன்,
அசோகமித்திரன்
பாலாஜி சக்திவேல்
மிஷ்கின்
ஸ்ரீனிவாஸ் (பின்னணி பாடகர்)
ந முருகேச பாண்டியன்
பாமரன்
இந்திரன்
தமிழ்மகன்
வே தட்சிணாமூர்த்தி
அ முத்துக்கிருஷ்ணன்

நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

முல்லைப் பெரியாறு - மெரீனாவில் ஒன்றுகூடல்..!

நேற்று காவிரியை மறுத்தார்கள்; இன்று முல்லைப் பெரியாறை மறுக்கிறார்கள். நாளை பாலாறு, பவானி ஆறு மறுக்கப்படும். தமிழகம் பாலையாகும்; தமிழன் தமிழ்நாட்டிலேயே அகதியாவான்.





நேற்று தமிழீழத்தில் 1.5 லட்சம் தமிழர்களும், தமிழகக் கடற்கரையோரங்களில் 543 மீனவர்களும் கொல்லப்பட்டனர். இன்று கேரளாவாழ் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். நாளை தமிழகத்தில் வாழும் நாமும் தாக்கப்படலாம். நம் தமிழனைக் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க, நம் வாழ்வின் ஒரு மணி நேரத்தை நாம் ஒதுக்கமாட்டோமா?

நம் தமிழ் சொந்தங்களுக்காக வரும் டிசம்பர் 25 ஞாயிறு அன்று மெரீனா கடற்கரையில், நீதி கேட்ட கண்ணகி சிலை அருகே மாலை 3 மணிக்கு ஒன்று கூடுவோம். கம்பம், போடி, தேனி மக்களுக்காக துணை நிற்போம்

சங்கமம்‘2011 அழைப்பு

சங்கமம்-2011

இணையச் சிலந்திக்கூட்டில் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மை ஒரு கோட்டில் மீண்டும் இருத்திப்பார்க்க, இந்த ஆண்டும் ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் அழகானதொரு சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

வலைப்பக்கம்(blog), WordPress, Facebook, Twitter, BUZZ போன்ற பல தளங்களில் உறவாடும் இணைய உறவுகளை ஒன்று திரட்டி அகமகிழும் முகமாக ”சங்கமம் 2011” எனும் கூடல்த்திருவிழா ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

2009, 2010ஆம் ஆண்டுகளில் இது போன்ற கூடல்கள் மிகச் சிறப்பாக நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இந்த ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளின் சங்கமம் குறித்த இடுகைகள்.

2009 சங்கமம்
2010 சங்கமம்

எங்கு, எப்போது, என்ன?

சங்கமம்-2011 நிகழ்வு 18.12.2001 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என எங்கள் குழு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் சங்கமம்?

ஏன் இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில் இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே ஊட்டுகிறது.

எல்லாச் சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத் தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து, புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்தக் கூடல்.

கலந்துகொள்ள:

முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011 நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு


தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

இது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு உறுதிப் படுத்தியதையொட்டியே நிகழ்வுக்கான இருக்கைகள், உணவு ஏற்பாடு செய்யமுடியும். இவ்வளவு வலியுறுத்திக் கேட்பதன் மிக முக்கியக்காரணம் மதியம் சைவ / அசைவ உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சரியான எண்ணிக்கை தெரியாத போது உணவு போதாமல் அமையவோ, கூடுதலாக அமைந்து வீணாகவோ வாய்ப்பிருப்பதை முற்றிலும் தவிர்க்கவே. நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.


மேலதிக விபரங்களுக்கு:

தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி (செயலர்) 90037-05598,
கார்த்திக் (பொருளர்) 97881-33555,
ஆரூரன் - 98947-17185 ,
கதிர் – 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர் - 98658-39393,
ராஜாஜெய்சிங் - 95785-88925,
சங்கவி – 9843060707

நிகழ்வின் வெற்றியும் சிறப்பும் தங்கள் கைகளில் மட்டுமே அமைந்திருக்கின்றது என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராக இருக்கின்றோம்.

பங்கு வணிகத்தில் நட்டம் ஏன்?

வர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியான தொலைநோக்கு பார்வை வேண்டும். பெரும்பாலோர் புரிந்து கொள்ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித்த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்பது. எந்த வர்த்தகத்தில் இது சாத்தியம்? பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங்கள் எதிர் பார்க்கும் லாப சதவிகிதம் தான் உங்கள் ரிஸ்க் சதவிகிதமும்.

நீங்கள் பூ விற்கலாம், உணவு பொருள் விற்கலாம், பிளாஸ்டிக் பொருள் விற்கலாம். பூ ஒரே நாளில் கெட்டுவிடும், உணவு பொருள் இரண்டு நாள் வரை தாங்கலாம், பிளாஸ்டிக் பொருள் அழியாமல் இருக்கும். அதே அளவு லாப அளவும் இருக்கும் என்பது தான் வியாபார உண்மை. நீங்கள் என்ன வியாபாரம் செய்ய போகிறிர்கள் என்பதில் தான் உங்கள் தொலைநோக்கு பார்வை இருக்கிறது. இன்றே லாபம் வேண்டுமென்றால் அதற்கான ரிஸ்கையும் புரிந்து கொள்ளவேண்டும்.




மார்கெட் குறியீட்டு எண் சரிந்த போதும் பல நிறுவன பங்குகள் நல்ல முறையில் ஏறி கொண்டிருந்தது. தினம் பல செய்தி தளங்களில் அந்த செய்தியும் வருகிறது, அதையெல்லாம் படிக்க நமக்கு ஒரு மணிநேரம் போதுமானது. நான் ஏற்கனவே இந்த பதிவில் சொன்னது போல் உங்கள் முதலீட்டை ஒரு வருடத்தில் இரட்டிப்பாக்கினாலே போதும் பத்தாவது வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர். தெளிவான பார்வை போதும். சரியான திட்டமிடல் போதும்.

சில ஆலோசகர்கள் சரியில்லை அதனால் தான் நட்டமடைந்தேன் என்கிறார்கள். நான் அலோசகார இருந்த பொழுது வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு சொல்வேன். நான் 5 கால் தருகிறேன் ஒவ்வொன்றும் 1000 லாபம் அதே நேரம் ஸ்டாப்லாஸ் 200௦௦ இருக்கும். 4 கால் தோல்வி அடைந்தாலும் ஒரு காலில் 1000௦௦௦ லாபம். ஆக மொத்தம் 200௦௦ லாபம் தான். ஸ்டாப்லாஸ் போடாமல் நீங்கள் செய்யும் வர்த்தகம் ரிஸ்கானது. அதை புரிந்து கொண்டால் உங்களால் தினசரி வர்த்தகத்திலும் லாபம் பார்க்க முடியும்.

ஆலோசனைக்கு தொடர்பு கொள்க : 9994500540

பங்குவணிகமும் கமாடிட்டியும்!

போன வருடம் நான், பாஸ் கார்த்திக் ஆபிஸில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், ஒரு நண்பர் அவரது நண்பரை அழைத்து வந்திருந்தார் ஒரு உதவிக்காக. சொல்லுங்க சார் என்றோம். அவர் சொல்ல ஆரம்பித்தார், சார் நான் வீ.ஆர்.எஸ் வாங்கி அதில் வந்த பணத்தை ஒரு வங்கியில் டெபாசிட் பண்ண போனேன். அந்த வங்கி மேலாளர் அந்த வங்கி பங்குகள் 1000 த்தை என் தலையில் கட்டிவிட்டார்(ஆம் அப்படியே தான் சொன்னார்), அது என்னாச்சுன்னு பாருங்க ப்ளீஸ்.

என்ன விலைக்கு சார் வாங்குனிங்க?

அப்ப தான் வெளியிட்டாங்க, ஒரு பங்கு பத்து ரூபாய் வீதம் 1000 பங்குகள், மொத்தம் பத்தாயிரம் புடுங்கிட்டார்.

ஒரு நிமிசம் பார்த்து சொல்றோம் இருங்க, சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர்.........

என்னாங்க ஆச்சு?

இன்னைக்கு அந்த பங்கின் விலை 495 ரூபாய் சார்.

நிஜமாலுமா?

நீங்களே பாருங்க சார்!

*

முழுக்க முழுக்க நடந்த உண்மை, அதை விற்று கொடுக்கவும் பாஸ் கார்த்திக் தான் உதவி செய்தார், ஆனால் இன்னைக்கு வித்திருந்தா இன்னும் அவர் சந்தோசப்பட்டிருப்பார். ஏனென்றால் இன்று அந்த பங்கின் விலை 762 ரூபாய். சென்ற வருடம் இதே நேரம் 495. அந்த நிறுவனம் bank of baroda.

பங்கு வணிகம் என்பதை முழுமையாக அறியாமல் சிலர் அதை சூதாட்டம் என்கின்றனர், பத்து பேர் சேர்ந்து ஆரம்பிக்கும் ஒரு நிறுவனத்தில் சில வருடங்கள் கழித்து ஒருவர் மட்டும் தனது பங்கை எப்படி விற்றுவிட்டு வெளியேற முடியுமோ அதே போல் தான் இதுவும், சிறு நிறுவனங்கள் பத்து பேரை வைத்து தொழில் ஆரம்பிக்கின்றன, பெரு நிறுவனங்கள் பல்லாயிரம் பேரை வைத்து தொழில் ஆரம்பிக்கின்றன. தொழில் பற்றிய சிறிய அறிவு மற்றும் தினம் செய்திதாள் வாசிப்பே உங்களை பங்கு வர்த்தகத்தில் வெற்றிபெற வைக்கும்!


பங்கு வணிகத்தின் மூலமே உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன வாரன் பப்ஃபெட்


**************************

பங்குவர்த்தகத்தை விட அதிகமாக விமர்சிக்கப்படுவது விலைபொருட்கள்(கமாடிட்டி) சந்தை. டோண்டுவின் இந்த பதிவில் ரமணா என்பவர் என்னிடம் கேட்ட கேள்விக்கு இங்கேயே பதிலும் சொல்லி விடுகிறேன்.

உங்கள் பாட்டியிடம் போய் உங்கள் காலத்தில் பவுன்(சவரன்) என்ன விலை என்று கேட்டு பாருங்கள், 300 என்பார். உங்கள் அம்மாவிடம் இதே கேள்வியை கேளுங்கள் 3000 என்பார். அப்படியானால் நம் காலத்தில் பவுன் 30000 தானே இருக்க வேண்டும், ஆனால் இல்லையே. காலம் காலமாக விலையேற்றம் மாற்ற முடியாத ஒன்று.(புதிய தலைமுறை பத்திரிக்கைக்காக லக்கி என்னிடம் விலையேற்றம் பற்றி பேட்டி எடுத்த போது நான் சொன்ன பதில் இது, எல்லாரும் ஆமாம் மாபெரும் விலையேற்றம்னு அம்மணமா ஓடுறாங்க, நீங்க மட்டும் கோவணம் கட்டினா எப்படின்னு அந்த பேட்டியை வெளியிடவில்லை ) ஆன்லைன் வர்த்தகத்தால் தான் விலையேறியது போன்ற கூற்றுகள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது தான்.

தங்கம் ஆபரணமாக மட்டுமில்லாமல் முதலீட்டுபொருளாகவும் மாறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது, முன்பெல்லாம் ஒரு நாட்டின் தங்க இருப்பை வைத்தே அவர்கள் பணம் வெளியிட வேண்டும். இன்று அவ்வாறு இல்லை இதுவே பணவீக்கத்திற்கு முதல் காரணம். பங்கு வணிகத்தில் சிறு சறுக்கல் ஏற்படும் போது முதலீட்டாளர்கள் மாற்று முதலீட்டு பொருளாக தேர்ந்தெடுப்பது தங்கத்தை தான், காரணம் விலைபொருட்கள் என்றும் கைவிடாது என்ற நம்பிக்கை.

தங்கம் விலையை நிர்ணயம் செய்ய பல கூறுகள் இருக்கின்றன, உலக பொருளாதாரநிலை, சப்ளை & டிமாண்ட், நாட்டின் பெரு வங்கிகள் இருப்பு பணத்தை தங்கமாக மாற்றி சேமித்து வைத்தல்(டன் கணக்கில்) மற்றும் போர் பதட்டம் போன்றவை மொத்தமாகவே விலைபொருட்களின் விலையை மாற்றும், ஆன்லைன் வர்த்தகத்தால் தான் விவசாய பொருட்கள் விலையேறுகிறது என்றால் ஆன்லைனில் இல்லாத பொருட்கள் ஏன் விலையேற வேண்டும்? ஒரு சிலர் சொல்வதை மட்டும் வைத்து முடிவு செய்யாதீர்கள், ஆற்றில் இறங்காமல் நீச்சல் அடிக்க முடியாது, வர்த்தகத்தில் இறங்காமல் அதை பற்றி தெரிந்து கொள்ள முடியாது.

கமாடிடியில் 8 கிராம் தங்கம் வாங்கி உங்கள் வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம்.


வாரன் பற்றிய புத்தகம் கிழக்கு வெளியீட்டில் கிடைக்கிறது!


*************

இது தான் நான் வேலை செய்யும் நிறுவனம். விதிகளுக்கு உட்பட்டு செபியில் ரிஜிஸ்டர் செய்யபட்டது. நமது நிறுவனத்தில், ஷேர், கமாடிட்டி, கரன்சி ட்ரேடிங்கை ஒரே ப்ளாட்ஃபாரத்தில்(trading portal) செய்யலாம்.  இந்தியாவின் முன்னணி வங்கிகள் 17 ல் கணக்கு வைத்திருக்கிறார்கள், நீங்கள் அப்ளை செய்த ஒரே நாளில் உங்களது லாபப்பணம் உங்களது வங்கிக்கே ஆன்லைன் மூலம் ட்ரான்ஃபர் ஆகிவிடும் . இந்தியாவிலேயே மிக மிகக்குறைந்த ப்ரோக்ரேஜ்(கமிசன் தொகை)(இது என் பொறுப்பு).

தமிழகமெங்கும் சப்-ப்ரோக்கர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஷேர், கமாடிட்டி, கரன்சி மூன்றுக்குமாக சேர்த்து மிகக்குறைந்த திருப்பி கொடுக்கப்படும் முன்பணம்(refundable deposite). சிறந்த நிபுணர்களை கொண்டு  உங்கள் ஊரில் ஃப்ரீ செமினார் மற்றும் டெக்னிக்கல் வகுப்புகளை நாங்களே இலவசமாக எடுக்கிறோம் . சந்தை நிலவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு தினம் அனுப்பப்படும்.

முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஏதேனும் சந்தேகம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்

அருண் - 9994500540


**********

இந்திய பொருளாதார வளர்ச்சியை நமது நாட்டு பங்கு வணிகமே நிர்ணயம் செய்கிறது, முதலீடு செய்வோம், இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுப்போம்!

இறப்பை கொண்டாடும் சாதி வெறி!

பரமகுடி நிகழ்வின் போது நான் இணையம் பக்க வர இயலாததால் முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சிக்கு எதிராக பத்திரிக்கை செய்தியையும் எதிர்பார்க்க முடியாததால் இணையத்தில் தேடி கொண்டிருந்தேன். ஒருவாறாக அறிய கிடைத்தபோது பங்காளி ராஜன் ஆல் இன் ஆல் தளத்தில் இந்த பதிவை வெளியிட்டிருந்தார்!.

அச்சம்பவத்தின் நிகழ்வு, சூழல் ஆகியவற்றை பார்க்கும் பொழுது அது நிச்சயமாக சாதிக்கலவரம் இல்லை, காரணம் தாழ்த்தபட்ட சாதி என அழைக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை. அது காவல்துறைக்கும், ஊர்வலம் வந்த மக்களுக்கும் நடந்த மறியல், மோதலாகி பின் கலவரமாகி கடைசியில் படுகொலையில் முடிந்திருக்கிறது, ஆனாலும் ஒரு சில ஆவணங்களை பார்க்கும்பொழுது இது காவல்துறையினரால் திட்டமிட்டு நடத்தபட்ட படுகொலையோ என சந்தேகிக்க வைக்கிறது!

சாமி என்ற படத்தில் சாதி ஊர்வலத்தை தடுக்க படத்தின் நாயகன் பொறுக்கி(அப்படி தான் அவரே சொல்லிக் கொள்வார்) விக்ரம். கல், கப்படாக்களை வைத்திருப்பது போல் இங்கே காவல் துறை கற்களை சேமித்து வைத்திருக்கிறது, எதற்காக இருக்கும்? ஊர்வலத்தின் போது ரோடு பழுதுபட்டால் அதை சீரமைக்கவா?. அமைதியாக ஊர்வலம் நடக்க வேண்டும், பிற சாதியினர் வன்முறையை தூண்டிவிடக்கூடாது என்பதற்காக தான் காவல்துறை அங்கே அழைக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வன்முறையை தூண்டியதே காவல்துறையை போலத்தானே தெரிகிறது!.



இவ்விசயத்தில் சரியாக ஆராயப்பட்டு, படுகொலைக்கு காரணமாக இருந்த காவல்துறையை சார்த்த உயர் அதிகாரி வரைக்கும் விசாரிக்கபட்டு, தக்க தண்டனை பெற வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க!
இறந்து போன மனிதர்களுக்காக வருத்தப்படாமல் அதை கொண்டாடியிருக்கும் சாதி வெறி பிடித்த இழிபிறவிகளின் செயலை தான் இந்த பதிவில் உள்ள படத்தில் காண்கிறீர்கள், அத்தோடு நிற்காமல் அந்த பதிவின் பின்னூட்டத்திலும் தனது சாதி வெறியை காட்டிக்கொண்டிருக்கிறார்கள், தம்மை தேவர் சாதி என அழைத்து கொள்ளும் கொட்டையெடுத்த புலிகள்!

இந்த கொட்டையெடுத்த புலிகள் தலைவராக கொண்டாடும் முத்துராமலிங்கம் இவர்களுக்கு என்ன செய்தார் என்று பார்த்தால், நிறைய பொய் சொல்லி தம்மை பெரிய அப்பாடக்கராக காட்டி கொண்டிருந்தார் என்பது மட்டுமே தெரிகிறது.

முக்குலத்தோர் என அழைக்கப்படும் கள்ளர், மறவர், தேவர் அகமுடையார் தனிதனியா அல்லது ஒரே குழுமமா என சந்தேகமாக இருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் இந்த கேடுகெட்ட சாதிக்கும் தொடர்பு இருக்கிறது. என் தாத்தா பெயர் மாயன், பெரியப்பா பெயர் பெரிய கருப்பன். சிறு வயதிலேயெ நகரத்துக்கு பெயர்ந்து விட்டதாலும், சுற்றிலுமான விளைவுகளால் ஊறிய பகுத்தறிவாலும் என்னால் சாதி என்ற ஒன்றை ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஒன்றை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறேன், மற்ற சாதியினர் அடையாளமாக பயன்படுத்துவதை போல இந்த சாதி இல்லை, இங்கே வெறி தலைவிரித்தாடுகிறது, தாழ்த்தபட்டவன் இறப்பை கொண்டாடும் கேடுகெட்ட செயலாக!.

சுதத்திரத்திற்கு முன் கள்ளர்கள் என அழைக்கபட்டவர்கள் எங்கே குற்றம் நடந்தாலும் கைது செய்யபட்டார்கள், பின் குற்றபரம்பரை என அழைக்கப்பட்டு தினம் காவல்நிலையத்தில் ஒரு முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கபட்டது, அதை எதிர்த்து உடைத்தவர் இந்த அப்பாடக்கர் முத்துராமலிங்கம் அல்ல. ஒரு ஆங்கிலேயர், அச்சூழ்நிலையில் சாதியை மறந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் பலர், அம்மாதிரி மாறிய முன்னோர்கள் வம்சம் வந்தவர்களில் ஒருவர் தான் இன்று புதுகை அப்துல்லா என்ற பெயரில் பதிவெழுதி கொண்டிருக்கும் அப்துல்லா!

இம்மானுவேல் சேகரன் மற்றும் முத்துராமலிங்கத்திற்குடனான பகை இப்போது ஏற்பட்டதல்ல, அவர்கள் இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் தாம், இம்மானுவேல் தாழ்த்தபட்டவர்களின் தலைவன் ஆவதை ஆரம்பத்திலிருந்தே முத்துராமலிங்கம் விரும்பவில்லை என்பது அப்போதைய ஆவணங்கள் நமக்கு சொல்கின்றன. தலித்துகளையும் நாமே பார்த்து கொள்கிறேன், இம்மானுவேலை தலைவனாக ஏற்று கொள்ளமுடியாது என்றும், அவன் எப்படி எனக்கு சமமாக உட்காரலாம் என்றும் தமது சாதி திமிரை காட்டி பேசியவர் தான் முத்துராமலிங்கம்!

தலித்துகள் என்று மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் காமராஜரையும் சாணாப்பயல் என்றும், சோத்துக்கு இல்லாதவன் என்றும் பேசி தமது சாதி திமிரை காட்டியவர் தான் இந்த முத்துராமலிங்கம்.
அசுரனின் இந்த பதிவில் உங்களுக்கு மேலதிக தகவல்கள் கிடைக்கும்!


அச்சம்பவத்திற்கு பிறகு பத்ரி எழுதிய பதிவு ஒன்றில் மற்றொரு சாதி வெறியர் தமது பதிவை இணைத்திருந்தார், அதில் இம்மானுவேல் ஒரு பொம்பளபொறுக்கி என்ற ரேஞ்சுக்கு குற்றசாட்டுகள் இருந்தன மேலும் ஒரு இடத்தில்

//காமராஜ் நாடார் விதைத்த காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சி மோதல், மறவர்-பள்ளர் சண்டை என பெயர் சூட்டப்பட்டு சாதி சண்டையாக உருவெடுத்து இன்று தேவர்-தலித் சண்டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரே மண்ணில் அதுவும் வானம் பார்த்த பூமியில் இன்றும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்ற இரு சமூகங்களின் வாழ்வு திசை மாறி, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி, கருவேல் மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். //

காமராஜ் நாடாரம்! அவர் தான் இந்த சண்டைக்கே மூல காரணமாம், எப்படி திரிக்கிறார்கள் பாருங்கள், தமது ஆதர்ஷ நாயகன் கடவுளாக்கப்பட வேண்டும் என்றால் தன் மனைவி வேசி என சொல்லவும் தயங்க மாட்டார்கள் போல.

//ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிளிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர்//

வரிசையா சொல்லிட்டு இன்னொனு சொல்றார் பாருங்க, தேவர் ஐயாவின் அடைமொழிகளாம், என்னமோ அந்த வார்த்தைகளோ அந்த முத்துராமலிங்கத்திற்காக தான் உருவாக்கபட்டது போல!

புத்தகம் வெளியிட்டார்கள், என்ன இருந்தது அதில், தேவர் சாதி அழிய வேண்டுமென்றா எழுதியிருந்தது, தாழ்த்தபட்டோர் எழ வேண்டுமென்று தானே இருந்தது, சமுதாய விடிவெள்ளி என்றழைத்தால் உன் வீட்டு சூரியன் காணாமல் போய் விடுமா என்ன?, என்ன ஒரு சாதி வெறி, தாம் ஒரு ஆதிக்க சாதி என்பதை மறைக்கக்கூட தெரியாத வெள்ளந்தி போல இந்த நண்பர், அநேகமாக பலமுறை மாற்றம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும், அதனால் தான் எதோ நடுநிலைவாதி போல் தம்மை அடையாளபடுத்தி கொள்ள அவர் முயச்சித்திருப்பது தெரிகிறது, ஆனாலும் பார்ப்பனியம் மறைய முடியா விசமாச்சே அய்யா!

இங்கே ஏன் பார்பனீயம் வந்தது!?

சாதிய கட்டமைப்பு, வர்ணாசிரம அடுக்கு எல்லாம் பார்பனீயத்தின் கொள்கைகள் தான். நிறவெறியை நாம் ரேஷிசம் என அழைப்பது போல் உயர்சாதி திமிரை பார்பனீயம் என்று அழைக்கிறோம். அதை முதன் முதல் பிராமணர்கள் கொண்டு வந்ததால் அவர்கள் பாப்பான் ஆனார்கள், உயர்சாதிய எண்ணம் இல்லாதவர்கள் பார்பனீயம் என்ற வார்த்தையை கேட்டு தம்மை தான் சொல்வது போல் நினைப்பதில்லை, மனதில் கொஞ்சமேனும் உயர்சாதிய திமிர் இருந்தாலும் உங்களால் தாங்கி கொள்ள முடியாது. தாம் விஷ்ணுவின் நெற்றியில் இருந்தவர்கள், பிறகு நெஞ்சிலுருந்து என வகைப்படுத்தி தம்மை மேல் சாதியாகவும் பின் வருபவனற்றை தமது அடிமை சாதியாகவும் கட்டமைத்து தமது வர்ணாசிரம சுவற்றை எழுப்பினான் பார்ப்ப்பனன்!

கீழே ஒரு தாழ்த்தபட்டவன் நிற்கிறான். அவன் தோளின் மேல், ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டவன், அவன் தோளின் மேல் ஒரு பிற்படுத்தப்பட்டவன் இப்படி ஒவ்வொரு அடுக்காக அமைத்து உச்சாணி கொம்பில் தம்மை அமர்த்தி கொண்டதை தான் பார்பனீயம் என்கிறோம்!, இந்த சாதிய அடுக்கை உடைத்து விட்டால் அங்கே எப்படி இருக்கும் பார்பனீயம், தம்மை உயர்சாதியாக நினைத்து கொள்ளும் மூட,முட்டா தேவர் சாதியினர், அவர்கள் தோளில் அமர்ந்து ஒருவன் காதில் செய்து கொண்டிருக்கிறான் என்பதையே மறந்து விடுகிறார்கள்!

தே.மகன் படத்தில், ஸாரி சுருக்க சொன்னால் அர்த்தம் மாறுகிறது, தேவர்மகன் படத்தில் இன்னொரு சாதிவெறியர் சிவாஜி பேசுவது போல் ஒரு காட்சி.

”என்னய்யா பண்ணசொல்ற
போருக்கு கூப்பிட்டப்ப, வேல்கம்பையும், வீச்சருவாளையும் எடுத்துகிட்டு வெற்றிவேல், வீரவேல்னு போருக்கு போனவியக நம்ம பயலுக, இப்ப அதை கீழ போடச்சொன்னா எப்படி போடுவானுங்க?”

எப்படி தெரியுமா இருக்கு, எல்லையில் நிற்கும் ராணுவத்தினர் அதே துப்பாக்கியை கொண்டு வந்து ஊருக்குள் அனைவரும் போட்டு தள்ளிவிட்டு, பழகிடுச்சுங்க இப்ப கீழ போடச்சொன்னா எப்படின்னு கேக்க சொல்ற மாதிரி இருக்கு!

அடமுட்டாப்பதருகளா, இந்த சாதி உங்களுக்கு என்ன செய்தது, தமிழகம் விட்டு வேறு நாட்டிற்கு போய் நான் இந்த சாதி எனச்சொல், உன்னை மலத்திற்கு சமமாக தான் பார்ப்பான். அப்படிபட்ட சாதியை வைத்து எதை புடுங்கப்போகிறாய், உன்னையும் மற்றவர்கள் போல் தானே உன் அம்மா பெற்றாள். வாயில உன்னை வாந்தி எடுக்கலையே, என் எப்படி வந்தது இந்த உயர்சாதி திமிர்?

பகத்தறிவு ஒன்று தான் விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவது, உண்மையில் நீங்களெல்லாம் மனிதர்கள் தானா?, உன் சாதி திமிர் இன்னும் எத்தனை உயிர்களை கொன்றுவிட்டு அடங்கும். இன்னும் நீ திருந்தவில்லை என்றால் உன்னையும் மனிதனாக நினைத்து இந்த பதிவிட்டதற்காக நான் வெட்கப்பட்டு கொள்கிறேன்!

2 ஜியும், தி.மு.கவின் பங்களிப்பும்!

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ் என்ற நண்பர், தி.மு.க ஒரு தப்பும் பண்ணல, அவர்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கி கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றசாட்டை வைத்துள்ளார், அவரது வாதத்தின் படியும் மற்றும் பல்வேறு கழக சொம்புதூக்கிகளின் வாதத்தின் படியும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு 7000 கோடி லாபம் தான், அதனால் நட்டம் ஒன்றுமில்லை, ஆகவே தி.மு.க நிரபராதி மட்டுமல்ல மக்களுக்காக உழைத்த மகான்களை கொண்ட கழகம் அது.

காசுக்கு கூட்டத்தில் கத்துபவன் கூட இந்த அளவு குரல் கொடுக்க மாட்டான் என்றால் இவர்கள் எந்த அளவு மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பதை நண்பர்கள் அறிக!, 2ஜி ஊழல் ராசாவிலிருந்து ஆரம்பிக்கபட்டதல்ல, அது தயாநிதி மாறனில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும் என்பது பலரது வாதம், ஆனால் தயாநிதி மாறன் இந்தியாவின் தொலைதொடர்பு துறையை தூக்கி நிறுத்தியவர் போல் பேசி கொண்டிருக்கிறார்கள் நமது சொம்புதூக்கிகள்!

இந்தியா முழுவதும் பேச ஒரு ருபாய் என்ற திட்டத்தின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் தயாநிதிமாறன், ஆனால் உண்மையென்ன?

அந்த திட்டத்தில் பயன்பெற நீங்கள் மாதம் 450 வாடகை கட்ட வேண்டும், இழப்பீட்டை விட அதிக அளவு லாபம் பார்த்து மக்களை ஏமாற்றியர் தான் இந்த ஹைடெக் ஏமாற்றுக்காரர், இந்தியாவை போன்ற பல நாடுகள் S.T.D முறையை ஒழித்து விட்டது, அதாவது வாசிங்டன்னில் இருந்து ஃப்லோரிடாவுக்கு பேசினாலும், கலிஃபோர்னியாவிலிருந்து நியூயார்க் பேசினாலும் அது உள்ளூர் அழைப்பு தான், இந்தியாவில் தான் பக்கத்துக்கு ஊருக்கு பேசினாலும் S.T.D. இதில் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக்(unplug) பண்ணினார் என தெரியவில்லை!?



அதிக பட்ச உச்சவரப்பு கட்டணம் பற்றி மட்டுமே TRAI பேசியிருக்கிறதே தவிர குறைந்த பட்ச கட்டணம் என்று எதையும் நிர்நயிக்கவில்லை!, அவர்கள் பத்து பைசாவுக்கும் கொடுக்கலாம், ஐந்து பைசாவுக்கும் கொடுக்கலாம், இரண்டு பைசாவுக்கும் கொடுக்கலாம், ஒரு பைசாவுக்கும் கொடுக்கலாம் ஏன், சும்மா கூட பேச அனுமதிக்கலாம், அது அவர்கள் லாபத்தை குறைத்து கொண்டு சந்தையை தன்வசம் ஆக்க செய்யும் யுக்தியே தவிர இதிலும் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக் பண்ணினார் என தெரியவில்லை.

சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நிறுவனத்திடம் விற்க மிரட்டினார் என சிவசங்கரனே வாக்குமூலம் கொடுத்த பிறகும், சி.பி.ஜ தயாநிதிமாறனை சும்மா ஒப்புக்கு விசாரித்து கொண்டிருப்பது அதிகாரவர்க்கத்தின் பணம் எது வரை பாய்ந்துள்ளது என்பதை காட்டுகிறது, இங்கணம் இருக்க திரும்ப திரும்ப கழக கண்மணிகளால் தி.மு.க விற்கு எவ்வாறு சொம்பு தூக்க முடிகிறது என்று தான் தெரியவில்லை, ஊழலின் மொத்த உருவமான தி.மு.க மற்றும் காங்கிரஸை இன்னும் ஒரு கட்சியாக இந்தியாவில் வைத்து கொண்டிருப்பது இந்திய மக்களின் பொறுமைக்கு ஒரு சாட்சி என்பேன்!



இன்னும் முடியல!

என்னிடம் பத்து ருபாய் அடக்கமுள்ள பொருள் நாலைந்து இருக்கிறது, நான் ராசா என்ற படித்த அன்ப்ளக்கிடம் அதை விற்பதற்கான உரிமையை தருகிறேன், அது சந்தையில் பல நூறு மடங்கு அதிக விலைக்கு விற்கக்கூடியது, சான்று உலக சந்தையிலும் அந்த பொருள் விற்பனைக்கு உள்ளது, அப்பேற்பட்ட பொருளை அந்த ராசா பதினோறு ருபாய்க்கு விற்று, ஹைய்ய்ய்ய்ய்ய்யா உங்களுக்கு ஒரு ருபாய் லாபம் பெற்று தந்து விட்டேன் என தவ்வுகிறான்.

நீங்களே சொல்லுங்கள் ஐயா, இந்த வேலையை செய்ய எனக்கு எதற்கு அந்த படித்த அன்ப்ளக், என் கடைக்கு, அதை சார்ந்தவர்களுக்கு எவ்வளவு லாபம் பெற்று தர முடியுமோ அதை விட்டு விட்டு, நானும் லாபத்தில் விற்றேன் பார் என்று ஒரு விளக்கம், அதற்கு ஆமாம் சாமி போட்டு கொண்டு ஒரு கூட்டம்.

வெக்கமாயில்லை, ஒவ்வொரு மனிதனின் உழைப்பும் வியர்வையும் தான் இந்தியா, நீ வெளிநாட்டு வங்கியில் கோடி கோடியாய் சேர்க்க இப்படி ஊழலால் ஏமாற்றி கொண்டிருக்கிறாயே!, உன்னையெல்லாம் பெத்தாங்களா, இல்ல........................

ஜெயலலிதா ஆட்சி!

அ.தி.மு.க ஆட்சிக்கு வர மிகமுக்கிய காரணமே தி.மு.க அரசின் அதிபயங்கர ஊழல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவையல்லாமல் ஜெயலலிதா எதிர்கட்சியாக செயலாற்றிய விதமே அவருக்கு இம்முறை முதல்வர் பதவியை வாங்கி தந்ததென அ.தி.மு.க தொண்டன் கூட சொல்ல மாட்டான். அந்த அளவு ஊழல் சாக்கடையில் தமிழகத்தை நனைய விட்டது தி.மு.க ஆட்சி.

ஆனால் இன்னும் கழக கண்மணிகள், அப்படியெல்லாம் இல்லை ஸ்பெக்ட்ரம் வெளீயிட்டால் அரசுக்கு 7000 கோடி லாபம் என பதிவு எழுதி சரிந்து போன தமது தி.மு.க தொண்டன் இமேஜை தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கிறார், வயாகராவால் கூட இனிமேல் அதை தூக்கி நிறுத்த முடியாதென்பதை எப்போது தான் உணர்ந்து கொள்வாரோ தெரியவில்லை.

அந்த பதிவு

பின்னூட்டத்திலேயே பலர் வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள், நண்பர் வெகு சுலபமாக தரவுகளின் அடிப்படையில் எழுதிய பதிவு இது என பின் வாங்குகிறார், ஏற்கனவே ஒருமுறை ஸ்பெக்ட்ரம் ஊழல் (கவனிக்க, அவரே அது ஊழல் என ஒப்பு கொள்கிறார்) நகரத்தை தாண்டி கிராமங்களுக்கு போய் சேராது என எழுதியவர் தான் அவர். இப்படி மக்களை முட்டாளாக நினைத்து தான் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தமது அதிகாரத்தை செலுத்தி நாடெங்கும் ஊழலால் மக்களை வதத்தது அந்த அரசு!




ஸ்பெக்ட்ரம் ஊழலை பொறுத்தவரை முதல் கேள்வியே அவ்வளவு பெரிய டெண்டரை ஏன் ஏலம் விடாமல் முதலில் வந்தவருக்கு என ஒதுக்கப்பட்டது என்பது தான், அப்படி கொடுக்க முடியுமென்றால் நாட்டிற்கு எதற்கு பல கோடி செலவில் தேர்தல், யார் முதலில் ஆட்சியரிடம் மனு கொடுக்கிறார்களோ அவர்களே M.L.A, M.P என பதவி அளித்துவிட்டு போகலாமே, ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மக்கள் ஓட்டளித்து ஏமாறும் நிலை(மட்டுமா)யாவது மாறுமே!

தமிழகத்தில் ஆளும்கட்சியின் அராஜகமாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பழிவாங்கும் விதமாக நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள் என அனுதாபம் தேடும் கழகத்திற்கும் அவரது கண்மணிகளுக்கும் மனசாட்சி என்றால் என்னவென்றே தெரியாது போல, ஈரோடு முன்னாள் அமைச்சர் ராஜா எப்படியெல்லாம் ஆடினார் என்று உள்ளூரிலேயே இருந்து பார்த்தவன் நான், முதன்முறை சட்டமன்ற உறிப்பினர் ஆகி, முதன்முறை அமைச்சர் ஆகிய அந்த குட்டிபாப்பாவே அந்த போடு போடுதுன்னா, கழகத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட பெருந்தலைகள் எவ்வளவு சுருட்டியிருக்கும்.

ஜெயலலிதா ஆட்சி ஒன்றும் பொற்கால ஆட்சி கிடையாது என்பது வந்த சில நாட்களில் சமச்சீர் கல்வி விசயத்தில் உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பே சொல்லி விட்டது!, சென்ற வார ஆனந்தவிகடனில் ஜெயலலிதாவின் ஆட்சி மற்றும் தனிபட்ட செயல்முறைகளால் அந்த அளவு மதிப்பெண் வாங்கியிருக்கிறார் என அவரது பலவீனங்களை சுட்டிகாட்டி எழுதியிருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும்!




தற்பொழுது அரசு கேபிள் வேறு இல்லத்தரசிகளின் சாபத்தை வாங்கி கொண்டிருக்கிறது, விலை குறைப்பிற்கான பேச்சுவார்த்தை என்றாலும் நெடுந்தொடர் மிஸ்ஸாகும் கவலையில் பல அவாள்கள் வீட்டிலிருந்து கூட வசவுகள் வருவதாக செய்தி!, அதற்காக அரசு கேபிளை முற்றிலுமாக நான் எதிர்க்கிறேன் என அர்த்தமில்லை, முன்கூட்டிய திட்டமிடல் இல்லாத செயல் ஜெயலலிதாவிற்கு பழக்கமான ஒன்று என குறிப்பிடவே இதை சொல்கிறேன்!

பல கோடி மக்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர் தமது சுய விருப்பு வெறுப்புகளுக்காக அல்லது சுய விளம்பரத்திற்காக செய்யும் செயல் அனைவரையும் பாதிக்கும் வாய்ப்புகளை அலசவே சொல்கிறேன்!, ஜெயலலிதா தம்மை மாற்றி கொள்ளவில்லை என்றால் மிக குறுகிய காலத்தில் சர்வாதிகாரி பட்டம் அரசியல் விமர்சகர்களிடம் வாங்கி கொள்வார்!

அப்போதும் சோ, ஜெவுக்கு சொம்பு தூக்குவார் என்பது வேறு விசயம்!


**********************

இனி வழக்கம் போல் பதிவுகள் எதிர்பார்க்கலாம்!

ட்ரேடிங் செய்ய விருப்பமா?

சென்னை டி.நகரில் கரன்சி ட்ரேடிங் அவேர்னெஸ் ப்ரோகிராம் நாளை நடக்கிறது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம்.

காலை பத்து மணிக்கு தொடங்குகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 9003084050

முகவரி

CD commosearch pvt ltd
meenakshi tower,
1st floor,
new no.13 old no.6
rajamanner street,
t.nagar
chennai-17

இந்த நிறுவனத்தில் தான் நான் மாஸ்டர் ஃப்ரான்ஸிஸ் எடுத்திருக்கிறேன், ஸேர், கமாடிடி. கரன்ஸி ட்ரேடிங் செய்ய விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம், உங்கள் ஊரில் சப்- ப்ரோக்கர்ஷிப் எடுப்பதற்கும் என்னை தொடர்பு கொள்ளலாம்
எனது தொடர்பு எண் - 9994500540

கோவையில் புத்தகத்திருவிழா!

வரும் பன்னிரெண்டாம் தேதியிலிருந்து இருபத்திஒன்றாம் தேதி வரை கோவை கைத்தறி திடலில் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது, நாம் தான் உள்ளே கேண்டீன் எடுத்திருகிறோம், நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்!

தொடர்புக்கு
9994500540

எரிகிற குடிசையில் பீடி பற்ற வைப்பவர்களே!

”அஞ்சாதே” என்ற படத்தில் அஜ்மல், பிரசன்னாவிடம் கேட்பது போன்று ஒரு காட்சி வரும்!, பெண்ணை கடத்தி அதுக்கு தான் பணம் வாங்கிட்டியே பின் ஏன் அந்த பெண்ணை கெடுத்தேன்னு, அதுக்கு வரும் பதில் “அப்ப தான் போலிஸ்கிட்ட போக மாட்டாங்க”, அப்போது அதன் யதார்த்தம் எனக்கு புரியவில்லை, இப்பொழுது கண்கூடாக பார்த்து விட்டேன்!

ஒருவன் பேருந்தில் இடித்துவிட்டான் என புகார் செய்தால், எங்கே இடித்தான், இடிக்கும் போது எப்படி இருந்தது, இடிக்கப்போறான்னு தெரிஞ்சி தானே விட்ட, அவனை சிக்க வைப்பதற்காகவே அங்கே போய் நின்னயா?, பேருந்தில் தான் இடிப்பாங்கன்னு தெரியுமுல்ல, உன்னை யார் இதில் வரச்சொன்னது?, நீ பொண்ணு தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு என இடித்தவனை மறைமுகமாக தப்பிக்க வைக்கும் அறிவிஜீவுகள் நிரம்பிய தமிழகத்தை வெகு ஆச்சர்யமாக பார்க்கிறேன்!

தலைவன் மேல் கண்மூடித்தனமாக பக்தி கொண்டிருக்கும் ஆட்டு மந்தைகள் பற்றி ஏற்கனவே பல பொதுபுத்தி பதிவுகளில் எழுதியிருந்தேன். ஆட்டுமந்தைகள், நாங்கள் எப்போதும் அப்படியே தான் இருப்போம் என நினைவூட்டி கொண்டே இருக்கின்றன, ஆளாளுக்கு சில சந்தேகங்களை எழுப்ப ஒருத்தர் ஒரு படி மேலே போய் சாட் செய்தது சாருவே அல்ல, அவர் பெயரில் வேறு யாரோ என்கிறார்!. இந்த காமலை கண்ணன்களுக்கு யாரை வைத்து வைத்தியம் பார்ப்பது என தெரியவில்லை.

அந்த பெண்ணை நான் மட்டுமல்ல, எனது சொந்த ஊரில் நடந்த பதிவர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன், அவரது தாயாருடன் வந்திருந்தார், அவரை பதிவர் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தியும் வைத்தேன், கடந்த ஆறுமாதமாக இணையத்தில் சரிவர இயங்க முடியாத வேலைபளுவினால் என்னிடம் பேச வந்த போது என்னால் பேச முடியவில்லை. இதை கூகுள் பஸ்ஸிலும், எங்களது ஆல் இன் ஆல் தளத்திலும் சொல்லிய போதும் யாரும் நம்பவில்லை.

அதிலும் ஒருவர், எழுத்தாளர் மொழிக்கு கிடைத்த கொடை, அவர் என்ன செய்தாலும் பொறுத்துகொண்டு தான் போக வேண்டும் என்றாரே பார்க்கலாம்!, அவ்வளவு மொழி பற்று உள்ளவர் இன்னேரம் தீக்குளித்திருக்க வேண்டும். தமிழன் என்ற காரணத்திற்காக கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட போது அண்ணாரின் ஆஸ்தான மொழிவளர்ப்பு சிந்தனையாளர் சாருவுக்கு குப்பி கொடுத்தாரா அல்லது குப்பி வாங்கினாரா என தெரியவில்லை, அது அவர் விருப்பமாகவே இருக்கட்டும், ஆனால் அந்த கேடுகெட்ட எழுத்தாளான் செய்வதெல்லாம் சரி தான் என்று வாதிடும் அளவுக்கா மூளை மலுங்கிவிட்டது!

மெத்த படித்த ஒருவர், சமூகத்தில் பெண்களின் நிலையை பற்றி அவருக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை காரணம் அவரும் ஒரு பெண் தான், அவர் சொல்கிறார் ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என்று! இதைச்சொல்லி உலகில் கற்பழிப்பு கேஸே இல்லாமல் செய்து விடலாமா?, ஆண்டுக்கணக்காக வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் கூட வன்கொடுமைக்கு உட்பட்ட பெண்ணின் பெயரை மாற்றி தான் வெளியிடுகிறார்கள், அந்த பெண்ணின் எதிர்காலம் குறித்து, இவர்களுக்கு அந்த பெண்ணின் பயோடேட்டா கொடுத்தால் தான் சாருவை ஏன் அப்படி செய்தாய் என கேட்பார்களாம்!


கனிமொழிக்கு அருகில் அமர்ந்திருக்கும் போண்டாகோழி தான் சாரு!
(கனிமொழி பார்ப்பதை பார்த்தால் உன்னையெல்லாம் எவண்டா பக்கத்துல உட்கார வச்சது என்பது போலத்தானே இருக்கு)

தோழர் அக்னிபார்வை அவரது பதிவில் சொல்லியிருந்தார், சைக்கோவை விட அவனுக்கு துணை இருப்பவர்கள் மேலும் ஆபத்தானவர்கள் என்று, கண்மூடித்தனமாக தலைவனை ஆதரிக்கும் முன் பாதிக்கபட்ட பெண்ணின் நிலையை யோசிக்க முடியாத அளவுக்கு அவர்களது பகுத்தறிவு வேலை செய்து கொண்டிருக்கிறது, இதில் பலர் பகுத்தறிவு பாசறையை சேர்ந்தவர்களாம். வெட்கக்கேடு, பெரியார் இருந்திருந்தால் விதையை பிதுக்கிவிட்டிருப்பார்!

சாருவை சிக்க வைப்பதற்காக இதை ப்ளான் பண்ணி செய்திருக்கிறோம் என குற்றசாட்டு அவரது அடிவருடிகளிடம் இருந்து!, நித்தியானந்தா விசயத்தில் தனக்கு தானே மலக்குளியல் செய்து கொண்ட சாருவை சிக்க வைக்க தனியாக வேறு யோசிக்க வேண்டுமா என்ன!?, நித்தியானந்தா விசயம் நடந்தவுடன் ஏன் எழுதவில்லை என கேட்டதற்கு சாருவின் பதில் என்ன தெரியுமா?

”அப்பொழுது என் மனைவி ஆசிரமத்தில் இருந்தார், அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென நான் எழுதவில்லை”

அதற்கு முன்னர் ஒரு பதிவில், என் மனைவிக்கு அனைத்துமே முன்னரே தெரிந்திருக்கிறது, அவரது உருவில் அம்மனை பார்க்கிறேன் என்று எழுதியிருந்தார், தன் மனைவி ”அம்மன்” மற்ற பெண்கள் ”ஜீனத் அம்மன்” என்ற நினைப்பு போல சாருவுக்கு!

திட்டமிட்டு உருவாக்கபட்ட உரையாடல் என சப்பைகட்டு கட்டியவர்களுக்காக வினவு தளத்தில் முழு உரையாடலும் கொடுக்கபட்டுள்ளது, உங்களது மனைவியின் நம்பர் கொடுங்க, நான் பேசனும் என கேட்டதற்கு சாரு தரவில்லை, அவர்ஹு மனைவியை கணீணியில் அமர அனுமதிப்பாரா என்பதே சந்தேகம் தான், சாருவெல்லாம் பெண்ணியம் பற்றி எழுதும் பொழுது சூத்தாம்பட்டை எரிகிறது.

இப்படி பேச வேண்டாம், உங்களை நண்பனாக தான் நினைக்கிறேன் என சொல்லும் பெண்ணிடம் உன் மார்பு சைஸ் என்ன?, ஈரமாச்சா இல்லையா என கேட்க மனபிறழ்ந்தவர்களால் மட்டுமே முடியும்!, இவ்விசயத்தில் மக்களவௌ உறுப்பினர் கனிமொழி பெயரும் அடிபட்டிருப்பது தான் சிறப்பு, அனைத்து மீடியாக்களும் இதை அடுத்த சிக்ஸராக வெளியிட காத்து கொண்டிருக்கிறார்கள், அரசியலுக்கு முன்னர் காதலித்தோம் என்றாலும், சாருவும் ஒரு பினாமியாக இருக்கலாம் எனக்கூட விசராணை நடக்கலாம் என ஒரு வக்கில் நண்பர் சொல்கிறார்!

சாருவிற்கு அழிவு வேறு யாராலும் வரப்போவதில்லை, சாருவின் பதிவில் இன்றைய மனுஷ்யபுத்திரனின் கடிதத்தை பார்த்தாலே தெரியும், வாய்ப்பளித்து கொண்டிருந்த ஒருவரையும் பகைத்துவிட்டு தான் பார்பனபத்திரிக்கைக்கு அடிவருட போய்விட்டார் போல!, இனி இணையத்தில் பிச்சை எடுக்க முடியாத நிலை வந்து விட்டது, சாருவும், அவரது அடிவருடிகளும் அடுத்த குப்பி பாகத்துக்கு ரெடியாகிவிட்டதாக ஏஜென்ஸி தகவல்கள் சொல்கின்றன, அப்பாவி சாரு வாசகர்களின் பின்புலம் பத்திரம்!

****

அவசரத்தில் எழுதியது, எழுத்துபிழையை நேரம் கிடைக்கும்பொழுது திருத்துகிறேன்!

வருணா!




இங்கிருந்து தவழ்ந்து!........



தவழ்ந்து



இங்க வந்துட்டா!


ஜப்பான் சுனாமி - நண்பர்கள் கவனத்திற்கு!



ஜப்பானில் இன்று மதியம் 2:46 மணிக்கு (JST) ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. அதனினும் கொடுமையாக 900 கிமீ வேகத்தில் சுனாமி அலைகள் ஜப்பான் நாட்டை சூறையாடியுள்ளன. தற்போதைய நிலவரப்படி மின்சாரம், தொலைதொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் இது போன்ற ஒரு பாரிய பேரிடர் ஏற்பட்டதில்லை என கருதப்படுகின்றது. உலகே ஒன்றிணைந்து ஜப்பானை கட்டியெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில அவசர கால உதவிகளை பல்வேறு அரசுகளும், நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பற்றிய தகவல்களை பலருக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் இடர்ப்பாடுகளில் சிக்கியிருப்பவர்களை, காணாமல் போயிருப்பவர்களைக் கண்டறிவதில் உதவுவோம்.

----------------------------------
ஜப்பானில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் அறிய, டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஏறத்தாழ 25000 இந்தியர்கள் ஜப்பானில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
00813 32622391
00813 32622392
00813 32622393
00813 32622394
00813 32622395
00813 32622396
00813 32622397

----------------------------------------------------------

தொடர்பில் இல்லாமல் போனவர்களுக்கான தொடர்புகளை உறுதிபடுத்துவதற்கான சேவையை கூகிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. Japan Person Finder என பெயரிடப்பட்டுள்ள அத்தளம் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் தகவல்களை அளிக்கின்றது. நீங்கள் அளிக்கும் தகவல்கள் உடனடியாக பதிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தவறான தகவல்களை அளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


----------------------------------------------------------

Japan Person Finder தளம் தவிர கூகிள் நிறுவனம் Crisis Management தளம் ஒன்றினையும் நிறுவியுள்ளது. அதன் மூலமும் பல தகவல்களை பெற முடியும்


----------------------------------------------

இப்பொழுது ஏற்பட்டுள்ள சுனாமி ஜப்பான் மட்டுமின்றி இன்னும் பல நாடுகளையும் தாக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய அபாயங்களை விளக்கும் தளம் ஒன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.


---------------

இக்கட்டான தருணத்தில் நேரிட்டிருக்கும் இப்பேரிடர் பற்றிய உண்மையான உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை பரவச் செய்து பாதிப்பில் இருந்து மக்களைக் காப்போம்.


நண்பர்கள் உங்கள் தளங்களில் இதை பகிர்ந்து கொள்ளலாம்!




முக்கியமான தகவல்கள் கிடைத்ததும் அவை பிற்சேர்க்கைகளாக எங்களின் மற்றொரு தளத்திலும்,  சேர்க்கப்படும். 

அட்டென்ஷன் அமெரிக்கப்ளாக்கர்ஸ்!

முதலில் அமெரிக்கர்களுக்கு மட்டும் அறிமுகபடுத்தப்பட்டிருந்த கூகுள் வாய்ஸ் கால் வசதி தற்பொழுது இந்தியாவிலும் தொடங்கி விட்டது, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இலவ்சமாக பேசலாம்

செல்போன் மற்றும் லேண்ட்லைனுக்கு

அமெரிக்க நண்பர்கள் உங்களது அலைபேசி எண் மற்றும் உங்களை அழைக்கும் நேரத்தையும் மெயில் பண்ணுங்க ப்ளீஸ்

விபரம் தெரிந்ததும் பாஸ்டன் ஸ்ரீராமுக்கு கூப்பிட்டு மொக்கை போடலாம்னு நினைச்சேன், ஆனா அவர்களுக்கு இன்கம்மிங்க்குக்கும் மினிட்ஸ் கழியும் என்பதால் அவர்களது நேரத்தை அறிந்து அழைப்பது உசிதம் என பட்டது!

என் மெயில் ஐடி

arunero@gmail.com





தெரியாத நண்பர்களுக்காக படம் இனைத்திருக்கிறேன்
நம்பர் போடும் போது முதலில் +1 போட்டுகோங்க, அப்ப தான் அது அமெரிக்கா போகும்!
நம்பர் தப்பா கூப்பிட்டு ராங்கால் பண்ணிராதிங்க, நிறைய கம்ப்ளையண்ட் போனா இந்த வசதியை கட் பண்ணிருவாங்க, நல்ல மூறையில் பயன்படுத்திகிட்டா நட்பு பலப்பட வசதியாயிருக்கும்!

(நடுநிசி)நாய்களும், மனிதர்களும்!

தண்டோரா மணிஜீ அவர்களின் இந்த பதிவை படித்த பிறகு எழுத தோன்றியது!

நான் படம் பார்க்கல!(பார்ப்பதுமில்லை, பார்க்க நேரமுமில்லை)

இருந்தாலும் இங்கே கேட்கப்பட்டிருக்கும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லனும் என்ற உந்துதல் தோன்றுகிறது!

குடித்து விட்டு மலத்தை தின்பார்களா என்ற கேள்வி அது!

கலவி என்பது இயற்கை உந்துதல், குடித்து விட்டு வெறியில் தாயை நோண்டியவனும், சகோதரியை நோண்டியவனும் உண்டு, மலத்தை தின்பது அவனது மூளையில் ஏற்றப்பட்டதல்ல!

பாலியல் சுதந்திரம் இல்லாதது இந்தியாவில் பெரிய பின்னடைவு, 23 வயது என்பது காமத்தை அடக்கியே ஆள வேண்டும் என்ற காட்டாயத்தில் உள்ளதல்ல, நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்து விட்டேன்!

ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, மனிதன் ஆதியிலேயே வன்முறையால் நிரம்பப்பட்டவன், அவர்களாக களத்தில் இறங்காவிட்டாலும் மற்றவர்கள் செய்யும் அடிதடியை ரசிப்பார்க்கள், நன்றாக கவனியுங்கள் பொதுபுத்தியில் ஆக்‌ஷன் ஹீரோக்களே ரோல்மாடல்களாக இருப்பார்கள், அடுத்தது காதல் மன்னன்கள்!

எத்தனை பேர் சாமியார்களை(நித்தியானந்தாவுக்கு ஏகபட்ட ரசிக குஞ்சாமணிகளாம்) ரோல் மாடல்களாக ஏற்று கொண்டுள்ளார்கள்!




ஆழ்மனதில் உள்ள வன்முறை தூண்டப்பட்டால் கூடவே செக்ஸும் சேர்ந்து கொள்ளும், ஒன்றுக்கொன்று இணையானது, ஆதியில் மனிதர்கள் இணைகளை வன்முறையின் மூலமே அடைந்தார்கள், இன்றும் விலங்கினங்களுக்கு வன்முறையான போட்டி இல்லாமல் ஜோடி கிடைப்பதில்லை.

நாமனைவரும் சமூக விலங்குகள், விதிவிலக்குகளை கட்டுடைத்தல் என்ற முறையில் மாற்றுகோண பார்வையாக மட்டுமே எடுத்து கொள்ள முடியுமே தவிர அதை நியாயபடுத்துதலும், அதையே வாழ்வின் நிலையென்பதும் அடிப்படை நியாயமற்ற தர்க்கங்கள்.

ஏன் சென்சார் அனுமதி வழங்கினார்கள், ஏ சர்டிபிகேட் கொடுத்தும் மக்கள் ஏன் போய் பார்க்கிறார்கள், அவர்கள் வந்து பார்க்க்லைன்னு யார் அழுதா என்பதெல்லாம் பிரச்சனையின் மையத்தை விட்டு உட்காரும் இடத்தில் கொழுப்பு கூடி போய் ஆடி கொண்டே பேசுவது!

கற்பழிப்பு என்பது அதை செய்பவனின் பார்வையில் நியாயம், ஆனால் கற்பழிக்கபட்ட உயிர் என்ன கொண்டைகால் மயிரா!?. பாலியல் வறட்சி தான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் என்று சொன்ன சிக்மண்ட் ப்ராய்டை இங்கே நினைவு கூறுகிறேன்!

குடிபோதையில் சாதரணமாக இருப்பதை விட தைரியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பது நிச்சயம் குடிகாரர்களுக்கு தெரியும், மலத்தை தின்ன குடிகாரர்களுக்கு தைரியம் தேவையில்லை.
கற்பழிக்கவும், கொலை செய்யவும் அவனுக்கு ஏற்பட்ட உணர்வின் காரணம் குடியும் அவன் மனதில் புரையோடிய திரைப்படத்தின் காட்சிகளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சினிமா தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய/ஏற்படுத்தி கொண்டிருக்கிருக்கிற மாபெரும் ஊடகம், அத்துறையினருக்கு இருக்கும் சமூக பருப்புகளில் ஸாரி பொறுப்புகளில் சில நேரங்களில் அதிகபடியாக மறுபக்கத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டு படுக்கையறைக்குள்ளும் கேமரா வைக்க முயற்சிப்பார்கள்!

ஷங்கர் படங்களை பார்க்கும் பொழுது அம்பிகள் மட்டுமே சமூக பொறுப்புள்ளவர்களாகவும், எல்லா பிரச்சனைக்கும் ஷங்கரிடம் தீர்வு இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும், திருத்துகிறேன் என்ற பெயரில் ஊடக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் ஷங்கரை விட, கெளதம் மேனன் மிக மோசமானவராக எனக்கு தெரிகிறார்!




தண்டனை என்பதே திருந்துவதற்காக தான் என்பது அனைவரும் அறிந்தது, ஆனால் நாளடைவில் அது சேடிஷத்தின் உச்சிக்கு சென்றது, ஒருவரை தண்டனைக்குள்ளாக்குவது, கொடுமை படுத்துவது மனவக்கிரத்தின் உச்சத்திற்கு சென்றது, அதனை நிரூபித்து கொண்டிருக்கிறது இன்றைய ஊடகங்கள். அதற்கு உதாரணம் நடுநிசிநாய்கள்!

இவையனைத்தும் என் கருத்துகள் மட்டுமே, நல்லதொரு உரையாடலை நோக்கி!

ரவியண்ணே கொஞ்சம் ப்ரேக் விடுங்க!


நண்பர் ஜீவ்ஸ் விட்ட பஸ் இது.

முதலில் ரவியண்ணன் பற்றி சில தகவல்கள்.

அவுங்கப்பா ஒரு ரிட்டயர்டு புரபஸர், ரவியண்ணன் ஈரோட்டில் கேபிள் நடத்தி கொண்டிருந்த போது எனக்கு பழக்கம், ஆதியிலேயே டெக் வைத்து கேபிள் போட்ட காலத்திலிருந்து கேபிள் நடத்தியவர் பின் அதை விற்று விட்டு கிளம்பிவிட்டார், அவர் ஒரு இயற்கை விரும்பி, வனப்பிரியர். கோவையில் இருக்கும் மேல்முடி என்ற மலையை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.

நீள்வட்ட பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சூரியனில் இரண்டு முறை குளிர்காலமும், இரண்டுமுறை வெப்பகாலமும் வரவேண்டுமே என எனது நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தவர், இரண்டு அங்குல பி.வி.சி பைப் துண்டுகளை வைத்து டெலஸ்கோப் செய்து சிறுவயதில் எங்களை அசத்தியவர். இன்று அவர் நம்பும் ஒன்றை புரியவைக்க மிகவும் கடினப்படுகிறார்!

பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார் அவரது புரிதல்கள் பற்றி பதிவாய் எழுத, அவரது கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் அது எனக்கு புரிந்திருந்ததே அதற்கு காரணம்!
அவரது கருத்தை எனது புரிதலில் சொல்ல வேண்டுமானால் “ஒரு மரம் சாய அதிலிருந்த குருவி கூடு தான் காரணம் என்கிறார்” . கேயாஸ் தியரி மாதிரி என்றேனும் ஒருநாள் என்னுடய புரிதல் தவறு என்றோ, அல்லது அதற்கு வேறு விளக்கமோ அவர் சொல்லக்கூடும், மேலும் அவரது புரிதல்களை விளக்குவது பதினான்கு ரீல் படத்தில் இடையில் ஒரு ரீல் மட்டும் காட்டுவது, அதை புரிந்து கொள்வதற்கு என்னை போல் வேலை வெட்டி இல்லாமல் இருந்திருக்க வேண்டும்!

என்னுடய புரிதல்களை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்!
அதற்கு முன் சில முன்கதை சுருக்கங்கள்!


சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக இருக்கும் பூமியில் மட்டுமே நீர் ஆதாரம் மிகமிக அதிகபடியாக உள்ளது, அதற்கு காரணம் பூமியின் தட்பவெப்பநிலை, நமக்கு பின் இருக்கும் செவ்வாய் கிரகம் பூமியை விட அதிக வெப்பத்தை உள்வாங்கும் தன்மையுடயது என்பதை இவ்விடத்தில் நியாபகபடுத்துகிறேன்!


பலகோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பூமியை சுற்றி பரந்த தூசி படலம் சூழ்ந்தது, சூரியனின் வெப்பம் நேரடியாக தாக்க முடியாமல் பூமி குளிர்ந்தது, இறுக்குநிறை கொள்கையின் படி குளிர்ந்த பூமியின் எடை கூடியவுடன் அதன் ஈர்ப்பு விசையும் அதிகமானது, பூமியை சுற்றிய ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகள் ஒன்றினைது நீராக உருவெடுத்தது, தொடர்ச்சியான மழை பூமியை மேலும் குளிர்வித்தது.

அணுவின் உட்கருவாக நியூட்ரான், தன்னை தானே பெருக்கிக்கொள்ளும் நியூக்கிளியஸாக மாறிய தற்செயல் நிகழ்வு பிரபஞ்ச வரலாற்றில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது(அதை பற்றி யாரும் ஆராய்ச்சி பண்றாங்களா தெரியாது). ஊடுருவிய சூரியஒளியை பயன்படுத்தி பச்சையம் மூலம் ஒளிச்சேர்கை செய்து ஆக்சிஜனை வெளிவிடும் தாவரங்கள் முதலில் தோன்றின, ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்து தொடர்ச்சியான மழையை பூமியில் உருவாக்கின!



ஒருகாலத்தில் முற்றிலும் சூழப்பட்ட பூமியின் உள்ளிருக்கும் அவுட்டர்கோரில் ஏற்பட்ட அழுத்தவிசையின் காரணமாக எரிமலைகள் தோன்றி புது புது தீவுகளை உருவாக்கின, தற்போதிருக்கும் நிலப்பரப்பு தோன்றியது, தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஆவியாதல் வினை நிலப்பரப்பில் மழையாக பெய்தது, ஆறுகளாக அடித்து செல்லப்படும் நீரில் மண்ணில் இருக்கும் உப்புகள் பல கோடி ஆண்டுகளாக கடலில் போய் சேர்ந்தது(கவனிக்க - எந்த வேதத்திலும் கடல் உப்பு நீராகவே படைக்கட்டதற்கான ஆதாரங்கள் இல்லை, அப்படியே படைத்திருந்தாலும் அது ஏன் என்ற காரணமும் இல்லை).



இதிலிருந்து ரவியண்ணன் என்னிடம் சொன்னதின் என் புரிதல்

வெப்பம் குறைவாக இருக்கும் பகுதிகளில் நீர் உறைநிலையை அடைந்தது,  இது எல்லாருக்கும் தெரிந்த அறிவியல் விதி, ஐஸ்கட்டியின் மீதி உப்பை தூவினால் அதன் உருகுநிலை மாறுபடும், அதாவது உருகுவதற்கு அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும். வட தென் துருவங்களில் சேர்ந்திருக்கும் தொடர்ச்சியான பனிபடலங்கள் பூமியின் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுத்து கொண்டிருக்கிறது என்பது அவரது வாதம், நிலப்பரப்பில்லாத வடதுருவ ஆர்டிக் பிரதேசத்திலும் அதே நிலை அழுத்தம் கொடுக்கிறது என்கிறார்(இங்கே தான் நான் முதன்முதல் முரண்பட்டேன்).

அதிக உப்பின் காரணமாக பனிபடலங்கள் உருகாமல் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது, அதாவது குளோபல் வார்மிங் காரணமக பூமி வெப்பமடையவில்லை, குளிர்ந்து கொண்டு இருக்கிறது என்கிறார். பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்ந்த உப்பின் அளவே அனைத்திற்கும் காரணம் என்றும், அதை குறைத்தால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும் என்றும் சொல்கிறார்.

 உதாரணமாக அழுத்தம் காரணமாக அதாவது ஒரு கால்பந்தின் மீது காலை வைத்து அழுத்தினால் அதன் விரிவு விசை நடுப்பகுதில் செயல்படும் என்பது போல் பூமி தட்டுகள் நகர்ந்து பூகம்பத்தையும்(சுனாமி) எரிமலையையும் உருவாக்குகிறது என்கிறார்!

இது உண்மையாகவே இருந்தாலும் இதை எப்படி தடுக்கப்போகிறார் என்று என்னிடம் சொன்னதில்லை, இவர் முனிசிபால்டி வாட்ச்மேனிலிருந்து நாசா விஞ்ஞானி வரைக்கும் அனுப்பிய மடல்களுக்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை, ஆனால் பாவம் மனுசன் தனியா கத்திகிட்டே இருக்கார்.

அவர் சொன்னதிலிருந்து எனது புரிதல்களை எழுதியிருக்கேன், இதில் அவருக்கு மாற்று கருத்தும் இருக்கலாம், அதை அவரே வந்து விளக்கி சொன்னால் தான் ஆயிற்று!, இது தான் பிரச்சனை என்றால் இதற்கான தீர்வையும் அவர் தான் சொல்ல வேண்டும்!

***************

ரவியண்ணன் உலக விஞ்ஞானிகளுக்கு விடுத்துள்ள அறைக்கூவல்

அண்ணா, ரொம்ப நாள் சொல்லிகிட்டே இருந்திங்க, இன்னைக்கு எழுதிட்டேன் சந்தோசமா!

கேள்வியும் எனது புரிதல்களும்! - 1


கேள்விகளை இன்னும் கேட்டு கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றி!,
உங்கள் கேள்விக்கான எனது புரிதல்களை அளித்திருக்கிறேன், அவையே இறுதி பதில் அல்ல!


//கும்க்கி said...

தல.,

நீங்க நல்லவரா...இல்ல கெட்டவரா?
(சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி...மனசாட்சிப்படி பதில் சொல்லவும்)//

பொதுவான பார்வை என்ன?
நல்லது  செய்தால்  நல்லவர், கெட்டது செய்தால் கெட்டவர்.
டெபாசிட் செய்தவருக்கு வங்கி கொடுக்கும் வட்டி, கடன் வாங்கிய ஒருவர் வங்கிக்கு கொடுத்த வட்டி, செயல்கள் என்றும் ஒற்றைதன்மையில் முடிவதில்லை, ஒருவருக்கு நல்லது மற்றொருவருக்கு கெட்டதாக இருக்கலாம். நான் நல்லவனா, கெட்டவனா என ஆராய்வதை விட மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்!.

அகத்தில் நல்லவனாக நினைத்துக் கொண்டும், புறத்தில் கெட்டவனாக நடித்துக் கொண்டும் வாழ்வதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு தல!

*********************

பதிவுலகில் மொக்கை பதிவு போடுரவங்கள என்ன செய்யலாம்.?//


பதிவுலகம் எதற்காக உருவாக்கப்பட்டது என அறிவீர்களா!? உண்மையில் முழுக்க முழுக்க மொக்கைக்காக தான். பதிவுலகின் பரிணாம வளர்ச்சி தான் சமூகசிந்தனைகளை வெளிப்படுத்துதல், ஒரே மாதிரியான சுவை சில நேரங்களில் சலிப்பு தட்டுவது போல், மொக்கைகளும்.. ஏன் சில நேரங்களில் சீரியஸ் பதிவுகளுமே சலிப்பு தட்டிவிடும்!, இங்கே யாருக்கும் எதையும் வலிய திணிப்பதில்லை, அவரவர்க்கு தேவையானதை எடுத்து கொள்ளும் உரிமை அவரவர்க்கு உண்டு! மொக்கை போடுவதும் அவரவர் உரிமை, நடிக்காமல் அவருக்கு தெரிந்ததை செய்கிறார் என்ற முறையில் நானாக இருந்தால் பாராட்டுவேன், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்!

***************




இரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..
விவரம் அறிய கவிதை வீதி வாங்க..//

இது எனக்காக கேள்வியா அல்லது உங்கள் பதிவின் விளம்பரமா!?
என் காதலிகள் யார் வீட்டிலும் குட்டை சுவர் இல்லாததால் ஏறி குதிக்க வேண்டிய வேலை இல்லாமல் போயிற்று!. 

****************

/உங்களையும் இந்த வியாதி தொத்திக்கிச்சா?/

உடற்கூறில் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்ய உடல் செய்யும் போரே காய்ச்சல், ஆனால் நாம் காய்ச்சலுக்கு மருந்து சாப்பிடுகிறோம்!, எது வியாதி!?

//எங்களை பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலயா?//

பாவம், புண்ணியம் பார்த்தா தொழில் பண்ண முடியுங்களா!?


//உங்களால ராஜன் கெட்டாரா? இல்லை ராஜனால நீங்க கெட்டீங்களா?//

என்னால் ராஜனும், ராஜனால் நானும் நிறைய கற்றோம்!


(கறிய ரெண்டு நாள் வெளிய வச்சா கெட்டு போயிரும். 
பாலை ஒரு நாள் வச்சாலே கெட்டு போயிரும். 
எப்படி கெட்டமோ.......தெரிஞ்சும் தேடி வந்த நல்லவுக நீங்க. நல்லா இருங்க ஆத்தா !!
( கெட்டவங்க கூட்டத்தில நல்லவங்களா வந்து சேருவாய்ங்க ....?   ஒரு டவுட்டு ) )


//உங்களைப் பத்தி ஒரு கிசுகிசு கேள்விப்பட்டேனே? உண்மையா?//

உரக்க சொன்னால் மட்டும் உண்மையில்லை, சில உண்மைகள் கிசுகிசு பாணியிலும் பரவும்!

***********************




இன்னைய சந்தை நிலவரப்படி... ஒரு ஓட்டு என்ன விலை?//

நான் ஓட்டுக்கு காசு வாங்குவதில்லை, அதனால் சந்தை நிலவரம் தெரியவில்லை. எனக்கு தெரிந்து ஒரு ஓட்டின் விலை உரிமை, சுயமரியாதை!

//ஓட்டுக்கு காசு கொடுக்காத கட்சி ஆட்சி அமைக்குமா?//

வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்யும் மனிதர்கள் இருக்கும் வரை ஆட்சி அமையும் வாய்ப்பு உண்டு தானே!

//காசு வாங்கிக்கிட்டு ஓட்டு போட்டவனின் அடுத்த அய்தாண்டு நிலை என்னவா இருக்கும்?//

உரிமை மறுப்பு, சுயமரியாதை இழப்பு!

********************




டோண்டுவை காலி பண்ணி அவர் இடத்தைப் பிடிப்பதற்காகவே இந்த உத்தியைக் கையிலெடுத்திருக்கிறீர்களா?

யோசிச்சுப் பாருங்க, இந்த மாதிரில்லாம் கேள்விகள் வரும். உங்களுக்குத் தேவையா :)//

அதான் நீங்களே கேட்டுடிங்களே,
டோண்டு பதிவிலேயே அவருக்கு வரும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிகிட்டு இருப்பேன் பார்த்ததுண்டா!,
பதிலை தேட கேள்விகள் தூண்டுவதால் எனக்கு கேள்விகள் பிடிக்கும். இந்த பதிவில் எனது பதில்களின் மூலம் புரிந்து கொண்டு நண்பர்கள் உச்சபட்ச தேடலை எனக்களிக்கும் கேள்விகளை எனக்கு வழிக்கு ஒளிகாட்டியாக தருவார்கள் என நம்புகிறேன்!

//ரெண்டையும் ரெண்டையும் கூட்டினாலும் நாலுதான் வரும், பெருக்கினாலும் நாலுதான் வரும். ஆனா மூணையும் மூணையும் கூட்டினா ஆறு வரும், பெருக்கினா ஒம்பது வரும். இதுதான் சார் வாழ்க்கைன்னு யாராச்சும் உங்ககிட்ட தத்துவம் சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?//

நீங்க ரொம்ப புத்திசாலியாக இருக்கிங்க, உங்ககிட்ட கத்துக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு, அது இருக்கட்டும் உங்க ப்ராண்ட் ”ரம்” தானே என கேட்பேன்!




உங்களுக்குப் பிடிச்ச கதாநாயகி, கதாநாயகன், அரசியல் தலைவர் யார் யார்னு பட்டியல் போட முடியுமா?//

வந்த கேள்விகளிலேயே என்னை அவமானபடுத்தும்(நன்றி-சாரு) கேள்வியாக இதை நினைக்கிறேன், இருந்தாலும் என் பாணியில் பதில் சொல்வது தானே முறை!

கதாநாயகி- என் காதலி

கதாநாயகன் - நான் தான்

அரசியல் தலைவர் - அதுவும் நான் தான்!
சுயபுத்தியுள்ள ஒவ்வொரு மனிதனும் அவனவன் சார்ந்த, அவனை சூழ்ந்த அரசியலில் தலைவன் தான், எவனொருவன் தனக்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து கொள்கிறானோ அவன் தன்னை தலைவன் எனச்சொல்லும் தகுதியை இழக்கிறான்!




கொஞ்சம் ‘ஏ’டாகுடமான கேள்விகளையும் இங்கேயே கேட்கலாமா இல்லை தனிமடலில்தான் கேட்க வேண்டுமா?//

பதில் சொல்ல நான் தயாராக இருக்கும் பொழுது கேள்வி கேட்க உங்களுக்கு ஏன் தயக்கம் தல!




உங்க வாழ்க்கையில் நீங்க எதைப் பெரிய சாதனையாக நினைக்கறீங்க?//

வாழ்ந்து கொண்டிருப்பதை!

******************




என்னடா பதிவு எழுத வந்தோம் என எப்பொழுதாவது நினைத்ததுண்டா?//

குழந்தையாக இருக்கும்பொழுது நினைத்ததுண்டு!


இதான் குழந்தையா இருக்கச்ச எழுதிய அந்த பதிவு!




நீங்கள் ஏன் உங்களை இளமையாக காட்ட "டை" பயன்படுத்துவதில்லை..//

இளமையாக இருப்பவன் அதை ஏன் காட்ட வேண்டும்!?
(என் காதலிக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது)





உங்களுக்கு பிடித்த அமைச்சர் எ.வ.வாலுவா சாரி எ.வ.வேலுவா?//

யாரு வேலு!?




வால் பையன் - ஏன் இன்னும் வளரவே இல்லை.. (பெயரில்)

வருசத்துக்கு ஒருமுறை பெயர் மாத்திகிவிங்களா தல!?

*********************




நீங்க சரக்கடிக்க உட்கார்ந்தா எத்தனை ரவுண்ட் அடிப்பீங்க?
ஓசில சரக்கடிச்சது உண்டா?
சரக்கை சுட்டு(திருடி) குடித்த அனுபவம் உண்டா?//

ரவுண்ட், சதுரம், செவ்வகம்னு பல டிசைன்ல பல்டி அடிப்பேன், அதுக்கு முன்னாடி நான் ஏகப்பட்ட குஷியில் இருக்கனும்.

என் பாக்கெட்டில் இருக்குறதெல்லாம் என் காசுன்னு நினைச்சிங்களா, நான் எப்பவுமே உலகை சார்ந்து இயங்குபவன் தான். எல்லாமே எனக்கு ஓசியா தான் கிடைக்குது!

இவ்வுலகில் எதையும் யாரும் திருட வேண்டிய அவசியமில்லை, பொருள் சார்ந்த சமூக குணத்தில் வாழ்பவர்களுக்கு தான், இது என்னுடயது, அது உன்னுடயது, எனக்கு எல்லாவற்றையும் அனுபவிக்கும் உரிமை உண்டு! நான் ஏன் திருடி சாப்பிடனும்!?

***********************************
மீதி கேள்விகளுக்கான எனது புரிதல்களை நாளை இடுகிறேன்!




படம் உதவி


!

Blog Widget by LinkWithin