சுய இன்பம்- தவறான புரிதலும் விளக்கமும்

கேள்விகள் தான் அறிவின் ஆரம்பம். அதும் யாரும் பேசதுணியா விசயத்தில் சந்தேகம் கேட்ட நண்பரை முதலில் பாராட்டுகிறேன்.

நானும் உங்கள் வயசை கடந்து வந்தவன் தான் அல்லது தொடபோகிறவன் தான். என்னிடம் உள்ள வித்தியாசம், எதை சரின்னு சொன்னாலும் அது ஏன் சரின்னு யோசிப்பேன், தப்புன்னு சொன்னாலும் அது ஏன் தப்புன்னு யோசிப்பேன். அந்த புரிதலில் உங்களுக்கு சில விளக்கங்கள். இது சுய இன்பத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் கொடுக்கும் விளக்கமல்ல. உங்கள் குற்ற உணர்ச்சியை கலையும் முயற்சி.

கேள்வி
matha mirugangala vida humans ku sex mela athiga aarvam iruka karanam enna thala?

மற்ற விலங்குகளுக்கு(சிம்பன்சி விதிவிலக்கு) செக்ஸ் இனப்பெருக்கத்திற்காக மட்டும். மனிதன் அதில் பல நிவாரணங்களை கற்றான். பல பேண்டஸிகளை புகுத்தினான். செக்ஸ் சிறந்த யோகா மற்றும் தியானமும் கூட. தியானம் என்றால் வேறு சிந்தனையில்லாமல் இருப்பது. செக்ஸின் போது ஆபிஸ்ல நாளைக்கு என்ன வேலையோன்னு யோசிப்பிங்களா?

negative side of masterbation pathi solluinga thala

தவறான நம்பிக்கைகள் தான் அதோட நெகடிவ் பக்கம்.
பெண்ணுடன் உடல் உறவுக்கும், சுய இன்பத்திற்கும் உங்கள் ஆண்குறி அதே ஆக்சனை தான் கொடுக்கப்போகுது. ஆனால் சுய இன்பத்தில் மட்டும் எப்படி உடலுக்கு கெடுதியாகும். எதோ மருந்து சாப்பிட்டு பெண்ணுடன் 5 நிமிசம் இயக்குவது பெருமையான விசயம். ஒரு நிமிடம் சுயமைதுனம் செய்வது எப்படி கெடிதியாகும்?

பெண்களுக்கு செக்ஸ்க்கு தயாராக லூப்ரிகண்ட் ஆகும். தொடர்ச்சியா 5 நிமிசமெல்லாம் செயற்கையாக தயாரிக்கப்பட்ட செக்ஸ் விடீயோக்கள் மட்டுமே சாத்தியம். ஒரு சில நிமிடங்களில் பெண்களுக்கு அங்கே வலியும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சும். அதிக நேரம் எடுத்துக்கொள்வது ஆண்மையல்ல. அதிக காதலை காட்டுவதே ஆண்மை.

விந்து வெளிப்படும் போது உடலில் இருந்து புரதமும் வெளிவரும். மீண்டும் விந்து பையில் விந்தணுவை பாதுகாக்க உடலில் இருந்து புரதத்தை எடுக்கும். (பெண்களுக்கு விட்டிமின் சி எடுக்கும். அவர்கள் கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும்) அது தொடரும் போது உடலில் புரத இழப்பு ஏற்பட்டு சோர்வாகும். அதற்கு நீங்கள் புரதம் எடுத்துக்கொண்டாலே போதும். உங்களுக்கு எதிர்மறை நம்பிக்கைகள் மூலம் பயம் ஏற்படுத்தி அந்த பயத்தை பயன்படுத்தி சம்பாரிப்பவர்கள் நான் சொல்வது பொய் என்று அறிவியல் பூர்வமாக நிரூப்பித்தால் நான் அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி தர்றேன்.

psychological ah problems varum nu solranga ?

விலங்குகள் பருவம் அடைந்தவுடன் தன் துணையுடன் சேர உங்களையோ, என்னையோ கேட்ட வேண்டியதில்லை. அது தன் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் மனிதன் என்ற சமூக விலங்குக்கு பல சட்டதிட்டங்களும், ஒழுக்க விதிகளும் உள்ளன. ஆக மனிதன் தன் செக்ஸ் உணர்வுகளை மறைத்தே வைக்க வேண்டியுள்ளது. சுய இன்பமும் தவறு என்று சொல்லப்பட்டிருப்பதால் அதை செய்தால் பெரும் தவறு செய்து விட்டது போல் மன உளைச்சலுக்கு ஆளாவான். நிறைய மன அழுத்தம் சமூக கோவமாக திரும்பும். தனக்கு கிடைக்காத செக்ஸ்க்காக அவன் வன்முறையில் இறக்குவான். சமூகத்தில் நடக்கும் முக்கால்வாசி பாலியல் வன்முறைக்கு காரணம் பாலியல் வறட்சியும், புரிதலின்மையுமே.

முதலில் குற்ற உணர்வை கலையுங்கள்
2000 ஆண்டுகளுக்கு முன்பே இருக்கும் பைபிள் பழைய ஏற்பாடு ஆதிகயாமம் 29 அதிகாரம் ஒரு வசனம் சொல்லுது. நீ இறந்து போன உன் சகோதரனின் மனைவி திருமணம் செய்து கொள். உன் விதைகள் மண்ணில் விரயம் செய்யாதேன்னு(படிக்கிறது இப்படியெல்லாம் யூஸ் ஆகுது) அதற்கு முன்பே கிரேக்க நாகரிகத்தில் டீன் ஏஜ் பையன்கள் பாட்டி முன்னாடி சுய மைதுனம் செய்துட்டு தான் போய் படுக்கனும். அப்ப தான் தூக்கம் வரும்னு ஒரு நம்பிக்கை.

தவறான நம்பிக்கைகளை தருவதும், பயத்தை ஏற்படுத்துவதும் அதை வைத்து காசு பார்க்கும் தவறான மனிதர்கள் மட்டுமே. உங்கள் நட்பு வட்டாரத்தில் இருக்கும் மருத்துவர்களின் கேட்டுபாருங்க. அதெல்லாம் உண்மையில்லைன்னு தான் சொல்வாங்க.

sex addiction pathium konjam solluinga

செக்ஸ் ஆர்வம்னு சொல்லுங்க அதை. செக்ஸ் அடிமைன்னு சொல்லாதிங்க. மனிதன் எதோ விசயத்தில் ஆர்வமா தான் இருக்கான். எனக்கு கூட படிப்பதிலும் அதை புரியும்படி எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். அதை அடிமைதனம்னு சொல்விங்களா?
சரியா புரியாத, தெரியாத ஒன்றின் மேல் ஆர்வம் ஏற்படுவது இயற்கை தான். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசி உங்கள் விருப்பங்களை சொல்லி அதை நிறைவேற்றிக்கொள்வதில் தவறில்லை. ஒரு விசயம் தெரியாத வரை அது உங்கள் மண்டைய குடைஞ்சிகிட்டே தான் இருக்கும்

athanala body ku yentha problem uh illaiya thala

நம்மால் தூங்கிகிட்டே இருக்க முடியுமா?
சாப்பிட்டுகிட்டே இருக்க முடியுமா?
நம் உடலில் உள்ள பயாலாஜிகல் மெக்கானிசம் மிக அருமையானது. அதற்கு என்ன தேவை என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும். பசிச்சா சாப்பிடுங்க. யூரின் வந்தா போங்க. செக்ஸ் பண்ணனும்னு தோணுனா பண்ணுங்க. சிறு வயதில் இருக்கும் ஆர்வம் போக போக புரிதலுடன் நடக்க ஆரம்பிக்கும்.
புரூஸ்லீ சொல்லுவார். ஐ டோண்ட் வாண்ட் ப்ராக்டீஸ் 1000 பஞ்ச்ஸ்
ஐ வாண்ட் பஞ்ச் குட் ஒன் அது ,மாதிரி தான் உறவும் இருக்கனும். புரிதலுடன் நடக்கும் ஒரே ஒரு உடலறவு ஏற்படுத்தும் காதல் பிணைப்பிற்கு குறுக்கே எதுவும் வர முடியாது. பல தம்பதியர்கள் இன்றும் அதே காதலோடு இருக்க காரணம் அது தான்

#கேள்விபதில்
கேள்விகளை இன்பாக்ஸில் கேட்கலாம்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin