பகுத்தறிவு மூடநம்பிக்கைகள்! (இஸ்லாமிய நண்பர்கள் மன்னிக்கவும்)

நண்பர்கள் மன்னிக்கனும் கொஞ்சம் மொக்கையிலிருந்து விலகி சொறிஞ்சுகிறேன். நான் சும்மா இருந்தாலும் என்னை சொறிஞ்சி விட்டு போறதால வர்ற பின்விளைவுகள் தான் இதெல்லாம்.

பூனையை தூணில் கட்டிய கதை உங்களுகெல்லாம் தெரியும்னு நினைக்கிறேன், தெரியாதவங்களுக்கு சுருக்கமாக

ஒரு ஆஸ்ரமத்துல குரு பாடம் சொல்லி கொடுத்துகிட்டு இருக்கும் போது ஒரு பூனை குறுக்காலையும், நெடுக்காலையும் போய்கிட்டு இருந்தது, மாணவர்களுக்கும் அது தொந்தரவா இருக்கவே, குரு அதை பிடிச்சி தூண்ல கட்ட சொன்னார். வகுப்பு முடிந்ததும் மீண்டும் அவுத்து விட்டுடாங்க

ஆனா மறுநாளும் அதே பூனை வந்து தொந்தரவு பண்ணுச்சு. குரு ஒரு பார்வை பார்த்தவுடனே மாணவர்கள் அதை பிடிச்சு தூண்ல கட்டிடாங்க, மறுநாள் குரு வர்றதுக்கு முன்னாடியே பூனை வந்துருச்சு, அதனால குரு வரும்போதே பூனை தூண்ல கட்டப்பட்டிருந்தது.

காலம் கடந்தது, ஒரு நாள் அந்த பூனை செத்து போச்சு, புதிய மாணவர்களுக்கு ஒன்னுமே புரியல, குரு வந்தா பூனை எங்கேன்னு கேட்பாரேன்னு பயந்து ஒரு புது பூனையை பிடுச்சி தூண்ல கட்டினாங்களாம்.

காலங்காலமா மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சொல்லப்பட்டு வரும் இந்த கதை இன்று பகுத்தறிவுக்கு எதிராகவும் சொல்லவேண்டிய சூழ்நிலை வந்துருச்சு,

நண்பர் நண்டு @ நொரண்டு எழுதிய இந்த பதிவை பாருங்கள்.
இவர் வந்தேரிகள் என குறிப்பிடுவது பார்ப்பனர்களை தான், ஆனால் அதை வெளிப்படையாக சொல்லவில்லை,

இந்து மதத்தை கொண்டு வந்தது இவர்கள் தான், மக்களை பக்தி போர்வையில் பயமுறித்தி வைத்தது இவர்கள் தான், அரசர்களுக்கு அடிவருடியாக செயல்பட்டது இவர்கள் தான்.

இவருடய பதிவில் பாதி இதை தான் சொல்லவருகிறார்.
இதன் பின் தான் இருக்கு விசயமே!

//தங்களின் பிழைப்புக்காக சமயத்தில் பலவற்றை தோற்றிவித்து அதன் மூலம் நிறுவனத்திற்கு
மிகப்பெரிய சொத்தினைப் பெறவைத்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை ஓட்டினர்
வந்தெரிகள்.அப்படி நிறுவிய நிறுவனங்களின் சொத்துக்கள் கஜினியால் கொள்ளையடிக்கப்படவே அரசுகள் போல்,சமய நிறுவனமும் ஆட்டம் கண்டது. //

இங்கே அவர் என்ன வருகிறார் தெரிகிறதா?
பார்ப்பனர் ஏய்த்து சம்பாரித்த சொத்துகளை கஜினி வந்து கொள்ளையடித்தார். அதனால் சமயம் ஆட்டம் கண்டது.

படையெடுத்து வந்த கஜினியின் வம்சத்தினரை இவர் வந்தேரிகள் என்று சொல்லவில்லை, ஆனால் அதற்கு முன்னரே இருக்கும் பார்ப்பனர்கள் வந்தேரிகள், அவர்களிடமிருந்து நம்மை காப்பாற்றவே கஜினி படையெடுத்து வந்தது போல் ஒரு மாயையை ஒருவாக்குகிறார்.

//இஸ்லாத்தை மக்கள் பின்பற்ற வைக்கப்பட்ட பொழுது இவர்கள் நிலை மேலும்
மோசமானது.//

அதே சமயம் இஸ்லாமியர்கள் கத்திமுனையில் மத மாற்றம் செய்ய முயற்சித்தைதையும் ஒப்புகொள்கிறார், ஆனால் இந்து மதம் என்பது பயஉணர்சியில் கட்டி போடப்படிருந்தது என்று சொல்லும் இந்த பகுத்தறிவுவாதி இஸ்லாமிய மதத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

//இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள், பிறிதொரு வகையினர் இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள் .வந்தேரிகள், இஸ்லாத்தை பின்பற்றாதவர்களின் பின்னாள் தங்களின் நிறுவனச் சொத்துடன் ஒளிந்து கொண்டனர்கள்.//

இங்கே அப்பட்டமாக சொல்லவருவது பார்ப்பனர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டனர், அதனால் இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள் பின் அவர்கள் ஒளிந்து கொண்டனர்.
இது பிரிவினையை தூண்டும் வாதமா இல்லையா?

//ஆங்கிலேயாரின் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. அப்பொழுது வந்தேரிகளின் மார்க்கமும் சரி, இஸ்லாத்தும் சரி, கிறிஸ்துவின் வரவால் தங்களின் மார்க்கங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் கொண்டனார்.//

மேலே குறிப்பிட்ட மூன்று இனங்களில் யார் வந்தேறிகள்? யார் முன்னர் இருந்தே இங்கே இருந்தனர்.
பார்ப்பனர்களும் வந்தேரிகளாக இருக்கலாம், ஆனால் அவர்களை மட்டும் வந்தேரிகள் மார்க்கம் என்று தாக்கி இஸ்லாத்துக்கு ஜால்ரா போடவேண்டிய அவசியம் என்ன?

//இன்று வீதிக்கு ஒரு கோவில், வீட்டுக்கு ஒரு கோவில் என்ற நிலை ஏற்பட்டதற்கான காரணம் வந்தேரிகளின் நிறுவனங்களிலும், கோவில்களிலும் அவர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாத இந்த மண்ணின்மைந்தர்கள் தங்களின் தேவைக்கேற்ப கோவில்களை அமைத்துக்கொண்டதாலேயே ஒழிய வேறு ஒரு காரணமும் கிடையாது.//

கடவுளையும், கோவிலையும் எதிர்க்க வேண்டிய பகுத்தறிவாளர் கோவில்களுக்கு சொல்லும் சப்பைகட்டை பாருங்கள். பார்ப்பனர்கள் அட்டூழியம் பண்ணினால் கோவில்களை இடிக்கவேண்டியது தானே, அதைவிட்டு வீட்டுக்கு ஒரு கோவில் இருப்பதற்கு காரணம் கண்டுபிடிப்பது தான் பகுத்தறிவா?

//இந்தியா சுதந்திரத்திற்காக தன்னை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தது.
வந்தேரிகளில் பெரும்பான்மையோர் சுதந்திர எண்ணம் இல்லாதவர்கள். வந்தேரிகளில் மற்றவர்கள் சுதந்திரத்தை வெறுத்தவர்கள் . ஆங்கிலேயே அரசுகளிலும், இரண்டாம் தர அடிமை அரசுகளின் துணையுடன் வாழ ஆரம்பித்தனர் //

சுதந்திரநாளை துக்க நாளாக அறிவித்த பெரியாரின் பகுத்தறிவு சீடர்கள் சொல்கிறார்கள், பார்ப்பனர்கள் சுதந்திர போராட்டத்தை வெறுத்தவர்களாம், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பார்ப்பனர்களின் பட்டியலை யாராவது வெளியிட்டால் மகிழ்வேன்.

//சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் கடைசியாக கடுமையாகப் போராடினர் இந்தியாவின் இருதவப் புதல்வார்கள்.
ஒருவர்
மாமனிதர் மகாத்மா காந்தியடிகள் .

இவர்கள் இல்லையேல் இந்தியா எப்படிப்பட்ட மோசமான நிலைக்கு வந்தேரிகளினால்
தள்ளப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவேமுடியவில்லை.//

இவரு யாருக்கு ஆதரவா பேசுறாருன்னே புரியல, வர்னாசிரமத்தை ஆதரித்த காந்ந்தியை தவபுதல்வன் என்கிறார். அவர் இல்லையென்றால் பார்ப்பனர்கள் இந்தியாவை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்கிறார்.

பின்னூட்டத்தில்
//நீங்கள் ஈரோடு தானே அங்கு பெரியார் மன்றம் இருக்கிறது .
அங்கு சென்று வந்தேரிகள் என்றால் யார் என கேட்டுத்தேரிந்து கொள்ளவும்.
ஜின்னா தனி நாடு கேட்டதற்கு காரணமானவர்களே வந்தேரிகள் தான் என்ற உண்மையை முதலில் தெரிந்து கொள்ளவும் .//

ஜின்னா தனி நாடு கேட்டத்ற்கு காரணம் வந்தேரிகள் என்கிறார், அதற்கான ஆதாரம் நமக்கு தேவையில்லை ஆனால் பார்ப்பனர்கள் வந்தேரிகள் என்று சொல்லும் இவர் தனிநாடு கேட்ட இஸ்லாமிரை ஏன் ஒன்றும் சொல்லவில்லை?

**************************************

பெரியார் காலத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தீண்டாமை என்ற முறையில் அதிகமாக இருந்தது உண்மை. அதே சமயம் பார்ப்பனர்களிடம் விலகி இருந்த தலித்துகள் அதே முறையை உயர்சாதியினர் என்று சொல்லி கொள்பவர்களிடமும் கடைபிடித்தார்களா இல்லையா?
பார்ப்பன எதிர்ப்பு அப்போது தேவைப்பட்டதால் பெரியார் அதை கையில் எடுத்தார்!
இன்று எவ்வளவோ சமூக பிரச்சனைகள் இருக்க, இன்னும் பார்பன எதிர்ப்பை காட்டுவது தான் பகுத்தறிவு மேதாவித்தனமா?

பகுத்தறிவு என்றால் என்ன?
கடவுளை மூலமாக கொண்ட மதத்தை, மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது தானே, அதில் என்ன ஓரவஞ்சனை? தி.மு.காவில் கூட்டணியில் இருக்கும் திராவிடர் கழகம், தி.மு.க, பா.ஜா.காவுடன் கூட்டணி வைத்தால். அ.தி.மு.காவுடன் கூட்டு சேர்ந்து விடும்.
காரணம் பா.ஜா.க மத சார்புள்ள கட்சி. இருக்கட்டும் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் மத சார்புள்ள கட்சியில்லையா? அதனுடன் மட்டும் கூட்டு ஏன்?

அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே பகுத்தறிவாளர்களா?

உங்களுக்கு வேண்டுமானால் பெரியார் கடவுளாக இருக்களாம், நான் பெரியாரை படித்தோ, பார்த்தோ கடவுள் மறுப்பு கொள்கைக்கு வரவில்லை. கண்மூடித்தனமான எதிர்ப்பை நீங்கள் செய்வீர்களேயானால் அதையே நானும் செய்ய நெற்றியில் லேபிள் ஒட்டிய பகுத்தறிவாளன் நானில்லை.

பெரியார் என்ன கடவுளா என்று நான் போன வருடம் இதே பிப்ரவரியில் எழுதிய பதிவு

இஸ்லாமிய சகோதரர்களை வந்தேரிகள் என்று சொல்வது என் நோக்கமல்ல அதே நேரம் கண்மூடித்தனமான பார்பன எதிர்ப்பும் முட்டாள் தனமானது என்று சொல்லவே இந்த பதிவு,
அவர்கள் அரசியலுக்கு வேண்டுமானால் நீங்கள் இஸ்லாமியராக இருக்கலாம், எனக்கு நீங்கள் மத அடையாளமில்லாத சகோதரர்களே.

பார்ப்பன எதிர்பாளர்களுக்கு இந்த பதிவு நல்ல வேட்டை, ஆனாலும் கொஞ்சம் உண்மையான பகுத்தறிவோட வாதத்திற்கு வந்தால் உங்கள் பகுத்தறிவின் உன்னத நிலை உலகறியும்!

கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்.

181 வாங்கிகட்டி கொண்டது:

ers said...

இந்த விளையாட்டுக்கு நான் வரலை வால்பையன். எல்லாம் முடிந்தபின்பு வந்து பார்க்கிறேன்.

சர்ச்சை தொடரட்டும்.

இவ்வளவு தூரம் விமர்சனம் செய்யுற அளவிற்கு எனக்கு அனுபவம் பத்தாது.

SK said...

ம்ம்ம் பாக்கலாம் enna பதில் வருது உங்களுக்குன்னு :)

வெற்றி said...

வாலாரே வணக்கம்.

முதலில் உங்கள் பூனைக் கதை சூப்பர்.

வந்தேறிகள் யாராவது இருந்துவிட்டு போகட்டும்.இஸ்லாமியர்கள் வந்தார்கள் வென்றார்கள்,சிலர் இருந்தார்கள் பலர் போனார்கள்.

மனிதர்களைப் பிரித்து அடிமையாக்கியவர்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை? தங்களுக்கு தெரிந்தால் விளக்கலாம்.

விடுதலைப் போராட்டத்தில் அனைத்து சாதியினர் ஈடுபட்ட அதே சமயத்தில், வெள்ளையர்களுக்கு தளபதிகளாக, வீரர்களாக, எடுபிடிகளாக, காட்டிகொடுப்பவர்களாக எந்தெந்த சாதியினர் இருந்தார்கள் என்ற கணக்கு எனக்கு தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்தால் விளக்கலாம்.

அடுத்தவன் அடித்தால் கோபம் வரும்.
அண்ணனே அடித்தால் வழிக்குமய்யா?
அந்த அண்ணன்கள் எந்த மதத்தில அதிகம் என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லலாம். இல்ல நாங்க வேற அண்ணன தேடலாமா.

நாம வேல பாக்குற கம்பெனியிலதான் இன்க்ரிமெண்ட் கேட்கிறோம். வேற க்ம்பெனியில கேட்க முடியுங்குளா?

ஏதோ தோனுச்சு. கேட்டேன்.

ராஜ நடராஜன் said...

//அதே நேரம் கண்மூடித்தனமான பார்பன எதிர்ப்பும் முட்டாள் தனமானது என்று சொல்லவே இந்த பதிவு,//

சரியான பார்வை வால்பையன்.தேசங்களின் எல்லைகளைக் கடந்தால் நீ ஆரியனுமில்லை,திராவிடனுமில்லை.ஏன் இஸ்லாமியனுமில்லை.வெறும் இந்தியனே.

Kumky said...

நோ கமெண்ஸ்...ப்ளீஸ்.

Tech Shankar said...

எனக்கும் அனுபவம் பத்தாது.

ஆளை விடுங்கய்யா சாமி.
விவரம் தெரியாமலும் பின்னூட்டம் போட்டுட்டோம்ல.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாலு, வந்தேன், பார்த்தேன், படிச்சேன், வந்து அப்பறம் பார்க்கிறேன்!

வெற்றி said...

வாலாரே இப்பதான் நண்டு நொரண்டு படிச்சேன்.எனக்குப் புரிந்த சில விசயங்கள்.
1,திராவிடர்கள்- மண்ணின் மைந்தர்கள்
2.ஆரியர்கள்,இஸ்லாமியர்கள்,
வெள்ளையர்கள்-புது வரவுகள்

ஆரியன் வந்தபோது, மண்ணின்
மைந்தன் கஷ்டப்பட்டான்.

இஸ்லாமியர் வந்த போது ஆரியர்களும், திராவிடர்களும் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இருவரும் இனையவில்லை.

வெள்ளையர் வந்த போது, மூவரும் அதாவது இஸ்லாமியர்கள், ஆரியர்கள், திராவிடர்கள் கஷ்டப்பட்டார்கள்.

ஆக, அப்பா மூச்சு வாங்குது, ஒரு இக்கட்டான நிலையில் திராவிடர்களை ஆரியர்கள் தங்கள் லாபத்துக்கு சேர்த்துக் கொண்டதாக அல்லது இழுத்துக் கொண்டதாக அவர் பதிவில் எனக்கூ புறிகிறது.

மறுபடியும் நண்டு நொரண்டு படிச்சு பாருங்க, நான் சொல்றதுக்கு சம்மந்தம் இருக்கான்னு பாருங்க.

இராகவன் நைஜிரியா said...

// கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம். //

சத்தியமான வார்த்தைகள்...

நடந்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்

கார்க்கிபவா said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கருத்து சொல்லலாம்.. ஆனா உங்கள மாதிரி பெருசா சொல்லலைன்னா பிரச்ச்னையாயிடும்.. சோ பிரசண்ட்.. இல்ல இல்ல.. நான் தான் பிரசண்ட்

Anonymous said...

// பார்ப்பனர்கள் வந்தேரிகள், அவர்களிடமிருந்து நம்மை காப்பாற்றவே கஜினி படையெடுத்து வந்தது போல் ஒரு மாயையை ஒருவாக்குகிறார்.
//

அப்படி எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லையே.. உங்களது தனிப்படட கருத்தை மற்றவர் சொன்னதாகச் சொல்வது குறிப்பிட்ட மேலசாதி இயல்பு...சென்னா ரெட்டி என் சேலையைப் பிடித்து இழுத்தார் என ஜெ. சொல்வது போல

// அதே சமயம் இஸ்லாமியர்கள் கத்திமுனையில் மத மாற்றம் செய்ய முயற்சித்தைதையும் ஒப்புகொள்கிறார், //
அப்படி அந்த வாக்கியத்தில் இல்லையே

//இது பிரிவினையை தூண்டும் வாதமா இல்லையா?
//இதில் பிரிவினையைத் தூண்ட என்ன இருக்கிறது. அரசியலமைப்பு சட்டம் எழுதும்போது இந்து என்றால் யார் என கேள்வி முன் எழுந்த போது பார்ப்பனர்கள் சொன்னவாதம இது 'யார் முசுலீம் இல்லையோ, யார் கிறிஸ்தவன் இல்லையோ அவனே இந்து' இப்படி சேர்த்து வைக்கப்பட்ட பல பிரிவினரின் மதத்தின் தற்போதைய பெயர்தான் இந்து என்பது தெரியாதா
// பார்ப்பனர்களும் வந்தேரிகளாக இருக்கலாம், ஆனால் அவர்களை மட்டும் வந்தேரிகள் மார்க்கம் என்று தாக்கி இஸ்லாத்துக்கு ஜால்ரா போடவேண்டிய அவசியம் என்ன?
// எப்படி இருந்தாலும் வந்தேறிகளில் சீனியாரிட்டி உங்களுக்குதான். அதற்காக நீங்கள் மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட மாட்டீர்கள்.
// கடவுளையும், கோவிலையும் எதிர்க்க வேண்டிய பகுத்தறிவாளர் கோவில்களுக்கு சொல்லும் சப்பைகட்டை பாருங்கள். பார்ப்பனர்கள் அட்டூழியம் பண்ணினால் கோவில்களை இடிக்கவேண்டியது தானே, அதைவிட்டு வீட்டுக்கு ஒரு கோவில் இருப்பதற்கு காரணம் கண்டுபிடிப்பது தான் பகுத்தறிவா?
//மண்ணின் மைந்தர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்கள் என யார் சொன்னது. ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் உங்க பொழப்புல மண்ணு எப்பவோ விழுந்திருக்கும்.
// சுதந்திரநாளை துக்க நாளாக அறிவித்த பெரியாரின் பகுத்தறிவு சீடர்கள் சொல்கிறார்கள், பார்ப்பனர்கள் சுதந்திர போராட்டத்தை வெறுத்தவர்களாம், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பார்ப்பனர்களின் பட்டியலை யாராவது வெளியிட்டால் மகிழ்வேன்.//
பெரியாரின் அந்த செயல் விமர்சனத்திற்கு உரியதுதான் ஆனால் ஆதரிப்பதும் விமர்சனத்திற்குரியதுதான். சுதந்திரத்திற்காக போராடிய பிராமணர்களில் முதன்மையானவர் பாரதி. கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த துரோகி எட்டப்பனது வம்சாவளியை உயர்த்திப்பாட அனுமதி கேட்டவன். நல்லவேளை எட்டப்பன் அனுமதி தரவில்லை. தந்திருந்தால் கட்டபொம்மனை பாரதி துரோகியாக மாற்றி இருப்பான். அடுத்து வீரசாவர்ககார். பாரதியும் அவரும் பிரிட்டிசாரிடம் போரட மாட்டோம் என எழுதித் தந்தவர்கள். வாழும் சாட்சி வாஜபாயி தபால் ஆபீசில் குண்டுவைத்த நண்பனை 1942ல் காட்டிக்கொடுத்த தேசபக்தர். ஜமீன்தாரி முறையை ஆங்கில அரசு கொண்டுவந்தவுடன் அவர்களிடம் திவானாக இருந்த பெரும்பாலோர் பார்ப்பனரே. சிபி ராமசாமி அய்யர் செய்த தேசதுரோகம் பற்றி தன்பதிவு எழுதுகிறேன். நிறைய உள்ளது உங்களது பட்டியலைப் பார்த்து எழுதுகிறேன்.

மணிகண்டன் said...

**********
கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்.
***********

இவ்வாறாக அமைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம் ஆக !

Unknown said...

வால்பையன், நல்ல பதிவு, பகுத்தறிவுக்கு நல்ல விளக்கம். பாரபட்சம் இல்லாது இருக்கவேண்டிய பகுத்தறிவு பற்றி தெளிவு.. அருமை..

ஆனால், பப் அடிக்கு போட்டியா ஜட்டி அனுப்புவது, ஜட்டிக்கு பதிலா புடவை என்பது போல, இங்கே நீங்க (ஒரு வெறுப்பில்) ரொம்பவும் பார்பணீயம் பற்றி பேசியிருப்பதாக தெரிகிறது.. இஸ்லாம் பற்றி ஏன் இப்படி சொல்லாமல் விட்டாய் என்று கேட்க நீங்கள் பார்பனியம் பற்றி அதிலு டோன்டுவின் பதிவில் சென்று லிஸ்ட் எல்லாம் கேட்டு மெனகெட்டு.. :) புரியலயே..

இஸ்லாம் மதம், பார்பணியம் மதமல்ல.. !

உண்மை பகுத்தறிவாளனுக்கு எந்த மதமாக இருந்தாலும் , மனிதனை முட்டாளக்கும் எந்த கோட்பாடாக இருந்தாலும் ஒன்று தான்..

ஒன்றுக்காக இன்னொன்றை தூக்கி பேசுதல் கூடாது.. அந்த பதிவரும் அதை செய்தார் என்று கூறிவிட்டு நீங்களும் அதே பாதையில்..

ஆ.ஞானசேகரன் said...

ஒருவர் சொன்னதை அப்படியே செய்தால் மூடநாம்பிகையாம் அப்படியானால் பெரியார் சொன்னதையே செய்யும் இவர்கள் ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல
?

நட்புடன் ஜமால் said...

"(இஸ்லாமிய நண்பர்கள் மன்னிக்கவும்)"

இது புரியலையே.

நீங்கள் சொல்லும் கருத்தில் இஸ்லாத்தை சாடியிருக்கீங்களா ...

அப்படி செய்திருந்தால் தவறென்று நினைத்து மன்னிப்பு கோருதலா

புரியலையே

வலையப்பன் said...

தலை சுத்த ஆரம்பிக்குது....?

நட்புடன் ஜமால் said...

சொல்வதை நேரிடையாகவும் தகிரியமாகவும் சொல்லுவது தான் ‘வால்’ ஸ்டைல்

இங்கே ஏதோ சொல்ல துவங்கிட்டீய, சொல்ல வேண்டியது தானே.

நமது நட்புக்கும் கருத்துக்கும் இடையில் நிறைய இடைவெளி உண்டு.

நீங்கள் என்ன எழுதினாலும் நமது நட்பு கெடாது.

Anonymous said...

இவ்வளவு நேர்மையாகவும் அறிவுபூர்வமாகவும் உங்களால் அலச முடியும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

இஸ்லாம் பற்றி எத்துனை சர்ச்சைகள் எழுந்தாலும் ...

அது எப்படி பரப்பப்பட்டது என்பது, ஜோடிக்கப்பட்ட பொய்.

நட்புடன் ஜமால் said...

இஸ்லாம் என்பது மதமல்ல

மார்க்கம் - வாழ்க்கை நெறி.

Mahesh said...

//
கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்.//

வழிமொழிகிறேன்....

நட்புடன் ஜமால் said...

தெளிவு என்பதே வாழ்க்கைக்கு தேவை

அதன் முயற்சி சர்ச்சையாகவே தோன்றும்.

ஆனாலும் தெளிவு ஒரு நாள் வரும்

அது உங்களுக்காகவும் இருக்கும்

எனக்காகவும் இருக்கலாம்.

நட்புடன் ஜமால் said...

\\காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம்\\

மிக அருமை நண்பரே.

Anonymous said...

//கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த துரோகி எட்டப்பனது வம்சாவளியை உயர்த்திப்பாட அனுமதி கேட்டவன். நல்லவேளை எட்டப்பன் அனுமதி தரவில்லை. தந்திருந்தால் கட்டபொம்மனை பாரதி துரோகியாக மாற்றி இருப்பான்.//

கட்டபொம்மு சுதந்திர போராட்ட வீரனா அல்லது சாதாரண கொள்ளைக்காரானா என்பதே சர்ச்சைகுரிய விசயம். தமிழ்வாணன் எழுதிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்ற நூலுக்கு இன்னமும் யாரும் பதிலலிக்கவில்லை.

பாரதி முதலில் ஒரு கவி,சுதந்திர போராட்ட வீரனல்ல. வாஞ்சிநாதன்,வி.வி. எஸ்.ஐயர், மங்கள் பாண்டே,சந்திரசேகர் ஆசாத் (பகத்சிங்கின் குரு), பகவதி சரண் (பகத்சிங்கின் நண்பர்) இவர்களெல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா?. பிராமணனாக பிறந்ததால் இவர்களின் உயிர் தியாகம் அர்த்தமற்றதா?

அதுசரி, பிராமணன என்பதால் வீரவாஞ்சியின் மனைவிக்கு தியாகி பென்சன்கூட தராதவரிடத்தில் நியாயத்தை எதிர் பார்ப்பது தவறுதான்!

வெற்றி said...

வாலு பத்தவெச்சிட்டயே!

இதெல்லாம் நம் அறிவுக்கு எட்டாதது.
சுதந்திரப் போராட்டம் என்பதே நம்மாளுங்களுக்குள்ள போட்டுக்கிட்ட சண்டன்னு படிச்சவக பேசுறாக. இதுவே எனக்குப் புரிய பல வருசமாகும்.
இதுல வெந்து வேகாம நீங்க போட்ற பதிவு ஜீரணம் ஆகமாட்டுது.
தெரிஞ்சத எழுதுங்க. ஏன் தெரியாதத சும்மா எழுதி மண்டய பிச்சுக்கனும்.

நான் கடவுள் விமர்சனம் எழுதுங்க.படிக்க நாங்க ரெடி. எழுத நீங்க ரெடியா?

Anonymous said...

//வந்தேறிகள் யாராவது இருந்துவிட்டு போகட்டும்.இஸ்லாமியர்கள் வந்தார்கள் வென்றார்கள்,சிலர் இருந்தார்கள் பலர் போனார்கள்.

மனிதர்களைப் பிரித்து அடிமையாக்கியவர்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை? தங்களுக்கு தெரிந்தால் விளக்கலாம்.//

அடேங்கப்பா, இஸ்லாமியர்கள் வந்தார்கள் வென்றார்கள்... எவ்வளவு ஈசியாக எழுதிவிட்டீர்கள்.

அரேபியர்கள் இந்தியா படையெடுப்பின் போது செய்த கொடுமைகளுக்கு அளவே கிடையாது.

" முகமதியர்களின் இந்திய படையெடுப்பு உலக வரலாற்றிலேயே மிகவும் இரத்தம் தோய்ந்ததாகும்.இஸ்லாமிய வரலற்றாசிரிய்ர்கள் இந்துகளை கூட்டம்கூட்டமாய் கொலை செய்தது, கட்டாய மதமாற்றம், இந்திய குழந்தைகளையும் பெண்களையும் அடிமைகளாய் பிடித்து அடிமைகளாய் விற்றது பற்றியெல்லாம் சந்தோசமாய் எழுதிவிட்டு போயிருக்கிறார்கள்" இப்படி சொன்னவர் அமெரிக்க வரலாற்றாசிரியரான Will Durant (1935).

முஸ்லிகள் ஆண்ட 500 வருடத்தில் கொலை செய்யப்பட்ட இந்திய மக்களின் எண்ணிக்கை 8 கோடி. அதில் கஜினி முகம்மதுவின் கணக்கு மட்டும் 20 லட்சம்.

உடனே முஸ்லிம் சகோதர்கள் டென்சனாக வேண்டாம், இந்த சாவுக்கணக்கில் இந்திய முஸ்லிம்களும் அடங்குவர்.

சுருக்கமாக சொல்வதால் அரேபிய படையெடுப்பு காட்டுமிராண்டிதனமானது. ஆரியர்களும் பிரிட்டிஷ்காரர்களும் எவ்வளவோ மேல்.நாட்டுக்கு நிறைய நல்லதும் செய்திருக்கிறார்கள்.

பாபு said...

பகுத்தறிவு மிக்க வால்பையரே!

இஸ்லாமியர்கள் வந்தார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், இங்குள்ள பூர்வீகக் குடிகளிடம் இஸ்லாமைப்பரப்பி முஸ்லிமாக்கி அவர்களிடம் திருமணச்சம்பந்தம் கொண்டு பெருகி மண்ணின் மைந்தர்களாக இரண்டறக் கலந்துவிட்டார்கள்.

ஆனால், பிராமணர்கள் ஒடம்புக்குக் குறுக்கால நூல் போட்டிருக்கறவங்கள த் தவிர மத்தவங்கக் கூட (விரும்பி) திருமண உறவு வெச்சுக்கறதில்லை, இன்னி வரைக்கும்.

இன்னும் தெளிவா உங்க 'பகுத்தறிவு'க்கு விளங்கறமாதிரி சொல்லணும்னா நாளைக்கே நீங்கள் நெனச்சா ஒரு முஸ்லிமா ஆயிடலாம்! (நீங்கள் என்பது இங்கே மண்ணின் மைந்தர்). ஆனா என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் பிராமணாளா ஆவமுடியாது.

இப்ப புரியுதா,'வந்தேறி'ன்னா என்னன்னு?!

நம்ம எஸ்.கே சாரு வந்தாகன்னாலும் சொல்லிடுங்க!

Anonymous said...

//இஸ்லாமியர்கள் வந்தார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், இங்குள்ள பூர்வீகக் குடிகளிடம் இஸ்லாமைப்பரப்பி முஸ்லிமாக்கி அவர்களிடம் திருமணச்சம்பந்தம் கொண்டு பெருகி மண்ணின் மைந்தர்களாக இரண்டறக் கலந்துவிட்டார்கள்.//

சரிங்கண்ணே ஒரு முஸ்லீம் பெண்ணை காதலிக்கிறேன் நிக்கா பண்ணனுமனா முஸ்லீமா மாறனுமாம் இல்லைன்னா பொண்ணு கிடையாதாம். இதுதான் இரண்டற கலப்பதா பாபு?

Arun Kumar said...

I'm present boss.
நல்லா எழுதி இருக்கீங்க.இந்த தமிழ் பிளாக்கில் இதை போல சண்டை எல்லாம் ஓயும் என்றா நினைக்கிறீங்க?

பாபு said...

//சரிங்கண்ணே ஒரு முஸ்லீம் பெண்ணை காதலிக்கிறேன் நிக்கா பண்ணனுமனா முஸ்லீமா மாறனுமாம் இல்லைன்னா பொண்ணு கிடையாதாம். இதுதான் இரண்டற கலப்பதா பாபு?//

ஆமாங்கண்ணே, அதுதான் கண்டிசனாம், சில வார்த்தைகள மனசார சொன்னா போதுமாம்.


பூநூலே போட்டாலும் சேத்துக்க மாட்டேன்னு அவா சொல்றதில்லேயாம்

வால்பையன் said...

தேனியார் said...

//மனிதர்களைப் பிரித்து அடிமையாக்கியவர்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை? தங்களுக்கு தெரிந்தால் விளக்கலாம்.//

யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கபட வேண்டியவர்களே!
அதே போல் அதை ஏற்று உயிர்சாதி திமிரில் இருப்பவர்களும் அதற்கு துணை போனதால் தண்டனைகுறியவர்களே!

//விடுதலைப் போராட்டத்தில் அனைத்து சாதியினர் ஈடுபட்ட அதே சமயத்தில், வெள்ளையர்களுக்கு தளபதிகளாக, வீரர்களாக, எடுபிடிகளாக, காட்டிகொடுப்பவர்களாக எந்தெந்த சாதியினர் இருந்தார்கள் என்ற கணக்கு எனக்கு தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்தால் விளக்கலாம்.//

காட்டி கொடுத்தவன் தாயை கூட்டி கொடுத்தவன், நிறைய மன்னர்கள் கூடத்தான் ஆங்கிலேயருக்கு வருடி கொடுத்து கொண்டிருந்தார்கள் அவர்கள் அனைவரும் பார்பனர்களா?

//அடுத்தவன் அடித்தால் கோபம் வரும்.
அண்ணனே அடித்தால் வழிக்குமய்யா?
அந்த அண்ணன்கள் எந்த மதத்தில அதிகம் என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லலாம். இல்ல நாங்க வேற அண்ணன தேடலாமா.//


புரியவில்லை

//நாம வேல பாக்குற கம்பெனியிலதான் இன்க்ரிமெண்ட் கேட்கிறோம். வேற க்ம்பெனியில கேட்க முடியுங்குளா?//

அது உங்களின் உரிமை!
இதுல வேற எதாவது உள்குத்து இருக்கா?

வால்பையன் said...

//1,திராவிடர்கள்- மண்ணின் மைந்தர்கள்
2.ஆரியர்கள்,இஸ்லாமியர்கள்,
வெள்ளையர்கள்-புது வரவுகள்//

அதாவது உங்களின் கூற்றுப்படி அகண்டபாரதம் முழுவதும் திராவிடர்களே இருந்தார்கள், பின் ஏன் கார்நாடகம்,ஆந்திரம்,தமிழகம்,கேரளா மட்டும் திரவிட நாடு என்கிறோம்.

//ஒரு இக்கட்டான நிலையில் திராவிடர்களை ஆரியர்கள் தங்கள் லாபத்துக்கு சேர்த்துக் கொண்டதாக அல்லது இழுத்துக் கொண்டதாக அவர் பதிவில் எனக்கூ புறிகிறது.//

அவர் பதிவிலேயே கூறியுள்ளார் இந்தியாவில் தற்போதய முக்கிய பிரச்சனை அயோத்தி!
அது யாருக்கும் யாருக்கும்
பார்பனர்கள் தான் இந்துகள் என்றால் இந்துக்கள் அனைவரும் பார்பனர்கள் என்ற பொருள் வருமே!
இது பிரிவினை வாதமா இல்லையா?

இப்போது இது தேவையா?

//மறுபடியும் நண்டு நொரண்டு படிச்சு பாருங்க, நான் சொல்றதுக்கு சம்மந்தம் இருக்கான்னு பாருங்க.//

முழுக்க முழுக்க பார்ப்பனிய எதிர்ப்பு!
இது தான் பகுத்தறிவின் லேபிள்
வேற என்ன நாட்டுல முக்கிய பிரச்சனைகள் இருக்கு நமக்கு இல்லையா?

Anonymous said...

//ஆமாங்கண்ணே, அதுதான் கண்டிசனாம், சில வார்த்தைகள மனசார சொன்னா போதுமாம்.


பூநூலே போட்டாலும் சேத்துக்க மாட்டேன்னு அவா சொல்றதில்லேயாம்//

நல்லா சேர்த்துப்பாங்க அடியில வெடியை கட்டி சேர்த்துப்பாங்க. சில வார்த்தைகள் என்னவெனில்

அது என்ன வார்த்தை சொல்றது

பாபு said...

//நல்லா சேர்த்துப்பாங்க அடியில வெடியை கட்டி சேர்த்துப்பாங்க. சில வார்த்தைகள் என்னவெனில்

அது என்ன வார்த்தை சொல்றது//

இதுவரைக்கும் வாதம், விவாதம்னு போய்ட்ருக்கச்சே.. விதண்டாவாதம்னு ஆரம்பிக்கிறீங்க.. சரி வேணா விடுங்க.

அது என்னா வார்த்தன்னா.. , இறைவனிடம் அந்த ஓரிறையை மட்டுமே வணங்குவேன்னு கொடுக்கற உறுதிமொழியாம்.

உங்கள் முஸ்லிம் நண்பர்களிடத்தில் அணுகுங்கள், அதை முறையா சொல்லிக்கொடுப்பாங்க.

தத்துவத்துக்காக அல்லாமல், பெண்ணுக்காக மாறினவங்களும் இருக்கலாம் என்பதை மறுக்கல.

வால்பையன் said...

//அப்படி எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லையே.. உங்களது தனிப்படட கருத்தை மற்றவர் சொன்னதாகச் சொல்வது குறிப்பிட்ட மேலசாதி இயல்பு//

ஹீஹீ

கஜினி வருவதற்கு முன் கொள்ளை அடித்து கொண்டிருந்தார்கள் என்றால்! என்ன அர்த்தம் கஜினி அதற்கு ஆப்பு வைத்து விட்டார் என்று அர்த்தம்
பூவ பூன்னு சொல்லலாம் புய்பம்னு சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்

//அப்படி அந்த வாக்கியத்தில் இல்லையே//

மத மாற்றம் செய்தார்கள் என இருக்கிறது, அது கத்தி முனையில் நடந்ததற்கு வரலாறு இருக்கிறது

//பார்ப்பனர்கள் சொன்னவாதம இது 'யார் முசுலீம் இல்லையோ, யார் கிறிஸ்தவன் இல்லையோ அவனே இந்து' இப்படி சேர்த்து வைக்கப்பட்ட பல பிரிவினரின் மதத்தின் தற்போதைய பெயர்தான் இந்து என்பது தெரியாதா//

உங்களை யார் இந்து மதத்தை ஆதரிக்க சொன்னது! கனைப்பதெல்லாம் குதிரை மற்றதெல்லாம் கழுதை என்றால் ஒத்து கொள்வீர்களா?

//எப்படி இருந்தாலும் வந்தேறிகளில் சீனியாரிட்டி உங்களுக்குதான். அதற்காக நீங்கள் மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட மாட்டீர்கள்.//

நானும் வந்தேறி ஆகிவிட்டேனா?
பகுத்தறிவு என்ற பெயரில் காட்டும் போலித்தனதை சாடினால் எனகு கிடைக்கும் பெயரா இது

//மண்ணின் மைந்தர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்கள் என யார் சொன்னது. ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் உங்க பொழப்புல மண்ணு எப்பவோ விழுந்திருக்கும்.//

பகுத்தறிவு என்பது அடிஷனல் மூளை கிடையாது! எதையும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பது, அதற்கு அடிப்படை தேவை கல்வி. அது கிடைத்து விட்டால் ஒருவேளை உங்களுக்கு தான் வேலையில்லாமல் போகலாம்

//கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த துரோகி எட்டப்பனது வம்சாவளியை உயர்த்திப்பாட அனுமதி கேட்டவன். நல்லவேளை எட்டப்பன் அனுமதி தரவில்லை. தந்திருந்தால் கட்டபொம்மனை பாரதி துரோகியாக மாற்றி இருப்பான்.//

கட்டபொம்மன் வீரனென்றால் தமிழகத்தில் எல்லோரும் வீரர்களாகி விடுமா? பாரதி துரோகி என்றால் பார்ப்பனர்கள் அனைவரும் துரோகிகளா?

சரி இருக்கட்டும், அப்போதிருந்த பார்பனர்கள் அனைவரும் துரோகிகள் தான். இன்று உங்களுக்கு வேற வேலை இல்லையா?
அதை அசை போட்டு கொண்டே இருப்பீர்களா? அதற்கு தான் பகுத்தறிவா?

வால்பையன் said...

அருமை நண்பர் முத்துவிற்கு!
நான் செய்தது தவறு என்று நன்றாகவே தெரியும், அதனால் தான் பதிவின் தொடக்கதிலேயே சொறிந்து கொள்கிறேன் என்றும், எனது இஸ்லாமிய சகோதரர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளேன்.

இந்த பதிவின் நோக்கம் மத சார்பற்றவர்கள் என்ற பெயரில் இந்த பகுத்தறிவாளர்கள் அடிக்கும் லூட்டி!
வெட்டி பார்ப்பன எதிர்ப்பு ஆகிவற்றை சுட்டி காட்டவே!

மனித முன்னேற்றதிற்கு தேவை கல்வி, சிறார்கள் மனதில் இப்போதே வெறி ஏற்றீ விடுவதல்ல!

//நீங்கள் பார்பனியம் பற்றி அதிலு டோன்டுவின் பதிவில் சென்று லிஸ்ட் எல்லாம் கேட்டு மெனகெட்டு.. :) புரியலயே..//

பார்ப்பனியர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார்களா? இல்லையா என தெரிந்து கொள்ளவே அந்த லிஸ்ட்!
அதற்கு டோண்டிவின் பதிலையும்!
அதற்கு என் பதிலையும் பாருங்கள்

வால்பையன் said...

நமது நட்புக்கும் கருத்துக்கும் இடையில் நிறைய இடைவெளி உண்டு.

நீங்கள் என்ன எழுதினாலும் நமது நட்பு கெடாது.//

நெகிழந்தேன் நண்பரே!
எனது கருத்திரிமைக்காக நீங்கள் அளித்த சுதந்திரம் என்றும் உங்களை காயப்படுத்தாது

வால்பையன் said...

//நான் கடவுள் விமர்சனம் எழுதுங்க.படிக்க நாங்க ரெடி. எழுத நீங்க ரெடியா?//

சினிமாவை நான் போரடிக்கும் போது தொலைக்காட்சி பெட்டியில் பார்ப்பதோடு சரி, சன் டீவில் போடும் போது விமர்சனம் எழுதுகிறேன்

வால்பையன் said...

//இன்னும் தெளிவா உங்க 'பகுத்தறிவு'க்கு விளங்கறமாதிரி சொல்லணும்னா நாளைக்கே நீங்கள் நெனச்சா ஒரு முஸ்லிமா ஆயிடலாம்! (நீங்கள் என்பது இங்கே மண்ணின் மைந்தர்). ஆனா என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் பிராமணாளா ஆவமுடியாது.//

எல்லோரும் மனிதர்களாக ஆகவேண்டுமென்பதே என் ஆசை!
மத, சாதி அடையாளங்களை சுமந்து கொண்டிருப்பதல்ல.
மாறி வரும் நாகரீக சமூகம் பார்பனர்கள் மட்டுமல்ல அனைத்து சாதி அடையாளங்களையும் தொலைத்து விடும்.

வால்பையன் said...

//நாளைக்கே நீங்கள் நெனச்சா ஒரு முஸ்லிமா ஆயிடலாம்! (நீங்கள் என்பது இங்கே மண்ணின் மைந்தர்). ஆனா என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் பிராமணாளா ஆவமுடியாது.

இப்ப புரியுதா,'வந்தேறி'ன்னா என்னன்னு?!//

நாளைக்கே நான் கிருஸ்தவனாக மாற முடியும், கிருஸ்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்று சொல்ல முடியுமா?
அடையாளம் ஒரு மனிதனின் தோற்றம் மட்டுமே, வாழ்க்கையல்ல

பாபு said...

வால்பையரே!

//நாளைக்கே நான் கிருஸ்தவனாக மாற முடியும், கிருஸ்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்று சொல்ல முடியுமா?
அடையாளம் ஒரு மனிதனின் தோற்றம் மட்டுமே, வாழ்க்கையல்ல//

இது திரிபுவாதம்.
நீங்க பதிவுல கேட்ட கேள்வி
பிராமணர்களை வந்தேறிகன்னு சொல்லும்போது முஸ்லிம்கள ஏன் சொல்லக்கூடாதுங்கறது தான்.

நான் சொன்ன பதிலும் அதுக்குத்தான்.
(இதுல நடுவுல கிறித்தவங்கள சமயம் பாத்து ஏன் இட்டாரீங்க?, தேவயில்ல)

பிராமணியத்தை தங்களுக்குள் பொத்தி வைத்துக்கொள்வதால் பிராமணர்கள் வந்தேறிகள் என்று சொல்வதில் இருக்கிற நியாயம்...,

முஸ்லிம்கள் சாதி பாராமல் மண்ணின் மைந்தர்களுடன் இரண்டற கலந்துவிட்டதால், முஸ்லிம்களை வந்தேறிகள் என்று சொல்வதில் எடுபடுவதில்லை என்பது விளக்கம்.

இதுக்கு மேலே திரிக்காதீங்க!

இல்ல, பின்னூட்டத்துக்கு, சூ.இ. முதலிடத்துக்கும் ஆசப்பட்டுத்தான் இந்த மாதிரி தூங்கற மாதிரீ நடிக்கறேன்னு நீங்க சொன்னா.. ரைட், நடத்துங்க! நான் போறேன்!

malar said...

உங்கள் பதிவில் புரியாதது உங்கள் பின்னோட்டத்தில் புரிந்தது .தேவையே இல்லாமல் இஸ்லாத்தையும் கூபிட்டு இருகிறேர்கள் .எதையோ சொல்ல தொடங்கி சொல்லாமலே விட்டமாதிரி தெரிது.

வால்பையன் said...

//இது திரிபுவாதம்.
நீங்க பதிவுல கேட்ட கேள்வி
பிராமணர்களை வந்தேறிகன்னு சொல்லும்போது முஸ்லிம்கள ஏன் சொல்லக்கூடாதுங்கறது தான்.//

நான் சொல்லவந்தது இஸ்லாமியர்களை எப்படி வந்தேரிகள் என்று சொல்லகூடாதோ! அதே போல் பார்ப்பனர்களையும் சொல்லாதே!

அ.மு.செய்யது said...

நீங்கள் நடுநிலையாக தான் எழுதுவீர்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை..

ஆனால் ஒரு சிறு கேள்வி..இஸ்லாமியன் என்பதால் இந்த கேள்வியை நான்
கேட்க கடமைப் பட்டுள்ளேன். ( என்னால கேக்காம இருக்க முடியாதுங்க )

இஸ்லாம் வாள்முனையில் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து என்ப‌து போல் ஒரு தொனி வ‌ந்திருக்கிற‌து.
நீங்க‌ள் இந்தியாவில் ப‌ர‌விய‌ இஸ்லாம் ப‌ற்றி சொல்கிறீர்க‌ளா ??
இல்லை உல‌க‌ மொத்த‌மும் இஸ்லாம் அப்ப‌டித்தான் ப‌ர‌வியது என்று சொல்கிரீற்க‌ளா ?
கொஞ்ச‌ம் விள‌க்க‌வும் "ச‌கோத‌ரா" ??

வால்பையன் said...

//பின்னூட்டத்துக்கு, சூ.இ. முதலிடத்துக்கும் ஆசப்பட்டுத்தான் இந்த மாதிரி தூங்கற மாதிரீ நடிக்கறேன்னு நீங்க சொன்னா.. ரைட், நடத்துங்க! நான் போறேன்!//

இதைவிட அதிகமாக என்னை அவமான படுத்தமுடியாது!

நேரம் இருப்பினும் மற்றவர்களுக்கு பின்னூட்டம் போட பயன்படுத்துவனே தவிர தினம் ஒரு பதிவு எழுதி கொல்லமாட்டேன்!

இந்த சர்ச்சைகுறைய பதிவுக்கு எனது நெருங்கிய நண்பர்கள் ஜீமெயில் சாட்டில் பின்னூட்டம் போட முடியாதென்று மன்னிப்பு கேட்டார்கள்!

நான் சொல்ல வந்த கருத்து!
பகுத்தறிவு என்பது சமுதாய முன்னேற்றத்திற்கு இருக்கவேண்டுமே தவிர பார்ப்பனிய தாக்குதலுக்கு மட்டுமே இருக்க கூடாது என்பதே!

அ.மு.செய்யது said...

//உடனே முஸ்லிம் சகோதர்கள் டென்சனாக வேண்டாம்,//

அத‌ யேன்பா அனானியா வ‌ந்து சொல்ற‌..இஸ்லாமிய‌ர்க‌ள்னா உங்க‌ளுக்கு ஏங்க‌
அஸ்தியில‌ ஜீர‌ம் வருது..

நீங்க‌ள் சொல்லும் கொலைகளும் குற்றங்களும் எல்லாம் ச‌மூக‌த்தாரும் ம‌தத்தின‌ரும்
கால‌ங்காலமாக ந‌ட‌த்தி கொண்டு வ‌ருவ‌து தான்.

ஆனா ஊனா இஸ்லாமிய‌ர்கள்..இஸ்லாமிய‌ர்கள்...!?!?!?!?!?

போய் புள்ள‌குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்கடா..உங்க‌ள மாதிரி இல்லாம‌ அவ‌ங்க‌ளும் கொஞ்ச‌ம் சிந்திக்கட்டும்.

(நிறைய‌ விள‌க்க‌ வ‌ந்தேன்...ஆண்டாண்டு கால‌ம் த‌லைகீழாக‌ நின்று பாட‌ம் நட‌த்தினாலும் நீங்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள‌ப் போவ‌தில்லை...)

இஸ்லாம் தோன்றிய‌ நாள்முதலாக இருந்தே இது போன்ற‌ அவ‌தூறு சொற்க‌ளை இன்னும் தாங்கி கொண்டு தான் வ‌ருகிறோம்.

எதையும் புரிந்து கொள்ளாம‌ல் கற்காமல்..பொத்தாம்பொதுவாக‌ இது போன்று எழுதுவ‌தை த‌விர்த்த‌ல் இன்னும் ஆரோக்கிய‌மாக‌ இருக்கும்.

? said...

//இப்ப புரியுதா,'வந்தேறி'ன்னா என்னன்னு?!//

பிராமணர்கள் மட்டும்தான் வந்தேறிகள் என்பதே ஒரு புரட்டு வாதமாகும். பிராமணர்கள் மட்டுமல்லாது எல்லாச்சாதியினரும் ஆப்பிரிக்கவில் இருந்து வந்தவர்களே, ஏனெனில் மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில். அங்கிருந்து ஒரு குருப் கிளம்பி ஆஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தியாவில் தங்கியது. இவர்கள்தான் இந்தியாவின் முதல் வந்தேறிகள். பின்பு இன்னோரு குருப் ஐரோப்பா சென்று விட்டு இந்தியாவிற்குள் நுழைந்தனர் அல்லது பாதியாக பிரிந்து இந்தியாவிற்குள் நுழைந்தனர்(இன்னோரு பாதி ஐரோப்பா போனார்கள்).

இங்கு வநததும் இங்குள்ள குருபிடம் உறவு கொண்டார்கள் குறிப்பாக இரண்டாவது குருப் ஆண்கள் ஏற்கனவே இருந்த குழுவின் பெண்களுடன் உறவு வைத்தனர். இதனால் தென்இந்தியர்கள் அம்மா வழியில் ஆசிய்ர்களுடனும் அப்பா வழியில் ஐரோப்பியகளுடனும் ஒத்திருக்கிறோம்.

மேலும் சாதியின் மதிப்பு குறைய குறைய ஐறோப்பிய கலப்பும் குறைகிறது. இது ரொம்ப முக்கியம்.

அதாவது இவர்கள் சொல்வது போல பிராமணர்கள் ஐரோப்பியர்களை ஒத்தும் மற்ற சாதியினர் ஆசியர்களை ஒத்தும் இல்லை. அதாவது பிற்படுத்தப்பட்டவர்களும் சூத்திரர்களும் ஐரோப்பிய மரபணு கொண்டுள்ளார்கள். ஆக இனக்கலப்பு நிகழ்ந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இன்னோரு விசயம் எல்லா பிராமணர்களும் ஒரே மாதிரியும் இல்லை.தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் பேசாத கன்னட தெலுகு பிராமணர்கள் பிற்படுத்தப்பட்ட சமுகத்தை விட குறைவாகவே ஐரோப்பியர்களுடன் ஒத்திருக்கின்றனர்.இந்த பிராமணர்கள் கீழ்சாதி மக்களைப் போல் ஆசியர்களுடன் ஒத்து விளங்குகின்றனர்.

Utah என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுப்படி ஐரோப்பியர்களை ஒத்த இரண்டவது குருப் ஆண்கள், இங்கு ஏற்கணவே வந்த மக்களோடு கூடி கலந்து விட்டனர். ஆனால் கலக்கும் போது தங்களை மேல்சாதியாக வைத்து கொள்ளவே முயற்சி செய்துள்ளனர்.ஆகவே சாதி கொடுமையின் இரத்தம் பிராமணர்கள் மீது மட்டுமல்ல எல்லா பிற சாதிகாரர்கள் கையிலும் உள்ளது.

References:

1.Genetic variation in South Indian castes: evidence from Y-chromosome, mitochondrial, and autosomal polymorphisms,BMC Genetics 2008, 9:86

2.Genetic Evidence on the Origins of Indian Caste Populations,Genome Res. 2001 Jun;11(6):994-1004

Anonymous said...

//அத‌ யேன்பா அனானியா வ‌ந்து சொல்ற‌..இஸ்லாமிய‌ர்க‌ள்னா உங்க‌ளுக்கு ஏங்க‌
அஸ்தியில‌ ஜீர‌ம் வருது..///


எல்லாம் ஒரு பாதுகாப்பு கருதிதான் சகோதரா!

//நீங்க‌ள் சொல்லும் கொலைகளும் குற்றங்களும் எல்லாம் ச‌மூக‌த்தாரும் ம‌தத்தின‌ரும்
கால‌ங்காலமாக ந‌ட‌த்தி கொண்டு வ‌ருவ‌து தான்.

ஆனா ஊனா இஸ்லாமிய‌ர்கள்..இஸ்லாமிய‌ர்கள்...!?//?!?!?!//

உண்மைதான், நான் எல்லா இசுலாமியர்களையும் சொல்ல வில்லை.அரபியர்களைத்தான் சொன்னேன். உமக்கு ஏன் எரிகிறது? இதுதான் உம் போன்ற முஸ்லிம்களின் பிரச்சனை!

//போய் புள்ள‌குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்கடா..உங்க‌ள மாதிரி இல்லாம‌ அவ‌ங்க‌ளும் கொஞ்ச‌ம் சிந்திக்கட்டும்.//

அதை நீங்க முதலில் செய்யுங்கடா!

//(நிறைய‌ விள‌க்க‌ வ‌ந்தேன்...ஆண்டாண்டு கால‌ம் த‌லைகீழாக‌ நின்று பாட‌ம் நட‌த்தினாலும் நீங்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள‌ப் போவ‌தில்லை...)

இஸ்லாம் தோன்றிய‌ நாள்முதலாக இருந்தே இது போன்ற‌ அவ‌தூறு சொற்க‌ளை இன்னும் தாங்கி கொண்டு தான் வ‌ருகிறோம்.

எதையும் புரிந்து கொள்ளாம‌ல் கற்காமல்..பொத்தாம்பொதுவாக‌ இது போன்று எழுதுவ‌தை த‌விர்த்த‌ல் இன்னும் ஆரோக்கிய‌மாக‌ இருக்கும்.//

நீர் விளக்கத் தேவையில்லை. முஸ்லிம் பற்றிய பதிவல்ல இது. இது மாதிரி சண்டைகள் பதிவின் நோக்கத்தை திசை திருப்பிவிடும் என்பதால்...bye bye!

அ.மு.செய்யது said...

////போய் புள்ள‌குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்கடா..உங்க‌ள மாதிரி இல்லாம‌ அவ‌ங்க‌ளும் கொஞ்ச‌ம் சிந்திக்கட்டும்.//

அதை நீங்க முதலில் செய்யுங்கடா! //

அதைச் செய்த‌ தால‌ தாண்டா நான் என்னோட‌ உண்மையான‌ அடையாள‌த்தோட‌
வ‌ந்து சொல்றேன்.

Anonymous said...

//முஸ்லிகள் ஆண்ட 500 வருடத்தில் கொலை செய்யப்பட்ட இந்திய மக்களின் எண்ணிக்கை 8 கோடி. அதில் கஜினி முகம்மதுவின் கணக்கு மட்டும் 20 லட்சம்//

அலோ! யாருப்பா அது புள்ளி(விவர)ராஜா. இந்த முன்னேறிய காலத்துலே கூட இலங்கைல எத்தனை பேர் இறந்தாங்கன்னு கரெக்டா சொல்ல முடியல, இவர் கிட்ட மட்டும் பல நூறு வருசத்துக்கு முன்னாடி முஸ்லிகள் கொன்னவங்களோட லிஸ்ட் இருக்காம். இன்னும் எத்தனை பேர்டா கிளம்பி இருக்கீங்க. இதே மாதிரி புள்ளிவிவரம் ஜார்ஜ் புஷ் கொன்னான்னு சொல்லி அவிங்களும் வச்சிருக்காங்க, தெரியுமில்ல

அ.மு.செய்யது said...

///நீர் விளக்கத் தேவையில்லை. முஸ்லிம் பற்றிய பதிவல்ல இது. //


முஸ்லிம் ப‌ற்றிய‌ ப‌திவு இல்லையா ..அப்ப‌ நீங்க‌ ப‌திவ ப‌டிக்க‌வே இல்லையா ??

அட்லீஸ்ட் ப‌திவின் த‌லைப்பை யாவ‌து பாருங்க‌ பாஸு.....

அ.மு.செய்யது said...

//உமக்கு ஏன் எரிகிறது? இதுதான் உம் போன்ற முஸ்லிம்களின் பிரச்சனை!//

என்னைப் ப‌ற்றி என் வலையுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு தெரியும்.
ஒரு சில‌ அனானிக‌ளுக்கு தெரிய‌வில்லையே என்று நான் வ‌ருத்த‌ப் ப‌டுவ‌தில்லை.

உண்மையான‌ அடையாளத்துட‌ன் வ‌ந்தால் எங்கு வேண்டுமானாலும் வாத‌ம்
செய்ய‌ நான் தயார்.

Anonymous said...

அலோ! யாருப்பா அது புள்ளி(விவர)ராஜா. //

அண்ணே எல்லாம் விக்கிபீடியாவில் சுட்டதுதான் முடிஞ்சா தேடிபாருங்க!!!

அ.மு.செய்யது said...

//நீர் விளக்கத் தேவையில்லை //

ஒரு சில அனாம‌த்துக‌ளே வ‌ந்து க‌ருத்து கூறும் போது நான் ஏன் விள‌க்க‌ கூடாது.

Anonymous said...

//உண்மையான‌ அடையாளத்துட‌ன் வ‌ந்தால் எங்கு வேண்டுமானாலும் வாத‌ம்
செய்ய‌ நான் தயார்.//

ஐயா இதில் விவாதிக்க ஒன்றுமில்லை. நான் முஸ்லிம்கள் அனைவரும் கெட்டவர் என நினைக்கவுமில்லை. எனது மிக நெருங்கிய நண்பர் ஒரு எகிப்திய முஸ்லிம் அவர் கிருஸ்துமஸ் மட்டுமல்ல யூத பண்டிகைகூட கொண்டாடுவார்!!!

நீர்தான் அடா புடா என ஏக வசனத்தில் முதலில் எழுதினீர். அநானியாக வருகிறேன் என்பதற்காக என்னை மரியாதைகுறைவாக எழுதும் உரிமையை யார் உமக்கு கொடுத்தது? முடிந்தால் எனது கருத்துக்கு எதிர் கருத்து கூறலாம் அதை விட்டு... உம்மிடம் விவாதிக்க என்க்கு விருப்பமில்லை.

Anonymous said...

//இன்னும் தெளிவா உங்க 'பகுத்தறிவு'க்கு விளங்கறமாதிரி சொல்லணும்னா நாளைக்கே நீங்கள் நெனச்சா ஒரு முஸ்லிமா ஆயிடலாம்! (நீங்கள் என்பது இங்கே மண்ணின் மைந்தர்). ஆனா என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் பிராமணாளா ஆவமுடியாது.

இப்ப புரியுதா,'வந்தேறி'ன்னா என்னன்னு?!
//
பாபு ஒன்னும் புரியலே. அப்போ குட்டிகரணம் போடாமலே நினச்சா ஒரு முதலியரவோ கௌண்டராவோ தேவராகவோ ஆவமுடியுமா? முடியாதென்றால் இவர்களும் வந்தேறிகளா? அல்லது இந்த சட்டங்கள் பார்ப்பனர்க்கு மட்டும்தான் பொருந்துமா? சற்று விளக்கினா இந்தா மர மன்டைகளுக்கும் புரியும்.

Anonymous said...

//நாளைக்கே நான் கிருஸ்தவனாக மாற முடியும், கிருஸ்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்று சொல்ல முடியுமா?
அடையாளம் ஒரு மனிதனின் தோற்றம் மட்டுமே, வாழ்க்கையல்ல //

ஒரு திராவிடன் இந்துவாக , கிறிஸ்தவனாக , இசுலாமியனாகலாம் ...ஆனால் பார்ப்பனனாக முடியாது ...அந்த பார்ப்பான் தான் வந்தேறி ..

மணிகண்டன் said...

செய்யது, அனானி

ரெண்டு பேரும் போய் படுத்து தூங்குங்க. Sweet Dreams !

****
இதைவிட அதிகமாக என்னை அவமான படுத்தமுடியாது!
****

யோவ், இந்த பதிவு போட்டா என்ன மாதிரி விவாதம் போகும்ன்னு உமக்கு தெரியாதா ? comment moderation கூட இல்லாம தூங்க போய்டீங்க.

கிரி said...

//அதே நேரம் கண்மூடித்தனமான பார்பன எதிர்ப்பும் முட்டாள் தனமானது//

வழிமொழிகிறேன்

இது மட்டும் தான் எனக்கு புரிந்தது :-)))

மணிகண்டன் said...

நான் கடவுள் வந்ததுக்கு அப்புறம் " எதிர்ப்பு முட்டாள்தனமானதுன்னு " எல்லா எடத்துலயும் வழிமொழியறீங்க நீங்க !!!!!!

Anonymous said...

//ரெண்டு பேரும் போய் படுத்து தூங்குங்க.//

மணிகண்டன் சார், ஆபீஸால தமிழ்மணம் படிக்குறதே டூமச் இது தூக்கமா????

Tamil whatsapp stickers and png images said...

ஹரே பையா, சூப்பரா கலக்கிட்டீங்க போங்க..

//இஸ்லாம் என்பது மதமல்ல

மார்க்கம் - வாழ்க்கை நெறி.//

அந்த வாழ்க்கை நெறியில் எங்கிருந்து வந்தது புனிதப்போர்.. அனைவருமே தீர்த்துக்கட்டப்பட வேண்டிய தீவிரவாதிகள்.

Anonymous said...

//நாளைக்கே நான் கிருஸ்தவனாக மாற முடியும், கிருஸ்தவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்று சொல்ல முடியுமா?
//

வால்பையன் கிருஸ்துவ மதமும்,இஸ்லாமியமிய மதமும்தான் வந்தேரியே தவிர இந்தியாவில் உள்ள கிருஸ்துவர்களோ,இஸ்லாமியர்களோ வந்தேரி அல்ல. இந்த மண்ணில் சத்திரியர்களாக,வைசியர்களாக,தலித்துகளாக அதாவது மண்ணின் மைந்தர்களாக இருந்து அந்த மதங்களுக்கு மாறியவர்கள். நாளை நீங்கள் சொன்னதுபோல நீங்கள் கிருஸ்துவரானால் வந்தேரி அல்ல. கிருஸ்துவ மதம்தான் வந்தேரி மதம். நீங்கள் அல்ல... இதுகூஅவா புரியாமல் பதிவ எழுதுனீங்க???

ரவி said...

Dondu : Hello

Valpayyan : Yes Sir

Dondu : Ellam Niyabaam Irukkaa ?

Valpayyan : Yes Sir

Dondu : Ok Ok.

Valpayyan : Yes Sir

Anonymous said...

//அனைவருமே தீர்த்துக்கட்டப்பட வேண்டிய தீவிரவாதிகள்.
//

உடனே போய் சைக்ரியாட்டிக் டாக்டரப் பாருங்க.

Anonymous said...

//செந்தழல் ரவி said...

Dondu : Hello

Valpayyan : Yes Sir

Dondu : Ellam Niyabaam Irukkaa ?

Valpayyan : Yes Sir

Dondu : Ok Ok.

Valpayyan : Yes Sir//

செந்தழல் ரவி, எங்களோட ஆதங்களிலும் அங்கதங்களிலும் ஒரு இனம் புரியாத கவலை உண்டு.

ஆனால் உங்களது பின்னூட்டத்தில் நக்கல் தான் தெரிகிறது.

ஏற்கனவே சில இடங்களில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து எரிச்சல் அடைந்துள்ளேன்...

அட்டுத்தனமாக பின்னூட்டம் போடுபவர்களிடம் டோண்டு போன்றவர்கள் பக்கம் பக்கமாக விளக்கி புரியவைப்பார்கள்..

என்னால் அது முடியாது...

மவனே ஓடீப்போயிரு..

(இது எங்கேயே கேட்ட குரல்...)

Unknown said...

வால் பையன், ஒரே ஒரு செய்தியை இங்கு பதிய விரும்புகிறேன். பகுத்தறிவு என்பது நீங்கள் நினைப்பது போல் வெரும் கடவுள்/மூடநம்பிக்கை மறுப்பு அல்ல. எதையும் முழுதாய் புரிந்து ஆராய்தலே பகுத்தறிவு. கடவுள் மறுப்பு பகுத்தறிவின் அங்கமாய் இருக்கலாம், ஆனால் கடவுள் மறுப்பு மட்டுமே பகுத்தறிவு ஆகாது. இந்த புள்ளியிலிருந்து பாருங்கள் எல்லாம் புரியும். பகுத்தறிவு வாதிகள் என்று தங்களை அடையாலப்படுத்திக்கொள்ளும் பலரும் இதை உணரவேண்டும் என்பதும் உண்மையே. மற்றபடி, முகலாயர்கள் மற்றும் கிருத்தவர் ஆண்டதர்க்கும் ஆரியரின் ஆண்டான், அடிமை கட்டமைப்புகள் ஏற்படுத்திய நிறந்தர காயங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறன.

Anonymous said...

//ஆரியரின் ஆண்டான், அடிமை கட்டமைப்புகள் ஏற்படுத்திய நிறந்தர காயங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறன.//

ஆரியர்கள்தான் ஜாதியை ஏற்படுத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.

ஆரிய திராவிட பகுப்பாய்வே மொழியை மட்டுமே அடிப்படையாக கொண்டது. மொழியில் உள்ள வார்த்தை ஒற்றுமைகளை அடிப்படையாக கொண்டது. ஜெனடிக்ஸ் சோதனைகள் பார்ப்பானும் சூத்திரனும் அவன் இந்தியாவின் எந்தப் பகுதியில் வசித்தாலும் ஒன்றுதான் எனச் சொல்லுகின்றன.

வடநாட்டு தலித் ஆரிய மொழிதான் பேசுகிறான், அவன் ஆரியனா திராவிடனா? பலகாட்டுவாசிகள் இந்தியாவில் திராவிட/ஆரிய மொழி பேசுவதில்லை...அவர்கள் யார்???

இதில் முக்கிய விடயம் இந்தியாவை பிரிக்க ஆங்கிலேயனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டுபாக்கூர் கருத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் விலைபோனது. தலித் மக்களின் நிஜமான தலைவரான அம்பேத்கர் கூட இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் தமிழனல்லாத பிற தென்மாநில தலைவர்கள் பிழைப்பு நடத்த திராவிடன் பெயரைச் சொல்லி வண்டி ஓட்டினார்கள்.நல்ல காலமாய் இலங்கை தமிழன் இவர்களின் சதி வலையில் விழவில்லை.இதனால்தான் உண்மையிலேயே அவர்களுக்கு தமிழன் தலைவனாக இருக்கிறான். ஆனால் இங்கு காமராசர் அண்ணவை விட்டால் தமிழன் தலைவனாகவே முடியவில்லை. வடக்கு, பார்ப்பான் என பயங்காட்டியே தமிழனல்லாத திராவிடர்கள் நம் தலையில் மிளகாய் அரைத்து விட்டார்கள்.

IlayaDhasan said...

நாம் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கையில் யாரோ ஒருவரால் முடிவு செய்யப்பட்ட ஒரு சமன் பாட்டை தீவிரமாக கைப்பற்றி கொண்டே இருக்கிறோம் ...நம்மால் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர முடியாது ...முயன்றால் நாம் முட்டாளாக சித்தரிக்க படுவோம்.
கீழ் வருபவைகள் அத்தகைய சமன்பாடுகளே :
பிராமண எதிர்ப்பு = தமிழ் பகுத்தறிவாதி
இஸ்லாம் ஒரு வாழ்கை நெறி = முஸ்லீம்
கர்மா = இந்து
பாவ மன்னிப்பு = கிறிஸ்டியன்ஸ்
ஆசையை ஒழி = புதிச்ட்
மற்றும் பல ...

அ.மு.செய்யது said...

//நீர்தான் அடா புடா என ஏக வசனத்தில் முதலில் எழுதினீர். அநானியாக வருகிறேன் என்பதற்காக என்னை மரியாதைகுறைவாக எழுதும் உரிமையை யார் உமக்கு கொடுத்தது?//


உமக்கு அனானியாக வருவதற்கு யாரும் உரிமை கொடுக்க தேவையில்லையோ
அது போல் 'சொல்ல வேண்டிய விதத்தில்' உண்மை கருத்துகளை எழுத எனக்கு யாரும் உரிமை தர தேவையில்லை.

அ.மு.செய்யது said...

//சிவகுமார் சுப்புராமன் said...

அனைவருமே தீர்த்துக்கட்டப்பட வேண்டிய தீவிரவாதிகள்.//


கீழ்ப்பாக்கம் ரிடன்ஸ்......

Anonymous said...

//உமக்கு அனானியாக வருவதற்கு யாரும் உரிமை கொடுக்க தேவையில்லையோ
அது போல் 'சொல்ல வேண்டிய விதத்தில்' உண்மை கருத்துகளை எழுத எனக்கு யாரும் உரிமை தர தேவையில்லை.//

ha ha Good night Mr.Siad

Anonymous said...

வாழ்த்துக்கள் வால் பையன்,

ஒரு உண்மையான பகுத்தறிவு வாதத்தை முதல் முறையாக வலைப்பதிவில் பார்க்கிறேன்.

உண்மையில் பகுத்தறிவு என்பது மக்களை மூடவாதத்திலிருந்து முன்னேற்றி அடுத்த கட்டத்தை கொண்டு செல்ல முயல வேண்டும்.

ஆனால் இப்போது உள்ளவர்கள் இந்து மத எதிர்ப்பு மட்டுமே பகுத்தறிவு என்று பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர்.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? இன்று பெரியார் பெயரில், கம்யூனிஸ்டு பெயரில் வலையில் பம்மாத்து செய்து கொண்டுருப்பவர்களில் முக்கால் வாசி பேர் இஸ்லாமிய பழமைவாதிகள். (இதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். வெகுவிரைவில் வெளியிடுவேன். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.)

இவர்கள் அவருடைய பெயரை உபயோகிப்பது பகுத்தறிவிற்காக அல்ல. இந்து மதத்தை இழிவு செய்ய மட்டும் தான்.

நான் ஒரு இந்து என என் வலை பதிவிலேயே குறிப்பிட்டு உள்ளேன். மேலை நாட்டு மத அரசியலால் இந்து மதமும் தற்போது அரசியலாக்க பட்டு வருவதும், அதிலுள்ள மூட நம்பிக்கைகளை பற்றியும் நான் நன்றாக அறிவேன். இந்து மதத்திலுள்ள நற்பண்புகளை பரப்ப முயற்சிக்கும் நான் அதே சமயம் இம்மூட நம்பிக்கைகளையும் கண்டிக்கிறேன்.

இதையே போல தான் நான் மற்ற மதத்தை (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்) சார்ந்த நண்பர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் அவர்கள் பெரியாரையும் பகுத்தறிவையும் இந்து மதத்தை குறை சொல்வதற்கான, தங்களுடைய மதத்தை பரப்புவதற்கான ஒரு கருவியாக உபயோக படுத்துவதை கண்டிக்கிறேன்.


நன்றி!

Itsdifferent said...

The word Hindu, was coined by British, when they saw multiple faith in India, each one having its own God(s), their own way of life. But they all believed in idol worship, and few other common practices, which have become intermingled in 1000s of years of existence, appearing as one sect to a stranger, and so they started identifying this group of people as Hindus. Vedas do not have any reference to the word Hindu.

2. Its a fashion these days, to bash Hindus, Brahmins, and that group is called secular. Anything and everything they do will multiplied by a factor of 100.

3. No politician or anyone else worth a salt, can throw stones at Hindu sect of folks, when they dont have any such hatred or guts to even condemn the other sects' practices.

So as Valpayyan says, lets forget all these differences, we are all human beings. Each having our thought process, and belief systems. Lets learn to believe in us, respect others and their belieft, and let them live, and believe, everyone else has the same right as us, to live in this world, enjoy the life on earth.
Tolerance towards each other is the key. That does not mean, tolerate the evil in a person, evil as defined as harm to another human being both physical and mental.
We have so many problems facing our country, it is such a unity, and working towards a common goal of nation building is the most important task of the day.
Lets do that together!!!

வால்பையன் said...

//அ.மு.செய்யது said...

இஸ்லாம் வாள்முனையில் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து என்ப‌து போல் ஒரு தொனி வ‌ந்திருக்கிற‌து.
நீங்க‌ள் இந்தியாவில் ப‌ர‌விய‌ இஸ்லாம் ப‌ற்றி சொல்கிறீர்க‌ளா ??
இல்லை உல‌க‌ மொத்த‌மும் இஸ்லாம் அப்ப‌டித்தான் ப‌ர‌வியது என்று சொல்கிரீற்க‌ளா ?
கொஞ்ச‌ம் விள‌க்க‌வும் "ச‌கோத‌ரா" ??//

மொத்த உலக வரலாற்றில் மதம் விட்டு சென்ற சுவடுகள் ரத்த கறையோடு தான் இருக்கின்றன!

இந்தியாவில் கஜினி முகமது படையெடுப்புக்கு பின் தான் மொகலாயர்கள் இந்தியாவை கைபற்றி ஆட்சி அமைக்க நினைத்தனர், அது வரை வெறும் கொள்ளை மட்டுமே!
தவறு சொல்லமுடியாது அக்காலத்தில் எல்லா அரசர்களும் அப்படியே!

அதன் ஆட்சி அமைத்த அரசர்கள் மக்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்ப்பட்டது, அதன் காரணமாக அவர்கள் இஸ்லாத்திற்கு மாற்ற பட்டனர், அதில் சில வன்முறைகளும் நடந்ததாக புத்தகங்கள் சொல்கிறது, அது பொய்யாக கூட இருக்கலாம்
ஏனென்றால் வரலாறு என்பது,
புனைவால் புனையப்பட்ட புனைவு.

வால்பையன் said...

//Utah என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுப்படி ஐரோப்பியர்களை ஒத்த இரண்டவது குருப் ஆண்கள், இங்கு ஏற்கணவே வந்த மக்களோடு கூடி கலந்து விட்டனர். ஆனால் கலக்கும் போது தங்களை மேல்சாதியாக வைத்து கொள்ளவே முயற்சி செய்துள்ளனர்.ஆகவே சாதி கொடுமையின் இரத்தம் பிராமணர்கள் மீது மட்டுமல்ல எல்லா பிற சாதிகாரர்கள் கையிலும் உள்ளது.//

ஆம் பார்ப்பனர்களை விட தம்மை உய்ர்சாதியினர் என்று சொல்லிகொள்பவர்கள் தான் இன்று சமூகத்தின் விஷ செடிகள்

SUBBU said...

பத்த வச்சிட்டியே பரட்ட

வால்பையன் said...

//முஸ்லிம் ப‌ற்றிய‌ ப‌திவு இல்லையா ..அப்ப‌ நீங்க‌ ப‌திவ ப‌டிக்க‌வே இல்லையா ??
அட்லீஸ்ட் ப‌திவின் த‌லைப்பை யாவ‌து பாருங்க‌ பாஸு.....//

இந்த பதிவு முழுக்க முழுக்க நண்பர் நண்டுவுக்கும் அவருடன் ஒத்த கருத்தள்ள பகுத்தறிவுவாதிகளுக்கும் கேட்கப்பட்ட கேள்விகள்!
என்றோ எப்பாதோ தேவைப்பட்டது பார்பனிய எதிர்ப்பு, அதை இன்றும் தூக்கி கொண்டாடுவது தேவையற்ற செயல் என்பதாலும் மேலும் அந்த பதிவில் அவர் இஸ்லாமியரை இழுத்திருந்ததாலும் எழுத வேண்டிய சூழ்நிலை, இதனால் எனது இஸ்லாமிய ச்கோதரர்கள் மனம் வருத்தப்படகூடாது என்பதற்காகவே அந்த மன்னிப்பு.

இன்று ஒரு பார்ப்பன சிறுவனை எதிர்க்க எதாவது காரணம் சொல்லமுடியுமா? பார்ப்பனனாய் பிறந்தது அவன் தப்பா?
அவனை குத்தி குத்தியே மேல் சாதி என்ற எண்னத்தை அவனுக்குள் ஊட்டுவதே இந்த பகுத்தறிவுவாதிகள் தான்

வால்பையன் said...

//ஒரு திராவிடன் இந்துவாக , கிறிஸ்தவனாக , இசுலாமியனாகலாம் ...ஆனால் பார்ப்பனனாக முடியாது ...அந்த பார்ப்பான் தான் வந்தேறி ..//

இதே போல் அவர்கள் திராவிடன் ஆகமுடியுமா?
திரவிடத்தை கீழ் மட்டமாக பார்ப்பதை முதலில் நிறுத்துங்கள்!
நம்மை விட தாழ்த்தவனுமில்லை
நம்மை விட உயர்தவனுமில்லை

வால்பையன் said...

//யோவ், இந்த பதிவு போட்டா என்ன மாதிரி விவாதம் போகும்ன்னு உமக்கு தெரியாதா ? comment moderation கூட இல்லாம தூங்க போய்டீங்க.//

பதிவின் சாராம்ச நோக்கத்தை புரிந்து கொண்டு சரியான பார்வையில் வாதம் போகும் என எதிர்பார்த்தேன்.

வால்பையன் said...

//மணிகண்டன் said...

நான் கடவுள் வந்ததுக்கு அப்புறம் " எதிர்ப்பு முட்டாள்தனமானதுன்னு " எல்லா எடத்துலயும் வழிமொழியறீங்க நீங்க !!!!!!//

நான் இன்னும் அந்த படம் பார்க்கல!
இது அது பற்றிய பதிவுமல்ல!
நான் கடவுள் மறுப்பாளன் தான்.

பெரியாரின் கொள்கைகளில் எவ்வளவோ உண்டு
பெண் சுதந்திரம்
சம தர்ம சமுதாயம்
இன்னும் பல
ஆனால் இந்த பகுத்தறிவாளர்கள் ஏன் பார்ப்பன எதிர்ப்பை மட்டும் கட்டிகொண்டு அழுகிறார்கள் என்று தான் தெரியவில்லை

வால்பையன் said...

////இஸ்லாம் என்பது மதமல்ல

மார்க்கம் - வாழ்க்கை நெறி.//

அந்த வாழ்க்கை நெறியில் எங்கிருந்து வந்தது புனிதப்போர்.. அனைவருமே தீர்த்துக்கட்டப்பட வேண்டிய தீவிரவாதிகள்.//

இது காழ்ப்புணர்வுடன் கூடிய பதிலாகவே எனக்கு தோன்றுகிறது.

தீவிரவாதிகளில் பெரும்பாலேனர் இஸ்லாமியராக இருக்கலாம்.
ஆனால்
பெரும்பாலான இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் அல்ல.

அன்று பார்ப்பனர்கள் தீண்டாமையை ஆதரித்ததற்காக இன்றும் பார்ப்பன எதிர்பு எவ்வளவு தவறோ, அதே போல் தான் யாரோ ஒரு திவரவாதி செய்ததற்காக எல்லா இஸ்லாமியர்களையும் தீர்த்துகட்ட பட வேண்டியர்கள் என்று சொல்வது.

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்! வால் பையன்! இது போன்ற விசயங்களை!
தைரியமாக, எந்தவித சமரசமும் இன்றி எடுத்து சொன்னதற்கு
முதலில் எனது பாராட்டுக்கள்!

மேலும்! இஸ்லாமிய சகோதரர்களிடம் மன்னிப்பு
கோரும் அளவிற்கு நீங்கள் ஏதும் எழுதியதாக
தெரியவில்லை! உங்கள் நோக்கமும் அப்படி
இருப்பதாக எண்ணமுடியவில்லை!

நாம் ஒன்றை எண்ணி பார்க்க வேண்டும்!

பகுத்தறிவு இயக்கங்கள் முதலில் கடவுள் நம்பிக்கையை
எதிர்த்தும் ,தீண்டாமையை எதிர்த்தும் தான் குரல் கொடுத்து
வந்தன.

எத்தனை காலம்தான் தீண்டாமை! தீண்டாமை!
என கத்தி கொண்டு இருப்பது? அதனால் வந்தேறிகள்!
பார்பனர் எதிர்ப்பு! என குரல் கொடுத்து காலம் தள்ளுகின்றனர்!

மக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து!வெளி கொணர்ந்து
தீண்டாமையிலிருந்து,காப்பற்ற உருவான ஒரு இயக்கம்
இன்று வெறும் பார்பன எதிர்ப்பு இயக்கமாக சுருங்கி விட்டது.

அதன் வெளிப்பாடுதான் வந்தேறிகள் என்ற குரல்!
இந்த நிலையில் உங்கள் கருத்து முற்றிலும் நியாயமானது!

அதே சமயம்! திராவிடர்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து
வந்து குடியேறியவர்கள் என்ற அதிகார பூர்வமற்ற தகவல்
ஒன்றும் வரலாற்றில் இருக்கிறது!

சரி! எது எப்படியோ? இனம்,மொழி,ஜாதி,மதம்,
எல்லாவற்றையும் கடந்து நம்மை எல்லாம் ஒன்றிணைப்பது
'''நட்பு''' என்ற ஆயுதம்தான்!
அதற்க்கு அருமை நண்பர் ''ஜமால்'' அவர்களின்



////சொல்வதை நேரிடையாகவும் தகிரியமாகவும் சொல்லுவது தான் ‘வால்’ ஸ்டைல்

இங்கே ஏதோ சொல்ல துவங்கிட்டீய, சொல்ல வேண்டியது தானே.

நமது நட்புக்கும் கருத்துக்கும் இடையில் நிறைய இடைவெளி உண்டு.

நீங்கள் என்ன எழுதினாலும் நமது நட்பு கெடாது./////

இந்த கருத்தே சாட்சி!

ஜமால் போன்ற தெளிவுள்ளம் கொண்ட நண்பர்கள் இருக்கும் வரை
நம் ஒருமைப்பாடு நிலைத்திருக்கும்.

அ.மு.செய்யது said...

//இந்த பதிவு முழுக்க முழுக்க நண்பர் நண்டுவுக்கும் அவருடன் ஒத்த கருத்தள்ள பகுத்தறிவுவாதிகளுக்கும் கேட்கப்பட்ட கேள்விகள்!
என்றோ எப்பாதோ தேவைப்பட்டது பார்பனிய எதிர்ப்பு, அதை இன்றும் தூக்கி கொண்டாடுவது தேவையற்ற செயல் என்பதாலும் மேலும் அந்த பதிவில் அவர் இஸ்லாமியரை இழுத்திருந்ததாலும் எழுத வேண்டிய சூழ்நிலை, இதனால் எனது இஸ்லாமிய ச்கோதரர்கள் மனம் வருத்தப்படகூடாது என்பதற்காகவே அந்த மன்னிப்பு.//

உங்கள் பதிவின் நோக்கம் எனக்கு புரிகிறது தல...

இருந்தாலும் இந்த பதிவை வைத்து சிலர் காய் நகர்த்துவதால்,அவர்களுக்கு
பதில் சொல்லப் போய்..வாதம் வேறு திசையில் பயணித்து விட்டது.

பார்ப‌னிய‌த்தையும் இஸ்லாத்தையும் குறி வைத்து தாக்குவ‌தையே சில‌ர் தொழிலாக‌ கொண்டுள்ள‌ன‌ர்.

நீங்க‌ள் முத‌லாம‌வ‌ருக்கு ப‌தில் சொல்கிறீர்க‌ள்.
நான் இர‌ண்டாம‌வ‌ருக்கு ப‌தில் சொல்கிறேன்.

த‌வ‌றில்லையே ?????????

வால்பையன் said...

//நீங்கள் கிருஸ்துவரானால் வந்தேரி அல்ல. கிருஸ்துவ மதம்தான் வந்தேரி மதம். நீங்கள் அல்ல... இதுகூஅவா புரியாமல் பதிவ எழுதுனீங்க???//

இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்று கொண்டனர் என்பதும் ஒப்புகொள்ளக்கூடிய விசயம் தானே!

இந்தியாவில் இஸ்லாமியர்கள் தன்னை ஒரு இந்தியனாக தான் நினைக்கிறார்கள். காஷ்மீர் பிரச்சனையில் இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதில்லை,
காரணம் இந்திய பற்று.

இது இவ்வாறு இருக்க, இஸ்லாமியரின் வருகைக்கு முன்னரே இந்தியா வந்த பார்ப்பனர்கள் இந்திய பற்றற்று இருந்தனர், அவர்கள் சுதந்திரதிற்கு எதிராக செயல்பட்டவர்கள் என்று அவதூறு பரப்புவது சரியா?

இஸ்லாமிய சகோதரன் மேல் நமக்கிருக்கும் பற்று அனைவரிடமும் இருக்கவேண்டுமா இல்லையா?

வால்பையன் said...

செந்தழல் ரவி said...

Dondu : Hello

Valpayyan : Yes Sir

Dondu : Ellam Niyabaam Irukkaa ?

Valpayyan : Yes Sir

Dondu : Ok Ok.

Valpayyan : Yes Sir

:)

வால்பையன் said...

டோண்டு சாதியை ஆதரித்து பதிவுகள் எழுதி கொண்டிருக்கும் போது பகிரங்கமாக டோண்டு செய்வது தவறு என்று பதிவு போட்டேனே!

அது நீங்கள் எனக்கு சொல்லி கொடுத்ததா ரவி அண்ணே!

எனக்கு தேவைன்னா பக்கத்து டேபிள்ல நானே ஆம்லெட் எடுத்து சாப்பிடும் அளவுக்கு எனக்கு மூளை இருக்கு!
யாரிடமும் இஅரவல் வாங்க வேண்டிய அவசியமில்லை, உங்களுக்கு வேண்டுமானால் நான் இரவல் தருகிறேன்

வால்பையன் said...

//முகலாயர்கள் மற்றும் கிருத்தவர் ஆண்டதர்க்கும் ஆரியரின் ஆண்டான், அடிமை கட்டமைப்புகள் ஏற்படுத்திய நிறந்தர காயங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறன.//

ஆண்டான் - அடிமை வழக்கம் பார்பனர்கள் ஏற்ப்படுத்தியதா?

ஒரு பார்ப்பனன் கூட ஆண்டானாக இருந்ததை நான் கேள்வி பட்டதில்லையே!

பொருளாதாரமும், கல்வியுமே ஒரு காலத்தில் மனிதனின் நிலையாக இருந்தது. அதுவே நிலபிரபுத்துவ முறையாக மாறியது, வள்ளுவர் காலத்திலேயே நிலபிரபுத்துவ முறை உண்டு, நிலத்துக்கு சொந்தகாரன் ஆண்டான் அவனிடம் வேலை செய்பவர்கள் அடிமை.

வள்ளுவர் காலத்திலேயே பார்ப்பனர்கள் இந்தியா வந்து விட்டார்களா?
அதுவும் தமிழகம் வரை வந்துவிட்டார்களா என்ன?

பார்ப்பனன் கொண்டுவந்தது வேதம் என்னும் புண்ணாக்கு மட்டுமே!

வால்பையன் said...

//ஒரு சமன் பாட்டை தீவிரமாக கைப்பற்றி கொண்டே இருக்கிறோம் ...நம்மால் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர முடியாது ...முயன்றால் நாம் முட்டாளாக சித்தரிக்க படுவோம்.//

இருந்து விட்டு போகட்டும், டார்வினையும், கலிலியோவையும் தூற்றிய உலகம் தானே இது!

வால்பையன் said...

//பெரியாரையும் பகுத்தறிவையும் இந்து மதத்தை குறை சொல்வதற்கான, தங்களுடைய மதத்தை பரப்புவதற்கான ஒரு கருவியாக உபயோக படுத்துவதை கண்டிக்கிறேன்.//

ஆம் உருப்படியாக செய்வத்ற்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்க! வெட்டியாக உட்கார்ந்து பார்ப்பனனை கண்டிப்பது கேனத்தனமாக தான் இருக்கிறது. நாட்டில் இன்னும் விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தால் பாராட்டலாம்.

நான் கடவுள் மறுப்பாளன், ஆக எல்லா மதமும் அதன் முன் அடிபட்டு போகிறது. என்னை இந்துவாக நினைத்து எதுவும் உதவி கேட்டுவிடாதீர்கள் நண்பரே!

வால்பையன் said...

//சரி! எது எப்படியோ? இனம்,மொழி,ஜாதி,மதம்,
எல்லாவற்றையும் கடந்து நம்மை எல்லாம் ஒன்றிணைப்பது
'''நட்பு''' என்ற ஆயுதம்தான்!
அதற்க்கு அருமை நண்பர் ''ஜமால்'' அவர்களின் கருத்தே சாட்சி!

ஜமால் போன்ற தெளிவுள்ளம் கொண்ட நண்பர்கள் இருக்கும் வரை
நம் ஒருமைப்பாடு நிலைத்திருக்கும்.//


உண்மை தான் ந்ண்பரே!
எனது கருத்து சுதந்திரதிற்காக உடன்பிறந்த சகோதரன் போல் துணை நிற்கும் அவருக்கு எப்படி நண்றி சொல்வதென்றே தெரியவில்லை

Anonymous said...

//வால்பையன் said...

உண்மை தான் ந்ண்பரே!
எனது கருத்து சுதந்திரதிற்காக உடன்பிறந்த சகோதரன் போல் துணை நிற்கும் அவருக்கு எப்படி நண்றி சொல்வதென்றே தெரியவில்லை//

அண்ணே !!! அப்ப என்ன உங்க எதிரியா ஆக்கிட்டீங்களா ???
நான் யாருன்னு தெரியுமில்ல...

மங்களூர் சிவா said...

/
கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்.
/

ஜெய் ஹிந்த்

மங்களூர் சிவா said...

பூனைக் கதை சூப்பர்.

கோவி.கண்ணன் said...

வால் பையனுக்கு என்ன கொம்பா மொளைச்சிருக்குன்னு யாரும் நினைச்சிடக் கூடாதுன்னு பதிவு தலைப்பு பாடம் சொல்லுது,

நெசமாவா ?

மங்களூர் சிவா said...

//
பத்துதலைமுறை முன் பாட்டன் பெயர் தெரியாது வரலாறு பேசுகிறார்கள்

புனைவின் புனைவே வரலாறு

//

கலக்கறீங்க வால்!

மங்களூர் சிவா said...

97

மங்களூர் சிவா said...

98

மங்களூர் சிவா said...

100

மங்களூர் சிவா said...

அப்பாடா ஓனர் இல்லாத கடைல பொறுப்பா காப்பி ஆத்தியாச்சு!!

வால்பையன் said...

உங்களின் பொறுப்புணர்வை கண்டு புல்லரித்து போனேன் சிவா பிரதர்

வெற்றி said...

ஒருப் பிரச்சினையில் எங்க ஊர் பெரியவர்கள் இளைஞர்களைப் பார்த்து சொன்னது,

போங்கடே முட்டாப் பசங்களா? ஜாதியாம், மதமாம், கடவுளாம்?
மனிசன மதிக்கப் பாருங்கடே மொதல்ல.
பெத்தவங்கள மதிக்க மாட்டான், ஜாதியப்பத்தி புடுங்க வந்துட்டான்,பொண்டாட்டிய கவனிக்க மாட்டான் ஊர் நாயம் பேச வந்துருதானுங்க.

போங்கடே மூள செத்த பசங்களா, உன்ன என்ன வேணா பண்ண்கிக்கோ அடுத்தவன தொந்தரவு பண்ணாத, நீ எப்பிடி வேணா இருந்துக்க அடுத்தவன இப்பைடிதான் இருக்கனுமுன்னு சொல்லாத, நீ உலத்தில்யே பெரியா ஆளா நெனச்சுக்கோ, ஆனா வெளிய சொன்ன வெதறப் புடுங்கிடுவேன்,நாந்தான் எல்லாருக்கும் மேலன்னு நெனச்சுக்கோ, ஆனா அடுத்தவன கீழன்னு நெனச்ச, கீழ அறுத்துருவேன், உனக்கான வேலைய மட்டும் பாரு, வீடு முன்னேரும், வீடு முன்னெருனா நாடு முன்னேரும், லூசுப் பசங்களா, போங்கடே வேலையப் பாருங்க என்றார்.

ஆமா அது ஏன் எனக்கு இப்ப ஞாபகம் வந்துச்சு.

தேவன் மாயம் said...

ஏற்கெனவெ செம ஹாட்!!
தேவா..

Anonymous said...

வால்பையன்

//வள்ளுவர் காலத்திலேயே பார்ப்பனர்கள் இந்தியா வந்து விட்டார்களா?
அதுவும் தமிழகம் வரை வந்துவிட்டார்களா என்ன?
//
134. மறப்பினும் ஒத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்ற கெடும்.
திருக்குறள் : ஒழுக்கமுடைமை 4 வது குறள்

//பார்ப்பனன் கொண்டுவந்தது வேதம் என்னும் புண்ணாக்கு மட்டுமே!//

வேதத்தை எழுதியது யாரென்று யாருக்கும் தெரியாது. அதை தொகுத்து வழங்கியவர் வேத வியாசர். இவர் ஒரு படகோட்டி பெண்ணின் மகன்.

Anonymous said...

2000 வருசமா மத்தவங்களுக்கு கல்விய மறுத்து அதன்மூலம் தன்னை அறிவாளி ஆக்கிய பார்ப்பனர்கள் பற்றி சூத்திர பஞ்சம சாதியினர் புரிந்து கொண்டு வெறும் சட்டப்பூர்வ பாதுகாப்பான இட ஒதுக்கீட்ட ஒரு 60 வருசம் கூட உங்களால தாங்க முடியாதது ஏன்னு புரியல. வேதம் கேட்ட சூத்திரன் காதுல ஈயத்த ஊத்த சொன்ன மனு, ஏகலைவன் கட்டைவிரல காணிக்கையா கேட்ட துரோணாச்சாரி, அப்பன் பாத்த வேலய காலைல 9 மணிமுதல் இன்றும் பார்க்க வேண்டும் என கல்வித்திட்டம் வகுக்க வந்த ராஜாஜி இவங்கெல்லாம் இருக்கையில இவங்க வழித் தொன்றல்தானே தாங்கள். அப்பன் சொத்தான அறிவ பெற்ற உங்களுக்கு அதுக்கு காரணமான மற்றவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்விக்கு அதுதாங்க கடனுக்கு பிராயசித்தம் தேடுறதுதான சரி. இன்னிலயிருந்து யாரும் கடன் கொடுத்தவனும் இல்ல, கடன அடைக்க வேண்டியவனும் இல்லன்னு நீங்க சொன்னா கடன் கொடுத்தவன் கேனயனா

திவானாக, திப்புவைக் காட்டிக் கொடுத்த பூர்ணய்யா வாக, கேவலம் ஊர் எல்லையைக் கூட தாண்ட வழியில்லாத சரபோஜியை எதிர்க்க துப்பில்லாமல் ராமனிடம் புலம்பிய தியாகய்யராக, திருவதாங்கூரிலிருந்து தென்னாட்டை கூட்டிக் கொடுத்த சர் சிபி ராமாசாமி ஆக இருந்த துதான அவாள் லட்சணம். வெள்ளையனுக்கு பல்லக்கு தூக்கிய அவர்களில் பெரும்பான்மையினருக்கு அவன் தந்த பட்டம்தான் சர். சர் வாங்கிய 95 சதவீதம் பேர் யார்? காங்கிரசு என்ற மனுப்போடும் கட்சி வந்தபோது அதிலும் அகண்டபாரத கனவுடன் வந்தவர்கள் மாராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள். அவர்களுக்குள் நடந்த குடுமிப்பிடி சண்டை பற்றி காங்கிரசு வரலாறு எழுதிய பட்டாபி சீத்தாராமய்யா விரிவாக எழுதியுள்ளார்.
பகத்சிங்ன் குரு அல்ல ஆசாத். hsra ன் சீப் கமாண்டர் அவர். சித்தாந்த விசயங்களில் ஈடுபாடு காட்டாத அவர் பிரிட்டிசாரை கடைசிவரை எதிர்த்தவர். கட்டபொம்மன் பற்றிய தமிழ்வாணன் மட்டுமல்ல பலரும் ஆதாரமில்லாமல் விமர்சித்து உள்ளனர். ஆனால் பேரா. ராஜய்யன், மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர் மதுரை காமராசர் பல்கலை எழுதிய பல புத்தகங்கள் ஆதாரத்துடன் அவனது நோக்கத்தை வீரத்தை பிரிட்டிஷ எதிர்ப்பை விளக்கியுளள்ளது. மேஜர் பானர்மெனின் நினைவுக்குறிப்பில் கூட நிறைய பகுதிகள் உள்ளன. ஆனால் ஆஷ்துரையை கொனற வாஞ்சி அதற்கு திட்டமிட்ட போது எழுதிய கடிதத்தின் சாதிவெறி பற்றி நானே படித்து உள்ளேன் தேவைப்பட்டால் ஸகேன் பண்ணி அனுப்புகிறேன்.
பகுத்தறிவு என்பது எக்ஸட்ரா அறிவு அல்ல. மற்ற மக்கள் கல்வி அறிவு பெற்று உங்களிடம் வஞ்சம் தீர்க்க முனைந்தால் உங்க பொழப்புலதான் மண்ணு விழும்.

பார்ப்பனர்க்ள ஆண்டதாக கேள்விப்பட்டதில்லையா மௌரியர்களை ஏன் சூத்திர சாதியிலுருந்து சத்திரியனாக கௌடில்யன் மாற்றினான் என்ற வரலாற்றைப்படியுங்கள் புரிந்து விடும்

ரவி said...

முதலில் மூடநம்பிக்கை, உயர் சாதீயம், பார்ப்பனீயம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது ?

பார்ப்பனர்களிடம் இருந்து தான்..

அதனால் தான் பெரியார் வேரில் வெண்ணீர் ஊற்றினார்...

ஈரோட்டில் இருந்துகொண்டு இதை நீங்கள் இன்னும் நன்றாக புரிந்துகொண்டு பதிவெழுதவேண்டும் என்பதே எனது ஆசை...

நீங்கள் ஒரு குழந்தைத்தனமான பதிவர் என்பதால் இந்த பதிவை நான் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை..

ஒரு பார்ப்பன அனானி ரொம்ப ஆடுகிறது இங்க்கே..

வால்பையன் said...

இது பார்ப்பன ஆதரவு பதிவுமல்ல, நான் பார்பனமுமல்ல.

நான் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமாக பதிலலித்தற்கு நன்றி,

ஆரம்ப காலம் தொட்டு பார்பனன் இந்திய மக்களுக்கு துரோகம் செய்து வந்தான் அதனால் தான் பெரியார் பார்ப்பனனை எதிர்த்தார் ரொம்ப சரி நானும் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்திருந்தால் அதை தான் செய்திருப்பேன்,

ஆனால் இன்று ஊழலில் இந்தியாவை கூறு போட்டு விற்று கொண்டிருக்கும் மற்ற அரசியல்வாதிகளுக்கு சொம்பு தூக்கும் பகுத்தறிவாளனாக நான் ஆக விரும்பவில்லை.

பார்ப்பனிய எதிர்ப்பு எந்த அளவு தேவைப்பட்டதோ அதே அளவு தேவை,
அதிகாரமையத்திற்கும், உயிர்சாதியினருக்கும் எதிரான போராட்டங்கள் இதற்காக மறுபடி பெரியார் பிறந்து வர மாட்டார்.

தற்போதைய தேவையை அறிந்து போராடாமல் பழைய பஞ்சாங்கத்தை படித்து கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

திராவிட குழுவுனரை ஒரு கேள்வி கேட்டுவிட்டால் அவன் பார்ப்பான், அல்லது பார்பன ஆதரவாளன்

நல்லாருக்கு உங்க பொது புத்தி!

வாழ்க நீவிர் பல்லாண்டு

Anonymous said...

//ஒரு பார்ப்பன அனானி ரொம்ப ஆடுகிறது இங்க்கே..//

அடேங்கப்பா ஐரோப்பாவுல உக்காந்துகிட்டே அண்ணன் எனக்கு சாதி சர்டிபிகேட் குடுத்துட்டாருபா!!! ஞானக்கண்ணுடா அண்ணனுக்கு!!!

அடுத்தவரை குழந்தை என்று சொல்லும் முன் உங்களை கொஞ்சம் கண்ணாடில பாருங்கப்பா. பகுத்தறிவுன்னா என்னனுன்னு புரிஞ்சுகங்க. கண்ணாதாசன் சொன்னாரு "எது பகுத்தறிவு? ஒருத்தன் என்னதான் குடிச்சிருந்தாலும் ஆத்தா பக்கத்துல போய் படுத்துக்க மாட்டான். இதுதான் பகுத்தறிவு". அந்த மாதிரி உங்க பகுத்தறிவு ஒழுங்காய் வேலை செய்யாதால்தான் எதிர் கருத்து சொல்லுறவன் எல்லாம் பார்பானா இல்லை அடிவருடியா தெரியுறான்.

வால்பையன் said...

பார்ப்பனர்க்ள ஆண்டதாக கேள்விப்பட்டதில்லையா மௌரியர்களை ஏன் சூத்திர சாதியிலுருந்து சத்திரியனாக கௌடில்யன் மாற்றினான் என்ற வரலாற்றைப்படியுங்கள் புரிந்து விடும்//

இதற்கு முன் பின்னூட்டம் இட்டவர்கள், இஸ்லாமியனாகவும், கிருஸ்துவனாகவும் மாற முடியும் ஆனால் பார்ப்பனனாக மாற முடியாது என்றார்களே!
அதுவும் முடியுமா?
அப்படியானால் பார்ப்பனனுக்கு தலையில் கொம்பு ஒன்றுமில்லை சரியா!

Anonymous said...

மிஸ்டர் வால் தங்களுக்கு தேவை என்றால் சாதி மாற்றத்தை மற்றவர்களுக்குத்தான் பார்ப்பனர்கள் செய்தார்கள் எனற வரலாற்றை சொன்னேன். ஸோ வரலாறு சமூகவியல் பற்றிய அறிவு போதுமாகப் பெறாமல் சமூகம் பற்றி எழுத வராதீர்கள்.

மேல்சாதி அதிகார மையம் பற்றி பேசியிருந்தீர்கள். மேல்சாதியினரின் மனோபாவத்தை தீர்மானிப்பது பார்ப்பனீயம் என்ற சித்தாந்தம்தான். அதனை வகுத்தவர்கள் பார்ப்பனர்கள்

தமிழ் ஓவியா said...

வணக்கம் சொல்லி எனக்கு கை குலுக்கும் கிறித்துவன் அந்நியனா?

( இந்துமதக் கொடுமை தாங்காமல் அம்மாவாசைதான் அரோக்கியசாமியாக மாறினான்)

சலாம் அலேக்கும் சொல்லி என்னைக் கட்டிப் பிடிப்பவன் அந்நியனா?

(இந்துமதக் கொடுமை தாங்காத சுப்பன் தான் சூசையாக மாறிப் போனான்)

நாமெல்லாம் இந்து என்று சொல்லிக் கொண்டே என்னைத் தொட்டால் தீட்டு, கிட்ட வராதே தூரப் போ என்று சொல்லுபவன் அந்நியனா?

யார் அந்நியன் வால் பய்யன்?

இங்கிருக்கும் முஸ்லீம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து குடியேறியவன் இல்லை. அதேபோல் கிறித்துவன் பெத்தலகேமிலிருந்து வந்து குடியேறியவன் இல்லை.

ஆனால் இங்கிருக்கும் ஆரியப் பார்ப்பனர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் தான் இதில் ஒன்றும் அய்யமில்லை.
நாடில்லாதவன் இங்கு வந்து நாடாளுகிறான்,காரணம் மூளைக்கு கடவுள், மதம் ,ஜாதி என்ற விலங்கைப் போட்டு வைத்த காரணத்தால்,
சிந்தனைதான் அந்த விலங்கை உடைக்கும்.

சிந்தியுங்கள்!

கண்மூடித்தனமான பார்ப்பன எதிர்ப்பை யாரும் செய்யவில்லை, இன்று தீட்சிதர்கள் நடந்து கொண்டது வரை நடுநிலையுடன் அலசிப் பாருங்கள் உண்மை புரியும்.

இந்துமதம் எங்கே போகிறது, மற்றும் சடங்குகளின் கதை என்ற இரு நூலையும் படியுங்கள் உண்மை தெளிவாகப் புரியும். அந்த நூல்களை அக்னிகோத்ர இராமானுஜ தாத்தாச்சரி என்ற ஆரியப்பார்ப்பன எழுதியது. இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகளை அப்பட்டமாக அவர் மரண வாக்கு மூலமாக அளித்துள்ளார்.
படியுங்கள் சிந்தியுங்கள். நன்றி.

ரவி said...

அதனால் தான் பெரியார் பார்ப்பனனை எதிர்த்தார் ரொம்ப சரி நானும் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்திருந்தால் அதை தான் செய்திருப்பேன்..

வால்ஸ்...

இப்ப எல்லாமே மாறிடுச்சா என்ன ? உத்தப்புரம் எங்கே போச்சு ? இன்னும் எத்தனை கிராமங்களில் இரட்டை குவளை முறை இருக்கு தெரியுமா ?

இன்னும் எத்தனை கிராமங்களில் ஊருக்கு வெளியே சேரி இருக்கு தெரியுமா ??

இன்னும் எத்தனை தலித் குடும்பத்தினர் குடிசையில் பொருளாதாரத்தில் பின் தங்கி வாழ்கிறார்கள் தெரியுமா ??

தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு என்றதும் பார்ப்பணர்களுக்கு பற்றிக்கொண்டு வந்து அடியில் தீவைத்தது போல ஆடுவது ஏன் ?

உங்கள் கண்களில் அது தெரியவில்லை, அதனால் நீங்கள் இன்னும் ஆழமாக பாருங்கள், மேலோட்டமாக அடிச்சு விடாதீங்க...

@ பார்ப்பன அனானி

நான் அய்ரோப்பாவில் இருக்கேன் ஆப்ரிக்காவில் இருக்கேன்..ஆனால் சொல்வதுக்கு சரியான எதிர் வாதம் வைக்கவும்...

அட்லீஸ்ட் உங்க பேரை எழுதினால் மகிழ்வேன்

Anonymous said...

// வரலாறு சமூகவியல் பற்றிய அறிவு போதுமாகப் பெறாமல் சமூகம் பற்றி எழுத வராதீர்கள்.//

நீங்களும் அறிவியல் அறிவு இல்லாமல் எழுத வராதீர்கள். அறிவியல் பிராமணர்களும் சூத்திரகளும் ஒரே இனத்தவர் என்று சொல்கிறது.

Anonymous said...

//நான் அய்ரோப்பாவில் இருக்கேன் ஆப்ரிக்காவில் இருக்கேன்..ஆனால் சொல்வதுக்கு சரியான எதிர் வாதம் வைக்கவும்...//

அண்ணே இது நான் சொல்ல வேண்டிய டயலாக், நீங்கதான் என்க்கு எதிர்வாதம் வைக்காமல் என்னை பார்ப்பான் என முத்திரை குத்தி விட்டீர்கள். எனது பெயரை தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? இருந்தாலும் எனது பெயர் சம்பத், அமெரிககாவிலிருந்து.

//இன்னும் எத்தனை தலித் குடும்பத்தினர் குடிசையில் பொருளாதாரத்தில் பின் தங்கி வாழ்கிறார்கள் தெரியுமா ??

தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு என்றதும் பார்ப்பணர்களுக்கு பற்றிக்கொண்டு வந்து அடியில் தீவைத்தது போல ஆடுவது ஏன் ?//

இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்... இரட்டை குவளை வைப்பவன் என்ன பிராமணா? அவன் பிற்படுத்தப்பட்டவன். இதனால் பாபாசகேப் திராவிட ஆரிய டூபாக்கூர் மேட்டர ஒத்துக் கொள்ளாமல் எல்லா மேல்சாதி கம்மினாட்டிகளையும் எதிர்த்தார். ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பான் பார்ப்பான் எனச் சொல்லியே இந்த பிற்படுத்தப்பட்ட பரதேசிகள் குதிரை ஏறிவிட்டானுக என்பது எனது கருத்து.

முதலில் இந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, முஸ்லிம் இட ஒதுக்கீடு, இந்த மாதிரி ஓட்டுப் பொறுக்கும் வேலைகளை ஒழித்து விட்டு சாதி விட்டு திருமணம் செய்யும் மக்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள். சாதி ஒழியும், I salute you!!

Anonymous said...

பார்ப்பான் கத்து கொடுத்தான் என எல்லாப் பழியையும் அவன் மீது போடும் சாதிக்காரனுக்கு மூளை என்ன பட்டக்ஸ்யா இருக்கு. நீ தாண்டா மெஜாரிட்டி நீ அவனை ஒதுக்கு. அத விட்டுபிட்டு உனக்கு கீழ தலித் கிடைச்சசது பிராமணனுக்கு காவடி தூக்கி விட்டு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கும் திராவிட கட்சிகளின் தலைவர்களை நான் மதிக்கவும் தயாரில்லை. இந்த மாதிரி நடிக்கவும் நான் தயாரில்லை.

-மீண்டும் நானே

hariharan said...

// கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம். //

நன்றாகச் சொன்னீர்கள்.

பெரியார் பார்ப்பனீய சிந்தனையத்தான் எதிர்த்தார், பார்ப்பனர்களை அல்ல இல்லையென்றால் இராஜாஜியுடன் அவர் எப்படி நட்போடு பழகமுடியும்.

இன்றைய பகுத்தறிவு தோழர்கள் தமிழ் இன உணர்வை கொள்கையாக கொண்டிருக்கின்றனர் ஆனால் பெரியார் மனிதன் என்ற உணர்வைத்தவிர மற்ற எல்லா உணர்வையும் வெறுத்தார்.

பகுத்தறிவாளன் யார்?
1. மன உறுதியும் தெளிவான சித்தனையும் பெற்றவன்.
2. அஞ்சா நெஞ்சுடன் அறிவுக்கு முதலிடம் தந்து ஆக்கப் பணிகளைச் செய்வோன்.
3. எங்கும், எதிலும், யாரிடத்தும் உண்மையை ஆராய்ந்து அறிவோன்.
4. சிந்தனையே எல்லா ஆற்றல்களையும் அளிக்க வழி வகுக்கும் மாமருந்து என உணர்வோன்.
5. பெண்ணினத்துக்குச் சம உரிமை வழங்குபவன்.
6. எண்ணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையாகப் பகுத்தறிவையே முன்னிறுத்தி இயங்குபவன்.
7. அடக்கமும் அமைதியும் உடையவனாய்த் தற்பெருமையும் தாழ்வு மனப்பான்மையும் இன்றி வாழ்வோன்.
8. துன்பம், தடை, சிக்கல், ஏக்கம், அச்சம், பிணி முதலியவற்றை அறிவியல் முறையில் அகற்றக் கற்றவன்.
9. மனித உடல் பல சிக்கல்கள் பொருந்திய பொறி (இயந்திரம்) என்னும் உண்மையைக் கருத்திற்கொண்டு, உடலை ஓம்பி, காலம் வரும்போது மாள அஞ்சாதவன்.
10. பெயர், புகழ், வீண் பெருமை ஆகியவற்றுக்காக ஆடம்பரமான வாழ்வு நடத்தாமல், தற்புகழ்ச்சியைத் துறந்து, பிறர் நலம் பேணுவோன்.
11. கடவுள், மதம், சாதி, முதலிய பொய்மைகளினின்றும், விடுபடுவதுடன், இனம், மொழி, மரபு, இலக்கியம் முதலிய எல்லைக்கு அப்பாற்பட்டு இயங்குபவன்.
12. மனிதனைச் சமநோக்குடன் அணுகி மதிக்கும் இயல்பும், உண்மை அன்பும், தன்னலமின்மையும், வினைத் தூய்மையும், மிக்கவனாய், ஊக்கமுடன் உழைப்போன்.
13. தனக்காக மட்டும் வாழாது, தான் எற்றுக்கொண்ட பொறுப்பு ஒவ்வொன்றிலும் பிறருக்காக, சமுதாய முன்னேற்றத்துக்காக தொண்டாற்றுபவன்.

http://pakuththarivu.wordpress.com/

பகுத்தறிவாளர்களே சிந்தியுங்கள்.

ரவி said...

.....

தமிழ்நாட்டில் பார்ப்பான் பார்ப்பான் எனச் சொல்லியே இந்த பிற்படுத்தப்பட்ட பரதேசிகள் குதிரை ஏறிவிட்டானுக என்பது எனது கருத்து.
\

நீங்க சொல்லுற மாதிரியே வருவோம்...

ரெண்டு திருடனுங்க இருக்கானுங்க...

திருடன் நெ 1 > பாப்பான்
திருடன் நெ 2 > பாப்பானை பார்த்து திருட அல்லது தீட்டு கற்றுக்கொண்ட உயர்சாதிக்காரன்.

திருடன் நெம்பர் ரெண்டு திருடன் நெம்பர் ஒன்னை சொல்லி குதிரையோ கழுதையோ ஏறிட்டான்.

அதுக்காக முதல் திருடனை திருடனே இல்லை என்பது என்ன நியாயம் ??

ரவி said...

சோமசுந்தரம் சார்

அற்புதமாக சொல்லியிருக்கீங்க...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

//அதுக்காக முதல் திருடனை திருடனே இல்லை என்பது என்ன நியாயம் ??//

அவன் திருடனில்லை என்று நான் எழுதவே இல்லை (ஒரு வேறு அனாநியாக இருக்கலாம்). நான் பிராமணர்களை மட்டும் குறி வைத்து, அவங்க மட்டும்தான் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள், நாமெல்லாம் மண்ணின் மைந்தர்கள் என்பதைத்தான் ஒத்துக் கொள்ள மறுக்கிறேன். நாமெல்லோருமே மாற வேணும்.

அவ்வளவு ஏன் தலித்கள் கூட மாற வேண்டியுள்ளது. அவர்களுக்குள் ஆயிரம் பிரிவினை. ஒருத்தனை ஒருத்தன் தொடமாட்டான். கோவையில் ஒரு அன்பர் நரிகுறவர் சமூக சிறுவர்கள் 300 பேருக்கு இல்லம் நடத்துகிறார். அந்த சிறுவர்கள் சிலரை தலித் திருமணம் ஒன்றிற்கு அழைத்து
சென்ற போது நரிக்குறவர் கீழ் சாதி என அனுமதிக்க மறுத்து விட்டனராம்.

ஆகா நாமனைவரும் குற்றவாளிகள், பிராமணர்கள் மட்டுமல்ல. அவர்கள் சாதி பிரமிடின் உச்சத்திலிருப்பது மட்டும்தான் அவர்கள் குற்றம். மற்றபடி சாதிக் கொடுமை என்றால் நாமனைவரும் எல்லாச் சாதிகாரர்களும் குற்றவாளிகள், மாற வேண்டியவர்கள்.

Anonymous said...

பிறப்பால் பார்பான சாதியில் பிறந்தவர்களை எல்லாம் திருட்டு பார்பான் என நொங்கு எடுக்கும் செந்தழல் ரவி தனது குழந்தையை எவ்வாறு கொஞ்சுவாரோ அங்கும் பார்பன ரத்தம் பாதி கலந்தே இருக்கிறதே

Anonymous said...

//அதுக்காக முதல் திருடனை திருடனே இல்லை என்பது என்ன நியாயம் ??//

வெண்ணை தாங்களும் திருடன் தான்(ர்). அடுத்த திருடனை கைகாட்டி சாமர்தியமாக தப்பி செல்லும் திருடன்(ர்)

Anonymous said...

ரவியண்ணை மேற்கண்ட 2 பின்னுட்டங்கள் என்னுடையவையல்ல!!!
-சம்பத்

Unknown said...

//ஆண்டான் - அடிமை வழக்கம் பார்பனர்கள் ஏற்ப்படுத்தியதா?

ஒரு பார்ப்பனன் கூட ஆண்டானாக இருந்ததை நான் கேள்வி பட்டதில்லையே!//
பார்ப்பனர்கள் ஆளவில்லைதான் ஆனால், ஆண்டானையும் அடிமையையும் உருவாக்கி திரைமைரைவாய் ஆண்டது உலகுகே தெரியும்.

Unknown said...

யாரோ சொன்னாங்க இந்த ஆண்டான் அடிமை கட்டமைப்பை எல்லாம் ஆரியர் கொண்டுவந்ததுக்கு ஆதாரமில்லைன்னு (கடல் போல பின்னூட்டத்துல துழாவி கண்டுபிடிக்க முடியல).

மனுதர்மம் ஆரியரோடது இல்லைன்னா, நால்வருன கட்டமைப்பை யார் நிருவினான்னு தெரியல.

ரவி said...

கீழ்த்தரமான பின்னூட்டங்களை போடுவதன் மூலம் என்னை மட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தால் பாவம் நீங்கள் அனானி...

பயந்து பதுங்கி அனானி என்ற போர்வைக்குள் ஒளிந்து எதையாவது கழிந்துவிட்டால் போதுமா ?

இதுக்கு நீ உன் மனைவியோ அல்லது அம்மாவோ அவர்களின் பாவாடைக்குள் சென்று ஒளிந்துகொள்ளலாம்...

Unknown said...

//நீங்களும் அறிவியல் அறிவு இல்லாமல் எழுத வராதீர்கள். அறிவியல் பிராமணர்களும் சூத்திரகளும் ஒரே இனத்தவர் என்று சொல்கிறது. //

எந்த அறிவியல் சொல்லுதுன்னு கொஞ்சம் சொல்லுங்கலேன். அதோட ஆராய்ச்சி அறிக்கை (research article) ஏதாவது இருந்தா குடுப்பீங்களா?

இந்தியாவுல 4 இனம் இருக்குன்னு மரபியல்(genetics) ஆராய்ச்சியில பதிவாயிருக்கு. யார் இந்திய துணைகண்டத்துல முதல்ல நுழஞ்சாங்க அப்படிங்கர வரைக்கும் மரபியல் பூர்வமா அராய்ச்சி பன்னிருக்காங்க. AIIMS (All India Institute of Medical Science) பரம்பரை வியாதிகளோட மறபியல் அடையாலங்கல (genetic markars)இந்திய மக்களோட மறபணுக்கள்ள கண்டுபிடிக்கரதுக்காக ஒரு ஆய்வு நடத்தினாங்க. ஆய்வோட முடிவுல இந்தியா ஒரு ஓரினமான மக்கள்தொகை அல்ல (non-homogeneous population. அது மேற்கண்ட நான்கு பெரிய இனங்களாக பிரிந்திருப்பதும், மற்றும் மறபியல் வேறுபாடுகள் அதிகம் தென்படுவதால், இந்தியர் என்பவரை ஒரே இணமாகக்கொண்டு எந்த மறபியல் ரீதியான மறபியல் மருத்துவ முடிவுகளோ எடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆரியர் வந்ததும், வேற்றுமை விதைத்ததும் எவராலும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் பழங்கதை பேசாமல், இன்றைய நிலையை உணர்ந்து செயல்படுவது என்பது மனிதன் கொண்ட பகுத்தறிவுக்கு அழகு.

? said...

//எந்த அறிவியல் சொல்லுதுன்னு கொஞ்சம் சொல்லுங்கலேன். அதோட ஆராய்ச்சி அறிக்கை (research article) ஏதாவது இருந்தா குடுப்பீங்களா?//

அநாநி தரும் முன் நான் ஏற்கனவே reference கொடுத்ததை படித்தீர்களா? ஆரியர்கள் எனும் ஐரோப்பியா இனம் வந்ததது உண்மைதான். அவர்கள் ஏற்கனவே இருந்த மக்களோடு (திராவிடர்கள்) கூடி கலந்து விட்டார்கள். இப்ப இருப்பதெல்லாம் கலப்படம்தான்.எனது முந்தய பின்னூட்டத்தை படிக்கவும்.

? said...

//மேற்கண்ட நான்கு பெரிய இனங்களாக பிரிந்திருப்பதும்,//

ஆரியன் திராவிட இன்னமும் ரெண்டு குரூப் யாரு? அந்த பேப்பரின் ரெஃபரன்ஸ் தரவும்.

Unknown said...

4 இனங்கள்:Austro-Asiatic, Tibeto-Burman,Indo-European மற்றும் திராவிடர்கள்.
Ref. Analabha Basu er.al., Ethnic India: A Genomic View, With Special Reference to Peopling and Structure, Genome Res. 2003. 13: 2277-2290.

Unknown said...

நந்தவனத்தான்,
100கும் அதிகமான பின்னூட்டங்கள் இருந்ததாள் பலவற்றை ப்டிக்கமுடிய்வில்லை. அதனால் உங்கல் பின்னூட்டத்தை விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.
சமசுகிருதம் இந்தோ-ஐரோப்பிய (indo-europian) மொழிக்குடும்பத்தின் அங்கமாகும். அதன்படி, ஆரியர்கள் இந்த இனத்தில் அடங்குவர். அதே நேரம், மேல் சாதியினரின் அடையாலங்கள் அசுதிரோ-ஆசியர்(Austro-Asiatic)களோடு ஒத்திருப்பதும், ஆரியர் வருகை மத்திய ஆசியா என்ற சில வரலாற்று குறிப்புகளையும் பார்க்கும்போது சிரிது குழப்பமாகத்தான் இருக்கிறது. மேலும் சில ஆய்வுகள் இதனை விளக்கக்கூடும்.

? said...

ஆரிய படையெடுப்பு கொள்கை வெள்ளைக்காரன் நம்மை பிரிப்பதற்காக விட்ட கதை என்று வெள்ளைக்காரனே ஒப்புக்கொண்ட கதையிது. BBC-ல் 2009, 5 ஜனவரியன்று ஒளிபரப்பட்ட மைக்கேல் வுட்ஸ் எனும் பிரிட்டிஷ் மானுடவியல் ஆராய்ச்சியாரின் டாக்குமென்டரி.

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

இன்னொரு ஆங்கிலேயரான, உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தின் மரபியல் ஆராய்ச்சியாளர் Dr. Toomas Kivisild-ன் ஆராய்ச்சிக்கட்டுரைகள்
http://www.archaeologyonline.net/artifacts/Kivisild2000.pdf

http://evolutsioon.ut.ee/publications/Kivisild2003a.pdf

அவர் சொல்கிறார் ஆரியர்கள் பிற்காலத்தில் இந்தியாவினுள் நுழைந்த அன்னியர்கள் என்பது தவறு. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் தோன்றி வெளியே புறப்பட்ட போது இந்தியா ஒரு சத்திரம் போல விளங்கிற்று. இங்கிருந்துதான் மனிதன் பிற இடங்களுக்கு பரவினான்.இதனால் இங்கு பல்வேறு இனமக்களின் ஜெனடிக் மார்கர்கள் இந்தியர்களிடத்தில் உண்டு.

இதனால் சுலபமாக ஆரிய(பார்பன) திராவிட(மற்ற சாதி) என இந்தியர்களை பிரிக்க இயலாது.

Anonymous said...

//கீழ்த்தரமான பின்னூட்டங்களை போடுவதன் மூலம் என்னை மட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தால் பாவம் நீங்கள் அனானி...//

எது கீழ்தரமான பின்னோட்டம். தாங்கள் மட்டும் அனைவரையும் தனிபட்ட ரீதியில் சாதி ரீதியாக திட்டலாம் ஆனால் வேறு யாரும் தங்களை சொல்ல கூடாது .இது தான் தரமா?

//பயந்து பதுங்கி அனானி என்ற போர்வைக்குள் ஒளிந்து எதையாவது கழிந்துவிட்டால் போதுமா ?//

தாங்கள் செய்யாத குறும்பா தாங்களும் ஒரு பிரபல அனானியே

//இதுக்கு நீ உன் மனைவியோ அல்லது அம்மாவோ அவர்களின் பாவாடைக்குள் சென்று ஒளிந்துகொள்ளலாம்...//

பிரபல அனானியான தாங்களும் இவ்வாறே செய்வீர்களாக

Anonymous said...

//இதுக்கு நீ உன் மனைவியோ அல்லது அம்மாவோ அவர்களின் பாவாடைக்குள் சென்று ஒளிந்துகொள்ளலாம்...//

பிரபல அனானியான தாங்களும் இவ்வாறே செய்வீர்களாக//

secret of senthazal ravi :-)
)

Anonymous said...

பார்ப்பனர்கள் மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் தங்களை அறிவாளிகளாக்கி கொண்டவர்கள். இதற்கு என்ன காம்பன்சேசன் செய்து மனித சமூகத்தை ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய வைக்க முடியும் என பார்ப்பனர்களை அய்யோ பாவம் என எண்ணுபவர்கள் விளக்கலாம்.

இது அன்றைக்கு நடந்தது இன்றைக்கு பார்ப்பனர்கள் சாதி பார்ப்பதில்லை என்பவர்கள் பார்ப்பனர்களை மற்ற தாழ்த்தப்பட்ட பிற்பட்ட சாதி ஆண்களுக்கு தங்களது வீட்டு பெண்களை மனமுவந்து திருமணம் செய்து வைக்கலாமே... அப்படி செய்வதும் அதனை மற்ற மேல்சாதிக்கு கற்றுத் தருவதும் அவர்களது கடமை.

இன்றைக்கும் பார்ப்பன லாபி பன்னாட்டு கம்பெனிகள் வரை நீள்கின்றது. அரசு உத்தியோகத்தில் இட ஒதுக்கீடு வந்ததால் கல்வியின் தரம் குறைந்து விட்டது எனச் சொன்னார்கள். மண்டல் கமிசனை நடைமுறைப் படுத்த முயன்ற போது தீக்குளித்தார்கள். இரண்டாண்டுகளுக்கு முன இட ஒதுக்கீடு என்ற உடன் பார்ப்பன குலக் கொழுந்துகள் உடலுலைப்பில் ஈடுபடும் மக்களை கேவலாமாகப் பார்க்கும் தங்களது இயல்பான பார்வையோடு தெருக்கூட்டும் போராட்டத்தை நடத்தினர்.

அவ்வளவு ஏன் தில்லையில் தீட்சிதர்களின் கொட்டத்தை அரசு தனது ஆணையின் மூலம் அடக்க முயன்றது நீதிமன்றத்தை மட்டுமா தீட்சிதர்கள் நாடினார்க்ள. பாப்பாத்தி ஜெயாவைத்தானே சந்தித்தார்கள். பார்ப்பனர்கள் எது முன்னேறிய வடிவில் வருகின்றதோ அதனை முதலில் கைப்பற்றி தங்களது நிறைவேற்றுவர்.

கம்யூனிசத்திலும் அவர்களது ஆதிக்கம் அப்படித்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின்னு ஒரு கட்சி இருக்கு. மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற அமைப்பு ஒரு கூடடியக்கமாக தில்லையை மக்களது ஆலயமாக மாற்ற போராடிய போது சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்கள் பார்ப்பனர்கள் என்ற வார்த்தையை மற்றவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக போராட்டத்திலிருந்தே விலகி விட்டார்கள். இதற்கு காரணம் அந்த கட்சியில் தலைமைக் குழுவில் உள்ள பார்ப்பனர்களின் பார்ப்பனத்தன்மைதான்.

எங்களது பன்னாட்டு கம்பெனியில் ஒரு லைன் கூட கோடு எழுதத் தெரியாத பார்ப்பான் ஒருவன் சாப்ட்வேர் மேனேஜராக திடீரென பதவி உயர்வு பெற்றான். சரியாக மெயில் கம்யூனிகேசன் பண்ணும ஆங்கில அறிவும் கிடையாது அவனுக்கு. என்ன தகுதி எனத் தெரிய வேண்டுமா....அவனுக்கு மேலே பார்ப்பனர்கள் மெஜாரிட்டி...அல்லது பார்ப்பனர்கள்தான் அறிவாளிகள் என ஏற்றுக்கொள்ளும் சூத்திரர்கள்தான் மீதமானவர்கள்.... இந்த கம்பெனியை நடத்துபவர் பிரபல ஆங்கில நாளிதழை நடத்தும் ஒரு தன்னை கம்யூனிஸ்டு என அழைத்துக் கொள்ளும் பார்ப்பனரின் துணைவி.....

Anonymous said...

miga arumai val paiyan. nalla Azhamana vadhangal.

Anonymous said...

அனானி,
coding செய்ய தெரிவதுதான் ஒரு மேநேஜருடைய தகுதியா? ஒரு மேனஜருக்கான தகுதிபற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாத உனக்கு பதவி உயர்வு கிடைக்காததில் வியப்பொன்றுமில்லை. தன்னுடைய தோல்விகளுக்கு பிறரை குற்றம் கூறிக்கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஒட்டிகொண்டிருந்தால் இருக்கும் வேலையும் இருக்காது. You get what you deserve.

Anonymous said...

ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம், எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்த முயற்சிப்போம்,
நாம் இந்த நேரத்தில்
----------------------------------
இன்னிக்கி இங்க எவ்ளோ டவுசர் கிழிய போகுதோ??

Unknown said...

//BBC-ல் 2009, 5 ஜனவரியன்று ஒளிபரப்பட்ட மைக்கேல் வுட்ஸ் எனும் பிரிட்டிஷ் மானுடவியல் ஆராய்ச்சியாரின் டாக்குமென்டரி.//

இது தவரான செய்தி. இந்த கோப்பு 2007ல் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பி.பி.சி. குறும்படங்களுக்கென்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவை எதுவுமே இதில் தென்படவில்லை.

"The mythe of ariyan invation" என்ற தலைப்பில் பல கட்டுறைகள் வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும் அவை இந்துத்துவ கருத்தோட்டம் கொண்டவர்களின் மூலமே வடிவமக்க்கப்படுவதுடன் பரப்பவும் படுகிறது. ஆரியர்கள் இந்திய துணைகண்டத்தில் மட்டுமல்ல, ஐரோப்பியாவின் பல இனங்களும் ஆரிய இனங்களே.

Anonymous said...

It makes me laugh to see people still believing in Aryan invasion theory crap. India is a land of Hindu Dharm with a written history of over 5000 yrs.

In a time when the entire west is dominated by left-liberal-Xian-Wahabi pressures, their confession on the intention and fiction in Arian invasion theory itself is commendable.

? said...

//இது தவரான செய்தி. இந்த கோப்பு 2007ல் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பி.பி.சி. குறும்படங்களுக்கென்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவை எதுவுமே இதில் தென்படவில்லை.//

ஐயா, இது சனவரி அன்று மறு ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கலாம். இதற்கான லிங்கை தந்திருக்கிறேன்.ஒரு பாரம் ஒன்றில் இந்த லிங்க கண்டேன். அங்கு ஜனவரி 5 அன்று ஒளிபரப்பு செய்யப்பட்ட BBC டாக்குமென்றிக்கு இன்னொருவர் லிங்க் கேட்ட போது ஒருவர் இந்த லிங்க் தந்திருந்தார்.இது மைக்கேல் வுட்ஸ் எடுத்த டாக்குமென்டரி பற்றிய விபரம்

http://www.pbs.org/engage/blog/five-good-questions-michael-wood


மேலும் BBC தளத்தில் இந்த ஆரிய படையெடுப்பு ஒரு புரட்டு என்று சொல்லும் வெப்பேஜை பார்க்கவும். அது சொல்லுகிறது... (The theory)included unacceptably racist ideas:

http://www.bbc.co.uk/religion/religions/hinduism/history/history_4.shtml

//"The mythe of ariyan invation" என்ற தலைப்பில் பல கட்டுறைகள் வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும் அவை இந்துத்துவ கருத்தோட்டம் கொண்டவர்களின் மூலமே வடிவமக்கப்படுவதுடன் பரப்பவும் படுகிறது. //

இது எனக்கு தெரியும். இந்துதுவ வலதுசாரிகள் இந்தக் கொள்கை பொயென நிறுபிக்க முயல்கிறார்கள். அதே மாதிரி இடதுசாரிகள் இது உண்மை என நிறுபிக்க முயல்கிறார்கள்.இந்திய ஆராய்ச்சியாளர் இதில் ஏதாவது ஒரு குழுவை சேர்ந்தவராக இருப்பின் அவரது கட்டுரைகளும் நடுநிலை தவறலாம். இதனால்தான் உமக்கு பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட கட்டுரைகளை ரெபரன்ஸ் கொடுத்தேன்.


//ஆரியர்கள் இந்திய துணைகண்டத்தில் மட்டுமல்ல, ஐரோப்பியாவின் பல இனங்களும் ஆரிய இனங்களே.//

உணமைதான், அவர்கள் இந்தியாவிலிருந்துதான் அங்கு போயிருக்க வேண்டுமென புதிய ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

? said...

//இது தவரான செய்தி. இந்த கோப்பு 2007ல் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பி.பி.சி. குறும்படங்களுக்கென்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவை எதுவுமே இதில் தென்படவில்லை.//

நீங்கள் எழுதியது மிகவும் சரி.இது என்னுடைய தவறுதான். மைக்கேல் வுட்ஸின் டாக்குமென்டரி கூகுள் வீடியோ-ல் கிடைக்கிறது.அவசரத்தில் நான் செய்த தவறுக்கு மன்னிக்கவும். இன்றுதான் அந்த படத்தினை பார்த்தேன். அதில் அவர் ஆரிய படயெடுப்பை ஆதரிக்கிறார். ஆனால் அவர் முன்பு பலர் செய்த தவறினையே செய்கிறார். மொழி மற்றும் வேத குறிப்புகளை அடிப்படையாக கொண்டு அவரது ஆராய்ச்சி போகிறது ஆனால் அதே படத்தில் முனைவர் பிச்சையப்பன் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். மொழி மற்றும் மத அடிப்படையில் மனித இனம் குறித்த ஆராய்ச்சி செல்லக்கூடாது என்கிறார். ஏனெனில் இவைகள் மாறக்கூடியது. வடநாட்டு தலித் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுகிறார்,திராவிட மொழி அல்ல.அவர் ஆரியரா/திராவிடரா? அதனால்தான் நாம் மரபியல் ரீதியான அதாவது அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. மொழி தோன்றியது 10,000 வருடங்களுக்கு முன்பு. ஆனால் இந்த இந்தியாவில் உள்ள ஆரிய அல்லது ஐரோப்பிய ஜீன் குறீயீடுகள் அதற்கு முற்பட்டவை.


அதனால் இங்கு ஆரியர்கள் அல்லது ஐரோப்பிய கும்பல், மொழி தோன்றுவதற்கு முன்பே வந்திருக்க வேண்டும் மேலும் அவர்களில் ஜீன்கள் சூத்திரர் என்ப்படும் மக்களிடமும் உண்டு.இது அவர்கள் கூடி கலந்து விட்டார்கள் என் அர்த்தம்.

நிற்க. ஆரிய படையெடுப்பு சர்ச்சை ஓயாது. இதனை பிடித்து தொங்குவதால் எந்த பயனுமில்லை. அது உண்மை என்றாலும் என்ன செய்வது? எல்லா சரித்திர தவறுகளையும் பிடித்து சரி செய்ய முடியுமா? அப்புறம் பாப்ரி மஜ்ஜித் இடிப்பு மாதிரி காட்டுமிராண்டிதனம் என்றுதான் அழைக்கப்படும். இந்திய பலவேறு படையெடுப்புகளால் சின்னாபின்னப் படுத்தபட்டுள்ளது. ஆரியர்கள் (?),அரேபியர்கள், ஆங்கிலேயர்கள், சீனர்கள் என லிஸ்ட் நீளும். இவர்களையெல்லாம் என்ன செய்ய முடியும். பழங்கதை பேசித்திரிவதற்கு பதிலாக சமத்துவ சமுதாயம் காண முற்படுவதே நமக்கு நல்லது

Anonymous said...

கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்.

very easy to say but never difficult to do because our mind are out of control... regarding the scientist concept.
anyhow good discusstion, continue your work...
nice to meet..

Anonymous said...

Just look at the attitude of the Tamil blogosphere for urself.

Blaming and insulting anything and everything on Paarpaans, with not a semblance of humanity left for them. When it comes to jihadis they fall over each other in apologizing even before a minute chide at them.

தமிழ் ஓவியா said...

//கண்மூடித்தனமான பார்பன எதிர்ப்பு//

தனிப்பட்ட முறையில் எந்தப்பார்ப்பனரும் ,பெரியாருக்க்கோ பெரியாரின் தொண்டர்ர்களுக்கோ எதிரிகளல்லர். ஆனால் பார்ப்பனர்களின் செய்கைகளும், அவர்களின் நடத்தைகளும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எதிர்ப்பாகவே இருக்கிறது.

பெரியார்--ராஜாஜி
பெரியார்- ஆனந்தவிகடன் வாசன்
பெரியார்- கல்கி
பெரியார் - மாவூர் சர்மா

இப்படி பெரியார் பார்ப்பனர்களுடன் கொண்ட நட்புறவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அளவுக்கு பெரியார் பார்ப்பனர்களை தனிப்பட்ட முறையில் நட்பு ரீதியாக மதித்தார்.

இது தொடர்பாக பெரியாரின் கட்டுரை ஒன்றைத் தருகிரேன். படியுங்கள்.



தனது திருமனம் தொடர்பாக ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார். ஆனால் அவரின் ஆலோசனையை ஏற்க வில்லை என்பது வேறு விசயம்.

ஆனால் பார்ப்பனர்களை எடுத்துக் கொள்ளுங்கள் ராஜாஜியிலிருந்து, இன்றைக்குவரைக்கும் உள்ள சவுண்டிப் பார்ப்பான் வரை தமிழர்களின் நலனுக்கு கேடு விளைவித்து வருகிறார்கள்.
(விதிவிலக்கு உண்டு)

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை, சிதம்பரம் கோயில் பிரச்சினை இப்போது நம் கண்முன்னே உள்ள சில உதாரணங்கள்.

இதையெல்லாம் தாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

"9. மதம்


இந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை
உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம்
மக்கள் உணர வேண்டுகிறேன்.

தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர,
அதற்கு வேறு காரணமோ, ஆதாரமோ, இல்லை. தீண்டாமை என்பது ஒரு சாதியானை மற்றொரு சாதியான் (மனிதனுக்கு மனிதன்) தொடக் கூடாது என்பதற்குத்தான் நாம்
பயன்படுத்துகிறோமே ஒழிய மற்றெதற்கு பிரஸ்தாப தீண்டாமையைப் பயன்படுத்துகிறோம்? அதுவும் அப்படிப் பயன்படுத்துவதும் இந்துக்கள் என்னும் இந்து மதத்தாருக்குள் இருந்து வருகிறதே - நடந்துவருகிறதே ஒழிய, மற்ற யாருக்குள் இருந்துவருகிறது?

சிந்தித்தால் விளங்கும்

ஆகவே, தீண்டாமை இந்து மதத்தின் காரணமாக, இந்துக்கள்
என்பவர்களுக்கும் மாத்திரம் சாதி காரணமாக மேல்சாதி என்பவர்
களுக்கும், கீழ்சாதி என்பவர்களுக்கும் மாத்திரம் சாதி காரணமாக
இருந்து வரும் காரியமே தவிர, தீண்டாமை மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை மக்கள் நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

ஆகவே, சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய
வேண்டும் என்பதும், இந்து மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை
போக வேண்டுமென்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர,
சிறிதும் அறிவுடமையாகாது என்பது எனது கருத்து.

நமது வாழ்வில் சாதியும், மதமும் இன்று பார்ப்பானிடமும்,
கோயிலினிடமும், அதாவது “பிராமணர்களிடமும் கடவுளிடமு” ந்தான்
இருந்து வருவதை நல்ல வண்ணம் உணருகிறோம். அதாவது,
கடவுளால் தான் நாம் இந்துவாகிறோம். பார்ப்பானால்தான் நாம்
சூத்திரனாகிறோம்.

நாம் ஒரு இந்து என்றால், நமக்கு நாம் கண்ணால் பார்க்க
முடியாத காதால் கேட்க முடியாத வேதம், சாஸ்திரம்
ஆகியவைகளையும் - நம்மை இழிமகனாக்கும் தர்மங்களையும்,

பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாக சரஸ்வதி, லட்சுமி பார்வதிகளையும், மகான்களையும், அவதாரங்களாகிய கந்தன் - கணபதி, ராமன் - கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்தைகளையும் இவற்றைக் குறிக்கும் புராணங்கள், இதிகாசங்கள் நெற்றிக்குறிகள் முதலியவைகளையும் நம்பியாக வேண்டும்.


கயிறு திரிப்புக் கதைகள்

இவ்வளவுதானா! மற்றும் பாகவதம், விஷ்ணு புராணம், பக்த விஜயம், பெரிய புராணம், ஆழ்வார்கள் நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும். பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோவில் குள தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமுத்ரிகாலட்சணம், நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய் - பூதம், மந்திரம் - சாந்தி கழித்தல், சூரியன் கதை, கிரகணக் கதை முதலியவைகளையும் நம்ப வேண்டும்.


இவற்றில் எதை நம்பாவிட்டாலும் நாம் இந்துவாக மாட்டோம். இந்த நிலையில் உள்ள இந்துவும் சூத்திரனுமாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொன்னால், அதில் சாதியோ சாத்திர அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்து மதமல்ல; பார்ப்பன மதம்!

ஆகவே, மானமுள்ள அருமைத் தமிழ் மக்களே! நமக்கு உண்மையில் தீண்டாமையென்னும் சாதிக் கேடும் இழிவும் நீங்க வேண்டுமானால், “இந்து” மதத்தை விட்டு நீங்கியாக வேண்டும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை.

இந்து மதம், இந்து சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பன சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகுமேயல்லாமல் - தமிழ்நாட்டில் தமிழனுக்கு என்று சூத்திரன் - தீண்டப் படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது; மாற்றமடையவும் முடியாது.


எது வேண்டும்?

ஆகவே, தமிழன் தனக்கு, இந்த மதம் வேண்டுமா, சூத்திரப் பட்டமும் தீண்டாமையும் ஒழிய வேண்டுமா என்பதைப் பற்றி அறிவோடு, மானத்தோடு, நல்ல வண்ணம் சிந்தித்து, முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மானம் பெறுவதும், ஈனசாதித்தனம் ஒழிவது அவசியம்

எனப்பட்டால் -

முதலாவதாக, நெற்றிக் குறியினை ஒழித்துத் தள்ளுங்கள்.

இரண்டாவதாக, கோவிலுக்கும் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.


மூன்றாவதாக, இந்து மதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள்.


பார்ப்பானை பிராமணன் என்று சொல்லாதீர்கள்."

---------------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 21 - 23"

வால்பையன் said...

//. மறப்பினும் ஒத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்ற கெடும்.
திருக்குறள் : ஒழுக்கமுடைமை 4 வது குறள்//

தகவலுக்கு நன்றி,
இந்த குரளின் விளக்கம் சொல்லமுடியுமா?

//வேதத்தை எழுதியது யாரென்று யாருக்கும் தெரியாது. அதை தொகுத்து வழங்கியவர் வேத வியாசர். இவர் ஒரு படகோட்டி பெண்ணின் மகன்.//

இவர் மகாபாரத்தை எழுதிய வியாசரா?
நான் சொல்லவந்த ரிக்,யசூர்,சாம, அதர்வன வேதங்களை தான் நீங்களும் சொல்கிறீர்களா?

வால்பையன் said...

//மேல்சாதி அதிகார மையம் பற்றி பேசியிருந்தீர்கள். மேல்சாதியினரின் மனோபாவத்தை தீர்மானிப்பது பார்ப்பனீயம் என்ற சித்தாந்தம்தான். அதனை வகுத்தவர்கள் பார்ப்பனர்கள்//

அது உண்மையாகவே இருந்தாலும்,
பார்ப்பனன் கொண்டுவந்த இந்து மதம் வேண்டும், பார்ப்பனம் உருவாக்கிய சாதிகள் வேண்டும், ஆனால் பார்பனன் மடும் வேண்டும் என்பது என்ன நியாயம், பார்ப்பனன் கொடுத்ததை முதலில் தூக்கி எறியுங்கள்

வால்பையன் said...

தோழர் தமிழ் ஒவியா அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

இந்து மத மூடநம்பிக்கைகள் மட்டும் தெரிந்து கொள்வது எனக்கு சரியாக படவில்லை, மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமே கடவுள் தான் என்று நான் நினைக்கிறேன்.

மத சார்ப்பில்லாமால் நீங்கள் இஸ்லாம் மதத்தையும், கிருஸ்துவ மதத்தையும் சகோதர மதமாக ஏற்று கொண்ட நீங்கள் இந்து மத்தை மட்டும் மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக நினைக்க காரணம் என்ன?

பெரியாரை, அம்பேத்கார் புத்த மதத்தில் சேர சொன்னபோது பெரியார் மறுப்புக்கு என்ன காரணம் சொன்னார்.

நான் இந்து மதத்தில் இருப்பதால் தான் அதை விமர்சிக்க முடிகிறது, இல்லையெனில் விமர்சிக்க தகுதியற்றவனாகி விடுவேன் என்றார்.

நான் எனது மொத்த மத சாதி அடையாளங்களை தொலைத்து விட்டதால் எனக்கு அனைத்து மதங்களையும் விமர்சிக்க தகுதியுடயவனாக நினைக்கிறேன்.

என்றோ பார்பனன் செய்த தவறுக்கு அவனை குத்தி கொண்டிருப்பதை விட இன்றைய சமூகத்திற்கு என்ன தேவையோ அதை யோசிக்கவே என் மனம் செல்கிறது.

வால்பையன் said...

ரவி அண்ணே!
உத்தாபுரத்துக்கும், பார்ப்பனனுக்கும் என்ன சம்பந்தம் என்றால் சாதியை உருவாக்கியது பார்ப்பனன் என்கிறீர்கள்.

சரி சாதியை ஒழிப்போம் என்றால் என்னை குழந்தை என்கிறீர்கள்.

என்ன ஒரு முரண்பாடு.

//இன்னும் எத்தனை கிராமங்களில் ஊருக்கு வெளியே சேரி இருக்கு தெரியுமா ??//

அதற்காக பகுத்தறிவு தொண்டர்கள் என்ன செய்தார்கள் அண்ணா?
உங்களுக்கே தெரியுது, இம்புட்டு பிரச்சனை இருக்குன்னு, ஆனா அதையெல்லாம் விட்டுட்டு பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே செய்வது தான் சமூகதிற்கு நீங்கள் செய்யும் தொண்டா?

//இன்னும் எத்தனை தலித் குடும்பத்தினர் குடிசையில் பொருளாதாரத்தில் பின் தங்கி வாழ்கிறார்கள் தெரியுமா ??//

இதற்காக நீங்கள் வருத்தபட வேண்டியது குடிசை மாற்று வாரிய்ம் என்று கந்துடைப்பிற்காக ஒன்றை வைத்திருக்கும் அரசின் மீது, அப்படியே அரசு வீடு கொடுத்தும் அதை வாடகைக்கு விட்டு மீண்டும் குடிசையிலேயே இருக்கும் விழிப்புணர்வற்ற மக்களின் மீது

//தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு என்றதும் பார்ப்பணர்களுக்கு பற்றிக்கொண்டு வந்து அடியில் தீவைத்தது போல ஆடுவது ஏன் ?//

ஏனென்றால் இன்று பார்ப்பனனும் தாழ்த்தப்பட்டவன் ஆகிவிட்டதால்,
நீங்கள் சொல்வது எல்லா பார்ப்பனர்களும் ஒதுக்கீட்டை எதிப்பது போல் தெரியவில்லையே, பார்ப்பனர் அல்லாதோர் கூட இடஒதுக்கீட்டை கேள்விக்குள்ளாக்குகிறார்களே!

//உங்கள் கண்களில் அது தெரியவில்லை, அதனால் நீங்கள் இன்னும் ஆழமாக பாருங்கள், மேலோட்டமாக அடிச்சு விடாதீங்க...//


எனக்கு வேண்டியதெல்லாம் சம் தர்ம சமுதாயம் தான், பார்ப்பன இனம் அழிந்து திராவிட இனம் தளைக்க வேண்டும் என்பது என் ஆசையல்ல!

வால்பையன் said...

//முதலில் இந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, முஸ்லிம் இட ஒதுக்கீடு, இந்த மாதிரி ஓட்டுப் பொறுக்கும் வேலைகளை ஒழித்து விட்டு சாதி விட்டு திருமணம் செய்யும் மக்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள். சாதி ஒழியும், I salute you!!//


வழிமொழிகிறேன்

வால்பையன் said...

ரெண்டு திருடனுங்க இருக்கானுங்க...

திருடன் நெ 1 > பாப்பான்
திருடன் நெ 2 > பாப்பானை பார்த்து திருட அல்லது தீட்டு கற்றுக்கொண்ட உயர்சாதிக்காரன்.

திருடன் நெம்பர் ரெண்டு திருடன் நெம்பர் ஒன்னை சொல்லி குதிரையோ கழுதையோ ஏறிட்டான்.

அதுக்காக முதல் திருடனை திருடனே இல்லை என்பது என்ன நியாயம் ??//


இஸ்லாமியர்களும். கிருஸ்தவர்களும் செய்த மத பரப்புதலே ஆரியனும் செய்தது, கூடவே தோழில் ரீதியாக சாதி அடிப்படையிலும் பிரிக்கப்பட்டான்.

சாதியை ஒழியுங்கள் அதை விட்டு திருடினான் என்பது எப்படி தெரியுமா இருக்கு!

இன்றைய அரசியல்வாதிகள் எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு!

வால்பையன் said...

பிறப்பால் பார்பான சாதியில் பிறந்தவர்களை எல்லாம் திருட்டு பார்பான் என நொங்கு எடுக்கும் செந்தழல் ரவி தனது குழந்தையை எவ்வாறு கொஞ்சுவாரோ அங்கும் பார்பன ரத்தம் பாதி கலந்தே இருக்கிறதே//

தனி மனித தாக்குதல் வேண்டாம்.

வால்பையன் said...

//பார்ப்பனர்கள் மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் தங்களை அறிவாளிகளாக்கி கொண்டவர்கள். இதற்கு என்ன காம்பன்சேசன் செய்து மனித சமூகத்தை ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய வைக்க முடியும் என பார்ப்பனர்களை அய்யோ பாவம் என எண்ணுபவர்கள் விளக்கலாம்.//

நீங்களே சொல்லிவிட்டீர்கள் நண்பரே!
கல்வி ஒன்றே ஏற்றதாழ்வுகளை அகற்றி விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும்,

ஆனால் கல்வி வியாபாரம் ஆகி தமிழ்நாட்டில், ஏழை, பணக்காரன் என்று இரண்டு புதிய சாதிகளை உருவாக்கி விட்டது.

கல்வி முழுக்க முழுக்க இலவ்சமாக வழங்கப்பட வேண்டும்.

//இது அன்றைக்கு நடந்தது இன்றைக்கு பார்ப்பனர்கள் சாதி பார்ப்பதில்லை என்பவர்கள் பார்ப்பனர்களை மற்ற தாழ்த்தப்பட்ட பிற்பட்ட சாதி ஆண்களுக்கு தங்களது வீட்டு பெண்களை மனமுவந்து திருமணம் செய்து வைக்கலாமே... அப்படி செய்வதும் அதனை மற்ற மேல்சாதிக்கு கற்றுத் தருவதும் அவர்களது கடமை.//

நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அது பற்றிய சர்ச்சையும் இதே பதிவின் பின்னூட்டத்தில் நடந்தது அறிந்ததே!
சாதியை ஒழிக்க கலப்பு மணங்களை ஆதரிப்போம்.

//எங்களது பன்னாட்டு கம்பெனியில் ஒரு லைன் கூட கோடு எழுதத் தெரியாத பார்ப்பான் ஒருவன் சாப்ட்வேர் மேனேஜராக திடீரென பதவி உயர்வு பெற்றான். சரியாக மெயில் கம்யூனிகேசன் பண்ணும ஆங்கில அறிவும் கிடையாது அவனுக்கு. என்ன தகுதி எனத் தெரிய வேண்டுமா....அவனுக்கு மேலே பார்ப்பனர்கள் மெஜாரிட்டி...அல்லது பார்ப்பனர்கள்தான் அறிவாளிகள் என ஏற்றுக்கொள்ளும் சூத்திரர்கள்தான் மீதமானவர்கள்.... இந்த கம்பெனியை நடத்துபவர் பிரபல ஆங்கில நாளிதழை நடத்தும் ஒரு தன்னை கம்யூனிஸ்டு என அழைத்துக் கொள்ளும் பார்ப்பனரின் துணைவி.....//

இவ்வாறு செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்,ஆனால் பாருங்கள் பார்ப்பனர்களிடம் குற்றம் கண்டுபிடிக்கும் நமது பகுத்தறிவு இன்றைக்கு நமது திராவிட கட்சியில் மீண்டும் மீண்டும் தமது குடும்பத்துக்கே பதவியை கொடுப்பது பற்றி வாயை திறப்பதே இல்லையே!
இவ்வளவு தான் நமது பகுத்தறிவா?

பார்பனர்களை ஆதரிப்பது எனது நோக்கம்மல்ல! அதை மட்டுமே செய்து கொண்டு சமுதாயதற்கு செய்ய வேண்டியதை மறக்காதீர்கள் என்று தான் சொல்கிறேன்

வால்பையன் said...

ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம், எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்த முயற்சிப்போம்,
நாம் இந்த நேரத்தில்
----------------------------------
இன்னிக்கி இங்க எவ்ளோ டவுசர் கிழிய போகுதோ??//


சரியாக சொன்னீர்கள் நண்பரே!

nerkuppai thumbi said...

விவாதம் எங்கெங்கோ சென்றுவந்திருக்கிறது. பலப்பல நல்ல கருத்துகளும் வந்திருக்கின்றன.

ஒன்று மட்டும் என்னை அடிக்கடி யோசனையில் ஆழ்த்துகிறது. இப்போது நடக்கும் சாதி சண்டைகளில் நடக்கும் வெட்டு, குத்துகளில் பார்ப்பனர்களின் பங்கு இருப்பதாக தெரியவில்லை. பகுத்தறிவு புலிகள் இதைப் பற்றி ஒன்றும் செய்வதில்லையே ஏன்?

அவர்கள் (பார்ப்பன..XXXXXX) நாலு வர்ணம் எனத்துவங்கியது இப்போது சில நூறு ஜாதிகள் என வரிசை நீண்டு இருக்கிறது. இவற்றைக் குறைக்க எவரேனும் என்னவேனும் செய்ய முடியுமா ? அவ்வாறு முயற்சிகள் ஏதாவது நடைபெறுகின்றனவா?
`````````````````````````````````

Anonymous said...

////. மறப்பினும் ஒத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்ற கெடும்.
திருக்குறள் : ஒழுக்கமுடைமை 4 வது குறள்//

தகவலுக்கு நன்றி,
இந்த குரளின் விளக்கம் சொல்லமுடியுமா?
//
இங்கு மறப்பினும் என்பதை கற்றவை மறப்பினும் என்று பொருள் கொள்ள வேண்டும். Meaning of rest is obvious.

//
இவர் மகாபாரத்தை எழுதிய வியாசரா?
நான் சொல்லவந்த ரிக்,யசூர்,சாம, அதர்வன வேதங்களை தான் நீங்களும் சொல்கிறீர்களா?
//
ஆம் மஹாபாரதம் எழுதிய வியாசர்தான் நான்கு வேதங்களையும் தொகுத்தளித்தவர்.
Vyasa appears for the first time as the author of, and an important character in the Mahābhārata. He was the son of Satyavati, daughter of a ferryman or fisherman.
Hindus traditionally hold that Vyasa categorised the primordial single Veda into four. Hence he was called Veda Vyasa.
Source: Wikipedia

அண்ணன் வணங்காமுடி said...

சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

அண்ணன் வணங்காமுடி said...

சாதி இரண்டொழிய வேறில்லை

Anonymous said...

\தீவிரவாதிகளில் பெரும்பாலேனர் இஸ்லாமியராக இருக்கலாம்.
ஆனால்
பெரும்பாலான இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் அல்ல\

அது எப்படி இப்படி சொல்லலாம்? ஒரு சின்ன உதாரணம் சொல்லவா? இவங்க சொல்றது போல பாகிஸ்தான் லே இருந்து வர்ற தீவிரவாதி ஒரு குண்டு வெச்சன்னா அதில் நூறு, இருநூறு பேர் இறக்குறாங்க. அதையே சங்க் பரிவார தூண்டி விட்டா ஆயிரக்கணக்குல மக்கள் சாவுரங்க, பெண்கள் கற்பழிக்கபடுறாங்க, வீடுகள் சூரயாட்படுது. இப்போ சொல்லுங்க, எந்த ஆதரத வெச்சுக்கிட்டு தீவிரவாதிகளில் பெரும்பாலேனர் இஸ்லாமியராக இருக்கலாம்.
ஆனால்
பெரும்பாலான இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் அல்ல நு சொல்றிங்க? எங்க இருந்தாலும், எந்த மதத்தின், மொழியின், நாட்டின் போர்வையில் இருந்தாலும், தீவிரவாதி, தீவிரவாதி தான். இவங்க தான் ஜாஸ்தி, அவங்க தான் குறைவுன்னு சொல்ல முடியாது.

ஏற்கெனெவே ஒருத்தர் சொன்னது போல பகுத்தரிவுங்க்றது எதையுமே கூர்ந்து, ஆராய்ஞ்சு பாக்குறது, ஒரு மீடியா லே தவற பரப்படற விஷயத்த கூட யோசிக்காம போடுறது எந்த விதத்துல பகுத்தறிவு?

முதல்ல உங்க மூட நம்பிக்கைலே இருந்து வெளிய வாங்க, பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம்.

Unknown said...

//தீவிரவாதிகள் அல்ல நு சொல்றிங்க? எங்க இருந்தாலும், எந்த மதத்தின், மொழியின், நாட்டின் போர்வையில் இருந்தாலும், தீவிரவாதி, தீவிரவாதி தான். இவங்க தான் ஜாஸ்தி, அவங்க தான் குறைவுன்னு சொல்ல முடியாது.//
முற்றிலும் சிரியான வாதம்... எல்லா மதமும் மனிதநேயம்தான் பேசுது... மதத்த நம்பி பொழப்ப நடத்துரவங்கதான் அந்த மதத்தோட உன்மைகல மறச்சி, மறந்து மக்கள பிரிச்சு, தீவிரவாதத்த வளக்கராங்க!!!

வால்பையன் said...

தீவிரவாதம் என்பதை நான் அடிப்படை தொட்டு சொல்கிறேன். அதன் படி பெரும்பான்மையான தீவிரவாதிகள் இஸ்லாமியர்களாக எனக்கு தெரிந்தனர், மற்றபடி இஸ்லாமியர்களை குத்தி காட்டும் ஆசையெல்லாம் இல்லை எனக்கு.

சரி அது என்ன அடிப்படை வாதம்?

விடுதலைபுலிகளை திவிரவாதிகள் என்கிறார்கள், ஏன் தெரியுமா? சொந்த நாட்டில் சண்டை போட்டவரை அவர்களை அப்படி யாரும் சோல்லவில்லை, எப்பாது இந்தியா வந்து ஒரு படுகொலையை நிகழ்த்தினார்களோ அப்போது அவர்கள் தீவிரவாதிகள், சரியா. இப்போது அவர்கள் வெளியே வருவதில்லை.

நேபாளத்தில் மாசோயிஸ்டுகள்
ஆந்திராவில் நக்ஸ்லைட்டுகள்
இன்னும் நிறைய நாடுகளில் போராளிகள் இருக்குகிறார்கள்,
பாலஸ்தீன ஹமாஸ் உட்பட, ஆனால் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல.

எவனொருவன் தன் நாட்டை விட்டு மற்ற நாடுகளை தாக்குகிறானோ அவனே தீவிரவாதி.

உள்நாட்டில் குழுப்பம் விளைவிப்பவன், படுகொலைகள் செய்பவன் சமூகவிரோதி,

எதவாது புரிகிறதா அனானி நண்பரே?

எனக்கு இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய! அவர்களும் என்னை சகோதரனாகத்தான் நினைக்கிறார்கள்

Unknown said...

//சரி அது என்ன அடிப்படை வாதம்?

விடுதலைபுலிகளை திவிரவாதிகள் என்கிறார்கள், ஏன் தெரியுமா? சொந்த நாட்டில் சண்டை போட்டவரை அவர்களை அப்படி யாரும் சோல்லவில்லை, எப்பாது இந்தியா வந்து ஒரு படுகொலையை நிகழ்த்தினார்களோ அப்போது அவர்கள் தீவிரவாதிகள், சரியா.//

நிச்சயமா இல்லீங்க. வேர ஏதாவது உதாரணம் இருந்தா சொல்லுங்க. வேற நாட்டுக்கு வந்து படுகொலை நடத்தினா தீவிரவாதி அப்படின்னா, உலகத்துல முதல் தீவிரவாத இயக்கம், அமேரிக்க அரசாங்க சி.ஐ.ஏ தான். விடுதலைப்புலிகள் பொருத்தவரை, இந்தியா தீவிரவாதிகள்ன்னு சொன்னதுக்கு காரணம் அவங்கவங்க செஞ்ச தப்ப மரக்கதான். இராசீவ்காந்தி படுகொலை அப்படீங்கரது ஒரு பெரிய கேடயம், வலை, ஆயுதம் இப்படி எப்படி வேனும்னாலும் பயன் படுத்திக்கலாம். சரி, இங்கு செய்தி என்னன்னா, உலகத்துல >30 நாடுகள்ள புலிகலை தீவிரவாத அமைப்பா பட்டியலிட்டிருக்காங்க. அதுக்கு காரணம், அவர்களோட கரும்புலிப்படை மட்டும்தான். தற்கொலைப்படை என்பதுதான் உலகநாடுகள் புலிகலை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்ததுக்கு அடிப்படை காரணம். அதைத்தாண்டி, இன்னிக்கு நெலமைக்கு அரசாங்கம் தவிர ஆயுதம் ஏந்தினவங்க எல்லாருமே தீவிரவாதிகள் அப்படிங்கரதுதான் உலகத்தோட நிலைப்பாடு. ஒத்துக்குவீங்கன்னு நினைக்கரேன்.

வால்பையன் said...

நாம பார்த்து எப்படி வேண்டுமானலும் வகைப்படுத்தி கொள்ளலாம்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஒரு கூலிப்படை அல்லது கொலைக்காரபடை.

யாரை அமெரிக்கா கொல்ல நினைக்கிறதோ அவர்களை மட்டும் கொல்லுவார்கள்.

தீவிரவாதம் என்ற சொல்லிலேயே உண்மை மறைந்திருக்கிறது.

கண்மூடித்தனமாக எதையும் யோசிக்காமல் ஒன்றை திவிரமாக பற்றி கொண்டு அதன் பெயரில் வன்முறை நடத்துபவர்கள் யாராகினும் அவர்கள் தீவிரவாதிகளே!

Unknown said...

//கண்மூடித்தனமாக எதையும் யோசிக்காமல் ஒன்றை திவிரமாக பற்றி கொண்டு அதன் பெயரில் வன்முறை நடத்துபவர்கள் யாராகினும் அவர்கள் தீவிரவாதிகளே!//

அதாங்க மேட்டரு... :-) வழிமொழிகிறேன்!!!

Anonymous said...

\\எவனொருவன் தன் நாட்டை விட்டு மற்ற நாடுகளை தாக்குகிறானோ அவனே தீவிரவாதி\\

வேற நாட்டுக்கு வந்து தாக்குதல் நடத்தினா தான் தீவிரவாதியா? எந்த dictionary ல கண்டுபுடிச்சிங்க சார்? அதெப்படி குண்டு வெச்சவனெல்லாம் தீவிரவாதி, கற்பழிச்சவன், உயிரோட கொளுத்தினவன், வீட்டை எரிச்சவன் எல்லாம் வெறும் 'சமூக விரோதி'. நீங்க நினைக்கிற இந்த விஷயம் ஒரு சாதரண தாடி வெச்ச முஸ்லிம் சகோதரரையும், முக்காடு போட்ட சகோதரியையும் ஒவ்வொரு இடத்துலயும் சந்தேக கண்ணோட பாக்குரதுக்கான தூண்டுகோல். நீங்க சொல்ற சமூக விரோதிகள் நாளைக்கு கௌரவமான வேலை பொய் பாக்கலாம், எத்தன பெண்களை சீரழிட்ட பிற்ப்பாடும். ஆனா எவனோ ஒருத்தன் எங்க அடையாளத்த வெச்சுகிட்டு செய்தான் என்கிறதுக்காக நாங்க மட்டும் 'தீவிரவாதி' னு அடையாளமிடப்பட்டு வாடைகைக்கு வீடு கிடைக்காமலும், சோறு போடுற வேலை கிடைக்காமலும் இருக்கோம்.

\\பெரும்பான்மையான தீவிரவாதிகள் இஸ்லாமியர்களாக எனக்கு "தெரிந்தனர்"\\

ஆகா, உங்களுக்கு என்ன 'தெரிந்ததோ' அதை எழுதுறிங்க. எங்க இருந்து தெரிந்தது இந்த விஷயம்? டிவி லே பார்த்தா ? இல்ல பேப்பர் படிச்சா? இதைத்தான் நான் சொல்றேன், கொஞ்சம் எதுவாக இருந்தாலும் ஆராய்ஞ்சு பாருங்க. அதுக்கு பெயர் தான் பகுத்தறிவு, or rationalism.

நீங்க சொன்ன இந்த statement ஒன்னும் ஆச்சர்ய படக்கூடிய விஷயம் இல்ல. சோ மாதிரி பல ஆளுங்க இதை தான் பரப்பிக்கிட்டு இருக்காங்க. ஆனா பகுத்தறிவுங்கற பேருல நிங்களும் மீடியாக்கள் பரப்புற மூட நம்பிக்கைல தான் ஊறிப்போய் இருக்கீங்க. ஓகே ஆ?

Anonymous said...

//கண்மூடித்தனமாக எதையும் யோசிக்காமல் ஒன்றை திவிரமாக பற்றி கொண்டு அதன் பெயரில் வன்முறை நடத்துபவர்கள் யாராகினும் அவர்கள் தீவிரவாதிகளே!//

இதைத்தான் நாங்க முன்னாடி இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கோம், சகோதரரே!

வால்பையன் said...

இந்தியாவில் இருக்கும் எந்த முஸ்லீம்களும் தனி காஷ்மீருக்கு ஆதரவாக செயல்படவில்லை. அவர்கள் இந்தியன் என்ற உணர்வோடு தான் வாழ்கிறார்கள். என்னால் இஸ்லாமிய சகோதரனையும் இஸ்லாமிய தீவிரவாதியையும் பிரித்து உண்ர முடிகிறது.

இஸ்லாமிய தீவிரவாதி என்று ஒருவனை சொன்னால் எல்லா இஸ்லாமிய நண்பர்களையும் சொல்கிறேன் என்று அர்த்தமில்லையே.

வன்முறை என்பது துளியும் ஏற்று கொள்ளமுடியாத ஒன்று, அதை யார் செய்தாலும் தவறு தான். மதம் என்பது தேவையில்லாத ஒன்று(என்னை பொறுத்தவரை)

Anonymous said...

சகோதர, திரும்பவும் சொல்றேன், 'இஸ்லாமிய தீவிரவாதி', 'ஹிந்து தீவிரவாதி', 'தமிழ் தீவிரவாதி', இப்படி அடைமொழியோடு விளிக்கப்படுவதும் தவறு. தீவிரவாதி, எங்க இருந்தாலும், எந்த மடத்தின் போர்வையில் இருந்தாலும் அவன் தீவிரவாதி என்று தான் அழைக்கப்பட வேண்டும்.

நீங்க சொல்வது 'not all Muslims are terrorists, but most terrorists are Muslims'. சரியா? இது தான் மீடியாக்கள் கட்டவிழ்த்து விடும் அப்பட்ட்டமான பொய். உங்களுக்கு அப்படி தெரிகிற வண்ணம் மீடியாக்கள் அதை பரப்புகின்றனர் சகோதரர்! மீடியாக்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்புவதை விட்டு, உண்மை என்ன என்று அலசுவதே rationalism. ok a?

Anonymous said...

\\இந்தியாவில் இருக்கும் எந்த முஸ்லீம்களும் தனி காஷ்மீருக்கு ஆதரவாக செயல்படவில்லை\\

regarding Kashmir and the UN Resolution regarding Kashmir in 1948:

The Government of India and the Government of Pakistan reaffirm their wish that the future status of the State of Jammu and Kashmir shall be determined in accordance with the will of the people and to that end, upon acceptance of the truce agreement, both Governments agree to enter into consultations with the Commission to determine fair and equitable conditions whereby such free expression will be assured

http://www.jammu-kashmir.com/documents/jkunresolution.html

இதை தமிழ்ப்படுத்த சிரமமாக இருக்கிறது. மன்னிக்கவும்.

ஆக, இதன் படி காஷ்மீரில் உள்ள மக்கள் தளங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கூறினால் அவர்கள் தீவிரவாதிகள். அப்படித்தானே?

அண்ணா, கொஞ்சம் உண்மைகளை அலசிப்பாருங்கள். வெறும் இறை மறுப்பு கொள்கை மட்டுமே பகுத்தறிவு ஆகாது.

வால்பையன் said...

நீங்கள் சொல்வது சரிதான்.
இஸ்லாமிய நண்பர்களே தீவிரவாதிகள் இஸ்லாமியர்களே அல்ல என்று தான் சொல்கிறார்கள்.

திருத்தி கொள்கிறேன் நண்பரே!

Anonymous said...

நண்பா முதல்ல உங்கள நீங்களே பகுத்தறிவு வாதின்னு சொல்லிகிரத நிறுத்துங்க ஏன்னா கடவுள் மறுப்பே பகுத்தறிவு வாதம் இல்ல முட்டாள் தனம் நான் சொல்லுறேன் எல்லா மதமும்(வேதங்களின் அடிப்படையில் ) ஒரே ஒரு இறைவனை தான் வணங்க சொல்கிறது உன்னை சுத்தி உள்ள எல்லாத்தையும் மரம், செடி, ஏன் உன் உடல் எல்லாத்தையும் இயக்குகிற ஒரு சூப்பர் பவர் ஐ உணர வில்லை என்றால் உங்களுக்கு பகுத்தறிவே இல்லகிறது என் வாதம்.


பாற்பநியத்த எதிர்ப்புக்கு காரணம் பார்பனர்கள் தான் ஏன்ன அவர்கள் தான் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக இந்து மதம் என்கிற இல்ல மதத்தை உருவாக்கி தங்களை பெரும்பான்மை காமிச்சுக்கிட்டு தலித்களுக்கு முஸ்லிம்களை எதிரியாக்கி பிரிவினையே உண்டாக்கி தங்கள் தலைமைத்துவத்தை தக்க வைத்து கொள்வதற்காக கலவரங்களை உண்டாக்கி கொடிருக்கிரர்கள்

Anonymous said...

இஸ்லாம் கத்தி முனையில் பரப்பட்டிருந்தால் இந்தியா முழுவதும் முஸ்லிம்களால் அல்லவே நிறைந்திருக்க வேண்டும்... இஸ்லாம் திணிக்கப்பட்ட மார்க்கமல்ல... ஆயிரம் ஓட்டைகளும் சாதி அடிமைதுவத்தையும் கொண்டிருந்த ஒரு சமூகத்தில் நேரிய மார்க்கமாக வந்து படர்ந்ததுதான் இஸ்லாம்.. ஆளைக்கூட்டி கடவுள் முன் மாநாடு நடத்துவதல்ல இஸ்லாத்தின் நோக்கம்..ஒவ்வொரு தனிமனிதனும் அதன் மூலம் சமூதாயமும் செழிக்க வேண்டும் ஒழுக்கத்தில்..
ஒரு பொயை ஆயிரம் தடவை திரும்பசொல்லி உண்மையாக்க நினைப்பது ..ஒரு நேரிய வாழ்க்கை நெறியை பலர் அறியாமல் தடுக்கும் செயலாகும்...

வால்பையன் said...

//இஸ்லாம் கத்தி முனையில் பரப்பட்டிருந்தால் இந்தியா முழுவதும் முஸ்லிம்களால் அல்லவே நிறைந்திருக்க வேண்டும்..//

அண்ணே வரலாறு அப்படி தான் இருக்கு! மாற மறுப்பவர்கள் கொல்லப்படுள்ளார்கள்!

//இஸ்லாம் திணிக்கப்பட்ட மார்க்கமல்ல... //

எந்த மதமும் தானாக உருவாகவில்லை! உருவாக்கப்படது தான்! அப்படியானால் அது திணிக்கப்பட்டு தானே இருக்கும்!

//ஆயிரம் ஓட்டைகளும் சாதி அடிமைதுவத்தையும் கொண்டிருந்த ஒரு சமூகத்தில் நேரிய மார்க்கமாக வந்து படர்ந்ததுதான் இஸ்லாம்.//

இஸ்லாத்திலும் எல்லா ஓட்டைகளும் இருக்கு அண்ணே! ஷியா, சன்னி எதுக்கு அடிச்சிகனும் வெட்டிகனும்.
மத்தவங்களை சரின்னு சொல்லல, ஆனா உங்களது மட்டும் தான் சரின்னு சொல்லாதிங்க!

//ஆளைக்கூட்டி கடவுள் முன் மாநாடு நடத்துவதல்ல இஸ்லாத்தின் நோக்கம்.//

அண்ணே நான் சொல்ல வந்த மேட்டரே வேற! ஆனா நீங்க திசை திருப்பி விடிறிங்க பாருங்க அது கூட ஒருவகையான கன்வின்ஸ் தான்!

//ஒவ்வொரு தனிமனிதனும் அதன் மூலம் சமூதாயமும் செழிக்க வேண்டும் ஒழுக்கத்தில்..//

மதம் இல்லாமலும் சமூகம் நல்லாதான் இருக்கும்! மேலும் எல்லா மதமும் தப்பு செய்ய சொல்லல அவுங்களும் ஒழுக்கத்தை கடைபிடிக்க சொல்றாங்க! தனிமனித ஒழுக்கம் முக்கியம் என்பது என்னை போன்ற நாத்திகனுக்கும் தெரியும்.

//ஒரு பொயை ஆயிரம் தடவை திரும்பசொல்லி உண்மையாக்க நினைப்பது .//

எது பொய் எது உண்மைன்னு நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி?
நானும் வாழ்றேன், நீங்களும் வாழ்றிங்க! இதில் எது பொய் எது உண்மை?

//ஒரு நேரிய வாழ்க்கை நெறியை பலர் அறியாமல் தடுக்கும் செயலாகும்...//

அவனவன் வாழ்க்கையை அவனவன் வாழ்ந்துட்டு போறான்! உங்களுக்கு என்ன வந்துச்சு! உங்க வாழ்க்கையை ஒழுங்கா வாழ்ந்தாலே அடுத்தவனுக்கு உங்க மேல மதிப்பு வரும்! அதுவும் பார்த்து தான்! நான் ஒழுக்கமானவன் நீங்களே கூவிகிட்டா அதுக்கு பேரு வேற!

வால்பையன் said...

//நண்பா முதல்ல உங்கள நீங்களே பகுத்தறிவு வாதின்னு சொல்லிகிரத நிறுத்துங்க ஏன்னா கடவுள் மறுப்பே பகுத்தறிவு வாதம் இல்ல முட்டாள் தனம் நான் சொல்லுறேன்//

எல்லாரும் புத்திசாலிய இருந்துட்டா எப்படி! நான் ஒருத்தனாவது முட்டாளா இருந்துட்டு போறேன்!

//ஒரே ஒரு இறைவனை தான் வணங்க சொல்கிறது உன்னை சுத்தி உள்ள எல்லாத்தையும் மரம், செடி, ஏன் உன் உடல் எல்லாத்தையும் இயக்குகிற ஒரு சூப்பர் பவர் ஐ உணர வில்லை என்றால் உங்களுக்கு பகுத்தறிவே இல்லகிறது என் வாதம்.//

என்னை சுற்றியுள்ள மரம், செடி அந்த சூப்பர் பவரை வணங்குவதில்லை! அது போல் நானும் கடவுளை வணங்குவதில்லை!

//பாற்பநியத்த எதிர்ப்புக்கு காரணம் பார்பனர்கள் தான் ஏன்ன அவர்கள் தான் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக இந்து மதம் என்கிற இல்ல மதத்தை உருவாக்கி தங்களை பெரும்பான்மை காமிச்சுக்கிட்டு தலித்களுக்கு முஸ்லிம்களை எதிரியாக்கி பிரிவினையே உண்டாக்கி தங்கள் தலைமைத்துவத்தை தக்க வைத்து கொள்வதற்காக கலவரங்களை உண்டாக்கி கொடிருக்கிரர்கள்//

இந்துத்துவா பார்ப்பனியம் உர்ய்வாக்கியது தான், ஆனால் அது இப்போ பார்ப்பான் தாண்டி பரவி விட்டது. இந்த்துவா ஆட்கள் இஸ்லாமியர்களை மட்டும் எதிர்க்கவில்லை. கிருஸ்துவர்களையும் தான் எதிர்க்கிறார்கள். மதம் என்பதே தேவையில்லாத ஒன்று, அதை ஒழிக்க முதலில் கடவுளை ஒழிக்கவேண்டும்.

வஜ்ரா said...

I can see that you have ruffled lot of feathers.

பெரியாரின் பெயரைச் சொல்லி இன்று இந்து மதத்தினை திட்டி இந்துக்களை மதம் மாற்றும் பாதிரியார்கள் பலர் வலைப்பதிவு வைத்து எழுதிவருகிறார்கள். மௌல்விக்கள் பலர் பொது மேடையில் பிரச்சாரம் செய்து இந்துக்களை முஸ்லீம்களாக மாற்றுகிறார்கள்.

இன்றைய நவநாகரீகப் பகுத்தறிவுப் (பன்னாடை)களுக்கு இவர்களெல்லாம் பகுத்தற்வு பெற்றவர்களாம். அவர்களையெல்லாம் மதிப்பது பகுத்தறிவு என்று கூடச் சொல்கிறார்கள்.

அத்தகய பகுத்தறிவு எனக்கு வேண்டாம்.

நான் காலம் முழுதும் அத்தகய பகுத்தறிவைப் பெறாமலேயே வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.

ஒரு படி மேலே கூடப் போய் பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தினைத் திட்டுபவனின் குறியை வெட்டிக் கூறு போட்டுக் கூட என் இந்து மதத்தை பரப்புவேன் என்று சொல்கிறேன்.

பகுத்தறிவு வாதிகளால் ஒரு மயி%&யும் புடுங்கமுடியாது.

அது சரி,

இஸ்லாமிய நண்பர்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு உங்களுக்கே நீங்கள் எழுதுவது தவறு என்று தோன்றுகிறது போலும்.

இது தான் பகுத்தறிவினால் நீங்கள் பெற்ற திம்மித்தனம்.

இத்தகய மனப்பான்மை இருக்கும் வரையில் நீங்களே உண்மையான பகுத்தறிவு பெற இயலாது என்பது உறுதி.

இந்து மத மூட நம்பிக்கைகள்: இந்து நண்பர்கள் மன்னிக்கவும் என்று இது வரை எந்தப் பகுத்தறிவு வாதியாவது பதிவு எழுதியிருக்கிறானா ?

வால்பையன் said...

இஸ்லாமிய நண்பர்களிடன் மன்னிப்பு கேட்ட காரணம் இஸ்லாமியர்களும் வந்தேறிகள் என்று குறிப்பிட வேண்டியிருந்ததால்.

மற்றபடி அவர்களது மத நம்பிக்கையில் மெயில் அனுப்பிய அதிரை பாருக்கை மெயிலில் கிழித்து கொண்டு தான் இருக்கிறேன்.

எனக்கு பகுத்தறிவு பட்டமே வேண்டாம்.

கடவுள் பெயரால் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி! அதே நேரம் தாங்கள் நினைப்பது தான் உண்மையென்று எழுதினால் நான் கேள்வி கேட்க தான் செய்வேன்

பித்தனின் வாக்கு said...

பார்ப்பான் எதிப்பு அதிகமா இருக்க காரணம் பார்ப்பான் திருப்பி அடிக்க மாட்டன் எதித்து போசமாட்டன் என்பதால் தான். எவர்கள் குரலுக்கு பதில் சொல்லல் ஒதுங்கியும் இருப்பதால் தான் இவர்கள் ௫௦ வருடமா பார்ப்பான் எதிர்ப்பு கோசம் போடுகின்றனர். என் சிறு வயது சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு முறை தி க கூட்டம் ஒன்றில் மத எதிர்ப்பு கோசம் போடுவதா செய்தி பரப்பினார்கள். எல்லா மதத்தையும் கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டினார்கள். கூட்டம் நடக்கும் நாளில் பல இஸ்ஸ்லம் கிறீஸ்தவ நண்பர்கள் சைக்கிள் செயின் மற்றும் சோடா பாட்டில் உடன் அமர்ந்து இருந்தனர். எதாவது எதிர்மறையாக போசினால் அடிப்பது என்று முடிவும் செய்து வைத்து இருந்தார்கள். விஷயம் போலீஸ் கு தெரிய அவர்கள் தி க தொண்டர்களிடம் தெரிவித்தார்கள். பின் கூட்டம் எப்ப்டி நடந்தது தெரியுமா வழக்கம் போல் இந்து மதத்தையும், பார்பனர்களையும் வீரமாக போசி விட்டு சென்றனர். இந்த கூத்த பார்த்த நான் பின் தி க பத்திரிகை மற்றும் வெமர்சனகளை படிப்பதை விட்டுவிட்டன். இவர்கள் அடிக்கும் கூத்து பார்த்தல் டைம் மற்றும் மூளை வேஸ்ட். உருப்படியாக நல்ல விசயங்களை எழுதுங்க வால் பையன். இவர்கள் விவாதம் உருபடாதது

வால்பையன் said...

பெரியார் தொண்டர்கள் மேல் எனக்கு பெரிய மரியாதை எப்போதுமே இருந்ததில்லை நண்பரே!

அவர்களுக்கும் கடவுள் பக்தர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை!

பித்தனின் வாக்கு said...

அன்புள்ள வால் பையன் அவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல விசயங்களை அலசுகிறது, ஆனால் எனக்கு இது டைம் வேஸ்ட் ஆக தோன்றுகிறது. ஒரு வட்டத்தின் தொடக்க புள்ளி மற்றும் முடிவு புள்ளி எப்டி கண்பது சிரமான விசயமோ அது போல் கடவுள் அறிவது. உள் உணர்தல் என்னும் அர்புததில் அதை உணர முடியும். நமக்கு அந்த நம்பிக்கை பயன் தரும் என்று நினைத்தால் நம்புங்கள், வேண்டம் என்றால் நம்பாதிர்கள். ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை குறை சொல்ல்வது தவறு. மத்தவர் தனிப் பட்ட எண்ணங்களை அலசுவது தவறு.
ஆனால் இந்த விமர்சனகள் தேவை தான். எதிர்க்க எதிர்க்க தான் இந்து மதம் வளர்கின்றது. தி க எதிர்க்க ஆரம்பித்த போது தமிழ் நாட்லே கோவில் குறைவு. தெருவு ஓர கோயிலும் குறைவு. ஆனால் அவர்களின் கடந்த நாற்பது அண்டு கால பிரசாரத்தால் இப்பொது இந்து மதம் நல்ல வளர்ச்சி பொற்று உள்ளது. மற்றவர் எதிர் கருத்துகளை கூறும் பொழுது ஒ இப்டி எல்லாம் உள்ளத என மக்கள் மிக அர்வமா ஈடுபாடு கொள்ள தொடங்கிறார்கள்

எம்.எம்.அப்துல்லா said...

//இஸ்லாமிய நண்பர்களிடன் மன்னிப்பு கேட்ட காரணம் இஸ்லாமியர்களும் வந்தேறிகள் என்று குறிப்பிட வேண்டியிருந்ததால்.

//

அரேபியாவில் இருந்து இஸ்லாம் மதம்தான் வந்தது.இங்குள்ள இஸ்லாமியர் அல்ல. இவர்கள் குப்பனாக,சுப்பனாக,முனுசாமியாக இருந்து மதம் மாறியவர்கள்.யாரும் அரேபியாவில் இருந்து வந்து இங்கு பிழைக்கவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

சோழன் said...

வாலு நீங்க சொல்லுறது
மிகச்சரி ,ஆனால் பெரியாரியம் ஒருநல்ல தத்துவமும்
அவர்கொடுக்கும் எல்லையற்ற விடுதலை ,அவரயே கேள்விக்கி உள்ளாக்கி தெளியாலாம்
அனால் இந்த வறட்டு பகாறிவாளர்கள்.அவர் வெற்றியடைந்த அல்லது கட்டிய ஒத்தையடி பதியிலே சொகுசாக தானியங்கி வண்டிகளில் பயணிப்பதால் ,அறிவு மயங்கி வீணர்களாக
வெந்து மடிகிறார்கள் .எம்மததில்லும் இல்லாத கேள்வி செல்வம்
பெரியரியத்திலும் ,வள்ளுவத்திலும் உண்டு ,,,,,,,

நான் பலமுறை பெரியாரையே ஒரு ரஷ்ய ஏஜெண்டா என அரசியல் ரீதியாக ஆய்ந்திருக்கிறேன் .

எவன்கொடுப்பன் எல்லையற்ற கேள்வி இன்பம்

வால்பையன் said...

நீங்கள் சொல்வது சரிதான் சோழன்!
நாடெங்கும் பரவி கிடந்த சிந்தனைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் பெரியாருக்கு பெரும்பங்குண்டு!

ஆனாலும் மாறிவரும் சூழ்நிலைகேற்ப நாமும் மாற வேண்டியது கட்டாயமில்லையா!?

!

Blog Widget by LinkWithin