தமிழகத்தில் பாஜகவின் நுழைவு...

சங்கிகள் விநாயகசதுர்த்தி மூலமா தான் தமிழகத்தில் கால் ஊன்றபார்க்குறாங்கன்னு பரவலா ஒரு கருத்து இருக்கு, ஆனா அவங்க 80களில் இருந்தே பல வகைகளில் முயற்சி பண்ணிட்டு தான் இருக்காங்க.

இந்த விசயத்தில் காங்கிரஸ் கட்சியை குறைஞ்சு எடை போடாதிங்க, பாஜகவில் ஆமா நான் சங்கி தான்னு சொல்லிட்டே எல்லாத்தையும் பண்ணுவானுங்க, காங்கிரஸில் நிறைய ஸ்லீப்பர் செல்ஸ் இருப்பாங்க.

குலகல்வி முறையை அமுல் படுத்துவதில் ராஜாஜி வெகு தீவிரமாக இருந்தார். காங்கிரஸ் நடத்திய மாநாட்டில் பார்ப்பானர்கள் சமையல் பண்ணலைனா நாங்க சாப்பிடமாட்டோம்னு வெளிநடப்பு பண்ணாங்க, பெரியார் வெகுதீவிரமா இடஒதுக்கீடு கேட்டப்ப, முடியாதுன்னு சொல்லிட்டதால் பெரியார் கட்சியை விட்டு வெளியேறினார். (பின்னாளில் ராஜாஜியின் சுதந்தரா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்து காமராஜரை தோற்கடித்தது சோககதை)

ஜெயலலிதா பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் நன்றாக கவனித்து பார்த்தால் அவர்கள் வைணவகொள்கைகளில் தீவிர ஈர்ப்புடன் இருக்கவில்லை, (செத்தபிறகு ஏன் எரிக்கலன்னு பிரச்சனை ஆனது) கேரளா நம்பூரிகளையும், ஜோசியகாரர்களையும் நம்பியே முடிவுகள் எடுத்தார். அதனால் சங்கிகள் நேரடியாக ஜெயலலிதாவை பயன்படுத்த முடியவில்லை



ஆனாலும் சத்தமே இல்லாமல் சாஹாவில் சிறுவர்களை மூளைசலவை செய்தார்கள். தேசபக்தி என்ற பெயரில் அவர்கள் விதைத்த நஞ்சு இந்துதுவா தான், கராத்தே சொல்லி தர்றாங்கன்னு நான் கூட கொஞ்சநாள் போனேன், எங்களுக்கு சொல்லி கொடுத்த குரு இன்னும் கல்யாணம் பண்ணாம சுத்துறதா கேள்வி பட்டேன், சம்சாரியவே யாரும் திரும்பி பார்க்க மாட்றாங்க, சன்யாசியை எங்கிட்டு பார்க்க.

அடுத்த முயற்சி, பிட் நோட்டீஸ். அதில் இந்திய சுதந்திரத்திற்கு போராடிவர்கள்னு இலையை கூட கிள்ளிபோடாதவர்களின் பெயர்கள் இருக்கும். சுதந்திரத்தின் போது இந்திய முஸ்லீம்களின் எண்ணிக்கை என்று குறிப்பிட்ட சதவிதகமும், தற்போதைய நிலமைன்னு கூடுதலாக சதவிகமும் இருக்கும்,

இந்தியாவை முஸ்லீம் நாடாக ஆக்க முயற்சிக்கிறார்கள் என்பது இப்போதும் அவர்கள் வைக்கும் குற்றசாட்டு. குழந்தைகள் என்ன செடிகொடியா. நட்டுவச்சு தண்ணி ஊத்த, வளர்க்க வேண்டாமா? அப்படியும் எப்படி முஸ்லீம்கள் எண்ணிகை உயர்ந்தது. ஒருவரல்ல, இருவரல்ல ஒரு ஊரே கூட்டாக இஸ்லாம் மதத்தை ஏற்றது. குற்றபரம்பரை என ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள். சாதிய ஒடுக்குமுறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லீம் ஆனார்கள். இப்படி இந்துகளாக இருந்தவர்கள் தான் இஸ்லாமியர்கள் ஆனது.

சமீபகாலமா இன்னொரு முயற்சியும் பண்றாங்க, கோவில் நிலங்கள் மீட்பு குழுன்னு இவங்களா ஒரு குரூப் சேர்த்துட்டு அங்கங்க ஆர்பாட்டம் பண்ணுவாங்க. சி.எஸ்.ஐ பள்ளியில் படித்த இந்து முண்ணனி தலைவர் அர்ஜுன் சம்பத் இந்தியாவில் கிறிஸ்துவ பள்ளியே இருக்கக்கூடாதுன்னு சொல்லுவார். அதற்கு மாற்றதான் நவோதயா பள்ளிகளை திணிக்க பார்க்குறாங்க

கோத்ரா சம்பவம் இங்கே எடுப்படவில்லை, இப்போது வரை கோவையை கை காட்டிக்கொண்டிருக்கிறார்கள், இப்போதும் IIMT பல்கலைகழகத்தில் உள்ள புரபஸர்கள் 221 பேரில் 209 பேர் ஆதிக்கசாதிகள் தான், படிச்சு தானே வச்சாங்க என்பது சரிதான், ஆனால் அங்கே எப்படி சமநீதியும், சமூகநீதியும் செயல்படும். சாதிய கட்டமப்பை நீக்காத வரை இந்துதுவா முழுமையான வெற்றி பெறாது, ஆனால் சாதிகள் இல்லையென்றால் இந்து மதமே கிடையாது.

திமுக பிஜேபியுடன் இணக்கமாக இருப்பது போல் காட்டுவது, இந்துகளை பகைத்து கொண்டு ஓட்டுகளை இழக்கக்கூடாது என செயல்படுவது இந்துதுவாவாதிகளுக்கு கொண்டாட்டமா இருக்கும், அதனால் வருசா வருசம் விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாமல் பார்ப்பான்கள் பூணூல் மாத்தும் ஆவணி அவிட்டத்தை கூட இந்து பண்டிகைன்னு திணிச்சுகிட்டு இருக்காங்க.

ஏற்கனவே அதிமுக பிஜேபிக்கு அடிமையா இருக்கு, திமுகவின் செயல்பாடுகள் சரியில்லைனா நாம தாமரை மயிருல தான் மலரும்னு சொல்ல முடியாது. 2 எம்.,எல்.ஏ வச்சு ஆட்சியை பிடிக்கும் குறுக்குவழி காரர்களுக்கு அது பெரியவிசயமா இருக்காது. மதம் என்பதே மடதனம், மதம் மனிதனை மடைனயாக்கும் பரவலா விழிப்புணர்வு ஏற்படுத்தனும்

இன்னும் சங்கிகள் இந்த்துவாவை பரப்ப வேறு எதும் முயற்சி பண்ணியிருந்தா கமெண்ட்ல சொல்லுங்க, மண்டையில ஏத்திகிறேன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin