ஜெமமோகனும் இந்துத்துவாவும்!

ஸ்மார்ட் போன் வருகைக்கு பின் புத்தகம் வாசிப்பது கனிசமாக குறைந்துவிட்டது உண்மை தான். நான் பயணங்களில் மட்டும் படிச்சிகிட்டு இருந்தேன். போனவாரம் போன் இல்லாததால் படிக்காத புத்தகம் எதாவது இருக்கான்னு தேடினேன். ஜெயமோகனின் வாழ்விலே ஒரு முறை என்ற அனுபவ கட்டுரை தொகுப்பு இருந்தது. அதன் முதல் கட்டுரையை படித்ததும் மலத்தில் கால் வைத்தது போல் இருந்தது.

யோகி ராம்சுரத்குமார் என்று அழைக்கப்பட்ட விசிறி சாமியாரை ஜெயமோகன் சந்திந்த அனுபவ கட்டுரை அது. பவா செல்லத்துரைக்கு விசிறி சாமியார் மேல் ஈர்ப்பு வரக்காரணம், அவருக்கு இலக்கிய ஆர்வம் இருந்தது. ஜெயமோகன் பார்த்ததும் கேக்கிறார். “பாலகுமாரன்” உங்களை குரு என்று சொன்னாரே. ஜெயமோகனுன் பொதுபுத்தி ஆசாமி தான் என்பதற்கு அதுவே போதும்



பொதுவாக என்னுடன் கடவுள் பற்றிய விவாதம் செய்பவர்கள், ஒரு கட்டம் தாண்டி அவர்கள் நம்பிக்கையை நியாயபடுத்த, அந்த கலைக்டர் கோவிலுக்கு போறார், அந்த பெரிய மனிதர் கோவிலுக்கு போறார். அவங்கல்லாம் முட்டாளா என்பார்கள். இதை தான் பெரும்பான்மையுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் பொதுபுத்தி எங்கிறோம். கல்விக்கும், அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு இவர்களெல்லாம் உதாரணங்கள்.

ஜெயமோகன் கேள்விக்கெல்லாம் விசிறி சாமியாரின் பதில் நான் பிச்சைகாரன், எல்லாம் என் அப்பன் பார்த்துக்கொள்வான். திரும்ப திரும்ப அதே ரிக்கார்ட் தான் தேயுது, ஆனா ஜெயமோகனுக்கோ அது தத்துவ குறியீடுகளாக தெரியும். ஓம் என்ற வார்த்தையை தான் பசு அந்த வார்த்தையை திருப்பி ம்மோன்னு கத்துகிறது எங்கிறார். அதை படித்ததும் எனக்கு வேற ஒன்னு ஞாபகம் வந்தது



மனசிதைவு நோய் கூறின் அறிகுறிகளில் ஒன்று காதில் குரல் கேட்பது, சுத்தும் மின்விசிறி சத்ததை குரலாக மொழி பெயர்ப்பார்கள், குழாயில் இருந்து வரும் தண்ணீர் கூட பேசும். மனநல காப்பகத்தில் 10 நோயாளிகள் இருந்தால் அதில் 7 பேர் மனசிதைவு குறையாடாக தான் இருக்கும். அவர்கள் பெரும்பாலும் இறந்தவர்களையும், கடவுளையும் பார்த்ததாக சொல்வார்கள்.

என்னடா சத்து சாக்குல ஜெயமோகனை மனசிதைவு நோயாளின்னு சொல்லிட்டேன்னு ஆசானின் அடிபொடிகள் கோவப்படலாம், மாடு மோட்டதும், பேண்டதும் மணக்கும்னு ஜெயமோகன் சொன்னா அப்படி தான் சொல்வாங்க.

விருதையே வேண்டாம்னு சொன்னார், அவரை போய் இந்துதுவாவாதின்னு சொல்றிங்கன்னு சிலர் கேட்டாங்க. ஜே.டி,குரூஸ் போன்ற ஆட்கள் விருது கொடுத்த கட்சியையும், கட்சி தலைவரையும் பாராட்டுவாங்க. ஆனா அவங்க கருத்தியலில் நிச்சயம் முரண்படுவாங்க. ஜெயமோகன் மாதிரியான ஆட்கள் தங்களில் விசம் ஊரெங்கும் பரவனும்னு நினைப்பாங்க.

இப்ப என்ன ஆச்சு, விருது வாங்க தகுதியாக சாரு மாதிரி ஆட்கள் “தமிழன் என்று சொல்ல வெட்கபடுகிறேன்” என்று எழுதுவது. ஹிந்தி படித்தால் சொம்பனஸ்கலிதம் ஆகாது என்பது. இந்து, இந்தி, இந்தியா என முக்குவது பரவலாக காணக்கிடைக்கலாம். ஜெயமோகனுக்கு விருது பெரிதல்ல. இந்த மாதிரி விசம் சமூகத்தில் பரவுவது தான் வேண்டும்.

கடவுளா, அவன் கிடக்கான் தேவிடியாபையன் என்ற வசனம் எழுதியதால் ஜெயமோகன் கடவுள் மறுப்பாளன் ஆகவிட முடியாது. இன்னும் கொஞ்சம் நாட்களில் தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் காலமும் ஜெயமோகனுக்கு வரும். அதை தான் இந்துதுவா விசம் எங்கிறேன்.

#வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin