குவியல்!..(06.05.10)

அன்பு தம்பி சத்யனுக்கு 04.05.10 அன்று பிறந்த நாள், இது அவரது ஆர்குட் தள முகவரி, பெங்களூரில் தொழில்நுட்ப துறையில் இருக்கிறார்! இயந்திர வாழ்க்கை வெறுத்து, விரைவில் தன்னை ஒரு இயற்கை விவசாயியாக காட்டிகொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பம், அவரது விருப்பம் நிறைவேற வாழ்த்துவோம்!


********************

பாஸின் திருமண வேலை மற்றும் தொடர்ச்சியான ஆணியால் இந்த மாதம் அவ்வளவாக எழுத முடியாது, உடல்நிலை எதுவும் சரியில்லையா என கேட்கும் நண்பர்களுக்கு நன்றி! உண்மையில் நான் எதுவும் பதிவு போடலங்கறதுக்காக பூமி எதிர் திசையில் சுத்தப்போவதில்லை!, பதிவுகலம் மிகுதியான் போதை கொண்டது, எதையாவது எழுதி ஆகவேண்டும் என்ற வெறி உங்களை வாழ்வில் எதையுமே ரசிக்க விடாது, காணும் விசயங்களிலெல்லாம் பதிவெழுத மேட்டர் கிடைக்குமா என தேடச்சொல்லும், சினிமாவுக்கு போனாலும் படத்தை பார்க்காமல் குறிப்பெடுத்து கொண்டிருப்பீர்கள், எதுவுமே கிடைக்கலையா ”கக்கூஸில் தண்ணி வரல” ரேஞ்சுக்கு ஒரு பதிவு போடத்தோணும்!

பதிவுகலில் நம் சுய எண்ணங்கள், மாற்று கருத்துகள், தேடிய அரிய தகவல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வது ஆரோக்கியமானது, இதில் சுய எண்ணங்கள் பெரும்பாலும் சுயசொறிதலே வால்பையன் உட்பட, ரொம்ப சொறிஞ்சா நமக்கும் ஆகாது படிக்கிறவங்களுக்கும் ஆகாது, அதற்காக எதுவுமே எழுத வேண்டாம் என்றில்லை, எழுத்து கலை எழுத, எழுத தான் வரும், அது பதிவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, நண்பர்களின் பதிவுகளில் பின்னூட்டங்களில் விவாதிக்கலாம், பலரது பின்னூட்டங்களை பார்க்கையில் எனக்கு இன்னும் சுருக்க சொல்லுதல், எளிமையாக விளக்குதல் போன்ற கலை கைக்கூடவில்லை என்று தெரிகிறது, அதற்கான பயிற்சி களமாக பின்னூட்ட பெட்டி இருக்கும் என நம்புகிறேன்!

நீங்கள் எனக்கு நண்பர்களாகவே இருங்கள், உங்களுக்கு நீங்களே வாசகர் பட்டம் கொடுத்து என்னை கெடுத்து விடாதீர்கள், தயவுசெய்து உங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பொழுது எனக்கு வாசகர் என்று சொல்ல வேண்டாம், நண்பனாக இருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது!


***************************


ஜாக்கிசேகர் பார்த்தே ஆகவேண்டிய படங்கள் என்று ஒரு லிஸ்ட் வைத்திருப்பார், என்னிடம் அப்படி ஒரு லிஸ்ட் கேட்டால் அதில் நிச்சயம் மெலினா இருக்கும், எனக்கு முழுக்கதையும் விமர்சனாக எழுத பிடிக்காததால் எனக்கு அதில் பிடித்தவகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன், முழு விமர்சனம் படிக்க தோழி உமாஷக்தியின் இந்த விமர்சனம் உதவலாம்!


இந்த படம் எனக்கு பிடிக்க எனது பதின்மத்தை ஞாபகபடுத்தியே முதல் காரணம்!, யாராக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் பொருத்திக் கொள்ளலாம், நமது ஆசைகளும், நிராசைகளும் சற்றே பின்னோக்கி பார்க்க இப்படம் வழி செய்யும்!, உன் மகனுக்கு துஷ்டாஆவி பிடிக்கவில்லை அவன் வயதுக்கு வந்துவிட்டான் எனும் போது எனக்கு என் தந்தையின் ஞாபகமும் வரும், 15 வயதில் செக்ஸை பற்றி பல மணிநேரம் விவாதம் செய்திருக்கிறேன் அவரிடம். போர், போரின் கொடுமைகள், சுயசமாதானங்கள் என்று மெல்லிய நூலிழை போல் படம் முழுவதும் நம்மை அறியாமல் ஒரு சோகம் இழையோடியிருக்கும்! போர் முடிவிற்கு பின் மெலினாவை அந்த ஊர் பெண்கள் அவமானபடுத்தி ஊரை விட்டு துரத்தும் போது, சிரித்து பேசுவதெல்லாம் நம்புவதற்கல்ல, நம் காலும் ஒருநாள் வாரப்படலாம் என்னும் வாழ்க்கை தத்துவம் தெரிகிறது!, நிச்சயமாக இது ஒவ்வொரு பெற்றொரும் பார்க்க வேண்டிய படம், காரணம் நீங்களும் பதின்மத்தை தாண்டி தான் வந்தீர்கள் என்பதை மறந்து விட்டதனால்!

************************

தம்பி பிலால் நேற்று ஈரான் பணம் 2000 த்தை கொண்டு வந்து இதை மாற்ற முடியுமா என்றான், “தம்பி ஏற்கனவே நமக்கும் அவுங்களுக்கும் வாய்க்கா தகராறு” இதை கொண்டு போய் கொடுத்தால் “பொண்ண கைய புடிச்சி இழுத்தியா”ன்னு கேப்பாய்ங்க, அரபு நாடுகளில் இருக்கும் நண்பர்கள் யாராவது மாற்றக்கூடும் என்றேன், அதான் வழியா, இல்லை அப்பணம் மாற்ற வேண்டிய அளவுக்கு மதிப்பில்லாததா, யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!


*****************

ஆரம்பத்தில் டுவிட்டரை பற்றி ஒன்றும் தெரியாமல் விலகியே இருந்தேன், இப்போ மொக்கைவிரைட்டர் என்ற பெயருடுன் பயங்கர மொக்கை, எப்படியாவது கார்க்கியை பீட் பண்ணிரனும்!

சில சாம்பிள்ஸ்

காரணமில்லாமல்
ஏற்படும் கோபத்திற்கு
ஒருவர் காரணம்
கேட்கும் போது
ஏற்படும் கோபத்திற்கு
நிச்சயமாக காரணம்
உண்டு!

0*0

வரண்டதொரு பூமியில்
வாழும் மிருகத்தை போல்
உன் நினைவில்லாத பொழுது
என் கண்கள் எரிகிறது!

0*0

ரிங்டோனை மாற்றினேன்,
காதல் தோல்வியா என்கிறான்,
அடிக்கடி ரிங்டோனை
மாற்றும் நண்பனொருவன்.


0*0


”க”டைசியில்
ஆரம்பித்து
முத”ல்”லில்
முடிகிறது
பாரேன் (நம்) காதல்!

91 வாங்கிகட்டி கொண்டது:

மோனி said...

மொத வெட்டு என்னது.. (வெட்டலாமான்னு தெரியலை படிச்சிட்டு வரேன்)

மோனி said...

சுய எண்ணங்கள் பெரும்பாலும் சுயசொறிதலே வால்பையன் உட்பட, ரொம்ப சொறிஞ்சா நமக்கும் ஆகாது படிக்கிறவங்களுக்கும் ஆகாது//..

இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

மோனி said...

..//தயவுசெய்து உங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பொழுது எனக்கு வாசகர் என்று சொல்ல வேண்டாம், நண்பனாக இருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது!//..

இது ... இதுதான் அருண்..

மோனி said...

..//ஆரம்பத்தில் டுவிட்டரை பற்றி ஒன்றும் தெரியாமல் விலகியே இருந்தேன், இப்போ மொக்கைவிரைட்டர் என்ற பெயருடுன் பயங்கர மொக்கை, எப்படியாவது கார்க்கியை பீட் பண்ணிரனும்!//..

ஹையோ.. ஹைய்யோ...
பாரேன் எப்படியெல்லாம் டுவிட்டுறாங்க இந்த பசங்க.

மோனி said...

ஓகே.. வெட்டி முடிச்சிட்டு கெளம்புறேன்.
துவம்சம் செஞ்சி வையுங்கப்பா.
நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட.. முத வெட்டு வெட்டலாமுனு ஓடோடி வந்த என்ன.. இப்படி பன்ணிப்புட்டீங்களே... அவ்....

மோனி said...

பாரு நண்பா... 15 நிமிஷத்துக்கு மேல ஆச்சு. இன்னும் கடைக்கு ஒருத்தரும் வரலை. வேற எதாவது சாமியார் மாட்டிட்டானா ? எல்லாரும் அங்க இருக்காங்களா?????

மோனி said...

வாப்பா பட்டா பட்டி தம்பு. வா வா ..

மோனி said...

மன்னாரு.. பட்டாபட்டிக்கு ஒரு ஏலக்காயி டீ போடு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னா மோனி சார்..

வால் பையன், ரொம்ப சொறிஞ்சா நல்லதில்லனு சொல்லிட்டாரு..

நிசமாவே ப்ளாக் ஒரு போதைதான்...புடுங்க ஆணி ரொம்ப இருந்தும் ..சீரியஸ்சா.. ப்ளாக்ல மேஞ்சுக்கிட்டு இருக்கேன்..

என்னா சார் பண்றது?.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger மோனி said...

மன்னாரு.. பட்டாபட்டிக்கு ஒரு ஏலக்காயி டீ போடு...
//
ஆப் டீ போதும் சார்.. அதுக்கு மேல உடம்பு ஒத்துக்காது...

மோனி said...

சே..கேவலமாயிருக்கப்பா..ஒருத்தன் நம்ம கிட்ட உதவி கேட்டும், டீ கடை இல்லாததால உதவ முடியாம போச்சே..பேசாம நாமளும் நாலு டீ கடை வெச்சுக்கிட்டா..இந்த மாறி சந்தர்ப்பத்தில எவ்வளவு உபயோகமாயிருக்கும்..

கார்க்கிபவா said...

ஆவ்வ்வ்

என்னை பத்தி பெருமையா எழுதி இருக்கிங்கன்னு சொன்னாங்க..

அண்ணே.. வாலண்ணே.. நல்லா இருங்கண்ணே... :))

Rajan said...

//நான் எதுவும் பதிவு போடலங்கறதுக்காக பூமி எதிர் திசையில் சுத்தப்போவதில்லை!, //

தெரிஞ்சா சரி !

Rajan said...

//”கக்கூஸில் தண்ணி வரல” ரேஞ்சுக்கு ஒரு பதிவு போடத்தோணும்!//

அது பரவால்ல தல எனக்கு இன்னைக்கி கக்கூசே வரல !

Rajan said...

//பதிவுகலில் நம் சுய எண்ணங்கள், மாற்று கருத்துகள், தேடிய அரிய தகவல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வது ஆரோக்கியமானது//

இம்புட்டு நாளா நாம இதத் தான் பண்னிட்டு இருந்தோமா? அவ்வ்வ்வ்

மோனி said...

..//”கக்கூஸில் தண்ணி வரல” ரேஞ்சுக்கு ஒரு பதிவு போடத்தோணும்!//..

இதுக்கும் அந்த போட்டோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே..?

Rajan said...

//நண்பர்களின் பதிவுகளில் பின்னூட்டங்களில் விவாதிக்கலாம்//


நீங்கள் அணுக வேண்டிய முகவரி!

மோனி said...

..//எழுத்து கலை எழுத, எழுத தான் வரும்//..

எழுத்து எழுத்து எழுத்து - ஐ. ஜாலி.. எனக்கும் எழுத வருது. நானும் பிரபல பதிவராயிட்டேன்.

Rajan said...

//தம்பி பிலால் நேற்று ஈரான் பணம் 2000 த்தை கொண்டு வந்து இதை மாற்ற முடியுமா என்றான்,//

பயபுள்ளய இங்க அனுப்பி வைங்க தல !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மோனி said...
எழுத்து எழுத்து எழுத்து - ஐ. ஜாலி.. எனக்கும் எழுத வருது. நானும் பிரபல பதிவராயிட்டேன்.
//

இதோ.. பிரபல பதிவர் விழாவுக்கு மேடை போட வாரோம்..

Rajan said...

//..//”கக்கூஸில் தண்ணி வரல” ரேஞ்சுக்கு ஒரு பதிவு போடத்தோணும்!//..



பதிவு எழுதிட்டேன் ! படத்த இணைக்க தான் கொஞ்சம் டைம் ஆவுது!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜன் said...

//தம்பி பிலால் நேற்று ஈரான் பணம் 2000 த்தை கொண்டு வந்து இதை மாற்ற முடியுமா என்றான்,//

பயபுள்ளய இங்க அனுப்பி வைங்க தல !
//

ஏண்ணே.. இதக்கூட நாங்க பண்ண மாட்டமா?..
ஆமா தல்.. கோயமுத்தூர்ல ஜட்டி என்ன விலை விக்குது?...

Ganesan said...

வால் பதிவு போதை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள்.

Rajan said...

//இதோ.. பிரபல பதிவர் விழாவுக்கு மேடை போட வாரோம்..

//


தன்னடக்கப் புயல் வால் பையனை மேடைக்கு அழைக்க வாரீர் நண்பர்களே !

Rajan said...

//கோயமுத்தூர்ல ஜட்டி என்ன விலை விக்குது?... //


டவுசர் போட்டுட்டு இஸ்கூல் போன காலத்துல ஜட்டி போட்டது அப்ப முப்பது ரூவா! இப்பல்லாம் போடறது இல்ல தல

மோனி said...

..//ஆமா தல்.. கோயமுத்தூர்ல ஜட்டி என்ன விலை விக்குது?//..

ஒன்லி பேண்ட்..

கபிலன் said...

சுவாரஸ்யமான குவியல் !

மோனி said...

..//வால் பதிவு போதை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள்//..

பதிவு போதை-யையுமா?????
(நண்பா வால்,
என் இனமடா நீ..!)

உமர் | Umar said...

//நண்பர்களின் பதிவுகளில் பின்னூட்டங்களில் விவாதிக்கலாம்//

அத வச்சும் ஒரு பதிவு தேத்துது இந்த பதிவுலகம்.

Rajan said...

யோவ் ! பண்றத எல்லாம் நாம பண்ணிட்டு நாட்டுக்கு உழைத்த நல்லவன் ரேஞ்சுக்கு இங்க பதிவுலகத்த ஒட்டறீங்களேயா

உமர் | Umar said...

//சில சாம்பிள்ஸ்//

அப்பவே நினைச்சேன் அடுத்த பதிவுல இதெல்லாம் வரும்ன்னு. :-)

கிரி said...

//உண்மையில் நான் எதுவும் பதிவு போடலங்கறதுக்காக பூமி எதிர் திசையில் சுத்தப்போவதில்லை!, பதிவுகலம் மிகுதியான் போதை கொண்டது, எதையாவது எழுதி ஆகவேண்டும் என்ற வெறி உங்களை வாழ்வில் எதையுமே ரசிக்க விடாது, காணும் விசயங்களிலெல்லாம் பதிவெழுத மேட்டர் கிடைக்குமா என தேடச்சொல்லும்//

இதையே நானும் கூறுகிறேன். பலர் இதற்க்கு அடிமையாகவே உள்ளனர்.

மெலீனா செம படம் :-)

damildumil said...

// பதிவுகலம் மிகுதியான் போதை கொண்டது, எதையாவது எழுதி ஆகவேண்டும் என்ற வெறி உங்களை வாழ்வில் எதையுமே ரசிக்க விடாது, காணும் விசயங்களிலெல்லாம் பதிவெழுத மேட்டர் கிடைக்குமா என தேடச்சொல்லும், சினிமாவுக்கு போனாலும் படத்தை பார்க்காமல் குறிப்பெடுத்து கொண்டிருப்பீர்கள், எதுவுமே கிடைக்கலையா ”கக்கூஸில் தண்ணி வரல” ரேஞ்சுக்கு ஒரு பதிவு போடத்தோணும்!
//

பிரபல பதிவர்களே !! நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா

T.V.ராதாகிருஷ்ணன் said...

குவியல்!.. பிடிச்சிருக்கு

சசிகுமார் said...

//விரைவில் தன்னை ஒரு இயற்கை விவசாயியாக காட்டிகொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பம்,//

இவர் விருப்பம் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

அட்வைஸ் ஓ.கே...

ரமேஷ் வைத்யா said...

sir,
I am your ardent reader

வால்பையன் said...

// ரமேஷ் வைத்யா said...

sir,
I am your ardent reader//


எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம், கெட்டவார்த்தையில திட்டுற வேலை மட்டும் வேண்டாம்!

ரமேஷ் வைத்யா said...

//பதிவு போதை-யையுமா?????
(நண்பா வால்,
என் இனமடா நீ..!)//

moni
என் இனமடா நீ..!

Sanjai Gandhi said...

//பதிவுகலில் நம் சுய எண்ணங்கள், மாற்று கருத்துகள், தேடிய அரிய தகவல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வது ஆரோக்கியமானது, இதில் சுய எண்ணங்கள் பெரும்பாலும் சுயசொறிதலே வால்பையன் உட்பட, ரொம்ப சொறிஞ்சா நமக்கும் ஆகாது படிக்கிறவங்களுக்கும் ஆகாது, அதற்காக எதுவுமே எழுத வேண்டாம் என்றில்லை, எழுத்து கலை எழுத, எழுத தான் வரும், அது பதிவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, நண்பர்களின் பதிவுகளில் பின்னூட்டங்களில் விவாதிக்கலாம், பலரது பின்னூட்டங்களை பார்க்கையில் எனக்கு இன்னும் சுருக்க சொல்லுதல், எளிமையாக விளக்குதல் போன்ற கலை கைக்கூடவில்லை என்று தெரிகிறது, அதற்கான பயிற்சி களமாக பின்னூட்ட பெட்டி இருக்கும் என நம்புகிறேன்!

நீங்கள் எனக்கு நண்பர்களாகவே இருங்கள், உங்களுக்கு நீங்களே வாசகர் பட்டம் கொடுத்து என்னை கெடுத்து விடாதீர்கள், தயவுசெய்து உங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பொழுது எனக்கு வாசகர் என்று சொல்ல வேண்டாம், நண்பனாக இருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது!//

ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ.. படிச்ச எனக்கே சோடா தேவைப் படுதே...

மோனி said...

// ரமேஷ் வைத்யா said...

sir,
I am your ardent reader//


எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம், கெட்டவார்த்தையில திட்டுற வேலை மட்டும் வேண்டாம்!

----------------------------------

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
வால் பையனுக்கு ARDENT READER லாம் இருக்காங்க..

----------------------------------

பிரேமா மகள் said...

எப்படி.. வால்.. உண்மையை மட்டும் பேசறீங்க....

மோனி said...

//பதிவு போதை-யையுமா?????
(நண்பா வால்,
என் இனமடா நீ..!)//

moni
என் இனமடா நீ..!
------------------------------------

நண்பா moni இல்ல Mony . ஓ.கே. வா?

வா நண்பா ஒரே இனமெல்லாம் சேந்து .. நாம் செத்து செத்து விளையாடலாம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@மோனி
@ராஜன்

பட்டாபட்டிக்கு லைட்டா ஒரு டவுட்..

1)வாலு.. ஒரு வாரமா காணோம்..
ரஞ்சிய..எங்கேனு போலீஸ் வலைவீச்சு..

2)வாலு.. திடீர்னு, எல்லாமே மாயை..போதைனு சொல்ல ஆரம்பிச்சுட்டாரு..
நித்தி, மடத்து பொறுப்பை யாருகிட்டயோ ஒப்படைசுட்டாராம்..

3)நித்தி ஆசிரமத்தில வெளிநாட்டுப்பணம் இருக்குதாம்..
நம்ம ஆளு, கரண்சிய எங்க மாற்றலாம் என கேள்வி கேட்கிறார்..

ஏதாவது டவுட் வருது உங்களுக்கு?

மோனி said...

..//பிரேமா மகள் said...
எப்படி.. வால்.. உண்மையை மட்டும் பேசறீங்க//..

போன பதிவை ஒழுங்கா படிக்கலையோ?

மோனி said...

..//அவரவர் நம்பிக்கையை உண்மையென நம்பும் போது, உண்மையான உண்மையை உண்மை என நம்ப உண்மையாகவே சிலருக்கு தயக்கமாக இருக்கிறது//..

புரியுதா பிரேமா மகள் ?

மோனி said...

..//பட்டாபட்டி.. said...
@மோனி
@ராஜன்
ஏதாவது டவுட் வருது உங்களுக்கு?//..

பார்ரா.. இப்பத்தான் பட்டாபட்டிக்கு டவுட்டே ஆரம்பிச்சிருக்கு. அங்க ஈரோட்டுல என்னடான்னா முக்காவாசி படம் முடிஞ்சிடுச்சாம்... கேள்விப்பட்டேன்.

வால்பையன் said...

/அங்க ஈரோட்டுல என்னடான்னா முக்காவாசி படம் முடிஞ்சிடுச்சாம்... கேள்விப்பட்டேன். //

தலைமை சீடர் பதவி வேணுமா வேணாமா?
இப்படியெல்லாம் போட்டு உடைக்கக்கூடாது!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அங்க ஈரோட்டுல என்னடான்னா முக்காவாசி படம் முடிஞ்சிடுச்சாம்... கேள்விப்பட்டேன்.
//
இதுக்குத்தான் உள்ளூர்ல இருக்கவேண்டும் என் சொல்றாங்களா?..
ரைட்டு...

தயாளன் said...

//இதில் சுய எண்ணங்கள் பெரும்பாலும் சுயசொறிதலே//

உண்மையைச் சொன்னீர்கள்.

மோனி said...

..//தலைமை சீடர் பதவி வேணுமா வேணாமா?
இப்படியெல்லாம் போட்டு உடைக்கக்கூடாது!//..

தலைக்கு மை போட்டுட்டுதான் வரணும்.
அடப்போங்க தல..
(அட எத்தனை தல..?)

மோனி said...

../இதுக்குத்தான் உள்ளூர்ல இருக்கவேண்டும் என் சொல்றாங்களா?//..

ஆஸ்ரமத்துல இணையுற ஐடியா எதாவது இருந்தா உடனே contact to ராஜன் (ஹி ஹி ஹி)

மோனி said...

..//இதில் சுய எண்ணங்கள் பெரும்பாலும் சுயசொறிதலே//

உண்மையைச் சொன்னீர்கள்//..

போற போக்கப்பாத்தா
”உண்மை”-ன்னாலே ”வால்பையன்” தான்னு அர்த்தம் ஆயிடும் போலிருக்கே.

சொக்கா..
பேண்ட்டு..
இத கேக்க யாருமே இல்லையா..

இல்ல இல்ல.
அவன் இல்ல வர மாட்டான்..
நம்பாதே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@மோனி said...
ஆஸ்ரமத்துல இணையுற ஐடியா எதாவது இருந்தா உடனே contact to ராஜன் (ஹி ஹி ஹி)//

வரேன்..வரேன்..ஆகஸ்ட்ல வருவேன்..

கட்சி மீட்டிங்.. ஈரோடா..இல்ல கோவையானு, மட்டும் முடிவு பண்ணிவையுங்க தல..

மோனி said...

//..பட்டாபட்டி.. said...

வரேன்..வரேன்..ஆகஸ்ட்ல வருவேன்..

கட்சி மீட்டிங்.. ஈரோடா..இல்ல கோவையானு, மட்டும் முடிவு பண்ணிவையுங்க தல..//

ஈரோடோ - கோவையோ
எந்த ஊரா இருந்தாலும்
எந்த மாவட்டமா இருந்தாலும்
எந்த மாநிலமா இருந்தாலும்
எந்த நாடா இருந்தாலும் (ரொம்ப ஓவரா போகுதோ..)

ஏதோ ஒரு TASMAC-ல அரசாங்கத்துக்கு வருமானத்தை வர வெச்சிட்டுதான் மாநாடு நடக்கும்.

ஷாகுல் said...

ஈரான் ரியால் 2000 மா பத்து ரூபாய் கூட கிடைக்காது. பத்தரமா வச்சிக்கங்க

தர்ஷன் said...

மெலினா உண்மையில் நல்லப் படம் தலை சாரி வால்
நான் படம் பார்த்தது மொனிக்கா பெல்லுச்சிக்காக என்ற போதும் படம் பார்த்தப் பின் ஒரு நிறைவு ஏற்பட்டது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏதோ ஒரு TASMAC-ல அரசாங்கத்துக்கு வருமானத்தை வர வெச்சிட்டுதான் மாநாடு நடக்கும்.
//

அது மட்டும் நடக்காது.. தாகமே எடுத்தாலும்..டாஸ்மார்க் உள்ள போகமாட்டேனு காரமை ஜோசியன் மேல சத்தியம் பண்ணியிருக்கேன்..

அதனால..ஹி..ஹி.. வெளி நாட்டு சரக்கு அடிக்கலாம்..

மோனி said...

..//ஷாகுல் said...

ஈரான் ரியால் 2000 மா பத்து ரூபாய் கூட கிடைக்காது. பத்தரமா வச்சிக்கங்க//..

..//வால் பையன் said...
அதான் வழியா, இல்லை அப்பணம் மாற்ற வேண்டிய அளவுக்கு மதிப்பில்லாததா//..

----------

எனக்கு புரிஞ்சி போச்சு..
எனக்கு புரிஞ்சி போச்சு..
டிங்கிரிடிய்யாலே
ஐயா டிங்கிரிடிய்யாலே..

மோனி said...

..//பட்டாபட்டி.. said...
அது மட்டும் நடக்காது.. தாகமே எடுத்தாலும்..டாஸ்மார்க் உள்ள போகமாட்டேனு காரமை ஜோசியன் மேல சத்தியம் பண்ணியிருக்கேன்//..

நாமெ வெளிய நின்னு மானாடு மயிலாடு
Sorry மாநாடு நடத்தலாம். ஹு ஹு ஹு

மோனி said...

@ வால்பையன் said ..
//ஆரம்பத்தில் டுவிட்டரை பற்றி ஒன்றும் தெரியாமல் விலகியே இருந்தேன்//..

இப்படியே Blog-லயும் இருந்திருக்கலாம்.
நாலு பேராவது நல்லா இருந்திருப்பாங்க.

சரி நடந்தது நடந்துபோச்சு.
டுடுடுவிட்டரையும் விட்டுடாதே நண்பா..

Ashok D said...

//காணும் விசயங்களிலெல்லாம் பதிவெழுத மேட்டர் கிடைக்குமா என தேடச்சொல்லும், சினிமாவுக்கு போனாலும் படத்தை பார்க்காமல் குறிப்பெடுத்து கொண்டிருப்பீர்கள்//
யாருன்னு சொல்லலையே

மோனி said...

..//D.R.Ashok said...

யாருன்னு சொல்லலையே//..

சுறா படத்தைப்பத்தி இப்படி மறைமுகமா சொன்னா புரிஞ்சிக்கமாட்டீங்களா?

சரி சரி லூசுல விடுங்க..

மோனி said...

லூசுப்பையன் மோனிக்கு பசிக்குது.
நான் ஜூட் வுடுறேன்.

Rajan said...

வக்காளி இங்க என்னய்யா ! நடக்குது

Rajan said...

பதிவப் போட்டுட்டு அந்தப் பயபுள்ள பரதேசம் போயிடுச்சா !

VISA said...

//காரணமில்லாமல்
ஏற்படும் கோபத்திற்கு
ஒருவர் காரணம்
கேட்கும் போது
ஏற்படும் கோபத்திற்கு
நிச்சயமாக காரணம்
உண்டு!//

:)

ஜாபர் ஈரோடு said...

\\ அது பரவால்ல தல எனக்கு இன்னைக்கி கக்கூசே வரல ! \\

இது ராஜன் டச்...

Rajan said...

\\ அது பரவால்ல தல எனக்கு இன்னைக்கி கக்கூசே வரல ! \\//இது ராஜன் டச்... //


யாரப்பா அது ! டச்சாம் டச்சு ! முட்டி தேய உக்காந்து முக்கி முக்கி நொந்து போனது நானு .... இவுரு வந்து கமெண்ட் அடிக்கறாரு . ஒரு நாள் ஈரோட்டுக்கு வந்து ஒரு காட்டு காட்டப் போறேன் !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ராஜன் said...
யாரப்பா அது ! டச்சாம் டச்சு ! முட்டி தேய உக்காந்து முக்கி முக்கி நொந்து போனது நானு .... இவுரு வந்து கமெண்ட் அடிக்கறாரு . ஒரு நாள் ஈரோட்டுக்கு வந்து ஒரு காட்டு காட்டப் போறேன் !
//

ஒருவேளை.. வருவது சந்தனமாயிருக்குமோ?..

பட்டாபட்டிக்கு இப்ப..அடிக்கடி டவுட் வருது தல...

ஏதாவது வைத்தியமிருக்கு?...

Sukumar said...

குவியல் நல்லா இருந்தது தல..
மாலினா குறிப்பு அருமை...
படம் முழுவதும் ஒரு மெல்லிய இசை இழையோடும்... இன்னும் அது மனதில் ரீங்காரம் இடுகிறது....

கொல்லான் said...

சஞ்சய் காந்தி,
ஆம்பள சோடாவா? பொம்பள சோடாவா?

Balakumar Vijayaraman said...

// உங்களுக்கு நீங்களே வாசகர் பட்டம் கொடுத்து என்னை கெடுத்து விடாதீர்கள், தயவுசெய்து உங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பொழுது எனக்கு வாசகர் என்று சொல்ல வேண்டாம், நண்பனாக இருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது!//

இது தான் சரி :)

Mythees said...

:))

Rajan said...

//ஒருவேளை.. வருவது சந்தனமாயிருக்குமோ?..//

போட்டோ மஞ்ச கலர்ல போட்டது தப்பா போச்சு

Rajan said...

//பட்டாபட்டிக்கு இப்ப..அடிக்கடி டவுட் வருது தல...

ஏதாவது வைத்தியமிருக்கு?...//


ஓ இருக்கே!

ஒத்தக் கொம்பு தைலம்னு ஒரு ஐட்டம் வெச்சுருக்கேன்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜன் said...

//பட்டாபட்டிக்கு இப்ப..அடிக்கடி டவுட் வருது தல...

ஏதாவது வைத்தியமிருக்கு?...//


ஓ இருக்கே!

ஒத்தக் கொம்பு தைலம்னு ஒரு ஐட்டம் வெச்சுருக்கேன்!

//

அது சாணிக்கு.. எனக்கு ..இந்த மூலிகை..மந்திரம் அதுமாறி ஏதாவது இருக்கு?

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
Harinarayanan said...

//உண்மையில் நான் எதுவும் பதிவு போடலங்கறதுக்காக பூமி எதிர் திசையில் சுத்தப்போவதில்லை!, பதிவுகலம் மிகுதியான் போதை கொண்டது, எதையாவது எழுதி ஆகவேண்டும் என்ற வெறி உங்களை வாழ்வில் எதையுமே ரசிக்க விடாது, காணும் விசயங்களிலெல்லாம் பதிவெழுத மேட்டர் கிடைக்குமா என தேடச்சொல்லும், சினிமாவுக்கு போனாலும் படத்தை பார்க்காமல் குறிப்பெடுத்து கொண்டிருப்பீர்கள், எதுவுமே கிடைக்கலையா ”கக்கூஸில் தண்ணி வரல” ரேஞ்சுக்கு ஒரு பதிவு போடத்தோணும்!//

என்ன ஒரு தன்னடக்கம்?! பதிவுலக போதையில் மூழ்கிவிட்ட ஒரு பதிவரின் மனநிலையை துள்ளியமாக படம்பிடித்துக்காட்டும் நிதர்சனமான வரிகள்! 651 பின்பற்றுபவர்களைக் கொண்ட, 4 வருடமாக வலையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் வால் பையனிடமிருந்து இப்படியொரு வரிகளை நான் எதிர்ப்பார்க்கவில்லை.என் வலையில் பின்னூட்டமிட்ட உங்களைப் பின்தொடர்ந்து, உங்க வலைப்பக்கத்துக்கு இப்போதான் வர்றேன். பதிவுகள படிச்சிட்டு பின்னூட்டமிடுகிறேன்! நன்றி.
பத்மஹரி,
http://padmahari.wordpress.com

Ashok D said...

அடடே கும்மி.. முடிஞ்சாச்சா?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ட்விட்டரா?!! அப்படின்னா என்ன வால்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஈரோடோ - கோவையோ
எந்த ஊரா இருந்தாலும்
எந்த மாவட்டமா இருந்தாலும்
எந்த மாநிலமா இருந்தாலும்
எந்த நாடா இருந்தாலும் (ரொம்ப ஓவரா போகுதோ..)

ஏதோ ஒரு TASMAC-ல அரசாங்கத்துக்கு வருமானத்தை வர வெச்சிட்டுதான் மாநாடு நடக்கும்.


அதான நாமெல்லாம் உண்மையான குடிமகன்களாச்சே

webworld said...

அன்பு தம்பி சத்யனுக்கு 04.05.10 அன்று பிறந்த நாள், இது அவரது ஆர்குட் தள முகவரி, பெங்களூரில் தொழில்நுட்ப துறையில் இருக்கிறார்! இயந்திர வாழ்க்கை வெறுத்து, விரைவில் தன்னை ஒரு இயற்கை விவசாயியாக காட்டிகொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பம், அவரது விருப்பம் நிறைவேற வாழ்த்துவோம்!

===================

நன்றிகள் பல ஆயிரம் வால் அண்ணா :) ...

மங்களூர் சிவா said...

/
//”கக்கூஸில் தண்ணி வரல” ரேஞ்சுக்கு ஒரு பதிவு போடத்தோணும்!//

அது பரவால்ல தல எனக்கு இன்னைக்கி கக்கூசே வரல !
/

பாருய்யா பதிவு & எதிர்பதிவு

:))))))))))))))))))))

கமலேஷ் said...

கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்....

Anonymous said...

கவிதைகள் பிடிச்சிருக்கு அருண்...

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

எம்.எம்.அப்துல்லா said...

//பலரது பின்னூட்டங்களை பார்க்கையில் எனக்கு இன்னும் சுருக்க சொல்லுதல், எளிமையாக விளக்குதல் போன்ற கலை கைக்கூடவில்லை என்று தெரிகிறது, அதற்கான பயிற்சி களமாக பின்னூட்ட பெட்டி இருக்கும் என நம்புகிறேன்!

//

எனக்கும் கைகூடவில்லை.நான் இடுகை எழுதுவதை விட்டுவிட்டு பின்னூட்டம் மட்டும் போட்டுக்கொண்டு இருக்கும் காரணம் இதுதான்.ஜஸ்ட் டேக்கிங் டிரைனிங்.

டிராகன் said...

VAL ,

Yesterday i saw that film MALENA .,beautiful movie ...,Thanks for Intro ..,Music is master piece

mohamedali jinnah said...

வாங்கிகட்டி கொண்டது அனைத்தையும் ஓர் இடத்தில போடுங்க அது ஒரு கட்டுரையாகும்

உமர் | Umar said...

//வாங்கிகட்டி கொண்டது அனைத்தையும் ஓர் இடத்தில போடுங்க அது ஒரு கட்டுரையாகும்
//

உங்க ப்ளாகுல நான் போட்ட கமென்ட வெளியிடலையே

!

Blog Widget by LinkWithin