திவால் ஆகுமா இந்தியா - பாகம்4

இந்த தொடரில் இது நான்காம் பாகம். எப்பவும் போக பாகத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் சொல்றேன், ஆனா போன பாகத்தை டாக்டர் மறந்துட்டதால எனக்கு எந்த கேள்வியும் வரல. போன பாகத்திலே இந்த பாகத்தில் இருந்து முதலீடு பற்றிய அறிவுரை வரும்னு சொல்லியிருந்தேன். அதை பகிர்கிறேன்

முதலீடு என்பது பணம் மட்டுமல்ல, நம் நேரம், அர்பணிப்பும் கூட, ஆக நாம் முதலீட்டிற்கு முன்னால் யோசிக்க வேண்டியது என்னவென்றால் நம் ஆயுள் காலம் 70 வயதென்றால் நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியது அதில் மீதியை தான். அதாவது உங்களுக்கு 40 வயதானால் நீங்கள் உங்கள் முதலீட்டில் 30% தான் ரிஸ்க் எடுக்கனும், மீதியை சேஃப் முதலீட்டில் தான் வைக்கனும்

இங்கே பெரும்பாலோர் நம்புவது மியூச்சுவல் ஃபண்ட், தவறில்லை. அதும் முதலீடு தான், ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால்....

உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்குவார்கள். உங்களை அறிமுகபடுத்தும் ஏஜெண்டுக்கு கணிசமான தொகை போகும், மீதி தொகை கம்பெனிக்கு போகும், அங்கே என்னை போல் செக்டாருக்கு ஒருத்தர்னு அனலைசர் இருப்பார்ங்க, அதாவது பார்மா செக்டார், பேங்க் செக்டார் இந்த மாதிரி.

எதிர்கால ஊக வணிகத்தில் விற்று வங்கலாம். ஆனால் போர்ட்போலியோவிலோ, முயூச்சுவல் ஃபண்டிலோ விற்று வாங்க முடியாது, வாங்கி விற்கலாம். ஆக மொத்த மார்கெட்டும் இறக்கும் போது நாம வேடிக்கை தான் பார்க்கனும்



எனது இண்ட்ராடே கால் 85% சக்ஸஸா இருந்தாலும் நான் அனைவரையும் இழுத்து விடாமல் இருக்க காரணம் தயவுதெய்வு நாம் என்ன செய்கிறோம் என புரிந்து மார்கெட்டில் இருக்கனும்னு தான்

முயூச்சுவல் ஃப்ண்டில் நமக்கு லாபம் வரும். ஆனால் அதுக்கு நாம் குறைந்து முணு வருசம் காத்திருக்கனும், அதுக்கு முன்னாடியும் லாபம் வரும், அந்த பணம் அந்த கம்பெனி CEO யிருந்து வாட்ச்மேன் வரை சம்பளத்துக்கு போகும்

ஆனாலும் மார்கெட் முற்றேத்தை பொறுத்து நட்டம் வராமல் என் போல் அனலைசர் பார்த்து கொள்வார்கள். அம்மாதிரி சேவை தான் நமது போர்ட்போலியோவும்

இங்கே நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒரே விசயம் தான்
ரிஸ்க் எடுப்பதை கவணத்தில் கொள்ளுங்கள். யாரையும் நம்பி அவர்கள் கையில் பணம் தாராதிர்கள். எதா இருந்தாலும் உங்கள் நேரடி மேற்பார்வையில் பாருங்கள்

#வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin