தேமுதிக - தேர்தல் முன்னோட்டம்

தேமுதிக ஆரம்பிப்பட்ட பொழுது விஜய்காந்த் மட்டுமே விருதாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். விஜயகாந்தின் ஒப்பனையற்ற பேச்சுக்கு அடிதட்டு ,மக்களிடம் வரவேற்பும் இருந்தது.

அதற்கு அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகள் வெற்றி பெற்றது தேமுதிக. எதிர்கட்சியாக இருந்தபொழுதே அருண்பாண்டியன், மாஃபா பண்டியராஜன் போன்றவர்களை அதிமுக இழுத்துக்கொண்டதால் அதிருப்தி அடைந்தார்.

அடுத்த தேர்தலில் திமுகவிடன் ஏகப்பட்ட டிமாண்ட் வைத்தார் விஜயகாந்த் அதில் துணை முதல்வர் பதவியும் இருந்தது. திமுக மறுத்து விட மக்கள் நல கூட்டணியில் இணைந்தார். அந்த சயமத்திலே விஜயகாந்துக்கு உடல்நல குறைவு இருந்தது, கோர்வையற்ற பேச்சு, தெளிவில்லாத பேச்சு என சொதப்பினார்

மக்கள் நல கூட்டணி வாக்குகளை சிதறிடிக்க திமுக நிறைய தொகுதிகள் 2000+ வாக்கு வித்தியாசத்தில் தோற்றது.தேமுதிகவில் அதிருப்தியில் இருந்தவர்கள் திமுக சீட் கொடுத்து பெரும் தவறும் செய்தது. முத்துசாமி போன்றவர்கள் தோற்க அது ஒரு காரணம்



இப்பொழுது விஜயகாந்த் உடநலகுறைவால் ஓய்வில் இருக்கிறார். அவர் மனைவியும், மச்சானும் கட்சியை நிர்வகிக்கின்றனர். அவர்கள் சுணக்கம் காரனமாக கட்சி இருக்குதா இல்லையான்னு தெரியாத அளவு அவர்கள் செயல்பாடுகள் உள்ளது. கமல், ரஜினி போன்றவர்களின் அரசியல் வருகை பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களை மடை மாற்றிவிட்டது

என்னதான் நாங்க போர்கப்பல், பீர்கப்பல்னு அதிமுக சொல்லிகிட்டு இருந்தாலும் தூத்துகுடி படுகொலை, தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் விடுதலை. நீட் பிரச்சனை, கஜா புயல், 8 எட்டுவழி சாலை. நிர்வாக திறன்மின்மை அதிமுகவுக்க பலந்த பின்னடைவை கொண்டு வந்துள்ளது. அதனால் பாஜக கூட அதிமுகவுடன் வைக்க யோசிக்கிறது., பாஜக ரஜினி போன்ற தலைவர்களை தான் குறிவைக்கிறது. அதனால் அதிமுக,, தேமுதிகவை கூட்டணிக்கு அழைக்கலாம் என்பது என் கணிப்பு

திமுக பலம் வாய்ந்த கூட்டணியுடன் இருப்பதால் தேமுதிகவை சீண்ட போவதில்லை. மக்கள் நல கூட்டணியும் கலைந்துவிட்டது. இடதுசாரிகளுடன் திமுக கூட்டணி உறுதிசெய்யப்படவில்லை., அவர்கள் தேமுதிகவை அணுகலாம். ஆனால் தேமுதிக யாருடம் கூட்டணி வைத்தாலும் அது ஓட்டை பிரிக்கும் வேலை.

தேமுதிக நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் வாய்புண்டு

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin