சிட்டுகுருவியும், செல்போன் டவரும்....

பறவைகளும், கடல் ஆமை இனங்களும் எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸ் என்றழைக்கப்படும் மின்காந்த அலைகள் மூலமாக திசையையும், தான் செல்ல வேண்டிய பாதையையும் அறியும்

அதனால் தான் பல ஆண்டுகள் கழித்தும் ஆஸ்திரிலேயாவில் இருந்து வேடந்தாங்கலுக்கு பறவைகளால் வரமுடிகிறது, தான் பிறந்த இடத்திற்கே முட்டை இட ஆமைகளால் வரமுடிகிறது

அமெரிக்காவில் வானுர்ந்த கட்டிடங்களின் கண்ணாடியில் மோதி ஆண்டு தோறும் ஆயிரங்கணக்கில் பறவைகள் இறக்கின்றன, ஆனால் செல்போன் டவரால் இறந்ததாக எந்த குறிப்பும் இல்லை

நகர பகுதியில் காகங்கள் மட்டும் இருக்கும், அவைகளை கேவஞ்சர்ஸ் என அழைப்போம் அதாவது துப்புரவாளர்கள், தெருவில் கிடக்கும் செத்த எலி, பழைய உணவு ஆகியவற்றை உண்டு அவை வாழுவதால் அவைகள் நகரத்தை விட்டு செல்லாமல் இருக்கிறது



சிறு பறவைகள் தங்க போதிய ,மரங்கள் இல்லாமல் இடம் பெயர்ந்து விட்டன, நகரமயாக்கலின் தாக்கமே நம்மால் பறவைகளை பார்க்கமுடியவில்லையே தவிர செல்போன் டவருக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை, உதாரணம் சிட்டுகுருவிகள் ராம்ராடு பகுதியில் பரவலாக காணப்படும்

செல்போன் டவரில் இருந்து வரும் சிக்னல் என்பது தன்னிச்சையாக இயக்குவது அல்ல, அவைகள் ஏற்கனவே இருக்கும் மின்காந்த அலைகள் மீது சவாரி செய்பவை. எங்கே அதை உள்வாங்கிக்கொள்ளும் ரிசீவர் இருக்கிறதே அங்கே தஞ்சம் அடையும்.



காக்கா கரைந்தால் சொந்தகாரங்க வருவாங்க, காகம் நமது முன்னோர்களின் ஆத்மா போன்ற மூடநம்பிக்கை போன்று பிற்போக்குவாதி எவனோ கிளப்பி விட்டது தான் செல்போன் டவரால் பறவை இனங்கள் அழிக்கின்றன என்பதும்

இப்பூமியில் ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் எதேனும் தடை ஏற்படுத்தினால் இயற்கையின் துணையோடு அது தன்னை தகவமைத்துக்கொள்ளும். அது பரிணாமத்தின் முக்கிய அம்சம். பறவைகள் நம்மை விட வாழும் அறிவை அதிகம் பெற்றவை,

அதனால் சினிமாவை சினிமாவா பாருங்க, செல்போனை போட்டு உடைக்காதிங்க

பின்குறிப்பு:நான் இன்னும் படம் பார்க்கல

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin