பங்குசந்தை இன்றைய ஆலோசனை...

ஒரு ஸ்கிரிப்டில் 48000 ரூபாய் என பார்க்கும் பொழுது ஈடுபவர்களுக்கும்,  ஈடுபடநினைப்பவர்களும்  ஆசையாகவும் பணம் இல்லையே என்ற இயலாமையாகவும் தான் இருக்கும். இயற்கையானதும் கூடத்தான்

பங்கு சந்தை என்றில்லை, எந்த தொழிலாக இருந்தாலும் முதலீடுக்கு என்ற லாபம் தான் கிடைக்கும் என்பது அடிப்படை விதி. நம் திறமையால் தொழிலை வளப்படுத்தி லாபத்தை பெருக்கிக்கொள்கிறோம்.

10000 முதலீடு செய்து எனக்கு தினம் 10000 லாபம் வேண்டும் என்றால் அந்த முதலீடு 10000த்தை இழக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும், எனக்கு தெரிந்த ஒருத்தர் அப்படி சம்பாரித்தார் என்பீர்களேயானல் அவர் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என பாருங்கள். அனைத்தையும் இழத்து பங்கு சந்தையை சூதாட்டம் என்று அனைவரிடமும் குற்றம் சாட்டி கொண்டிருப்பார்

யெஸ் பேங்க் 96 ரூபாய்க்கு எதிர்கால ப்ங்கு வணிகத்தில் 1750 பங்கு லாபம் பார்த்தோம். ஆனால் அது சிலரால் மட்டுமே முடிந்தது. அவர்களிடம் அதற்கேற்ற முதலீடு இருந்தது. நம்மிடம் இல்லை அதை வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

அதனால் என்ன? எதிர்கால பங்கு வணிகத்தில் தான் ஈடபட வேண்டும் என ஏன் நினைக்கனும். உங்கள் முதலீடு 10000 மட்டுமே இருந்தால் நடப்பு பங்கு வணிகத்தில் 9600 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கலாமே.

உலக பணகாரர் வாரன் பஃபெட்டிம் கேட்டார்களாம், உங்களுக்கு பெரிய படிப்பு அறிவும் இல்லை, கணிணி அறிவும் இல்லை. ஆனால் உங்களை விட எல்லாம் திறமையும் இருக்கும் மற்றவர்களால் ஏன் உங்களை விட அதிகம் சம்பாரிக்க முடியவில்லை என்று, அதற்கு அவர் சொன்ன பதில்

அவர்களுக்கு பொறுமை இல்லை என்பது தான்

பங்குவணிகத்தில் திட்டமிடுதல் அவசியம், பொறுமை அவசியம், கூடாவே கூடாத விசயம் பேராசை. பேராசை இருந்தால் லட்சமே இருந்தாலும் ஒரே நாளில் இழக்கக்கூடும்

ஒரு நாளைக்கு 10 பரிந்திரைகள் செய்கிறேன் என்றால் பத்திலும் பத்து பத்தாக முதலீடு செய்யுங்கள், ஒரே பரிந்துரையில் முதலீடு செய்து மாற்றம் இல்லையே என கன்னத்தில் கை வைத்தால் அது யார் தவறு, அதை தான் திட்டமிடல் என்றேன்.

இனிவரும் வர்த்தக நாள்களில் உங்களிடம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். உங்களை சந்தேகங்களை கேளுங்கள். நம்பிக்கை இழக்காதீர்கள். சரியான பாதையில் சென்றால் சரியான இடத்திற்கு தான் செல்வோம்


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin