5 மாநில தேர்தல்....

டிசம்பர் 7ஆம் தேதி
சட்டீஸ்கர், மிசோராம், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம்
ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது

அதன் முடிவு டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்படுகிறது

மறைந்த எழுத்தாளர் சுஜாதா இருந்தவரையில் வோட்டிங் மிசினில் எந்த தில்லுமுல்லுகளும் செய்யமுடியாது என்றார், அவர் அப்படி சொல்வதற்கு காரணம் அதை வடிவமைத்தவர்களில் இவரும் ஒருவர்

அந்த நாட்களில் தில்லுமுல்லு செய்யமுடியாமல் இருக்கலாம், இன்னுமா அதற்கு சாஃப்ட்வேர் இருந்தாமல் இருப்பார்கள், இத்தனைக்கும் அப்பப்ப பேப்பரில் எந்த பட்டனை அமுக்கினாலும் தாமரையில் லைட் எரியுதுன்னு படிச்சிகிட்டு தான் இருக்கோம்

இவனுங்க நேர்மையும் நமக்கு தெரியும், ஏண்டா லலித்மோடியை தப்ப விட்டிங்கன்னு கேட்டா அவனுக்கு ஆண்டர்சனை தப்ப விட்டார்கள்னு சொல்வானுங்களே தவிர லலித்மோடி பத்தி வாய் திறக்க மாட்டானுங்க



ஒருவேளை இவனுங்க எதாவது தில்லுமுல்லு ஓரளவு இடங்களை பிடித்தால் எதிர் அணியில் இருக்கும் கூட்டணியை உடைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கு

அப்படி ஒருவேளை அமைந்தால், ஜெயிக்கும் கட்சிக்கு ஓட்டு போட்டேன் என பெருமை புண்ணாக்கு பேசும் பொதுபுத்தி மனிதர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஓட்டளிக்க வாய்ப்பிருக்கு,

மீண்டும் ஒருமுறை பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு நிச்சயாக ஆபத்து, நீட் தேர்வு மாதிரி இந்த சாதி தான் படிக்கனும்னு கூட சொல்வானுங்க. மாற்று மத வழிபாட்டு தளங்களை இடித்து மதகலவரத்தை உண்டு பண்ணுவார்கள், மதசார்பற்ற தன்மையில் இருந்து இந்தியா இந்து நாடு என்ற லேபிள் குத்தவே முனைவார்கள்

பாஜக இந்தியாவின் வைரஸ். எப்படியாவது அழித்தே ஆக வேண்டும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin