வன்முறை எந்த வடிவத்திலும் தீர்வாகாது ஆனாலும்...

வன்முறை எந்த வடிவத்திலும் தீர்வாகாது என்பதை
முழுமையாக கடைபிடிப்பவன் நான். ஆனாலும் என் அண்டைவீட்டுகாரனே, விருந்தாளியாக வந்தவனோ என் உழைப்பையும், என் வளங்களையும் சுரண்டி எடுத்தால் என்ன செய்வது நான்.

பிரிட்டீஷ் அதை தான் செய்தான், ஒரு பக்கம் அஹிம்சா வழியிலும், மறுபக்கம் ஆயுதம் ஏந்தியும் போராட்டம் நடந்தது. இலங்கையில் புலிகள் ஆயுதம் ஏந்த காரணமும் அதுதான். ஆனால் ஒருமுறை ஏந்தி விட்டால் அது புலிவாலை பிடித்தது போல் என்பதற்கு உதாரணம் இந்திய நக்ஸல்கள்.

கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் நக்ஸல் மற்றும் மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் அவ்வபோது யாரையாவது கடத்தி பேச்சு வார்த்தை நடத்துவது. அரசுக்கு எதிராக புரட்சியை தூண்டுவது என பேர் பெற்றுள்ளனர். பொதுமக்களை கொன்றார்கள், ஏழை மக்களின் சொத்தை திருடினார்கள் என நான் எங்கேயும் படிக்கவில்லை. அப்படி இருந்தால் காட்டவும் தெரிந்துகொள்கிறேன்

வாழ்தார பிரச்சனைகள் சரி செய்யப்படும் என உறுதி அளிக்கும் சமயங்களில் சிலர் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைவார்கள், சிலர் அரசின் மேல் நம்பிக்கை இல்லாமல் மறைந்தே வாழ்வார்கள். அல்லது பிரச்சனை இருக்கும் வேறு மாநிலங்களுக்கு உதவி செய்ய போய் விடுவார்கள். சுதந்திரத்தின் தாகம் அவ்வளவு எளிதல் அடங்குவதல்ல



அர்ஜெண்டினாவில் பிறந்த எர்னாஸ்டோ, கியூபா விடுதலைக்கு ஏன் போராட வேண்டும். கியூபா மந்திரி சபையில் பதவி அளிக்கிறேன் என சொன்னபோதும் ஏன் மறுத்து அடுத்த நாட்டு விடுதலைக்கு போராட செல்லவேண்டும். மனிதத்தின் மீதுள்ள தீராகாதல் அது. அதை தான் அதிகார வர்கம் தீவிரவாதம் என அழைக்கும்

பொது புத்தியில் உங்களுக்கு புரியும் படி சொல்லனும்னா தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்னு பாரதி பாடினா அது புரட்சி, அதையே செயலில் காட்டினால் அது தீவிரவாதம்.

சிறப்பு காவல் படையினர் அரசாங்க பணியாட்கள், நாட்டில் அமைதியை நிலைநாட்ட உறுதி பூண்டு சேவை மனப்பான்மையில் உயிரையும் கொடுத்து பணியாற்ற துணிந்தவர்கள். நடந்த சண்டையில் உயிர் நீத்த சிறப்பு காவல்படையினருக்காக வருந்துகிறேன்.

நம் கண் முன்னே பார்க்கிறோம்
நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மாதகணக்கில் போராட்டம், விவசாயிகளின் தற்கொலைக்கு தீர்வு வேண்டி டெல்லியில் போராட்டம். அரசாங்கம் அவனை மதிக்கவேயில்லைனா அவன் என்ன தான் செய்வான்

நக்சல்பாரிகளும், மாவோயிஸ்டுகளும் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்..

நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான்.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin